Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
-

Actor Srinath: நடிகர் ஸ்ரீநாத்துக்கு அமைச்சர் பதவியா? விஜய்யின் உயிர் நண்பனுக்கு ஜாக்பாட்!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ் கூட்டணி, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாளை புதிய அமைச்சர்கள்: தவெக அரசில் தற்போது வரை 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், நாளை எஞ்சியவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பர்வேஸ், பார்த்திபன், ரமேஷ் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் நண்பரும், தூத்துக்குடி…
-

காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவி கொடுத்த விஜய் – யார் யாருக்கு தெரியுமா?
தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி என்று, ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கு ஏற்றார்போன்று, சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இல்லாமல், மற்ற கூட்டணிகளில் இருந்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார். அதனால், 5 எம்எல்ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது உறுதி ஆனது. இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுகிறது. ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்று…
-

பாஜகவின் வெற்று விளம்பரம் – அம்பலப்படுத்திய ஜோதிமணி எம்பி
பாஜகவின் வெற்று விளம்பரத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அம்பலப்படுத்தியுள்ளார். இன்று பல்வேறு ஊடகங்கள் மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஷ் அவர்கள் வணிக வகுப்பில் ( Business Class) பயணம் செய்யாமல் எகானமி வகுப்பில் பயணம் செய்தார் என்று கூச்சமே இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். ஒரு விமானம் பறக்கும் போது எகானமி வகுப்புக்கு ஒரு விதமாகவும், வணிக வகுப்பிற்கு ஒரு விதமாகவுமா எரிபொருள் செல்வாகும் என்று எந்த…
-

பிரிட்டிஷ் கால வெள்ளை துண்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி – முதல்வர் விஜய் அதிரடி
அரசியல் உலகில் வெள்ளை துண்டு கலாச்சாரம் என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே விஐபி கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. அலுவலகங்கள், கார்கள், பொதுவான இடங்களில் விஐபிக்கள் அமரும் இருக்கைகளுக்கு மட்டும் வெள்ளை துண்டு அணிவிக்கப்பட்டு அதன்மேல்தான் அவர்கள் அமர்வார்கள். இது பிரிட்டிஸ் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படியே முதலமைச்சர் விஜய்யும் ஆரம்பத்தில் வெள்ளை துண்டு போடப்பட்ட சேரில்தான் அமர்ந்திருந்தார். இந்நிலையில், இதுபோன்ற வெள்ளை துண்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசி பிரியா முதலமைச்சருக்கு வேண்டுகோள்…
-

இடையூறு தரும் பேனர்கள், கொண்டாட்டங்களுக்கு தடை – தவெக அதிரடி எச்சரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டு மக்களின் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், பொதுமக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைத்து கழகத் தோழர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் தொடர்பாக சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் பகுதிகளில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது எனத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
-

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் கையொப்பமிட்ட 3 அரசாணைகள் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு, மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (10.5.2026), சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்…
-

தவெக வார் ரூமாக மாறிய பிரபல செய்தி சேனல்! திமுக காட்டம்!
தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் செய்திச் சேனல் ஒன்று, தவெகவின் வார் ரூம் போன்று செயல்பட்டிருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வீடியோவை, திமுக ஐடி விங் வெளியிட்டு, கேள்வி எழுப்பியுள்ளது. நடுநிலையாக செயல்படவேண்டிய செய்தி நிறுவனம், இப்படி ஒரு கட்சியின் வார் ரூம் போன்று செயல்பட்டால், எப்படி நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டிருக்கும் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளது. ஊடகங்கள் நடுநிலைத்தன்மையோடு செயல்பட வேண்டும். ஆனால் NEWS TAMIL 24 X7 நிறுவனம் பல மாதங்களாகவே…
-

ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்வதா? திமுக வேடிக்கை பார்க்காது!
நான் முதல்வன் திட்ட ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் துடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட…
-

ஈழ மக்களுக்காக குரல் கொடுங்க… விஜய்க்கு இலங்கையில் இருந்து வேண்டுகோள்
ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில், தமிழகத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்ள்ள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையொன்றைப் படைத்து, மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🚨 TNC urges Vijay to champion Eelam Tamil political aspirations The…
-

முதுகில் குத்தி துரோகம் செய்தது காங்கிரஸ் – திமுக கடும் கண்டனம்!
காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி துரோகம் செய்துள்ளதாக சென்னையில் நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (07-05-2026) தீர்மானங்கள் தீர்மானம் : 1 தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் – இந்த வெற்றிக்காகத்…
-

விஜய்யுடன் இணைந்து இலங்கையில் பணியாற்ற தயார்! நமல் ராஜபக்சே அதிரடி! வீடியோ
தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து நாட்டை புணரமைக்க தயார் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இலங்கையில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. விஜய்யின் வெற்றியை இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது, அங்கு உள்ள சிங்களவர்களும் கொண்டாடினர். நாடாளுமன்றத்தில், எம்பிக்கள் பலர், ஆதரவு கருத்துக்களை தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்க்கு இந்தியாவை தாண்டி, இலங்கையில் பெரும் ஆதரவு…
-

கரும்பு டன்னுக்கு 617 ரூபாயை புதிய அரசு உயர்த்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கரும்பு கொள்முதல் விலையை ரூ.93 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல, டன்னுக்கு ரூ.4500 வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 2026&27ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில், 10.25% சர்க்கரைச் சத்து கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.3650 ஆகவும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3383 ஆகவும் உயர்த்தப் படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த…
-

பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஆளூர் ஷாநவாஸ் கேள்வி
ஆட்சி அமைக்க இடையூறாக இருக்கும் பாஜகவை எதிர்க்கும் துணிவு விஜய்யிடம் உள்ளதாக என்று விசிக முன்னள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க…
-

விஜய் ஆட்சி அமைக்காதது தமிழ்நாட்டுக்கு அவமானம் – கமல்ஹாசன் காட்டம்
விஜய் ஆட்சி அமைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் ஸ்டாலின் அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.…
-

விஜய்க்கு இடையூறு செய்தால்..! பாஜக நிர்வாகி கஸ்தூரி பகீர் தகவல்!
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அதற்கு பாஜகதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பாஜக நிர்வாகியும் நடிகையும், வழக்கறிஞருமான கஸ்தூரி, தனது எக்ஸ் தள பக்கத்தில், கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி தனது பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் விஜய்க்கு பேராதரவை அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (TVK) single largest party யாக உருவெடுத்துள்ளது. எனவே அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில்…
-

தவெக ஆட்சி அமையுமா? மீண்டும் தேர்தல் வந்தால்? ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு கருத்து..!
தமிழகத்தில் அதிக தொகுதிகளை வென்ற தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைமால் தவித்து வருகிறது. இந்நிலையில், டெக் உலகின் ஜாம்பவான் ஸ்ரீதர் வேம்பு, தவெகவுக்கு ஆதரவாக கருத்தை பதிவு செய்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மாறாக எது நடந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், எல்லையில்லா குதிரை பேரங்கள் நடப்பதற்கு பதிலாக, புதிதாக மீண்டும் தேர்தலை நடத்துவதுதான் சரியானது என்றும், அப்படி நடத்தினால் தவெக…
-

விஜயுடன் அதிமுக கூட்டணியா? அதிமுக அதிரடி அறிவிப்பு! வீடியோ
விஜயுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அதிமுக கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக…
-

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா பன்னுங்க! திமுக பகிரங்க சவால்!
திமுக கூட்டணியில் இருந்து பிரிவதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுங்கள் என்று திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் பதிவிட்டுள்ளார். They will resign and contest again 😂 https://t.co/fLdIdpqapo — Saravanan Annadurai (@saravofcl) May 6, 2026
-

மரியாதையுடன் பிரிவது நல்லது – திமுகவுக்கு காங்கிரஸ் எம்பி அறிவுரை
மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற ,இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது. அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014…
-

கொளத்தூர் சுடுகாடாகுமா? திமுகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய எஸ்.ஜி.சூர்யா! வீடியோ!
கொளத்தூர் சுடுகாடாகும் என்று திமுக தொண்டர் பேசிய வீடியோவை பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2001 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என மு.கருணாநிதி வசைபாடினார். இன்று திரு. ஸ்டாலின் அவர்களை தோற்கடித்த காரணத்திற்காக, ஒரு படி மேலே சென்று கொளத்தூர் மக்களை செருப்பால் அடிப்போம் என்றும், கொளத்தூர் தொகுதி இனி சுடுகாடாக மாறும் என்றும் தி.மு.க-வினர் மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தற்குறி…
-

திமுக கூட்டணி உடைந்தது! அதிரடி மாற்றம்!
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, பல மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி, காங்கிரஸை தங்கள் பக்கம் திமுக வளைத்துப் போட்டது. கூடுதலாக 3 தொகுதிகள், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி என வாரி கொடுத்து, தன்னுடைய கட்டுப்பாட்டில் திமுக வைத்துக்கொண்டது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. The President…
-

இலங்கையில் தவெக கொடி! விஜய்யின் அலை இலங்கையில் வீசுமா?
நடிகர் விஜய் தமிழகத்தில் கட்சி ஆரம்பித்ததும் பலரும் அவரை நடிகர் என்றும், நடிகன் நாடாளமாட்டான், தகுதி இல்லை என்றெல்லாம் பேசினார்கள். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு பொதுக்கூடத்திற்கும் வருகை தந்த மக்கள் அலையை பார்த்த பின்னர், கூட்டம் வாக்காக மாறாது என்றார்கள். ரசிகர்கள், சிறுவர்கள் எல்லாம் வாக்களித்து விஜய்யால் அரசியலில் கரை சேர முடியாது என்று விமர்சித்தார்கள். ஆனால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 233 தொகுதிகளில் களம் கண்ட விஜய்யின் வேட்பாளர்களுக்கு…
-

தவெகவுடன் கம்யூனிஸ்ட் கூட்டணியா? சண்முகம் விளக்கம்! அதிரடி திருப்பம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதிமுகவும், திமுகவும், பெரும்பான்மை இல்லாததால், யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக ஆதரவு அளித்தால் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், விஜய் அழைப்பு விடுத்தால், தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட்…
-

தேர்தலில் வரலாறு படைத்த தவெக விஜய்! முழு வெற்றி விவரம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. அவர்களே ஆட்சி அமைக்க முடியும். அப்படி இல்லாவிட்டால், அதிகப்படியாக தொகுதிகளை யார் வைத்துள்ளார்களோ, அவர்கள் மற்றவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இது வழக்கமான நடைமுறை. இப்போது நடந்த முடிந்த வாக்கு எண்ணிக்கையில், ஆளும் திமுகவை வீழ்த்தி தவெக அசுர…
-

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரி திறக்க வாய்ப்பு – அன்புமணி அறிவுரை
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கத் தடை நீக்கப்பட்டுள்ளதால் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தவும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில்…
-

வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தூண்டுதலின் பேரில் சில பிற அரசியல் கட்சிகள், வாக்கு எண்ணும் மையங்களில் இடையூறுகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்…
-

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…
பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அதிகாரப் பங்கு மற்றும் கூட்டணி ஆட்சி குறித்து தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த…
-

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…
தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்ததாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அதே நேரத்தில், 2015 – 2016ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரியை விஜய் தாக்கல் செய்திருந்தார். அந்த கணக்கில் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் வருமானம்…
-

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்… அதிரடி தீர்ப்பு… ஆட்சியாளர்கள் அதிர்ச்சி…
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒரு தரப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி…
-

லேப்டாப் கொடுத்து, மாணவர்களிடம் ஓட்டு கேட்டாரா முதல்வர்? குவியும் கமெண்டுகள்…
முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கி வாழ்த்தியதை, ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ததாக பலரும், கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக அரசு, லேப்டாப் கொடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தல் வருவதால் இலவச லேப்டாப் வழங்குவதாக பல்வேறு கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில், விமர்சனங்களை பொருட்படுத்தாத தமிழக அரசு, மாணவர்கள் பயன்பெறுவதற்காக, 10 லட்சம் தரமான லேப்டாப்களை வழங்க ஏற்பாடு செய்தது. திட்டமிட்டபடி, தரமான லேப்டாப்கள் தயாரானதும், மாணவர்களுக்கு…
-

திருச்சியில் அமித்ஷா செய்த செயலால் நெகிழ்ந்த பாஜகவினர்… அதிர்ந்த திராவிட கட்சினர்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருச்சியில் பாஜக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய மகளிரணித் தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில், அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு…
-

எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது… பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்…
எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என்று பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னை பெரம்பூரில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது… இரண்டு நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நெல்லையில் நம்முடைய அருமை சகோதரர் இனிகோ அவர்கள் நடத்திய மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற மகிழ்ச்சியை இரண்டு மடங்காக ஆக்கும் வகையில் கழக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மூலமாக தம்பி சுபேர்கான் அவர்கள்…
-

தமிழ்நாடு அரசின் தேர்வில் தமிழ் நீக்கமா? அண்ணாமலை கண்டனம்…
தமிழக சீருடை பணியாளர் வாரியம் 21.12.2025 அன்று நடத்திய சார்பு ஆய்வாளர் (SI) முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவுது: பொதுவாக, சீருடை வாரியம் நடத்தும் இந்த முதன்மைத் தேர்வு, பகுதி 1 – 80 பொது அறிவு கேள்விகளும், பகுதி 2 – 60 கேள்விகளில், மாணவர்களின் மொழி…
-

VBGRAMG-யால் 125 நாட்கள் வேலையா? பச்சை பொய் கூறுகிறார் ஈபிஎஸ் – முதல்வர் ஸ்டாலின் காட்டம்
VBGRAMG-யால் 125 நாட்கள் வேலையா? பச்சை பொய் கூறுகிறார் ஈபிஎஸ் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது… VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க.…
-

பாமக வட்டச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு: தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது வடசென்னை தண்டையார்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமக்கு சொந்தமான தானியில் 5 பேர் கஞ்சா அடித்துக் கொண்டிருந்ததை தட்டிக் கேட்ட இராஜ்குமார் என்பவரை கஞ்சா போதையிலிருந்த ஐவரும் தங்களிடமிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இராஜ்குமார் உயிருக்கு…
-

செவிலியர்கள் கைது செய்து இப்படி செய்வதா? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை சிவானந்தா சாலையில் போராடிய செவிலியர்களை கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கத்தில் விடப்பட்டதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது… பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய சுமார் 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு. இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்,…
-

குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை
குற்ற வழக்குகளை முடித்து வைக்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர், ஏட்டு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அணாநகர் நடுவன்கரை பகுதியை சேர்ந்தவர் அபினேஷ்பாபு. இவர் மீது, சொத்து பிரச்சினை சம்பந்தமாக கடந்த 2008-ம் ஆண்டு, 2 குற்ற வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சிவில் பிரச்சினை எனக்கூறி முடித்து…
-

அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் அதிரடி வழக்கு!
“Where the Game Is Real” – Your Essential Guide to Online Gaming Let’s be real, the online gaming world is a jungle, and 99% of the sites out there are just a joke. It’s tough as nails to find a place that’s fair, pays out properly, and doesn’t give you a massive headache. After testing…
-

திமுகவின் துரோகத்தை சுட்டிக்காட்டினால் அச்சுறுத்துவதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும்; காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்று அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மீது ஊதியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.…
-

தலையை எடுப்பேன் என்றவரை கைது செய்யாததுதான் திராவிட மாடலா? – அன்புமணி கேள்வி
தலையை எடுப்பேன் என்று மேடையில் பேசிவரை 3 நாட்களாகியும் கைது செய்யாததுதான் திராவிட மாடலா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கடலூர் மஞ்சக்குப்பம் பிரச்சினையை குறிப்பிட்டு பேசினார். குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் பாமகவை சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கியதாகவும், அவருக்கு ஆறுதல் கூற சென்ற பாமக மாவட்டச் செயலாளர் வன்னியர் சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார். 10 பேர் மீது வன்கொடுமை…
-

ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் கூறிய முக்கிய அறிவிப்பு…
திமுக விசிக இடையே எந்த விரிசலும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ள நிலையில், இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டு…
-

ஆவின் ஆலையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மரணம்… எடப்பாடி பழனிசாமி கண்டனம்…
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் ஆலையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மரணத்துக்கு, ஆலையில் முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தராததே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர், கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த உமாராணியின்…
-

3,500 சாலை பணியாளர்கள் பணி இழக்கும் ஆபத்து.. எச்சரித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தால் 3,500 சாலை பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கம் எச்சரித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் அம்சராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க கூடாது, இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உட்பட…
-

முதல்வர் ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணம்… இவ்வளவு நன்மையா?
உலக முதலீடுகளை ஈட்டுவதற்கு வரும் 27ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை திரும்பும் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ் கோ, சிக்காகோ உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உலகம் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேச உள்ளார் சென்னையில் இருந்து 27-ம் தேதி அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். 28ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 2 தேதி…
-

வெஜ் ரைஸ்க்கு ஊறுகாய் கேட்ட இளைஞர்… சரமாரியாக தாக்கிய உணவக ஊழியர்கள்…
காஞ்சிபுரத்தில் வெஜ் ரைஸ் சாப்பிட ஊறுகாய் கேட்ட இளைஞரை, உணவக ஊழியர்கள் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரம் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். துக்க நிகழ்ச்சிக்காக சென்ற இவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முனியாண்டி விலாஸ்க்கு சாப்பிட சென்றார். வெஜ் ரைஸ் ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிட்டபோது, வெஜ் ரைஸ் சரியாக இல்லை என கூறி தொட்டுக்கொள்ள ஊறுகாய் கேட்டுள்ளார். ஆனால், உணவக…
-

ஒரே நாளில் 3 படுகொலைகள்… பதவி விலக வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ்…
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், சட்டம் ஒழங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளரான பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்…
-

முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்… அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு..
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, திருவான்மியூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு உள்ள ஆபத்து, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எடுத்து கூறினார்.…
-

துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி… திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…
திமுகவில் பல சீனியர் அமைச்சர்கள் உள்ளதாகவும், அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வேண்டாம் என்பாரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொத்தம்பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர்…
-

அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? அண்ணாமலைக்கு தோன்றிய எண்ணம்… பரபரப்புத் தகவல்
சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? என்ற எண்ணம் தனது மனதில் எழுந்தது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜகவுக்காக பணியாற்றிய பிப்புல்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பு, வாய்ஸ் ஆப் கோவை என மாற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ…
-

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்… மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை…
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் விசிக கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, டெல்லி ஜந்தர்…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Every day is a new beginning