Month: January 2024

  • Bigg Boss Tamil Season 7 Tamil Vishnu Gets Evicted

    Bigg Boss Tamil Season 7 Tamil Vishnu Gets Evicted

    பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே
    விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது.  இன்று  மாலை 6 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் போட்டியாளர்களுடன் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார். மேலும் தனது சினிமா கரியர் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 
    இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்கள், வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்கள், ரசிகர்கள் என அனைவரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.  இப்படியான நிலையில் ஐந்து ஃபைனலிஸ்ட்டுகளில் இருந்து முதல் ஆளாக விஷ்ணு எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விஷ்ணு தனது அனுபவங்கள் பற்றி பேசினார். மேலும் அவருக்கு அடுத்ததாக யார் வெளியே வரப் போகிறார் , யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்பது பற்றியும் வழக்கம்போல் பேசினார்.
    விஷ்ணு 
    நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் பேசிய விஷ்ணு “முதல் நாள் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியாது, பல குழப்பங்களோடதான் நான் உள்ள வந்தேன். நிறைய  விஷயங்கள நான் இங்க கத்துகிட்டேன், உங்களோட வாரவாரம் பேசுறது, நீங்க எனக்கு கொடுத்த அட்வைஸ், எல்லாம் எனக்கு ரொம்ப உதவியா இருந்தது.
    நான் 12 வருஷமா தொலைக்காட்சித் துறையில இருக்கேன், நான் இந்தத் துறைய செலக்ட் பண்ணது மக்கள் மனசுல போய் நிக்கனும் என்பதற்காக. அதுதான் என்னுடைய நோக்கம்.  அந்த நோக்கம் கொஞ்சம் மறைஞ்சிட்டு இருந்த மாதிரி நான் ஃபீல் பண்ணேன், அதுக்கு சரியான ஒரு மேடை எனக்கு தேவைப்பட்டது. அதனால தான் இந்த நிகழ்ச்சிக்குதான் வந்தேன், கண்டிப்பா மக்கள நான் இம்ப்ரஸ் பன்னிருப்பேன்னு நினைக்கிறேன். உங்கள் எந்த இடத்துலயாவது முகம் சுளிக்கிற மாதிரி நான் செய்திருந்தா சாரி” என்று விஷ்ணு கூறினார்.  
    தொடர்ந்து பேசிய விஷ்ணு  “நான் ரொம்ப நாளா மணி தான் வெளிய வருவான்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனால் உள்ள இருக்க எல்லாரையும் அவன் வெளிய அனுப்பிட்டு இருக்கான். ஆனால் மணி உணமையாகவே ஒரு நல்ல மனிதன். யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டான் மணி. அதனாலதான் இவ்ளோ நாள் உள்ள இருக்கான்னு நினைக்கிறேன். அடுத்ததாக அர்ச்சனா. அவரை ஒரு பாப்பானு சொல்லலாம். அவர் வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார். 
    அதிருப்தியை வெளிப்படுத்திய விஷ்ணு
    பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஷ்ணுவிடம் கமல்ஹாசன் மீதி போட்டியாளர்களை உள்ளே சென்று பார்க்க அழைத்தபோது அதற்கு விஷ்ணு “இப்போதான் அவங்கள பாத்துட்டு வரேன். நான் எலிமினேட் ஆனத பார்த்து சந்தோஷப்படறாங்க” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் மாயா கிருஷ்ணன் இந்த சீசனில் வெற்றிபெறுவார் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்

    மேலும் படிக்க : Bigg Boss 7 Winner: பிக்பாஸ் 7 வெற்றியாளரின் பரிசுத்தொகை இவ்வளவா? கை நிறைய அள்ளிச் செல்லப்போவது யார்?

    Source link

  • Former America President Donald Trump Criticizes Vivek Ramaswamy Ahead Of Iowa Caucus 2024 | Vivek Ramaswamy

    Former America President Donald Trump Criticizes Vivek Ramaswamy Ahead Of Iowa Caucus 2024 | Vivek Ramaswamy

    உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.  தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், வரும் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 
    அமெரிக்க அதிபர் தேர்தல்:
    பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி உள்ளிட்டோர் அதிபருக்கான வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 
    உள்கட்சி தேர்தல் நடத்தி, சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும். இதற்காக, ஒவ்வொரு மாகாணத்திலும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அயோவா மாகாணத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
    உள்கட்சி தேர்தலின் ஒரு பகுதியாக வேட்பாளர்களுக்கு இடையே விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், தனது வியூகத்தை மாற்றியுள்ளார் முன்னாள் அதிபர் டிரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த சக போட்டியாளரான விவேக் ராமசாமியை டிரம்ப் விமர்சிக்க தொடங்கியிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
    உத்தியை மாற்றிய முன்னாள் அதிபர் டிரம்ப்:
    சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட, விவேக் ராமசாமியுடன் நட்புணர்வை பேணி வந்தார் டிரம்ப். இப்படியிருக்க, அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக ஆக்க வேண்டும் என்ற தன்னுடைய பிரச்சாரத்துக்கு விவேக் ராமசாமி அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
    விவேக் ராமசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், “என்னுடைய சிறந்த ஆதரவாளர் என சொல்லி தனது பிரச்சாரத்தை தொடங்கினார் விவேக். இந்த தலைமுறையின் சிறந்த அதிபர் என்றெல்லாம் சொன்னார்.
    துரதிர்ஷ்டவசமாக, இப்போது அவர் செய்வதெல்லாம் ஏமாற்று பிரச்சார தந்திரங்களின் வடிவமாக உள்ளது. மிகவும் தந்திரமாக செயல்படுகிறார். ஆனால், விவேக்கிற்கு வாக்கு அளிப்பது எதிர் அணிக்கு வாக்களிப்பது போன்றதாகும். இதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். “TRUMP”க்கு வாக்களியுங்கள். 
     

    உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள்! விவேக்கால் அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக ஆக்க முடியாது. அரசியல் எதிரிக்கு எதிராக பைடன் வைக்கும் குற்றச்சாட்டுகளை அனுமதிக்க முடியாது. அவை ஏற்கனவே வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

    Source link

  • Sales Of Sugarcane And Turmeric Are Huge In Salem Ahead Of Pongal Festival Pongal 2024

    Sales Of Sugarcane And Turmeric Are Huge In Salem Ahead Of Pongal Festival Pongal 2024

    தமிழகத்தில் வரும் நாளை (15 ஆம் தேதி) பொங்கல் பண்டிகை. கொண்டாடப்படுகிறது. 16-ஆம் தேதி மாட்டு பொங்கலும், 17-ஆம் தேதி உழவர் தினம் வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள், பொதுமக்கள் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படையலிடுவார்கள். இதையொட்டி மளிகை கடைகளில் பொங்கல் வைக்க தேவையான வெல்லம், பச்சரிசி, முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப் பட்டுள்ளது என்று மளிகை வியாபாரிகள் தெரிவித்தனர். 

    இது போன்ற வ.உ.சி பூ மார்க்கெடில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் பண்டிகையும் முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூ ரூபாய் 2,400 க்கும், முல்லை ரூபாய் 2,400 க்கும், ஜாதிமல்லி 1200 ரூபாய்க்கும், காக்கட்டான் பூ 1,200 ரூபாய்க்கும், கலர் காக்கட்டான் பூ 1,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகள் மற்றும் சந்தைகளிலும் கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. கரும்பு ஜோடி 60 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும், மஞ்சள் பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. பானை அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மளிகை வியாபாரிகள் கூறியதாவது, ”ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெல்லமும், ஆந்திராவில் இருந்து பச்சரிசி, கேரளாவில் இருந்து ஏலக்காய், பண்ருட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து முந்திரி, உலர் திராட்சையும் விற்பனைக்கு வரும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பொருட்களின் விற்பனை களைகட்டும். நடப்பாண்டு பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 முதல் 30 சதவீதம் விற்பனை நடந்து வருகிறது. ஒரு கிலோ வெல்லம் ₹45 முதல் ₹50 என்றும், பச்சரிசி கிலோ ₹35 முதல் ₹40 என்றும், முந்திரி ₹600 முதல் ₹700 என்றும், உலர் திராட்சை ₹250 முதல் ₹300 என்றும், பாசிப்பருப்பு ₹100 முதல் ₹120, நெய் ஒரு லிட்டர் ₹650 முதல் ₹800 கலர் கோலாமாவு ஒரு பாக்கெட் ₹4 முதல் ₹5, வெள்ளை கோலாமாவு கிலோ ₹10 என்றும் விற்பனை செய்யப்படுகிறது” என்றனர்

    Source link

  • Bigg Boss 7 Tamil: நிறைய ஆசைகளுடன் வந்தேன்.. இரண்டாவதாக எலிமினேட் ஆன தினேஷ் உருக்கம்!

    Bigg Boss 7 Tamil: நிறைய ஆசைகளுடன் வந்தேன்.. இரண்டாவதாக எலிமினேட் ஆன தினேஷ் உருக்கம்!


    <p>பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது போட்டியாளராக தினேஷ் வெளியேறிய நிலையில், மாயா, மணி, அர்ச்சனா&nbsp; என மும்முனை போட்டியில் பிக்பாஸ் இல்லம் பரபரப்பாக உள்ளது.</p>
    <p>பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமல்ஹாசனை சந்தித்த தினேஷ், &ldquo;நிறைய ஆசை, கனவுகளுடன் வந்தேன். வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தேன். கண்டிப்பாக கடுமையாக போட்டி போட்டுள்ளேன். ஒவ்வொரு வாரமும் இவர்கள் கொடுத்த அன்புக்கு ரொம்ப நன்றி&rdquo; எனப் பேசினார்.</p>
    <p>கோப்பையை வென்று பிரிந்திருக்கும் தன் மனைவி ரச்சிதாவை பார்த்து அவரது கையில் டைட்டிலை ஒப்படைக்க வேண்டும் என தன் ஆசையை தினேஷ் போட்டியில் அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தினேஷ் எலிமினேட் ஆகியுள்ளது தினேஷ் – ரச்சிதா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.</p>

    Source link

  • Venkat Prabu Shares Updates On Vijay Greatest Of All Time Movie

    Venkat Prabu Shares Updates On Vijay Greatest Of All Time Movie

    கோட் (G.O.A.T)
     நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி வருகிறது கோட் (G.O.A.T). வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கி  ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தந்தை மகன் என இரு கதாபாத்திரங்கள் விஜய் இந்தப் படத்தி நடித்து வருகிறார்.
    தொடர்ச்சியான அப்டேட்கள்
    2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதல், கோட் படத்தின் அப்டேட்களை வரிசையாக படக்குழு வெளியிட்டு வருகிறது. புத்தாண்டை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. கோட் படத்தின் கதை பற்றிய தகவல்களை இதுவரை பயங்கர ரகசியமாக படக்குழு பாதுகாத்து வருகிறது. மறுபக்கம் ரசிகர்கள் இந்தப் படத்தின் கதை பற்றி பல அனுமானங்களை முன்வைத்து வருகிறார்கள். 
    தளபதி பொங்கல்
    சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில்  முற்றிலும் புதிதாக கெட் அப்பில் நடிகர் விஜய் காணப்பட்டார். தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி கோட் படத்தின் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. தனது எக்ஸ் தளத்தில் இந்த பொங்கல் சிறப்பான ஒரு பொங்கலாக இருக்கப்போகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    It will be #TheGreatestOfAllTime PONGAL 🔥🔥🔥@archanakalpathi what say😉
    — venkat prabhu (@vp_offl) January 14, 2024

    இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தனது எக்ஸ் பக்கத்தில் ‘ நிச்சயமாக இது தளபதி பொங்கல் ‘ என்று பதிவிட்டுள்ளார். நாளை பொங்கல் பண்டிகையை ஒட்டி படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    #TheGOATshootingdiaries pic.twitter.com/P9t1BXhpze
    — venkat prabhu (@vp_offl) January 13, 2024

     
    தற்போது படப்பிடிப்பு
    கோட் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது.  ராஜ்ஸ்தான் , ஸ்ரீலங்கா, மற்றும் இஸ்தான்புல் ஆகிய இடங்களில் தற்போது படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
    மேலும் படிக்க : Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ”உலக சினிமாவில் விற்கு முடியாத தங்க மண்ணு” பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு!

    Source link

  • HPV Vaccine : பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசு திட்டம்.. தொடரும் தடங்கலுக்கு காரணம் என்ன?

    HPV Vaccine : பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசு திட்டம்.. தொடரும் தடங்கலுக்கு காரணம் என்ன?


    <p>HPV Vacccine In Schools : உலகளவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படும் நான்காவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, பெண்களை அதிக அளவில் பாதிக்கும் இரண்டாவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான்.&nbsp;</p>
    <h2><strong>பெண்களை அச்சுறுத்தும் கருப்பை வாய் புற்றுநோய்:</strong></h2>
    <p>அதேபோல, உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் நடக்கும் நான்கு உயிரிழப்புகளில் ஒரு உயிரிழப்பு இந்தியாவில் நிகழ்கிறது. கருப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திறம்பட சிகிச்சை அளித்தால் அதை தடுக்கலாம். குணப்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் இந்த புற்றுநோய், ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸால்தான் ஏற்படுகிறது.&nbsp;</p>
    <p>இந்த வைரஸ் தாக்கப்படுவதற்கு முன்பே, HPV தடுப்பூசியை செலுத்தினால், இந்த புற்றுநோயை தடுக்கலாம். கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க பள்ளிகளில் 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கடந்தாண்டு தகவல் வெளியானது.&nbsp;</p>
    <p>உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியை வழங்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை வழங்கியிருந்தது. இதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டின் மத்திக்குள் சிறுமிகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செர்வாவாக் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலும் ஒப்புதல் வழங்கியது.</p>
    <h2><strong>மத்திய அரசு திட்டத்துக்கு தொடர் தடங்கல்:</strong></h2>
    <p>அந்த வகையில், பொது சுகாதாரத் திட்டத்தில் தடுப்பூசியை பயன்படுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அங்கீகாரம் வழங்கியது. முதலில் 10 முதல் 14 வயது சிறுமிகளுக்கும் பின்னர், 9 வயது சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று வரை பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படவில்லை.</p>
    <p>இந்த நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பள்ளி சிறுமிகளுக்கு ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி திட்டத்தை தொடங்குவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.</p>
    <p>பெண் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஆரம்ப பள்ளிகள் மூலம் தடுப்பூசிகள் வழங்க திட்டமிடப்பட்டது. தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நாளில் பள்ளிக்குச் செல்ல முடியாத சிறுமிகளுக்கு சுகாதார நிலையத்தில் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டது. பள்ளியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சிறுமிகளுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று தடுப்பூசி போடவும் திட்டமிட்டது.</p>
    <p>ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தி அமெரிக்க நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த சோதனை முயற்சியில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.&nbsp;</p>
    <p>இதை தொடர்ந்து, தடுப்பூசி சோதனை முயற்சியில் முறைகேடு நடந்திருப்பதாக சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்பித்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, தடுப்பூசி திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Ayodhya Ram Temple Kumbabhishekam Criticized By DMK Parliamentary Committee Chairman TR Balu | Ram Mandir Ayodhya: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா

    Ayodhya Ram Temple Kumbabhishekam Criticized By DMK Parliamentary Committee Chairman TR Balu | Ram Mandir Ayodhya: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா

    “அயோத்தி இராமர் கோயில் திறப்பு: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா” என்று கழகப் பொருளாளரும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014-ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் அந்தக் கட்சிக்கு இல்லை. இதை மறைப்பதற்கும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் அயோத்தியில் இராமர் கோயில் கட்டியதைத் தனது சாதனையாகக் காட்டி, தங்களது தோல்வியை மொத்தமாக மறைக்க நினைக்கிறார்கள்.
    2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதில் எந்த வாக்குறுதியை இந்தப் பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்?
    உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம், ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம், நாடு முழுவதும் இருக்கும் நதிகளை இணைப்போம், 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்துக் குடும்பத்துக்கும் சொந்த வீடு கட்டித் தருவோம், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை முழுமையாக மீட்போம், மீட்கப்பட்ட கருப்புப்பணத்தை இந்திய மக்கள் அனைவருக்கும் 15 லட்சமாகத் தருவோம் – என்றெல்லாம் நீட்டி முழக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
    பெட்ரோல் விலை உயர்வு:
    தமிழ்நாட்டுக்குப் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார்களே… அதில் ஏதாவது செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!
    நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. கொடுத்ததெல்லாம் பெட்ரோல் விலை உயர்வு! டீசல் விலை உயர்வு! சமையல் எரிவாயு விலை உயர்வு! இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
    நடுத்தரச் சூழலில் வாழும் மக்களையும், அனைத்துத் தரப்பு மக்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
    ஜி.எஸ்.டி. மூலமாக மாநில நிதி வளங்களைச் சுரண்டி நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள்.
    மழை, புயல் காலங்களில் தர வேண்டிய நிவாரணங்களைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் அநீதி நடக்கிறது.
    இப்படி அனைத்து வகையிலும் மக்களைப் பத்தாண்டு காலமாக வேட்டையாடி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இன்னும் முழுமையாகக் கட்டிமுடிக்காத அயோத்தி இராமர் கோயிலைக் கட்டியிருக்கிறோம் என்று சொல்லி வாண வேடிக்கை காட்ட முயல்கிறது.
    ஒன்றே குலம், ஒருவனே தேவன்:
    பேரறிஞர் அண்ணா அவர்களின் காலந்தொட்டு, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டைப் பின்பற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்திக் கூறும் மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டில் ஆழமான பிடிப்பு கொண்ட இயக்கம். வெறுப்பரசியலைப் புறந்தள்ளி சகோதரத்துவம் ததும்பும் நல்லிணக்கத்தை நாடும் தி.மு.கழகம், ஒருபோதும் அரசியலை ஆன்மீகத்திலும் – பக்தியில் அரசியலையும் புகுத்தி அரசியல் குளிர் காய்ந்தது இல்லை. கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நல்லாட்சியில் பல்லாயிரக் கணக்கான ஆலயங்களில் திருப்பணிகள், ஆயிரம் கோயில்களுக்குக் குடமுழுக்குகள் செய்தும், இலட்சோப லட்சம் மக்கள் திரளும் திருவிழாக்களில் இறையன்பர்களுக்குத் தக்க வசதிகளைச் செய்தும், 5381 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டும் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் ஆன்மீகத் தரப்பு மக்களும் போற்றி வருகின்றனர். இவற்றையெல்லாம் தேர்தல் மேடைகளில் பேசி ஓட்டரசியல் ஆதாயத்தை நாங்கள் நாடியதில்லை.
    இறை நம்பிக்கை ஒருவரது ஆன்மத் தேடல்; தனிப்பட்ட உரிமை. அரசியல் அணி திரட்டவும், வாக்கு வங்கிக்காகவும் பக்தியை மூலதனமாக வைத்து, மக்களின் நம்பிக்கையில் அரசியல் செய்வது இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிரானது; அரசியல்சாசன அறத்துக்கு மாறானது; நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது அல்ல!
    வேற்றுமையில் ஒற்றுமை:
    இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் விருப்பமும் உரிமையும் ஆகும். ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல, ஆன்மீக அறங்களுக்கே எதிரானது ஆகும். கோயில் கட்டுவதையும், திறப்பதையும் தனது கட்சியின் சாதனையாகக் காட்டி மக்களை ஏமாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆன்மீகத் திருவிழாவை பா.ஜ.க.வின் அரசியல் திருவிழாவாக மாற்ற நினைப்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புறந்தள்ளுவார்கள்.
    பாரதீய ஜனதா கட்சி தனது ‘மதராஷ்டிரா’வுக்கான கால்கோள் விழாவைப் போல ஒரு கோயில் விழாவைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு காலம் காலமாக வாழக்கூடிய இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் செயலை பா.ஜ.க. தொடர்வதும் நல்லதல்ல!
    மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாக அல்லாமல், மக்களை ஏமாற்றுவதன் மூலமாக வெல்ல முடியுமா என்று பார்க்கிறது பாரதீய ஜனதா கட்சி. இதற்கு இந்திய நாட்டு மக்களே தக்க பாடம் கொடுப்பார்கள் என்பது உறுதி.” என தெரிவித்துள்ளார்.

    Source link

  • Road Safety Month: விபத்தில்லா தமிழ்நாடுதான் இலக்கு; சாலை பாதுகாப்பு மாத விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

    Road Safety Month: விபத்தில்லா தமிழ்நாடுதான் இலக்கு; சாலை பாதுகாப்பு மாத விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்


    <p>இந்த ஆண்டு சனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை "தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்" அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்தி செய்தியில், &rdquo;சாலை விபத்துகளால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது.சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு,சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிப்பது நம் அனைவரின் கடமையாகும்.</p>
    <p>நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு சனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை "தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்" அனுசரிக்கப்படுகிறது.சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும்.</p>
    <p>தமிழ்நாடு அரசின் "விபத்தில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் (Accident Hot Spots) கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.</p>
    <p>சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. தனி மனித நடத்தை, ஓட்டுநரின் உளவியல் நிலை, பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலையின் அமைப்பு, சுற்றுப்புறச்சூழல் போன்றவைகளே சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணிகள் என பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தற்போதைய மற்றும் வருங்கால சாலை உபயோகிப்பவர்களிடையே பாதுகாப்பான சாலைப் பயனாளர் நடத்தையை ஊக்குவிப்பதற்காக சாலைப் பயனாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்குவது அரசின் முக்கிய நோக்கமாகும்.</p>
    <p>தமிழ்நாட்டில் முதலமைச்சரின் "இன்னுயிர் காப்போம் : நம்மைக் காக்கும் 48" என்ற சீர்மிகு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதோடு பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றவகையில்,சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்தில் காய மடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உடனடி விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.</p>
    <p>இந்த சாலைப்பாதுகாப்பு மாதத்தில், அரசானது வாகனத்தை இயக்கிவரும் ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது.</p>
    <p>உயிர் வாழ்வதற்கான மற்ற அடிப்படைத் திறன்களை போல சாலைப் பாதுகாப்புக் கல்வியும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம்.</p>
    <p>சாலை விதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே!! விதிகளை மதிப்போம்! வேதனைகளைத் தவிர்ப்போம் !! சாலைப் பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு!&rdquo; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Rohit Sharma Becomes First Player To Play 150 Matches In T20i Internationals History Ind Vs Afg Tamil Sports News

    Rohit Sharma Becomes First Player To Play 150 Matches In T20i Internationals History Ind Vs Afg Tamil Sports News

    3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி, 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர வேறு எந்தவொரு கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை படைத்தது கிடையாது. 
    ரோஹித் சர்மா அறிமுகம்: 
    இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 2007-ம் ஆண்டு டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார். கடந்த 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம் பெற்றிருந்தார். இதுவரை, ரோஹித் சர்மா 149 டி20 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 139.15 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 30.58 சராசரியுடன் 3853 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ரோஹித் சர்மா 4 சதங்களும், 29 அரை சதங்களும் அடித்துள்ளார்.
    அதிக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த வீரர்கள்: 
    இந்த பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் இரண்டாவது இடத்தில் உள்ளார். பால் ஸ்டிர்லிங் 134 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதையடுத்து, மற்றொரு அயர்லாந்து வீரரான ஜார்ஜ் டோக்ரெல் 128 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து, பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சோயப் மாலிக் 124 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4வது இடத்தில் உள்ளார். 



    வீரர்கள்
    ஆண்டு இடைவெளி
    நாடு
    போட்டிகள்
    ரன்கள்
    அதிகபட்ச ஸ்கோர்
    100


    ரோஹித் சர்மா
    2007-2024
    இந்தியா
    150
    3853
    118
    4


    பால் ஸ்டிர்லிங்
    2009-2023
    அயர்லாந்து
    134
    3438
    115*
    1


     டோக்ரெல்
    2010-2023
    அயர்லாந்து
    128
    969
    58*
    -


    சோயிப் மாலிக்
    2006-2021
    பாகிஸ்தான்
    124
    2435
    75
    -


    மார்ட்டின் கப்டில்
    2009-2022
    நியூசிலாந்து
    122
    3531
    105
    2

    நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் 122 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 5வது இடத்தில் உள்ளனர். இது தவிர, வங்கதேசத்தின் மஹ்முதுல்லா ரியாஸ், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், நியூசிலாந்தின் டிம் சவுதி, வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் போன்ற பெயர்களும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில்  இடம்பெற்றுள்ளன. அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 10வது இடத்தில் உள்ளார். இவர இதுவரை 116 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். விராட் கோலி கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இருப்பினும், இவர்தான் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இந்திய வீரர்களில் விராட் கோலி 116 டி20 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய அணிக்காக 98 போட்டிகளில் விளையாடிய எம்எஸ் தோனி உள்ளார். 
    ஒவ்வொரு வடிவத்திலும் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற உயரடுக்கு வீரர் பட்டியலில் ரோஹித் இணைந்தார். ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரரானார். அதேபோல், ஆலன் பார்டர் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆவார்.
     ஒவ்வொரு வடிவத்திலும் 150 போட்டிகளை விளையாடிய முதல் வீரர்கள்:
    150 டெஸ்ட்: ஆலன் பார்டர் (டிசம்பர் 1993)
    150 ODIகள்: ஆலன் பார்டர் (பிப்ரவரி 1987)
    150 டி20கள்: ரோஹித் சர்மா (ஜனவரி 2024) 

    Source link

  • Bigg Boss Eliminated Contestants Share What They Learned From Bigg Boss

    Bigg Boss Eliminated Contestants Share What They Learned From Bigg Boss

    பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே (Bigg Boss Grand Finale) விழாவில் கலந்துகொண்ட  போட்டியாளர்கள் தாங்கள் பிக் பாஸ் வீட்டில் கற்றது என்ன பெற்றது என்ன என்பதைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
    பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே
    கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து  வெளியேறிய போட்டியாளர்கள் தாங்கள் பிக் பாஸ் வீட்டில் கற்றதும் பெற்றதும் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்கள்.
    பூர்ணிமா
    “பிக்பாஸ் வீட்ல நான் கத்துகிட்டது வெளிய எனக்கு ரொம்ப ஹெல்ப் பன்னுச்சு.. எல்லா நேரமும் என்ன- பத்தி எல்லார்கிட்டயும் நான் போய் விளக்க வேண்டியது இல்லனு நான் புரிஞ்சுகிட்டேன். வீட்டுக்குள்ள இருக்க 15 பேருக்கு நான் எப்போவும் என்ன பத்தி புரிய வைக்க ட்ரை பன்னுவேன். ஆனா வெளிய கோடிக்கணக்கான மக்கள் என்ன பத்தி என்ன நினைக்கிறாங்கனு என்னால மாத்த முடியாதுனு நான் புரிஞ்சுகிட்டேன். நம்மளோட செயல் மட்டும் பேசுனா போதும்” என்றார்.
    விசித்திரா
    ”வெளியே எனக்கு ரெண்டு விதமான ரெஸ்பான்ஸ் வந்தது. நிறைய லவ் நிறைய மரியாதை எனக்கு கிடைச்சது, நான் நெனச்சத என்னால் பன்ன முடிஞ்சது. ஆனா பிக்பாஸ் வீட்டுக்குள்ள எனக்கு தோல்விதான். என்னால் முடிஞ்ச வரைக்கும் நான் நேர்மையா இருந்திருக்கேன். இங்க இருக்க கொஞ்ச பேரு என்ன புரிஞ்சிருக்காங்க” என்றார்.

    ”பிக்பாஸ் வீட்டவிட்டு வெளிய போனதும் தான் எனக்கு இவ்வளவு பெரிய ஆதரவு இருக்குனு தெரிஞ்சது. என்ன நினைச்சு நான் ரொம்ப பெருமப்படுறேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து நான் பொறுமையா இருக்கறத தான் கத்துகிட்டேன்” என்றார் 
    நிக்ஸன்
    ” சிலர் ரொமப் திட்டுறாங்க. சிலர் பாராட்டுறாங்க. நான் வெளிய எங்கயும் போகல அப்டியே போனாலும் ஒரு 6 பாட்டு வரையும் எழுதிட்டேன், சீக்கிரமா ரிலீஸ் பன்னிடுவேன்” என்றார்.
    பிராவோ
    ”எங்க வீட்ல எல்லாம் ஆஸ்கர் வாங்குனாலும் சின்னதாக தான் ரியாக்‌ஷன் இருக்கும். ஆனால் இந்த தடவ நிஜமாவே எனக்காக அவங்க பக்கத்து வீட்ல சொல்லி எனக்கு வாக்குப் போட சொன்னாங்க. என்ன சுத்தி இருக்க எல்லா பக்கத்தையும் பாக்கனும்னு நான் தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.
    வினுஷா
    ” வினுஷா என்ன எல்லாம் அனுபவிச்சானு என்ன விட வெளிய ரசிகர்கள் புரிஞ்சுகிட்டாங்க. எனக்கு நிறைய அன்பு கிடைச்சது. இந்த வீட்ல வெறும் நல்லவங்களா மட்டும் இருந்தா அது போதாதுனு நான் தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.
    விக்ரம்
    “பிக்பாஸ் வீட்ல நான் பெற்றது நல்ல நட்பு. சில நேரம் எந்த சண்டையிலயும் தலையிடாம நான்  தனியா போய்டுவேன். ஆனால் அந்த இடத்துல எல்லாம் நான் பேசியிருக்கனும்னு கத்துகிட்டேன்” என்றார்.
    அக்‌ஷயா
    ” எனக்கு நல்லதும் கெட்டதும் வெளிய இருந்தது. வெளிய நிறைய அம்மா அக்கா எல்லாம் எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தாங்க. நிறைய எடத்துல நான் எனக்காக பேசலனு நான் புரிஞ்சுகிட்டேன். அதுதான் நான் இங்க வந்து கத்துகிட்டேன். இப்போ நான் எனக்காக பேச தொடங்கியிருக்கேன்” என்றார்.
    ரவீனா
    ”எல்லாரும் சொல்ற மாதிரி என்ன பத்தி நல்லது கெட்டது ரெண்டு விதமான கருத்தும் இருந்தது, ஆனால் சமூக வலைதளங்கள் பார்த்து தான் என்ன பத்தி என்ன சொல்றாங்கனு நான் தெரிஞ்சுகிட்டேன். ஆனால் மக்கள நேர்ல சந்திக்கும்போது  நிறைய அன்ப அவங்க கொடுத்தாங்க. சமூக வலைதளத்துல தான் வீட்ல உட்கார்ந்து புரளி பேசுற மாதிரி பேசிகிட்டு இருக்காங்கனு தெரிஞ்சது. அதனால நமக்காக உண்மையான அன்பா இருக்கவங்க நிறைய பேர் கிடைச்சிருக்காங்க. இந்த வீட்ல நான் எனக்காக எந்த இடத்துல பேசனும் எந்த இடத்துல விட்டுக் கொடுக்கனும் தெரிஞ்சுகிட்டேன்.
    அனன்யா
    “நிறைய அன்பும் நிறைய வெறுப்பும் எனக்கு வந்தது. ஆனால் நான் நேரில பார்க்கும்போது ஒருத்தவங்க பத்தி முழுசா தெரிஞ்சுக்காம நாம அவங்கள பத்தி தப்பா எதுவும் நினைச்சுட கூடாதுனு நான் தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.
    ஜோவிகா
    ”நமக்காக பேசுறது அவ்ளோ கஷ்டமா இருக்கும், அதே நேரத்துல நமக்காக பேசுறவங்களுக்கும் அது அவ்வளவா கஷ்டமா இருக்கும். ஆனால் நமக்காகவும் பேசி அவங்க கூடயும் நம்ம நிக்கனும் அதுதான் இந்த வீட்ல நான் கத்துகிட்டேன்.”
    கூல் சுரேஷ்
    ”பிக்பாஸ் வீட்டுக்குள்ள நான் வரதுக்கு முன்னாடி என்ன யார் பாத்தாலும் தலைவானு கத்திட்டு போவாங்க.ஆனா இப்போ என்ன யார் பாத்தாலும் பெரியவங்க கூட கார நிறுத்து ஒரு ஃபோட்டோ எடுத்துகிட்டு போவாங்க. ரொம்ப தேவையில்லாத இடத்துல பேசாம தேவையான இடத்துல மட்டும் பேசனும்னு நான் கத்துகிட்டேன். நான் தியேட்டர்ல போய் கத்துறத பாத்து எல்லாரும் நான் ரொம்ப கோவக்காரன்னு நினைச்சுகிட்டாங்க. ஆனா இப்போதான் நான் கல்லுக்குள் ஈரம் சிப்பிக்குள் முத்துனு தெரியுது. இங்க இருந்து நான் ரிலீஸாகி போனதும் எனக்கு இருந்த ஒரு சில பகையெல்லாம் கூட சரியாகிடுச்சு.
    என்ன பொறுத்தவரைக்கும் பிக்பாஸ் வீடு ஒரு ஜெயில்தான். அது ஒரு நூலகம் மாதிரி தான். அதுகுள்ள போய் நம்ம எந்த புத்தகம் எடுத்து படிக்கிறோமோ அதுதான் முக்கியம். என்னோட வாழ்க்கைக்கு தேவையான விஷயத்த எடுத்து படிச்சுட்டு வந்திருக்கேன். பிக் பாஸ் மற்றும் மக்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன்.”
    கானா பாலா
    ” வீட்டோட அடங்கி இருக்கனும் அதுதான் இங்க வந்து நான் கத்துகிட்டேன் . 13 உலகநாடுகளுக்கு போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கமலுக்கு நன்றி” என்றார்.

    Source link

  • "மணிப்பூர், மணிப்பூராவே இல்ல! எங்க பார்த்தாலும் வெறுப்பு" யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி

    "மணிப்பூர், மணிப்பூராவே இல்ல! எங்க பார்த்தாலும் வெறுப்பு" யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி


    <p>இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன்படி, இன்று மணிப்பூரில் யாத்திரையை தொடங்கியுள்ளார் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.</p>
    <h2><strong>ராகுல் காந்தி யாத்திரை 2.0:</strong></h2>
    <p>இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ நியாய யாத்திரை ( இந்திய ஒற்றுமை நீதி பயணம்) என பெயரிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த இனக்கலவரத்தாலும் அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அதே மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.</p>
    <p>தௌபாலில் யாத்திரையை தொடங்கி வைத்து பேசிய ராகுல் காந்தி, "நான் 2004 ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருக்கிறேன். இந்தியாவில் முதல் முறையாக அரசு இயந்திரம் முற்றிலும் நிலைகுலைந்த இடத்திற்கு வந்துள்ளேன். &nbsp;கடந்தாண்டு ஜூன் 29ஆம் தேதிக்குப் பிறகு, மணிப்பூர், மணிப்பூராக இல்லை. அது பிளவுபட்டுள்ளது. எல்லா இடங்களிலும் வெறுப்பு பரவியுள்ளது.&nbsp;</p>
    <p>லட்சக்கணக்கான மக்கள் இழப்பை சந்தித்தனர். மக்கள் கண்ணெதிரே தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். மேலும், இதுவரை இந்தியப் பிரதமர் உங்கள் கண்ணீரைத் துடைக்கவும், கையைப் பிடிக்கவும் இங்கு வரவில்லை. இது வெட்கக்கேடான விஷயம். மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நினைக்கவில்லை.</p>
    <h2><strong>"ஆர்எஸ்எஸ் வெறுப்பின் சின்னமாக உள்ள மணிப்பூர்"</strong></h2>
    <p>பாஜகவின் அரசியல் சின்னமாக உள்ளது மணிப்பூர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வெறுப்பின் சின்னமாக உள்ளது மணிப்பூர். பாஜகவின் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்தத்தின் சின்னமாக மணிப்பூர் உள்ளது.&nbsp;நீங்கள் (மக்கள்) மதிப்புமிக்கதாக நினைத்ததை இழந்துவிட்டீர்கள். ஆனால், நீங்கள் மதிப்பிட்டதை மீண்டும் ஒருமுறை கண்டுபிடித்து உங்களிடம் கொண்டு வருவோம். மணிப்பூர் மக்கள் அனுபவித்த வேதனை எங்களுக்குப் புரிகிறது. நீங்கள் அடைந்த காயம், இழப்பு மற்றும் சோகத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நீங்கள் மதிப்புமிக்கதாக நினைத்ததை மீண்டும் கொண்டு வருவோம். நல்லிணக்கம், அமைதி, அன்பு ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருவோம் என்றும் உறுதியளிக்கிறேன்" என்றார்.</p>
    <p>தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மணிப்பூருக்கு பிரதமர் மோடி வாக்கு கேட்க வருகிறார். ஆனால், மணிப்பூர் மக்கள் பிரச்னையில் இருக்கும்போது அவர் முகத்தைக் காட்டவில்லை. கடலில் சுற்றித் திரிகிறார். உட்கார்ந்து ‘ராம் ராம்’ என்று கோஷமிடுகிறார். இதை மக்களிடம் செய்யாதீர்கள். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஓட்டுக்காக இதைச் செய்யாதீர்கள். மக்களைத் தூண்டிவிட இவர்கள் (பாஜக) மதத்தைக் கலக்கிறார்கள்" என்றார்.</p>
    <p>மணிப்பூரில் தொடங்கப்பட்டுள்ள யாத்திரை நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Buses, People Traveling To The Southern District To Celebrate The Pongal 2024 Festival Bus Transport

    Buses, People Traveling To The Southern District To Celebrate The Pongal 2024 Festival Bus Transport

    பொங்கல் பண்டிகை:
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.  வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம். இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

     கிளாம்பாக்கத்தில்   பொதுமக்கள் அவதி
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், போதிய அளவில் கடலூர், பண்ருட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்தனர்.

     அலைந்து திரியும் பயணிகள்
     

    அதேபோன்று தாம்பரம் சானடோரியம் பகுதியில் இருந்து விக்கிரவாண்டி வழியாக செல்லக்கூடிய, கும்பகோணம் ,தஞ்சாவூர், ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  பேருந்து நிலையத்திலும் பயணிகள் காத்துக்  கொண்டிருக்கின்றனர். ஓடும் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் , எகிறி குதித்த இடம் பிடிக்கும் சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     

    Source link

  • Bigg Boss Aishu Reels Video Viral In Social Media And She Is Not Participate Grand Finale

    Bigg Boss Aishu Reels Video Viral In Social Media And She Is Not Participate Grand Finale

    ஐஷூ – நிக்சன்
    பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது ஐஷூ – நிக்சன் ஜோடி. தான் ஒரு ஆர்த்தடக்ஸ் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருப்பதாகக் கூறிய ஐஷூ, நிக்சன் உடன் பிக்பாஸ் வீட்டில் கொண்டு சென்ற காதல் டிராக் பெரும் விமர்சனங்களைப் பெற்றது.
    40 நாள்களுக்கு மேல் இருந்தும் காதல் டிராக் தவிர்த்து பிக்பாஸ் வீட்டில் எதுவும் செய்யாதது பிக்பாஸ் ரசிகர்களையும் அவரது பெற்றோரையும் பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஐஷூ எவிக்டான அடுத்த வாரமே நிக்சனும் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவற்றுக்கு மாறாக கொஞ்சம் கொஞ்சமாக தனித்து வெளியே தெரியத் தொடங்கி, விளையாட்டில் நிக்சன் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
     ஐஷூவின் பெற்றோர் நிக்சன் தான் தங்கள் மகளின் பிக்பாஸ் கேமை ஸ்பாயில் செய்ததாக கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன. ஒரு படி மேலே போய், ஐஷூவை வெளியேற்றும்படி அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே சென்று ஐஷூவின் பெற்றோர் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர், 80 நாட்களுக்கு பிறகு நிக்சன் எவிக்ட் ஆனார்.
    கிராண்ட் ஃபினாலேவில் பங்கேற்காத ஐஷூ
    இந்த நிலையில், இன்று கிராண்ட் ஃபினாலே நடைபெற்று வருகிறது. இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்ற நிலையில், ஐஷூ  மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதனால், ரசிகர்கள் பலரும் ஐஷூ கலந்து கொள்ளாதது பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். 
    முன்னதாக, இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அந்த நேரத்திலும் ஐஷூ வரவில்லை. ஐஷூ பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே அவரது பெற்றோர்கள் வெளியேற்றுப்படி பல முறை கூறியுள்ளதாக தெரிகிறது. எனவே, ஐஷூ எந்த காரணத்திற்காக கலந்து கெள்ளவில்லை என்று எந்த தகவலும் வெளியாகவில்லை. 

    Vareeeyyyyy vaaaa #Aishu 😜🥳😂😂#BiggBossTamil7 pic.twitter.com/MdS2BI1bQg
    — 🦋❥࿐ ṗ༐ԅἳƴλƛҥ ࿐ ᥫ᭡ (@Pristhetics_) January 14, 2024

    இந்த நிலையில், அர்ச்சனா போன்று ஐஷூ ரீல்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அர்ச்சனாவுக்கு, ஐஷூக்கும் நடந்த வாக்குவாதத்தை ரீல்ஸ் ஆக வீடியோ பதிவு செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பாசிட்டிவ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  மேலும், அர்ச்சனா ஆர்மியில் சேர்ந்துவிட்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    மேலும் படிக்க
    Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: 2 வாரம் தான் பிளான் பண்ணி வந்தேன்.. பிக்பாஸ் பைனல்ஸ் மேடையில் அர்ச்சனா பளிச்!
    Bigg Boss 7 Tamil Title Winner: அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!
     

    Source link

  • PM Modi Celebrates Pongal In Union Minister L Murugan House Says Spirit Of Pongal Evokes Ek Bharat Shrestha Bharat

    PM Modi Celebrates Pongal In Union Minister L Murugan House Says Spirit Of Pongal Evokes Ek Bharat Shrestha Bharat

    சாதி, மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர் அனைவரும் கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி:
    இந்த நிலையில், மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடப்பட்ட பெங்கல் விழாவில் பிரதமர் மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பெங்கல் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “ஒற்றுமையின் உணர்வுபூர்வமான தொடர்பை பாஜக அரசின் காசி – தமிழ் சங்கமம், காசி – சௌராஷ்டிர சங்கமம் ஆகிய திட்டங்களில் காணலாம். இந்த திட்டங்களில் புவியியல் ரீதியாக தனித்தனியான பகுதிகளுக்கு இடையேயான தொடர்புகளை கொண்டாட முடியும்.
    இந்த ஒற்றுமை உணர்வுதான் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்க மிகப்பெரிய சக்தியாகும். டெல்லி செங்கோட்டையில் நான் முன்னிறுத்திய ‘ஐந்து உறுதிமொழிகள்’ நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த முக்கிய அம்சம் ஆகும்” என்றார்.
    திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி:
    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, “பொங்கலின் போது, ​​கடவுளுக்கு புதிய பயிர் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பாரம்பரியத்தின் மையப்புள்ளியாக விவசாயிகளை முன்னிறுத்துகிறது. தினை பற்றி ஒரு புதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பல இளைஞர்கள் தினைகளை வைத்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். 
    தினை விவசாயத்தை மேற்கொள்ளும் மூன்று கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தினையை ஊக்குவிப்பதன் மூலம் நேரடியாக பயனடைந்தனர். இந்தியாவின் ஒவ்வொரு பண்டிகைக்கும் கிராமப்புறம், பயிர் மற்றும் விவசாயிக்கும் தொடர்புள்ளது. பொங்கல் திருநாளில் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.

    #WATCH | Prime Minister Narendra Modi takes part in the #Pongal celebrations at the residence of MoS L Murugan in Delhi. Puducherry Lt Governor and Telangana Governor Tamilisai Soundararajan also present here. pic.twitter.com/rmXtsKG0Vw
    — ANI (@ANI) January 14, 2024

    பாஜக மேலிட நிர்வாகிகள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை தவிர நடிகை மீனாவும் இந்த பெங்கல் விழாவில் கலந்துகொண்டார். குறிப்பாக, நடிகை மீனாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

    Source link

  • Rajinikanth Vettaiyan Movie Poster To Be Revealed Tomorrow

    Rajinikanth Vettaiyan Movie Poster To Be Revealed Tomorrow

    பொங்கல் சிறப்பு வெளியீடாக ரஜினிகாந்த் நடித்து வரும்  வேட்டையன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட இருக்கிறது
    வேட்டையன்
    .த.செ . ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினியின் 170-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், டானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள்  நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
    படப்பிடிப்பு
    ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் நடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ரஜினி ரசிகர்கள் கோயிலைச் சுற்றி கூடி நின்று அவரை வரவேற்ற வீடியோ இணையதளத்தில் வரைலாகி வருகிறது.

    Good morning friends ❤#அன்புள்ள_ரஜினிகாந்த்#Vettaiyan #Thalaivar171 #Rajinikanth #Lalsalaam pic.twitter.com/l5iPllxtcm
    — Viju (@Viju16614469) January 14, 2024

    கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் சிறிய வீடியோ ஒன்றும் வெளியானது, வேட்டையன் படத்தின் சிறப்பு போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

    Watch out! 🎨 Splashing the canvas with VETTAIYAN’s colourful wishes! 😎 Revealing the poster TOMORROW at 9:15 AM! Get ready to witness the vibrant charisma! 😎🌈✨#VETTAIYAN 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/WBVCX778gN
    — Lyca Productions (@LycaProductions) January 14, 2024

    தலைவர் 171
    வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. தற்போது இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
    தலைவர் 172 , 173
    அடுத்ததாக ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைவதை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 
    லால் சலாம்
    இந்தப் படங்கள் தவிர்த்து ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். விஷ்ணு விஷால் , விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க. ஏ. ஆர் .ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது

    மேலும் படிக்க :  Bigg Boss 7 Tamil Title Winner: அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!
    BigBoss 7 Winner: பிக்பாஸ் 7 வெற்றியாளரின் பரிசுத்தொகை இவ்வளவா? கை நிறைய அள்ளிச் செல்லப்போவது யார்?

    Source link

  • காஞ்சிபுரத்தில் களைகட்டிய பொங்கல் விழா.! கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மக்கள் வெள்ளம்..!

    காஞ்சிபுரத்தில் களைகட்டிய பொங்கல் விழா.! கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மக்கள் வெள்ளம்..!


    <div dir="auto" style="text-align: justify;">
    <p>பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் இந்த &rsquo;பொங்கல்&rsquo; பண்டிகை உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/ede3707ff0cbee009c154c888dc88b911705234547634113_original.jpg" /></p>
    <p>அரைகோளத்தின் தெற்குப் புள்ளியில் சூரியன் அஸ்தமித்து, வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஜனவரி 15 அன்று தொடங்கி ஜனவரி 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.</p>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <h2><strong>தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?</strong></h2>
    <p>தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சனைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும் &nbsp;புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/33572f5c445f4deab085fa162c5ddf8a1705234608769113_original.jpg" /></p>
    <p>புராணங்களின்படி, அனைத்து தேவர்களுக்கும் ராஜாவாகிறார் இந்திரன். இதனால், அவர் அதிக கர்வம் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர், பசு மேய்பவர்கள் அனைவரையும் இந்திரனை வணங்க வேண்டாம் என்றும், நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால், கோபம் கொண்ட இந்திரன் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்த பேரழிவு ஏற்படுத்த மேகங்களை அனுப்பியுள்ளார். தையறிந்த பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, மக்கள் மற்றும் அனைத்து கால்நடைகளையும் பாதுகாக்க செய்து, இந்திரனுக்கு அருள் புரிகிறார். இதனால், இந்திரனின் கோபம் உடைந்து, கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். இதையே கொண்டாடும் நிகழ்வாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.&nbsp;</p>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடவுள்ள நிலையில் புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம்</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடவுள்ள நிலையில்&nbsp; இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்றும் காஞ்சிபுரத்தில் துணிக்கடைகள் மிகுந்த பிரதான சாலையாக விளங்குகின்ற காந்திசாலையில் புத்தாடை வாங்க குடும்பத்தினருடன் பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம&zwnj; பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகள்,துணிகளை வாங்கிட ஆர்வம் காட்டி அச்சாலையிலுள்ள துணிக்கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வருகிறது.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இருப்பினும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டும், அதிகளவிலான வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுவதால் அச்சாலையினை கடந்து சென்று வரும் உள்ளூர் பொதுமக்கள் சற்றே பெரும் அவதிகளுக்குள்ளாகி வருகின்றனர்&zwnj;. அதிலும் வாகனங்கள் பல அணிவகுத்து நின்று மாநகரின் பிரதான சாலைகளை இணைக்கும் குறுக்கு தெருக்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/96896ac803ae795c166e352afc91f5b01705234647190113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கூடும் என்பதினால் காந்திசாலையில் ஒருபுறச் சாலையில் செல்ல பேருந்து,கார்,ஆட்டோ உள்ளிட்டவைகளுக்கு தடைவிதித்து, மாற்று பாதையில் அவ்வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே&nbsp; போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.</div>

    Source link

  • Maldives : இந்தியாவுக்கு தேதி குறித்த மாலத்தீவு.. சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடும் புதிய அதிபர்..

    Maldives : இந்தியாவுக்கு தேதி குறித்த மாலத்தீவு.. சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடும் புதிய அதிபர்..


    <p>லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம், இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றவே இந்திய பிரதமர் மோடி, அங்கு சென்றதாக மாலத்தீவு அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். அதோடு நின்றுவிடாமல், பல ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர்.</p>
    <h2><strong>இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கிடையே என்ன பிரச்னை?</strong></h2>
    <p>மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ், மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம் மஜீத், மரியம் ஷியூனா ஆகியோர், இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசினார். மாலத்தீவு எம்பியும் அமைச்சரும் தெரிவித்த கருத்து இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரும் அழுத்தத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பேசிய 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.&nbsp;</p>
    <p>கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது முய்சு.</p>
    <p>தேர்தல்போதே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் முகமது முய்சு. மாலத்தீவு அதிபராக அவர் பதவியேற்ற உடனேயே, இந்திய ராணுவத்தை வெளியேற்ற உத்தரவிட்டார். முய்சுவின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இது தொடர்பான முடிவை, மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.</p>
    <h2><strong>இந்தியாவுக்கு காலக்கெடு விதித்த மாலத்தீவு:</strong></h2>
    <p>இந்த நிலையில், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற காலக்கெடு விதித்துள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு.<br />மார்ச் 15ஆம் தேதிக்குள், இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p>
    <p>இதுகுறித்து அதிபர் மாளிகை பொது கொள்கை செயலாளர் அப்துல்லா நாஜிம் இப்ராஹிம் கூறுகையில், "இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்க கூடாது. அதிபர் டாக்டர் முகமது முய்சுவின் கொள்கையும் இந்த நிர்வாகத்தின் கொள்கையும் இதுதான்" என்றார்.</p>
    <p>இந்திய படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாலத்தீவும் இந்தியாவும் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு தனது முதல் கூட்டத்தை இன்று காலை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மஹாவாரும் கலந்து கொண்டார்.</p>
    <p>மாலத்தீவு – இந்திய நாடுகளுக்கு கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றார். மாலத்தீவு, சீன நாடுகளுக்கு இடையே பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சீனாவில் இருந்து மாலத்தீவுக்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்ப வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கேட்டு கொண்டார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Bigg Boss 7 Tamil Title Runner:

    Bigg Boss 7 Tamil Title Runner:

    பிக்பாஸ் சீசன் 7: 
    பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7) நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர்.
    சண்டை, சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். 
    ரன்னர் அப் மணி:
    இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். 
    இதில் அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வாகி உள்ளதாக தகவல்கள் கசிந்த வரும் நிலையில்,ரன்னர் அப்பாக மணி சந்திரா (Manichandra) தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.  நிகழ்ச்சியில் தொடங்கிய சில நாட்களிலே மணி வெளியேறிவிடுவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆரம்பத்தில் பெரிய அளவில் மணிக்கு ஆதரவு எதுவும் இல்லை. 
    மணி வாங்கிய சம்பளம்:
    குறிப்பாக இந்த சீசனில் மணி, ரவீணாவும் காதல் ஜோடிகளாக காண்பிக்கப்பட்டு வந்தனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் மணிக்காக விளையாடுவதாக ரவீணா மீது சக போட்டியாளர்களும், ரசிகர்களும் விமர்சனங்களை வைத்து வந்தன.  மேலும், மணி எந்த விஷயத்திற்கும் முன்வருவதில்லை என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வந்தனர்.
    இருப்பினும், மற்றொரு தரப்பில் இருந்து மணிக்கு ஏகப்பட்ட ஆதரவுகள் வந்தன.  இப்படிப்பட்ட சூழலில் தான் மணி இறுதிச் சுற்றுக்கு வந்து ரன்னர் அப்பாக தேர்வாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    3வது ரன்னர் அப் மாயாவின் சம்பளம்:
    மணிசந்திராவின் ஒருநாள் சம்பளம் ரூ.15,000 என்று கூறப்படுகிறது. 106 நாட்கள் இருந்த மணிசந்திராவுக்கு ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மாயாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.18 ஆயிரம் என்று தெரிகிறது. எனவே, 106 நாட்கள் இருந்து மாயாவுக்கு ரூ.19 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும், ஃபைனலிஸ்டில் இருந்து தினேஷ் மற்றும் விஷ்ணு எலிமினேட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க
    Bigg Boss 7 Tamil Title Winner: அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!

    Source link

  • World Of Joy Launching 1 2 And 3 BHK Premium Gated Community Apartments At Siruseri OMR With 150 Amenities

    World Of Joy Launching 1 2 And 3 BHK Premium Gated Community Apartments At Siruseri OMR With 150 Amenities

    உலகத்தரம் வாய்ந்த கேட்டட் கம்யூனிட்டியை வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது The world of joy நிறுவனம். சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் சென்னை சிறுசேரியில் 10.13 ஏக்கர் நிலபரப்பில் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. MIVAN தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    சிறுசேரியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் குடியிருப்புகள்:
    சோழிங்கநல்லூரில் இருந்து 10 நிமிட தொலைவில் கேட்டட் கம்யூனிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஜீரோ பர்சன்ட் வேஸ்டேஜ் உடன் அதிகப்படியான நிலபரப்பை பயன்படுத்தி அப்பார்ட்மெண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் அப்பார்ட்மெண்டில் ஒரு சதுர அடி நிலபரப்பு கூட வீண் செய்யாமல் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. 1, 2 மற்றும் 3 பிஎச்கே பிரீமியம் ஹோம்களாக குடியிருப்புகள் விற்கப்பட்டு வருகிறது.
    150க்கும் மேற்பட்ட வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரிலாக்ஸ் செய்ய ஏதுவான இடங்களும் அப்பார்ட்மெண்டில் கட்டப்பட்டுள்ளது.
    பிரமிக்க வைக்கும் வசதிகளுடன் The world of joy:
    இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு அப்பார்ட்மெண்டின் ரூப் டாப்பிலும் சிறப்பான வசதிகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 75,000 சதுர அடி நிலபரப்பில் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது.
    மினி சினிமா தியேட்டர், பார்பிக்யூ (சமைத்தல்) பிரிவு, வெளியே உட்கார்ந்து அமரும் வகையில் டைனிங், குழந்தைகளுக்கான கேமிங் ஸோன், இணைந்து பணியாற்றி வகையில் கோ வொர்க்கிங் ஸ்பாட்ஸ், யோகா செய்வதற்கான ஸ்பாட் உள்பட எக்கச்சக்க வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது.
    1 பிஎச்கே பிரீமியம் ஹோம்களின் விலை 30 லட்ச ரூபாயுடன் தொடங்குகிறது. 2 பிஎச்கே ரெகுலர் ஹோம்கள் 48.5 லட்சம் ரூபாயுடனும் 2 பிஎச்கே லார்ஜ் ஹோம்களின் விலை 51 லட்சம் ரூபாயுடன் தொடங்குகிறது. 3 பிஎச்கே ரெகுலர் ஹோம்கள் 58 லட்சம் ரூபாயுடனும் 3 பிஎச்கே லார்ஜ் ஹோம்களின் விலை 61 லட்சம் ரூபாயுடன் தொடங்குகிறது.
     

    Source link

  • IND vs AFG: இன்னும் 35 ரன்களை எடுத்தால் முதல் இந்தியர்! இந்தூரில் இன்று வரலாறு படைப்பாரா கோலி?

    IND vs AFG: இன்னும் 35 ரன்களை எடுத்தால் முதல் இந்தியர்! இந்தூரில் இன்று வரலாறு படைப்பாரா கோலி?


    <p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (ஜனவரி 14) இந்தூரில் நடக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய டி20 அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்குகிறார். கோலி கடைசியாக 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார்.&nbsp;</p>
    <h2><strong>டி20யில் 12 ஆயிரம் ரன்கள்:</strong></h2>
    <p>நீண்ட நாட்களுக்குப் பிறகு டி20க்கு திரும்பியதால், விராட் கோலி இன்றைய போட்டியில் எப்படி விளையாடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.&nbsp; இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைக்க இருக்கிறார். விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை எட்ட இருக்கிறார். இந்த சாதனையை எட்ட அவருக்கு 35 ரன்கள் மட்டும் தேவையாக உள்ளது.&nbsp;</p>
    <p>இந்தூரில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு &nbsp;இடையிலான போட்டியில் விராட் கோலி, 35 ரன்கள் எடுத்தால், ஒட்டுமொத்தமாக டி20 போட்டி வரலாற்றில் 12,000 ரன்கள் எடுத்த நான்காவது கிரிக்கெட் வீரரும், முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைப்பார்.&nbsp;</p>
    <p>விராட் கோலி இதுவரை டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச + உள்நாட்டு டி20 + ஃப்ரான்சைஸ் லீக்) 11,965 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் அவருக்கு முன்னால் உள்ள மூன்று பேட்ஸ்மேன்களும் 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் 14,562 ரன்கள் குவித்த கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடம் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் பெயரில் உள்ளது. இவர் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 12,993 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில், கீரன் பொல்லார்டு 12,430 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.&nbsp;</p>
    <h2><strong>16 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோலி:</strong></h2>
    <p>டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து முறியடிக்க முடியாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.&nbsp;இதுவரை மொத்தம் 374 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி,&nbsp; 41.40 சராசரியில் 11,965 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 133.35 ஆக இருந்தது. மேலும், ஒட்டுமொத்தமாக 8 சதங்கள் மற்றும் 91 அரை சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இவர் மொத்தமாக எடுத்துள்ள 11,965 ரன்களில் சர்வதேச அளவில் 4,008 ரன்களும், ஐபிஎல்லில் 7,263 ரன்களும் எடுத்துள்ளார்.</p>
    <h2><strong>சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள்:&nbsp;</strong></h2>
    <p>சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 37 அரைசதங்களுடன்&nbsp; முதலிடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து, பாபர் அசாம் 98 இன்னிங்ஸில் 30 அரைசதங்கள், ரோஹித் ஷர்மா 140 இன்னிங்ஸ்களில் 29 அரைசதங்கள், முகமது ரிஸ்வான் 73 இன்னிங்ஸில் 25 அரைசதங்கள், டேவிட் வார்னர் 99 இன்னிங்ஸ்களில் 24 அரைசதங்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.&nbsp;</p>
    <h2><strong>அதிக ஆட்டநாயகன் விருது:</strong></h2>
    <p id="lr914l37">விராட் கோலி வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் (MOTM) விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.&nbsp;விராட் கோலி 115 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் ஆட்டநாயகன் விருதுகளை 15 முறை வென்றுள்ளார்.&nbsp;</p>
    <p id="lr8ylfjv">கூடுதலாக, விராட் கோலி டி20 உலகக் கோப்பைகளில் (2014 மற்றும் 2016 இல்) இரண்டு முறை உட்பட, 7 முறை தொடர் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Rahul Gandhi Team Milind Deora Ghulam Nabi Azad Hardik Patel Ashwani Kumar Jyotiraditya Scindia Congress Leaders Who Quit Since 2019 | ‘சிந்தியா முதல் மிலிந்த் தியோரா வரை’ ராகுல் காந்திக்கு ஷாக் கொடுக்கும் தலைவர்கள்

    Rahul Gandhi Team Milind Deora Ghulam Nabi Azad Hardik Patel Ashwani Kumar Jyotiraditya Scindia Congress Leaders Who Quit Since 2019 | ‘சிந்தியா முதல் மிலிந்த் தியோரா வரை’ ராகுல் காந்திக்கு ஷாக் கொடுக்கும் தலைவர்கள்

    சுதந்திர போராட்டம் காலம் தொடங்கி கடந்த 139 ஆண்டுகளாக இந்திய அரசியலின் மையப்புள்ளியாக காங்கிரஸ் கட்சியே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகான நேரு காலம் தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை, அக்கட்சி பல சவால்களை சந்தித்திருக்கிறது. கட்சியில் பல விஷயங்கள் மாறினாலும், ஒன்று மட்டும் மாறவில்லை. தொடர்ந்து பலவீனம் அடைந்து கொண்டே செல்கிறது. 
    தொடரும் பாஜகவின் மிஷன்:
    ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் ஆட்சி நடத்திய கட்சி தற்போது 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. அதில், இரண்டு தென்னிந்திய மாநிலங்கள். குறிப்பாக, வட இந்தியாவில் பாஜகவின் அரசியலை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் தவித்து வருகிறது. கொள்கை ரீதியாக காந்தியின் கட்சியாக இருந்தது தற்போது, கொண்ட கொள்கையில் நிலையில்லாமல் இருக்கிறது.
    அதற்கு நேர் எதிராக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது பாஜக. இவ்வளவு நாள் எந்த கட்சி தங்களுக்கு அதிகாரத்தை கொடுத்ததோ அதே கட்சியை விட்டு தலைவர்கள் வெளியேறுவது தொடர் கதையாகி வருகிறது. ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் கொள்கைக்கு நேரான கட்சியுடனே கைகோர்த்துள்ளனர்.
    கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்த காரணத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் வெளியேறியுள்ளனர். குறிப்பாக, 2019ஆம் ஆண்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து, ராகுல் காந்திக்கு நெருக்கமாக கருதப்பட்ட பல தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் யார்? யார்? எந்த கட்சியில் சேர்ந்துள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
    ஜோதிராதித்ய சிந்தியா:
    ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக பாஜகவில் இணைந்தார். சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்களும் அவருடன் சேர்ந்து பாஜகவில் இணைந்த காரணத்தால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவில் இணைந்த அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
    அம்ரீந்தர் சிங்:
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்ரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு, 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னை காங்கிரஸ் அவமானப்படுத்திவிட்டதாக சொல்லி கட்சியில் இருந்து வெளியேறினார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியையும் தொடங்கி, பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு, காங்கிரஸிலிருந்து விலகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, பாஜகவுடன் தனது கட்சியை இணைத்தார்.
    ஜிதின் பிரசாத்:
    ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரான ஜிதின் பிரசாத், உத்தரப் பிரதேச தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு 2021 இல் பாஜகவில் இணைந்தார். உத்தர பிரதேச காங்கிரஸின் முகமாக இருந்து வந்த அவர், பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
    அஸ்வனி குமார்:
    முன்னாள் மத்திய அமைச்சரான அஸ்வனி குமார், பஞ்சாப் தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், காங்கிரஸில் இருந்து விலகினார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக பதவி வகித்தவர். 2019 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறினார்.
    ஹர்திக் படேல்:
    குஜராத்தில் படேல் சமூக தலைவராக தலைவராக இருந்த ஹர்திக் படேல், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், காங்கிரஸில் இருந்து விலகினார். ராகுல் காந்தியால் கட்சியில் சேர்க்கப்பட்ட ஹர்திக் படேல், ராகுல் காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு காங்கிரஸில் இருந்து வெளியேறினார். ஒரு மாதம் கழித்து பாஜகவில் இணைந்தார்.
    குலாம் நபி ஆசாத்:
    காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். கட்சியிலும் ஆட்சியிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஒன்றிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர்.
    காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவர். தொடர் தோல்விக்கு ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மையே காரணம் எனக் கூறி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் இப்போது, ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.
    மிலிந்த் தியோரா:
    காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் தான் மிலிந்த் தியோரா. கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். தொடர்ந்து 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சிவசேனா தலைவர் அரவிந்த் சாவந்துக்கு எதிராக போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
    2012 மற்றும் 2014ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை இணையமைச்சராக இருந்துள்ளார். மும்பை மாநகர காங்கிரஸ் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென, I.N.D.I.A. கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தரப்பிலான சிவசேனா கோரி வருகிறது. ஆனால், இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், மிலிந்த் தியோரா தற்போது காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ளார். 
     

    Source link

  • Cinema Headlines Today January 14th Tamil Cinema News Today Keerthy Suresh Bigg Boss Tamil 7 Archana Ayalaan Captain Miller

    Cinema Headlines Today January 14th Tamil Cinema News Today Keerthy Suresh Bigg Boss Tamil 7 Archana Ayalaan Captain Miller

    கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!
    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம். மேலும் படிக்க
    நேத்து “இந்தி தெரியாது போயா” இன்று இந்தி பட அப்டேட்: கீர்த்தி சுரேஷை வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!
    அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிக்கும் முதல் இந்தி படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.  கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். மேலும் படிக்க
    மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!
     இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் – நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆந்திரா மாநில ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை அள்ளியுள்ளது. இதனிடையே “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனத்தை காணலாம். மேலும் படிக்க
    விஜயகாந்தை நினைத்து வடிவேலு வீட்டில் அழுதிருக்கலாம் – நடிகர் சரத்குமார் கருத்து
    ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பு தான் விஜயகாந்துடன் நட்பை தொடர வைத்தது என நேர்காணல் ஒன்றில் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.  நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் பெரிதும் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். மேலும் படிக்க
    அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!
    இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இதில், அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28ஆவது நாளில் அவர் வீட்டிற்கு நுழைந்தார். மேலும் படிக்க

    Source link

  • Bigg Boss 7 Tamil Title Winner Archana Salary May Be Rs 65 Lakhs Sources

    Bigg Boss 7 Tamil Title Winner Archana Salary May Be Rs 65 Lakhs Sources

    பிக்பாஸ் சீசன் 7:
    பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7) நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர்.
    சண்டை, சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். 
    டைட்டில் வின்னரான அர்ச்சனா!
    இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர்.
    இதில், அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28ஆவது நாளில் அவர் வீட்டிற்கு நுழைந்தார்.
    அர்ச்சனா மொத்தம் 77 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்கிறார். இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, 77 நாட்கள் இருந்து அர்ச்சனாவுக்கு ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    அர்ச்சனாவின் மொத்த சம்பளம்
    அத்துடன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையுடன் அவரது சம்பளம் ரூ.15 லட்சத்தையும் சேர்த்து,  மொத்தமாக 65 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றிருக்கிறாராம்.  வைல்டு கார்டு என்டரியாக வந்த அர்ச்சனாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.  
    அர்ச்சனாவுக்கு சின்னத்திரை மக்களின் மத்தியில் பிரபலம் இருக்கும் நிலையில், அவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.  அதேபோல, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவருடைய விளையாட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
    எனவே,  தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராக அர்ச்சனா உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    பி.ஆர். வேலை பார்த்தார அர்ச்சனா?
    இதற்கிடையில், “அர்ச்சனா ஒன்றும் செய்யவில்லை, பிஆர் வேலை பார்த்து தான் இந்த டைட்டிலை வென்று இருக்கிறார். குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளார் அர்ச்சனா. இதை ஏற்க முடியாது” என்று ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  அதே நேரத்தில், “ரியல் வின்னர் பிரதீப்  ஆண்டனி, ஆட்ட நாயகன் பிரதீப்”, என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். நேற்றில் இருந்தே பிரதீப்புக்கு ஹேஸ்டேகுகளும் வைரலாகி வருகிறது.
    மற்றொரு பக்கம், டாக்சி மாயா (Toxic Maya) என்று ஹேஸ்டேகும் வைரலாகி வருகிறது. சிலர் Magic Maya என்றும் ஹேஸ்டேகுகளுடனும் அவரை உற்சாகப்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். ”பிக்பாஸ் வீட்டில் மாயா இல்லை என்றால் எண்டர்டெயின்மென்ட் இருக்காது. நீங்க தான் டைட்டில் வின்னர்” என்று கூறி வருகின்றனர்.
     மேலும், இரண்டாம் இடம்பிடித்த மணிசந்திராவை கடுமையாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ”இவ்வளவு நான் என்ன பண்ணாரு மணி? இவரு ஏன் இவ்வளவு தூரம் வந்தாரு?” என்று ரசிர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
     

    Source link

  • Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Promo Update

    Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Promo Update

    பொங்கல் ஸ்பெஷலாக சிறகடிக்க ஆசை சீரியல் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல் வெளியாகி சீரியல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல்களில் ஒன்று “சிறகடிக்க ஆசை”.
    இன்று சீரியலின் இன்றைய ப்ரமோவில், அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட தன் அம்மா வீட்டிற்கு செல்கிறார். அங்கு விஜயா, மீனாவிடம் ”நீ போய் சமைக்குற வேலையை பாரு” என சொல்கிறார்.
    பின் பாட்டி ”அங்க தான் மீனா சமைக்க சொல்லுற, இங்க நீ சமையல் பண்ணு” என சொல்கிறார்.   சமைத்து முடித்து அனைவரும் சாப்பிட அமருகின்றனர். காய்கறி வெட்டும் போது கையை வெட்டிக் கொண்டதால்,  ஸ்ருதி ”எனக்கு சாப்பிட கம்போர்டபிளா இல்லை” என சொல்கிறார். அதனால் விஜயா அவருக்கு ஊட்டி விடுகிறார். அப்போது பாட்டி 3 மருமகள்களுக்கும் ஊட்டி விட சொல்கிறார். மீனாவுக்கு மட்டும் விஜயா வேண்டா வெறுப்பாக ஊட்டி விடுகின்றார். 3 மருமகளையும் ஒரே மாதிரி நடத்தனும் என்கிறார் பாட்டி. உடனே பாட்டியும், முத்துவும் ஒருவரையொருவர் பார்த்து தம்ப்ஸ் அப் காட்டிக் கொள்கின்றனர். இத்துடன் ப்ரமோ நிறைவடைகிறது. 
    சிறகடிக்க ஆசை நேற்றைய எபிசோடில் மனோஜ் இண்டர்வியூவ் செல்ல புறப்படுகிறார். அப்போது முத்து அவரை கலாய்க்கிறார். பின் கார் ஓட்டும் வேலை செய்தால் மாதம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என மனோஜ் இடம் சொல்கிறார் முத்து. இதைக் கேட்ட ரோகினி, “நீங்க படிக்கல கார் ஓட்டுறிங்க. அவரு 3 டிகிரி முடிச்சிருக்காரு அவரு ஏன் கார் ஓட்டனும்” எனக் கேட்கிறார். இதை கேட்டு மீனா கோபமடைந்தார். கார் ஓட்டுறது என்ன கேவலமான வேலையா என ரோகினியிடம் வாக்குவாதம் செய்கிறார். 
    நீ நாள் முழுக்க நின்னாலும் ரூ.ஆயிரத்துக்கு மேல சம்பாதிக்க முடியாது என்கிறார் விஜயா. முத்து விஜயாவுக்கு பதிலடி கொடுத்ததும், ”இதெல்லாம் எத்தனை நாளைக்குனு நான் பாக்குறேன்” என்றார். இத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சீரியல் வெகு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 
    முத்து- மீனா மனோஜ் ரோகினியின் வீட்டிற்கே சென்று வந்ததால், அடுத்து ரோகினி எப்போது வீட்டில் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பாத்துக் கொண்டிருக்கின்றனர். சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் வரும் 17ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. 

    மேலும் படிக்க 
    Annamalai: வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது – அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!
    IND vs ENG: “இந்திய மைதானத்தை குறை சொல்ல மாட்டோம்! ஏன் தெரியுமா?” இங்கிலாந்து துணை கேப்டன் விளக்கம்
     

    Source link

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 14 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 14 2024 Know Full Details


    சென்னையை சூழ்ந்த புகைமூட்டம்.. சுவாசிக்க தகுதியற்றதாக மாறிய காற்று… காரணம் என்ன?

    சென்னையில் போகி பண்டிகை ஒட்டி காற்றின் தரம் பல பகுதிகளில் மோசமாகி வருகிறது. ”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர். மேலும் படிக்க..

    பரபரக்கும் அரசியல் களம்.. இன்று முதல் மீண்டும் யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி..!

    ராகுல் காந்தி இன்று முதல் தன்னுடைய “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” நிகழ்ச்சியை தொடங்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த ஓராண்டாகவே ஒவ்வொரு கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பாதயாத்திரையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க..

    நாங்க சின்ன நாடுதான்; அதனால் மிரட்டுவீங்களா? – இந்தியாவை சாடுகிறாரா மாலத்தீவு அதிபர்?

    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் ஒயாமல் தான் உள்ளது. இந்நிலையில், சீனாவிற்கான 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நாடு திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல சிறிய தீவுகள் இருந்தாலும், 900,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்தியேகமான பொருளாதார மண்டலத்தை மாலத்தீவு கொண்டுள்து. இந்தப் பெருங்கடலின் பெரும் பங்கைக் கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தப் பெருங்கடல் குறிப்பிட்ட நாட்டிற்குச் சொந்தமானது அல்ல. இந்த (இந்திய) பெருங்கடல் அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. நாங்கள் யாருடைய கொல்லைப்புறத்திலும் இல்லை. மேலும் படிக்க..

    27-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு நிவாரணம்.. அமித்ஷா அளித்த வாக்குறுதி.. திமுக எம்பி டி.ஆர். பாலு பேட்டி

    கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. வரலாறு காணாத அளவில் கொட்டிய கனமழையால் வடமாவட்டங்களில் வெள்ளத்தில் தத்தளித்தன. மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீள தொடங்கின. இந்த பிரச்னை முழுமையாக முடிவுக்கு வரும் முன்பே, தென்மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவில் பேய்மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். மேலும் படிக்க..

    I.N.D.I.A. கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு.. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்த பாஜகவை, வீழ்த்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கான தேசிய மற்றும் மாநில கட்சிகள் அடங்கிய I.N.D.I.A எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்கனவே 4 முறை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்தி கூட்டணியின் இலக்கு என்ன, எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டு பாஜகவை வீழ்த்துவது என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் படிக்க..

    Source link

  • Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?

    Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?


    <p>பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் இந்த &rsquo;பொங்கல்&rsquo; பண்டிகை உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
    <p>அரைக்கோளத்தின் தெற்குப் புள்ளியில் சூரியன் அஸ்தமித்து, வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஜனவரி 15 அன்று தொடங்கி ஜனவரி 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?</strong></h2>
    <p>தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சினைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும் &nbsp;புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர்.&nbsp;</p>
    <h2><strong>பொங்கல் வரலாறு உங்களுக்கு தெரியுமா..?&nbsp;</strong></h2>
    <p>புராண கால வரலாறுபடி, பொங்கல் கொண்டாட இருவேறு கதைகள் கூறப்படுகிறது. அதில் ஒன்று, சிவனையும் நந்தியையும் பற்றியது. மற்றொன்று, கிருஷ்ணரையும் இந்திரனையும் பற்றியது.&nbsp;</p>
    <p><strong>கதை: 1</strong></p>
    <p>சிவபெருமான் தனது காளையான நந்தியை பூமிக்கு அனுப்பி, மக்களிடம் ஒவ்வொரு நாளும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவும், மாதத்திற்கு ஒரு முறை உணவையும் சாப்பிட சொல் என்று தூது அனுப்பியுள்ளார்.</p>
    <p>பூமிக்கு சென்ற நந்தி குழம்பிபோய், மக்களிடம் அனைவரும் தினமும் சாப்பிடவும், மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவபெருமான், நந்தியை பூமியில் நித்தமும் கழிக்கும்படி சாபமடைந்தார். மேலும் வயல்களை உழுது, அதிக உணவை உற்பத்தி செய்வதில் மக்களுக்கு உதவும் பொறுப்பை பெற்றது நந்தி. இதன் விளைவாக, தற்போதுவரை &nbsp;புதிய விளைபொருட்களுக்கான பயிர் அறுவடை செய்வதற்கு கால்நடைகள் உதவியாக கூறப்படுகிறது.&nbsp;</p>
    <p><strong>கதை: 2&nbsp;</strong></p>
    <p>புராணங்களின்படி, அனைத்து தேவர்களுக்கும் ராஜாவாகிறார் இந்திரன். இதனால், அவர் அதிக கர்வம் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர், பசு மேய்பவர்கள் அனைவரையும் இந்திரனை வணங்க வேண்டாம் என்றும், நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால், கோபம் கொண்ட இந்திரன் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்த பேரழிவு ஏற்படுத்த மேகங்களை அனுப்பியுள்ளார்.&nbsp;</p>
    <p>இதையறிந்த பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, மக்கள் மற்றும் அனைத்து கால்நடைகளையும் பாதுகாக்க செய்து, இந்திரனுக்கு அருள் புரிகிறார். இதனால், இந்திரனின் கோபம் உடைந்து, கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். இதையே கொண்டாடும் நிகழ்வாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>பொங்கல் விழா:</strong></h2>
    <table class="css-g3m580" border="1">
    <tbody>
    <tr>
    <td><strong>விழா</strong></td>
    <td><strong>தேதி</strong></td>
    <td><strong>நாள்</strong></td>
    </tr>
    <tr>
    <td>போகி</td>
    <td>ஜனவரி 14</td>
    <td>ஞாயிற்றுக்கிழமை</td>
    </tr>
    <tr>
    <td>பொங்கல்</td>
    <td>ஜனவரி 15</td>
    <td>திங்கட்கிழமை</td>
    </tr>
    <tr>
    <td>திருவள்ளுவர் தினம்</td>
    <td>ஜனவரி 16</td>
    <td>செவ்வாய்</td>
    </tr>
    <tr>
    <td>உழவர் திருநாள்</td>
    <td>ஜனவரி 17</td>
    <td>புதன்</td>
    </tr>
    </tbody>
    </table>
    <p>&nbsp;</p>

    Source link

  • Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Updates BB7 Tamil Title Winner Runner-Up Prize Money Finale Winner Kamal Haasan

    Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Updates BB7 Tamil Title Winner Runner-Up Prize Money Finale Winner Kamal Haasan


    விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றுடன் முடிவடைகிறது.  இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கிராண்ட் பைனல் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி சிறப்புனா கலைநிகழ்ச்சியுடன் எண்ட் கார்ட் போடவுள்ளது.  கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது.
    மொத்தம் 23 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி  தொடங்கியது.  டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.  ஒரு மாதத்திற்கு 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். 
    பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, ஆர்.ஜே. அர்ச்சனா ஆகியோர் நுழைந்தனர். இதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கப் தொடங்கியது.  முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி,  அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்தது.  
    போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் அனைவருமே  பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய முதல் நாளில் இருந்து முட்டி மோதி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், மக்கள் மனதிலும் இடம் பிடித்து டைட்டிலை நெருங்கி வருகின்றனர். 
    சண்டை சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர். 
    இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

    Source link

  • Ram Mandir Pran Pratishtha Ceremony Will Take Place On January 22 Day Plan

    Ram Mandir Pran Pratishtha Ceremony Will Take Place On January 22 Day Plan

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள ஜனவரி 22ம் தேதி, 4.25 அடி உயர ராமர் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட உள்ளது.
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அன்றைய நாளில், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஒட்டுமொத்த இந்துக்களும் இந்த விழாவினை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    Are you ready for Jan 22, 2024? The Ram Mandir Pran Pratishtha ceremony will take place, marking the end of a 550-year journey. A sacred idol will be enshrined, amidst ancient rituals and the anticipation of millions.#RamMandir #Ayodhya pic.twitter.com/dtDUTL5s1N
    — MyGovIndia (@mygovindia) January 13, 2024

    ஜனவரி 22ம் தேதி நடக்கப்போவது என்ன?
    இந்நிலையில், குடமுழுக்கு விழா நடைபெற உள்ள ஜனவரி 22ம் தேதி கோயில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில், கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்வதற்காக 51 இன்ச் உயரத்திலான ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையானது பிரதிர்ஷ்டை செய்வதற்கு முன்பாக சரயு நதிக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து மண்டப நுழைவு பூஜை, வாஸ்து பூஜை மற்றும் முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயர் பூஜையும் நடத்தப்படும். பிறகு ராமர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு 125 கலசங்களை கொண்டு வழிபாடு செய்யப்படும். வேதமந்திரங்கள் முழங்க யாகம் நடைபெறும். இறுதியாக கோயில் கருவறையில் பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிர்ஷ்டை செய்வார். இந்த நிகழ்வு வரும் 22ம் தேதி நண்பகல் 12.29 மணிக்கு தொடங்கி, 12.30 மணிக்கு முடியும். இதன் மூலம் 550 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
    கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இதனால், அயோத்தி நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று பாதுகாப்பை உறுதிசெய்ய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த உள்ளது. அங்கீகரிக்கப்படாத ட்ரோன் பயன்பாட்டை கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. கோயில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது. ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும். ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

    Source link

  • Tamilnadu Latest Headlines News Update 14th January 2024 Tamilnadu Flash News Pongal 2024 | TN Headlines:3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! சபரிமலையில் நாளை மகர ஜோதி

    Tamilnadu Latest Headlines News Update 14th January 2024 Tamilnadu Flash News Pongal 2024 | TN Headlines:3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! சபரிமலையில் நாளை மகர ஜோதி


    அரசுப்பள்ளிக்கு அள்ளிக்கொடுத்த ஆயி அம்மாள்; குடியரசு தினத்தன்று சிறப்பு விருது – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி அம்மாள் என்னும் பூரணம். இவரின் கணவர் உக்கிரபாண்டியன்  கனரா வங்கியில் வேலை பார்த்து வந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணிக்க, வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி அம்மாளுக்குக் கிடைத்தது இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மேலும் படிக்க

    CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்… சர்வாதிகார போக்கு அகல” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல்

    முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். மேலும் படிக்க

    Pongal Awards: தமிழ்நாடு அரசு சார்பில் 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

    2024ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மூவாயிரத்து 184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய 3,184 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பதக்கங்கள் தரப்பட உள்ளன. காவலர், காவலர் நிலை – 1, சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பேருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும் படிக்க

    Bhogi Air Quality Chennai: தொடங்கியது போகி கொண்டாட்டம் – சென்னையை சூழ்ந்த புகை மூட்டம்; விமான சேவை பாதிப்பு!

    பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். மேலும் படிக்க

    Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..

    கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும் படிக்க

    Source link

  • Annamalai: வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது – அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!

    Annamalai: வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது – அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!


    <p>பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உருவாக வாய்ப்பு இல்லை. வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ அண்ணாமலை முயலக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என அண்ணாமலை கூறுவது நகைப்புக்குரியது. தேசிய கல்விக் கொள்கை என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன.&nbsp;</p>
    <h2><strong>அண்ணாமலை கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது அரசு:&nbsp;</strong></h2>
    <p>பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கூற்றை தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கு என்று வரலாறும், பாரம்பரியமும் உண்டு. 1997லேயே தொலைநோக்கு பார்வையோடு தமிழ்நாட்டுக்கென தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கையை உருவாக்கியவர் கலைஞர். செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020ல் உருவாக்கப்பட்டது.&nbsp;</p>

    Source link

  • ‘Not A Specialist’ Rahul Removed From Wicketkeeping Role For England Tests

    ‘Not A Specialist’ Rahul Removed From Wicketkeeping Role For England Tests

    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
    தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற் கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும், இன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறும் 2 வது போட்டியில் விளையாட இருக்கிறது.
    இந்த தொடர் முடிந்த பிறகு இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களும் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, 16 வீரர்களை கொண்ட அந்த பட்டியலில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர்களான கே.எல்.ராகுல், கே.எஸ் பரத் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் இடம் பெற்றனர்.
    இந்நிலையில், பிசிசிஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கே.எல்.ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு முழுநேர பேட்ஸ்மேன் ஆக  விளையாடுவார். அவர் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளது.
    பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
    இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.எல்.ராகுல் இனி முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவார். விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் தொடர்ந்து பயணிக்கும் பட்சத்தில் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் கிடையாது. எனவே அந்த இடத்தில் நாங்கள் ஒரு முழுமையான ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரை கொண்டு வர நினைக்கிறோம். அதன் காரணமாக பேட்டிங்கில் திறன் வாய்ந்த அவர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுநேர பேட்ஸ்ட்மேனாக மட்டுமே விளையாடுவார்” என்று அறிவித்துள்ளது.
    முன்னதாக, கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரேல் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாக இருக்கின்றனர். இதில், கே.எஸ்.பரத் ஒரு சில போட்டிகளில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே விக்கெட் கீப்பராக இருக்கலாம் என்று தெரிகிறது.
    மேலும் படிக்க: IND vs AFG 2nd T20I: இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? தொடரில் நீடிக்க என்ன செய்யப்போகிறது ஆப்கானிஸ்தான்?
     
    மேலும் படிக்க: Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்… இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!
     
     

    Source link

  • வரலாற்றில் முதன்முறை! புத்தாண்டில் ஒரே நாளில் மட்டும் இத்தனை லட்சம் பேர் மெட்ரோவில் பயணமா?

    வரலாற்றில் முதன்முறை! புத்தாண்டில் ஒரே நாளில் மட்டும் இத்தனை லட்சம் பேர் மெட்ரோவில் பயணமா?


    <p>நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று டெல்லி. நாட்டின் தலைநகரமான டெல்லியில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மக்கள் குடும்பங்களுடன் கோயில்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிகவளாகங்கள், திரையரங்குகளுக்கு சென்று மகிழ்ந்தனர்.</p>
    <h2><strong>67.47 லட்சம் மக்கள்:</strong></h2>
    <p>டெல்லியில் புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1ம் தேதி மெட்ரோவில் மட்டும் 67.47 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு இந்தளவு மக்கள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி 49.16 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் 17 லட்சம் மக்கள் அதிகளவில் மக்கள் பயணித்துள்ளனர்.</p>
    <p>கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 23.66 லட்சம் மக்கள் டெல்லி மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு 18.07 லட்சம் மக்கள் மட்டுமே மெட்ரோவில் பயணித்துள்ளனர். அந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மெட்ரோவில் பயணித்தோரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக அமைந்தது.</p>
    <h2><strong>குவிந்த மக்கள்:</strong></h2>
    <p>கடந்த 2020ம் ஆண்டு டெல்லி மெட்ரோவில் 55.26 லட்சம் மக்கள் புத்தாண்டு தினத்தில் பயணித்தனர். கடந்த 2019ம் ஆண்டு 50.16 லட்சம் மக்கள் பயணித்தனர். கடந்த 6 ஆண்டுகள் தரவுகளின் படி, டெல்லி மெட்ரோவில் முன்னெப்போதும் இல்லாத அளவு புத்தாண்டு தினத்தில் மக்கள் பயணித்துள்ளனர்.</p>
    <p>இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டெல்லியில் உள்ள ராஜீவ் சௌக், படேல்சௌக் மற்றும் மத்திய தலைமைச் செயலகங்களில் மக்கள் வரிசை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வௌியில் வரை டிக்கெட் எடுக்க நின்றனர்.</p>
    <h2><strong>டிசம்பர் 31ம் தேதி:</strong></h2>
    <p>கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் மட்டும் டெல்லியில் மெட்ரோவில் 48.16 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 55.29 லட்சம் மக்கள் பயணித்ததே கடந்த 6 ஆண்டுகளில் டிசம்பர் 31ம் தேதி அதிகளவு பயணிகள் பயணித்ததே அந்தாண்டு மட்டுமே ஆகும். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 50.67 லட்சம் மக்கள் மெட்ரோவில் டெல்லியில் பயணித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு&nbsp; டிசம்பர் 31ம் தேதி 18.86 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 27.45 லட்சம் மக்கள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 47.40 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Indian Railways: இனி பல செயலிகள் தேவையில்லை.. சூப்பர் ஆப் மூலம் எல்லாம் சுலபமே.. ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு..

    Indian Railways: இனி பல செயலிகள் தேவையில்லை.. சூப்பர் ஆப் மூலம் எல்லாம் சுலபமே.. ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு..


    <p>இந்தியாவில் மக்கள் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல பல்வேறு போக்குவரத்து வசதிகள் உள்ளது. பேருந்து, விமானம், சொந்த வாகனங்கள் என ஏராளமான போக்குவரத்து அம்சங்கள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று தான் ரயில். இந்தியாவில் நீங்கள் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் ரயில் மூலம் மிகவும் சுலபமாக எந்த அசௌகரியமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம். கூடுதல் வசதியாக தொலை தூரம் செல்ல நினைப்பவர்கள் 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p>
    <p>முன்பதிவு செய்ய ரயில் நிலையங்களில் இருக்கும் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களில் அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். டிக்கெட் முன்பதிவுக்காக ரயில்வே துறை தரப்பில் பிர்த்தியேகமாக ஐ.ஆர்.சி.டி.சி என்ற செயலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் பலரும் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த செயலி 10 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.</p>
    <p>ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் புக்கிங் செயலி போக புறநகர் ரெயில் டிக்கெட்டுகளுக்காக யூடிஎஸ் செயலி மற்றும் ரெயில்கள் எங்கு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள தனி செயலி என ஒவ்வொரு சேவைகளுக்கும் தனித்தனி செயலிகளை பயணிகள் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, இது அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே செயலியில் கொண்டு வர இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.</p>
    <p>அதன்படி தற்போது சூப்பர் ஆப் என்ற செயலியை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த செயலியை உருவாக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பார் ஆப் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் பிற செயலிகளான PortRead, Satark, TMS-Nirikshan, ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், ஐஆர்சிடிசி இகேட்டரிங், ஐஆர்சிடிசி ஏர் என 12-க்கும் மேற்பட்டா செயலிகள் ஒருங்கிணைந்து ஒரே செயலியாக கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தனித்தனியாக செயலிகளை டவுன்லோடு செய்ய தேவையிருக்காது என்றும் ஒரே செயலியின் மூலமாக ரெயில்வே சேவைகளை பெற முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வருகின்றனர், இந்த சூப்பர் ஆப் வந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

    Source link

  • Lyricist Vairamuthu Appreciated Society Of The Snow Movie | Vairamuthu: இந்த மாதிரியான படங்கள் தமிழில் எப்போது?

    Lyricist Vairamuthu Appreciated Society Of The Snow Movie | Vairamuthu: இந்த மாதிரியான படங்கள் தமிழில் எப்போது?

    கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் படம் ஒன்றை பார்த்தது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
    தியேட்டர்கள், தொலைக்காட்சி சேனல்கள் தவிர்த்து உலக படங்களை காணும் இடமாக ஓடிடி தளங்கள் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக திரைப்படங்களை காணும் வாய்ப்பு அனைவருக்கும் அமைந்துள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், சோனி, ஆஹா, ஜீ 5, சன் நெக்ஸ்ட் என பல ஓடிடி தளங்கள் தமிழில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாதம், ஆண்டு சந்தா அடிப்படையில் கட்டணமானது நிர்ணயிக்கப்படுகிறது. 
    இந்நிலையில் சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ கடந்த ஜனவரி 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 1972 ஆம் ஆண்டு ஆண்டில் உருகுவேயின் நிகழ்ந்த விமான விபத்தின் கொடூரமான பின்னணியை அடிப்படையாக கொண்ட உண்மைக் கதையாகும்.  உருகுவே ரக்பி அணியை சிலிக்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானம் ஆண்டிஸ் மலைகளின் மையப்பகுதியில் விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த நபர்கள் உடனடியாக மீட்பு எதுவும் இல்லாமல் ஒரு பாழடைந்த டன்ட்ராவில் சிக்கித் தவித்தனர். இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
    இந்த படத்தில்  என்ஸோ வோக்ரின்சிக், மாட்யாஸ் ரீகால்ட், அகஸ்டின் பர்டெல்லா, டியாகோ வெஜெஸி, எஸ்டெபன் குகுரிஸ்கா,  ரஃபேல் ஃபெடர்மேன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். ஜே ஏ பயோனா இயக்கியுள்ள இந்த படம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. மைக்கேல் கியாச்சினோ இசையமைத்துள்ள இந்த படம் பெட்ரோ லுக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில் இந்த படம் தொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஒருஸ்பானிஷ் படம் பார்த்தேன்ஒரு பனிமலையில்விழுந்து உடைகிறது விமானம்விமானத்தின்உடைந்த கூடே கூடாரமாய்உயிர்காக்கப் போராடுகிறார்கள்பிழைத்தவர்கள்பசியின் உச்சத்தில்இறந்த பயணிகளின்இறைச்சியை உண்ணுகிறார்கள்இறுதியில்எப்படி மீட்கப்பட்டார்கள்என்பது கதை‘Society of the Snow’… pic.twitter.com/o84BLbuh9E
    — வைரமுத்து (@Vairamuthu) January 14, 2024

    அதில், “ஒரு ஸ்பானிஷ் படம் பார்த்தேன் ஒரு பனிமலையில் விழுந்து உடைகிறது விமானம். விமானத்தின் உடைந்த கூடே கூடாரமாய் உயிர்காக்கப் போராடுகிறார்கள் பிழைத்தவர்கள். பசியின் உச்சத்தில் இறந்த பயணிகளின் இறைச்சியை உண்ணுகிறார்கள். இறுதியில் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பது கதை ‘Society of the Snow’ படம் முடிவதற்குள் பனிக்கட்டி ஆகிவிடுகிறது ரத்தம். இப்படி ஒற்றைப் பொருள் குறித்த படங்கள் தமிழில் எப்போது?” என தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: Guntur Kaaram Review: மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!

    Source link

  • Watch Video: பட்டப்பகலில் பா.ஜ.க. தலைவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! உத்தரபிரதேசத்தில் நடந்தது என்ன?

    Watch Video: பட்டப்பகலில் பா.ஜ.க. தலைவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! உத்தரபிரதேசத்தில் நடந்தது என்ன?


    <p>நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியும் தீவிர பரபப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
    <h2><strong>பா.ஜ.க. சங்கல்ப் யாத்ரா:</strong></h2>
    <p>மக்களவைத் தேர்தலுக்காக பா.ஜ.க. சார்பில் சங்கல்ப் விகாஸ் யாத்ரா நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது மொரதாபாத். இந்த நகரில் உள்ளது தேவபூர் கிராமம். இந்த கிராமத்தில் பா.ஜ.க.வின் சங்கல்ப் யாத்ரா விகாஸ் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். இதில், உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் உள்பட பலரும் இடம்பெற்றிருந்தனர்.</p>
    <p>இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் விழா மேடையின் மீது போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து முறையாக முன்னறிவிப்பு விடுக்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினருக்கும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p>
    <p>இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி தகராறாக மாறியது. இதனால் மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்.</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="hi">UP : मुरादाबाद में BJP की ‘विकसित भारत संकल्प यात्रा’ में फायरिंग -<br /><br />मंच पर बैठने को लेकर BJP के जिला पंचायत सदस्य जेपी उर्फ जगत सिंह और प्रधान पिता हाजी यासीन में कहासुनी हुई। जगत सिंह पिस्टल से फायरिंग की। ‘मोदी गारंटी वैन’ का एंकर भगदड़ में घायल हुआ। <a href="https://t.co/tpdtreo34o">pic.twitter.com/tpdtreo34o</a></p>
    &mdash; Sachin Gupta (@SachinGuptaUP) <a href="https://twitter.com/SachinGuptaUP/status/1746189933885231149?ref_src=twsrc%5Etfw">January 13, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <h2><strong>துப்பாக்கிச் சூடு:</strong></h2>
    <p>அப்போது, இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் பா.ஜ.க. தலைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக பா.ஜ.க. தலைவர் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பினார். மேலும், அவர் துப்பாக்கியால் சுட்டதில் கூட்டத்தில் இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.</p>
    <p>இதனால், கூட்டத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.</p>
    <p>தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் வைத்திருந்த துப்பாக்கிக்கு அவரிடம் முறையான அனுமதி இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பா.ஜ.க. நடத்திய நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மீது துப்பாக்கியால் சுட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <p>மேலும் படிக்க: <a title="Milind Deora: காங்கிரசில் இருந்து வெளியேறிய முக்கியப் புள்ளி! தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் தந்த ஷாக்!" href="https://tamil.abplive.com/news/india/former-union-minister-milind-deora-quits-congress-ahead-of-polls-2024-161631" target="_blank" rel="dofollow noopener">Milind Deora: காங்கிரசில் இருந்து வெளியேறிய முக்கியப் புள்ளி! தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் தந்த ஷாக்!</a></p>
    <p>மேலும் படிக்க: <a title="Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி.." href="https://tamil.abplive.com/spiritual/sabarimala-ayyappan-tempel-magara-jothi-held-tomorrow-15-jan-2024-161632" target="_blank" rel="dofollow noopener">Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..</a></p>

    Source link

  • Pongal Movies Box Office: கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!

    Pongal Movies Box Office: கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!


    <p>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள 4 படங்களின் 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன என்பதை காணலாம்.&nbsp;</p>
    <h2><strong>பொங்கல் படங்கள்&nbsp;</strong></h2>
    <p>தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம்.&nbsp;</p>
    <h3><strong>கேப்டன் மில்லர்</strong></h3>
    <p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் &ldquo;கேப்டன் மில்லர்&rdquo;. சத்யஜோதி நிறுவனம் தனுஷை வைத்து 4வது முறையாக&nbsp; தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனிடையே படமானது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கேப்டன் மில்லர் படம் முதல் நாளில் ரூ.8.7 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில், 2வது நாளில் ரூ.6.75 கோடி வசூல் செய்ததாக sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h3><strong>அயலான்&nbsp;</strong></h3>
    <p>ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், சரத் கேல்கேர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் &ldquo;அயலான்&rdquo;. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஏலியன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விஷூவல்களுடன் வெளியாகியுள்ள அயலான் படம் குழந்தைகளை அதிகளவில் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ரூ.3.2 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாளில் வசூல் ரூ.4.25 கோடியாக அதிகரித்துள்ளது.&nbsp;</p>
    <h3><strong>மிஷன் சாப்டர் 1&nbsp;</strong></h3>
    <p>ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் &ldquo;மிஷன் சாப்டர் 1&rdquo;. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் அருண் விஜய்யின் முதல் பண்டிகை வெளியீடு படமாகும். இந்த படம் முதல் நாளில் ரூ.20 லட்சம் வசூல் செய்த நிலையில் 2வது நாளில் அது ரூ. 1கோடி வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <h3><strong>மெரி கிறிஸ்துமஸ்</strong></h3>
    <p>ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முக ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் &ldquo;மெரி கிறிஸ்துமஸ்&rdquo;. இந்த படத்துக்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லரை மையப்படுத்திய இப்படம் இந்தி – தமிழ் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் முதல் நாளில் ரூ.22 லட்சமும், 2வது நாளில் ரூ.31 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>வசூல் குறைய என்ன காரணம்?</strong></h2>
    <p>இப்படி பொங்கல் படங்கள் வசூல் குறைய என்ன காரணம் என தியேட்டர் தரப்பில் கேட்டபோது, &lsquo;பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதும், கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் நாளை பொங்கல் பண்டிகை முடியும் பட்சத்தில் தான் வசூல் அதிகரித்து அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும்&rdquo; என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>

    Source link

  • ‘Let The Egalitarian Pongal Bloom Like Joy’ – Chief Minister Stalin’s Letter To Dmk Cadres | CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்.. சர்வாதிகார போக்கு அகல”

    ‘Let The Egalitarian Pongal Bloom Like Joy’ – Chief Minister Stalin’s Letter To Dmk Cadres | CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்.. சர்வாதிகார போக்கு அகல”

    CM STALIN: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு, பொங்கல் வாழ்த்து கூறி கடிதம் எழுதியுள்ளார்.
    முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்:
    முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்து. வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அந்தப் பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்குத் தம்பி உதயநிதி அவர்களே பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் #MichaungCyclone பேரிடர் நிவாரணம், #பொங்கல்_பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கியுள்ளோம்.தமிழ்நாடெங்கும் #SamathuvaPongal மகிழ்ச்சியெனப் பொங்கட்டும்! அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்!”நான்தான் எல்லாம்”… pic.twitter.com/4DHckH4GMV
    — M.K.Stalin (@mkstalin) January 14, 2024

    ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ டெல்லி வரை அதிரட்டும். திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தைச் சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும். உணர்ந்து, மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.
    கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது திராவிட மாடல் அரசு” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு சார்பில் 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
     

    Source link

  • Novak Djokovic: ‘Virat Kohli & I Have Been Texting A Little Bit… I Have A Task To Perfect My Cricket Skills Before I Get To India’

    Novak Djokovic: ‘Virat Kohli & I Have Been Texting A Little Bit… I Have A Task To Perfect My Cricket Skills Before I Get To India’

    ரன் மிஷின் விராட் கோலி:
    இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை போல் சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவில் இருந்து மிகவும் பிரபலமான வீரர் விராட் கோலி. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். அந்தவகையில், இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 8848 ரன்களும், 292 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13848 ரன்களும் குவித்துள்ள இவர் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளார். அண்மையில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
    அதேபோல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்களை  கொண்ட கால்பந்து வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட வீரராகவும் கோலி இருக்கிறார்.
    இந்நிலையில் தான் கடந்த சில வருடங்களாக விராட் கோலியுடன் மொபைல் போனில் தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோக்கோவிச் கூறியுள்ளார்.
    விரைவில் சந்திப்பேன்:
    இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இது வரை நான் இந்தியாவிற்கு ஒரு முறை மட்டும் தான் சென்றிருக்கிறேன். அது எப்போது என்றார் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் விளையாடுவதற்காக சென்றதது தான். மகத்தான வரலாறும், கலாச்சாரமும், மத நம்பிக்கைகளையும் கொண்ட அந்த நாட்டிற்கு விரைவில் செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அங்கு உள்ள விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்றவர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். விரைவில் அவர்களை சந்திப்பேன்.
    குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலியுடன் நான் மொபைல் போன் மேசேஜ் தொடர்பில் இருக்கிறேன்.  ஆனால் நான் இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை. அவர் என்னை பற்றி பேசியது எனக்கு கெளரவமாக இருக்கிறது. கோலியின் விளையாட்டை நான் ரசிக்கிறேன்” என்று கூறியுள்ளார் நோவாக் ஜோக்கோவிச். முன்னதாக, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
     
    மேலும் படிக்க: Viral Video: ஜோகோவிச்சுடன் டென்னிஸ் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்! ரசிகர்களுக்கு டபுள் குஷி!
     
    மேலும் படிக்க: IND vs AFG 1st T20 LIVE: முதல் போட்டியை வென்றது இந்தியா; அரைசதம் விளாசிய ஷிபம் துபே
     

    Source link

  • Pongal Awards: தமிழ்நாடு அரசு சார்பில் 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்

    Pongal Awards: தமிழ்நாடு அரசு சார்பில் 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்

    Pongal Awards: 2024ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மூவாயிரத்து 184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய 3,184 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பதக்கங்கள் தரப்பட உள்ளன. காவலர், காவலர் நிலை – 1, சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பேருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. தீயணைப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 59 பேருக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணி பதக்கம் வழங்கப்பட உள்ளது. காவல் வானொலி, மோப்ப நாய் படை, காவல் புகைப்பட கலைஞர் பிரிவில் பணியாற்றும் 6 பேருக்கும், தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப  சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதந்திர பதக்கபப்டியாக பிப்ரவரி 1ம் தேதி முதல், நிலை வேற்பாடின்றி 400 ரூபாய் வழங்கப்பட உள்ளது. 
     
     
     
     

    Source link

  • Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..

    Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..


    <p>நாளை சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு பந்தளில் இருந்து திருவாபரண பெட்டி சபரிமலைக்கு புறப்பட்டது.&nbsp;</p>
    <p>கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.&nbsp;</p>
    <p>இந்த காலக்கட்டத்தில் 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் நிலையில் நடப்பாண்டு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதனால் சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p>
    <p>இந்நிலையில் நாளை மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த திருவாபரணங்கள் நேற்று அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின் 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பாரம்பரிய பெரு வழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நாளை மதியம் பம்பை சென்றடையும்.</p>
    <p>அதன்பின் அங்கிருந்து பக்தர்கள் சூழ நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். திருவாபரணப் பெட்டிக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். அதனை தொடர்ந்து 18 ஆம் படி வழியாக சன்னதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். &nbsp;தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம்.</p>
    <p>ஜோதி வடிவில் சாமி&nbsp; காட்சியளிப்பதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வுக்காக பக்தர்கள் காத்திருப்பார்கள். சபரிமலையே சரண கோஷத்தில் மூழ்கும். &nbsp;</p>
    <p>மேலும், &nbsp;Virtual queue அதாவது முன்பதிவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி 50,000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகர ஜோதி அன்று அதாவது ஜனவரி 15 ஆம் தேதி 40,000 பக்தர்கள் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதி அதிக கூட்டம் இருக்கும் காரணத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மல்லிகாபுரம் மற்றும் மணிகண்டாஸ் வழியாக தரிசனம் செய்ய வேண்டாம் என தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு&nbsp; நாட்கள் பக்தர்கள் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளதால் வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br /><br /></p>

    Source link

  • Movie Review Guntur Kaaram Review In Telugu Starring Mahesh Babu Sree Leela Meenakshi Meenakshi Chaudhary Guntur Kaaram Review Rating How Is Movie

    Movie Review Guntur Kaaram Review In Telugu Starring Mahesh Babu Sree Leela Meenakshi Meenakshi Chaudhary Guntur Kaaram Review Rating How Is Movie

    Guntur Kaaram

    Action
    இயக்குனர்: Trivikram Srinivas
    கலைஞர்: Mahesh Babu,Sreeleela,Meenakshi Chaudhary, Ramya Krishna

    Guntur Kaaram Review in Tamil: தெலுங்கில் இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் – நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆந்திரா மாநில ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை அள்ளியுள்ளது. இதனிடையே “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனத்தை காணலாம். 
    படத்தின் கதை
    ஆளும் கட்சியின் தலைவரான பிரகாஷ்ராஜ், தனது மகளாக ரம்யா கிருஷ்ணனை அமைச்சராக்க நினைக்கிறார். இது பிடிக்காத சக அரசியல்வாதியான சேர்ந்த ரவிக்குமார், ரம்யாகிருஷ்ணனின் முந்தைய கால வாழ்க்கை பற்றிய விவரங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுகின்றனர். கடந்த காலத்தில் கொலை வழக்கில் தன்னுடைய கணவர் ஜெயராம் ஜெயிலுக்கு சென்று விட, மகன் மகேஷ் பாபுவை விட்டு விட்டு தந்தையின் வற்புறுத்தலால் வேறொரு திருமணம் செய்து கொள்கிறார். 
    இதனிடையே ரம்யா கிருஷ்ணன்  அரசியல் வாழ்க்கைக்கு பாதகம் வந்துவிட கூடாது என்பதால் பிரகாஷ்ராஜ் ஒரு திட்டம் போடுகிறார். ஜெயிலில் 25 வருட சிறை தண்டனை பெற்று ரிலீசாகி வரும் ஜெயராம், தனது மகன் மகேஷ் பாபுவுடன் வாழ்ந்து வருகிறார். மகேஷ் பாபுவை அழைத்து வந்து தனது அம்மாவுக்கும் , மகனுக்கு சம்பந்தம் இல்லை என்பதை ஆவணங்களில் கையெழுத்திட மறுக்கிறார். இதனால் மகேஷ் பாபுவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியாக தனது அம்மா ரம்யா கிருஷ்ணனுடன் உறவை மகேஷ் பாபு முறித்து கொள்வாரா? இல்லை இருவரும் ஒன்றிணைந்தனரா? என்பதே குண்டூர் காரம் படத்தின் கதையாகும்.
    நடிப்பு எப்படி? 
    குண்டூர் காரம் படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது மகேஷ் பாபுதான். அவர் மட்டுமே போதும் என இயக்குநர் த்ரி விக்ரம் நினைத்து விட்டார் என தோன்றுகிறது. அதற்கேற்றவாறு சண்டை, பாசம், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் அப்ளாஸ் அள்ளுகிறார். மகேஷ் பாபுவின் நடிப்பு கொஞ்சம் காரம் தூக்கலாகவே உள்ளது. இவர்களை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜூக்கு மட்டுமே முக்கியமான கேரக்டர்கள் உள்ளது. அவர்களுக்கு  பெரிய அளவில் ஸ்கோப் இல்லாமல் கதையின் ஓட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். 
    படம் தியேட்டரில் பார்க்கலாமா?
    இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்றால் அது திரைக்கதை தான். கதைப்படி சிறப்பாக இருக்கும் குண்டூர் காரம் ஒரு படமாக ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே உள்ளது. த்ரி விக்ரம் சென்டிமென்ட் சீன்களில் புகுந்து விளையாடுபவர். அந்த காட்சிகளும் கதைக்கு தேவையான ஒன்றாகவே இருந்தது. ஆனால் குண்டூர் காரம் படத்தில் தேவையே இல்லாத காட்சிகள் அதிகளவில் உள்ளது. சண்டை, பாடல் எல்லாமே கொஞ்சம் கூட ஒன்றவில்லை என்றே தோன்றுகிறது. த்ரி விக்ரமின் வழக்கமான டைமிங் டயலாக்குகள் எல்லாம் இதில் உள்ளது. மனோஜ் பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவும், தமனின் பின்னணி இசையும் படத்தை தாங்கி பிடிக்கிறது. ஆக மொத்தத்தில் கதை என்ற உணவில் காரம் மட்டுமே இருந்தால் பத்தாது இல்லையா.. அந்த மாதிரி தான் குண்டூர் காரமும் பார்க்க மட்டுமே அழகு..!

    Source link

  • Former Union Minister Milind Deora Quits Congress Ahead Of Polls 2024

    Former Union Minister Milind Deora Quits Congress Ahead Of Polls 2024

    Milind Deora: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா,  காங்கிரஸில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    காங்கிரசில் இருந்து விலகிய மிலிந்த் தியோரா:
    மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணையப்போவதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மூத்த தலைவர் மிலிந்த் தியோரா  அறிவித்துள்ளார்.
    இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், ”காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்துள்ளேன். இந்த கட்சியுடனான எனது குடும்பத்தின் 55 ஆண்டுகால உறவை முடித்துக் கொண்டேன். பல ஆண்டுகளாக தங்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக அனைத்து தலைவர்கள், சக ஊழியர்கள் மற்றும் காரியகர்த்தாக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என மிலிந்த் தியோரா குறிப்பிட்டுள்ளார்.

    Today marks the conclusion of a significant chapter in my political journey. I have tendered my resignation from the primary membership of @INCIndia, ending my family’s 55-year relationship with the party.I am grateful to all leaders, colleagues & karyakartas for their…
    — Milind Deora | मिलिंद देवरा ☮️ (@milinddeora) January 14, 2024

    யார் இந்த மிலிந்த் தியோரா:
    காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் தான் மிலிந்த் தியோரா. கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். தொடர்ந்து 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சிவசேனா தலைவர் அரவிந்த் சாவந்துக்கு எதிராக போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். 2012 மற்றும் 2014ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை இணையமைச்சராக இருந்துள்ளார்.
    மும்பை மாநகர காங்கிரஸ் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென, I.N.D.I.A. கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்ரே தரப்பிலான சிவசேனா கோரி வருகிறது. ஆனால், இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், மிலிந்த் தியோரா தற்போது காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், முன்னள் மத்திய அமைச்சர் காங்கிரசில் இருந்து விலகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    Source link

  • Surekha Vani Latest Photo Goes Viral On Social Media

    Surekha Vani Latest Photo Goes Viral On Social Media

    Surekha Vani: ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சுரேகா வாணி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான துணை நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அம்மா ரோல்களில் நடித்த சுரேகா வாணி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக சுரேகா வாணி நடித்துள்ளார். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்திருப்பார். தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாகவும், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு மனைவியாகவும் நடித்திருப்பார். 
     
    இதுமட்டுமில்லாமல் விஜய் நடித்த மெர்சல், அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் நடிகை சுரேகா வாணி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இவருக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கும் நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 
     
    தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுரேகா வாணி தனது மகளுடன் ரீல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுரேகா வாணி வெளியிட்ட வீடியோ ஒன்று அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவை சுரேகா வாணி பகிர்ந்துள்ளார். அதை பார்த்தவர்கள் என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

     
    இந்த நிலையில் சுரேகா வாணி மொட்டை தலையுடன் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது சுரேகா வாணி தனது மகளுடன் இணைந்து திருப்பதிக்கு சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 
     

     

    Source link

  • Flight: போகி எதிரொலியால் புகை மூட்டம்..! திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்! 50 விமானங்கள் சேவை பாதிப்பு..!

    Flight: போகி எதிரொலியால் புகை மூட்டம்..! திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்! 50 விமானங்கள் சேவை பாதிப்பு..!


    <div dir="auto" style="text-align: justify;">புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி. 4 விமானங்கள் ஹைதராபாத் திருப்பி அனுப்பப்பட்டன. அந்தமான் புறப்பட வேண்டிய ஒரு விமானம் ரத்து. மேலும் 21 வருகை விமானங்கள், 24 புறப்பாடு விமானங்கள், சில மணி நேரங்கள் தாமதம்.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <h2><strong>Bhogi Pongal 2024 ( போகிப் பண்டிகை )</strong></h2>
    <p>உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள், போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுத்தம், சுகாதாரத்தை பேணும் விதமாக போகி கொண்டாடப்பட்டு வருகிறது. &lsquo;புதியன புகுதல்&rsquo; என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம்.&nbsp;தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு.</p>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">சென்னையில் போகிப் பண்டிகை புகைமூட்டம் பனிமூட்டம் இரண்டும் சேர்ந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு. சிங்கப்பூர் லண்டன் இலங்கை டெல்லி ஆகிய 4 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதோடு மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள், புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>விமான சேவை சீரடையும்</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">காலை 9 மணிக்கு மேல் விமான சேவை சீரடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஸ்பைஜெட் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரையில் சென்னை விமான நிலையத்தில் வருகை புறப்பாடு விமானங்கள் சுமார் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.</div>

    Source link

  • மேட்டூர் அணையின் நீர் வரத்து 659 கன அடியில் இருந்து 440 கன அடியாக குறைவு

    மேட்டூர் அணையின் நீர் வரத்து 659 கன அடியில் இருந்து 440 கன அடியாக குறைவு


    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 648 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 659 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 440 கன அடியாக குறைந்துள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/00781dc83bfcd72052d2815b29cadfc41705203444746113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நீர்மட்டம்:</p>
    <p>அணையின் நீர் மட்டம் 71.07 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.62 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/6feb3bf59a336e97697d1e88b126c62b1705203464225113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>கர்நாடக அணைகள்:</p>
    <p>கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.34 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,879 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.28 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.35 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 489 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • பனிப்பிரதேசம் போல் காட்சியளிக்கும் சாலைகள்! புகை மூட்டத்தால் ரயில்கள் தாமதம்!

    பனிப்பிரதேசம் போல் காட்சியளிக்கும் சாலைகள்! புகை மூட்டத்தால் ரயில்கள் தாமதம்!


    <div dir="auto" style="text-align: justify;"><strong>&nbsp;போகிப் பண்டிகை</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">பழையன கழிதல், புதியன புகுதல்&rdquo; என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர். அந்த நெருப்புக்கு முன்பு குவிந்த சிறுவர்கள், கைகளில் இருக்கும் இசைக்கருவிகளை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.&nbsp;</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/e1143002ac026e82f404c217984babc31705200730072113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>கடும் மாசு</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என அரசு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக்கும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் பொதுமக்கள் அரசின் உத்தரவை மீறி, பல்வேறு பொருட்களை தீயில் ஈட்டு கொளுத்தி போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக பனிக்காலத்தில் கடும் மாசு ஏற்பட்டுள்ளது.</div>
    <div dir="auto" style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/7ecc80641ea35a37c910bca1d33460591705200764370113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>விரைவு ரயில்கள் தாமதம்</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திலும் துணி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரித்து போகி பண்டிகை கொண்டாடப்பட்டதால், கடும் மாசு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு ,சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி ,வண்டலூர், ஊரப்பாக்கம், கிளம்பாக்கம், படாளம், மதுராந்தகம், செய்யூர், மேல்மருவத்தூர் ,கல்பாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில்&nbsp; காற்று மாசு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு, மெதுவாக வாகனத்தை இயக்கி வருகின்றனர்.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/245d8e07c6162b7aa1eb693fa26fb8461705200787410113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">இந்தநிலையில் கடும் மாசு காரணமாக , தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி இயக்கக்கூடிய விரைவு ரயில்கள் சிக்னல் சரியாக தெரியாததனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக சென்று கொண்டிருக்கிறது. புகை மற்றும் பனிமூட்டத்தால் சிக்னல் போடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் விரைவு ரயில்கள் தாமதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>போகி பண்டிகை ஒட்டி கடும் பனிமூட்டம் காரணமாக திடீரென ஊட்டியாக மாறிய காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதி.</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <div dir="auto">காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் போகி பண்டிகையை ஒட்டி வீட்டிலிருந்து பழைய பொருட்களை வீட்டில் வாசலில் வைத்து எரித்து காற்று மாசு ஏற்பட்டதன் காரணமாக&nbsp; காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசு மாசுடன் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/eaf9761511b83f12c5b817c6b17dc5e21705200815747113_original.jpg" /></div>
    <div dir="auto">காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், ராஜகுளம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பரந்தூர்,கீழம்பி, தாமல்,ஒலி முகமது பேட்டை, வாலாஜாபாத், மாகரல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். &nbsp;கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு திடீரென ஊட்டியை போன்று காஞ்சிபுரம் மாறியதால்&nbsp; பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து காற்று மாசூடன் கொண்ட பனிப்பொழிவை ரசித்துச் சென்றனர்.</div>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>

    Source link

  • Mosaic Artist Prepares Lord Ram’s Portrait Using 14 Lakh Diyas Ahead Of Ram Mandir Event In Ayodhya | Ayodhya: அயோத்தியில் 14 லட்சம் விளக்குகளால் உருவான ராமர் உருவம்

    Mosaic Artist Prepares Lord Ram’s Portrait Using 14 Lakh Diyas Ahead Of Ram Mandir Event In Ayodhya | Ayodhya: அயோத்தியில் 14 லட்சம் விளக்குகளால் உருவான ராமர் உருவம்

    Ayodhya: அயோத்யாவில் 14 லட்சம் விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட ராமர் உருவத்தை சுற்றி, பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர்.
    அயோத்யா ராமர் கோயில்:
    உத்தரபிரதேச மாநிலம் அயோத்யாவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கான, குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஒட்டுமொத்த அயோத்யா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவினை முன்னிட்டு நகரம் முழுவதும் பக்தர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மொசைக் கலைஞர் அனில் குமார் சாகேத் மகாவித்யாலயாவில்,  14 லட்சம் விளக்குகளைப் பயன்படுத்தி ராமரின் உருவப்படத்தை தயார் செய்துள்ளார்.

    #WATCH | Ayodhya, Uttar Pradesh: Drone visuals of Lord Ram portrait prepared by Mosaic artist Anil Kumar using 14 lakh diyas at Saket Mahavidyalaya(Courtesy: Office of Ashwini Chaubey) pic.twitter.com/62XnuHHMbS
    — ANI (@ANI) January 13, 2024

    14 லட்சம் விளக்குகளாலான ராமர்:
    பல்வேறு வண்ணங்களாலான விளக்குகளை கொண்டு வில்லை ஏந்தி நிற்கும் வடிவில், ராமரின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் கீழே அயோத்யா ராமர் கோயிலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளதோடு, மேற்பகுதியில் இந்தியில் ஸ்ரீராம ஜென்மபூமி என எழுதப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக் காண குவிந்த ஏராளமான பக்தர்கள், ராமர் உருவத்தைச் சுற்றி விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர்.
    பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
    குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று பாதுகாப்பை உறுதிசெய்ய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த உள்ளது. அங்கீகரிக்கப்படாத ட்ரோன் பயன்பாட்டை கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
    கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது. ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும், அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரை வழங்கப்படுகிறது. ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.  அயோத்தி மற்றும் அண்டை மாவட்ட மக்களின் ஒருங்கிணைப்புடன், இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். உலகின் அதிநவீன தொழில்நுட்ப அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. இது அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் முக்கிய பகுதியாக இருக்கும்” என்று எஸ்பி வான்ஸ்வால் கூறியுள்ளார். கோயில் குடமுழுக்கு விழாவை நேரடியாக 4-கே தொழில்நுட்பத்தில் பல்வேறு பிராந்திய மொழிகளில் ஒளிபரப்ப, 40 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    Source link

  • Zee Tamil Will Be Telecasted Special Program For Tribute To Late Dmdk Leader Vijayakanth

    Zee Tamil Will Be Telecasted Special Program For Tribute To Late Dmdk Leader Vijayakanth

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீ தமிழ் சேனலில் பொங்கல் தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. 
    தமிழ் சினிமா, தமிழக அரசியல் என இரண்டிலும் தனது திறமையால் கோலோச்சியவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைபாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வரை மீள முடியாத சோகத்தில் தான் இருந்து வருகின்றனர்.
    அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சல்யூட் டூ கேப்டன் என்ற பெயரில் திரையுலகில் ரீல் ஹீரோவாகவும் நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோவாகவும் நல்ல நடிகனாக நல்ல மனிதராக என அனைத்து விதத்திலும் மக்கள் கொண்டாடும் நாயகனாக தொண்டர்களால் கருப்பு எம்.ஜி.ஆர் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த்தின் மறக்க முடியாத விஷயங்களையும் தருணங்களையும் நினைவு கூறும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் விஜயகாந்த்திற்கு கட் அவுட், பேனர் உள்ளிட்டவற்றை வைத்து தொடர்ந்து அன்னதானம் போன்ற விஷயங்களை செய்து அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நேரத்தில் விஜயகாந்தின் மகன்கள் ஆன பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருடன் இணைந்து கேப்டன் விஜயகாந்த் நல்ல நடிகனாக, நல்ல தலைவனாக, வழிகாட்டியாக, ரியல் ஹீரோவாக, நண்பனாக அவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை விளக்கும் வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல திரையுலக பிரபலங்கள் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    மேலும் இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக வரும் ஜனவரி 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: Kamalhaasan: காமெடிக்கு ஒரு அளவு இருக்கு: கமல் – மாயா பற்றி தரக்குறைவான பேச்சு: மன்னிப்பு கேட்டு புகழ், குரேஷி வீடியோ!

    Source link

  • Vegetable Price: போக்குவரத்து நெரிசலால் வரத்து பாதிப்பு.. கடுமையாக உயர்ந்த காய்கறி விலைகள்..

    Vegetable Price: போக்குவரத்து நெரிசலால் வரத்து பாதிப்பு.. கடுமையாக உயர்ந்த காய்கறி விலைகள்..


    <p>Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.</p>
    <p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.</p>
    <div id="v-abplive-v4-0">
    <div id="_vdo_ads_player_ai_10244" class="vdo_video_unit vdo_floating">
    <div id="vdo_logo_parent">
    <div id="cross_div"><strong>இன்றைய நாளில் (ஜனவரி 14) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)&nbsp;</strong></div>
    </div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    </div>
    </div>
    <div class="uk-overflow-auto">
    <table class="uk-table" style="width: 593px; height: 1044px;" border="1" width="608">
    <tbody>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">&nbsp;<strong>&nbsp;காய்கறிகள் (கிலோவில்)&nbsp;</strong></td>
    <td style="width: 93.4375px; height: 44px;">&nbsp;&nbsp;<strong>முதல் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 134.625px; height: 44px;">&nbsp; &nbsp;<strong>இரண்டாம் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;<strong>மூன்றாம் ரகம்&nbsp;</strong></td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெங்காயம்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">26 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">24 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; 20 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தக்காளி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">28 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 20 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நவீன் தக்காளி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">38 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உருளை &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">26 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">22 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 16 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி கேரட்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">70 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp;60 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 10px;">சின்ன வெங்காயம்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 10px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 10px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 10px;">&nbsp; &nbsp; &nbsp;40 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பெங்களூர் கேரட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீன்ஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">70 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp; &nbsp;&nbsp;&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கர்நாடகா பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">27 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சவ் சவ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">16 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;13 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முள்ளங்கி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முட்டை கோஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;13 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெண்டைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">55 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உஜாலா கத்திரிக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வரி கத்திரி &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காராமணி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பாகற்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">புடலங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சுரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">18 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேனைக்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">48 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முருங்கைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">130 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேமங்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காலிபிளவர்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சை மிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அவரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சைகுடைமிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">45 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">வண்ண குடை மிளகாய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 44px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">மாங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">120 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளரிக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பட்டாணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">இஞ்சி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;90 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பூண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">350 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">320 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">160 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">&nbsp;மஞ்சள் பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளை பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">-</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீர்க்கங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">எலுமிச்சை&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">70 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நூக்கல்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கோவைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கொத்தவரங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைக்காய்</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">12 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">8 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைத்தண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைப்பூ</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அனைத்து கீரை</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">12 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தேங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">34 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 32 ரூபாய்</td>
    <td style="text-align: center; height: 22px; width: 115.562px;">&nbsp;</td>
    </tr>
    </tbody>
    </table>
    <p>&nbsp;</p>
    </div>

    Source link

  • The Air Quality In Chennai Is Deteriorating At Various Places Due To The Burning Of Old Items On The Occasion Of Bhogi Festival.

    The Air Quality In Chennai Is Deteriorating At Various Places Due To The Burning Of Old Items On The Occasion Of Bhogi Festival.

    சென்னையில் போகி பண்டிகை ஒட்டி காற்றின் தரம் பல பகுதிகளில் மோசமாகி வருகிறது. 

    #WATCH | Tamil Nadu: Air Quality Index in various parts of Chennai deteriorates to ‘Poor’ category as per the Central Pollution Control Board (CPCB). (Drone visuals from Koyambedu, shot at 5:50 am) pic.twitter.com/djiaelxA7F
    — ANI (@ANI) November 13, 2023

    ”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர்.
    ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த போகி பண்டிகையில் போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். அந்த வகையில், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்ற நச்சுப்புகை வெளியிடும் பொருட்களை நெருப்பில் போடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Thick smoke engulfs #Chennai as #Bhogi bonfires lit. AQI nearing 200 mark. Very poor air quality. People with respiratory problems don’t venture out. @NewIndianXpress @Tnpcbofficial @CPCB_OFFICIAL #bhogi #BhogiFestival #AirPollution @WHO pic.twitter.com/0Ag84C1iFa
    — S V Krishna Chaitanya (@Krish_TNIE) January 14, 2024

    இன்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து வருகின்றனர். அந்த நெருப்புக்கு முன்பு குவிந்த சிறுவர்கள், கைகளில் இருக்கும் இசைக்கருவிகளை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இன்று முதலே களைக்கட்டியுள்ளது.
    அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருப்பதால போகி கொண்டாட்டத்துடன் சேர்ந்து சென்னை முழுவதும் புகை மூட்டமாக மாறியுள்ளது. இதனால் சென்னையில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணலியில் 287 புள்ளிகள் கொண்டு காற்றின் தரம் பதிவாகியுள்ளது. இது மிகவும் மோசமான குறியீடாகவும், இந்த காற்று சுவாசிக்க தரமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல பெருங்குடியில் எண்ணூர் 226, அரும்பாக்கம் 207, ராயப்புரம் 195 என பதிவாகியுள்ளது.
    காற்று தரக்குறியீடு 100 வரை இருந்தால் அது சுவாசிக்க ஏதுவானது. 100 ஐ கடந்து பதிவானால் அது சற்று மாசடைந்துள்ளது என அர்த்தம். காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் “காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்”, 301 முதல் 400 இருந்தால் “காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்”, மற்றும் 401 முதல் 500 இருந்தால் “காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்” கருதப்படுகிறது.சென்னையில் ஒட்டுமொத்தமாக மற்ற நாளில் 80 வரை இருக்கும் நிலையில் நகரில் தற்போது காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், தற்போது பலருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.
     
     
     

    Source link

  • IND Vs ENG England Won’t Complain If Indian Pitches Spin From Ball One, Says Ollie Pope Ahead Of Series | IND Vs ENG Test: ”இந்திய மைதானங்கள், நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்”

    IND Vs ENG England Won’t Complain If Indian Pitches Spin From Ball One, Says Ollie Pope Ahead Of Series | IND Vs ENG Test: ”இந்திய மைதானங்கள், நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்”

    IND vs ENG Test: டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடுகளங்கள் தொடர்பாக, இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.  
    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
    இந்த மாத றுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, முதல் இரண்டு போட்டிகளுக்காக ரோகித் சர்மா தலைமையில், 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவே இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய மைதானங்கள் யாருக்கு சாதகமாக அமைக்கப்படும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
    ஆச்சரியமில்லை – ஒல்லி போப்:
    இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான பயிற்சிக்காக அபுதாபிக்கு புறப்படும் முன்பு, இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, “இந்தியா தொடரில் ஆடுகளத்திற்கு வெளியில் இருந்து ரசிகர்களால் அதிக சத்தம் இருக்கும். ஆடுகளங்கள் ஒரு பெரிய பேசும் புள்ளியாக இருக்கலாம். ஆனால் இரண்டு அணிகளும் ஒரே விக்கெட்டில் விளையாடுவதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாங்கள் எங்களால் முடிந்தவரை அந்த சூழலுக்கு தயாராக வேண்டும். இங்கிலாந்தில், நாங்கள் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தில் அதிக புற்களை விட்டுவிடுவோம். எனவே இந்தியாவும் தங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்த அமைப்பதில் ஆச்சரியமில்லை. குறைந்த ஸ்கோர்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
    ”நாங்க குறை சொல்ல மாட்டோம்”
    தென்னாப்பிரிக்கா – இந்தியா டெஸ்ட் போட்டியை பார்த்தேன். அது அருமையாக இருந்தது. வீரர்கள் கடுமையாக போராடி ரன்களை சேர்த்தனர். இதேபோன்ற சூழலை தான் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். ஆனால் முதல் பந்திலிருந்தே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும்,  நாங்கள் எந்த குறையும் சொல்லமாட்டாம்.  அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முறையைக் கண்டுபிடிக்க முயற்செய்வோம்” ஒல்லி போப் தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெறும் இரண்டே நாட்களில் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா, “வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரம், இந்தியாவிற்கு வருகை தரும் அணிகள் அங்குள்ள ஆடுகளங்களை மட்டும் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி:
    தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டிலும் தொடங்குகிறது. நான்காவது போட்டி பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவிலும் தொடங்குகிறது.
    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில்,ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜூரல், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆவேஷ் கான்

    Source link

  • Congress Leader Rahul Gandhi Will Be Begin Bharat Nyay Yatra From Today

    Congress Leader Rahul Gandhi Will Be Begin Bharat Nyay Yatra From Today

    ராகுல் காந்தி இன்று முதல் தன்னுடைய “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” நிகழ்ச்சியை தொடங்க உள்ளது  அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் 
    2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த ஓராண்டாகவே ஒவ்வொரு கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பாதயாத்திரையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.,யுமான ராகுல்காந்தி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது “பாரத ஒற்றுமை யாத்திரை” நிகழ்ச்சியை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வாயிலாக சுமார் 4000 கி.மீ தூரம் நடந்த ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த யாத்திரையானது 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் காஷ்மீரில் தனது பயணத்தை நிறைவு செய்தார். அதாவது ராகுல் காந்தியின் இந்த பயணம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இருந்தது. 
    ராகுல்காந்தி யாத்திரை 
    இந்நிலையில் அடுத்தக்கட்டமாக ஓராண்டு இடைவெளிக்குப் பின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ராகுல் காந்தி தனது அடுத்தக்கட்ட பயணத்தை தொடங்க உள்ளார். இன்று தொடங்கும் இந்த யாத்திரை கடந்த பல மாதங்களாக பிரச்சினைகளால் பற்றி எரியும் மணிப்பூரில் இருந்து தொடங்க உள்ளது.  அங்குள்ள இம்பால் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில் தொடங்கும் இந்த நியாய யாத்திரையில் பல்வேறு நிபந்தனைகளுடன் மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த யாத்திரையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடங்கி வைக்கிறார். 
    இந்த யாத்திரையானது 15 மாநிலங்கள் வழியாக நடைபெறுகிறது. இது 110 மாவட்டங்கள், 100 மக்களைவை தொகுதிகள், 337 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்தம் 6,173 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த யாத்திரை சில இடங்களில் நடைப்பயணமாகவும், பேருந்துகள் மூலமாகவும் நடைபயணம் மேற்கொள்கிறார். இன்று மணிப்பூரில் யாத்திரை நிறைவு செய்யும் ராகுல்காந்தி அங்கிருந்து நாகாலாந்து செல்கிறார். தொடர்ந்து அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேலாலயா, மேற்கு வங்கம்,பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் வழியாக சென்று மகாராஷ்ட்ராவில் மார்ச் 20 ஆம் தேதி நிறைவடைகிறது. 
    இந்நிலையில் ராகுல்காந்தியின் யாத்திரையில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த யாத்திரை மேடையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

    மேலும் படிக்க: Tamilnadu MPs – Amit Shah: 27-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு நிவாரணம்.. அமித்ஷா அளித்த வாக்குறுதி.. திமுக எம்பி டி.ஆர். பாலு பேட்டி

    Source link

  • Maldives President Mohamed Muizzu Says ‘no One Has License To Bully Us’ Amid Row With India | Maldives Row: நாங்க சின்ன நாடுதான்; அதனால் மிரட்டுவீங்களா?

    Maldives President Mohamed Muizzu Says ‘no One Has License To Bully Us’ Amid Row With India | Maldives Row: நாங்க சின்ன நாடுதான்; அதனால் மிரட்டுவீங்களா?

    Maldives Row: லட்சத்தீவு விவகாரத்தில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    மாலத்தீவு அதிபர் பேச்சு:
    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் ஒயாமல் தான் உள்ளது. இந்நிலையில், சீனாவிற்கான 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நாடு திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல சிறிய தீவுகள் இருந்தாலும், 900,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்தியேகமான பொருளாதார மண்டலத்தை மாலத்தீவு கொண்டுள்து. இந்தப் பெருங்கடலின் பெரும் பங்கைக் கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தப் பெருங்கடல் குறிப்பிட்ட நாட்டிற்குச் சொந்தமானது அல்ல. இந்த (இந்திய) பெருங்கடல் அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. நாங்கள் யாருடைய கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அரசு. நாங்கள் அளவில் சிறியதாக இருக்கிறோம் என்ற பலவீனத்தை பயன்படுத்தி எங்களை மிரட்ட உங்களுக்கு அனுமதி இல்லை” என முகமது முய்சு பேசியுள்ளார். இந்தியா உடனான பிரச்னைக்கு மத்தியில் அவர் கூறியுள்ள கருத்து, முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

    We may be small, but that doesn’t give you the license to bully us” 🔥Maldives president Muizzu give befitting reply to India.Difficult situation for India as all the neighbor countries are angry.#Maldives #MaldivesOut #india pic.twitter.com/XXU4IfPLko
    — Mohammad Hafeez (@Mjournalissts) January 13, 2024

    சீனாவிடம் கோரிக்கை:
    முன்னதாக சீனாவில் பேசிய முகமது முய்சு, “சீனா எங்கள் சந்தையில் கொரோனாவிற்கு முன்பு முந்தைய முதலிடத்தில் இருந்தது. அந்த நிலையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதற்காக மாலத்தீவிற்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா – மாலத்தீவு பிரச்னை:
    பிரதமர் மோடி அண்மையில் தான் லட்சத்தீவு சென்றது தொடர்பான புகப்படத்தை இணையத்தை வெளியிட்டு இருந்தார். இது மாலத்தீவிற்கு எதிரான பரப்புரை என அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, இனி மாலத்தீவுகளுக்கு செல்லப்போவதில்லை என பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, ஏற்கனவே மாலத்தீவு பயணத்திற்காக செய்து இருந்த முன்பதிவுகளையும் ரத்து செய்து வருகின்றனர். இதனால் மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்கு மாலத்திவு  சுற்றுலா தொழிற்சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் இன்னும் தனிந்தபாடில்லை.
     

    Source link

  • Today Movies In Tv Tamil January 14th Television Schedule Vikram Thuppakki Namma Veettu Pillai Kodi Kaithi

    Today Movies In Tv Tamil January 14th Television Schedule Vikram Thuppakki Namma Veettu Pillai Kodi Kaithi

    Sunday Movies: ஜனவரி 14 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
    சன் டிவி
    காலை 9.30 மணி: தோழாமதியம் 3  மணி: திமிரு பிடிச்சவன் மாலை 6.30 மணி: நம்ம வீட்டு பிள்ளை 
    சன் லைஃப்
    காலை 11 மணி: அன்பே வாமதியம் 3 மணி: காதலிக்க நேரமில்லை 
    கே டிவி
    காலை 7 மணி: விஸ்வநாதன் ராமமூர்த்தி காலை 10 மணி: சிங்கம் புலி மதியம் 1 மணி: ஐயாமாலை 4 மணி: ஜாக்சன் துரை இரவு 7 மணி: கொடி இரவு 10.30 மணி: மங்காத்தா
    கலைஞர் டிவி 
    காலை 9 மணி: டாடாமதியம் 1.30 மணி: விடுதலை பார்ட் 1 மாலை 7 மணி: அரண்மனை 3இரவு 10 மணி: விண்ணைத் தாண்டி வருவாயா 
    விஜய் டிவி
    மாலை 6 மணி: பிக்பாஸ் இறுதி போட்டி – நேரலை 
    ஜீ தமிழ்
    காலை 10.30 மணி: மை டியர் பூதம் மதியம் 1.30 மணி: கொரில்லாமதியம் 3.30 மணி: ஜவான் 
    கலர்ஸ் தமிழ்
    காலை 9 மணி:  லேக் பிளேசிட் 3 மதியம் 11 மணி: டிராஃபிக் ராமசாமி மதியம் 1.30 மணி: ஐங்கரன் மாலை 4.30 மணி: கன்னித்தீவு இரவு 7.30 மணி: கேப்மாரி இரவு 10 மணி: லேக் பிளேசிட் 3
    ஜெயா டிவி
    காலை 9 மணி: சச்சின் மதியம் 1.30 மணி: காஷ்மோராமாலை 6.30 மணி: என் ஆசை மச்சான்
    ராஜ் டிவி
    காலை 9.30 மணி: மகனே என் மருமகனே மதியம் 1.30 மணி: கற்க கசடறஇரவு 10 மணி: செந்தூரப்பூவே

    ஜீ திரை 

    காலை 6 மணி: ஹரிதாஸ்காலை 9 மணி: களவாணி 2 மதியம் 12 மணி: மெர்சல் மதியம் 3.30 மணி: சிவலிங்கா மாலை 6.30 மணி: வாழ்இரவு 8.30 மணி: ஆகஸ்ட் 16, 1947
    முரசு டிவி 
    காலை 6 மணி: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி காலை 9 மணி: அழகர் மலை மதியம் 12 மணி: வாரணம் ஆயிரம் மதியம் 3 மணி: ஜெயில் மாலை 6 மணி: திருவண்ணாமலை இரவு 9.30 மணி: யாவரும் நலம் 
    விஜய் சூப்பர்
    காலை 6 மணி: வேட்டை காலை 9 மணி: கைதிகாலை 12 மணி: விக்ரம் மதியம் 3.30 மணி: துப்பாக்கி மாலை 6.30 மணி: சிவன் உடுக்கை மாலை 9.30 மணி: லைகர்  
    ஜெ மூவிஸ் 
    காலை 7 மணி: மேட்டுக்குடி காலை 10 மணி: ஆணழகன் மதியம் 1 மணி: பரம்பரை மாலை 4 மணி: காதல் ரோஜாவேஇரவு 7 மணி: தமிழ் இரவு 10.30 மணி: குவா குவா வாத்துகள் 
    பாலிமர் டிவி
    மதியம் 2 மணி: இன்று போல் என்றும் வாழ்க மாலை 6 மணி: சாதுர்யம்  
    விஜய் டக்கர்
    காலை 5.30 மணி: சீதக்காதி காலை 8 மணி: காதலே காதலேமதியம் 11 மணி: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்மதியம் 2 மணி: கழுகு 2   மாலை 4.30 மணி: தம்பி  இரவு 8.30 மணி: தயா 
    வேந்தர் டிவி
    காலை 10  மணி: எங்க ஊரு காவல் காரன் மதியம் 1.30 மணி: எதிர்க் காற்று இரவு 10.30 மணி: பெரிய மருது 
    வசந்த் டிவி
    காலை 9.30 மணி: கன்னி மாடம் மதியம் 1.30 மணி: பண்டிகைஇரவு 7.30 மணி: மாவீரன் கிட்டு 
    மெகா 24 டிவி
    காலை 10 மணி: வருவான் மணிகண்டன் மதியம் 2.30 மணி: சட்டம் என் கையில் மாலை 6 மணி: சுவரில்லாத சித்திரங்கள் 
    மெகா டிவி
    மதியம் 12 மணி: மாய மோகினி மதியம் 3 மணி: பொழுது விடிஞ்சிருச்சி 
    ராஜ் டிஜிட்டல் பிளஸ் 
    காலை 7 மணி: சத்யம் காலை 10 மணி: ராஜ ராஜ சோழன்மதியம் 1.30 மணி: கனம் கோர்ட்டார் அவர்களே மாலை 4.30 மணி: என் கிட்ட மோதாதே இரவு 7.30 மணி: வேலைக்காரன் இரவு 10.30 மணி: அண்ணே அண்ணே 

    Source link

  • Boogie Celebration From Early Morning – Smog Envelops Chennai | Bhogi Air Quality Chennai: தொடங்கியது போகி கொண்டாட்டம்

    Boogie Celebration From Early Morning – Smog Envelops Chennai | Bhogi Air Quality Chennai: தொடங்கியது போகி கொண்டாட்டம்

    Bhogi Air Quality Chennai: போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததன் மூலம், சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
    போகி பண்டிகை:
    ”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர். அந்த நெருப்புக்கு முன்பு குவிந்த சிறுவர்கள், கைகளில் இருக்கும் இசைக்கருவிகளை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் அந்த தீயிலேயே தண்ணீரை காய்ச்சி, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, இறைவழிபாட்டிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதனால், இன்று முதலே பொங்கல் பண்டிகை கொண்டாட்டமானது தமிழ்நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது.
    காற்று மாசு:
    ஆரம்பகாலங்களில் பழைய முறம், உடைந்து போன மரக்கூடை, கிழிந்து பயன்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும் உடைகள், கோணிப்பை, துடைப்பம் ஆகியவற்றை எரித்தனர். இதோடு, கிராமப்புறங்களில் வயல்பகுதிகளில் கிடைக்கும், போகி முல்லை வெட்டி வந்து கொளுத்துவதும் உண்டு. அப்போது காற்று மாசு என்ற பிரச்னை பெரிதாக இருந்ததில்லை. ஆனால், நகரமயமாக்குதல் அதிகமானது பிறகு, போகிப் பண்டிகை கொண்டாட்டம் என்பதே பெரும் மாற்றம் கண்டுள்ளது. பாரம்பரிய பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற கட்டாயத்தில் பலரும்,  டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்பட்டு, காற்று மாசு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
    சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்:
    அந்த வகையில் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இன்று போகிப் பண்டிகைக்காக, அதிகாலை முதலே தங்கள் வீட்டின் வாசலில் தீமூட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதில் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை கண்ணார காணமுடிகிறது. அதிலிருந்து வெளியேறும் நுண்ணிய துகள்கள், கொட்டும் பனியில் கலந்து அப்படியே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமடந்துள்ளது. வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் 200-ஐ கடந்து, சுவாசிக்கவே தகுதியற்றதாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், சுவாசப் பிரச்னை கொண்டு இருப்பவர்கள் முடிந்தவரையில் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புகையில்லா போகியை கொண்டாடுவோம் என அரசு பலமுறை வலியுறுத்தியும், பொதுமக்கள் அதனை சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என்பதையே சென்னை நிலவரம் காட்டுகிறது.
    விமான சேவை பாதிப்பு:
    விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் பகுதியிலும் கடும் மனிமூட்டம் நிலவுகிறது. இதனால், சிங்கப்பூர், லண்டனில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல்  ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை, டெல்லி, மஸ்கட் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டபடி உள்ளன. புகைமூட்டம் தொடர்ந்தால், விமானங்களை  பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே, அந்தமான், புனே, மும்பை , டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத் மற்றும் மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதனால்,பயணிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். 
     
     

    Source link

  • Pongal Special Bus: வெறிச்சோடிய சென்னை… பொங்கல் சிறப்பு பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..

    Pongal Special Bus: வெறிச்சோடிய சென்னை… பொங்கல் சிறப்பு பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..


    <p>பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் கூடுதலாக 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிட்டதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.</p>
    <p>இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.&nbsp; வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. &nbsp;</p>
    <p>அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை (இன்று வரை) பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.</p>
    <p>இதனால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தம் ஆகியுள்ளனர். 12 ஆம் தேதி முதலே மக்கள் பயணம் மேற்கொள்ள தொட்ங்கியுள்ளனர். நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கமான கூட்டத்தை விட அதிக அளவு மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். முதல் நாளே சுமார் 1.25 லட்சம் பேர் பேருந்தில் பயணம் மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலையில், சென்னை மாநகரம் சற்று காலியாகியுள்ளது, போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. வார இறுதி நாளான நேற்றும் இன்றும் கூட்ட நெரிசல் இல்லாமல் இருக்கிறது. ஆனால் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது.</p>
    <p>இந்நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், &ldquo;ஜனவரி 12 ஆம் தேதி சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 1,260 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,94,880 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.14) தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளில் 1,071 பேருந்துகளும், 1,901 சிறப்புப் பேருந்துகளில் 658 பேருந்துகளும் இயக்கப்பட்டு 85,131 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.</p>
    <p>2 நாள்களில் மொத்தமாகச் சென்னையிலிருந்து 5,089 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,80,011 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் இன்று சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து 3,361 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இச்சிறப்புப் பேருந்துகளில் சென்னையிலிருந்து பயணம் செய்திட இதுவரை 95,352 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்&rdquo; என தெரிவித்துள்ளார். முன்பதிவு செய்தவர்கள் தவிர்த்து முன்பதிவு செய்யாத பயணிகள், சொந்த வாகனங்களில் செல்பவர்கள், ரயில் பயணம் என மொத்தமாக 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Bhogi Pandigai R Cleaning Their Houses And Collecting The Unnecessary Items, The Children Lit The Fire And Celebrated With Joy

    Bhogi Pandigai R Cleaning Their Houses And Collecting The Unnecessary Items, The Children Lit The Fire And Celebrated With Joy

    தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    Bhogi Pongal 2024 ( போகிப் பண்டிகை )
    உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள், போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

     
    சுத்தம், சுகாதாரத்தை பேணும் விதமாக போகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘புதியன புகுதல்’ என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு.

    தீயவை போக்கும் போகி 

    புராணங்களின் படி, மழை, சூரியக் கடவுளை கொண்டாடும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வேளாண்மை செழிக்க விவசயிகள் இறைவனிடம் வேண்டும் வழிபாடு. கலப்பை, உழுமாடு பிற விவசாய உபகரணங்களையும் வணங்குவார்கள். ஆண்டு முழுக்க வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், மாடுகளுக்கு வாங்கிய வைக்கோல் மற்றும் பயனற்ற வீட்டுப் பொருட்களை தீயிலிட்டு எரிக்கிறார்கள்.

     
    போகியன்று வீட்டை சுத்தம் செய்வார்கள். பொங்கல் திருவிழாவுக்கு தயாராகும்விதமாக வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பழக்கமும் இருந்தது. ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளை அடிப்பார்கள். போகியன்று தீயிட்டு எரிக்கும் பொருட்களுடன் எதிர்மறையான எண்ணங்களை தீயுடன் சேர்த்துவிடலாம். போகி நாளில் புத்தாடை அணிந்து கொண்டாடுவர்.
     
    சிறுவர்,சிறுமியர் மேளம் அடித்து போகி  பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
     
    அந்த வகையில் மார்கழி மாதத்தில் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை காஞ்சிபுரம் பகுதியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம்  நகர மக்கள் அதிகாலை நேரத்திலேயே குடும்பத்துடன் எழுந்து போகியை கொண்டாடினர். மேலும் சிறுவர் சிறுமியர்களான மேளம் அடித்து போகிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தைப்பொங்கலை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

    இதேபோன்று,செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில் புகையில்லா போகி கொண்டாடப்பட்டது இப்பகுதி கிராம மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள பழைய பொருட்களான துணி,பாய், தலையணை, உள்ளிட்ட பழைய பொருட்களை போகியில் போட்டு எரித்து பழையன கழிதலும் புதிதன புகுதலும் போகி பண்டிகையை சிறுவர்கள் போகி மேலும் அடித்து கொண்டாடினர்.

    என்னென்ன செய்யலாம்? 

    போகிப் பண்டிகையன்று தெய்வங்களை வழிபடும் வழக்கம் உள்ளது. அன்றைக்கு வீடுகளில் விளக்கேற்றி வழிபடலாம்.
    மழைக்காலம் முடிந்து குளிர்காலம் என்பதால் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகமிருக்கும் காலம் என்பதால் நோய்த்தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வீட்டை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
    போகி அன்று போளி, பாயசம் உள்ளிட்ட சமையல் செய்து இறைவனை வழிபடலாம். 
    போகி அன்று மதியத்திற்கு சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும். முந்தைய நாளில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கிவிடலாம். அப்போதுதான் மறுநாள் பொங்கல் கொண்டாட முடியும்.
    தீய எண்ணங்கள், பழக்கங்களை கைவிட முயற்சி செய்யுங்கள்.
    நன்மைகளே சூழட்டும்.

     

    Source link

  • Vijay Tv Famous Pugazh And Qureshi Apologize For Controversial Speech On Kamalhassan And Maya Krishnan | Kamalhaasan: “சாரி.. இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்”

    Vijay Tv Famous Pugazh And Qureshi Apologize For Controversial Speech On Kamalhassan And Maya Krishnan | Kamalhaasan: “சாரி.. இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்”

    நடிகர் கமல்ஹாசன் பற்றி சர்ச்சையாக பேசிய சின்னத்திரை பிரபலங்களான குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். 
    சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் பங்கேற்ற 23 போட்டியாளர்களில் நடிகை மாயா கிருஷ்ணனும் ஒருவர். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதனடிப்படையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

    Hope it doesn’t affect Pugazh’s cinema career… pic.twitter.com/bdJXtk94HF
    — தமிழ் பொழுதுபோக்கு 3.0 🎞️ (@vaangasirikalam) January 13, 2024

    இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பல நாட்கள் மாயாவை சுற்றி பல சர்ச்சைகள் வெடித்தன. வார இறுதி நாட்களில் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் கமல், மாயாவை கண்டும் காணாமல் விடுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. மேலும் மாயா சீசன் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க கமலும் ஒரு காரணம் என்றெல்லாம் கருத்துகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.

    மன்னிப்பு வீடியோ… மறப்போம் மன்னிப்போம்✌️Credit: @Gymswathi https://t.co/s1GaYzC5hM pic.twitter.com/gAMI6bHPV8
    — தமிழ் பொழுதுபோக்கு 3.0 🎞️ (@vaangasirikalam) January 13, 2024

    இப்படியான நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி  இருவரும் மேடை நிகழ்ச்சி ஒன்றில்  மாயா மற்றும் கமல்ஹாசன் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறினர். துபாயில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில்  புகழ் கேட்கும் கேள்விகளுக்கு குரேஷி கமல் குரலில் பதிலளித்திருப்பார். அதில், “சென்னையில் பிடிச்ச இடம்? மாயாஜால், புடிச்ச படம்? மாயா பஜார், தமிழ்நாட்டில் புடிச்ச இடம்? மாயா வரம் என மாயாவை வைத்து கமல் பதில் சொல்வது போல குரேஷி தெரிவித்திருப்பார். இந்த வீடியோ இணையத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியது. 
    இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டு குரேஷி மற்றும் புகழ் இருவரும் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், “நானும், குரேஷியும் துபாயில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கிரிப்டில் இருந்த கருத்துகள் கமல் ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இனி வரும் காலங்களில் அதுபோல் செய்யமாட்டோம். நாங்கள் செய்தது பெரிய தவறுதான். இதற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர். 

    மேலும் படிக்க: Dhanush – Udhayanidhi Stalin: கலையை ஊக்குவிக்க நீங்கள் தவறியதில்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

    Source link

  • ‘Who’s Virat Kohli? A Player?’: Ronaldo Says He Doesn’t Know India Legend But After His Photo Is Shown

    ‘Who’s Virat Kohli? A Player?’: Ronaldo Says He Doesn’t Know India Legend But After His Photo Is Shown

    அதிக பின் தொடர்பவர்களை பெற்ற நான்காவது வீரர்:
    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் இவருக்கென்று தனி ரசிகப் பட்டாளமே இருக்கிறது. அதேபோல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 256 மில்லியன் பின்தொடர்பவர்கள் பெற்றிருக்கும் இவர், உலக அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பின் தொடர்பவர்களை பெற்ற நான்காவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
    இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இவர் இருந்தாலும், இவரை தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. அதிலும், விளையாட்டுத்துறையை சேர்ந்த வீரர் ஒருவரே விராட் கோலியை தனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.

    Speed – Do you know Virat Kohli, he is the GOAT of cricket?!Ronaldo Nazario- Yeah definitely. pic.twitter.com/MbFYNCoRGf
    — Mufaddal Vohra (@mufaddal_vohra) January 10, 2024

    IShowSpeed  என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் பிரபல யூடியூபரான டேரன் ஜேசன் வாட்கின்ஸ் ( Speed) அண்மையில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோவிடம் நேர்காணல் ஒன்றை எடுத்துள்ளார். இந்த நேர்காணலின்போதுதான் விராட் கோலியை அவர் யார் என்று கேட்டுள்ளார். 
    விராட் கோலி யார்?
    ஸ்பீட் (Speed) மற்றும் ரொனால்டோ இடையே நடைபெற்ற உரையாடலை பார்ப்போம்:
    Speed: “உங்களுக்கு விராட் கோலியை தெரியுமா?”
    ரொனால்டோ: ”யார்?”
    Speed: ”இந்திய வீரர் விராட் கோலி”.
    ரொனால்டோ: “இல்லை.”
    Speed: “உங்களுக்கு விராட் கோலியை தெரியாதா?”
    ரொனால்டோ: “அவர் என்ன? ஒரு வீரரா?”
    Speed: “அவர் ஒரு கிரிக்கெட் வீரர்.”
    ரொனால்டோ: ”அவர் இங்கு மிகவும் பிரபலமாக இல்லை.”
    Speed: “ஆமாம். அவர் சிறந்தவர். இந்த நண்பரை நீங்கள் பார்த்ததில்லையா?” (கோலியின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி)
    ரொனால்டோ: “ஆம், நிச்சயமாக நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” என்றார்.
    இந்த நேர்கணால் அண்மையில் எடுக்கப்பட்டிருந்தாலும் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தனக்கு சச்சின் டெண்டுகரை யார் என்றே தெரியாது என்று கூறி இந்திய ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மேலும் படிக்க: Virat Kohli: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கணிப்பு!
    மேலும் படிக்க: Ishan Kishan: இஷான் கிஷன் விஷயத்தில் என்ன நடக்கிறது? ராகுல் ட்ராவிட் சொன்னது இதுதான்!

    Source link

  • Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி… அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!

    Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி… அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!


    <h2><strong>&nbsp;இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20:</strong></h2>
    <p>தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது.</p>
    <p>முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.&nbsp;</p>
    <p>பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். இதன் மூலம் இந்திய அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.&nbsp;</p>
    <h2><strong>ரெய்னா பரிந்துரை செய்த வீரர்கள்:</strong></h2>
    <p>இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 14) ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. இச்சூழலில், இந்த போட்டியில் இரண்டு வீரர்களை இடம் பெற செய்ய வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு பரிந்துரை செய்துள்ளார்.</p>
    <p>இது தொடர்பாக அவர் பேசுகையில், &ldquo; விரட் கோலி இரண்டாவது டி 20 போட்டியில் விளையாடுவார். சிறிய மைதானம் என்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் இடம் பெற வேண்டும்.</p>
    <p>அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் இருப்பது முக்கியம். ஏனென்றால், ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று அதேநேரம் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்&rdquo; என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.</p>
    <h2><strong>இந்திய அணி வீரர்கள்:</strong></h2>
    <p>முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) விராட் கோலி, 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) ஜிதேஷ் சர்மா, 8) சஞ்சு சாம்சன், 9) சிவம் துபே, 10) வாஷிங்க்டன் சுந்தர், 11) அக்சர் படேல், 12) ரவி பிஷ்னாய், 13) குல்தீப் யாதவ், 14) அர்ஷ்தீப் சிங், 15) ஆவேஷ் கான், 16) முகேஷ் குமார்.</p>
    <p>மேலும் படிக்க: <a title="Virat Kohli: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கணிப்பு!" href="https://tamil.abplive.com/sports/cricket/he-can-achieve-anything-clive-lloyd-backs-virat-kohli-to-surpass-sachin-tendulkar-s-century-tally-161321" target="_blank" rel="dofollow noopener">Virat Kohli: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கணிப்பு!</a></p>
    <p>&nbsp;</p>
    <p>மேலும் படிக்க: <a title="Tamil Thalaivas: வெற்றி முனைப்பு.. ஹரியானா ஸ்டீலர்ஸை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்! நம்பிக்கையுடன் ரசிகர்கள்!" href="https://tamil.abplive.com/sports/tamil-thalaivas-vs-haryana-steelers-pkl-season-10-161281" target="_blank" rel="dofollow noopener">Tamil Thalaivas: வெற்றி முனைப்பு.. ஹரியானா ஸ்டீலர்ஸை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்! நம்பிக்கையுடன் ரசிகர்கள்!</a></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • "சர்ச்சையான கேள்வி கேட்காதீங்க"

    "சர்ச்சையான கேள்வி கேட்காதீங்க"


    <p>"சர்ச்சையான கேள்வி கேட்காதீங்க"</p>

    Source link

  • "பிக் பாஸ் பார்க்க விருப்பமே இல்ல"

    "பிக் பாஸ் பார்க்க விருப்பமே இல்ல"


    <p>"பிக் பாஸ் பார்க்க விருப்பமே இல்ல"&nbsp;</p>

    Source link

  • Actress Samyuktha : கலக்கலான உடையில் அசத்தும் வாத்தி நடிகை சம்யுக்தா..!

    Actress Samyuktha : கலக்கலான உடையில் அசத்தும் வாத்தி நடிகை சம்யுக்தா..!


    Actress Samyuktha : கலக்கலான உடையில் அசத்தும் வாத்தி நடிகை சம்யுக்தா..!

    Source link

  • Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்… இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!

    Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்… இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!


    <p>&nbsp;</p>
    <h2><strong>இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:</strong></h2>
    <p>இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.</p>
    <p>அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.</p>
    <h2><strong>முதல் டெஸ்ட் போட்டி:</strong></h2>
    <p>இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இச்சூழலில், இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.</p>
    <p>அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.</p>
    <p>&nbsp;</p>
    <h2><strong>கடன் வாங்கினோம்:</strong></h2>
    <p>இதில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரல் இந்திய அணி சார்பில் அறிமுகமாகியிருக்கார். இந்நிலையில் தான் இந்திய அணியில் இடம் &nbsp;பெற்றது குறித்து துருவ் ஜூரல் பேசியுள்ளார்.</p>
    <p>அதில், &ldquo;நான் ராணுவப் பள்ளியில் படித்தேன். விடுமுறை நாட்களில் ஆக்ராவில் உள்ள ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் முகாமில் சேர வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான படிவத்தை நிரப்பினேன். ஆனால் இது குறித்து என் அப்பாவிடம் சொல்லவில்லை. அவருக்குத் இது தெரிந்ததும், அவர் என்னைத் திட்டினார்.</p>
    <p>ஆனால், எனக்கு கிரிக்கெட் பேட் வாங்க ரூ.800 கடன் வாங்கினார். எனக்கு கிரிக்கெட் கிட் வேண்டும் என்று சொன்னபோது, அப்பா என்னிடம் அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை செலவாகும் என்று சொன்னேன். இதை கேட்டதும் என் அப்பா விளையாடுவதை நிறுத்தச் சொன்னார்.</p>
    <h2><strong>தங்க சங்கிலியை விற்ற தாய்:</strong></h2>
    <p>ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். குளியலறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். பின்னர் என் அம்மா தனது தங்கச் சங்கிலியை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கித் தந்தார்&rdquo; என்று கூறினார்.</p>
    <p>தொடர்ந்து பேசிய அவர், &ldquo;தற்போது நான் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளேன் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். நான் இதை என் குடும்பத்திடம் சொன்னேன். அப்போது அவர்கள் என்னிடம் எந்த இந்திய அணிக்காகவா தேர்வாகி உள்ளாய்? என கேட்டார்கள்.</p>
    <p>நான் அவர்களிடம் ரோகித், விராட் ஆடும் இந்திய அணியைச் சொன்னேன். இதைக் கேட்டதும் எனது ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சிவசப்பட்டது&rdquo;என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் துருவ் ஜூரல்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Nadigar Sangam President Nasar Gives Pongal Gift To Union Members

    Nadigar Sangam President Nasar Gives Pongal Gift To Union Members

    Nadigar Sangam Pongal Gift: நடிகர் சங்கத்தில் உள்ள 2500 உறுப்பினர்களுக்கு வேஷ்டி, சேலை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகளை சங்கத் தலைவர் நாசர் வழங்கினார். 
    தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக தமிழக மக்கள் தயாராகி வரும் நிலையில் தமிழக அரசு நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 பணத்தை வழங்கி வருகிறது.
    இந்தச் சூழலில் தமிழ் திரையுலக நடிகர் சங்கம் தரப்பில் சினிமா நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் சங்கத்தை சேர்ந்த 2,500 பேருக்கு வேஷ்டி, சேலை, கருப்பு, இனிப்பு உள்ளிட்டவற்றை பொங்கல் பரிசாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் வழங்கியுள்ளார். 

    நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு(2500 பேர்)பொங்கல் பரிசாக வேஷ்டி,சேலை,கரும்பு மற்றும் இனிப்பைதலைவர் நாசர் கலந்து கொண்டு வழங்கினார். வெளியூரில் வசிப்பவர்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறிய நாசர் அவர்கள்,வருகிற 19ம் தேதி மாலை 6மணிக்கு, pic.twitter.com/QZR1kAn9fC
    — nadigarsangam pr news (@siaaprnews) January 13, 2024

    சென்னையில் நேரில் வந்து வாங்கியவர்களைத் தவிர்த்து, வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பின்னர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த நாசர், வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கில் நினைவஞ்சலி நடத்தப்படும் என்றார். அந்த நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர், நடிகைகள், நாடகம் மற்றும் துணை நடிகர் நடிகைகள் என அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு நாசர் கேட்டுக் கொண்டுள்ளார். 
    மேலும் படிக்க: Amaithi Padai: ”அரசியலின் மறுபக்கத்தை கூறிய நாகராஜ சோழன் எம்.எல்.ஏ.” – 30வது ஆண்டில் அமைதிப்படை
    Bigg Boss Tittle Winner: ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?

    Source link

  • Best Whisky Award: உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு! என்ன பிராண்ட் தெரியுமா?

    Best Whisky Award: உலகின் சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு! என்ன பிராண்ட் தெரியுமா?


    <p>மதுவிலே பல வகை மதுக்கள் உண்டு. அதில் விஸ்கி மிகவும் பிரபலமானது. உலகில் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தும் மதுபானங்களில் விஸ்கியும் ஒன்று ஆகும். பல நாடுகளில் விஸ்கி உணவுடன் சேர்த்து மக்களால் குடிக்கப்படுகிறது.</p>
    <h2><strong>சிறந்த விஸ்கி தேர்வு:</strong></h2>
    <p>மலிவு விலை முதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு விஸ்கி பல விலைகளில் விற்கப்படுகிறது. அந்த விலை அதன் தரத்திற்கு ஏற்ப மாறும். உலகின் பல நாடுகளிலும் விஸ்கி தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. உலகின் தலைசிறந்த விஸ்கி என்று ஆண்டுதோறும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்தாண்டிற்கான சிறந்த விருது ஜான் பார்லிகான் விருது வழங்கப்பட்டுள்ளது.</p>
    <p>விருதுக்கான போட்டியில் விஸ்கிக்கு புகழ்பெற்ற ஸ்காட்லாந்து நாட்டு விஸ்கி நிறுவனங்கள், அமெரிக்க விஸ்கி உள்பட பல நாட்டின் புகழ்பெற்ற விஸ்கி இடம்பெற்றது. அதில், இந்தியா சார்பில் ராம்பூர் அஸ்வா இடம்பெற்றது. பல விஸ்கி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த விருதுக்கான போட்டியில் இந்தியாவின் ராம்பூர் அஸ்வாவிற்கு சிறந்த விஸ்கிக்கான விருது வழங்கப்பட்டது.</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C14AeLgNctN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C14AeLgNctN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rampur Indian Single Malt Whisky (@rampursinglemalt)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>இந்த விஸ்கியானது இந்திய மதிப்பில் வரி இல்லாமல் 9 ஆயிரத்து 390 ரூபாய் ஆகும். இந்த விஸ்கியின் தனித்துவம் என்னவென்றால், இது ஒரே மூலப்பொருள் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இந்த விஸ்கி நிறுவனமானது 1943ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023ல் நடைபெற்ற மொத்த விற்பனையில் இந்திய சிங்கிள் மால்ட்களின் விற்பனை மட்டும் 53 சதவீதம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாகவே அயல்நாட்டு சந்தையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் விஸ்கிகளுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
    <p>மேலும் படிக்க: <a title="Tamilnadu MPs – Amit Shah: 27-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு நிவாரணம்.. அமித்ஷா அளித்த வாக்குறுதி.. திமுக எம்பி டி.ஆர். பாலு பேட்டி" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-mps-to-meet-home-minister-amit-shah-will-they-get-the-requested-flood-relief-161411" target="_blank" rel="dofollow noopener">Tamilnadu MPs – Amit Shah: 27-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு நிவாரணம்.. அமித்ஷா அளித்த வாக்குறுதி.. திமுக எம்பி டி.ஆர். பாலு பேட்டி</a></p>
    <p>மேலும் படிக்க: <a title="Radhika Apte : ரஜினி பட ஹீரோயினுக்கு இந்த கதியா? விமான நிலையத்தில் சிக்கி பல மணிநேரம் தவிப்பு.. நடந்தது என்ன?" href="https://tamil.abplive.com/news/india/actor-radhika-apte-locked-in-airport-for-hours-no-access-to-washroom-water-161524" target="_blank" rel="dofollow noopener">Radhika Apte : ரஜினி பட ஹீரோயினுக்கு இந்த கதியா? விமான நிலையத்தில் சிக்கி பல மணிநேரம் தவிப்பு.. நடந்தது என்ன?</a></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Karthigai Deepam Zee Tamil Serial 14th January 15th January Written Update

    Karthigai Deepam Zee Tamil Serial 14th January 15th January Written Update

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் வடநாட்டு கம்பெனி மீட்டிங்கில் வந்து “கார்த்திக் எல்லாம் வரமாட்டான், காத்திருக்க வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கார்த்திக் மாஸாக தீபாவுடன் என்று கொடுக்கிறான். 
    பிறகு கார்த்திக் “பல்லவி எனக்காக தான் பாடி இருக்காங்க” என்று சொல்ல, சிதம்பரம் “அது எப்படி பாடுவார்? அவர் எனக்காக பாடி கொடுத்திருக்கா” என்று சொல்ல, கார்த்திக்  “இல்ல எனக்காக தான் பாடி இருக்கா” என்று பாடலை எடுத்துக்காட்ட சிதம்பரம் அதிர்ச்சி அடைகிறார். 
    உடனே சிதம்பரம் “இது என்னுடைய பாடல் என்னிடமும் இருக்கு” என்று சொல்லி வாக்குவாதம் செய்ய, “சரி எடுத்துக்காட்டுங்க” என்று எல்லோரும் கேட்க, சிதம்பரமும் பாட்டை ப்ளே செய்ய காமெடி பாடல்களாக ஓடுகிறது. இதனால் மேலும் அதிர்ச்சி அடையும் சிதம்பரம் அவமானப்பட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். 
    “சவுண்ட் இன்ஜினியரிடம் வேறு காப்பி இருக்கா?” என்று கேட்க, “நீங்க தானே சார் ஒரிஜினல் காப்பிய தவிர வேற எதுவும் இருக்க கூடாதுன்னு டெலிட் பண்ண சொல்லிட்டீங்க” என்று சொல்கிறார். அதன் பிறகு கார்த்திக் வெளியே வர, “எப்படிடா இதெல்லாம் நான் கெட்டவன் எந்த எல்லைக்கும் போலாம்.. நீ நல்லவன்.. நீ எதுக்கு இப்படி பண்ண?” என்று கேட்க, “நீங்க பண்ணும் போது நான் கொஞ்சம் பண்ணக்கூடாதா?” என கார்த்தி பதிலடி கொடுக்கிறான். 
    அதன் பிறகு சிதம்பரம் “பல்லவி வேணா உனக்கு பாடி கொடுத்திருக்கலாம், ஆனால் பல்லவி உன் பக்கத்திலேயே வந்து நின்னா கூட உன்னால கண்டுபிடிக்க முடியாது, அவள நான் பார்த்திருக்கேன்” என்று சொல்ல தீபா அதிர்ச்சி அடைகிறாள். உடனே கார்த்திக் “இன்னும் 12 நாளில் பல்லவி யார் என்பதைக் கண்டுபிடித்து உங்க நேரில் நிறுத்துகிறேன்” என்று சொல்ல, சிதம்பரம் “உன்னால முடியாது அப்படியே அது முடிஞ்சாலும் உனக்கு தான் தர்ம சங்கடம்” என சொல்கிறார். கார்த்தியின் சவாலால் தீபா அதிர்ச்சி அடைகிறாள். 
    அதன் பிறகு எல்லோரும் வீட்டில் பல்லவி செய்த துரோகம் பற்றி பேசிக்கொண்டிருக்க கார்த்திக் சந்தோஷமாக வருவதைப் பார்த்து குழப்பம் அடைகின்றனர். பிறகு பல்லவி நமக்காக பாடி கொடுத்த விஷயத்தை சொல்ல எல்லோரும் சந்தோஷப்பட ஐஸ்வர்யா இது எப்படி நடந்தது என அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

    Source link

  • I Haven’t Watched BiggBoss Since I Left Bigg Boss Actress Janani Iyer.

    I Haven’t Watched BiggBoss Since I Left Bigg Boss Actress Janani Iyer.

    Actress Janani : சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை மறுபிறப்பு நிகழ்ச்சியில் நடிகை ஜனனி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனனி, “பிக்பாஸில்தான் வெளியேறியதிலிருந்து பிக்பாஸ் பார்ப்பது இல்லை. அதற்கு நேரம் இல்லை என்பதை காரணமல்ல. பார்க்க பிடிக்கவில்லை” என்றார். மேலும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி நடிகைகளின் புகைப்படம் ஆபாசமாக்குவது குறித்த கேள்விக்கு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை மற்றவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இல்லாமல். நல்ல வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து ரீல்ஸ் போடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். 

    தற்போது கௌதம் கார்த்திக் உடன் கிரிமினல் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு மகளாக நடித்துள்ளேன். இது குற்ற பின்னணியில் உருவாகியுள்ளது என்றார். பிக்பாஸ்க்கு பிறகு பட வாய்ப்பு குறைந்துள்ளதா? என்ற கேள்விக்கு, பிக் பாஸ்க்கு பிறகு பட வாய்ப்பு குறைந்துள்ளது என்பது இல்லை. முன்பு எப்படி நடித்தேனோ அதேபோன்றுதான் தற்போதும் அதே சம்பளம் பெற்றுகொண்டு நடித்து வருவதாக தெரிவித்தார்.

    Source link

  • Chennai Sangamam: பாரம்பரிய கலைகள்! சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

    Chennai Sangamam: பாரம்பரிய கலைகள்! சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!


    <p>தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படடு வருகிறது. இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் &ldquo;சென்னை சங்கமம் &ndash; நம்ம ஊரு திருவிழா&rdquo;-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.</p>
    <h2><strong>சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா:</strong></h2>
    <p>சென்னை மாநகரில் தீவுத்திடல் கொளத்தூர் &ndash; மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் &ndash; முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் &ndash; ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் &ndash; நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் &ndash; மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி &ndash; பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் &ndash; நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் &ndash; எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை &ndash; மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம்,</p>
    <p>கே.கே. நகர் &ndash; சிவன் பூங்கா, வளசரவாக்கம் &ndash; பழனியப்பா நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணா நகர் &ndash; கோபுரப் பூங்கா, கோயம்பேடு &ndash; ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் &ndash; எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் &ndash; அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் &ndash; நம்ம ஊரு திருவிழா வரும் 17ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும்.</p>
    <h2><strong>பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்:</strong></h2>
    <p>சென்னை சங்கமம் &ndash; நம்ம ஊரு திருவிழாவில், செவ்வியல் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.</p>
    <p>இந்த விழாவில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, &nbsp;தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் வேலு, பரந்தாமன், தமிழரசி, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் உள்பட பலரும் பங்கேற்றனர்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Anna Serial Zee Tamil Serial January 13th 14th Episodes Written Update

    Anna Serial Zee Tamil Serial January 13th 14th Episodes Written Update

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் கபடி போட்டிக்கு கிளம்பி வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
    அதாவது திருச்செந்தூர் முருகன் கோவில் வெளியே பொங்கல் வைத்து கொண்டாட்டம் தொடங்க, மைக்கில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கபடி போட்டி விரைவில் தொடங்கி போகிறது என்ற அறிவிப்பு வருகிறது, சௌந்தரபாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் புல் ஹாண்ட் டீ ஷார்ட் போட்டு வந்திருக்க பாண்டியம்மா “எல்லாம் ரெடி தானே?” என்று கேட்க, அவர்கள் மறைத்து வைத்திருக்கும் கத்தியை எடுத்து காட்டுகின்றனர். 
    இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டி மப்டியில் வந்து ஷண்முகத்தை இடித்து வம்பிழுக்க, ஊர் காரர்கள் “உனக்கு எப்பவும் ஷண்முகம் கூட பிரச்சனை செய்யறதே வேலையா போச்சி” என்று திட்டிப் பிரித்து விடுகின்றனர். முதல் ரவுண்டில் ஷண்முகம் டீமும் வேறொரு டீமும் விளையாட, ஷண்முகம் டீம் வெற்றியை பதிவு செய்ய முத்துப்பாண்டி டீம் களத்தில் இறங்கி வேறொரு டீமுடன் ஆக்ரோஷமாக விளையாட ஷண்முகம் டீமில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 
    பிறகு சௌந்தரபாண்டி ரவுடிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து “சந்தேகம் வராமல் அந்த சண்முகத்தை போடணும்” என பேசி கொண்டிருப்பதை சிவபாலன் பார்த்து விட, அதை பரணி பாக்கியத்திடம் சொல்ல, அவர்கள் சண்முகத்தை தடுக்க முயற்சி செய்ய, ஷண்முகம் அனைத்தையும் மீறி விளையாட தொடங்குகிறான். ரவுடிகள் எதிர் டீமில் களமிறங்கி ஷண்முகம் டீம் ஆட்களை ஓட விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? ரவுடிகளிடம் இருந்ததை ஷண்முகம் தப்பிக்க போவது எப்படி எனும் ட்விஸ்ட்டுகளுடன் அண்ணா சீரியல் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

    Source link

  • Pongal 2024 Students Put Up Samattva Pongal At The College Gate In Villupuram College Administration Denied Permission

    Pongal 2024 Students Put Up Samattva Pongal At The College Gate In Villupuram College Administration Denied Permission

    விழுப்புரம் : பொங்கல் திருநாளையொட்டி, இன்று முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி, முன்னதாக, மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லுாரிகளில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்களோடு சமத்துவ பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர்.
    இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் ஆண்டுதோறும் மாணவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த கல்லுாரி நிர்வாகம் மூலம் இன்று சமத்துவ பொங்கல் வைக்க அனுமதி கோரிய நிலையில், மாணவ, மாணவிகள்  காலை 9.00 மணிக்கு கல்லுாரிக்கு வந்தனர். ஆனால், கல்லுாரி வளாகத்தின் கேட் மூடப்பட்ட நிலையில், நிர்வாகம் மூலம் பொங்கல் வைப்பதற்கான அனுமதியும் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டது.

    இதையடுத்து, மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லுாரி கேட்டிற்கு வெளியே பானையில் தீயை மூட்டி பொங்கல் படையிலிட்டு வழிபட்டனர். பின், மாணவ, மாணவிகள் பொங்கலோ, பொங்கல் என கோஷங்கள் எழுப்பியதோடு, கல்லுாரி கேட்டிற்கு வெளியே சாலையில் செல்பி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
    தமிழர் திருநாள் 
    தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். தமிழர் வாழும் அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்று இந்த தை பொங்கல். சூரிய கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.
    தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முதல் நாள் புது பானை, புத்தாடை வாங்குவார்கள். வீட்டின் வாசலில் பொங்கல் கோலம் போடுவார்கள். வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, புது பானையில் புது அரிசி இட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளை காப்பாக அணிவர். பொங்கலுக்கு புதிய கரும்பு, புதிய காய்கறிகள் என அனைத்தையும் புதியவற்றையே பயன்படுத்துவார்கள். பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கலிட ஆரம்பிப்பார்கள். பொங்கல் பொங்கி வரும்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ! பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.
    பொங்கல் பொங்கியதும் அதை சூரிய பகவானுக்கும், கால்நடைக்கும் படைத்து விட்டு பின்பு உண்பார்கள்.

    Source link

  • IND Vs AFG T20I: ‘Shivam Dube Can Be India’s Long-term Pace Bowling All-rounder,’ Says Harbhajan Singh

    IND Vs AFG T20I: ‘Shivam Dube Can Be India’s Long-term Pace Bowling All-rounder,’ Says Harbhajan Singh

    அரைசதம் அடித்த ஷிவம் துபே:
    அண்மையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
    முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. 
    பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். அதன்படி கடைசி வரை களத்தில் நின்ற அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 60 ரன்களை குவித்தார்.  அதேபோல், 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 
    ஆல் ரவுண்டர் பிரச்சனையை தீர்ப்பார்:
    இந்நிலையில் இந்தியா தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பிரச்சனையை நீண்ட காலத்துக்கு தீர்க்கக் கூடியவராக ஷிவம் துபே இருப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
    இது தொடர்பாக பேசியுள்ள அவர், ஷிவம் துபேவிடம் இப்போது நான் பார்க்கும் மிகப்பெரிய மாற்றம் அவருடைய பந்து வீச்சின் வேகம் தான். அவருடைய வேகம் தற்போது நன்றாகவே முன்னேறியுள்ளது. அதே போல தன்னுடைய ஃபிட்னஸை உயர்த்தி இருக்கிறார். எனவே இந்தியா நீண்ட காலமாக தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அவர் இருக்கலாம்.
    ஒருவேளை இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் தொடர்ந்து நல்ல ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவரை இனிமேலும் இந்திய அணி புறக்கணிப்பது கடினமாக இருக்கும்” என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். இந்நிலையில் நாளை இந்தூரில் நடைபெறும் இரண்டாவது டி 20 போட்டியில் விளையாட இருக்கிறது இந்திய அணி. முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி 14 மதங்களுக்கு பிறகு களம் இறங்க உள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Ishan Kishan: இஷான் கிஷன் விஷயத்தில் என்ன நடக்கிறது? ராகுல் ட்ராவிட் சொன்னது இதுதான்!
    மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலியை யார் என்று கேட்ட ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்… வீடியோ உள்ளே!

    Source link

  • Chennai Metro Rail Pongal Holidays Metro Trains Will Operate As Per Sunday Timetable On January 15 To 17

    Chennai Metro Rail Pongal Holidays Metro Trains Will Operate As Per Sunday Timetable On January 15 To 17

    Chennai Metro Rail: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பொங்கல் விடுமுறை:
    தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதலே சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். 
    இதற்காக தலைநகர் சென்னையில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து மக்கள் வெளியேறுவதால், விடுமுறை முடியும் வரை நகரில் பெரியதாக எங்கும் போக்குவரத்து நெரிசல் இருக்காது. அதாவது, 17-ஆம் தேதி டிராபிக் இருக்காது.
    இந்த விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்கள் இயங்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியல் எழுந்துள்ளது.  இந்த நிலையில், தான் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.  
    சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு:
    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “2024 ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.  காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். 
    காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். 
    மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.  இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
    புறநகர் ரயில்கள்:
    அதேபோல, சென்னை புறநகர் ரயில் சேவையும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    மேலும் படிக்க
    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
    Election Commissioner : சட்டத்துக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு
     

    Source link

  • Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:

    Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:

    Bigg Boss 7 Title winner: பிக்பாஸ் சீசன் 7இல் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பிக்பாஸ் சீசன் 7:
    பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர். சண்டை சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர்.
    இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர். 
    டைட்டில் வின்னரான அர்ச்சனா?
    இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
    இந்த நிலையில், இன்று காலை முதலே பிக்பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.  இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும். எனவே, இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
    பிக்பாஸ் சரித்திரத்தை மாற்றிய அர்ச்சனா:
    அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ரன்னராக மணி தேர்வாகி உள்ளார். மேலும், மாயா மூன்றாவது இடத்திலும், தினேஷ், விஷ்ணு எலிமினேட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்ச தொகை வழங்கப்படுகிறது. 
    தமிழ் பிக்பாஸில் இதுவரை வைல்டு கார்டு போட்டியாளராக வந்த யாரும் டைட்டிலை வென்றதே கிடையாது. இறுதி  வந்த  போட்டியாளர்களும் இருந்துள்ளனர். ஆனால், இந்த சீசனில் முதல் முறையாக வைல்டு கார்டு என்டரியாக வந்த அர்ச்சனாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பெரியளவில் ஆதரவு இருந்து வருகிறது.
     இந்த நிலையில் தான், தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராக இருக்கிறார் அர்ச்சனா உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    Pradeep Antony: “அவன் ரொம்ப நல்லவன்..” பிரதீப் பற்றி பேசிய விசித்ரா, நிக்சன்: கொந்தளிக்கும் ரசிகர்கள்!
    Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி – ரவீனா!

    Source link

  • Pongal 2024 Avaniyapuram Palamedu Alanganallur Jallikattu Details Know Here

    Pongal 2024 Avaniyapuram Palamedu Alanganallur Jallikattu Details Know Here

    Jallikattu Madurai : தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு.
    ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே  அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே. மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள்.
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ( தைப்பொங்கல்):
    தைத் திங்கள் முதல் நாளான தைப்பொங்கல் பண்டிகையன்று ஆண்டுதோறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்தாண்டும் நாளை மறுநாள்( 15ம் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மைதானத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
    பாலமேடு ஜல்லிக்கட்டு ( மாட்டுப் பொங்கல்):
    மாட்டுப் பொங்கல் தினத்தில் ( வரும் 16ம் தேதி) நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி பாலமேடு ஜல்லிக்கட்டு ஆகும். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மஞ்சமலை ஆறு திடலில் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: (காணும் பொங்கல்)
    மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலே அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காட்டிலும் அதிகளவு மக்களால் எதிர்பார்க்கப்படுவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகும். காணும் பொங்கல் பண்டிகை தினத்தில் ஆண்டுதோறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு வரும் 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
    புகழ்பெற்ற இந்த மூன்று இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நூற்றுக்கணக்கான காளைகளும், அந்த காளைகளை அடக்குவதற்கு ஏராளமான இளைஞர்களும் களமிறங்குவார்கள். காளைகளும், காளையர்களுக்கும் முறையான முன்பதிவு செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே களத்திற்குள் களமிறக்க அனுமதிக்கப்படும்.
    மதுரையில் புத்தாண்டு தொடங்கியது முதலே இளைஞர்கள் காளைகளை அடக்குவதற்கு பயிற்சி எடுத்து வருகின்றனர். அதேபோல, காளைகளுக்கும் வீரர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 
    புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தவிர தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுவது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Jallikattu 2024: திருச்சியில் முதல் ஜல்லிக்கட்டு சூரியூரில் வரும் 16ம் தேதி தொடக்கம்..வீரர்கள் உற்சாகம்
    மேலும் படிக்க: Pongal Wishes: ‘உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்’ – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..

    Source link

  • பைனன்ஸ், ஓகேஎக்ஸ் கிரிப்டோகரன்சி இணையதளங்கள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி..!

    பைனன்ஸ், ஓகேஎக்ஸ் கிரிப்டோகரன்சி இணையதளங்கள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி..!

    உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி இணையதளங்களான பைனன்ஸ் (Binance), குகோயின் (Kucoin), ஓகேஎக்ஸ் (OKX) உள்ளிட்டவை இந்தியாவில் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் செயலியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் இணையதளங்கள் நேற்று முடக்கப்பட்டன.
    பணமோசடி சட்டங்களை மீறி செயல்பட்டதாக கூறி, பைனன்ஸ், குகாயின், ஓகேஎக்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 இணையதளங்களை தவிர, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global மற்றும் Bitfinex ஆகிய இணையதளங்களுக்கும் விளக்கம் அளிக்கக் கோரி கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    உள்ளூர் வரி சட்டங்களை மீறியதாகவும் பதிவு செய்யாமல் சட்ட விரோதமாக இயங்கியதாகவும் அதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இணையதளங்களை முடக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது. 

    Source link

  • Aamir Khan: ஏ.ஆர்.ரஹ்மான் பாடலால் கன்ட்ரோலை இழந்த அமீர் கான்.. வைரலாகும் வீடியோ!

    Aamir Khan: ஏ.ஆர்.ரஹ்மான் பாடலால் கன்ட்ரோலை இழந்த அமீர் கான்.. வைரலாகும் வீடியோ!


    <h2><strong>அமிர் கான்</strong></h2>
    <p>கடந்த 30 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து&nbsp; வருபவர் அமீர்கான். பத்மபூஷன், பத்மஸ்ரீ,&nbsp; ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துருக்கும் இவருக்கு, பாலிவுட் மட்டுமன்றி,&nbsp; உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர்.</p>
    <p>தாரே ஸமீன் பர், லகான், பி.கே, டங்கல், 3 இடியட்ஸ் என பல முத்திரை பதிக்கும் படங்களை கொடுத்த பெருமையும் அமீர்கானுக்கு உண்டு. நடிப்பது மட்டுமன்றி, சமூகத்தில் நிகழும் அநீதிகளை தட்டிக் கேட்பது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பிரபலங்களுள் ஒருவர் அமீர்கான்.&nbsp; மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறும், <strong>சத்யமேவ ஜெயதே</strong>&nbsp;எனும் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் சில வருடங்களுக்கு முன்னர் அமீர்கான் நடத்தி வந்தார்.&nbsp;</p>
    <h2><strong>கோலாகலமாக 4 நாட்கள் நடந்த மகளில் திருமணம்</strong></h2>
    <p>சமீபத்தில் அமிர்கானின் மகள் இரா கானின் திருமணம் நடைபெற்றது. இரா கான் மற்றும் நுபுர் ஷிகாரே என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம்&nbsp; நிச்சயம் செய்யப்பட்டது. திருமண நிச்சயம் ஆகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடந்து முடிந்தது.</p>
    <p>மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மெஹந்தி, சங்கீத், பஜாமா பார்ட்டி என கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்கள். இதன் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றன, இப்படியான நிலையில் அமீர் கான் தனது மகளின் திருமணத்தில் நடனமாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.</p>
    <h2><strong>மஸ்தி கி பாத்ஷாலா</strong></h2>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C2AWyTBx0jX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C2AWyTBx0jX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sahil (@djsahilmusic)</a></p>
    </div>
    </blockquote>
    <p><strong>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </strong></p>
    <p>அனைவரும் திருமணத்தில் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்க அமீர் கானை ஆடவைக்க ஒரு டெக்னிக் பயன்படுத்தி இருக்கிறார் அங்கு இருந்த டி.ஜே. அமீர் கான் நடித்து வெளியான ரங் தே பசந்தி படத்தில் சக்கைப் போடு போட்ட பாடல் &lsquo;மஸ்தி கி பாத்ஷாலா&rsquo; பாடலை அவர் ஒலிக்கவிட்டார்.</p>
    <p>உடனே கன்ட்ரோலை இழந்து தன் போக்கில் அந்த பாடலுக்கு 18 வருஷம் முன்பு போட்ட அதே டான்ஸ் மூவ்ஸை அமீர் கான் ஆடத் தொடங்குகிறார். அவருடன் சேர்ந்து அனைவரும் அந்தப் பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர் நடித்து கயாமத் சே கயாமத் தக் என்கிற படத்தில் ஒரு பாடலை டி.ஜே ஒலிக்க உடனே அவரைச் சென்று கட்டிபிடித்துக் கொள்கிறார் ஆமிர்கான்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Western Ghats Get A New Species Of Butterfly After 33 Years The Cloud Forest Silverline

    Western Ghats Get A New Species Of Butterfly After 33 Years The Cloud Forest Silverline

    New Butterfly Species Cloud Forest Silverline : மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்’ புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
    வண்ணத்துப்பூச்சி:
    பூச்சி இனங்களிலேயே மிகவும் அழகானது வண்ணத்துப்பூச்சிகள். சூழலியல் பாதுகாப்பிலும், உணவுச்சங்கிலியை உறுதிப்படுத்துவதிலும் வண்ணத்துப்பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.  ஆனால், நகரமயமாக்கல், விவசாய நிலங்களில் ரசாயனப் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வண்ணத்துப்பூச்சி இனங்கள் குறைந்து வருகின்றன.
    வண்ணத்துப்பூச்சி இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதன் எண்ணிக்கையை பெருக்கவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கு தொடர்ந்து மலையில் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது. 
    புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு:
    மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
    திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் ‘கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்’ என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும்.
    மொத்தம் 337 வண்ணத்துப்பூச்சிகள்:
    இந்த புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனத்திற்கு மேகமலையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. மேகமலை என்றால் மேகம் மலை என்று பொருள்படும். தேனியைச் சேர்ந்த வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்.காலேஷ் சதாசிவம், எஸ்.இராமசாமி காமையா மற்றும் டாக்டர்.சி.பி.ராஜ்குமார் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
    இது “என்டோமான்” என்னும் அறிவியல் ஆய்வு இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகை எண்ணிக்கை மொத்தம் 337-ஆக உயர்ந்துள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 40 வகையும் அடங்கும்.
    முதன்மை தலைமை வனவிலங்கு பாதுகாப்பாளர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் ஆனந்த், கள இயக்குநர் பத்மாவதே ஆகியோர் உதவியுடன் ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க
    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
    Pongal Wishes: சமத்துவ பொங்கல் என கோலமிட்டு, சமூகவலைதளங்களில் பகிருங்கள் : முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

    Source link

  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி அலங்கார ஊர்தி… கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி அலங்கார ஊர்தி… கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்


    <p style="text-align: justify;">சிறுமான்மையினர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன்&nbsp; முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக உள்விளையாட்டரங்கில், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியினை கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.</p>
    <p style="text-align: justify;">அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில், &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அறிவினை வளர்க்கும் கல்வியினைப்போல், உடல்நலனை பாதுகாக்கும் விளையாட்டினை அனைவரும் பின்பற்றிட வேண்டும் என்று விளையாட்டுத்துறையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் அதிகளவில் விளையாட்டுப்போட்டிகளிலில் பங்கேற்றிடவும், தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திடும் வகையில், மாவட்டந்தோறும் விளையாட்ட மைதானம், நிதியுதவி போன்றவையும் வழங்கி வருகிறார்கள்.</p>
    <p style="text-align: justify;">மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் முயற்சியினால், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.</p>
    <p style="text-align: justify;">அதன் தொடர் நிகழ்வாக, 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும் கூடைப்பந்து மற்றும் நாக்டா விளையாட்டுகள் கோயம்புத்தார் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டுகள் மதுரை மாநகரிலும்,</p>
    <p style="text-align: justify;">சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து போட்டிகள் நடைபெறும் இடங்களிலும் அறிமுகப் போட்டியாக நடைபெறவுள்ளது. இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது. தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுவதை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்டந்தோறும் விழிப்புணர்வு அலங்கார ஊர்தி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி – 2023 விழிப்புணர்வு அலங்கார ஊர்தி, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் பார்வையிடும் விதமாக கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.</p>
    <p style="text-align: justify;">மேலும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியின் டுழுபுழுஇ ஆயுளுஊழுவுஇ வுழுசுஊர் ரூ வுர்நுஆநு ளுழுNபு காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியினை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் பள்ளிகள் அளவில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக கட்டுரைப்போட்டி, ஒவியப்போட்டி, குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி போன்ற விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் முதியவர்களுக்கான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த 33 நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.</p>
    <p style="text-align: justify;">முதல்வர் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தொடர் பயிற்சிக்கான சிறந்த பயிற்சி வல்லுநர்கள் மற்றும் பயிற்சிக்கான நிதியுதவியினை வழங்குவதோடு, விளையாட்டுத்திறனில் சிறந்து விளையாட்டு வீரர்களை தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவதற்கு தேவையான வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்கள். எனவே, விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் திறனுக்கேற்ற விளையாட்டினை தேர்ந்தெடுத்து அதில் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று, விழுப்புரம் மாவட்டத்திற்கும், தங்கள் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.</p>

    Source link

  • Pongal 2024 Connection Of Additional Coaches In 10 Trains From Salem Railway Division On The Occasion Of Pongal Festival – TNN

    Pongal 2024 Connection Of Additional Coaches In 10 Trains From Salem Railway Division On The Occasion Of Pongal Festival – TNN

    தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள், பொங்கலை கொண்டாட தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர். இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு உள்ளது. இதனை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த வகையில் சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இயங்கும் 10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    இதன்படி, கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் (12048), மயிலாடுதுறை- கோவை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் (12083) ஆகியவற்றில் நாளை (14ம் தேதி), 17 ஆம் தேதிகளில் ஒரு சேர்கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதே போல், ஈரோடு-சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரசில் (22650) வரும் 16, 18 ஆம் தேதியும், சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரசில் (22649) வரும் 17, 19 ஆம் தேதியும், கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் (16616), மன்னார்குடி- கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் (16615) ஆகியவற்றில் இன்று (13ம் தேதி), 15, 17 ஆம் தேதியும் தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் (22668) நாளை (14 ஆம் தேதி), 16 ஆம் தேதியும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரசில் (22667) இன்று (13 ஆம் தேதி), 15, 17 ஆம் தேதியும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (12243), கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12244) ஆகியவற்றில் இன்று (13 ஆம் தேதி) ஒரு ஏசி சேர்கார் பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட்டு இணைக்கப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து கேரளா மாநிலம் கொச்சு வேலிக்கு சேலம், ஈரோடு, கோவை வழியே பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, யஸ்வந்த்பூர்- கொச்சுவேலி பொங்கல் சிறப்பு ரயில் (06235), இன்று (13 ஆம் தேதி) இயக்கப்படுகிறது. யஸ்வந்த்பூரில் இன்றிரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பெங்களூரு, – பங்காருபேட்டை, குப்பம் வழியே சேலத்திற்கு நாளை (14 ஆம் தேதி) அதிகாலை 5.12 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு, ஈரோட்டிற்கு காலை 6.20 க்கும், திருப்பூருக்கு காலை 7.08 க்கும், கோவைக்கு காலை 8.12 க்கும் சென்று, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், கொல்லம் வழியே கொச்சுவேலிக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொச்சுவேலி-யஸ்வந்த்பூர் பொங்கல் சிறப்பு ரயில் (06236) நாளை (14 ஆம் தேதி) இயக்கப்படுகிறது. கொச்சுவேலியில் இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு வழியே கோவைக்கு அடுத்த நாள் (15 ஆம் தேதி) காலை 9.22க்கும், திருப்பூருக்கு காலை 10.08க்கும், ஈரோட்டிற்கு காலை 10.50க்கும் வந்து, சேலத்திற்கு காலை 11.45 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 5 நிமிடத்தில் புறப்பட்டு குப்பம், பங்காருபேட்டை, பெங்களூரு வழியே யஸ்வந்த்பூருக்கு மாலை 4.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    Source link

  • Bombay High Court Nagpur Branch Grants Bail To Man Arrested For Assault 13 Years Minor Girl

    Bombay High Court Nagpur Branch Grants Bail To Man Arrested For Assault 13 Years Minor Girl

    13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைதான 26 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை.13 வயது சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிதின் தாபேராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 
    வழக்கின் பின்னணி:
    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் 26 வயதான நிதின். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். 2020ஆம் ஆண்டு, 13 வயது சிறுமி  புத்தகம் வாங்கி வருவதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால், அதற்கு பிறகு சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை.
    இதனை அடுத்து, சிறுமி காணாமல் போனதாக  தந்தை புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கண்டுபிடித்ததோடு, வெளியே அழைத்து சென்ற இளைஞர் நிதினை கைது  செய்தனர்.
    இளைஞருக்கு ஜாமீன்:
    வாக்குமூலத்தில், “விருப்பப்பட்டுத்தான் நிதினுடன் சென்றதாகவும், நிதினை காதலிப்பதாகவும்,  தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், எனவே தான் வீட்டில் இருந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றதாகவும்” சிறுமி கூறியிருக்கிறார். 
    இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் நிதின்.  இது மனுவை விசாரித்த நீதிபதி ஜோஷி பால்கே, நிதினுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 
    நீதிபதி சொன்னது என்ன?
    இந்த வழக்கு குறித்து நீதிபதி கூறுகையில், “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 13 வயது ஆகுகிறது. இதனால்,  அவரது ஒப்புதலை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றம்சாட்டப்பட்ட நபருடன் காதலில் இருந்ததை சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார். சிறுமிக்கு கொடுத்த வாக்குமூலத்திலும் குற்றம்சாட்டப்பட்டவருடன் பல நாட்களாக ஒன்றாக தங்கி இருந்ததாக கூறியிருக்கிறார்.

    Sexual relationship was out of love not lust: Bombay High Court allows bail to man booked for raping minorreport by @NarsiBenwal https://t.co/fzeaBe7iTs
    — Bar & Bench (@barandbench) January 12, 2024

    கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதாக எந்த  இடத்திலும் சிறுமி கூறவில்லை. எனவே, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பாலியல் உறவு, காதலால் நிகழ்ந்தவையே தவிர, காமம் காரணமாக இல்லை” என்று நீதிபதி ஜோஷி பால்கே தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். 
    கடந்த 2012ஆம் ஆண்டு, போக்சோ சட்டத்தில், சிறார்கள் பாலியல் உறவு கொள்ள அனுமதிக்கும் வயது 16-இல் இருந்து 18-ஆக உயர்த்தப்பட்டது. இதனால், 16 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும் அது குற்றமாக கருதப்பட்டு வருகிறது. 
    இருப்பினும், சில  சில சமயங்களில், சிறார்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர் புகார் அளிக்கும்பட்சத்தில், முழு சம்மதத்துடன்தான் குற்றம்சாட்டப்பட்டவருடன் பாலியல் உறவு கொண்டதாக சிறுமிகள் பெரும்பாலான நேரங்களில் வாக்குமூலம் அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    Ayodhya Ram Temple: பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் – மூத்த தலைவர் அத்வானி பாராட்டு..
    India Bloc Virtual Meeting: I.N.D.I.A. கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு.. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

    Source link

  • Director Anurag Kashyap Praises Animal Movie Director Sandeep Reddy Vanga

    Director Anurag Kashyap Praises Animal Movie Director Sandeep Reddy Vanga

    “அனிமல்” பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவைப் பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் அனுராக் கஷ்யப்.
    அனிமல்
    அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் இரண்டாவது படமாக கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.
    ஆணாதிக்கம், பெண் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அனிமல் படத்தின் காட்சிகள் இருப்பதாக சமூக வலைதளங்களிலும் மற்றும் திரைப்பட விமர்சகர்களும் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்தனர். ஒரு பக்கம் படம் 900 கோடி வசூல் செய்து வர மறுபக்கம் படத்தின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தபடியே இருந்தன.
    கிரிக்கெட் வீரர் உனட்கட், பாடலாசிரியர் ஜாவித் அக்தர், ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனு உள்ளிட்டவர்களின் விமர்சனங்கள் கவனம் பெற்றது. இப்படியான நிலையில் இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு நீண்ட பதிவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
    தவறாக புரிந்துகொள்ளப் பட்ட இயக்குநர்

    அவரது பதிவில் ”சந்தீப் ரெட்டி வங்காவுடன் இந்த மாலை இனிமையாக கழிந்தது. சமீப காலத்தில் அதிகம் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட, அதிகம் வசைபாடப்பட்ட இயக்குநர்களில் ஒருவர். என்னைப் பொறுத்தவரையில் அவர் மிகவும் நேர்மையான, தனது பலவீனங்களை வெளிப்படுத்தும் ஒரு அமைதியான மனிதர் அவர். அவரைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் யார் என்ன நினைத்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.
    நான் அவரை சந்தித்து எனக்கு இருந்த சில கேள்விகளை கேட்டேன். அதற்கு எல்லாம் அவர் பொறுமையாக இருந்து எனக்கு பதில் சொன்னார். அனிமல் படத்தை நான் இதுவரை இரண்டு முறை பார்த்திருக்கிறேன், முதல் முறை பார்த்து 40 நாட்கள் ஆகின்றன. இரண்டாவது முறை பார்த்து 22 நாட்கள் ஆகின்றன. பல வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஒரு கேம் சேஞ்சர் இந்தப் படம். மேலும் ஒரு சமூகத்தில் நல்லதோ, கெட்டதோ அது ஏற்படுத்தும் தாக்கங்கள் தவிர்க்க முடியாதவை. அதை எல்லாம் ஒரே ஆளாக தனது தோள்களில் சுமக்கும் ஒரு இயக்குநர்.’ என்று அனுராக் கஷ்யப் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் படிக்க  : Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

    Source link

  • Pongal 2024 Karur Vennaimalai Private College Celebrated Pongal Festival – TNN

    Pongal 2024 Karur Vennaimalai Private College Celebrated Pongal Festival – TNN

    கரூர் வெண்ணைமலை தனியார் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது. பாரம்பரிய உடை அணிந்து திரைப்பட பாடலுக்கு ஏற்ப கல்லூரி மாணவ,மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினார்கள்.
     

    சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையிl கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 
     

    விழாவில் கல்லூரி மாணவ,மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான மாணவர்கள் வேஷ்டி, சட்டைகள் அணிந்தும் மாணவிகள் சேலை அணிந்து அனைவரும் ஒற்றுமையாக புத்தம் புதிய மண்பானையில் பொங்கல் வைத்து கரும்புகள் கொண்டு வழிபாடு செய்தனர்.
     

    பின்னர் வளாகத்தில் அனைத்து மாணவிகளும் ஒன்று சேர்ந்து கும்மியாட்டம் மற்றும் தமிழ் திரைப்பட பல்வேறு பாடல்களுக்கு இசைக்கு ஏற்ப நடனம் ஆடினர். ஒரு சிலர் குழுவாக இணைந்து நடனமாடி தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
     
     
     
     
     

    Source link

  • Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:

    Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:

    நாளை கிராண்ட் ஃபினாலே:
    பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதனால்,  இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர்.
    இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவருக்குமே ஒருமித்த கருத்து உள்ளது. இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொரும் மீண்டும் வீட்டுக்குள் வந்தனர்.
    பிரதீப் ஆண்டனி:
    அனைத்து போட்டியாளர்களும் வந்த நிலையில், பிரதீப் (Pradeep Antony) மற்றும் ஐஸ்வர்யா வரவில்லை. இதில், குறிப்பாக ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் அண்டனி வராமல் இருந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் அடங்கிய போட்டோ ஒன்று வைத்திருந்தனர்.
    அதில், அனைவருடைய போட்டோக்களும் இடம்பெற்ற நிலையில், பிரதீப் ஆண்டனியின் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை. அதைப் பார்த்த நிக்சன், “இந்த போட்டோவில் பிரதீப் அண்ணா போட்டோவும் இருந்திருக்கலாம்” என்று சோகத்துடன் விசித்ராவிடம் பேசியிருக்கிறார். நிக்சனுக்கு ஆறுதல் கூறும் வகையில், “பிரதீப் ரொம்ப நல்லவன்டா. நேரில் பார்த்து பேசணும்.  ஒன்றும் சொல்ல மாட்டான்” என்று விசித்ரா கூறியிருக்கிறார். 
    கடுப்பான ரசிகர்கள்:
    இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, ரசிர்கள் பலரும் கடுமையாக திட்டி வருகின்றனர். “உங்களுக்கு இப்போ தான் பிரதீப் நல்லவனு தெரியுதா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இன்றைக்கு போட்டியாளர்களின் செண்டிமெண்ட் குறும்படம் ஒளிபரப்பபட்டது.

    When he said “நான் தோத்து போய்ட்டேன்!” it was hitting so hard bruh!!! 😭😭😭😭 it was so heavy. So painful. @TheDhaadiBoy love broஇதுவும் கடந்து போகும். ♥️♥️♥️#PradeepAntony #Pradeep #BiggBossTamil7 #BiggBossTamilpic.twitter.com/RmBem7J9Tf
    — HAKEEM BAVA ⚔️ (@MdHakeembava) January 13, 2024

    அதில், பிரதீப் ஆண்டனியில் சில காட்சிகளும் இருந்தன. ஒரு நிமிடம் பிரதீப் ஆண்டனியின் எமோஷனல் க்ளிப்ஸ் காட்டப்பட்டன. இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், ”பிரதீப் இருந்தால் அவர் தான் டைட்டில் வின்னராக இருப்பார். நீங்க இதற்கு தகுதியானவர். மிஸ் யூ பிரதீப். ரியல் வின்னர் பிரதீப்” என்று ரசிர்கள் உணர்ச்சி பொங்க பதிவிட்டு வருகின்றனர்.  மேலும், ”ஆட்ட நாயகன் பிரதீப்” (#AattaNayaganPradeep) என்று ஹாஷ்டேகுகளும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. 

    மேலும் படிக்க: Bigg Boss 7 Title winner: செம்ம ட்விஸ்ட்! பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர விடுங்க… ரன்னர் இவரா? நம்பவே முடியலையே!

    Source link

  • Radhika Apte : ரஜினி பட ஹீரோயினுக்கு இந்த கதியா? விமான நிலையத்தில் சிக்கி பல மணிநேரம் தவிப்பு.. நடந்தது என்ன?

    Radhika Apte : ரஜினி பட ஹீரோயினுக்கு இந்த கதியா? விமான நிலையத்தில் சிக்கி பல மணிநேரம் தவிப்பு.. நடந்தது என்ன?


    <p>விமான நிலையத்துக்கு விமானம் வர தாமதமானதை தொடர்ந்து, நடிகை ராதிகா ஆப்தே உள்பட பல பயணிகள், ஏரோபிரிட்ஜின் உள்ளே&nbsp;<br />வைத்து பூட்டப்பட்டனர். இதனால், பல மணி நேரம் தண்ணீர் இன்றியும் கழிவறைக்க செல்ல முடியாமலும் அவர்கள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பயுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>விமானத்தை சுற்றும் சர்ச்சைகள்:</strong></h2>
    <p>சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.</p>
    <p>இந்த நிலையில், கபாலி படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாக நடித்த ராதிகா ஆப்தே, வெளியூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரின் விமான வர தாமதமாகியுள்ளது. இதனால், நடிகை ராதிகா ஆப்தே உள்பட பல பயணிகள், ஏரோபிரிட்ஜின் உள்ளே வைத்து பூட்டப்பட்டனர்.&nbsp;</p>
    <p>இதன் விளைவாக, பல மணி நேரம் தண்ணீர் இன்றியும் கழிவறைக்கு செல்ல முடியாமலும் அவர்கள் தவித்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றி ராதிகா ஆப்தே குறிப்பிடவில்லை. தன்னுடைய அனுபவங்களை வீடியோவுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட&nbsp;<br />அவர், "நான் இதை பதிவிட வேண்டியிருக்கிறது.&nbsp;</p>
    <h2><strong>கழிவறை செல்ல முடியாமல் தவித்த ராதிகா ஆப்தே:</strong></h2>
    <p>இன்று காலை 8:30 மணிக்கு எனது விமானம் வர வேண்டியிருந்தது. இப்போது 10:50 ஆகிவிட்டது. இன்னும் விமானம் வரவில்லை. ஆனால், விமானம் வந்துவிட்டதாகக் கூறி அனைத்து பயணிகளையும் ஏரோபிரிட்ஜில் ஏற்றி அதை லாக் செய்தது விமான பணிக்குழுவினர். சிறிய குழந்தைகளுடன் பயணிகள், முதியவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>
    <p>கதவுகளை பாதுகாப்பு அதிகாரி திறக்கவில்லை. என்ன நடக்கிறது என்பதே விமான குழுவினருக்கு தெரியவில்லை. ஷிப்ட் முடிந்து புதிய விமான குழுவினர் வந்திருக்க வேண்டும். ஆனால், விமானக் குழுவினர் வரவில்லை. ஷிப்ட்க்கு வர வேண்டிய விமான குழுவினருக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எப்போது வருவார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/C2B08wWNcMm/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/C2B08wWNcMm/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Radhika (@radhikaofficial)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>இதனால் உள்ளே எவ்வளவு நேரம் பூட்டப்பட்டிருப்பார்கள் என்பது அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. வெளியில் இருந்த முட்டாள் தனமான விமானப்பணி பெண்ணிடம் பேச நான் முயற்சி செய்தேன். ஆனால், அவர் எந்தப் பிரச்சினையும் இல்லை, தாமதமும் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போது நான் உள்ளே பூட்டப்பட்டிருக்கிறேன் தண்ணீர் இல்லை. கழிவறைக்கு செல்ல முடியவில்லை. வேடிக்கையான சவாரிக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Dhanush Ayalaan Captain Miller Bigg Boss Tamil 7 Sivakarthikeyan

    Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Dhanush Ayalaan Captain Miller Bigg Boss Tamil 7 Sivakarthikeyan

    தெறிக்கவிடும் தோட்டாக்கள்! வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்: முதல் நாள் கலெக்‌ஷன்!
    தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும் 2000-களின் தொடக்கத்தின்போதும், ஒருபடத்தின் வெற்றி என்பது அப்படத்தின் கதை மற்றும் அப்படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகின்றது என்பதை வைத்து கணிக்கிடப்பட்டது. மேலும் படிக்க
    ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?
    பிக்பாஸ் சீசன் செவன் இன்னும் ஓரிரு நாட்களில் முடியப்போகின்றது. இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு ரசிகர்களுக்கு என அனைவருக்குமே உள்ளது. மேலும் படிக்க
    அயலான், கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்துமஸ், மிஷன்.. பொங்கல் ரேஸில் முந்தியது யார்?
    இந்த ஆண்டு பொங்கலுக்கு பல்வேறு ஜானர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ், மிஷன் உள்ளிட்ட படங்கள் நேற்று ஜனவரி 12ஆம் தேதி வெளியாகியுள்ளன. இதில் எந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது, முதல் நாளில் எந்தப் படம் எவ்வளவு வசூலைக் குவித்தது என்று பார்க்கலாம். மேலும் படிக்க
    தனுஷ், சிவகார்த்திகேயனை மிஞ்சிய மகேஷ் பாபு.. வசூலில் அலற விடும் குண்டூர் காரம்”!
    பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் மகேஷ் பாபு மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் “குண்டூர் காரம்”. குண்டூர் மிளகாயின் காரத்தை பிரதிபலிக்கும் வகையில் அக்கட தேசத்து ஆக்‌ஷன் மசாலாவாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று (ஜன.12) சங்கராந்தி ரிலீசாக வெளியானது. மேலும் படிக்க
    KH 231 முதல் KH 237 வரை.. கமல்ஹாசன் நடிப்பில் வரிசைகட்டி வரவிருக்கும் படங்களின் லிஸ்ட்!
    KH237: விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களை தூக்கி சாப்பிடும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கமல்ஹாசன் ட்ரெண்டாகி வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு விக்ரம் படம் ரிலீசானதைத் தொடர்ந்து சில மாதங்கள் கமல்ஹாசன் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் கூட்டணியில் இணைந்த கமல்ஹாசன் “இந்தியன் 2”வுக்காக இணைந்துள்ளார். மேலும் படிக்க
    கலையை ஊக்குவிக்க நீங்கள் தவறியதில்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!
    தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நேற்று ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. மேலும் படிக்க
    யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி – ரவீனா!
    பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா, மணியிடம் பேச முயற்சிப்பதும், அதற்கு ”தனக்கு நிறைய வேலை இருக்கு” என்று மணி கோபத்துடன் செல்வதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணி தன்னை ஒதுக்குவதை நிக்சனிடம் கூறி புலம்பும் ரவீனாவை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.  நாளையுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெறும் நிலையில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. மேலும் படிக்க
     
     

    Source link

  • Deputy Chief Ministers Post For Udayanidhi MK Stalin Explanation Amil Nadu MPs Met Amit Shah Today’s Headlines | Headlines: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி -மு.க.ஸ்டாலின் விளக்கம்…அமித்ஷாவை சந்தித்த தமிழக எம்பிக்கள்

    Deputy Chief Ministers Post For Udayanidhi MK Stalin Explanation Amil Nadu MPs Met Amit Shah Today’s Headlines | Headlines: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி -மு.க.ஸ்டாலின் விளக்கம்…அமித்ஷாவை சந்தித்த தமிழக எம்பிக்கள்


    Pongal Wishes: ‘உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்’ – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..
    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
    Pongal 2024: ஒரே நாளில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை; எட்டயபுரம் சந்தையில் விற்பனை அமோகம்
    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை முதல் ஆட்டுச்சந்தை களைகட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது. தொடர் மழையினால் கடந்த இரண்டு வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது மட்டுமின்றி வெளியில் சற்று அதிகமாக விற்பனையானதாகவும், வளர்ப்பு ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும்,  கறிக்காக வாங்கும் மாடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ஏழு கோடி ரூபாய் வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும் படிக்க
    தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு – சேத மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிப்பு
    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18-ந் தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதனால் ஏராளமான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். சாலைகள், பாலங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொது சொத்துக்களும், தனிநபர் சொத்துக்களும் சேதமடைந்து உள்ளன. இந்த மழை வெள்ள சேதம் குறித்து கடந்த மாதம் 20-ந் தேதி 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடி வந்தனர். மத்திய குழு அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் படிக்க
    Tamilnadu Mps – Amit Shah: கிடைக்குமா வெள்ள நிவாரணம்? – உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழக எம்.பிக்கள்!
    தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்க கோரிக்கை வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துள்ளனர்.மேலும் படிக்க

    Source link

  • Khelo India Youth Sports Competition Awareness Mini Marathon Competition At Villupuram – TNN | கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டி விழிப்புணர்வு

    Khelo India Youth Sports Competition Awareness Mini Marathon Competition At Villupuram – TNN | கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டி விழிப்புணர்வு

    தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே உள்ள விளையாட்டுதிறனை மேம்படுத்திடும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.
    அதன் தொடர் நிகழ்வாக, 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும் கூடைப்பந்து மற்றும் நாக்டா விளையாட்டுகள் கோயம்புத்தார் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டுகள் மதுரை மாநகரிலும், சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து போட்டிகள் நடைபெறும் இடங்களிலும் அறிமுகப் போட்டியாக நடைபெறவுள்ளது. இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது.
    தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுவதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பத்தும் வண்ணம் இன்றைய தினம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாரத்தான் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியானது மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி, எல்லிஸ் சத்திரம் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக வந்து மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நிறைவடைந்தது.
    தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் திறனுக்கேற்ற விளையாட்டினை தேர்ந்தெடுத்து அதில் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

    Source link

  • Bigg Boss 7 Tamil Title Winner Archana Runner Mani Chandra Leaked On Wikipedia Page

    Bigg Boss 7 Tamil Title Winner Archana Runner Mani Chandra Leaked On Wikipedia Page

    இறுதி கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 7:
    பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலோ நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.  இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
    இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவருக்குமே ஒருமித்த ஐடியா உள்ளது.
     போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் அனைவருமே  பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய முதல் நாளில் இருந்து முட்டி மோதி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், மக்கள் மனதிலும் இடம் பிடித்து டைட்டிலை நெருங்கி வருகின்றனர். 
    கடைசி நேரத்தில் மணிக்கு குவிந்த வாக்குகள்
    இந்த நிலையில்,  டைட்டில் வின்னர் ஆகப்போகும் போட்டியாளர் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். அதன்படி, கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா முதலிடத்திலும், மாயா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தார்.
    ஆனால், கடந்த இரண்டு தினங்களாக மணிசந்திராவுக்கு வாக்குகள் வேகமாக அதிகரித்து வருகிறது.  இதனால், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட மாயா, தற்போது அந்த இடத்தை இழந்து, அதிக வாக்குகள் பெற்ற தினேஷ் மூன்றவது இடத்திற்கு சென்றதாக தெரிகிறது.  இதனால், மேடையில் அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  

    Podra thakida thakida nermai vendradhu 🤗🕺🕺🕺🕺🕺🕺 Wikipedia 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#BiggBossTamil7 #BiggBossSeason7 #ToxicMaya #vjarchana #PradeepAntony #BigbossTamil pic.twitter.com/8HZx02G65C
    — RICKY JOY (@RickyJo45344871) January 12, 2024

    பல இணைய தளங்களில் அர்ச்சனா வின்னர், மாயா ரன்னர் என்று கூறப்பட்ட நிலையில், விக்கிபீடியாவில் ஒரு ட்விஸ்ட் நடத்திருக்கிறது.  பிக்பாஸ் சீசன் முடிவதற்கு முன்பாகவே விக்கிப்பீடியாவில் பிக்பாஸ் ஃபினாலே முடிவுகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதில், “ரெண்டுல ஒண்ணு பார்க்கலாம்” என்ற ஸ்லோகனுடன் டைட்டில் வின்னர், ரன்னர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
    அதாவது, டைட்டில் வின்னராக அர்ச்சனா இருப்பதாகவும், ரன்னராக மணி சந்திரா இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், டைட்டிலை ஜெயித்து ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும், ரன்னராக ரூ.15 லட்சம் மதிப்புள்ள பரிசுத் தொகையையும் தட்டிச் செல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

    மேலும் படிக்க
    Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி – ரவீனா!
    Bigg Boss Tittle Winner: ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?

    Source link

  • Election Commissioner : சட்டத்துக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு

    Election Commissioner : சட்டத்துக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு


    <p>நீதிபதிகள் நியமனம் தொடங்கி ஆளுநர் விவகாரம் வரை மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றமும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய அரசும் குற்றஞ்சாட்டி வந்தன.</p>
    <h2><strong>தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சர்ச்சை:</strong></h2>
    <p>இதற்கிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சீர்திருத்தம் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, "பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்" என தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.</p>
    <p>இப்படிப்பட்ட சூழலில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் சட்டம் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.&nbsp;</p>
    <p>ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.</p>
    <h2><strong>உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு:</strong></h2>
    <p>இச்சூழலில், தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்கூர் வழக்கு தொடர்ந்தார். இந்திய தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அமைச்சரை நியமித்திருப்பதன் மூலம் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம், 2023, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்துள்ளது என மனு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p>
    <p>இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தடை வதிக்க மறுத்துவிட்டது. "சட்டத்துக்கு எப்படி தடை விதிக்க முடியும்" என சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.</p>
    <p>இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Kamalhaasan KH231 To KH237 Movie List Trol Thug Life Indian2 Indian 3 | KH231-KH237: நடிப்பில் மிரட்டும் கமல்ஹாசன்

    Kamalhaasan KH231 To KH237 Movie List Trol Thug Life Indian2 Indian 3 | KH231-KH237: நடிப்பில் மிரட்டும் கமல்ஹாசன்


    KH231-KH237: விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களை தூக்கி சாப்பிடும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கமல்ஹாசன் ட்ரெண்டாகி வருகிறார்.
    கடந்த 2022ஆம் ஆண்டு விக்ரம் படம் ரிலீசானதைத் தொடர்ந்து சில மாதங்கள் கமல்ஹாசன் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் கூட்டணியில் இணைந்த கமல்ஹாசன் “இந்தியன் 2”வுக்காக இணைந்துள்ளார்.
    KH231 என்ற இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. 


    Wishing our Ulaganayagan ⁦@ikamalhaasan⁩ sir a very happy birthday! It is wonderful to have had the chance to work with you again to bring Senapathy back! Hope you keep entertaining us and continue to inspire millions more! #indian2 pic.twitter.com/tGpA6In56I
    — Shankar Shanmugham (@shankarshanmugh) November 7, 2023

     
    அடுத்ததாக KH232 படமாக லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் “விக்ரம் 2” உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது  கமல்ஹாசனின் KH233 அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிவிப்புக்குப் பிறகு பட அப்டேட்கள் பெரிதாக எதுவும் இல்லை. 

     
    இதற்கிடையே, 35 ஆண்டுகளுக்கு பிறகு KH234 படத்தில் மீண்டும் மணிரத்னத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்  கமல்ஹாசன். படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். “தக் லைஃப்” என பெயரிடப்பட்ட இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர். 

    பாகுபலி பிரபாஸ் நடித்திருக்கும் “கல்கி 2898 AD” படம் கமல்ஹாசனின் 235ஆவது படமாகும். நாக் அஸ்வின் இயக்கத்தில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே, மிரட்டலான ஆக்‌ஷன் ஜானர் படமாக உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசன் வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அவரது ஆக்‌ஷன் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
     
    அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் அடுத்த பாகத்திற்காக இந்தியன் 3 எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் KH 236 படமாக இந்தியன் 3 இருக்கும் என கூறப்படுகிறது.
     

    ​தொடந்து கமல்ஹாசன் நடிக்கும் KH237 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில்  KH237 படத்தில் நடிப்பதை பெருமையாக நினைப்பதாகவும், இருவரையும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு அழைப்பதில் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

     
     

    Source link

  • Villupuram: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்

    Villupuram: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்


    <p style="text-align: justify;">விழுப்புரம்&zwnj; மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்&zwnj;, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்&zwnj; மற்றும்&zwnj; அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்&zwnj; உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்&zwnj; சி.பழனி தெரிவித்துள்ளார்.</p>
    <p style="text-align: justify;">விழுப்புரம்&zwnj; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்&zwnj; தொழில்நெறி வழிகாட்டும்&zwnj; மைய அலுவலகத்தில்&zwnj; 01.01.2024 அன்று தொடங்கும்&zwnj; காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்&zwnj;, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்&zwnj; மற்றும்&zwnj; அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்&zwnj; உதவித்தொகை வழங்கும்&zwnj; திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்&zwnj; தற்பொழுது பெறப்படுகின்றன.</p>
    <p style="text-align: justify;">பத்தாம்&zwnj; வகுப்பு (தோல்வி), பத்தாம்&zwnj; வகுப்பு தேர்ச்சி மற்றும்&zwnj; அதற்கும்&zwnj; மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள்&zwnj; வேலைவாய்ப்பு அலுவலகத்தில்&zwnj; பதிவு செய்து பதிவினைத்&zwnj; தொடர்ந்து புதுப்பித்து 31.12.2023 அன்றைய தேதியில்&zwnj; ஐந்தாண்டுகள்&zwnj; நிறைவடைந்த பின்னர்&zwnj; வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்&zwnj; இளைஞாகளுக்கும்&zwnj;, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்&zwnj; பதிவு செய்து ஓர்&zwnj; ஆண்டு நிறைவடைந்த பின்னர்&zwnj; வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்&zwnj; மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும்&zwnj; தமிழக அரசால்&zwnj; உதவித்தொகை வழங்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;">இத்திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; பயன்பெற மனுதாரரின்&zwnj; குடும்ப ஆண்டு வருமானம்&zwnj; ரூ.72,000/- க்கு மிகாமல்&zwnj; இருத்தல்&zwnj; வேண்டும்&zwnj;. மேலும்&zwnj;, தாழ்த்தப்பட்ட மற்றும்&zwnj; பழங்குடியின மனுதாரர்கள்&zwnj; 31.12.2023 அன்றைய நிலையில்&zwnj; 45 வயதிற்குள்ளும்&zwnj;, இதர இனத்தை சார்ந்தவார்கள் 40 வயதிற்குள்ளும்&zwnj; இருத்தல்&zwnj; வேண்டும்&zwnj;. அரசாணை (நிலை) எண்&zwnj;.127, தொழிலாளர்&zwnj; மற்றும்&zwnj; வேலைவாய்ப்புத் &zwnj;(ஆர்&zwnj;2) துறை நாள்&zwnj; 25.07.2019 வாயிலாக இத்திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; வழங்கப்படும்&zwnj; உதவித்&zwnj; தொகையினை இருமடங்காக உயாத்தி மாதமொன்றுக்கு பத்தாம்&zwnj; வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம்&zwnj; வகுப்பு தோரச்சிக்கு ரூ.300/- மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- பட்டப்படிப்பு தோச்சிக்கு ரூ.600/- மற்றும்&zwnj; மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம்&zwnj; வகுப்பு தோல்வி மற்றும்&zwnj; தோச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தோ்ச்சிக்கு ரூ.750/-ம்&zwnj; மற்றும்&zwnj; பட்டப்படிப்பு தோர்ச்சிக்கு ரூ.1000/- என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;">உதவித்தொகை விண்ணப்பப்படிவம்&zwnj; பெற விரும்பும்&zwnj; மனுதாரர்கள்&zwnj; தங்களின்&zwnj; வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம்&zwnj; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்&zwnj; தொழில்நெறி வழிகாட்டும்&zwnj; மைய அலுவலகத்தில்&zwnj; விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும்&zwnj; இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்&zwnj; அல்லது <a href="https://employmentexchange.tn.gov.in">https://employmentexchange.tn.gov.in</a>&nbsp; என்ற இணையதள முகவரியில்&zwnj; சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம்&zwnj; செய்து கொள்ளலாம்&zwnj;. மேலும்&zwnj;, இத்திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; ஏற்கனவே பயன்பெற்றவர்கள்&zwnj; மீள விண்ணப்பிக்கத்&zwnj; தகுதியற்றவர்களாவார்கள்&zwnj;. மேலும்&zwnj;, இத்திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; பயன்பெறுபவர்களின்&zwnj; பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.</p>
    <p style="text-align: justify;">01.01.2024 உடன்&zwnj; தொடங்கும்&zwnj; காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள்&zwnj; 2024 பிப்ரவரி 28 -ம்&zwnj; தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும்&zwnj; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்&zwnj; தொழில்நெறி வழிகாட்டும்&zwnj; மையம்&zwnj; விழுப்புரத்தில்&zwnj; இயங்கும்&zwnj; வேலைவாய்ப்பற்றோர்&zwnj; உதவித்தொகை திட்டப்பிரிவில்&zwnj; அனைத்து அசல்&zwnj; கல்வி சான்றிதழ்கள்&zwnj; வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும்&zwnj; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்&zwnj; கணக்குப்புத்தகத்துடன்&zwnj; நேரில்&zwnj; சமர்ப்பிக்கலாம்&zwnj;.</p>
    <p style="text-align: justify;">வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும்&zwnj;. வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை மாதந்தோறும்&zwnj; வழங்குவதற்கு அரசால்&zwnj; அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது எனவும்&zwnj; விழுப்புரம்&zwnj; மாவட்ட ஆட்சியர் டாக்டர்&zwnj; சி.பழனி தெரிவித்துள்ளார்&zwnj;.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Karur News Mentally Challenged Youth Threatened To Commit Suicide – TNN | மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை மிரட்டல்

    Karur News Mentally Challenged Youth Threatened To Commit Suicide – TNN | மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை மிரட்டல்

    கரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மிரட்டல் விடுத்த நிலையில் தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று இளைஞரை மீட்டனர்.
     

    தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த ஜெயம்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ரஞ்சித் (வயது 27). Diploma in civil engineering முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக நண்பர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு மாத்திரை உட்கொள்ளாததால் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.
     

     
    இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம், குணசீலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல பெரியகுளத்திலிருந்து புறப்பட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் தமிழ் நகரில் உள்ள ரவிச்சந்திரனின் அண்ணன் மணி வீட்டிற்கு தனது மகன் மற்றும் மனைவியுடன் வந்துள்ளார்.  காலையில் காரை வரவழைத்து குணசீலம் செல்ல தயாரான போது, ரஞ்சித் தன் விருப்பத்திற்கு மாறாக எங்கோ அழைத்துச் செல்கின்றனர் எனக் கூறி கூச்சலிட்டதுடன், வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கதவை திறக்கச் சொல்லியும் ரஞ்சித் மறுத்ததால், தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
     

     
    அங்கு வந்த அவர்கள் இளைஞரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 10 நிமிடத்தில் திறந்து விடுவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். 1 மணி நேரம் போராடியும் கதவை இளைஞர் திறக்காததால், தீயணைப்பு துறையினர் முன்பக்க கதவை அதிரடியாக உடைத்து உள்ளே சென்று இளைஞரை மீட்டனர். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரும், தீயணைப்பு துறையினரும் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
    தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
    சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை – 600 028.தொலைபேசி எண் – +91 44 2464 0050,   +91 44 2464 0060
     
     
     

    Source link

  • Tamilnadu Latest Headlines News Update 13th January 2024 Tamilnadu Flash News Pongal 2024

    Tamilnadu Latest Headlines News Update 13th January 2024 Tamilnadu Flash News Pongal 2024


    TN Rain Alert: தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும்..

    வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும்.   ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க

    Pongal 2024: மதுரையில் 50 கிராம் மல்லிகை பூ ரூ.150க்கு விற்பனை; மற்ற பூக்களின் விலை என்ன..?

    தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிலும், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் வரும் ’பொங்கல்’ என்று அழைக்கப்படும் இந்த திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

    Pongal Wishes: ‘உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்’ – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..

    உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் திருநாள், 16 ஆம் தேதி மாட்டு பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள்.  விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். மேலும் படிக்க

    O Panneer Selvam: நிதி நெருக்கடியால் ரேசன் பொருட்கள் விநியோகத்தை நிறுத்துவதா? தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

    கடும் நிதி நெருக்கடி காரணமாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நியாவிலைக்கடையில் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்படுவது என்பது திமுக அரசு நிதி மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றது என சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

    Pongal 2024: களைக்கட்டும் பொங்கல்: கோயம்பேட்டில் பொருட்களை வாங்க குவியும் பொது மக்கள்..

    தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள். விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். மேலும் படிக்க

    Source link

  • Tn Pongal 2024 Tamilnadu Cm Mk Stalin Conveyed His Pongal Wishes For The People Of Tamilnadu

    Tn Pongal 2024 Tamilnadu Cm Mk Stalin Conveyed His Pongal Wishes For The People Of Tamilnadu

    தைத்திருநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட  இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர்,  திமுக தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
    இது தொடர்பான அறிக்கையில், “உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. இது உழைப்பின் மேன்மையைப் போற்றும் திருநாள். உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச்சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக்குத் துணையாய் இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள்! சாதி – மத பேதமற்ற சமத்துவத் திருநாள்! ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி, திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள்!
    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழந்துவிடாத வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு எதிர்கொண்ட மிக்ஜாம் மழை – வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் புதுடெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
    நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிடும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அந்த எதிர்பார்ப்பு இன்றளவும் மக்களிடம் இருப்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். அதனால்தான் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று திராவிட மாடல் அரசு அறிவித்தது. அத்துடன், ரொக்கத் தொகையும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தை நான் அறிந்தேன்.
    கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன். சர்க்கரை நாவில் இனிக்கும். ரொக்கப் பணம் மனதில் இனிக்கும் என்பதால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் கூடுதல் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளும் வேட்டிகளும் ஏழை – எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்படுகின்றன.  இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது திராவிட மாடல் அரசு.
    ’எல்லாருக்கும் எல்லாம்’ என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. ‘நான்தான் எல்லாம்’ என்கிற போக்கில் செயல்படுகிற ஆட்சியதிகாரம் ஜனநாயகத்திற்குச் சீர்கேடு. அத்தகைய சீர்கேட்டை அகற்றி, ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய – கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய மத்திய அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும்.  இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கக்கூடிய, மதநல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய, மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
    தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
    எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.
    குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் – மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.
    கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.
    பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி – சமதர்ம – மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம். உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய பொங்கல் – தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.  

    Source link

  • Ashna Zaveri Photos : பீச்சில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சந்தானத்தின் ரீல் ஜோடி!

    Ashna Zaveri Photos : பீச்சில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சந்தானத்தின் ரீல் ஜோடி!


    Ashna Zaveri Photos : பீச்சில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சந்தானத்தின் ரீல் ஜோடி!

    Source link

  • High Court: அரசு பணி தேர்வு குளறுபடிகளைத் தவிர்க்க, விசாரணை குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

    High Court: அரசு பணி தேர்வு குளறுபடிகளைத் தவிர்க்க, விசாரணை குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..


    <p>அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை அமைக்க&nbsp; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
    <p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2011 ம் ஆண்டு நடத்திய குரூப் 2 தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக&nbsp; தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு&nbsp; செய்தது. இந்த வழக்கில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய&nbsp; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p>
    <p>அதன்படி, தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு&nbsp; நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,&nbsp; பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.</p>
    <p>மேலும், நான்கு அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை சட்டப்படி விசாரித்து முடித்து நான்கு மாதங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தேர்வு நடைமுறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டறிய ஒரு மாதத்தில் விசாரணைக் குழுவை அமைக்க தேர்வாணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணைக்குழு தனது விசாரணையை முடித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடைமுறைகளை விசாரணைக் குழு&nbsp; பரிந்துரைக்க வேண்டும் எனவும்&nbsp; உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், தேர்வாணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்வாணையத்தின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p>

    Source link

  • Pongal Wishes: 'உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்' – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..

    Pongal Wishes: 'உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்' – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..


    <p>வரும் 15 ஆம் தேதி தைத்திருநாளான பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் திருநாள், 16 ஆம் தேதி மாட்டு பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள். விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள்.</p>
    <p>முக்கியமாக பொங்கல் பண்டிகையின் போது வீட்டு வாசலில் அல்லது மாடியில் மண் அடுப்பில் விறகு எரித்து மண் பானையில் பொங்கல் செய்வார்கள். பொங்கலுக்கான முக்கிய பொருட்களாக கரும்பு, இஞ்சி, மஞ்சள் கருதப்படுகிறது. பொங்கல் பானையில் மஞ்சள் கொத்து கட்டி சூரியனுக்கு படைத்து வழிப்படுவார்கள்.</p>
    <p>பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசானி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், &ldquo; உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.</p>
    <p>மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.</p>
    <p>உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விலைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்தும்; புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்தும், ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவார்கள்.</p>
    <p>பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். அத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.</p>
    <p>தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்: நிலைகள் உயகும்: நினைவுகள் நிஜமாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்&rdquo; என குறிப்பிட்டுள்ளார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    <p>அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.</p>

    Source link

  • Ayodhya Ram Temple: பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் – மூத்த தலைவர் அத்வானி பாராட்டு..

    Ayodhya Ram Temple: பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் – மூத்த தலைவர் அத்வானி பாராட்டு..


    <p>அயோத்தி ராமர் கோயிலை கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.</p>
    <p>பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.</p>
    <p>நாட்டில் இருக்கும் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 22 ஆம் தேதி கோயில் திறப்பு விழாவிற்காக மக்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முன்னாள் துணைப் பிரதமரான அத்வானி, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேசத்தின் அயோத்தி வரை ரத யாத்திரையை முன்னின்று நடத்தினார். அவருத்து துணையாக நின்றவர் முரளி மனோகர் ஜோஷி. அதுமட்டும் இன்றி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவ இடத்தில்தான் இருந்தனர்.&nbsp;</p>
    <p>இருப்பினும் 96 வயது நிரம்பிய அத்வானி இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொள்வாரா என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. எனினும் அத்வானி பங்கேற்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக விஷ்வ பரிஷத் அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அத்வானியை பாஜக புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.</p>
    <p>இந்நிலையில், அயோத்தியில் கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது, &ldquo; ரத யாத்திரை நடக்கும் போது பல ஊர்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் மக்கள் என்னை காண வருவார்கள். பலரும் கண்ணீர் மல்க பேசி பகவான் ராமரை போற்றுவார்கள். அந்த தருணத்தில் தான் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. இந்த நாட்டில் பலரும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. ஜனவரி 22 ஆம் தேதி பல கோடி மக்களின் கனவு நினைவாகும் நாள்.</p>
    <p>கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவர் இன்று இருப்பது போல பிரபலமானவர் அல்ல. ஆனால், அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அது தான் தற்போது வடிவம் கண்டுள்ளது&rdquo; என குறிப்பிட்டுள்ளார். <br /><br /><br /></p>

    Source link