நான் முதல்வன் திட்ட ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.

இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் துடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல மக்கள் பணிகளையும் பாதிக்கும் ! இதை எங்கள் கழகத் தலைவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

#DravidianModel திட்டங்களில் ஒன்றைக் கூட சீர்குலைக்க முயற்சித்தால் அதை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை இதன் பின்னால் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் எங்கள் போராட்டம் தொடரும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports