Category: இந்தியா
All national news including indian states
-

ஆம் ஆத்மியில் முதல் விக்கெட்.. டெல்லி அமைச்சர் ராஜினாமா! ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால்!
<p><strong>Delhi Minister Resigns:</strong> டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், டெல்லி அரசியல் அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.</p> <h2><strong>ஆம் ஆத்மி தலைவர்களை விடாது துரத்தும் வழக்கு:</strong></h2> <p>டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ்…
-

BJP slams Tejashwi Yadav Over Fish Meal Video During Navratri He reacts
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை போன்று இந்த முறையும் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சர்ச்சை: உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாள்களே உள்ள நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை…
-

SC oN Baba Ramdev: ”நாங்க ஒன்னும் குருடு இல்லை”
SC oN Baba Ramdev: பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ராம்தேவின் மன்னிப்பை நிராகரித்த உச்சநிதிமன்றம்: பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத எம்.டி ஆகியோர் மன்னிப்பு கோரியதில் திருப்தி இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்குகளை நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரமாணப் பத்திரத்தில் திருப்தி இல்லை என்றும், நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்பு பிரமாணப் பத்திரங்கள் பொதுவெளியில் வெளியிட்டதற்கு ஆட்சேபனையும் தெரிவித்தனர்.…
-

top news India today abp nadu morning top India news April 9 2024 know full details
வாக்கிங்கில் வாக்கு சேகரிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து உற்சாகமான தேனி மக்கள்! மக்களவை தேர்தலுக்கான பரப்புரைக்காக தேனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நடைபயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இன்னும் ஒரு வாரம் மட்டுமே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினத்துக்கும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையானது மிகத் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டியானது நிலவுகிறது. இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும்…
-

Supreme Court says contesting Candidates Need Not Disclose Every Moveable Property Owned By Them
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது அவசியம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தங்களின் சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி, இணையரின் (கணவன்/மனைவி) சொத்து விவரங்களையும் வருமான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு: இந்த நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கணிசமான…
-

12 people killed 14 injured after bus overturns and falls into ditch in Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் நேற்று இரவு தனியார் நிறுவனமான டிஸ்டில்லரியின் ஊழியர்கள் அனைவரும் பணி முடிந்து கம்பெனி பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இதில் கும்ஹாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்ரி கிராமத்திற்கு 30 தொழிலாளர்கள் பயணித்த பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுரங்க பள்ளத்தின் அருகே சென்றபோது…
-

7 Am Headlines today 2024 april 10th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி ஏன் பேசவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி வேலூர் மற்றும் கோவையில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார் தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம், நேற்று பிறை தென்படாததையடுத்து அறிவிப்பு வெளியானது பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு துணைப்போனவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக அதிமுக தமிழ் இனத்திற்கு எதிரானவர்கள் – முதலமைச்சர்…
-

Chhattisgarh Bus Accident: கோர விபத்து
Chhattisgarh Bus Accident: சத்திஸ்கரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 12 பேர் பலி: துர்க் மாவட்டத்தில் கும்ஹாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்ரி கிராமத்திற்கு அருகே இரவு 8:30 மணியளவில், ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 40 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும்…
-

“சென்னை என் மனதை வென்றது” ரோட்ஷோவுக்கு பிறகு பிரதமர் மோடி உருக்கம்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி 7வது முறையாக தமிழ்நாடு வருகை தந்தார். “சென்னையின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” தனி விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச். ராஜா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை…
-

Gudi Padwa: மராட்டிய மற்றும் கொங்கனி மக்களால் கொண்டாடப்படும் குடி பட்வா.. பிரதான உணவுகள் என்ன?
<p>நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மராட்டிய மற்றும் கொங்கனி மக்கள் குடி பட்வா கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இது மராத்தி புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வசந்த விழாவாகும். சம்வத்சர் பட்வோ என்றும் அழைக்கப்படும் குடி பட்வா இந்து நாட்காட்டியின்படி சைத்ரா மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு மிகவும் ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.</p> <p>இதே நாளை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்பதால் அனைவரும்…
-

பாஜக வேட்பாளராக களமிறங்கிய மகன்.. வாழ்த்து சொல்லி கடைசியில் ட்விஸ்ட் வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆண்டனி!
<p><strong>வரும் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத்தில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.</strong></p> <h2><strong>பாஜக வேட்பாளராக களமிறங்கிய ஆண்டனியின் மகன்:</strong></h2> <p>வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. நாடு…
-

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பரபர உத்தரவு!
<p><strong>Arvind Kejriwal:</strong> டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> <h2><strong>டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:</strong></h2> <p>அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களின் மூலம் அவர் சதி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லஞ்சம் வாங்கியதும் அதை அவர் கோவா தேர்தலுக்காக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p> <p>கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, கைது செய்யப்பட்ட…
-

home loan for poor may be part of pm modis 100 day plan | Lok Sabha Election 2024: 100 நாட்கள் தான் இலக்கு – மோடி தயார் செய்யும் லிஸ்ட்
PM MODI: புதிய அரசுக்கான 100 நாள் திட்டத்தில் மக்கள் நேரடியாக பயன் பெறக்கூடிய, பல நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மோடியின் 100 நாட்களுக்கான திட்டங்கள்: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு அமையும், புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் திட்டத்தை தயாரிக்குமாறு அமைச்சகங்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார். அதன்படியான பட்டியலில் மக்கள் நேரடியாக பயன்பெறக் கூடிய பல நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக, இந்திய ரயில்வேயானது, பயணிகளின் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை…
-

Lok sabha Election: மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு
மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் 21 தொகுதிகளிலும் சிவசேனா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாட்டின் மிகவும் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர். மகாராஷ்ட்ராவில் 5 கட்ட வாக்குப்பதிவு: நாட்டில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் மாநிலங்களில் மகாராஷ்ட்ராவின் பங்கு தவிர்க்க முடியாதது. உத்தரபிரதேசத்தில் 80…
-

Indian Student 25 Found Dead In US Went To Ohio In 2023 For Master’s 11th death last 3 months
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களே லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்திய மாணவர் மர்ம மரணம்: தெலங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்ஃபத். 25 வயதான முகமது அப்துல் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மாயமானார். இதனால், அங்குள்ள அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து,…
-

7 Am Headlines today 2024 april 9th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் தொடங்கியது – வீடு,வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள், முதியவர்களிடம் வாக்கை பதிவு செய்தனர் சென்னையில் இன்று பிரதமர் மோடியின் வாகன பேரணி – 5 அடுக்கு பாதுகாப்பு, பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு மதுரை, சிவகங்கை தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பரப்புரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு – தமிழ்நாடு முழுவதும் 18,518 சிறப்பு பேருந்துகள் இயக்கம் திமுகவும், காங்கிரஸூம் தங்கள் குடும்பத்துக்காக உழைப்பதாக நாமக்கலில்…
-

top news India today abp nadu morning top India news April 9 2024 know full details
ராமலிங்கமா? ரங்கராஜனா? – வேட்பாளர் பெயரை மறந்து பரப்புரைக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! நாமக்கலில் வாகனப் பேரணியில் ஈடுபட்டு பாஜகவுக்கு வாக்கு சேகரித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்னதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி ஒட்டுமொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தேர்தல் திருவிழா இந்தியா…
-

BJP worker died after two-wheeler collides with Union Minister’s car in Bengaluru | BJP Worker: நொடி நேர தவறு
BJP worker: பெங்களூருவில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது. கார் கதவால் விபத்து: திங்கட்கிழமை பிற்பகலில் கே.ஆர்.புரம் பகுதியில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது காரின் ஓட்டுனர் எதிர்பாராத விதமாக தனது வாகனத்தின் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது பின்புறமாக ஒரு ஸ்கூட்டியில் வந்த பாஜக தொண்டர், காரின் கதவின் மீது மோதி நிலைதடுமாறி…
-

tribal scheduled and poor women Rs1 lakh will be paid directly, Rahul Gandhi said at a meeting held in Madhya Pradesh
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சயோனி மாவட்டத்தில் இருக்கும் தானோராவில் காங்கிரஸ் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…
-

Crime: திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறு.. கணவருக்கு மனைவி போட்ட ஸ்கெட்ச்.. புதுச்சேரியில் ஷாக்
<p>புதுச்சேரி கோரிமேடு ஞானபிரகாசம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி ஷர்மிளா தேவகிருபை (வயது 44). கடந்த 19 ஆம் தேதி பாஸ்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி கதிர்கிராமம் அரசு மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p> <p>இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர்…
-

Can we drive during the solar eclipse? Here’s what to know ahead of the historic event
Solar Eclipse: இன்றைய சூரிய கிரகணத்தின் போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம்: நடப்பு ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி தோன்றியது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். இதன் உச்சம் நள்ளிரவு 12 மணியளவில் நிகழும். அதிகாலை 1.25 மிணிக்கு சூரிய கிரகணம் முடிவடைகிறது. இதன் காரணமாக…
-

top news India today abp nadu morning top India news April 2024 know full details
வீடு, வீடாக செல்லும் அலுவலர்கள்.. சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்! நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று முதல் தொடங்கவுள்ளது. இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த முறை ஆட்சியைப்…
-

Solar Eclipse: இன்று தோன்றும் முழு சூரிய கிரகணம்.. உலகில் எந்த பகுதியில் மக்கள் இதனை காணலாம்?
<p>சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும்.</p> <p>சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி அன்று நிகழும், சூரிய கிரகணம் என்பது அமாவாசை அன்று நிகழும்…
-

7 Am Headlines today 2024 april 8th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடக்கம், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வீட்டில் இருந்து வாக்குள் சேகரிப்படும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார். நாளை மாலை சென்னையில் நடைபெறும் ரோடு ஷோவில் மத்திய மற்றும் வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதுப்பு.. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை எச்சரிக்கை மக்களவை…
-

NitishKumar touching PM NarendraModi’s feet at Bihar rally TejashwiYadav says we felt very bad
பீகார் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் நிதிஷ்குமார் தொட்டதையடுத்து, நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம் என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மோடி காலைத் தொட்டு வணங்கிய நிதிஷ்குமார்: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக,…
-

சாதிவாரி கணக்கெடுப்பை விடுங்க.. சொத்துகளை பகிர்ந்தளிக்க கணக்கெடுப்பாம்.. ராகுல் காந்தி அடுத்த அதிரடி!
<p>நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <p>கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை இந்த முறை வீழ்த்த வேண்டும் என நோக்கில் காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.</p> <h2><strong>ராகுல்…
-

மூட நம்பிக்கையின் உச்சம்.. மோடி மீண்டும் பிரதமராக விரலை காணிக்கையாக அளித்த நபர்: அதிர்ச்சியில் பாஜகவினர்
<p>அடுத்த 5 ஆண்டுகள், நம்மை ஆளுப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வென்று கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.</p> <h2><strong>மோடியின் வெற்றிக்காக விரலை துண்டித்த நபர்:</strong></h2> <p>தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டி கர்நாடகாவை…
-

“தமிழ் கலாசாரத்தை சீரழித்துவிட்டனர்” திமுக, காங்கிரஸ் மீது பாஜக தேசிய தலைவர் நட்டா அட்டாக்!
Nadda TN Visit: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வென்றுவிட வேண்டும் என…
-

top news India today abp nadu morning top India news April 2024 know full details
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல்கட்டமாக மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிட்டி தொடங்கி கிராமம் வரை தேர்தல் பரப்புரை களைகட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருச்சி, கரூர், சிதம்பரம், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். வாகன பேரணியில் மக்களை சந்திக்கும் ஜே.பி.நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மக்கள்…
-

Khushbu : மன்னிச்சுடுங்க.. குஷ்புவுக்கு என்ன ஆச்சு? நட்டாவுக்கு பறந்த குஷ்புவின் கடிதம்!
<p style="text-align: justify;">நடிகையும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான குஷ்பு நடப்பு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். </p> <p style="text-align: justify;">அதில், ”எலும்பு முறிவு காரணமாக ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு இருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னையுடன் இருந்து வருகின்றேன். இந்நிலையில் எனது மருத்துவர்கள் எனது உடல் நிலையை மனதில் கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுருத்தியுள்ளனர். எலும்பு முறிவு…
-

PoK To Be Integrated Into India In 2025, PM Modi Going Through Mangal Mahadasha, Claims Astrologer Who Predicted Russia-Ukraine War Lok Sabha Election 2024 | Astrologer on PM Modi: அடுத்த மோடிதான்; அவர்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பார்
18-வது மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புகழ் பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பரதாப் தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “ஜோதிட ரீதியாக, பிரதமர் மோடி தற்போது செவ்வாய் மஹாதிசையில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் நிலம் தொடர்பான விஷயங்கள்…
-

Anand Mahindra offers job to girl who saved infant niece from monkey using Alexa
உத்தரப்பிரதேசத்தில் குரங்கிடமிருந்து அலெக்ஸா மின்சாதன உதவியுடன் தப்பிய சிறுமிக்கு வேலை வழங்குவதாக தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகிதா என்ற 13 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள அவாஸ் விகாஸ் காலனியில் அமைந்திருக்கும் அந்த வீட்டில் குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்தனர். சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் இருந்த சமையலறை அருகே நிகிதா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டுக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது,. இதனை…
-

7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்காது – முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி மக்களவை தேர்தலுக்கான தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய…
-

Chief Justice Chandrachud : "அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமா இருக்கனும்" இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அட்வைஸ்!
<p>சண்டிகர் மேயர் தேர்தல் தொடங்கி தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை வரை பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட். இவர், தலைமை நீதிபதியாக பதவியேற்றபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சட்டப் பிரிவு 370, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கு உள்ளிட்டவற்றில் சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.</p> <h2><strong>வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை:</strong></h2> <p>ஆனால், சமீப காலமாக, அவர் வழங்கி வரும் தீர்ப்புகள் பெரும் வரவேற்பை பெறும் வகையில்…
-

"தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது" காங்கிரசை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!
<p>பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது.</p> <h2><strong>"காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது"</strong></h2> <p>உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இந்த…
-

Pakistan Foreign Ministry responds to Defence Minister Rajnath Singh remarks on terrorism | தேர்தல் நேரம்! பயங்கரவாதிகளுக்கு எதிராக கொந்தளித்த ராஜ்நாத் சிங்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில், இந்திய அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. பாகிஸ்தானுக்குள் புகுந்து சம்பவம் செய்த இந்தியா? இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை கொல்வோம் என பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் புகுந்து 20…
-

China Plans To Disrupt India Lok Sabha Elections to target America and South Korea voters Using AI Microsoft warns | தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சதி! இந்திய வாக்காளர்களை AI மூலம் குழப்ப முயற்சி
இந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியம் உள்பட உலகம் முழுவதும் 64 நாடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, உலக மக்கள் தொகையில் 49 சதவிகிதத்தினர் வாக்களிக்க காத்திருக்கின்றனர். இந்த தேர்தல்களை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வாக்காளர்களை குழப்ப முயற்சி: இந்த தகவலை வெளியிட்டிருப்பது உலகின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட். அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதன் சமீபத்திய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு…
-

Congress Manifesto: "தன்பாலின தம்பதிகள் சேர்ந்து வாழ சட்டம் இயற்றப்படும்" காங்கிரஸ் வாக்குறுதிக்கு வரவேற்பு!
<p>சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதும் இயல்பான ஒன்றே. ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.</p> <h2><strong>காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:</strong></h2> <p>கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என அவர்கள் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர். ஆனால், தன்பாலின திருமணத்திற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம் உள்பட பல நாடுகள் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன.</p> <p>இந்தியாவில் தன்பாலின திருமணத்தற்கு சட்ட…
-

வீட்டிற்குள் நுழைந்த பெரிய குரங்கு.. 15 வயது குழந்தையை காப்பாற்ற சிறுமி செய்த செயல்: குவியும் பாராட்டு!
<p><em><strong>உத்தரப்பிரதேசம் அருகே வீட்டிற்குள் வந்த குரங்கிடம் இருந்து தப்ப, அலெக்ஸாவை நாயை போல் குரைக்க செய்து சாமர்த்தியமாக தப்பியுள்ளார் 13 வயது சி</strong><strong>றுமி. </strong></em></p> <p>தொழில்நுட்பம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமயாத ஒன்றாக மாறிவிட்டது. பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் டிவி முதல் வாட்ச், செல்போன், டிக்ஸி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, கிரைண்டர் என வீடே தற்போது டெக்னாலஜி மையமாக வலம் வருகிறது. பல்வேறு வீடுகளில் எந்திருச்சு சுவிட்ஸ் போட சோம்பேறிதனமாக இருந்தால், அல்லது படுத்த இடத்தில் இருந்தே ஏதேனும்…
-

top news India today abp nadu morning top India news April 6 2024 know full details | Morning Headlines: கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை பதிலடி! மதரஸா சட்டம்
“மோடி தமிழ்நாட்டிற்கு வருவது திமுகவிற்குதான் ப்ளஸ் பாய்ண்ட்” – குட்டி குட்டி நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினின் சுவாரஸ்ய பதில்கள்! தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பாஜக அரசை பின்னுக்கு…
-

7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: பாஜகவுக்கு வாக்களித்தால் நாடு முழுவதும் மதக் கலவரங்கள் உருவாகும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் அரசு சாத்தியப்படுத்திய பல திட்டங்களில்தான் மோடி அரசு ஓடிக்கொண்டிருக்கிறது – ப.சிதம்பரம். பேரறிஞர் அண்ணா பற்றி அண்ணாமலை அவதூறாகப் பேசினால் எப்படி பொறுமையாக இருப்போம் – செல்லூர் ராஜூ. 3வது முறை மோடி பிரதமரானால் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி அமலாகும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில்…
-

Ox Suddenly Runs Into Bike On Busy Road Resulting In Major Accident Near Bengaluru
பெங்களூருவில் கடந்த வாரம் நடந்த பயங்கர விபத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அலங்கரிக்கப்பட்ட எருது ஒன்றை பெண்மணி ஒருவர் கயிற்றை பிடித்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த எருது திடீரென தன் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபரை ஆக்ரோஷமாக ஓடிச்சென்று முட்டுகிறது. இதில் அந்த நபர் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்து விடுகிறார். அந்த இருசக்கர வாகனத்தின் அருகே ஒரு லாரி சென்றுகொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகன…
-

Sri Lanka Minister Ali sabri on katchatheevu says no need for talks on resolved issue
katchatheevu: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் கூட இல்லாத நிலையில், கச்சத்தீவு விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. இதனால், இலங்கை, இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படுமோ என முன்னாள் தூதர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். பற்றி எரியும் கச்சத்தீவு விவகாரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 14 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாகவும் இதற்கு கருணாநிதி…
-

Delhi High Court Rejects public interest Petition To Ban Cross Gender Massages In Spas
ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் மசாஜ் செய்ய தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஸ்பாக்களிலும் மசாஜ் சென்டர்களிலும் ஒரு பாலினத்தவர் வேறொரு பாலினத்தவருக்கு மசாஜ் செய்ய தடை விதிக்கக் கோரி அனுஜ் மல்ஹோத்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். சட்டவிரோதமாக இயங்குகிறதா மசாஜ் சென்டர்கள்? ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்தப்பட்டு அவற்றை…
-

“மதரஸா சட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
Madarsa Act: உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004ஐ அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. மதரஸா கல்வி என்றால் என்ன? அரபு, உருது, பெர்சியன் (பாரசீகம்), இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்புகளே மதரஸா கல்வியாகும். இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004…
-

1.22 crore liters of beer worth Rs 98 52 crore has been seized by the excise department in Karnataka state
கர்நாடகா மாநிலத்தில் ரூ.98.52 கோடி மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்கள் கலால் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நேரம்…
-

The RBI Governor will present the monetary policy statement today as the Reserve Bank’s Monetary Policy Committee meeting ends 5th april 2024
புதன்கிழமை தொடங்கிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை காலை) முடிவடைகிறது, மேலும் முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று சமீபத்திய பணவியல் கொள்கை அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் தாக்கல் செய்கிறார். ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் மற்றும் இதர கொள்கை விகிதங்கள் குறித்த MPCயின் முடிவை அறிவிப்பதைத் தவிர, தற்போதைய உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதார நிலைமை குறித்தும்…
-

reserve bank of india keeps the repo rate unchanged monetary policy | Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.5% சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பதுன் குறிப்பிடத்தக்கது. #WATCH | On monetary policy decisions, RBI Governor Shaktikanta Das says, “The Reserve Bank decided to…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/