Month: February 2024

  • Tamil Nadu latest headlines news till afternoon 18th February 2024 flash news details here | TN Headlines: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை! கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

    Tamil Nadu latest headlines news till afternoon 18th February 2024 flash news details here | TN Headlines: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை! கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை



    Minister Udayanidhi Stalin: ”வேகமாக முன்னேறும் நகரங்களில் திருநெல்வேலியையும் கொண்டுவர முயற்சி”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

    நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது, இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு  ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

    Chennai Central Lok Sabha Constituency: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி – எந்த கட்சிக்கு சாதகம்? இதுவரை சாதித்தது யார்? தேர்தல் வரலாறு

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். மேலும் படிக்க

    Vijay TVK: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது – காரணம் என்ன?

    Vijay TVK: தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

    TN Weather Update: 24 ஆம் தேதி கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. மற்ற நாட்களில் எப்படி?

    தமிழ்நாட்டில் அதிகாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும்.  உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

    Trade Apprentices Engagement Fair 2024: அரசு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி.. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கிய செய்தி..!

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப் பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் பயிற்சி நேரடி சேர்க்கை முகாம் (Trade Apprentices Engagement Fair) வருகிற 21.02.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணிதொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் படிக்க

    மேலும் காண

    Source link

  • Pooja Hegde Photos : மஞ்சள் நிற பட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே!

    Pooja Hegde Photos : மஞ்சள் நிற பட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே!


    Pooja Hegde Photos : மஞ்சள் நிற பட்டுப்புடவையில் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே!

    Source link

  • Lok Sabha Election 2024 Sriperumbudur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Sriperumbudur Lok Sabha Constituency: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி

    Lok Sabha Election 2024 Sriperumbudur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Sriperumbudur Lok Sabha Constituency: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி

     Sriperumbudur Lok Sabha Constituency: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை தொடர்ந்து அலசி வருகிறோம்.  அந்த வகையில் மாநிலத்தின் ஐந்தாவது தொகுதியான, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
    ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உருவான வரலாறு:
    ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளில் 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.  2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
    மறுசீரமைப்பிற்குப் பின்னர், ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்ற தொகுதியை தவிர, மற்ற ஐந்துமே புதிய சட்டமன்ற தொகுதிகள் தான் இடம்பெற்றுள்ளன. அதன்படி,  மதுரவாயல், அம்பத்தூர்,  ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்,  பல்லாவரம் மற்றும் தாம்பரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளனர். முன்பு தனித் தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர், தற்போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி எப்படி?
    தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூரும் ஒன்று. பல்லவர்கள் ஆண்ட பகுதி என்ற சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ள இந்த தொகுதியில் தான், தமிழகத்தில் அதிக அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள தொகுதியாகவும் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழில் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 
    ஆட்டோ மொபைல் தொழில்கள் இங்கு பிரதானம். உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொகுதியாக உள்ளது. பட்டியலின சமூகத்தினர் வன்னிய சமூக மக்கள் ஏறத்தாழ சரிபாதி எண்ணிக்கையில் இருக்கின்றனர். ரெட்டியார், யாதவ சமூக மக்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் பிரச்னை என்ன?
    இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் வாகனங்கள், பொருட்களைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் இன்னும் நிறைவடையவில்லை.  சென்னை புறநகர் பகுதிகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. எனவே, இந்தத் தொகுதியை மையப்படுத்தி பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்பது நீண்ட காலக் கோரிக்கையாக இன்னும் தொடர்கிறது. அடையாறு கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
    ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் திமுக ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்தத் தொகுதி திமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. அதிமுகவும் காங்கிரஸும் தலா மூன்று முறை இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கின்றன. 



    ஆண்டு
    வெற்றி பெற்றவர்
    கட்சி


    1967
    சிவசங்கரன்
    திமுக


    1971
    லட்சுமணன்
    திமுக


    1977
    சீராளன் ஜெகன்னாதன்
    அதிமுக


    1980
    நாகரத்தினம்
    திமுக


    1984
    மரகதம் சந்திரசேகர்
    அதிமுக


    1989
    மரகதம் சந்திரசேகர்
    அதிமுக


    1991
    மரகதம் சந்திரசேகர்
    அதிமுக


    1996
    நாகரத்தினம்
    திமுக


    1998
    வேணுகோபால்
    அதிமுக


    1999
    கிருட்டிணசாமி
    திமுக


    2004
    கிருட்டிணசாமி
    திமுக


    2009
    டி.ஆர். பாலு
    திமுக


    2014
    ராமச்சந்திரன்
    அதிமுக


    2019
    டி.ஆர். பாலு
    திமுக

    வாக்காளர்கள் விவரம் (2024):
    ஆண் வாக்காளர்கள் – 11,69,344
    பெண் வாக்காளர்கள் – 11,88,754 
    மூன்றாம் பாலினத்தவர் – 428
    மொத்த வாக்காளர்கள் – 23,58,526
    சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
    மதுரவாயல் – கணபதி (திமுக)
    அம்பத்தூர் – ஜோசப் சாமுவேல் (திமுக)
    ஆலந்தூர் – தஅ. மோ. அன்பரசன் (திமுக)
    ஸ்ரீபெரும்புதூர் – செல்வப் பெருந்தகை ( காங்கிரஸ் ) 
    பல்லாவரம் – கருணாநிதி (திமுக)
    தாம்பரம் – எஸ்.ஆர். ராஜா (திமுக)

    Source link

  • kamala cinemas to rerelease rajinikanth annamalai and vijay thirumalai movie

    kamala cinemas to rerelease rajinikanth annamalai and vijay thirumalai movie


    ரீரிலீஸ் கலாச்சாரம்
    பல வருடங்களுக்கு முன்பு வெளியாகிய படங்கள் இன்று புதிய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்தப் படங்களை திரையரங்கில் அவர்கள் பார்க்கும் வகையில் ரீரிலீஸ் செய்யப்படுகின்றன. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி , நாயகன், ஆளவந்தான், தேவர் மகன், வேட்டையாடு விளையாடு, சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, தனுஷ் நடித்த மயக்கம் என்ன, 3 உள்ளிட்ட படங்கள் சமீபத்தில்  திரையரங்குகளில் வெளியாகி இன்றைய தலைமுறை ரசிகர்கர்களால் கொண்டாடப்படுகின்றன.
    மேலும் இந்தப் படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்கு கூட்டம் குவிந்து நல்ல வசூலும் கிடைக்கிறது.  இந்த மாதிரியான படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது சென்னை கமலா திரையரங்கம். தற்போது கமலா திரையரங்கம் ரஜினி, விஜய் மற்றும் விக்ரம் உள்ளிட்ட நடிகர்களின் வெற்றிப் படங்களை ரீரிலீஸ் செய்ய இருக்கிறது. இந்தப் படங்களை டிஜிட்டலாக இல்லாமல் பிரிண்ட் வடிவில் திரையிடுவதாக கமலா திரையரங்கம் தெரிவித்துள்ளது.

    Exclusive at your Kamala Cinemas ‼️‼️🔴 From 22nd Feb – (BOOKINGS OPEN NOW) #Superstar’s ANNAAMALAI 🚲#Thalapathy’s THIRUMALAI ⛓️🚬From 29th Feb – #Thalaivar’s MANNAN 🕶️#Chiyaan’s SAAMY 🚨We are playing these movies in Print Projector 📽️ pic.twitter.com/p8KcO4gBPt
    — Kamala Cinemas (@kamala_cinemas) February 17, 2024

    அண்ணாமலை
    1992ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் அண்ணாமலை. சரத்பாபு, குஷ்பு, ஜனகராஜ், ராதா ரவி, மனோரமா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தில்  ரஜினியின் டைட்டில் கார்டில் வரும் பி.ஜி.எம் இன்று வரை  அவரது படங்களில் பயன்படுத்தப்படுகிறது. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி இப்படம் கமலா திரையரங்கில் வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி நடித்த மன்னன் படமும் வெளியாக இருக்கிறது.
    இப்படங்கள் தவிர்த்து விஜய்  நடித்த காதலுக்கு மரியாதை மற்றும் அஜித் குமார் நடித்த வாலி படமும் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கின்றன.
    திருமலை
    விஜய் , ஜோதிகா நடித்து கடந்த  2003ஆம் ஆண்டு வெளியான படம் திருமலை. ரமணா இப்படத்தை இயக்கினார். ரொமான்ஸ் , ஆக்‌ஷன் கலந்த படமான திருமலை, அதே பிப்ரவரி 22ஆம் தேதி கமலா திரையரங்கில் வெளியாகிறது.
     சாமி
    ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியாகிறது. 

    மேலும் படிக்க : Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து – சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ!
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணம்: குக் வித் கோமாளி மேடையில் சொன்னதை செய்த மைம் கோபி

    மேலும் காண

    Source link

  • TN Weather Update: 24 ஆம் தேதி கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. மற்ற நாட்களில் எப்படி?

    TN Weather Update: 24 ஆம் தேதி கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. மற்ற நாட்களில் எப்படி?


    <p>&nbsp;</p>
    <p>தமிழ்நாட்டில் அதிகாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக &nbsp;இருக்கக்கூடும். &nbsp;உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
    <p>20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
    <p>அதேபோல் வரும் 24 ஆம் தேதி,&nbsp; கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், &nbsp;புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. &nbsp;உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4&nbsp; டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.1&nbsp; டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
    <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:&nbsp;</h2>
    <p>18.02.2024: தென்தமிழக &nbsp;கடலோரப்பகுதிகள், &nbsp; &nbsp;மன்னார் &nbsp; &nbsp;வளைகுடா மற்றும் குமரிக்கடல் &nbsp;பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு &nbsp;45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 &nbsp;கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.&nbsp;மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.&nbsp;</p>

    Source link

  • Trade Apprentices Engagement Fair 2024 (Trade Apprentices Engagement Fair) at Chengalpattu Government Vocational Training Center campus

    Trade Apprentices Engagement Fair 2024 (Trade Apprentices Engagement Fair) at Chengalpattu Government Vocational Training Center campus


    செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் 2024 ( Trade Apprentices Engagement Fair ) மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்  தகவல்.
    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை:
    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப் பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் பயிற்சி நேரடி சேர்க்கை முகாம் (Trade Apprentices Engagement Fair) வருகிற 21.02.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணிதொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
    திறன் பயிற்சி மையங்கள் 
    NCVT மற்றும் SCVT முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் தேர்ச்சி பெற்ற, இறுதி ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் பயிற்சியாளர்கள், திறன் பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், MES பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள்,8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளோமா மற்றும் டிகிரி கல்வித் தகுதியுடைய மாணவ/மாணவியர்களுக்கு நேரடியாக தொழிற்பழகுநர்களாக அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று அசல் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    NAC சான்றிதழ் 
    இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.8000 முதல் ரூ.16000 வரை அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணி தொழிற்நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. NAC சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது. எனவே, இம்முகாமில் பங்கேற்கும் பயிற்சியாளர்கள் கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்தெரிவித்துள்ளார்கள்.

    மேலும் காண

    Source link

  • Ravichandran Ashwin: ”நாயகன் மீண்டும் வரார்” – மீண்டும் அணிக்கு திரும்பும் அஸ்வின்!

    Ravichandran Ashwin: ”நாயகன் மீண்டும் வரார்” – மீண்டும் அணிக்கு திரும்பும் அஸ்வின்!


    <p>இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து போட்டியின் 2வது நாள் முடிந்த பின்னர், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போட்டி நடைபெற்ற ராஜ் கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பினார்.&nbsp;</p>
    <p>இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட்டில் அவர் விளையாட மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் 4வது நாளில் இந்திய அணியுடன் இணையவுள்ளார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் வீரர்களில் தற்போது விவாதிக்கப்படும் வீரர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்வின். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின்,&nbsp; டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினைக் கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில்&nbsp; இந்த சாதனையை அஸ்வின் படைத்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 9வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் தன் வசப்படுத்தியிருந்தார்.&nbsp;</p>
    <p>அஸ்வினுக்கு தமிழ்நாடு <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> தொடங்கி பிரதமர் வரை இந்தியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது மட்டும் இல்லாமல் அஸ்வினுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அஸ்வின் இந்த சாதனையை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக அறிவித்தார்.&nbsp;</p>
    <p>அஸ்வினைச் சுற்றி அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில், ராஜ்கோட்டில் இருந்த அஸ்வினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்தாக கூறப்பட்டது. அந்த அழைப்பில், அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது. இதனால் அணி நிர்வாகத்திடம் இந்த தகவலைச் சொன்ன அஸ்வின் உடனே ராஜ்கோட்டில் இருந்து வெளியேறினார். அதாவது போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் அஸ்வின் ராஜ் கோட்டில் இருந்து கிளம்பினார்.&nbsp;</p>
    <p>சென்னைக்கு திரும்பிய அஸ்வினுக்கு&nbsp; துணை நிற்கும் விதமாக பிசிசிஐ துணைச் செயலாளர் ராஜீவ் சுக்லா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், &ldquo; அஸ்வினின் அம்மா விரைவில் குணமடைய வாழ்த்துகள். ராஜ் கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ள அஸ்வின் தனது தயாருடன் இருந்து அவரது தாயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நினைக்கின்றோம்&rdquo; எனக் கூறியது மட்டும் இல்லாமல் பிசிசிஐ பக்கத்தை டேக் செய்திருந்தார்.&nbsp;</p>
    <p>இந்நிலையில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், அஸ்வின் இன்று அதாவது போட்டியின் நான்காவது நாளில் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார் என தெரிவித்துள்ளது.&nbsp; அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>

    Source link

  • Actress Sunny Leone’s photo appears on UP Police recruitment exam admit card | Sunny Leone: காவலர் பணி தேர்வில் சன்னி லியோன்?

    Actress Sunny Leone’s photo appears on UP Police recruitment exam admit card | Sunny Leone: காவலர் பணி தேர்வில் சன்னி லியோன்?


    Sunny Leone: உத்தரபிரதேசத்தில் காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. 
    உத்தரபிரதேச காவலர் தேர்வு:
    உத்தரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு, நடிகை சன்னி லியோன் பெயரில் வெளியான ஹால்டிக்கெட் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 17ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான அந்த ஹால்டிக்கெட்டில், விண்ணப்பதாரருக்கு கன்னௌஜ்ஸ் திருவாவில் உள்ள ஸ்ரீமதி சோனஸ்ரீ மெமோரியல் பெண்கள் கல்லூரி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

    Sunny Leone applied for UP police constable examination….😅😅 pic.twitter.com/YuxYMzGjwt
    — Simple man (@ArbazAh87590755) February 17, 2024

    காவல்துறை விசாரணை:
    சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணயில், தேர்வுக்க விண்ணப்பிக்க பயன்படுத்தப்பட்ட மொபைல் எண் உத்தரபிரதேச மாநிலத்தின் மஹோபாவில் வசிப்பவருக்கு சொந்தமானது. பதிவு படிவத்தில் வழங்கப்பட்ட முகவரி மும்பையில் உள்ளது” என தெரிய வந்துள்ளது. ஹால் டிக்கெட் போலியானது என்றும், விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும்போது நடிகையின் புகைப்படம் பதிவேற்றப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனிடையே, தேர்வு நாளில் அந்த ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி யாரும் தேர்வு எழுத வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    120 பேர் கைது:
    உத்தரபிரதேச காவல்துறை கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு நாளும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு சுமுகமாக நடைபெறுவதற்காக தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 120-க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் கைது செய்யப்பட்ட 122 பேரில் 15 பேர் எட்டாவில், தலா ஒன்பது பேர் மௌ, பிரயாக்ராஜ் மற்றும் சித்தார்த்தநகரில், 8 பேர் காஜிபூரில், 8 பேர் அசம்கரில், 7 பேர் கோரக்பூரில், 6 பேர், ஜான்பூரில் 5 பேர், ஃபிரோசாபாத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கௌசாம்பி மற்றும் ஹத்ராஸில் தலா மூன்று, ஜான்சி, வாரணாசி, ஆக்ரா மற்றும் கான்பூரில் தலா இரண்டு, பல்லியா, தியோரியா மற்றும் பிஜ்னூரில் தலா ஒருவரும் கைதாகியுள்ளனர்.
    ஆசிரியர் தேர்வில் சன்னி லியோன்:
    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த ஒரு மாணவி தனது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்தபோது,  அதில் அவரது புகைப்படம் இடம்பெறாமல் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதுதொடர்பாக கல்லூரியில் புகாரளித்தபோது, “தேர்வு எழுதுவோர் அவர்களுக்கென தனி ஐடி உருவாக்கப்படும். அதனால் அவர்கள் என்ன புகைப்படத்தை அப்லோட் செய்கிறார்களோ அதைத் தான் கணினி ஏற்றுக்கொள்ளும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்களது ஐடியை பயன்படுத்த முடியாது. இது முழுக்க முழுக்க அந்த மாணவியின் தவறு தான்” என்று கூறி இருந்தனர். இந்நிலையில் தான், உத்தரபிரதேச காவல்துறை தேர்வுக்கான, ஹாக்ல் டிக்கெட்டிலும் சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    மேலும் காண

    Source link

  • vijay tv siragadikka aasai serial february 19th to 24th promo | Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து

    vijay tv siragadikka aasai serial february 19th to 24th promo | Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து


    சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
    முத்து கார் ஷெட்டுக்கு சென்று ”என்னடா எல்லாம் சோகமா இருக்கிங்க?” என்று தனது நண்பர்களிடம் கேட்கிறார். அதற்கு செல்வம், ”அந்த சிட்டி வந்துட்டு போனாண்டா” என்கிறார். ”ஏண்டா ஏதாவது வந்து பிரச்சனை பண்ணானா?” என முத்து கேட்கிறார். அதற்கு செல்வம் ”3 நாளுல நாங்க எல்லோரும் வாங்கின காச மொத்தம் கொடுக்கணுமாம் இல்லனா எல்லாக் காரையும் தூக்கிட்டு போய்டுவானாம்” என கூறுகிறார். முத்து சிட்டியின் அலுவலகத்துக்கு சென்று ”சண்டை என்கூட தான் பசங்கள விட்டுடு” என சொல்கிறார். அதற்கு சிட்டி ”என்ன எல்லோர் முன்னாடியும் அடிச்சி அவமானப்படுத்தின இல்ல அதுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்” என்கிறார். ”என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு உன் ஃப்ரண்டுங்க பக்கமே நான் வர மாட்டேன்” என்கிறார் சிட்டி. இதனையடுத்து சிட்டி கார் ஷெட்டுக்கே சென்று முத்து நண்பர்களின் காரை எடுக்க நிற்கிறார். அப்போது அங்கு வரும் முத்து, ”கார்த்தி இப்டி வா” என கூப்பிட்டு பணம் கொடுக்கிறார். அதை செல்வம் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கிறார். ”ஏண்டா 3 4 லட்சம் இருக்கும் போல ஏதுடா இவ்வளவு காசு” என கேட்கிறார் செல்வம். பின் முத்து கெத்தாக நடந்து செல்கிறார். முத்து தனது காரை விற்றே இந்த பணத்தை கொடுத்ததாக தெரிகிறது. இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது.
    தற்போது கதைக்களம் ரவுடி சிட்டியை மையமாக வைத்து நகர்கிறது. அடுத்த வரத்திற்கான ப்ரோமோவில் முத்து தனது காரை வேறு விற்றுள்ளார். இதனால் முத்து விஜயா முன்பு அவமானப்பட்டு நிற்பதை போன்று அடுத்த வார கதை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. 
    சிறடிக்க ஆசை சீரியல் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதேப்போன்று எதார்த்தமான கதைக்களம் தான் இந்த சீரியலுக்கு ப்ளஸ் ஆக பார்க்கப்படுகிறது. பிள்ளைகளுக்குள் வேறுபாடு காட்டும் அம்மா, பண ஆசை பிடித்த மாமியாராக இந்த சீரியலில் வரும் விஜயா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 
    ஹீரோவின் அப்பாவாக வரும் சுந்தரராஜனும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். நாயகி, நாயகன் என இந்த சீரியலில் வரும் அனைவருமே நடிப்பில் ஸ்கோர் செய்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் நடக்கும் சின்ன விஷயங்கள் எப்படி விஷ்வரூபம் எடுக்கிறது என்பதையும் இந்த சீரியல் கதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 
    மேலும் படிக்க 
    Nawazuddin Siddiqui: ரஜினி படத்தில் வசனம் புரியாம நடிச்சேன்: சம்பளம் வாங்கியதால் குற்றவுணர்ச்சி: நவாசுதீன் சித்திக் கவலை!
     

    மேலும் காண

    Source link

  • India sends assistance to cholera-hit Zambia 3.5 tonnes of water purification supplies, chlorine tablets and ORS sachets provided

    India sends assistance to cholera-hit Zambia 3.5 tonnes of water purification supplies, chlorine tablets and ORS sachets provided


    ஜாம்பியா நாட்டில் காலரா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக இருந்தது. தற்போது வரை 613 பேர் காலரா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
    குறிப்பாக லுகாசா மாகாணத்தில் தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. ஜாம்பியா நாட்டில் வரும் மே மாதம் வரை மழைக்காலம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் காலரா தொற்று நோய் அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மழைக்காலம் மற்றும் நோய்த்தொற்றால் பலருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    India sends Humanitarian Assistance to Zambia in wake of the cholera outbreak.The aid weighing approx 3.5 tons comprises water purification supplies, chlorine tablets and ORS sachets. Was handed over today by our High Commissioner to the Government of Zambia.India stands with… pic.twitter.com/KuCF17MPfw
    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 17, 2024

    இந்த சூழலில், ஜாம்பியா நாட்டுக்கு தேவையான நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன் எடையிலான உதவி பொருட்கள் இந்திய சார்பில் 2 வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தூதர் வழியே ஜாம்பிய அரசிடம் நேற்று (சனிக்கிழமை) ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவருடைய எக்ஸ் சமூக வலைத்தளப்பகுதியில் பதிவிட்டுள்ளார்.
    ஜாம்பியா கடந்த சில வாரங்களாக காலரா நோயால் தத்தளித்து வருகிறது, இதன் காரணமாக அந்நாட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. “காலரா எமர்ஜென்சி” என்று விவரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையைச் சமாளிக்க ஜாம்பியா கூடுதல் மருத்துவ உதவியைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
    நோய் பரவாமல் தடுக்க பொது நிறுவனங்கள் கை கழுவும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. ஜாம்பியாவில் காலரா வெடிப்பு முதன்முதலில் 2023 இலையுதிர்காலத்தில் கண்டறியப்பட்டது, ஆனால் டிசம்பர் மாதம் முதல் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதாக அதிகார வட்டம் கூறுகிறது.  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூற்றூப்படி ( International Federation of Red Cross and Red Crescent Societies), இந்த நோய்த்தொற்று ஜாம்பியா தலைநகர் பகுதியில் பரவத் தொடங்கியதாகவும்,  ஜனவரி மாத தொடக்கம் வரை சுமார் 333 உயிரிழப்புகள் ஏறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாம்பியாவில் கடைசியாக 2017-18 ஆம் ஆண்டு இடையிலான காலக்கட்டத்தில் காலரா தொற்றால் 114 பேர் உயிரிழந்தனர். ஜாம்பியாவிற்கும் அதன் அண்டை நாடுகளான மலாவி மற்றும் ஜிம்பாப்வேக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவைக் கருத்தில் கொண்டு, இந்த இரண்டு நாடுகளிலும் இந்த நோய் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால் மிகவும் மோசமாக பரவும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.  
     

    மேலும் காண

    Source link

  • Lokesh Kanagaraj Speak About LEO 2 Conform Thalapathy Vijay LCU | Lokesh Kanagaraj: லியோ 2 உருவாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது

    Lokesh Kanagaraj Speak About LEO 2 Conform Thalapathy Vijay LCU | Lokesh Kanagaraj: லியோ 2 உருவாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது


    தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. 
    இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.  இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லியோ. இந்த படத்தில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதற்கடுத்து ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    His intentions,goal is different now, but if he permits time & calls me to work on it #Leo2 Is 100% Possible – director lokesh pic.twitter.com/4pWb32jTcQ
    — Actor Vijay Fans (@Actor_Vijay) February 17, 2024

    இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “ லியோ படத்தின் இரண்டாம் பாகம் அமைய எல்லா வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் அமைய வேண்டும். தளபதி விஜயின் குறிக்கோள் வேறு எங்கோ உள்ளது. அதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். லியோ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது. தளபதி விஜய் எப்போது அழைத்தாலும் லியோ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக சந்திக்க நான் தயாராக உள்ளேன். சூப்பர் ஸ்டார் படத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளது” என தெரிவித்தார். 
    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிப்பில் வெளிவந்த லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என பலர் நடித்திருந்தனர். படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரிலீசானது வரை பல்வேறு சர்ச்சைகள் எழுதாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரி குவித்தது லியோ படம். 
     
    லியோ படத்தின் பெரும்பலான காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது. இதனால், லியோ படத்தை காஷ்மீரில் படமாக்க அனுமதி அளித்த அப்பகுதி அரசு நிர்வாகத்திற்கும் நன்றி கூறி படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காஷ்மீரில் லியோ படத்தை ஒத்துழைப்பு அளித்த ஜம்மு காஷ்மீர் அரசு, அதன் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தகவல் மற்றும் சுற்றுலாத்துறை என பாதுகாப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
    காஷ்மீர் எப்போதும் எங்களின் எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவி செய்த அனைவருக்கும் பாராட்டுகள்” என கூறியிருந்தது. எதிர்கால திட்டத்தில் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளதால், லியோ பாகம் 2 எடுக்கப்படும் என அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருந்தது. 

    மேலும் காண

    Source link

  • parandur airport: Tamil Nadu government has started the land acquisition work before submitting the report through RTI

    parandur airport: Tamil Nadu government has started the land acquisition work before submitting the report through RTI


    பரந்தூர் பசுமை விமான நிலையம்
     
    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

     
    தொடரும் போராட்டம்  ( parandur airport protest )
     
    விமான நிலையம் அமைய உள்ள 5700 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 3700 ஏக்கர் நிலம் விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து நில எடுப்பு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள நிலங்கள் அரசு நிலமாக உள்ளது. கிராம மக்களின் போராட்டம் 573 வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின்  போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3  மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3  துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து ஊழியர்களும் பணி அமர்த்தபட்ட பிறகு, நில எடுப்புக்கான பொது அறிவிப்பு வெளியிடுவதும், நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    உயர் மட்டக் குழு:
     
    தமிழக அரசு விமான நிலையம் அமைய உள்ள இடத்தையும், நீர் நிலைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழு கள ஆய்வு மேற்கொண்டது. உயர்மட்ட குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் , என கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தது. 
    தகவல் அறியும் உரிமை சட்டம்:
    இந்தநிலையில் ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த, சுப்பிரமணியன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் , சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனத்திடம் அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் குழு மேற்கொண்ட ஆய்வறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்ற பதில் வெளியாகி உள்ளது.

     
    தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், இதுவரை கருத்துக்கேற்பு கூட்டம் விவசாயிகளிடமும் கிராம பொதுமக்களிடமும் எத்தனை முறை கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றுள்ளது , என கேள்வி கேட்கப்பட்டதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில், ” சுற்றுச்சூழல்  மதிப்பீட்டின் பொழுது உரிய சட்ட விதிகளின்படி பொதுமக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்படும்” என தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை எந்த கருத்து கேட்போர் கூட்டமும் நடைபெறவில்லை என வெளியே தகவல் வெளியாகி உள்ளது.
     
     
    இதுகுறித்து ஏ.பி.பி நாடு சார்பில் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்புக் குழுவை சேர்ந்த சுப்பிரமணியனிடம் பேசினோம், உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே நிலம் எடுப்பதற்கான பணியை தமிழ்நாடு அரசு செய்து வருவது அம்பலமாகியுள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். ஏற்கனவே அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் பொழுது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிரியின் அடிப்படையில் இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீர்நிலைகள் இருக்கும் பகுதி என்பதால் இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு சாத்தியம் கிடையவே கிடையாது. இது குறித்து நாங்கள் உயர் மட்ட குழுவிடமும் தெரிவித்திருக்கிறோம்.

     
     
    ஆனால் இதுவரை உயர் மட்ட குழு எந்தவித அறிக்கையும் சமர்ப்பிக்க படாத நிலையில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நியமிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசும் ஈடுபட்டு வருகிறது. இதை நாங்கள் கண்டிக்கின்றோம். பொதுவெளியில் அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக அறிவிக்க அவர்கள் தயங்குகிறார்கள். விமான நிலையம் அமைப்பதற்கு தொடர்பான அரசாணையை வெளியிட்ட பிறகும், அதை நாங்கள் போராடி தான் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே நிலம் எடுப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 

    Source link

  • Bird Flu: ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்!  தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு அலர்ட் – கண்காணிப்பு தீவிரம்!

    Bird Flu: ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்! தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு அலர்ட் – கண்காணிப்பு தீவிரம்!


    <p>உலக நாடுகள் அவ்வப்போது ஏதாவது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா வைரஸ் மீதான அச்சமும், மற்ற வைரஸ்கள் ஏதாவது பரவிவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.</p>
    <h2><strong>ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்:</strong></h2>
    <p>இந்த நிலையில் தான், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளனர். &nbsp;சதகுட்லா மற்றும் கும்மல்லடிப்பா பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்ததால் அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.</p>
    <p>கோழி இறைச்சியில் இருந்து மாதிரிகளை சேகரித்து, போபாலில் உள்ள பரிசோதனை மையத்துக்கு கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அப்போது, பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. &nbsp;</p>
    <p>இதனை அடுத்து, நோய் பரவலை தடுக்க கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டன. கோழிகள் இறந்த பகுதியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோழிக் கடைகளை மூன்று நாட்களுக்கு &nbsp;மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோழிக் கடைகளை ஒரு &nbsp; மூன்று மாதங்களுக்கு மூடவும் மாவட்ட நிர்வாம் உத்தரவிட்டுள்ளது.</p>
    <h2><strong>கட்டுப்பாடுகள் என்ன?&nbsp;</strong></h2>
    <p>இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹரி கூறுகையில், "கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் நபர்கள் எச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இறந்த பறவைகளை முறையாகப் புதைக்க வேண்டும். கண்மூடித்தனமாக அப்புறப்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள கோழிப்பண்ணைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை மூடுவதற்கு காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.&nbsp;</p>
    <p>நோய் பரவுவதை தடுக்க நெல்லூரில் உள்ள மற்ற இடங்களில் அமைந்துள்ள கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 721 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p>
    <h2><strong>5 மாவட்டங்களுக்கு அலர்ட்:</strong></h2>
    <p>அண்டை மாநிலமான ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து, தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல்&nbsp; அலர்ட்டை சுகாதாரத்துறை விடுத்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="abp-article-title"><a title="தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் செல்வப்பெருந்தகை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி" href="https://tamil.abplive.com/news/politics/selvaperunthagai-became-the-president-of-the-tamil-nadu-congress-committee-168130" target="_self">தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் செல்வப்பெருந்தகை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி</a></p>
    <p class="article-title "><a title="Yashasvi Jaiswal Century: நான் அடிச்சா அதிரடி! மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல்" href="https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-eng-3rd-test-match-2nd-innings-yashasvi-jaiswal-century-on-row-saurashtra-cricket-association-stadium-rajkot-168078" target="_self">Yashasvi Jaiswal Century: நான் அடிச்சா அதிரடி! மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல்</a></p>

    Source link

  • vanangaan team shares news poster ahead of teaser release arun vijay resembles suriya | Vanangaan: வணங்கான் கெட்

    vanangaan team shares news poster ahead of teaser release arun vijay resembles suriya | Vanangaan: வணங்கான் கெட்


    வணங்கான் (Vanangaan) படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்யின் புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.
    பாலா இயக்கத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்து, பின் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு அவர் விலக, நடிகர் அருண் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் வணங்கான்.
    பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
    முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு கையில் பகுத்தறிவு பேசிய பெரியார், மற்றொரு கையில் கடவுள் பிள்ளையார் என நாயகன் அருண் விஜய் வைத்திருக்கும் வகையிலான போஸ்டர் ஆதரவு, விமர்சனங்கள் இரண்டையும் இணையத்தில் பெற்றது. மேலும், சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையை பாலா இப்படத்தில் கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 
    இந்நிலையில் நாளை வணங்கான் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. இறுதியாக பாலாவின் இயக்கத்தில் வெளியான வர்மா திரைப்படம் பல சர்ச்சைகளைக் கடந்து வெளியாகி பெரிய அளவில் எடுபடாத நிலையில், வணங்கான் திரைப்படத்தினை பாலாவின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
    இந்நிலையில், நாளை டீசர் வெளியாவதற்கு முன்னதாக தற்போது அருண் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அருண் விஜய்யின் கூர்மையான பார்வையுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் நாலை மாலை 5 மணிக்கு வணங்கான் டீசர் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    இந்நிலையில், இந்த போஸ்டரில் அருண் விஜய் பார்ப்பதற்கு அப்படியே ரோலக்ஸ் சூர்யா போல் தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் களமாடி வருகின்றனர்.

    மேலும் சூர்யா நடிக்க இருந்து அருண் விஜய் நடித்து முடித்துள்ள இப்படத்தில் அருண் விஜய் அவரைப் போலவே கனக்கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் காண

    Source link

  • விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது


    Vijay TVK: தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    #தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay pic.twitter.com/uLGLvsbVV4
    — TVK Vijay (@tvkvijayhq) February 18, 2024

     
    கட்சி பெயரை திருத்திய விஜய்:
    முன்னதாக, நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை, தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்துள்ளார்.  கடந்த பிப்ரவரி 4ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை விஜய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 
    கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். இதன் மூலம், ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் விமர்சனங்களை ஏற்கும் பண்பை விஜய் நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அற்விப்புகள் வெளியாகி இருந்தாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பணிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    மேலும் காண

    Source link

  • Tamil Thalaivas: வெற்றியுடன் முடிக்கப்போவது யார்? தமிழ் தலைவாஸுடன் பெங்கால் வாரியர்ஸ் பலப்பரீட்சை

    Tamil Thalaivas: வெற்றியுடன் முடிக்கப்போவது யார்? தமிழ் தலைவாஸுடன் பெங்கால் வாரியர்ஸ் பலப்பரீட்சை


    <p>ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.&nbsp;</p>
    <p>அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழந்த அணிகளில் ஒன்றாக உள்ள அணி தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸ் அணி இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தனது கடைசி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.&nbsp;</p>
    <p>இரு அணிகளுக்கும் இதுவே சீசனின் கடைசி ஆட்டமாகும். தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் 13 தோல்விகளை சந்தித்தும் எட்டு போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது தமிழ் தலைவாஸ். இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.&nbsp;</p>
    <p>இந்த இரு அணிகளும் ப்ரோ கபடில் லீக்கில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படாமல் முடிந்தது. கடைசி மூன்று போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு போட்டியிலும் பெங்கால் வாரியர்ஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.&nbsp;</p>
    <p>குறிப்பாக இந்த சீசனின் தொடக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 48 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் 38 புள்ளிகளும் எடுத்தது. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டன் மனிந்தர் சிங் மட்டும் 16 புள்ளிகள் சேர்த்தார். ஷுபம் ஷிண்டே 11 புள்ளிகளும் நிதின் குமார் 7 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.&nbsp;</p>
    <p>அதேபோல் 9வது சீசனில் கடைசியாக மோதிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு தமிழ் தலைவாஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ள கோர் டீம் எனப்படும், நரேந்தர், அஜிங்கியா பவார் மற்றும் சாகர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது.&nbsp;</p>
    <p>இரு அணிகளுக்கும் இந்த போட்டி சீசனின் கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் முடிக்க தீவிரமாக உள்ளன.&nbsp;</p>

    Source link

  • மேட்டூர் அணையின் நீர் வரத்து 54 கன அடியில் இருந்து 66 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையின் நீர் வரத்து 54 கன அடியில் இருந்து 66 கன அடியாக அதிகரிப்பு


    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 66 கன அடியாக அதிகரித்துள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/18/d7e80f26f97876b988edd55c4671e6191708227806911113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நீர்மட்டம்:</p>
    <p>அணையின் நீர் மட்டம் 65.37 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 28.85 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/18/65dab87b1c0e330551bd1a892c5fa9181708227839801113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>கர்நாடக அணைகள்:</p>
    <p>கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • top news India today abp nadu morning top India news February 1th 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 1th 2024 know full details


    சென்னை மற்றும் சென்னை புறநகரில் இன்று  அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கடை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கமாக செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வார இறுதி நாளான இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  மேலும் படிக்க..

    தென் சென்னை மக்களவைத் தொகுதி – எந்த கட்சிக்கு சாதகம்? இதுவரை சாதித்தது யார்? தேர்தல் வரலாறு

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். அந்த வகையில் மாநிலத்தின் மூன்றாவது தொகுதியான, தென்சென்னை மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாற்றை சற்றே விரிவாக அலசி ஆராயலாம். மேலும் படிக்க..

    நிறைவேறுமா விவசாயிகள் கோரிக்கை? இன்று மத்திய அரசுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை

    குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது போன்ற, ஏற்கனவே வழங்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் பேரணியாக செல்லும் நோக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு குழுக்களாக டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். ஆனால், டெல்லி எல்லைப்பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகள் உள்ளே வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலால் விவசாயிகள் குவிந்துள்ள பகுதிகளில் பதற்றமுடனே காணப்படுகிறது. மேலும் படிக்க..

    ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்! தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு அலர்ட் – கண்காணிப்பு தீவிரம்!

    உலக நாடுகள் அவ்வப்போது ஏதாவது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா வைரஸ் மீதான அச்சமும், மற்ற வைரஸ்கள் ஏதாவது பரவிவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தான், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளனர்.  மேலும் படிக்க..

     விமர்சனங்களை ஏற்ற விஜய்..! கட்சி பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என திருத்தி அறிவிப்பு

    நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை, தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை விஜய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். மேலும் படிக்க..

    Source link

  • Ranbir Kapoor: முதலில் மனுசனா இரு.. அனிமல் நாயகன் ரன்பீருக்கு அம்பானி கொடுத்த மூன்று அறிவுரைகள்

    Ranbir Kapoor: முதலில் மனுசனா இரு.. அனிமல் நாயகன் ரன்பீருக்கு அம்பானி கொடுத்த மூன்று அறிவுரைகள்


    <p>பாலிவுட் நடிகர் ரன்பீன் கபூருக்கு மும்பையில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற லோக்மத் மகாராஷ்டிரர் விருதுகளின் 10வது சீசனில் இந்த ஆண்டின் சிறந்த மகாராஷ்டிரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.&nbsp; இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட நடிகர் ரன்பீர் கபூர், ​​​​தனது வாழ்க்கையில் பின்பற்றும் மூன்று விதிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த மூன்று விதிகளையும் இந்தியாவின் டாப் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.&nbsp; அம்பானி கற்றுக்கொடுத்த மூன்று விதிகள் மூலம் இந்தியாவின் சிறந்த குடிமகனாக விளங்க முயற்சிப்பதாகவும், தான் ஒரு மும்பையைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>
    <h2><strong>அம்பானி சொன்ன மூன்று விதிகள்</strong></h2>
    <p class="no_first_intro_para">முதலாவது விதி, சிறப்பான வேலையைத் தொடர்ந்து செய்வது. அடுத்தது வெற்றியைத் தனது தலையிலும் மற்றும் தோல்வியைத் தனது இதயத்தில் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கூறியதாக கூறினார். அதாவது&nbsp; ‘உன் தலையைக் குனிந்து வேலை செய். வெற்றியை உன் தலையிலும், தோல்வியை உன் இதயத்திலும் ஒருபோதும் எடுத்துக் கொள்ளாதே&rdquo; என அம்பானி கூறியதாகக் கூறினார்.&nbsp;</p>
    <p class="no_first_intro_para">மூன்றாவது &ldquo;ஒரு நல்ல மனிதனாக மாற வேண்டும் என்பதுதான். அதாவது நான் நல்ல மகனாக, நல்ல தந்தையாக, நல்ல கணவனாக, சகோதரனாக, நண்பனாக மாற விரும்புகிறேன். மிக முக்கியமாக, நான் ஒரு நல்ல குடிமகனாக இருக்க விரும்புகிறேன். மும்பைக்காரனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இதுபோன்ற விருதுகள் எனக்கு மிகவும் முக்கியம் &rdquo;எனக் கூறினார்.&nbsp;</p>
    <p class="no_first_intro_para">ரன்பீர் கபூர் நடித்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது அனிமல் படம். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி திம்ரி, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். பல்வேறு சர்ச்சைகள், கடுமையான விமர்சனங்களை அனிமல் படம் சந்தித்தது, இருந்தும் வெகுஜனத்திடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.900 கோடி வரை உலகளவில் வசூல் செய்தது. சமீபத்தில் இந்தப் படத்தில் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் மும்பையில் சந்தித்துக் கொண்டார்கள்.</p>
    <p>அனிமல் படத்திற்கு பல்வேறு தளத்தில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்திய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட், கேப்டன் மில்லர் மற்றும் தளபதி 68 படங்களின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, கவிஞர் ஜாவித் அக்தர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள்.</p>
    <p>ஜாவித் அக்தர் அனிமல் படம் குறித்து இப்படி கூறியுள்ளார் &ldquo; ஒரு படத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தனது ஷூவை நாக்கால் நக்கும்படி சொல்வது, ஒரு பெண்ணை அறைவது ஆகியவற்றை நியாயப்படுத்துகிறான். அந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் ஆகிறது என்றால் அது மிகவும் அபத்தானது&rdquo;&nbsp;</p>
    <p>அதே நேரத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா, நடிகைகள் த்ரிஷா, அலியா பட், அல்லு அர்ஜூன் உள்ளிட்டவர்கள் அனிமல் படத்தை பாராட்டினார்கள். தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அடுத்ததாக அனிமல் படம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>

    Source link

  • Kanyakumari: கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரயில்.. அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய திருநங்கைகள்..

    Kanyakumari: கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரயில்.. அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய திருநங்கைகள்..


    <p>கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் காலை 6.45 மணி யளவில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் நிற்காது. இந்நிலையில், ரயில் நிலையத்தை கடக்கும் போது திடீரென அபாய சங்கிலியை பிடித்து ரயில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கடைசி பெட்டியில் இருந்த அதிகாரிகள் பதட்டத்துடன் கீழே இறங்கினர். ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருக்கும் பயணிகள் கிழே இறங்கினர். அதேசமயம் வேறு ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சற்று பதட்டம் அடைந்தனர்.</p>
    <p>ரயில் நிறுத்தப்பட்ட உடன் எஸ் 7 என்ற பெட்டியில் இருந்து இரண்டு திருநங்கைகள் கிழே இறங்கி ஓடத் தொடங்கினர். இந்த பெட்டியின் முன், பயணிகளும், டி.டி.ஆரும் நின்று கொண்டிருந்ததால் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாகர்கோவிலில் இருந்து ரயிலில் ஏறிய திருநங்கைகள் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்டுள்ளனர். இது பிடிக்காத சில பயணிகள் சத்தம் போட்டுள்ளனர். இதனால் பயணிகளுக்கும் திருநங்கைகளுக்கும் தகராறு ஏற்பட்டது.</p>
    <p>அதை தொடர்ந்து திருநங்கைகள் இருவரும் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க ரயிலில் இருக்கும் அபாய சங்கிலியை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் ஹவுரா எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் நின்றது. இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சறிது நேரம் பதற்றம் நிலவியது.</p>
    <p>நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் ரெயில்களில் ஏறும் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பணம் தர மறுப்பவர்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Vegetables price list february 18 2024 chennai koyambedu market

    Vegetables price list february 18 2024 chennai koyambedu market


    Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.420 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
    ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இன்றைய நாளில் (பிப்ரவரி 18) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     
     




      காய்கறிகள் (கிலோவில்) 
      முதல் ரகம் 
       இரண்டாம் ரகம் 
     மூன்றாம் ரகம் 


    வெங்காயம் 
    20 ரூபாய்
    16 ரூபாய்
        14 ரூபாய்


    தக்காளி 
    22 ரூபாய் 
    15 ரூபாய்
          13 ரூபாய்


    நவீன் தக்காளி
    33 ரூபாய்
     
     


    உருளை  
    30 ரூபாய்
    25 ரூபாய்
          17 ரூபாய்


    ஊட்டி கேரட்
    80 ரூபாய்
    75 ரூபாய்
         70 ரூபாய்


    சின்ன வெங்காயம்
    40 ரூபாய்
    35 ரூபாய்
         30 ரூபாய்


    பெங்களூர் கேரட் 
    35 ரூபாய்
    30 ரூபாய்
           -


    பீன்ஸ் 
    35 ரூபாய்
    33 ரூபாய்
           -


    ஊட்டி பீட்ரூட் 
    60 ரூபாய்
    55 ரூபாய்
              


    கர்நாடகா பீட்ரூட் 
    32 ரூபாய்
    25 ரூபாய்
           -


    சவ் சவ் 
    16 ரூபாய்
     15 ரூபாய் 
           – 


    முள்ளங்கி 
    12 ரூபாய்
    10 ரூபாய் 
           – 


    முட்டை கோஸ் 
    20 ரூபாய்
     15 ரூபாய்
           -


    வெண்டைக்காய் 
    35 ரூபாய்
    30 ரூபாய்
           -


    உஜாலா கத்திரிக்காய்
    35 ரூபாய்
    25 ரூபாய்
           -


    வரி கத்திரி  
    25 ரூபாய்
     20 ரூபாய்
           – 


    காராமணி
    40 ரூபாய்
    30 ரூபாய்
     


    பாகற்காய் 
    30 ரூபாய்
    25 ரூபாய்
           – 


    புடலங்காய்
    25 ரூபாய்
    20 ரூபாய்
           – 


    சுரைக்காய்
    20 ரூபாய்
    15 ரூபாய்
          -


    சேனைக்கிழங்கு
    50 ரூபாய்
    48 ரூபாய்
          -


    முருங்கைக்காய்
    80 ரூபாய்
    70 ரூபாய்
           -


    சேமங்கிழங்கு
    45 ரூபாய்
    42 ரூபாய்
     


    காலிபிளவர்
    17 ரூபாய்
    15 ரூபாய்
          -


    பச்சை மிளகாய் 
    40 ரூபாய்
    35 ரூபாய்
          -


    அவரைக்காய்
    40 ரூபாய்
    30 ரூபாய்
          -


    பச்சைகுடைமிளகாய் 
    45 ரூபாய்
    35 ரூபாய்
          -


    வண்ண குடை மிளகாய்
    80 ரூபாய்
     
     


    மாங்காய் 
    80 ரூபாய் 
    70 ரூபாய்
     


    வெள்ளரிக்காய் 
    15 ரூபாய்
    13 ரூபாய்
          -


    பட்டாணி 
    50 ரூபாய்
    40 ரூபாய்
          -


    இஞ்சி 
    105 ரூபாய்
     90 ரூபாய்
    80 ரூபாய்


    பூண்டு 
    420 ரூபாய்
    400 ரூபாய்
    350 ரூபாய்


     மஞ்சள் பூசணி 
    20 ரூபாய்
    17 ரூபாய்
            -


    வெள்ளை பூசணி 
    15 ரூபாய்
    -
            -


    பீர்க்கங்காய்
    35 ரூபாய்
     30 ரூபாய்
           -


    எலுமிச்சை 
    100 ரூபாய்
    80 ரூபாய்
            -


    நூக்கல்
    20 ரூபாய்
    15 ரூபாய் 
            -


    கோவைக்காய் 
    25 ரூபாய்
    20 ரூபாய் 
            -


    கொத்தவரங்காய் 
    40 ரூபாய்
    35 ரூபாய்
            -


    வாழைக்காய்
    8 ரூபாய்
    7 ரூபாய்
            -


    வாழைத்தண்டு 
    35 ரூபாய்
          30 ரூபாய்
            -


    வாழைப்பூ
    25 ரூபாய்
          15 ரூபாய்
            -


    அனைத்து கீரை
    10 ரூபாய்
             -
            -


    தேங்காய் 
    34 ரூபாய்
          32 ரூபாய்
     

     

    மேலும் காண

    Source link

  • 7 am headlines today 2024 18th February headlines news tamilnadu india world

    7 am headlines today 2024 18th February headlines news tamilnadu india world

    தமிழ்நாடு:

    விருதுநகர் பட்டாசு குடோன் தீ விபத்து; 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; பிரதமர், முதலமைச்சர் நிதிஉதவி அறிவிப்பு
    தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை; புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதால் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்; காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார் நியமனம். 
    பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து நடப்பதை தடுக்க அரசு கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும் – அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்
    இன்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. 
    பல்வேறு துறைகளின் சார்பில் ந்ரூபாய் 732 கோடி அளவிலான திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்
    கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது – அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
    மேகதாது அணை கட்ட கர்நாடகா நிதி ஒதுக்கீடு – எடப்பாடி பழனிசாமி கண்டனம் 
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் இருந்தவரை நீட் தமிழ்நாட்டிற்கு வரவில்லை – அமைச்சர் உதயநிதி. 
    தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை
    குரூப்-2 நேர்காணல் பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு
    வடலூர் வள்ளலார் பெருவெளியை திமுக அரசு கையகப்படுத்த முயற்சி செய்தால் மாபெரும் மக்கள் பேராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

    இந்தியா:

    புதுடெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக கிரேக்க பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸ் பங்கேற்கவுள்ளார். 
    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம். கடந்த 20 நாட்களில் காட்டு யானை தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; பொதுமக்கள் போராட்டம்
    மராட்டிய மாநிலம்: பா.ஜ.க. முன்னாள் எம்.பி. நிலேஷ் ராணே கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்
    மும்பை விமான நிலையத்தில் வீல் சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ்
    தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் உள்ள பொன்னாகால் என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் சுமார் 20 தெருநாய்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்
    நாடு முழுவதும் பாஜகவின் எழுச்சிக்கு மோடியே காரணம் – ஜே.பி. நட்டா பெருமிதம்
    வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் – விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வன் சிங் பந்தர்
    சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

    உலகம்:

    3 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
    உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள், வீரர்களுக்கு பயிற்சி; பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்
    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், தனது வணிக நிறுவனம், மகன்கள், ஊழியர்களின் சொத்து மதிப்புகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து தவறான தகவல் அளித்தாக தொடரப்பட்ட வழக்கில் 354 மில்லியன் டாலர் அபராதம்; 3 ஆண்டுகள் வணிகம் செய்யவும் தடை 
    8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அறிவிப்பு

    விளையாட்டு:

    இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்
    இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்ப்பு; இந்தியா தற்போது 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 
    தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் தனது கடைசி போட்டியில் இன்று விளையாடுகின்றது. ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பினை இழந்த தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸுடன் இரவு 8 மணிக்கு மோதுகின்றது. 

    Published at : 18 Feb 2024 06:58 AM (IST)

    மேலும் காண

    Source link

  • Lokesh kanagaraj latest update on Thalaivar 171 super star rajinikanth next movie

    Lokesh kanagaraj latest update on Thalaivar 171 super star rajinikanth next movie


    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 
    அந்த வகையில் ஜெய்பீம் இயக்குநர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதே சமயம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது சூப்பர் ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

    மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் ‘தலைவர் 171’ திரைப்படம் உருவாக உள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அது தொடர்பான சில கேள்விகள் இயக்குநர்  லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் “தலைவர் 171 படத்திற்கான கதையை எழுதி கொண்டு இருக்கிறேன். நடிகர் ரஜினிகாந்துடன் கலந்து ஆலோசனை செய்து எழுதி கொண்டு இருக்கிறேன். இன்னும் எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது. இரண்டு மூன்று மாதங்கள் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு நேரம் இருப்பதால் என்னுடைய முழு சிந்தனையும் திரைக்கதையை எழுதுவதில் தான் இருக்கிறது. அதனால் தான் வெளி இடங்களுக்கு எங்கும் வருவதில்லை. கடந்த ஒன்றரை மாத காலமாக மொபைல் போன் கூட பயன்படுத்துவதில்லை. நிறைய பேர் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் கனெட்டாக முடியாததற்கு அது தான் காரணம்” என்றார். 
    அதே போல லியோ பார்ட் 2 அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளிக்கையில் இதற்கு வேறு ஒரு நாள் பதில் அளிக்கிறேன். தற்போது இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேட்கவும் என கூறியிருந்தார். 
     

    ‘தலைவர் 171’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் சொல்லி இருக்கும் பதிலை பார்க்கையில் அது இன்னும் கொஞ்ச காலம் எடுத்து கொள்ளும் என தோன்றுகிறது. இப்படத்தின் திரைக்கதை முழுவதும் ரெடியான பிறகே படத்தின் பணிகள் விறுவிறுப்படையும் என பேசப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த்திற்கான படம் என்பதால் அதன் திரைக்கதை அவருக்கு ஏற்றார் போல் மாஸாக இருக்க வேண்டும் என்பதால் தான் இந்த கால அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்கின்றன நெருங்கிய சினிமா வட்டாரங்கள். 
     

    மேலும் காண

    Source link

  • farmers protest continues in delhi fourth round talk with central govt will happen today

    farmers protest continues in delhi fourth round talk with central govt will happen today


    Farmers Protest: தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு, தற்போது அரசாங்கத்தின் மீது உள்ளது என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    விவசாயிகள் போராட்டம்:
    குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது போன்ற, ஏற்கனவே வழங்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் பேரணியாக செல்லும் நோக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு குழுக்களாக டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். ஆனால், டெல்லி எல்லைப்பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகள் உள்ளே வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலால் விவசாயிகள் குவிந்துள்ள பகுதிகளில் பதற்றமுடனே காணப்படுகிறது.
    நான்காம் கட்ட பேச்சுவார்த்தை:
    விவசாய அமைப்புகள் மற்றும் மத்திய அரசு இடையே ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், இதுவரை சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஏற்கனவே வழங்கிய உத்திரவாதங்களை மட்டுமே நிறைவேற்றக் கோருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், விவசாயிகள் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், விவசாயத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான, நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
    விவசாயிகள் கோரிக்கை:
    பஞ்சாப் – ஹரியானா எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் பாந்தர், “மத்திய அரசு விரும்பினால், ஒரே இரவில் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வரலாம். அரசாங்கம் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண விரும்பினால், குறைந்தபட்ச ஆதார விலை (MSP) தொடர்பாக ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். MSP இன் சட்டப்பூர்வ உத்தரவாதம் இன்னும் போராட்ட விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. MSP மற்றும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிக்கு உத்தரவாதம் அளிக்கும் அவசரச் சட்டத்தை பரிசீலிப்பதன் மூலம் பிரதமர் மோடி தீர்க்கமான தலைமையை வெளிப்படுத்துவார்.  விவசாயிகள் இயக்கங்கள் தங்களது தீர்மானத்தில் உறுதியாக உள்ளன.  அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் நேர்மறையான முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.  அதே நேரத்தில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என உறுதிபட பேசினார்.
    இணையசேவை துண்டிப்பு:
    போராட்டத்தை அடுத்து, ஹரியானா மாநில அரசு அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய ஏழு மாவட்டங்களில் மொபைல் இணையம் மற்றும் மொத்த எஸ்எம்எஸ் சேவைகளுக்கான தடையை பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனிடையே, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் முகாமிட்டுள்ளனர்.  ஹரியானாவைச் சேர்ந்த குர்னாம் சிங் சாருனி தலைமையிலான பிரிவினர் குருக்ஷேத்ரா, யமுனாநகர் மற்றும் சிர்சாவில் பல இடங்களில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தினர். 150க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

    மேலும் காண

    Source link

  • Vijay Milton shares an interesting story on how he chose ATM character for goli soda movie

    Vijay Milton shares an interesting story on how he chose ATM character for goli soda movie


     
    2014ம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘கோலி சோடா’. ‘பசங்க’ படத்தில் சிறுவர்களாக நடித்த நான்கு பசங்களும் கதாநாயகர்களாக இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்ததற்கு முக்கியமான ஒரு காரணமாக அமைந்தது சீதா கதாபாத்திரத்தில் நடித்த அந்த பெண். அவரின் நடிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
     

    ஒல்லியான தோற்றம், சோடாபுட்டி கண்ணாடி என அவரின் தோற்றமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வேறு எந்த படத்திலும் அந்த பெண் அவ்வளவாக நடித்ததில்லை என்றாலும் இன்று வரை பேசப்படும் ஒரு கதாபாத்திரம் சீதா. அப்படத்தில் அவர் ATM என்று தான் அழைக்கப்படுவார். 
    கோலி சோடா படத்தின் கதாபாத்திர தேர்வும் அத்தனை அம்சமாக அமைந்ததே அந்த படம் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அந்த வகையில் ATM கேரக்டர் தேர்வு பற்றி விஜய் மில்டன் சமீபத்தில் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றில் பேசி இருந்தார். 
     ATM கண்டுபிடிச்ச கதையே ஒரு பெரிய கதை தான். அவளுடைய கதாபாத்திரம் தான் அந்த கதையையே தூக்கி நிறுத்த போகும் ஒரு கதாபாத்திரம். அனைவரையும் கன்னெட் பண்ணும் ஒரு கேரக்டர் என்பதால் அந்த பொண்ணை ஃபர்ஸ்ட் பார்த்ததும் பிடிக்கக்கூடாது, பார்க்க பார்க்க தான் பிடிக்கணும் என தனுஷ் பட டயலாக் சொல்லி இந்த டயலாக் ஏத்த மாதிரி ஒரு பொண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என வலை வீசி தேடினோம். 
     

    நீங்க போய் ஒவ்வொரு எக்ஸ்போர்ட் வெளியே நில்லுங்கனு அனுப்பி விட்டுருவாங்க. மாலை 5 மணிக்கு எக்ஸ்போர்ட் விடும் போது அங்க வாசலே நில்லுங்க. இந்த டிஸ்க்ரிப்ஷனுக்கு பொருந்துகிற மாதிரி ஏதாவது ஒரு பொண்ணை பார்த்தா நம்மளோட ஆபீஸ் நம்பரை கொடுத்து இன்ட்ரெஸ்ட் இருந்தா போன் பண்ண சொல்லிட்டு வாங்க அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாங்க. பசங்களோட வேலையே டெய்லி சாயங்காலம் எக்ஸ்போர்ட் வாசல்ல நிக்குறது தான்.
    அப்படி ஒரு நாள் நான் மார்க்கெட்ல நின்னுகிட்டு இருக்கும் போது அந்த பொண்ணு ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக்கிட்டு விறுவிறுன்னு நடந்து போயிட்டு இருந்துது. இந்த பொண்ணு கரெக்டா இருப்பான்னு தோணுச்சு.  என்னோட புல்லெட் எடுத்துக்கிட்டு பின்னாடியே போனேன். எப்படி பேச்சை ஆரம்பிக்குறது  என எனக்கு தெரியல. அப்புறமா ஒரு இடத்துல போய் மடக்கி நிறுத்திட்டேன். அந்த பொண்ணுகிட்ட போய் என்னோட பேர் மில்டன். இது என்னோட நம்பர். எனக்கு போன் பண்றியா? என நான்  சொன்னதும் என்னை அப்படியே பார்த்துட்டு ‘தூ’ ன்னு துப்பிட்டு போயிட்டா” என்று தெரிவித்தார். 

    மேலும் காண

    Source link

  • petrol and diesel price chennai on February 18th 2024 know full details

    petrol and diesel price chennai on February 18th 2024 know full details


    Petrol Diesel Price Today, February 18: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 638வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

    மேலும் காண

    Source link

  • IND VS ENG 3RD TEST Rohit Sharma Comes Up With Another Trolls As Jadeja Bowls 2 NO-BALLS

    IND VS ENG 3RD TEST Rohit Sharma Comes Up With Another Trolls As Jadeja Bowls 2 NO-BALLS

    Rohit Sharma – Jadeja: இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து இரண்டு நோ பால் வீசிய ஜடேஜாவை இந்திய கேப்டன் ரோகித் சர்மா நக்கலாக விமர்சித்துள்ளார்.
    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
    இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்கள் குவித்துள்ளது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 207/2 என்ற ஸ்கோருடன் 238 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    பென் டக்கெட் ஆட்டமிழக்காமல் 133* ரன்கள் எடுத்து களத்தில் இருக்க,  ஒல்லி போப் 39 ரன்கள் குவித்து முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஆர். அஷ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 
    ஜடேஜா பந்துவீச்சு:
    பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக உள்ள இந்த மைதானத்தில், இங்கிலாந்தை வீழ்த்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. ஆனால், நேற்று இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜடேஜாவின் செயல்பாடு திருப்திகரமாக அமையவில்லை. நாள் முடிவில் 4 ஓவர்களை வீசிய அவர், 33 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். 31வது ஓவரில் ஜோ ரூட்டிற்கு எதிராக பந்து வீசும்போது ஜடேஜா இரண்டு நோ-பால்களை வீசினார். வழக்கமாக பெரிதும் நோ பால்களை வீசாத ஜடேஜா, அடுத்தடுத்து இரண்டு நோ பால்களை வீசியது பலரையும் ஆச்சரியப்பட செய்தது.

    Rohit Sharma represents whole of Dinda Academy when he says “Jaddu samajh ye T20 hai, idhar No balls allowed nahi” 🔥 pic.twitter.com/cQ4s3aJOGm
    — Dinda Academy (@academy_dinda) February 16, 2024

    ஜடேஜாவை விமர்சித்த ரோகித் சர்மா:
    இதனிடயே, ஜடேஜா அடுத்தடுத்து நோ பால் வீசியது தொடர்பாக ரோகித் சர்மா சொன்ன கருத்து, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு நோ பால்களை வீசியதும் ”Yaar, ye Jadeja IPL mein to itne No Balls nahi dalta. T20 samajh ke bowling kar, Jaddu” என கூறியுள்ளார். அதன்படி,  ”மேன், ஜடேஜா ஐபிஎல்லில் இவ்வளவு நோ-பால்களை வீசுவதில்லை. இது ஒரு டி20 ஆட்டம் என்று நினைத்து பந்து வீசு. இங்கு நோ பால்கள் எல்லாம் அனுமத்ப்பதில்லை” என ரோகித் சர்மா வலியுறுத்தியுள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    Source link

  • விமர்சனங்களை ஏற்ற விஜய்..! கட்சி பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என திருத்தி அறிவிப்பு

    விமர்சனங்களை ஏற்ற விஜய்..! கட்சி பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என திருத்தி அறிவிப்பு


    vijay TVK: நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை, தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை விஜய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

    #தமிழகவெற்றிக்கழகம் new cover pic @tvkvijayhq handle renamed #TVKVijay pic.twitter.com/XUQFhnKDAj
    — TVKPalacodeConstituency (Dharmapuri) (@TVMIPalacode) February 18, 2024

     
    கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். இதன் மூலம், ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் விமர்சனங்களை ஏற்கும் பண்பை விஜய் நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அற்விப்புகள் வெளியாகி இருந்தாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பணிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ரசிகர்கள் ஏமாற்றம்:
    விஜயின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கதான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் விஜயின் 69 ஆவது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. 
    சினிமாவில் 40 ஆண்டுகள்
    நடிகர் விஜயகாந்தின் குழந்தை பருவத்து கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார்.  இப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. வெற்றி திரைப்படத்துடன் சேர்த்து நடிகர் விஜய்யும் அவரின் திரை பயணத்தை தொடங்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 1992ம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் மூலம் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகபடுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். அதன் தொடர்ச்சியாக செந்தூரபாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்து கமர்சியல் படங்களாக நடித்து இளைய தளபதி என்ற அடைமொழியுடன் கொண்டாடப்பட்டார். ரொமாண்டிக் நடிகராக இருந்து வந்த விஜய்  அடுத்தடுத்தப் படங்களின் மூலம் ஆக்‌ஷன் ஹிரோவாக மக்கள் மனதில் பதிந்தார்.

    மேலும் காண

    Source link

  • அடுத்த விக்கெட்டை இழக்கும் காங்கிரஸ்.. கமலாலயம் பக்கம் செல்லும் கமல்நாத்?

    அடுத்த விக்கெட்டை இழக்கும் காங்கிரஸ்.. கமலாலயம் பக்கம் செல்லும் கமல்நாத்?


    <p>எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு கட்சி தாவுவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.</p>
    <h2><strong>அடுத்த விக்கெட்டை இழக்கிறதா காங்கிரஸ்?</strong></h2>
    <p>சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.</p>
    <p>டெல்லிக்கு இன்று செல்ல உள்ள கமல்நாத், பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் பலர், இந்த வாரம் பாஜகவில் இணைந்தனர். கடந்த 12ஆம் தேதி, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ் அஹிர்வார் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விதிஷா ராகேஷ் கட்டாரே பாஜகவில் இணைந்தனர்.</p>
    <p>அதன் தொடர்ச்சியாக, கமல்நாத்தும் பாஜகவுக்கு தாவப்போவதாக வெளியாகியுள்ள செய்தி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை பலவீனம் ஆக்க பாஜக பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.</p>
    <h2>கமலாலயத்தில் ஒதுங்கும் கமல்நாத்:</h2>
    <p>மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜகவே ஆட்சி நடத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும், 15 மாதங்களில் அது கவிழ்ந்துவிட்டது.</p>
    <p>கடந்த நவம்பர் மாதம், கமல்நாத் தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் தூக்கப்பட்டார். இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் அவர் சீட் கேட்டதாகவும் ஆனால் கட்சி தலைமை அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.</p>
    <p>இச்சூழலில், சமூக வலைதளங்களில் சுயவிவர குறிப்பில் இருந்து காங்கிரஸை நீக்கியுள்ளார் கமல்நாத்தின் மகன் நகுல்நாத். பாஜகவில் கமல்நாத் இணைவாரா என மத்திய பிரதேச பாஜக தலைவர் வி.டி.சர்மாவிடம் நேற்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "நாங்கள் எங்கள் கதவுகளைத் திறந்து வைத்துள்ளோம். ஏனென்றால், காங்கிரஸ் ராமரைப் புறக்கணிக்கிறது.&nbsp;</p>
    <p>இந்தியாவின் இதயத்தில் ராமர் இருக்கிறார் என்று நினைக்கும் மக்கள் காங்கிரஸில் உள்ளனர். காங்கிரஸ் அவரை அவமானப்படுத்தியதால், அதன் காரணமாக வேதனையடைந்தவர்கள், வருத்தப்பட்டவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்" என்றார்.</p>

    Source link

  • Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்

    Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்


    <p>Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்</p>

    Source link

  • Mohan G: ஓராண்டை நிறைவு செய்த பகாசூரன்; நெகிழ்ச்சியோடு இயக்குநர் மோகன்.ஜி போட்ட பதிவு

    Mohan G: ஓராண்டை நிறைவு செய்த பகாசூரன்; நெகிழ்ச்சியோடு இயக்குநர் மோகன்.ஜி போட்ட பதிவு


    <p>தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய இயக்குநர் எனப் பெயர் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் பகாசூரன். இந்தப் படம் வெளியானபோது பல்வேறு தரப்பில் இருந்து மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகின்றது.&nbsp;</p>
    <p><span style="font-weight: 400;">குறிப்பாக, டிஜிட்டல் யுகத்தில் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், பகாசூரன் படத்திலோ நம்ம ஊரில் பழைய பெருசுகள் உளருவதைப் போல &ldquo;எல்லாப் பிரச்சனையும் இந்த போனாலதான் வருது&rdquo; என்று கூறும் கருத்தை சீரியசாக எடுத்துக்கொண்டதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.</span></p>
    <p><span style="font-weight: 400;">பெண்கள், வீடியோ காலில் தங்களது காதலரிடம் அந்தரங்கமாக பேசுவதையும், காதலருடன் முத்தத்தை பரிமாறிக்கொள்வதையும் கூட, &ldquo;தப்பு தப்பு தல மேல கொட்டு&rdquo; என்பதைப் போல படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</span></p>
    <p><iframe style="border: none; overflow: hidden;" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmohan.krish%2Fposts%2Fpfbid02h3SYW2gPYtjg1BHQdUR5ELnSq8S2b1F7GFLGN7A9rJ2AtB4JCJwzrKJLQx1TWZPpl&amp;show_text=true&amp;width=500" width="500" height="627" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
    <p><span style="font-weight: 400;">&ldquo;எல்லா காட்சியிலும், பெண்கள் நம்பி ஒருவனிடம் தங்களின் உடலைக் காட்டுவதையும், முத்தம் கொடுப்பதையும் குறை சொல்கிறார்களே அன்றி, அவர்கள் குறித்து வீடியோ வெளியிடும் நபர்களை ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனால் வரும் பிரச்சனைகளை கூறிவிட்டு அதை கையாள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசியிருந்தால் இயக்குனரைப் பாராட்டலாம். ஆனால், வெகுஜன மக்களின், &ldquo;எல்லாமே மொபைல் போனாலதான்&rdquo; என்ற கருத்தையே இந்த படத்திலும் திணிக்க முயற்சித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. </span><span style="font-weight: 400;">பெண்களை பாலியல் தொழிலில் எப்படி சிக்கவைக்கின்றனர் என்று கூறிய விதத்தை மட்டும் வேண்டுமானால் பாராட்டலாம்.&nbsp;</span><span style="font-weight: 400;">மொத்தத்தில் செல்வராகவனுக்காக வேண்டுமானால் பகாசூரனைப் பார்க்கலாம், மற்றபடி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை&rdquo; என படம் வெளியான கடந்த ஆண்டு தனது ரிவ்யூவில் ஏபிபி நாடு கூறி இருந்தது.&nbsp;</span></p>
    <p><span style="font-weight: 400;">இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகும் நிலையில், படத்தின் இயக்குநர் மோகன் ஜி படத்தில் நடித்த இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜன் மற்றும் படத்திற்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஆகியோருக்கும் படத்திற்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.&nbsp;</span></p>

    Source link

  • Zee telecast in Tamil Miss Shetty Mr Boli Shetty

    Zee telecast in Tamil Miss Shetty Mr Boli Shetty


    தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் மட்டுமின்றி சண்டே, பண்டிகை நாட்கள் போன தினங்களில் புதுப்புது திரைப்படங்களையும் ஒளிபரப்பி மக்களை மகிழ்வித்து வருகிறது.
    அந்த வகையில் இந்த வாரம் அனுஷ்கா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஆமாம் வரும் ஞாயிறு அதாவது பிப்ரவரி 18-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
    மகேஷ் பாபு பச்சிக்கொல்லா இயக்த்தில் வெளியான இந்த படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் போலி ஷெட்டி ஜெயசுதா, நாசர் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். சமையல் கலைஞரான அன்விதா (அனுஷ்கா ), தனது அம்மாவுடன் (ஜெயசுதா) லண்டனில் வசித்து வருகிறார். அம்மாவுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் திருமணத்தை வெறுக்கிறார். தாயின் மறைவுக்குப் பின் வாழ்வின் தனிமையை விரட்டத் திருமணம் செய்துகொள்ளாமல் செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள ஆசை வருகிறது, அவருக்கு. அதற்கான டோனரை தேடுகிறார். அவர் வைக்கும் தேர்வில், அவரை விட வயது குறைவான, ஸ்டாண்ட் அப் காமெடியன் சித்து (நவீன்) கிடைக்கிறார். ஒரு கட்டத்தில் அன்விதாவை காதலிப்பதாகச் சொல்கிறார், சித்து. ஏற்க மறுக்கிறார் அன்விதா. நவீனுக்கு உயிரணு தானத்துக்காகவே அவர் தன்னிடம் பழகுகிறார் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடந்தது என்ன என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.
    மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி படத்தை ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஜீ  தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
    மேலும் படிக்க 
    Nawazuddin Siddiqui: ரஜினி படத்தில் வசனம் புரியாம நடிச்சேன்: சம்பளம் வாங்கியதால் குற்றவுணர்ச்சி: நவாசுதீன் சித்திக் கவலை!
    Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

    மேலும் காண

    Source link

  • Tweet From BCCI Vice-president Rajeev Shukla Rajkot Test To Chennai To Be With Ashwin Mother

    Tweet From BCCI Vice-president Rajeev Shukla Rajkot Test To Chennai To Be With Ashwin Mother

    இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் வீரர்களில் தற்போது விவாதிக்கப்படும் வீரர்களில் ஒருவராக அஸ்வின் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின்,  டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினைக் கைப்பற்றினார். இந்த சாதனையை இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில்  இந்த சாதனையை அஸ்வின் படைத்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 9வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் தன் வசப்படுத்தியிருந்தார். 
    அஸ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பிரதமர் வரை இந்தியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது மட்டும் இல்லாமல் அஸ்வினுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அஸ்வின் இந்த சாதனையை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக அறிவித்தார். 
    அஸ்வினைச் சுற்றி அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில், ராஜ்கோட்டில் இருந்த அஸ்வினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்தாக கூறப்படுகின்றது. அந்த அழைப்பில், அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அணி நிர்வாகத்திடம் இந்த தகவலைச் சொன்ன அஸ்வின் உடனே ராஜ்கோட்டில் இருந்து வெளியேறினார். இவர் தற்போது தனது தாயின் அருகில் இருந்து அவருக்கு மேற்கொள்ளும் சிகிச்சைகள் குறித்தும், அவரை குணமடையச் செய்ய பார்த்துக்கொண்டு வருகின்றார் என கூறப்படுகின்றது. 

    Wishing speedy recovery of mother of @ashwinravi99 . He has to rush and leave Rajkot test to Chennai to be with his mother . @BCCI
    — Rajeev Shukla (@ShuklaRajiv) February 16, 2024

    இப்படியான நிலையில், அஸ்வினுக்கு  துணை நிற்கும் விதமாக பிசிசிஐ துணைச் செயலாளர் ராஜீவ் சுக்லா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “ அஸ்வினின் அம்மா விரைவில் குணமடைய வாழ்த்துகள். ராஜ் கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ள அஸ்வின் தனது தயாருடன் இருந்து அவரது தாயாரின் உடல் நலனிக் அக்கறை செலுத்த வேண்டும் என நினைக்கின்றோம்” எனக் கூறியது மட்டும் இல்லாமல் பிசிசிஐ பக்கத்தை டேக் செய்துள்ளார். இதன் மூலம் பிசிசிஐ அஸ்வினுக்கு பக்கபலமாக இருக்கும் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளதாக இணைய வாசிகள் பலர் தெரிவித்து வருகின்றனர். 
    அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பது ராஜீவ் சுக்லாவின் எக்ஸ் பக்க பதிவின் மூலம் தெளிவாகின்றது. இதனால் பலரும் அஸ்வினின் தாயார் விரைவில் குணமடைவார் என அஸ்வினுக்கு சமூக வலைதளம் மூலமாக ஊக்கம் அளித்து வருகின்றனர். 

    Source link

  • SK Birthday Celebrations : SK23 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..புகைப்படங்கள் இதோ!

    SK Birthday Celebrations : SK23 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..புகைப்படங்கள் இதோ!


    SK Birthday Celebrations : SK23 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..புகைப்படங்கள் இதோ!

    Source link

  • ஒவ்வொரு தொகுதியிலும் தாமரை.. 370 டார்கெட்.. தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஸ்கெட்ச் போட்ட பிரதமர் மோடி!

    ஒவ்வொரு தொகுதியிலும் தாமரை.. 370 டார்கெட்.. தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஸ்கெட்ச் போட்ட பிரதமர் மோடி!


    <p>கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.</p>
    <h2><strong>பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம்:</strong></h2>
    <p>இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. அதில், பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 370 மக்களவை தொகுதிகளை கட்சித் தொண்டர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்" என்றார்.</p>
    <p>கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும் இப்போதே தனது வாக்குச் சாவடியில் கவனம் செலுத்தி, பாஜக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை வாக்காளர்களுக்கு எடுத்துச் சொல்லி, கடந்த முறை தனது கட்சிக்குக் கிடைத்த தொகுதிகளை விட 370 தொகுதிகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.</p>
    <p>கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை செய்தியாளர்களிடம் விளக்கி பேசிய பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, "கட்சியின் மக்களவை வேட்பாளர்களின் பெயர்களை மோடி அறிவித்திருக்கிறார். தாமரையே கட்சியின் வேட்பாளர். கட்சி சின்னத்தை மட்டுமே கட்சிப் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் &nbsp;பார்க்க வேண்டும். வேறு எதையும் பார்க்க கூடாது.</p>
    <h2><strong>ஸ்கெட்ச் போட்டு தந்த பிரதமர் மோடி:</strong></h2>
    <p>தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தேவையற்ற, உணர்ச்சிகரமான பிரச்னைகளை எழுப்புவார்கள். ஆனால், வளர்ச்சி, ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் உலகளவில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் உயர்வான இடம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு கட்சி தொண்டர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.</p>
    <p>கட்சியால் பலவீனமான இடங்களாக கருதப்படும் தொகுதிகள் அதாவது கட்சி இதற்கு முன் வெற்றி பெறாத இடங்களிலிருந்து தங்களால் இயன்ற இடங்களை வெல்ல பாஜக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்" என்றார்.</p>
    <p>பாஜகவின் முன்னோடியாக கருதப்படும் ஜனசங்க கட்சியை தொடங்கியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அரசியலமைப்பு பிரிவு 370இன் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடுமையாக எதிர்த்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக, அரசியலமைப்பு பிரிவு 370ஐ நீக்கியது குறிப்பிடத்தக்கது.</p>
    <p><strong>இதையும் படிக்க: <a title="Election 2024: பாசிசம் வீழும்! I.N.D.I.A வெல்லும்! அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/dmk-officially-started-parliamentary-election-campaign-mkstalin-168089" target="_blank" rel="dofollow noopener">Election 2024: பாசிசம் வீழும்! I.N.D.I.A வெல்லும்! அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!</a></strong></p>

    Source link

  • idhayam serial zee tamil episode february 17th update | Idhayam Serial: வார்னிங் கொடுத்த ஆதி, பயந்து நடுங்கும் தமிழ்

    idhayam serial zee tamil episode february 17th update | Idhayam Serial: வார்னிங் கொடுத்த ஆதி, பயந்து நடுங்கும் தமிழ்


    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 
    இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஆதி காரில் வந்து கொண்டிருக்கும்போது வாசுவுக்கு ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் கார் ஸ்கிட்டாகி ஆப் ஆகி விட, டீ கடைக்காரர் “பார்த்து தம்பி, இந்த இடத்துல தான் ஒரு பையனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சி” என்று சொன்னதும் ஆதி அந்த இடத்திற்கு செல்லும்போது அவனது இதயத்திற்குள் ஏதோ ஒரு மாற்றம் உருவாகிறது.
    பிறகு டீக்கடையில் உட்கார்ந்திருக்கும் துரையைப் பார்த்து “அண்ணன் பொண்டாட்டி உனக்கு அம்மா மாதிரி, அவளைப் போய் கல்யாணம் பணிக்க பார்க்குற? தமிழுக்கும் பாரதிக்கும் ஏதாவது ஒன்னுனா நான் வருவேன் டா” என்று வார்னிங் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறான். 
    ஆதி வாசு போலவே நடந்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடையும் துரை, பதறியடித்து ஓடி வந்து மணியிடம் இந்த விஷயத்தை சொல்ல, “எவன்டா அவன், அவனால் என்ன பண்ண முடியும். பாத்துக்கலாம் விடு!” என்று ஆறுதல் சொல்கிறான்.
    அதைத் தொடர்ந்து வீட்டில் கல்யாண வேலைகள் நடக்க உறவினர்கள் எல்லோரும் வரத் தொடங்குகின்றனர். லதாவும் வீட்டுக்கு வந்து பாரதியைப் பார்த்து “ஏண்டி இப்படி பண்ண?” என்று திட்டுகிறார். தமிழ் துரை கல்லைத் தூக்கி ஒரு பெண் மீது போடப்போன விஷயத்தை பார்த்ததில் பயந்து அதை அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். 
    ஒரு கட்டத்தில் பாரதியிடம் விஷத்தைத் தொடங்க, எதிரே துரை வந்து நிற்பது பார்த்து பயந்து அமைதியாகி விடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

    மேலும் காண

    Source link

  • Ram Lalla is a five year old child Ayodhya Ram Mandir to remain shut for an hour daily | Ayodhya Ram Temple: அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ரெஸ்ட்! அறக்கட்டளை எடுத்த திடீர் முடிவு

    Ram Lalla is a five year old child Ayodhya Ram Mandir to remain shut for an hour daily | Ayodhya Ram Temple: அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ரெஸ்ட்! அறக்கட்டளை எடுத்த திடீர் முடிவு


    Ayodhya Ram Temple: அயோத்தி ராமர்  கோயில் இன்று முதல்  தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    அயோத்தி ராமர் கோயில்:
    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.
    பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். அதன்பின், 23-ம் தேதி, அனைவரின் பார்வைக்கும் கோவில் திறக்கப்பட்டது.
    சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
    “ஒரு மணி நேரம் கோயில் நடை மூடப்படும்”
    இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால், அயோத்தி திணறி வருகிறது. அதே நேரத்தில், கோடிக்கணக்கில் வருவாயும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் நடை ஒரு மணி நேரம் மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ”அயோத்தி ராமர் கோயிலில் உள்ள ராம் லல்லா 5 வயது குழந்தையாக இருக்கிறார். 5 வயது ராம் லல்லாவால் தொடர்ந்து 18 மணி நேரம் கண்விழித்து இருக்க முடியாது. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது.
    அதனால், சிறிது நேரம் அவர் ஓய்வு  அளிக்கும் வகையில் கோயில் நடை ஒரு மணி நேரம் மூடப்பட்டிருக்கும். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராம் லல்லா ஓய்வு எடுப்பார். அந்த நேரத்தில் கோயில் நடை மூடப்படும்” என்று  தெரிவித்துள்ளார்.  அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் தரிசனம் அதிகரித்ததால், தரிசன நேரத்தை கோயில் நிர்வாகம் நீடித்துள்ளது.
    காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 4 மணி முதல் பக்தர்கள்  தரிசனக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
     

    மேலும் காண

    Source link

  • Sun tv serial actress Nivisha hospitalized due to some health issues fans are making prayers for her soon recovery

    Sun tv serial actress Nivisha hospitalized due to some health issues fans are making prayers for her soon recovery


    சன் டிவியில் ஒளிபரப்பான மெகா சீரியல்களில் மிகவும் பிரபலமான தொடரான ‘தெய்வ மகள்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அந்த சீரியலில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே, யாரடி நீ மோகினி உள்ளிட்ட ஏராளமான தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 
     

    செகண்ட் ஹீரோயின் :
    தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மலர்’ சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்தார். இரண்டாவது ஹீரோயினாக இருந்த போதிலும் நிவிஷாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகுவதாக அவரே தெரிவித்து இருந்தார். இதனால் அவரின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். 
     
    விலக என்ன காரணம் ?
    நிவிஷாவிற்கு வேறு ஒரு சீரியலில் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் தான் மலர் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும், அவருக்கு இந்த சீரியலில் சரியான அங்கீகாரம் கிடைக்காததால் தான் விலகினார் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன. 
     

    மருத்துவமனையில் அனுமதி :
    சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிவிஷாவுக்கு பேன் ஃபாலோவர்ஸ் அதிகம். அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், மெல்ல மெல்ல குணமாகி வருவதாகவும் விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார். இதை பார்த்து  பதறிப்போன நிவிஷா ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவருக்காக பிராத்தனை செய்து வருகிறார்கள். 
    இருப்பினும் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறவில்லை. மலர் சீரியலில் முக்கியத்துவம் கொடுக்காதது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். விரைவில் நிவிஷாவை வேறு சில சீரியல்களின் மூலம் சந்திக்கலாம் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் அவரின் சின்னத்திரை ரசிகர்கள். 

    மேலும் காண

    Source link

  • Yashasvi Jaiswal Century: நான் அடிச்சா அதிரடி! மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல்

    Yashasvi Jaiswal Century: நான் அடிச்சா அதிரடி! மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல்


    <p>இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளார். இவர் 122 பந்துகளை எதிர்கொண்டு 9வது பவுண்டரி விளாசும் போது சதத்தை எட்டினார். 122 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இவர் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு யெஷெஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகின்றார். முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் ஒரு அரைசதத்துடன் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, 95 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு இன்னிங்ஸிலும் அதாவது இரட்டைச் சதத்தினை சேர்த்து, 226 ரன்களும் சேர்த்து அணிக்கு பக்கபலமாக விளங்கினார்.&nbsp;</p>
    <p>மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்களும் சேர்த்த நிலையில் ரிடையர் – ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.&nbsp; இதுவரை இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 425 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை தற்போது தன் வசம் வைத்துள்ளார் ஜெய்ஸ்வால்.&nbsp;</p>
    <h2><strong>ரிடையர் – ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால்</strong></h2>
    <p>சதம் விளாசிய பின்னர் ஜெய்ஸ்வாலுக்கு ஏற்பட்ட முதுகு வலிப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு களத்திலேயே முதலில் முதல் உதவி செய்யப்பட்டது. அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் களத்தில் இருந்த ஜெய்ஸ்வாலால் மேற்கொண்டு வலியைத் தாங்கிக் கொண்டு விளையாட முடியவில்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறினார். இவர் 133 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவருக்கு அணி வீரர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி வரவேற்றனர்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் செல்வப்பெருந்தகை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் செல்வப்பெருந்தகை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி


    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைமையின் இந்த முடிவு அதிரடியாக பார்க்கப்படுகின்றது. 

    செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், செல்வப்பெருந்தகை வகித்து வந்த  காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
     

    மேலும் காண

    Source link

  • Sita: சீதையுடன் அக்பரா? பொங்கி எழுந்த விஷ்வ இந்து பரிஷத்.. சிங்கத்தின் பெயரால் புது சர்ச்சை!

    Sita: சீதையுடன் அக்பரா? பொங்கி எழுந்த விஷ்வ இந்து பரிஷத்.. சிங்கத்தின் பெயரால் புது சர்ச்சை!


    <p>பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஞானவாபி, மதுரா போன்ற இடங்களில் அமைந்துள்ள மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என இந்துத்துவ சிந்தனையாளர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, இஸ்லாமிய பெயர்கள் கொண்ட இடங்களுக்கு இந்து பெயர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.</p>
    <h2><strong>புது சர்ச்யைை கிளப்பிய விஷ்வ இந்து பரிஷத்:</strong></h2>
    <p>சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இன்று புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.</p>
    <p>எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இன்றி, இரு சிங்கங்களையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்கும் வனத்துறையின் முடிவுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்ற ஜல்பைகுரி கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
    <p>அந்த மனுவில், "உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் ராமரின் மனைவியான சீதையை தெய்வமாக கருதி வழிப்பட்டு வருகின்றனர். அந்த பெயரை சிங்கத்திற்கு வைத்திருப்பதை அறிந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மன வேதனை அடைந்துள்ளது. இது, தெய்வ நிந்தனைக்கு இணையான செயலாகும். அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதலாகும்.</p>
    <h2><strong>சீதை சிங்கத்துடன் அக்பர் சிங்கம் வைத்திருக்க எதிர்ப்பு:</strong></h2>
    <p>சிங்கங்களுக்கு மாநில வனத்துறை பெயர் சூட்டியுள்ளது. மேலும், ‘அக்பர்’ சிங்கத்துடன் ‘சீதா’ சிங்கத்தை வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும். சிங்கத்தின் பெயரை "சீதா" என்பதிலிருந்து வேறு ஏதேனும் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்துடன் தொடர்பில்லாத பெயரைக் கொண்டு விலங்கின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஷ்வ இந்து பரிஷத் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p>
    <p>நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா முன்பு, இந்த மனு நேற்று பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, வரும் 20ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெறுகிறது.</p>
    <p>திரிபுராவில் உள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து வங்கத்தில் உள்ள சஃபாரி பூங்காவிற்கு இந்த சிங்கங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பூங்காவிற்கு கொண்டு வருவதற்கு முன்பே இந்த பெயர்தான் வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.</p>
    <p>பதினாறாம் நூற்றாண்டில் முகலாய சாம்ராஜ்ஜியத்தில் மூன்றாவது பேரரசராக இருந்தவர் அக்பர். அதே சமயம், இந்து மதத்தில் தெய்வமாகக் கருதப்படுபவர் சீதை. ராமரின் மனைவி. வால்மீகி ராமாயணத்தில் இவரை பற்றி குறிப்புகள் இருக்கின்றன.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • anna serial update february 17th 18th episodes update zee tamil written update | Anna Serial: முழுசாக புரிந்து கொண்ட பரணி.. அதிர்ச்சி கொடுத்த சண்முகம்

    anna serial update february 17th 18th episodes update zee tamil written update | Anna Serial: முழுசாக புரிந்து கொண்ட பரணி.. அதிர்ச்சி கொடுத்த சண்முகம்


    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி இசக்கி முத்து பாண்டி சாந்தி முகூர்த்தத்துக்காக நாள் குடிக்க வந்ததாக ஜோசியர் சொல்லிவிட, சண்முகம் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
    அதாவது முதலில் சண்முகம் வெட்டுக்கிளியுடன் பரணி அப்படி பண்ணி இருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல, வீட்டுக்குள்ளே “அண்ணி அப்படி பண்ணியிருக்கலாம், முத்துப்பாண்டி அண்ணியோட அண்ணன் என்பதால் செய்திருக்க வாய்ப்பிருக்கு” என்று சொல்ல, சண்முகம் பரணியை தப்பாக புரிந்து கொண்டு ஆவேசப்படுகிறான். 
    மறுபக்கம் சௌந்தர பாண்டி வீட்டில் இசக்கி விளக்கேற்றுவதற்காக விளக்கை எடுக்கச் செல்லும் பரணி முத்துப்பாண்டி ரூமில் டாக்டர் என்ற பெயரில் ஒரு பென்டிரைவ் இருப்பதைப் பார்த்து அதை எடுத்து ஓபன் செய்து பார்க்க, கார்த்திக் தப்பானவன் என்ற விஷயம் தெரிய வருகிறது. அதனால் தான் சண்முகம் கல்யாணத்தை நிறுத்தினான் என்ற உண்மையும் தெரிய வருகிறது. 
    சண்முகத்தை முழுசாக புரிந்துகொள்ளும் பரணி தனது தவறை உணர்ந்து “இனிமே அவனோடு நல்லபடியா வாழனும்” என முடிவெடுக்கிறாள். பிறகு பரணி சண்முகத்தை பார்க்க கிளம்பி வருகிறாள். மறுபக்கம் வீட்டுக்கு வந்த சண்முகம், “பரணி தான் எல்லாத்துக்கும் காரணம், “அவ இந்த வீட்ல இருந்துகிட்டு அவர் குடும்பத்துக்கும் அவ அண்ணனுக்கும் உதவி சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணி இருக்கா, இனிமே அவ இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது” என்று சண்முகம் சொல்ல வைகுண்டம் மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்கள் பரணி அப்படி செஞ்சிருக்க வாய்ப்பில்லை என சொல்கின்றனர். 
    ஆனாலும் எதையும் கேட்காத சண்முகம், அவர் துணிமணி எல்லாம் எடுத்து வெளியே போட சொல்கிறான். பிறகு சிவபாலனுடன் பரணி கோயிலில் “சண்முகத்தினை தப்பா புரிஞ்சுக்கிட்டேன், அவனை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருக்கேன்” என்று வேண்டுகிறாள். சிவபாலன் “இசக்கிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் முத்துப்பாண்டியை எதிர்த்து நான் நிற்பேன்” என்று கூறுகிறான். 
    பிறகு பரணி வீட்டுக்கு வர தடுத்து நிறுத்தும் சண்முகம் நீ முத்துப்பாண்டிக்காக உதவி செய்திருக்க சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறித்து இருக்க, என்று சொல்ல பரணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள். “இனிமே உனக்கு இந்த வீட்ல இடம் இல்லை” என்று சண்முகம் சொல்ல, பரணி அதை காதில் வாங்காமல் வீட்டுக்குள் வந்து ரூமுக்குள் அவனை நெருங்கி சென்று “இனிமே நல்ல வாழ்க்கை வாழலாம்” என்று மறைமுகமாக சொல்ல சண்முகம் விலகி செல்கிறான்.  இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

    மேலும் காண

    Source link

  • கட்சி சின்னத்தை மீட்க சீமான் கையில் எடுத்த ஆயுதம்.. என்ன செய்யப்போகிறார்?

    கட்சி சின்னத்தை மீட்க சீமான் கையில் எடுத்த ஆயுதம்.. என்ன செய்யப்போகிறார்?


    <p>அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னதை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன.</p>
    <h2><strong>நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவா?</strong></h2>
    <p>ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;</p>
    <p>இப்படியிருக்க, நாம் தமிழருக்கு கட்சி சின்னத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும்.</p>
    <p>இச்சூழலில், நாம் தமிழர் கட்சி கேட்டு பெற இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கர்நாடகா கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.&nbsp;</p>
    <h2><strong>சட்ட போராட்டத்தை தொடங்கும் சீமான்?</strong></h2>
    <p>கர்நாடகாவை சேர்ந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாம் தமிழர் கட்சியின் சின்னம், கர்நாடக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது கேள்வியாக எழுந்தது.</p>
    <p>இந்த நிலையில், தங்களின் கட்சி சின்னத்தை மீட்க நாம் தமிழர் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழரின் இந்த முயற்சி தோல்வி அடைந்தால், அடுத்ததாக சட்ட போராட்டத்தை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.</p>
    <p>கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 6.72 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இதுவரை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற்றதில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு, 1.1 ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் தற்போது கிட்டத்தட்ட 7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • d50 update actor Dhanush shares picture of the upcoming film

    d50 update actor Dhanush shares picture of the upcoming film


    தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் தனுஷ் (Dhanush), பவர் பாண்டி திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் D50.
    சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகைகள் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி,  நடிகர்கள் சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் இபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
    இந்தப் படத்துக்காக மொட்டை அடித்திருந்த நடிகர் தனுஷின் லுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் வைரலானது. இந்நிலையில் டி50 படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை தற்போது மீண்டும் தனுஷ் பகிர்ந்துள்ளார். மொட்டை அடித்தபடி, ரத்தம் வழிய கேங்ஸ்டர் லுக் போன்று தன் பின்பக்க புகைப்படம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், நாளை மறுநாள் அதாவது பிப்.19ஆம் தேதி டி50 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.
     

    #D50 FIRST LOOK ON 19th FEB @sunpictures pic.twitter.com/E2Bf3TuMU5
    — Dhanush (@dhanushkraja) February 17, 2024

    தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    மேலும் காண

    Source link

  • Virudhunagar Fire Accident: தமிழகத்தை உலுக்கிய பட்டாசு ஆலை வெடி விபத்து! பிரதமர் மோடி இரங்கல்

    Virudhunagar Fire Accident: தமிழகத்தை உலுக்கிய பட்டாசு ஆலை வெடி விபத்து! பிரதமர் மோடி இரங்கல்


    Virudhunagar Fire Accident: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
    பட்டாசு ஆலை வெடி விபத்து:
    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 
    இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது  பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள் தரைமட்டமாகின.
    இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர். 4 ஆண்கள், 6 பெண்கள் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழந்தவர்கள் ரமேஷ்  (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா ( 35), குருசாமி (50) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது.   

    மேலும் காண

    Source link

  • Sivakarthikeyan celebrated his birthday with SK23 crew pictures inside amaran poster released

    Sivakarthikeyan celebrated his birthday with SK23 crew pictures inside amaran poster released


    ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்.
    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்,  கடந்த பொங்கலன்று அயலான் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக அயலான் அமைந்தது. இதுவரை காமெடி, காதல், ஆக்‌ஷன், கமர்ஷியல் படங்கள் கொடுத்து ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன் சயின்ஸ் பிக்‌ஷன் கதை மூலம் புதிய அவதாரம் எடுத்தார். 
    அயலான் 2 பிராம்மாண்டமாக உருவாக்க திட்டம்
    அயலான் திரைப்படம் தெலுங்கில் வெளியான நிலையில் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றபோது,  நிகழ்ச்சியில் அயலான் வெற்றி பற்றியும், அயலான் படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் சிவகார்த்திகேயன் பேசி இருந்தார். அவர் பேசியதாவது, அயலான் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் வெற்றியும் தான் அயலான் 2 படம் உருவாக காரணம். அயலான் படத்தின் வெற்றி தான் அயலான் 2 படத்தை உருவாக்க நம்பிக்கை கொடுத்தது என்றும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகப்பிரமாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், சிவகார்த்திகேயன் கூறினார். 

    சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்த சிறிது காலத்திலேயே தனக்கென தனி இடத்தைப் பிடித்ததுடன் அதைத் தக்க வைத்தும் வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  இதன் பிறகு அவரின் நடிப்பில் வெளியான மனங்கொத்திப்பறவையும் சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுத்தது. 
    சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்
    எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்தார். இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக அவர் உருவெடுத்து உள்ளார் என்றால் அது மிகை ஆகாது. அயலான் வெற்றியைத் தொடர்ந்து எஸ்கே23 படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், தனது பிறந்தநாளை சிவகார்த்திகேயன் இன்று படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 
    அமரன் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு
    சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்திற்கு அமரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனம் அமரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. 
     

    Happy Birthday @Siva_Kartikeyan! Your special day is celebrated across borders and cherished in all our hearts. #Amaran #HappyBirthdaySK#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #RajkumarPeriasamyA Film by @Rajkumar_KP@ikamalhaasan #Mahendran @gvprakash @Sai_Pallavi92… pic.twitter.com/M5XlNJPFXY
    — Raaj Kamal Films International (@RKFI) February 17, 2024

    மேலும் படிக்க 
    Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

    மேலும் காண

    Source link

  • நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை!

    நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை!


    <p>அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓசூரில் தமிழக – கர்நாடகா – ஆந்திரா ஆகிய மூன்று மாநில எல்லைப்பகுதியில் போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.&nbsp;</p>
    <h2><strong>பரபரக்கும் தேர்தல் களம்:</strong></h2>
    <p>கர்நாடகா ஆந்திரா ஆகிய இருமாநில எல்லையாக கொண்ட சிறப்பை கொண்டது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் புறநகர், கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், ராம் குப்பம் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய அண்டை மாநில &nbsp;மாவட்டங்களாக உள்ளது.</p>
    <p>கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தான் அண்டை மாநிலங்களுக்கு சென்று வர வேண்டும் என்கிற நிலையில், விரைவில் &nbsp;நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி ஒசூர் தனியார் ஓட்டலில் சேலம் சரக டிஐஜி உமா அவர்களின் தலைமையில் தமிழக – ஆந்திரா – &nbsp;கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லை ஒருங்கிணைப்பு போலிசாரின் காவல் உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.</p>
    <p>கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணகிரி மாவட்ட &nbsp;எஸ்பி தங்கதுரை, "நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா மாநிலங்களின் எல்லையோர போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.</p>
    <h2><strong>போலிஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை:</strong></h2>
    <p>கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மது, பரிசு பொருட்கள் கடத்தல் பணம் கொண்டு செல்வதை தடுப்பது. குற்ற சம்பவங்கள், சதி திட்டங்களை கூட்டாக தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது" என்றார்.</p>
    <p>அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் கணிசமான தொகுதிகள் உள்ளன.</p>
    <p>கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளும் கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளும் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளே ஆட்சியில் உள்ளன. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது.</p>
    <p>தென் மாநிலங்களில் பலவீனமாக இருக்கும் பாஜக, வரும் தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.&nbsp;</p>
    <p><strong>இதையும் படிக்க: <a title="Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை – அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு அரசு" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-has-banned-the-sale-of-cotton-candy-in-tamil-nadu-from-today-168007" target="_blank" rel="noopener">Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை – அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு அரசு</a></strong></p>

    Source link

  • IND VS ENG: கையில் கருப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன? பிசிசிஐ சொன்ன விளக்கம்

    IND VS ENG: கையில் கருப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன? பிசிசிஐ சொன்ன விளக்கம்


    <p>இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி தற்போது மூன்றாவது போட்டியில் விளையாடி வருகின்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் போராடி வருகின்றது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு நிற பட்டை அணிந்து&nbsp; விளையாடி வருகின்றனர்.&nbsp;</p>
    <p>இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள சௌராஸ்ட்ரா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 95. இந்தியாவில் மிக அதிக வயது நிரம்பிய முன்னாள் கிரிக்கெட் வீரராக தத்தாஜிராவ் கெய்க்வாட் அறியப்பட்ட நிலையில் இவர் காலமானது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர் இந்திய அணிக்காக 9 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/373027e9bbdef62de1a8beeff34b6bf51708164641989102_original.jpg" width="586" height="386" /></p>
    <p>மறைந்த தத்தாஜிராவ் கெய்க்வாட்-க்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூன்றாவது நாளான இன்று அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி தங்களது கரங்களில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாடினர். குறிப்பாக இந்திய அணி வீரர்கள் போட்டியின் மூன்றாவது நாளில் பந்து வீசும்போது இந்த கருப்பு அட்டையை அணிந்திருந்தனர். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், &rdquo;முன்னாள் இந்திய கேப்டனும், சமீபத்தில் காலமான இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்&rdquo; என தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <h2><strong>தத்தாஜிராவ் கெய்க்வாடும் இந்திய கிரிக்கெட்டும்</strong></h2>
    <p>1952ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளாயாடியது.&nbsp; அதாவது இந்தியா ஆங்கிலேயர்களிடத்தில் இருந்து சுதந்திரம் பெற்று 5 ஆண்டுகளில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவே தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது முதல்&nbsp; சர்வதேச டெஸ்டில் அறிமுகமானார். அதன்பிறகு, அவர் இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடந்த 1961 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில்&nbsp; தனது கடைசி சர்வதேச டெஸ்ட்டில் விளையாடினார். தத்தாஜிராவ் கெய்க்வாட் மோசமான பார்ம் காரணமாக சில காலம் அணியில் இருந்து வெளியேறினார்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/5c8f73c278f9069a580a4dadcf11c9b21708164703922102_original.jpg" width="768" height="543" /></p>
    <p>கடந்த 1959 ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தத்தாஜிராவ் மீண்டும் கேப்டனாக களமிறங்கி இந்திய அணியை வழிநடத்தினார். அந்த தொடரில் 110 ரன்கள் மட்டுமே அடித்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தனது தொடக்க காலத்தில் இருந்த காலகட்டம் அது. அந்த தொடரினை இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியிருந்தது.&nbsp;</p>

    Source link

  • chennai train cancel service operated on Chennai Beach – Tambaram – Chengalpattu route is being changed for 6 days from today – TNN

    chennai train cancel service operated on Chennai Beach – Tambaram – Chengalpattu route is being changed for 6 days from today – TNN


    ரயில் சேவை ( chennai beach to chengalpattu train  )
    சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவை மிக முக்கிய பொது போக்குவரத்துக்காக இருந்து வருகிறது. சாலை மார்க்கமாக செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும்பாலும்  ரயில் சேவையில் பயன்படுத்துகின்றனர். அதேபோன்று மின்சார  ரயில் கட்டணம் என்பது மிக குறைவு என்பதாலும் பெரும்பாலான மக்கள்  ரயில் சேவையை விரும்புகின்றனர்.
     
    44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.
    பராமரிப்பு பணிகள் 
    கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
    ரயில்கள் ரத்து
    இதேபோல் இன்று முதல் 22-ந்தேதி இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
     
    ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே
    கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின், புறப்படும் புறநகர் ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் காண

    Source link

  • Kanchipuram news rare opportunity for entrepreneurs to set up a small-scale handloom park – TNN

    Kanchipuram news rare opportunity for entrepreneurs to set up a small-scale handloom park – TNN


    காஞ்சிபுரத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க தொழில்முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு, மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தகவல்.
    கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) 
    தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
    நல்லதொரு வியாபார சந்தை
    இத்திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்குத் தேவையான தொழிற்கூடம், Preloom, Post Loom மற்றும் Godown வசதி அமைத்து, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் (CFC) உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் தேவைக்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் / Wholesalers / Retailers / Cooperative Societies / Associations / Entrepreneur மற்றும் Master Weaver நெசவாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை (SPV) அமைத்து, நல்லதொரு வியாபார சந்தை, Design தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தி செய்யத் தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றைக் கொண்டு வந்து, மேற்படி பொது வசதி மையத்தில் (CFC) உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.
    வேலைவாய்ப்பு
    கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், காஞ்சிபுரத்தில் அமைக்கப்படவுள்ள, மேற்படி சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது.
    இணையதள முகவரி
    இந்த அரிய வாய்ப்பை பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் 22.02.2024-க்குள் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,  தெரிவித்துள்ளார்கள்.

    மேலும் காண

    Source link

  • Villupuram : வானூர் டைட்டில் பார்க் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்த மாவட்ட நிர்வாகம்

    Villupuram : வானூர் டைட்டில் பார்க் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்த மாவட்ட நிர்வாகம்


    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் 31 கோடி செலவில் புதிய டைட்டில் பார்க் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.</p>
    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலத்தில், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலம், மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலத்தில், ரூ 31.00 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;">இக்கட்டடத்தில் சுமார் 450 முதல் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரிய குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், உட்புற மற்றும் வெளிப்புற குடிதண்ணீர், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24ஓ7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;">இந்த நிலையில் புதிய டைட்டில் பார்க் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டு இருந்தார், அப்போது அங்கு வந்த வானூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி இந்த டைட்டில் பார்க் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. விழுப்புரத்தில் அமைய இருந்த இந்த டைட்டில் பார்க்கினை எனது முயற்சியின் பேரில் இங்கு கொண்டு வந்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு கொடுத்தோம் ஆனால் தற்போது இந்த கட்டிடம் வேலை நிறைவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சிக்கு இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான எனக்கு எந்த அரசு அதிகாரிகள் சார்பில் எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார் பின்னர் அங்கிருந்து தன் ஆதரவாளருடன் வெளிநடப்பு செய்தார்.</p>

    Source link

  • விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள்… இதனால் என்ன பயன்?

    விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள்… இதனால் என்ன பயன்?


    <p>வானிலை மாற்றத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது.&nbsp;</p>

    Source link

  • Cinema Headlines Today February 17th Tamil Cinema news today Dangal Actress Vijay Sivakarthikeyan tamizhaga vetri kazhagam

    Cinema Headlines Today February 17th Tamil Cinema news today Dangal Actress Vijay Sivakarthikeyan tamizhaga vetri kazhagam


    கம்பேக் கொடுத்தாரா ஜெயம் ரவி! சைரன் முதல் நாள் வசூல் நிலவரம் எப்படி?
    ஜெயம் ரவி நடித்து நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படம் நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்டப்  படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மேலும் படிக்க
    குழந்தை நட்சத்திரம் முதல் தளபதி வரை! 40 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்!
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். 1984ம் ஆண்டு விஜயகாந்த், விஜி, அனுராதா, ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ். சந்திரன் உள்ளிட்டோரின்  நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெற்றி’. இப்படத்தில் தான் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிகர் விஜயகாந்தின் குழந்தை பருவத்து கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார்.  இப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மேலும் படிக்க
    அமீர் கான் மகளாக நடித்த தங்கல் பட நடிகை உயிரிழப்பு: அதிர்ச்சியில் பாலிவுட்!
    நடிகர் அமீர் கான் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு மல்யுத்தத்தை அடிப்படையாக வைத்து வெளியாகி, பாலிவுட் தாண்டி நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட திரைப்படம் ‘தங்கல்’. இப்படத்தில் தன் பெண் பிள்ளைகளுக்கு மல்யுத்தப் பயிற்சி சொல்லித்தரும் ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடிகர் அமீர் கான் நடித்திருப்பார். அமீர் கானைத் தாண்டி இப்படத்தின் அவரது மகள்களாக நடித்த ஃபாத்திமா சனா சேக், சான்யா மல்ஹோத்ரா ஆகிய நடிகைகள் ஸ்கோர் செய்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றனர். மேலும் படிக்க
    12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி! குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று!
    சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் செய்த எத்தனையோ நடிகர்களை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. ஆனால் அப்படி பயணித்த  அனைவராலும் ஹீரோ அந்தஸ்தை பெற்று விட முடியுமா? என்றால் அதன் சதவீதம் சற்று குறைவு தான். ஆனால் சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்து, அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் படிக்க
    நயன்தாரா ஜோடியாகும் டாடா கவின்? கைகோர்க்கும் வெற்றிமாறன்: எந்தப் படம் தெரியுமா?
    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமான கவின், தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக உருவாகியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான டாடா படம் அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்த நிலையில், தற்போது அடுத்தடுத்த  பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்து வருகின்றன. ‘பியார் பிரேம காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார் படத்தில் தற்போது கவின்  நடித்து வருகிறார். மேலும் படிக்க
    இவரு லிஸ்ட்லயே இல்லையே: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் இணைந்த தெலுங்கு இயக்குநர்!
    நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக முதலில் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து எச். வினோத் அல்லது வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கலாம் என்று தகவல் வெளியானது. தற்போது இந்தப் பட்டியலில் மற்றொரு இயக்குநர் இணைந்துள்ளார். மேலும் படிக்க

    மேலும் காண

    Source link

  • அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது அலுவலகத்திற்கு கட்டாயம் வாடகை வழங்க வேண்டும் -உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்

    அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது அலுவலகத்திற்கு கட்டாயம் வாடகை வழங்க வேண்டும் -உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்


    <p style="text-align: justify;">சேலத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தனி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், மஞ்சுளா கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில்&nbsp; தீண்டாமை மற்றும் எதிரான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று, 32 வழக்கறிஞர் அறைகள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் கூடுதல் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. புதிய நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் கூடுதல் நீதிமன்றத்தை காணொளி வாயிலாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், மஞ்சுளா, மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/6f8eb7693116173ceb13ddcd02f2b0a31708161769529113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "வட்டார தலைநகரங்களில் இருந்து மாவட்ட தலைநகருக்கு செல்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நேர விரையும் மற்றும் அலைச்சலை தடுக்கும் வகையில் கூடுதல் நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் செல்லும் அலைச்சலை தவிர்க்கும் வகையில் ஆத்தூரில் கூடுதல் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து 422 வழக்குகள் ஆத்தூர் கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆத்தூர் பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வழக்கறிஞர்கள் துணை நிற்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு சென்றால் நீதி கிடைக்க பத்து முதல் 15 வருடங்கள் ஆகும் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை கேட்டால் வழக்கறிஞர்கள் தொடங்கி நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வலி ஏற்பட வேண்டும். இதற்கு நாம் தான் காரணம் என்பதை உணர்ந்து அதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்களின் பணி நீதிமன்றத்தோடு முடிவடைந்து விடுவதில்லை அவர்களுக்கு கூடுதல் சமூகப் பொறுப்பு உள்ளது. ஆதரவற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வழக்கறிஞர்கள் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது அலுவலகத்திற்கு கட்டாயம் வாடகை வழங்க வேண்டும். பொதுமக்களிடையே ஒரு அவப்பெயர் உண்டு, வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் வீடு வாடகைக்கு விட அச்சப்படுகிறார்கள். சட்டம் பயின்றவர்கள் பொதுமக்கள் மத்தியில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பேசினார்.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/0bf64ea0fea62e727f0007198971406d1708161786657113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">தொடர்ந்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், "இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களிடமிருந்து எந்தவித தயக்கமும் இன்றி வாத திறமை நீதிமன்ற நடைமுறைகள் என எல்லாவற்றையும் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். புதிய நீதிமன்றங்கள் திறப்பு மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் குடும்ப நல நீதிமன்றங்கள் தீண்டாமை மற்றும் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றங்களில் வழக்குகள் இல்லை என்ற நிலையை சமுதாயத்தில் உண்மையான மகிழ்ச்சியை உருவாக்கும். இது போன்ற நீதிமன்றங்கள் செயல்படாத நாளையே சமுதாயம் மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய நிலை உள்ளது குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் போது வேதனையாக உள்ளது. சகிப்புத்தன்மை வேகமாக குறைந்த வருவதன் அடையாளமாக குடும்ப நல நீதிமன்றங்களில் அதிக அளவிலான வழக்குகள் தாக்கல் ஆகின்றன 1986 ஆம் ஆண்டு வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே குடும்ப நல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள 8 குடும்ப நல நீதிமன்றங்களில் 56 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. பெரிய வரும் மக்கள் தொகையில் இது குறைவான எண்ணிக்கை தான் என்றாலும் குடும்ப நல வழக்குகள் மற்றும் சிறப்பு வழக்குகளில் வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இது போன்ற வழக்குகள் குறையும் இதை சமூக சேவையாக கருதி வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு தொடர் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வழக்காடும் தன்மையை கற்றுக் கொடுக்க வேண்டும்" என்று பேசினார்.</p>

    Source link

  • villupuram: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

    villupuram: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் 17.02.2024 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இராமசாமி தலைமையில் நடைபெற்றது. தீர்மானங்களை முன்மொழிந்து, வழிமொழிந்த பின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.</p>
    <p style="text-align: justify;"><strong>தீர்மான</strong><strong>ங்களில் கூறியிருப்பதாவது </strong></p>
    <p style="text-align: justify;">புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், 21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் முந்தைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நிதிபலன்களை திரும்ப வழங்க வேண்டும் எனவும் பதிவறை எழுத்தர் பதவியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவோர். அலுவலக உதவியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விதிகளை தளர்வு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டுமெனவும்,</p>
    <p style="text-align: justify;">மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சுருக்கெழுத்து தட்டச்சர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கும் பல ஆண்டுகளாக இளநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர்களுக்கும் விதிகளில் தளர்வு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. பால் தணிக்கை துறை மற்றும் வீட்டு வசதித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை உடனடியாக தாய்த்துறைக்கு பணிவிடுவிக்க வேண்டும்.</p>
    <p style="text-align: justify;">இணைப்பதிவாளர்கள் மற்றும் துணைப்பதிவாளர்கள் மேலாண்மை இயக்குநராக பணியாற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கூட்டுறவு சட்டம் பிரிவு 81 மற்றும் 82 ஆகியவற்றின் விசாரணை மற்றும் ஆய்வு பணிகளை கூட்டுறவு சார்பதிவாளர் பணி நிலையில் மேற்கொள்வதில் பலவித பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அப்பணிகளை கூடுதல் பதிவாளர் தலைமையில் கோருவது எனவும் கூட்டுறவு சங்க தேர்தல் மற்றும் பொதுப்பணி நிலைத்திறன் குழு ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.</p>
    <p style="text-align: justify;">களஅலுவலர்களுக்கு வட்டார தலைநகரங்களில் அலுவலகம், மடிக்கணினி வசதி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் 01.10.2023ம் தேதிய துணைப்பதிவாளர் பதவி உயர்வினை விரைந்து வழங்க வேண்டும், வெளியூரிலிருந்து அலுவல் நிமித்தமாக சென்னை வரும் சார்நிலை அலுவலர்கள் காலை நேரத்தில், புத்துணர்வு பெற அறை வசதி துறை சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.</p>

    Source link

  • அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!

    அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!


    <p>தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும் என திமுக தலைவரும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Bhagyaraj : ’’நடந்ததை தான் சொன்னேன் வெற்றியின் மறைவு காரணமா?’’பாக்யராஜ் விளக்கம்

    Bhagyaraj : ’’நடந்ததை தான் சொன்னேன் வெற்றியின் மறைவு காரணமா?’’பாக்யராஜ் விளக்கம்


    <p>Bhagyaraj : &rsquo;&rsquo;நடந்ததை தான் சொன்னேன் வெற்றியின் மறைவு காரணமா?&rsquo;&rsquo;பாக்யராஜ் விளக்கம்&nbsp;</p>

    Source link

  • Villupuram DMK urimaiyai meetka stalin kural rs bharathi speech | தெரு தெருவாக பாஜக அண்ணாமலை பொய் பேசி வருகிறார்

    Villupuram DMK urimaiyai meetka stalin kural rs bharathi speech | தெரு தெருவாக பாஜக அண்ணாமலை பொய் பேசி வருகிறார்


    விழுப்புரம்: மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6 ஆயிரம் கோடி பாஜகவிற்கு நிதி வழங்கி உள்ளவர்கள் யாரென்று தெரிவிக்க வேண்டுமெனவும், 570 கோடி தேர்தல் ஆணையம் பிடித்த பணம் சிபிஐக்கு உத்தரவிட்டு 8 ஆண்டுகள் ஆகியும் அது யாருடைய பணமென்று தெரிவிக்கவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 
    விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமனற பரப்புரை கூட்டம் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, லட்சுமணன். எம் பி கெளதம சிகாமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். 
    கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி….
    பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு மோடி துரோகம் இழைத்துள்ளதாகவும் பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு மோடி செய்தது என்ன ? வளர்ச்சி என்ன இருக்கிறது என்று பேசுவதற்கு பாஜகவில் யாருக்கும் தைரியம் இல்லை என்றும் தெரு தெருவாக பொய் பேசுவத்றகாகவே பாஜகவில் அண்ணாமலை உள்ளதாகவும், மோடி நம்பி இருப்பதெல்லாம் ஊடகங்களை விலைக்கு வாங்கி பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அம்பானியின் வளர்ச்சிக்காக மட்டுமே மோடி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
    உத்தரம புத்திரன் மோடி காலையில், மாலையில் என்று ஒரு வேஷம் போடுவார் ஒவ்வொரு மாநிலத்திற்கு சென்றால் அதற்கு ஏற்றவாரு ஆடை அணிந்து மோடி ஏமாற்றுவதாகவும், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6 ஆயிரம் கோடி பாஜகவிற்கு நிதி வழங்கி உள்ளார்கள் அது யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றும் காங்கிரசு கட்சியின் பணத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை டெல்லியில் மோடி செய்து வருவதாகவும் 2016ல் 570 கோடி பணம் பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம் யாருடையது என்று விசாரனை செய்ய சிபி ஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு 8 வருடங்கள் ஆகிறது ஆனால் இதுவரை யாருடையது என வெளியிடவில்லை என தெரிவித்தார்.
    திமுக காரர்கள் வீட்டிற்கும் எதிர்கட்சி காரர்கள் வீட்டிற்கு அமலாக்க துறையை அனுப்பும் மோடி அரசு பணம் பிடிப்பட்டது குறித்து ஏன் யாருடையது என தெரிவிக்கவில்லை இந்த பணம் பாஜகவின் மோடிக்கு சொந்தமானதாக இருக்கும் என சந்தேகம் இருப்பதாகவும் கருப்பு பணம் மீட்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்படுமென மோடி அறிவித்து அதனை செயல்படுத்தவில்லை ஆனால் தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போன்று குடும்ப பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் செலுத்தி வருவதாக கூறினார். துரதிஷ்டவசமாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் தான் அதிமுக கட்சி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதாகவும்,மெரினாவில் கலைஞர் உடல் அடக்கம் செய்ய நீதிபதியாக இருந்த பெண் அனுமதி வழங்கியபோது நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன் அதற்கு தனக்கு தெரிவிக்க வேண்டாம் இந்த நாற்காலியில் அமர கருணாநிதி தான் காரணம் ஆகையால் தனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாமென்று நீதிபதி தெரிவித்ததாகவும் கடந்த பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் 411 எம் எல் ஏக்களை மோடி விலைக்கு வாங்கி ஆட்சி புரியும் அரசாக மோடி அரசு உள்ளதாக ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Farmers Protest: டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்.. விலைவாசி உயரும் அபாயம்?

    Farmers Protest: டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்.. விலைவாசி உயரும் அபாயம்?


    <p>பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
    <blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
    <p dir="ltr" lang="hi">देश के अन्नदाता किसानों के लिए मोदी सरकार अभि़शाप है। <br /><br />लगातार झूठी &lsquo;मोदी की गारंटी&rsquo; के चलते ही पहले 750 किसानों की जान गई और अब कल 1 किसान ने शहादत दी और 3 रबर बुलेट से अपनी आँखों की रोशनी खो बैठे हैं। <br /><br />मोदी सरकार ने किसानों से किया दुश्मनों जैसा व्यवहार, <br /><br />केवल कांग्रेस&hellip; <a href="https://t.co/v0zKfzX7OW">pic.twitter.com/v0zKfzX7OW</a></p>
    &mdash; Mallikarjun Kharge (@kharge) <a href="https://twitter.com/kharge/status/1758697608946528256?ref_src=twsrc%5Etfw">February 17, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான&nbsp; பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று காங்கிரஸ் பாரத் பந்தில் கலந்துக்கொண்டது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்படுவது, தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ள பதிவில், &ldquo;நாட்டின் விவசாயிகளுக்கு மோடி அரசு சாபக்கேடு. தொடர்ந்து பொய்யான மோடி உத்தரவாதத்தால் முதலில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர், தற்போது நேற்று 1 விவசாயி உயிரிழந்தார். மேலும் 3 பேர் ரப்பர் தோட்டாக்களால் கண்பார்வை இழந்துள்ளனர். மோடி அரசு விவசாயிகளை எதிரிகள் போல் நடத்துகிறது. அவர்களுக்கு எம்எஸ்பி என்ற சட்டப்பூர்வ உரிமையை காங்கிரஸ் மட்டுமே பெற்றுத் தரும்!&rdquo; என தெரிவித்துள்ளார். &nbsp;</p>
    <p>மேலும், தொடர் விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போது வரை விலைவாசி எதுவும் உயரவில்லை என அங்கு இருக்கும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 15 நாட்களாக கேரட் விலை மட்டும் சற்று உயர்ந்துள்ளதாகவும், இப்படியே போராட்டம் தொடர்ந்தால் கடுமையான விலை உயர்வு சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் எந்த தடையும் இல்லாமல் வருவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p>
    <p>வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை கைவிடும்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்வதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், 2021&nbsp; ஆம் ஆண்டு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என டெல்லி எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குவதற்கு சாலைகளில் ஆணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு எல்லையில், 64 கம்பெனி துணை ராணுவப்படையினரும், 50 கம்பெனி ஹரியானா போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு,&nbsp; காக்கர் ஆற்றுப்படுகையில் பள்ளங்களும் தோண்டட்டுள்ளன. ட்ரோன்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவற்றை எல்லாமும் மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் அடங்குவர்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Will Kalmanaths son also leave Congress? Party’s name and logo removed from MP Nakul Nath’s X Account

    Will Kalmanaths son also leave Congress? Party’s name and logo removed from MP Nakul Nath’s X Account


    மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், அவரது மகன் எம்.பி. நகுல்நாத் பா.ஜ.க.-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நகுல்நாத் தனது சமூக வலைதளங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பெயர், லோகோ நீக்கப்பட்டுள்ளது தகவலை உறுதிப்படுத்தும்படியாக உள்ளது.
    மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு காரணம் கமல்நாத் என்று அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஏனெனில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் கமல்நாத். தேர்தல் தோல்வியால் கமல்நாத் மீது கட்சிக்கு அதிருப்தி இருப்பதுடன் அவர்களிடையேயான தொடர்பு அவ்வளவு சரியாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
    பா.ஜ.க.-வில் இணைகிறாரா?
    கமல்நாத் சிந்த்வாரா லோக்சபா தொகுதியில் 9 முறை போட்டியிட்டு வென்றிருக்கிறார். அவர் தீவிர அரசியல் பயணத்தை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் முகமாக இருக்கிறார். மத்திய அமைச்சராக இருந்தவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்திருக்கிறார். இப்படியான நிலையில், கமல்நாத் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. கமல்நாத் சிந்த்வாராவில் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கமல்நாத் தனது மகனுடன் புது டெல்லி செல்ல இருப்பதாக தெரிகிறது. போபாலில் உள்ள கமல்நாத் அங்கிருந்து டெல்லி செல்ல இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நகுல்நாத் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து ‘காங்கிரஸ் எம்.பி.’ என்பதை நீக்கியுள்ளதை பா.ஜ.க.-வில் இணைய உள்ளதை உறுதிப்படுத்தும்படியாக அமைந்துள்ளது. 

     
    நகுல்நாத் எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் லோகோ நீக்கம்
    சிந்த்வாரா தொகுதி எம்.பி. நகுல்நாத் தனது எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் கட்சியின் லோகோ, காங்கிரஸ் எம்.பி. என்பதை நீக்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது. கமல்நாத், நகுல் நாத் இருவரும் டெல்லி சென்று இன்று மாலை பா.ஜ.க.வில் இணைவது உறுதி என்று கமல்நாத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    கமல்நாத் பற்றி திக்விஜய் சிங்?
    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிடம் கமல்நாத் பா.ஜ.க.-வில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,  ”எல்லாம் சரியாகிவிட்டது. நேற்றிரவு கமல்நாத்துடன் பேசினேன். அவர் சிந்த்வாராவில் இருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் இணைவதாக செய்தி வருகிறது. நேரு – காந்தி குடும்பத்தின் காலத்திலிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர். அப்படிப்பட்டவர் காங்கிரஸில் இருந்து அவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
    பிப்ரவரி 19-ம் தேதி பா.ஜ.க.-வில் இணையலாம்!
    கமல்நாத் உடன் நெருக்கமான நட்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி, பிப்ரவரி 19 ஆம் தேதி  நகுல்நாத்துடன், கமல்நாத் பாஜகவில் சேரலாம் என்று தெரிவித்துள்ளனர். அவர்களுடன் 10 முதல் 12 எம்.எல்.ஏக்கள், கட்சியிலுள்ள மாநில தலைவர்கள் மற்றும் ஒரு மேயர் ஆகியோரும் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேரலாம். . பிப்ரவரி 18-ம் தேதி வரை சிந்த்வாரா சுற்றுப்பயணம் நடைபெற இருந்த நிலையில், கமல்நாத் அதை பாதியில் விட்டுவிட்டு டெல்லி சென்றுள்ளதால் அவர் பா.ஜ.க.வில் இணையுள்ளதை உறுதி செய்வதாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
    1980 முதல் 2014 வரை லோக்சபா எம்.பி.யாக இருந்த கமல்நாத். 9 முறை எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2018 ல்- மத்திய பிரதேச முதலமைச்சரானார். ஆனால், அவரது ஆட்சிக்காலம் முடிவதற்குள் அரசு கவிழ்ந்தது. அதேசமயம், நகுல்நாத் . 2019 மக்களவைத் தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் வெற்றி பெற்றார். நாட்டில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவராக பா.ஜ.க.வில் இணைந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

     

    மேலும் காண

    Source link

  • Sun tv Ethirneechal serial today episode february 17 promo

    Sun tv Ethirneechal serial today episode february 17 promo


    சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 16 ) எபிசோடில் ரேணுகா மற்றும் நந்தினியை விசாரிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வீட்டுக்கு தெரியாமல் ஏதோ ஒரு வகையில் சம்பாதிப்பது குறித்து தெரியவருகிறது. அது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஜனனியிடம் விசாரிக்கும்போது அவள் விருப்பமே இல்லாமல் அந்த வீட்டில் இருக்கக் காரணம் என்ன என வக்கீல் கேட்கிறார். 
     

    “ஜீவானந்தம் தான் சொத்துக்காக ஆசைப்பட்டு என்னுடைய வீட்டு பொம்பளைகளை கைக்குள்ளே போட்டு கொண்டு இப்போது என்னுடைய பொண்ணைக் கடத்தி வைத்து கொண்டு நாடகம் ஆடுகிறான்” என பழி போடுகிறார் குணசேகரன். அப்போது சாருபாலா குணசேகரனுக்கு எதிரான ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்பிக்கிறார். ஆதிரையின் திருமணம், பள்ளியில் படிக்கும் தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகள் செய்தது என அனைத்தையும் சமர்ப்பிக்க, நீதிபதி அது பற்றி குணசேகரனிடம் விசாரிக்க, அவர் பதில் எதுவும் சொல்ல முடியாமல் முழிக்கிறார். 
    அப்போது தான் யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷினியின் வீடியோ ஆதாரம் ஒன்று காட்டப்படுகிறது. அதில் தர்ஷினி திக்கித் திக்கி பேசுகிறாள். யாரோ அவளை மிரட்டி சொல்லிக்கொடுத்ததை சொல்ல சொல்வது போல மயக்கத்துடனேயே பேசுகிறாள். “என்னுடைய அம்மா ஈஸ்வரியும் அவங்க ப்ரெண்ட் ஜீவானந்தமும் சேர்ந்து தான் என்னைக் கடத்தினாங்க. நான் அவங்க கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன். திரும்பவும் என்னைக் கடத்திக்கொண்டு வந்து வேற ஒரு இடத்துல அடைச்சு வைச்சு இருக்காங்க. தயவு செஞ்சு எங்க அப்பாகிட்ட சொல்லி என்னைக் காப்பாத்த சொல்லுங்க என வாக்குமூலம் கொடுக்கிறாள். அவள் பேசிய இந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். குணசேகரனும் மகளைப் பார்த்து கண்கலங்குகிறார். 
    எதுவுமே புரியவில்லை ஆனால் ஜீவானந்தம் சொன்னது போல “ஆமாம் நான் தான் என்னோட பொண்ணை கடத்தி வைச்சு இருக்கேன். இவர்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என மற்ற பெண்களைப் பார்த்து ஈஸ்வரி சொல்லம் அவர்கள் யாருக்கும் எதுவுமே புரியவில்லை. “அக்கா ஏன் இப்படி சொல்றீங்க? எங்களை காப்பாத்துறதுக்காக எதுக்கு  இப்படி சொல்றீங்க” எனக் கதறுகிறார்கள். நீதிபதி ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியை ஜாமீனில் விடுதலை செய்யவும் தீர்ப்பு வழங்குகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
     

    அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
    ஈஸ்வரியையும் ஜீவானந்தத்தையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள்.  “என்னுடைய பொண்ணை இவன் தான் கடத்தி வைச்சு இருக்கான்? அந்த வீடியோவை அனுப்பி வைச்சது யாரு?” என குணசேகரன் கொந்தளிக்க, “எனக்குத் தெரியும் குணசேகரன்” என சாருபாலா சரியான பதிலடி கொடுக்கிறார். அதை பார்த்து குணசேகரன் முறைக்கிறார். 
    வீட்டுக்கு வந்த குணசேகரனிடம் ஈஸ்வரியின் அப்பா “என்னுடைய பொண்ணை என்ன பண்ண? உயிரோட இருக்காளா இல்ல மொத்தமா சாவடிச்சுட்டியா?” எனக் கேட்கிறார். அப்போது ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனியை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார் குணசேகரன். 
     

    “என்னோட பொண்ணை நான் கண்டுபிடிச்சுக்குவேன். எவனோட தயவும் எனக்கு தேவையில்லை. இந்த குணசேகரன் இல்லாம இவங்க எப்படி வாழறானுங்கனு பாத்துருவோம்” என்கிறார். அவர் அசிங்கப்படுத்தி பேசியதைக் கண்டு பொறுக்காமல் மனம் வேதனைப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 
     

    மேலும் காண

    Source link

  • pakistan downgraded to authoritarian regime records greatest deterioration in asia slides 11 points in Democracy Index 20

    pakistan downgraded to authoritarian regime records greatest deterioration in asia slides 11 points in Democracy Index 20


    Pakistan Authoritarian Regime: ஜனநாயகக் குறியீடு தொடர்பான அறிக்கையில் 11 புள்ளிகளை இழந்து,  ஆசியாவிலேயே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடு என்ற தரநிலையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
    ”சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பாகிஸ்தான்”
    பொருளாதார புலனாய்வுப் பிரிவின் (EIU) ஜனநாயகக் குறியீடு 2023 அறிக்கையில், 11 புள்ளிகளை இழந்த பாகிஸ்தான் “சர்வாதிகார ஆட்சியாக” தரமிறக்கப்பட்டுள்ளது. அதோடு,  உலக மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர் மட்டுமே “முழு ஜனநாயகத்தில்” வாழ்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ”ஏஜ் ஆஃப் கான்ஃப்ளிக்ட்”  என்று தலைப்பிலான இந்த ஆய்வு, 165 சுதந்திர மாநிலங்கள் மற்றும் இரண்டு பிரதேசங்களில் ஜனநாயகத்தின் நிலையை விவரிக்கிறது.
    சர்வாதிகார ஆட்சி:
    இதுதொடர்பான அறிக்கையின்படி, ஆசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான்  இதுவரை எந்தவொரு நாடும் சந்தித்திராத மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி,  அந்நாட்டிற்கான ஜனநாயகக் குறியீட்டிற்கான மதிப்பெண் 3.25 ஆகக் குறைந்துள்ளது.  இதன் மூலம் ‘ஹைப்ரிட் ஆட்சி’ எனும் நிலையில் இருந்து ‘சர்வாதிகார ஆட்சிக்கு’ தரமிறங்கியுள்ளது.
    இந்த பட்டியலில் இவ்வளவு குறிப்பிடத்தக்க அளவில் தரமிறக்கப்பட்ட ஒரே ஆசிய நாடு பாகிஸ்தான் ஆகும். அதேநேரம், எதிர்க்கட்சிகள் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகும் வங்கதேசம் மற்றும் ரஷ்யாவில் இதுபோன்ற எந்தவொரு தரநிலை மாற்றமும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
    காரணங்கள் என்ன?
    பாகிஸ்தானின் தரநிலை இறக்கத்திற்கு,  ”தேர்தல் செயல்முறை,  பன்மைத்துவம் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடு ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது. EIU குறிப்பிடும்போது, “இராணுவத்தின் அதீதமான அரசியல் செல்வாக்கு… தேர்தல்கள் சுதந்திரமான, நியாயமானவை அல்லது போட்டித்தன்மை இல்லாதது” என தெரிவித்துள்ளது. ஜனநாயகக் குறியீட்டிற்கான இந்த பட்டியலில், நார்வே, நியூசிலாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
    வடகொரியா, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை முறையே கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் அந்நாட்டின் ஜனநாயகக் குறியீடு என்பது, 4-க்கும் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவில்,  முஸ்லீம் லீக் நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் JUI-F ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ள சூழலில் பாகிஸ்தானுக்கான ஜனநாயகக் குறியீடு இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.  அதாவது, ஜனநாயகத்திற்கான உலக தரவரிசைப் பட்டியலில் 11 இடங்கள் சரிந்து 118ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
    சரிந்த ஜனநாயக விகிதம்:
    ஜனநாயக நாடுகளாக வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், உலகளாவிய சராசரி குறியீட்டு மதிப்பெண் 2023 இல் 5.23 ஆகக் குறைந்துள்ளது. இதன்மூலம்,  2006-இல் வெளியிடப்பட்ட முதல் ஆய்வுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவு இதுவாகும். இது முந்தைய ஆண்டு 5.29 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 இல் ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இரண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது,  பராகுவே மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியவை “ஹைப்ரிட் ஆட்சிகளில்” இருந்து “குறைபாடுள்ள ஜனநாயக நாடுகளாக” மேம்பட்டுள்ளன. கிரீஸ் “முழு ஜனநாயகம்” ஆனது, ஆனால் சிலி ஜனநாயகக் குறியீடு 2023 இல் “குறைபாடுள்ள ஜனநாயகம்” என மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.
     

    மேலும் காண

    Source link

  • தீயாய் வீசி இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 319 ரன்களில் ஆல் அவுட்..!

    தீயாய் வீசி இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 319 ரன்களில் ஆல் அவுட்..!

    இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 153 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களும் எடுத்திருந்தனர். 
    இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களும், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர். ஆட்டத்தின் இரண்டாவது நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, மூன்றாவது நாளில் தடுமாறி, இரண்டாவது செஷனிலேயே சரிந்தது. இங்கிலாந்து அணி 20 ரன்களுக்குள் கடைசி 5 விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
    இதுவரை என்ன நடந்தது..?
    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த காலகட்டத்தில், கேப்டன் ரோஹித் சர்மா அணிக்காக 131 ரன்கள் எடுத்த மிகப்பெரிய ஸ்கோரராக ஜொலித்தார். இது தவிர ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்திருந்தார். 
    பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்து பேஸ்பால் பாணியில் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 133 ரன்னிலும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மூன்றாவது நாளில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றது.
    மூன்றாம் நாளில் சீறிப்பாய்ந்த இந்திய பந்துவீச்சாளர்கள்:
    இரண்டாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து ஆடிய விதத்தை பார்த்தால், 8 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில் மூன்றாவது நாளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று யூகிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மூன்றாவது நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் பிடியை இறுக்க இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஆல் அவுட் ஆனது. 
    அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 18 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுக்க, அடுத்ததாக உள்ளே வந்த பேரிஸ்டோவும் ரன் ஏதுமின்றி குல்தீப் யாதவ் பந்தில் LBW முறையில் அவுட்டானார். மறுமுனையில் பென் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 
     20 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி: 
    பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஸ்டோக்ஸ் விக்கெட்டை அடுத்து இங்கிலாந்து ஸ்கோர் 299/6 ஆக இருந்தது. பின்னர் ஒட்டுமொத்த அணியும் 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்ததாக உள்ளே வந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபாக்ஸ் (13), ரெஹான் அகமது (6), டாம் ஹார்ட்லி (9), ஜேம்ஸ் ஆண்டர்சன் (1) என 20 ரன்களுக்குள் மீதமுள்ள 5 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி 319 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. 

    Source link

  • Tamil Nadu latest headlines news till afternoon 17th February 2024 flash news details here | TN Headlines: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்; பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

    Tamil Nadu latest headlines news till afternoon 17th February 2024 flash news details here | TN Headlines: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்; பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை


    விருதுநகரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் சென்றுள்ள நிலையில் தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க

    TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது? இன்றைய நிலவரம் இதோ

    தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். மேலும் படிக்க

    Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை – அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு அரசு

    தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

    CM Stalin: ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் – உங்கள் ஊருக்கு என்ன பலன் தெரியுமா?

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதோடு, அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளார். மேலும் படிக்க

    இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாளே இந்தியா வெற்றி அடையும் நாளாகும் – கனிமொழி எம்பி பேச்சு

    நெல்லை பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள பெல் மைதானத்தில் திமுக சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்ற தொகுதி பரப்பரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில், “மத்தியில் இருப்பவர்கள் எந்த சந்தர்ப்பத்தையும் விட்டு விடாமல் ஒரு மசோதாவை, ஒரு திட்டத்தை கொண்டு வருவதாக இருந்தாலும் அதில் மாநில உரிமைகளை அடையாளங்களை அழிக்க கூடிய ஒவ்வொரு செயலையும் பின்னணியில் வைத்து தான் செய்கின்றனர். மேலும் படிக்க

    Source link

  • மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து

    மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து


    Virudhunagar Fire Accident: விருதுநகரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விருதுநகர், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்படுகின்றது. இந்த விபத்துக்களால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடுகிறது.  இந்த நிலையில், தற்போது ஒரு வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. 
    பட்டாசு ஆலையில் வெடி விபத்து:
    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது  பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள் தரைமட்டமாகின.
    10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு:
    இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர். 4 ஆண்கள், 6 பெண்கள் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    சம்பவம் அறிந்த சிவகாசி, வெம்பகோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் ரமேஷ்  (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா ( 35), குருசாமி (50) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாளே இந்தியா வெற்றி அடையும் நாளாகும் – கனிமொழி எம்பி பேச்சு
    Thiruvallur Lok Sabha Constituency: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி – எந்த கட்சிக்கு சாதகம்? இதுவரை சாதித்தது யார்? தேர்தல் வரலாறு

    மேலும் காண

    Source link

  • TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது? இன்றைய நிலவரம் இதோ

    TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது? இன்றைய நிலவரம் இதோ


    <p>தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <h2><strong>வறண்ட வானிலை:</strong></h2>
    <p>அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். &nbsp;ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக &nbsp;இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
    <p>19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை,&nbsp; தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>
    <p>கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.6&nbsp; டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.8 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 32.6&nbsp; டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p>
    <p>இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வட மாநிலங்களில் மட்டுமே பனிப்பொழிவு காணப்பட்டது. தமிழ்நாட்டில் இயல்பை விட குறைந்த அளவிலே பனிப்பொழிவு இருந்ததாக தனியார் வானிலை ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>
    <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:&nbsp;</h2>
    <p>17.02.2024 மற்றும் 18.02.2024: தென்தமிழக &nbsp;கடலோரப்பகுதிகள், &nbsp; &nbsp;மன்னார் &nbsp; &nbsp;வளைகுடா மற்றும் குமரிக்கடல் &nbsp;பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு &nbsp;45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 &nbsp;கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p>
    <p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.&nbsp;</p>

    Source link

  • Thalapathy 69: இவரு லிஸ்ட்லயே இல்லையே: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் இணைந்த தெலுங்கு இயக்குநர்!

    Thalapathy 69: இவரு லிஸ்ட்லயே இல்லையே: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் இணைந்த தெலுங்கு இயக்குநர்!


    <p>நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.</p>
    <h2><strong>விஜய்யின் அரசியல் வருகை</strong></h2>
    <p>&nbsp;1984ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் விஜய். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தப் படத்துடன் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் நடிகர் விஜய். 1992ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் அவரை முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதன் தொடர்ச்சியாக செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்து கமர்சியல் படங்களாக நடித்து இளைய தளபதி என்ற அடைமொழியுடன் கொண்டாடப்பட்டார்.&nbsp;</p>
    <p>காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக உள்ளிட்ட படங்களின் மூலம் ரொமாண்டிக் நடிகராக உருவான விஜய் கில்லி, திருபாச்சி,&nbsp; சிவகாசி, போக்கிரி உள்ளிட்ட படங்களின் மூலம் மாஸ் நடிகராக மாறினார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் விஜய்யின் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தத் தொடங்கின. தனது சினிமா கரியரில் உச்சத்தில் இருக்கும் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, தற்போது அரசியலுக்கு வருகை தர முடிவு செய்துள்ளார்.</p>
    <p>விஜய்யின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும் ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கதான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் 69 ஆவது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.&nbsp;&nbsp;</p>
    <h2><strong>தளபதி 69</strong></h2>
    <p>&nbsp;நடிகர் விஜய்யின் கடைசி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக முதலில் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து எச். வினோத் அல்லது வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கலாம் என்று தகவல் வெளியானது. தற்போது இந்தப் பட்டியலில் மற்றொரு இயக்குநர் இணைந்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு உள்ளிட்டவர்களை வைத்து மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த த்ரிவிக்ரம், விஜய்யின் கடைசி படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p>
    <p>அல்லு அர்ஜூனை வைத்து இவர் இயக்கிய &rsquo; அல வைகுண்டபுரம் லோ&rsquo; படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மேலும் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படம் நல்ல வெற்றிபெற்றது. தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கும் த்ரிவிக்ரம் விஜய்யின் படத்தை இயக்கினால் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>

    Source link

  • மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து

    மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து


    பட்டாசு ஆலையில் வெடி விபத்து:
    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்(45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது  பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள் தரைமட்டமாகின.
    9 பேர் உயிரிழப்பு:
    இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உட்பட 9 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    சம்பவம் அறிந்த சிவகாசி, வெம்பகோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் ரமேஷ்  (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா ( 35), குருசாமி (50) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் காண

    Source link

  • காஞ்சிபுரத்தில் மழையை கண்டறிய வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் சிஸ்டம்..! இனி எல்லாம் துல்லியம் தான்..!

    காஞ்சிபுரத்தில் மழையை கண்டறிய வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் சிஸ்டம்..! இனி எல்லாம் துல்லியம் தான்..!


    <p style="font-weight: 400; text-align: justify;">காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ காலங்களில் ஏற்படும் மழைபொழிவை துல்லியமாகவும், பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளம், வறட்சி, போன்றவற்றை நுண்ணிய பகுப்பாய்வு மூலம் அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் ஒவ்வொரு குறுவட்ட அளவிலும் தினசரி மழைபொழிவு தரவை பெறுவதற்காக கீழ்காணும் 18 இடங்களில் தானியங்கி மழைமானி மற்றும் 3 இடங்களில் தானியங்கி வானிலை மையம் பொருத்தும் பணி நடைப்பெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,&nbsp; தெரிவித்துள்ளார்கள்.</p>
    <p style="font-weight: 400; text-align: justify;">&nbsp;</p>
    <h2 style="font-weight: 400; text-align: justify;"><strong><u>தானியங்கி மழைமானி பொருத்தப்படும் அமைவிட விவரம்</u></strong></h2>
    <p style="font-weight: 400; text-align: justify;">&nbsp;</p>
    <table style="font-weight: 400;" width="699">
    <tbody>
    <tr>
    <td width="57">
    <h3><strong>வ</strong><strong>.</strong></h3>
    <h3><strong>எண்</strong></h3>
    </td>
    <td width="142">
    <h3><strong>வட்டம்</strong></h3>
    </td>
    <td width="161">
    <h3><strong>குறுவட்டம்</strong></h3>
    </td>
    <td width="340">
    <h3><strong>தானியங்கி மழைமானி அமைவிடம்</strong></h3>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>காஞ்சிபுரம்</p>
    </td>
    <td width="161">
    <p>சிறுகாவேரிபாக்கம்</p>
    </td>
    <td width="340">
    <p>வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம்.&nbsp;சிறுகாவேரிபாக்கம்.</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>காஞ்சிபுரம்</p>
    </td>
    <td width="161">
    <p>பரந்தூர்</p>
    </td>
    <td width="340">
    <p>விதை சேமிப்பு கிடங்கு வளாகம்,&nbsp;பரந்தூர்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>காஞ்சிபுரம்</p>
    </td>
    <td width="161">
    <p>கோவிந்தவாடி</p>
    </td>
    <td width="340">
    <p>கிராம சேவை கட்டிட வளாகம்,&nbsp;கொட்டவாக்கம்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>காஞ்சிபுரம்</p>
    </td>
    <td width="161">
    <p>சிட்டியம்பாக்கம்</p>
    </td>
    <td width="340">
    <p>வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம்,&nbsp;சிட்டியம்பாக்கம்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>வாலாஜாபாத்</p>
    </td>
    <td width="161">
    <p>மாகரல்</p>
    </td>
    <td width="340">
    <p>வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு,&nbsp;&nbsp;மாகரல்</p>
    <p>&nbsp;</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>6.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>வாலாஜாபாத்</p>
    </td>
    <td width="161">
    <p>தென்னேரி</p>
    </td>
    <td width="340">
    <p>வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம்,&nbsp;&nbsp;தென்னேரி</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>7.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>உத்திரமேரூர்</p>
    </td>
    <td width="161">
    <p>திருப்புலிவனம்</p>
    </td>
    <td width="340">
    <p>குறுவட்ட நில அளவர்,&nbsp;&nbsp;குடியிருப்பு</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>8.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>உத்திரமேரூர்</p>
    </td>
    <td width="161">
    <p>உத்திரமேரூர்</p>
    </td>
    <td width="340">
    <p>பொ.ப.து.&nbsp;ஆய்வு மாளிகை வளாகம்,&nbsp;வேடபாளையம்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>9.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>உத்திரமேரூர்</p>
    </td>
    <td width="161">
    <p>அரும்புலியூர்</p>
    </td>
    <td width="340">
    <p>நெல் கொள்முதல் நிலைய வளாகம்,&nbsp;திருமுக்கூடல்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>10.&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>உத்திரமேரூர்</p>
    </td>
    <td width="161">
    <p>குண்ணவாக்கம்</p>
    </td>
    <td width="340">
    <p>கிராம நிர்வாக அலுவலர் வளாகம்,&nbsp;வாடாதவூர்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>11.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>திருப்பெரும்புதூர்</p>
    </td>
    <td width="161">
    <p>திருப்பெரும்புதூர்</p>
    </td>
    <td width="340">
    <p>பொ.ப.து கட்டிடம் வளாகம்,&nbsp;திருப்பெரும்புதூர்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>12.&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>திருப்பெரும்புதூர்</p>
    </td>
    <td width="161">
    <p>மதுரமங்கலம்</p>
    </td>
    <td width="340">
    <p>பள்ளி கட்டிடம் வளாகம்,&nbsp;மதுரமங்கலம்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>13.&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>திருப்பெரும்புதூர்</p>
    </td>
    <td width="161">
    <p>தண்டலம்</p>
    </td>
    <td width="340">
    <p>பள்ளி கட்டிடம் வளாகம்,&nbsp;&nbsp;தண்டலம்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>14.&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>குன்றத்தூர்</p>
    </td>
    <td width="161">
    <p>படப்பை</p>
    </td>
    <td width="340">
    <p>அரசு உயர்நிலை பள்ளி வளாகம்,&nbsp;சோமங்கலம்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>15.&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>குன்றத்தூர்</p>
    </td>
    <td width="161">
    <p>கொளப்பாக்கம்</p>
    </td>
    <td width="340">
    <p>அரசு உயர்நிலை பள்ளி வளாகம்,&nbsp;கொளப்பாக்கம்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>16.&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>திருப்பெரும்புதூர்</p>
    </td>
    <td width="161">
    <p>தண்டலம்</p>
    </td>
    <td width="340">
    <p>நூலக கட்டிட வளாகம்,&nbsp;மண்ணூர்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>17.&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>காஞ்சிபுரம்</p>
    </td>
    <td width="161">
    <p>திருப்புக்குழி</p>
    </td>
    <td width="340">
    <p>அங்கன்வாடிமையம்,&nbsp;கிளார்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td width="57">
    <p>18.&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td width="142">
    <p>உத்திரமேரூர்</p>
    </td>
    <td width="161">
    <p>களியாம்பூண்டி</p>
    </td>
    <td width="340">
    <p>சமுதாயகூடம்,&nbsp;பென்னலூர்</p>
    </td>
    </tr>
    </tbody>
    </table>
    <p style="font-weight: 400; text-align: justify;">&nbsp;</p>
    <p style="font-weight: 400; text-align: justify;">&nbsp;</p>
    <table style="font-weight: 400; width: 746px;" width="669">
    <tbody>
    <tr>
    <td style="width: 731.736px;" colspan="4">
    <h2><strong><u>தானியங்கி வானிலை மையம் அமைவிட விவரம்</u></strong></h2>
    <p><strong>&nbsp;</strong></p>
    </td>
    </tr>
    <tr>
    <td style="width: 72.3611px;">
    <h3><strong>வ</strong><strong>.</strong><strong>எண்</strong></h3>
    </td>
    <td style="width: 162.407px;">
    <h3><strong>வட்டம்</strong></h3>
    </td>
    <td style="width: 162.407px;">
    <h3><strong>குறுவட்டம்</strong></h3>
    </td>
    <td style="width: 294.005px;">
    <h3><strong>தானியங்கி வானிலை மையம் அமைவிடம்</strong></h3>
    </td>
    </tr>
    <tr>
    <td style="width: 72.3611px;">
    <p>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td style="width: 162.407px;">
    <p>திருப்பெரும்புதூர்</p>
    </td>
    <td style="width: 162.407px;">
    <p>திருப்பெரும்புதூர்</p>
    </td>
    <td style="width: 294.005px;">
    <p>வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம்,&nbsp;&nbsp;திருப்பெரும்புதூர்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td style="width: 72.3611px;">
    <p>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td style="width: 162.407px;">
    <p>வாலாஜாபாத்</p>
    </td>
    <td style="width: 162.407px;">
    <p>வாலாஜாபாத்</p>
    </td>
    <td style="width: 294.005px;">
    <p>வட்டாட்சியர் அலுவலக வளாகம்,&nbsp;வாலாஜாபாத்</p>
    </td>
    </tr>
    <tr>
    <td style="width: 72.3611px;">
    <p>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
    </td>
    <td style="width: 162.407px;">
    <p>உத்திரமேரூர்</p>
    </td>
    <td style="width: 162.407px;">
    <p>உத்திரமேரூர்</p>
    </td>
    <td style="width: 294.005px;">
    <p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வளாகம்,&nbsp;வேடப்பாளையம்</p>
    </td>
    </tr>
    </tbody>
    </table>

    Source link

  • Karur Vishwakarma Siddhi Vinayagar Temple Balamurugan Abhishekam – TMM | கரூரில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு அழகன் பாலமுருகனுக்கு ராஜா அலங்காரம்

    Karur Vishwakarma Siddhi Vinayagar Temple Balamurugan Abhishekam – TMM | கரூரில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு அழகன் பாலமுருகனுக்கு ராஜா அலங்காரம்


    கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தின் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் அழகன் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    மாசி மாத கிருத்திகை முன்னிட்டு கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு எண்ணைக் காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, சந்தன காப்பு அலங்காரம் செய்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அழகன் பாலமுருகன் காட்சி அளித்தார்.
     
     

    அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் பாலமுருகனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டினார். தொடர்ந்து சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்த் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
     
    கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சி.
    தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள் நிகழ்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.
     

    இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.
    அதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா  தீபாராதனை நடைபெற்றது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக சுவாமி வெள்ளி கருட வாகன சேவையில் காட்சி அளித்ததை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

    மேலும் காண

    Source link

  • Delhi Train Accident: டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..

    Delhi Train Accident: டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..


    <p>டெல்லியில் உள்ள படேல் நகர் – தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் பெட்டிகள் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.</p>
    <blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
    <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Eight wagons of a goods train derail on Patel Nagar-Dayabasti section in Delhi area. The incident occurred near the Zakhira flyover.<br /><br />(Video source: Delhi Police) <a href="https://t.co/cQieCNsQAV">pic.twitter.com/cQieCNsQAV</a></p>
    &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1758753298566312211?ref_src=twsrc%5Etfw">February 17, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

    Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?


    Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

    Source link

  • சிறுவயதில் இருந்து நீங்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டால் பல்வேறு சாதனைகளை படைக்கலாம் –  கரூர் கலெக்டர் அட்வைஸ்

    சிறுவயதில் இருந்து நீங்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டால் பல்வேறு சாதனைகளை படைக்கலாம் – கரூர் கலெக்டர் அட்வைஸ்


    <p style="text-align: justify;">முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு சார்ந்த இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பரிசுகளை வழங்கினார்.</p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவின் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கபடி போட்டி, கால்பந்து போட்டி மற்றும் கையுந்து பந்து போட்டிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி,வினாடிவினா, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/dd10cb0ff56a9fdf5511a389ea323b701708147622641113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;"><br /><strong>இந்நிகழ்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:</strong></p>
    <p style="text-align: justify;">நமது விளையாட்டுப் போட்டிகள் என்பது உங்களுக்கு புதிதானது ஒன்று அல்ல ஏனென்றால் தமிழ்நாட்டில் நமது விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் வந்த பொழுது உலக அளவில் சிறுவயதில் &nbsp;கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். இவருக்குப் பிறகு இப்பொழுது நடந்த செஸ் விளையாட்டு போட்டிகளில் பிரக்யானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கிரான் மாஸ்டர் பட்டம் வென்றார்கள் நமது தமிழ்நாடு அரசு இளைஞர்களின் ஆற்றலை திறன்களை வெளிக்கொண்டுவதற்கு தனித்துறையினை உருவாக்கி இத்துறைக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களை நியமனம் செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மாணவர்களை ஊக்குவித்தும் அவர்களுடைய இருக்கும் திறமைகளை கண்டறிந்து மேலும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும் பின்னர் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கும் தயார் செய்ய வேண்டும் என்ற பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றது நம்முடைய தமிழக அரசு.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/9a39af019a7d00acf4da41d3245f7e371708147675427113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">அந்த விதத்தில் இப்பொழுது ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் ஒரு விளையாட்டு மைதான அரங்கம் இருக்கின்றது இந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள வளாகத்தில் பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் பெறுவதற்கான விளையாட்டு அம்சங்கள் இருக்கின்றன. அதேபோல் நமது விளையாட்டு மைதான அரங்கில் இன்னும் பல திட்டங்கள் தீட்டி நமது தமிழக அரசிடம் கோரிக்கையை வைத்திருக்கின்றோம் அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசாணைகள் பெற்றதற்கு பிறகு நமது கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் மென்மேலும் சிறப்பு பெறும் இதைத் தவிர தமிழக அரசு ஒவ்வொரு கிராமப்புறத்தில் சிறிய அளவில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு திட்டம் திட்டி இருக்கின்றது இதில் குறிப்பிட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் இளைஞர்களை விளையாட்டு போட்டியில் ஊக்கி வைக்கும் வகையிலும் செயல்பட உள்ளது. அந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்பொழுது விளையாட்டு மைதான அரங்கம் இல்லாத இடமே இல்லை என்ற அளவில் தமிழ்நாடு வந்துவிடும். இன்டர்நேஷனல் செஸ் போட்டியினை நமது தமிழ்நாடு அரசு நடத்தி முடிக்கப்பட்டது உலக தரத்திலான பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்று சென்றார்கள் அதற்கு மேல் தற்போது கேலோ இந்தியா என்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் சென்னை மதுரை போன்ற பெரிய மாநகர நகரங்களில் நடத்தி உங்களைப் போன்ற பல்வேறு இளைஞர்களின் திறன்களை வெளிக்கொண்டு செய்தது. விளையாட்டுப் போட்டிகள் என்பது நமது பாரம்பரிய கலாச்சாரத்துடைய விளையாட்டுகள் என்பது எல்லா வயதிலும் விளையாட கூடிய விளையாட்டுகள் நமது கிராமங்களில் இருக்கின்றன. எனவே மாணவ செல்வங்களாகிய நீங்கள் விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் உடலின் வலிமையையும் மனதின் வலிமையையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்கள்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/1a6a59020578f7e535a03efad0223df91708147716346113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி &nbsp;மேயர் &nbsp;கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குனர் கல்லூரி கல்வி முனைவர்.குணசேகரன்,முதன்மை கல்வி அலுவலர் சுமதி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முனைவர். உமாசங்கர், விளையாட்டு மைதான பயிற்சியாளர் மெய்யநாதமூர்த்தி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Lok Sabha Election 2024 South Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | South Chennai Lok Sabha Constituency: தென் சென்னை மக்களவைத் தொகுதி

    Lok Sabha Election 2024 South Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | South Chennai Lok Sabha Constituency: தென் சென்னை மக்களவைத் தொகுதி

    South Chennai Lok Sabha Constituency: தென்சென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். அந்த வகையில் மாநிலத்தின் மூன்றாவது தொகுதியான, தென்சென்னை மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாற்றை சற்றே விரிவாக அலசி ஆராயலாம்.
    தென்சென்னை மக்களவைத் தொகுதி உருவான வரலாறு: 
    தென்சென்னை மக்களவைத் தொகுதி ( South Chennai Lok Sabha constituency ) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் மூன்றாவது தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் தென் சென்னை மக்களவைத் தொகுதியில்  தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர் மற்றும் தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
    மறுசீரமைப்பை தொடர்ந்து தற்போது தென்சென்னை மக்களவைத் தொகுதியில் விருகம்பாக்கம், சைதாபேட்டை,  தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 
    தென்சென்னை மக்களவைத் தொகுதி எப்படி?
    தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் தென்சென்னையும் ஒன்று. இந்தத் தொகுதியில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பழமை வாய்ந்த பல மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாப் பகுதிகள், பிரபலமான கல்வி நிறுவனங்கள், மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள்,  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த தொகுதியில் உள்ளன. அதிகளவில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட இந்த தொகுதியில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.
    ஆடை, ஆபரணங்களுக்கு பெயர் போன தியாகராயநகர், கோயம்பேடு மார்கெட் போன்ற தமிழகத்தின் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும், பல ஆயிரம் கோடிகள் புரளும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் தென்சென்னை தொகுதியில் உள்ளன. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் தென் சென்னை உள்ளடக்கியுள்ளது.
    தொகுதியின் பிரச்னை என்ன?
    திருவான்மியூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல், பெருங்குடி குப்பை மேடு அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை அங்கு சரியாக கையாளப்படவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு. தென் சென்னைத் தொகுதியில், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்னும் குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் சிக்கல் உள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிகால்கள், கழிவுநீர்ப் பாதைகளுக்கான பணிகள் மந்தகதியிலேயே நடந்துவருகின்றன. தியாகராய நகர் பேருந்து நிலைய விரிவாக்கம், நடைபாதை கடைகள் அகற்றம் இத்தொகுதிகளின் தீர்க்கப்படாத நீண்டகாலப் பிரச்னைகளாக உள்ளன.
    தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
    தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி வாகை சூடியுள்ளது. மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை நாடாளுமன்றத்திற்கு தேர்வானது இந்த தொகுதியில் இருந்து தான். இத்தொகுதி உருவாகி, 34 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் 1991 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக வெற்றியை ருசித்தது.



    ஆண்டு
    வெற்றி பெற்றவர்
    கட்சி


    1957
    கிருஷ்ணமாச்சாரி
    காங்கிரஸ்


    1962
    நாஞ்சில் கி. மனோகரன்
    திமுக


    1967
    பேரறிஞர் அண்ணா
    திமுக


    1967 (இ.தே)
    முரசொலி மாறன்
    திமுக


    1971
    முரசொலி மாறன்
    திமுக


    1977
    வெங்கட்ராமன்
    காங்கிரஸ்


    1980
    வெங்கட்ராமன்
    காங்கிரஸ்


    1984
    வைஜெயந்தி மாலா
    காங்கிரஸ்


    1989
    வைஜெயந்தி மாலா
    காங்கிரஸ்


    1991
    ஸ்ரீதரன்
    அதிமுக


    1996
    டி.ஆர். பாலு
    திமுக


    1998
    டி.ஆர். பாலு
    திமுக


    1999
    டி.ஆர். பாலு
    திமுக


    2004
    டி.ஆர். பாலு
    திமுக


    2009
    ராஜேந்திரன்
    அதிமுக


    2014
    ஜெயவர்த்தன்
    அதிமுக


    2019
    தமிழச்சி தங்கபாண்டியன்
    திமுக


     
     
     

    வாக்காளர்கள் விவரம் (2024):
    ஆண் வாக்காளர்கள் – 9,93,590
    பெண் வாக்காளர்கள் – 10,13,772
    மூன்றாம் பாலினத்தவர் – 454
    மொத்த வாக்காளர்கள் – 20,07,816
    சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
    விருகம்பாக்கம் – ஏ.எம்.வி. பிரபாகர் (திமுக)
    சைதாப்பேட்டை – மா. சுப்பிரமணியம் (திமுக)
    தியாகராய நகர் – ஜெ. கருணாநிதி (திமுக)
    மைலாப்பூர் – த. வேலு (திமுக)
    வேளச்சேரி – அசன் மவுலானா (காங்கிரஸ்)
    சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ் (திமுக)
    தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் சாதித்தது, சறுக்கியது என்ன? 
    சித்தாலப்பாக்கம் கிராமத்தை தத்தெடுத்து மாதிரி கிராமமாக்கியுள்ளார்.  விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் எட்டுக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.  கொட்டிவாக்கத்தில் மீன் அங்காடி கட்டுவது போன்றவை மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. தொகுதி முழுவதும் பேருந்து நிறுத்தங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகியவற்றோடு,  பள்ளிக்கரணை சதுப்புநில மீட்பு நடவடிக்கையும் பொதுமக்களிடையே நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்கள் சலுகை குறித்து யுஜிசியை வலியுறுத்தி தீர்வு காண்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு கோரிக்கைகள் வரிசை கட்டினாலும், வாக்குறுதிகளில் 50 சதவீதத்தை நிறைவேற்றியிருப்பது பாசிட்டிவ் ஆகவே பார்க்கப்படுகிறது.
    அதேநேரம், தகவல் தொழில்நுட்ப மையத்தின் கிளஸ்டர் அமைக்கப்படாததால், குறைந்தளவிலான ஐடி நிறுவனங்களே தென்சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அறிவித்தபடி பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படவில்லை என்பதுடன், தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பணி முழுமை அடையாதது, சோழிங்கநல்லூரில் மத்திய அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்காததும் நெகட்டிவாக பார்க்கப்படுகிறது.

    Source link

  • Kanchipuram Kamatchi Amman Temple celebration of Masi month Brahmotsavam Kamakshi Amman strolled down Thiruveedi in a silver Chandra Prabhai vehicle

    Kanchipuram Kamatchi Amman Temple celebration of Masi month Brahmotsavam Kamakshi Amman strolled down Thiruveedi in a silver Chandra Prabhai vehicle


    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் இரவு உற்சவம். வெள்ளி சந்திரப்பிரபை வாகனத்தில் திருவீதி உலா வந்த காமாட்சி அம்மன்
    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம் ( kanchi kamakshi temple brahmotsavam 2024 )
    சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை ஒட்டி நடைபெற்ற இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் வெள்ளை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லி பூ மாலை அணிந்து கொண்டு  காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் வெள்ளி சந்திரப்பிரபை  வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
     
    பின்னர் மேள தாளங்கள் முழங்க வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார். ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

    வெள்ளித் தேரோட்டம்:
     
    பிப்.17 ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் அலங்காரமாகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனையடுத்து விடையாற்றி உற்சவம் வரும் 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று புஷ்பப்பல்லக்கில் அம்மன் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. தினசரி இரவு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன், செயல் அலுவலர் எஸ். சீனிவாசன் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    காஞ்சி காமாட்சி 
    கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான். பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார். பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் இறுதியாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டுள்ளனர். பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது .
    அன்னை பார்வதி:
    சிவபெருமானின் வாக்குப்படி, அனைவரும் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டுள்ளனர். அத்தருணம் பராசக்தி, காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் மற்றும் முனிவர்கள் அன்னை பராசக்திடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளனர்
    கருணை உள்ளம் படைத்த அன்னை பார்வதி முனிவர்கள் மற்றும் தேவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார்.  பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பராசக்தி 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார்.

    மேலும் காண

    Source link

  • The police department is looking for the mysterious persons who shot dead 20 stray dogs in Telangana state

    The police department is looking for the mysterious persons who shot dead 20 stray dogs in Telangana state


    தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் 20 தெருநாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 5 தெரு நாய்கள் படுகாயம் அடைந்துள்ளது.  

    #WATCH | Telangana: Around 20-25 dogs found dead and several injured in Ponnakal village of Mahabubnagar district, today. Adulapuram Goutham an activist of Stray Animal Foundation of India says, “According to the locals, after midnight, a few masked men came in the car and… pic.twitter.com/s1YFpKfFFN
    — ANI (@ANI) February 17, 2024

    சுட்டுக்கொல்லப்பட்ட தெரு நாய்கள்:
    வியாழக்கிழமை இரவு பொனக்கல் பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து அப்பகுதியில் இருந்த தெருநாய்களை குறிவைத்து சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் 20 நாய்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 5 நாய்கள் படுகாயம் அடைந்தது. இதனை தொடர்ந்து வெள்ளிகிழமை காலை இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த தெருநாய்களை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
    குற்றவாளிகளுக்கு வலைவீச்சு?
    இதனை தொடர்ந்து காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை பார்த்த சாட்சி ஒருவர், குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்கள் காரில் வந்ததாகவும், அவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  பஞ்சாயத்து அதிகாரியின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 429 (விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது) மற்றும் ஆயுதச் சட்டம் தவிர விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்த கொடூர செயல்களை செய்த நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
     

    மேலும் காண

    Source link

  • Siragadikka Aasai: விஜயா சொன்ன பெயர்! உடையப்போகும் ரோகினியின் ரகசியம் – சிறகடிக்க ஆசையில் இன்று!

    Siragadikka Aasai: விஜயா சொன்ன பெயர்! உடையப்போகும் ரோகினியின் ரகசியம் – சிறகடிக்க ஆசையில் இன்று!


    <p>சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.</p>
    <h2><strong>கேள்வி கேட்கும் மீனா:</strong></h2>
    <p>மீனா &rdquo;சொல்லுடா உன்னை யாருடா அடிச்சா?&rdquo; என சத்யாவிடம் கேட்கிறார். பின் மீனா சத்யாவை அடிக்கிறார். வட்டி பணம் வாங்க சென்ற போது முத்து மாமா தன் கையை முறுக்கியதாகக் கூறுகிறார் சத்யா. &rdquo;சத்யா பொய் சொல்லாத&rdquo; என்கிறார் மீனா. &rdquo;எவ்ளோ சொல்லி பார்த்தேன்&rdquo; மாமா கேட்கல என்கிறார் சத்யா. அவரு குடிச்சிருந்தாருனு நினைக்குறேன் ஒரு மாதிரி ஸ்மெல் வேற வந்துச்சி&rdquo; என்கிறார் சத்யா.&nbsp;</p>
    <p>மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே என மீனாவின் அம்மா அழுகிறார். மீனா கார் செட்டுக்கு சென்று செல்வத்தை திட்டுகிறார். முத்து எழுந்து வந்து &rdquo;என்னவாம்&rdquo; எனk கேட்கிறார். &rdquo;என் தம்பி கையை உடைக்கும் போது இப்படிதான் குடிச்சி இருந்திங்களா? கொஞ்சம் கூட மனசாட்சியா இல்லையா உங்களுக்கு&rdquo; எனக் கேட்கிறார் மீனா. &rdquo;குடி மட்டும் போதும் உங்களுக்கு அப்படித்தானே&rdquo; எனக் கேட்கிறார் மீனா.&nbsp;</p>
    <p><strong>அழும் மீனா:</strong></p>
    <p>&rdquo;உங்க புத்தி மாறவே மாறாது&rdquo; என சொல்லிவிட்டு மீனா அங்கிருந்து வீட்டிற்குச் செல்கிறார். மீனா வீட்டிற்கு சென்று அழுது கொண்டிருக்கிறார். ஸ்ருதி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். &rdquo;ஆனா இவ சொல்ற காரணம் தான் நம்ப முடியல வட்டி சிட்டினு ஏதேதோ காரணம் சொல்லிக்கிட்டு இருக்கா&rdquo; என்கிறார் விஜயா. உடனே ரோகினி அதிர்ச்சி அடைகிறார். &rdquo;நம்ப வேற சிட்டிக்கிட்ட கடன் வாங்கி இருக்கோம், அவனை வேற இந்த மீனா அவங்க தம்பிக்கு தெரிஞ்சி இருக்கு&rdquo; என மனதிற்குள் நினைக்கின்றார்.&nbsp;</p>
    <p>முத்து வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை, ரவி ஆகியோர் சத்யாவை அடித்தது குறித்து கேட்கின்றனர். ஆனாலும் முத்து உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். &ldquo;கண்டவன் கூட சேர்ந்து சுத்திக்கிட்டு திரிஞ்சா இப்டிதான் ஆகும்&rdquo; என்கிறார் முத்து. &rdquo;நான் என்ன கேட்குறேன் நீ என்ன பதில் சொல்ற? அவன் கைய ஏன் உடச்ச&rdquo; எனக் கேட்கிறார் அண்ணாமலை. &rdquo;வேண்டாம் மாமா அவரு கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். நாங்க ஏழைங்க தானே, எங்கள எல்லாம் அடிச்சா என்ன கேட்க நாதியா இருக்கு&rdquo;என மீனா அழுகிறார்.&nbsp;</p>
    <p>&rdquo;எனக்கு என்னமோ இவன் அவனுக்கு காசு கொடுத்து இருப்பான், அதை திருப்பி கேட்க போய் தான் பிரச்சனை ஆகி இருக்கும்னு நினைக்கின்றேன்&rdquo; என்கிறார் விஜயா. &rdquo;அவன் ஏற்கெனவே ஒருமுறை நம்ம வீட்ல பைக்க திருடுனவன் தானே இப்போ என்ன பண்ணி வச்சானோ&rdquo; என்கிறார் மனோஜ். &rdquo;அவன் இப்போ ஒழுங்கா படிக்குறான். பார்க்ல போய் உட்கார்ந்து தூங்கல&rdquo; என்கிறார் மீனா. அண்ணாமலை சத்யாவிடம் முத்துவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். &rdquo;முடியாதுப்பா&rdquo; எனச் சொல்லுகிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.&nbsp;</p>

    Source link

  • Ind Vs Eng Anand Mahindra Give Thar To Sarfaraz Khan Father Naushad Khan Latest Tamil News

    Ind Vs Eng Anand Mahindra Give Thar To Sarfaraz Khan Father Naushad Khan Latest Tamil News

    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தியா – இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் அறிமுகமானார். இது மேலும், இந்த போட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. 

    Eyes tears ❤‍🩹Congrats Sarfaraz💙#SarfarazKhanpic.twitter.com/AfjSsYGs2G
    — Wrong way (@wrongway021) February 16, 2024

    அசத்திய சர்பராஸ்:
    இந்திய அணியின் இடம் பிடிப்பதற்காக சர்பராஸ்கான் நீண்ட நாட்களாக உழைத்து வந்தார். அவரது கடின உழைப்பிலும், வெற்றியிலிம் அவரது தந்தை நௌஷாத் கானின் பங்கானது யாராலும் மறக்க முடியாது. சர்பராஸ் கான் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனபோது அவரது தந்தை நௌசாத் கான் மிகவும் உணர்ச்சிப்பட்டு அழுதார். இந் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திர சர்பராஸ் கானின் தந்தையின் கடின உழைப்புக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். மேலும், நௌஷாத் கானை பாராட்டி, அவருக்கு அருமையான பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

    “Himmat nahin chodna, bas!”Hard work. Courage. Patience. What better qualities than those for a father to inspire in a child?For being an inspirational parent, it would be my privilege & honour if Naushad Khan would accept the gift of a Thar. pic.twitter.com/fnWkoJD6Dp
    — anand mahindra (@anandmahindra) February 16, 2024

    நௌஷாத் கானுக்கு அப்படி என்ன பரிசு..?
    தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், “ ஒரு உத்வேகம் தரும் பெற்றோராக இருந்து, நௌஷாத் கான் என்னிடமிருந்து தார் காரை பரிசாக ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியமாகவும், கௌரவமாகவும் கருதுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், நௌஷாத் கானுக்கு ஆனந்த் மஹிந்திரா தார் காரை பரிசளித்ததை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதற்காக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆனந்த் மஹிந்திராவை பாராட்டி வருகின்றனர். 
    அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த சர்பராஸ் கான்:
    சர்பராஸ் கான் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ்களிலேயே சிறப்பாக விளையாடி 62 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அவுட்டானதற்கு பின் சர்பராஸ் கான் பயமின்றி பேட்டிங் செய்ததை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
    சர்பராஸ் கான் முதல் தர போட்டி:
    முதல் தர போட்டிகளில் இதுவரை சிறப்பாக விளையாடியுள்ள சர்பராஸ் கான், முச்சதம் உள்பட 14 சதங்கள் அடித்துள்ளார். இதுவரை 45 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் 14 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் உதவியுடன் 3912 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டமிழக்காமல் 301 ரன்கள் எடுத்ததே இவரது சிறந்த ஸ்கோர். இதேபோல், 37 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 629 ரன்களும்,  96 டி20 போட்டிகளில் விளையாடி 1188 ரன்கள் எடுத்துள்ளார். 

    Source link

  • Minister KN Nehru provided welfare assistance to 1,673 beneficiaries under the People with CM programme – TNN

    Minister KN Nehru provided welfare assistance to 1,673 beneficiaries under the People with CM programme – TNN


    சேலம் மாநகர் தொங்கும் பூங்காவில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள் துறை, மாநகராட்சி, எரிசக்தித் துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவுத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் வாயிலாக 1,673 பயனாளிகளுக்கு ரூ.7.82 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சிகள் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சில நாள்களுக்கு முன் செய்தித்தாள் மூலம் ஒரு செய்தியை படித்தேன். பட்டா மாறுதல் வேண்டும் என்று ஒரு நபர் 28 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். தற்போது “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் மூலம் மனு அளித்த ஒரே நாளில் மனுதாரருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. “மக்களுடன் முதல்வர்” திட்டமானது பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையிலான சிறப்பான திட்டமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் சேலம் மாவட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1,000 வீதம் 5.50 இலட்சம் மகளிருக்கு உதவித்தொகையும், காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1,504 பள்ளிகளில் பயிலும் 99,690 மாணாக்கர்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் 18.91 கோடி மகளிர் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வீதம் 24,933 மாணவிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 82,837 மாணவ, மாணவிகளுக்கு திறன் பயிற்சிகளும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 29,51,068 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு, 6,91,435 நபர்களுக்கு சிகிச்சைகளும், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் 12,305 நபர்களும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

    மேலும், 10,29,553 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.209.11 கோடி ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளும், 76,031 புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், 7,436 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முதல்வரின் முகவரித் துறையின் மூலம் பெறப்பட்ட 1,42,454 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நமக்கு நாமேத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் ரூ. 52.71 கோடி மதிப்பில் 339 பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.96.53 கோடி மதிப்பில் சேலம், பழைய பேருந்து நிலையமும், ரூ. 28.59 கோடி மதிப்பில் பள்ளப்பட்டி ஏரியும் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும், அய்யந்திருமாளிகை பள்ளி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம், தம்மண்ணன் ரோடு. லீ பஜார் ரோடு, சீத்தாராமன் ரோடு ஆகியவை ரூ.34 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய 3 நீர்நிலைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ரூ.548 கோடி மதிப்பீட்டில் 520 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ.26.52 கோடி மதிப்பீட்டில் 53,336 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும், “எண்ணும், எழுத்தும்” திட்டத்தின் மூலம் 1,75,165 மாணவ, மாணவிகளும், “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் மூலம் 10,589 மையங்கள் தொடங்கப்பட்டு. 1,16,128 மாணவ, மாணவிகளும் பயனடைந்துள்ளனர். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 51,748 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலம் 192 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,84,769 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதுதவிர பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்வர் சேலம் மக்களின் நலனுக்காக சாலைப் பணிகள், பாலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, சேலம் மாநகராட்சிக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெறுகிறது என்றும் கூறினார்.

    மேலும் காண

    Source link

  • குழந்தை நல குழுவில் உறுப்பினராக விருப்பமா ?-  தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

    குழந்தை நல குழுவில் உறுப்பினராக விருப்பமா ?- தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது


    <p style="text-align: justify;" align="center"><strong>குழந்தை நலக்குழுவிற்கு 1 உறுப்பினர் நியமனம் செய்தல் தொடர்பாக.</strong></p>
    <p style="text-align: justify;">2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுவிற்கு காலியாக உள்ள 1 உறுப்பினர் பணியிடத்தினை நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.</p>
    <p style="text-align: justify;">விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.</p>
    <p style="text-align: justify;">ஒரு நபர் குழந்தை நல குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். இதற்கான விண்ணப்ப படிவத்தை செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.&nbsp; தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.</p>
    <p style="text-align: justify;"><strong>இயக்குநர்,</strong></p>
    <p style="text-align: justify;"><strong>சமூகப்பாதுகாப்புத்துறை,</strong></p>
    <p style="text-align: justify;"><strong>எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,</strong></p>
    <p style="text-align: justify;"><strong>சென்னை 600 010.</strong></p>
    <p style="text-align: justify;">பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.&nbsp; இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <hr />
    <p style="text-align: justify;">குரூப்-2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.</p>
    <p style="text-align: justify;">அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகியாது.&nbsp;</p>
    <p style="text-align: justify;">ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.12 முதல் பிப்.17ம் தேதி வரை நடைபெறும். இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி-21ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.</p>
    <p style="text-align: justify;">நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த மாதம் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது.</p>
    <p style="text-align: justify;">நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ்&zwnj; சரிபார்ப்புக்கான முடிவுகள்&zwnj; தேர்வாணைய வலைதளத்தில்&zwnj; இருவழித்&zwnj; தொடர்பு முறையில்&nbsp;(Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;">கூடுதல் தகவல்களுக்கு:&nbsp;<a href="https://www.tnpsc.gov.in/" rel="nofollow">https://www.tnpsc.gov.in/</a>&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Anbumani Ramadoss question government provide employment to 60,567 people in Tamil Nadu in 3 years

    Anbumani Ramadoss question government provide employment to 60,567 people in Tamil Nadu in 3 years


    தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? உண்மை நிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858  பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், மொத்தமாக  60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி  வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும் போது  முதலமைச்சர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண்பாடுகள் தான் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
    60 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டதா..? 
    சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’திமுகவின் இரண்டாண்டு  ஆட்சியில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது’’  என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு  அரசுப் பணிக்கு இன்னும் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும் பிற நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை.  பிற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1598 பேருக்கு இப்போது தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியானால், எங்கிருந்து 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன? என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்.
    முதலமைச்சர் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 24,879 பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.  இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
    திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை, ஐந்தாண்டுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒரு லட்சம் பேருக்கு வேலை என மொத்தம் ஆறரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது  அரசு வேலை வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதில் 10%  அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை.
    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை.  தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து 70 லட்சம் பேர், பதிவு செய்யாமல் 60 லட்சம்  பேர் என மொத்தம் 1.30 கோடி பேர் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நிலையில், அரசு வேலைகளை வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
    வெள்ளை அறிக்கை வெளியிடுக: 
    தமிழ்நாட்டில் இன்னும் இரு ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், அக்காலத்தில் 50 ஆயிரம் பேருக்கு  அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இன்னும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட,  ஒட்டுமொத்தமாக அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கும். இதற்கும், திமுக அளித்த வாக்குறுதிக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இது தமிழ்நாட்டில் படித்து விட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு ஒப்பானது ஆகும்.
    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 3 ஆண்டுகளில் இதுவரை எந்தெந்த துறைகளில், எந்தெந்த நிலைகளில் எத்தனை பேருக்கு  நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.  மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும்; தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும்  என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற  என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது? என்பது குறித்தும்  தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது. 

    மேலும் காண

    Source link

  • Lok Sabha Election 2024 North Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures abpp | North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவைத் தொகுதி

    Lok Sabha Election 2024 North Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures abpp | North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவைத் தொகுதி


    North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024:
    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை தொகுப்பாக அலசி வருகிறோம். அந்த வகையில் மாநிலத்தின் இரண்டாவது தொகுதியான, வடசென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை சற்றே விரிவாக பார்க்கலாம்.
    வடசென்னை மக்களவைத் தொகுதி உருவான வரலாறு: 
    வடசென்னை மக்களவைத் தொகுதி ( North Chennai Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் இரண்டாவது தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவைத் தொகுதியில், ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
    மறுசீரமைப்பின்போது பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போதுள்ள வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர்,  ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர்,  கொளத்தூர்,  திரு.வி.க. நகர் (தனி) மற்றும் ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 
    வடசென்னை மக்களவைத் தொகுதி எப்படி?
    தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் வடசென்னையும் ஒன்று. வடசென்னை மக்களவைத் தொகுதியில் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் ஆகியோரின் வாக்குகளே வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன.  தமிழக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், ஆயிரக்கணக்கான கனரக, நடுத்தர மற்றும் குறு-சிறு தொழிற்சாலைகள் வடசென்னையில் தான் அமைந்துள்ளன. இங்கு நாடார் சமூக வியாபாரிகள் கணிசமாக உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதியாகவும் வடசென்னை உள்ளது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டுமானாலும் அவர்களின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது. 
    தொகுதியின் பிரச்னை என்ன?
    வடசென்னையை பொறுத்தவரை முக்கிய பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் என்பது நெடுங்காலமாக தொடர்கிறது. துர்நாற்றம் வீசும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, சுத்திக்கரிக்கப்படாத சாக்கடை கழிவுகள், சட்டவிரோதமாகத் திறந்து விடப்படும் ரசாயனக் கழிவுகளால் சீரழிவின் விளிம்பில் உள்ள பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கபடாதது மற்றும் கடற்கரையில் தொடர்ந்து ரசாயனக் கழிவுகள் கொட்டப்படும் பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளன. மழைநீர் வடிகால் பணிகள் இன்னமும் முழுமையடையாததால், கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் கூட வடசென்னை மக்கள் கடும் அவதிக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
    வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
    மக்களவைத் தேர்தல்களில் திமுகவின் கோட்டையாக விளங்குவது வடசென்னை தொகுதிதான். இதுவரை 11 மக்களவைத் தேர்தல்களில் திமுக இங்கே வெற்றி பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு, நடைபெற்ற 3 தேர்தல்களிலும் திமுக தான் இரண்டு முறை வெற்றி வாகை சூடியுள்ளது. வடசென்னை மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தான், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மூன்று முறையும் சட்டசபைக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.



    ஆண்டு
    வெற்றி பெற்றவர்
    கட்சி


    1957
    அந்தோணிப்பிள்ளை
    சுயேட்சை


    1962
    சீனிவாசன்
    காங்கிரஸ்


    1967
    மனோகரன்
    திமுக


    1971
    மனோகரன்
    திமுக


    1977
    ஆசைத்தம்பி
    திமுக


    1980
    லட்சுமணன்
    திமுக


    1984
    சோமு
    திமுக


    1989
    பாண்டியன்
    காங்கிரஸ்


    1991
    பாண்டியன்
    காங்கிரஸ்


    1996
    சோமு
    திமுக


    1998
    குப்புசாமி
    திமுக


    1999
    குப்புசாமி
    திமுக


    2004
    குப்புசாமி
    திமுக


    2009
    டி.கே.எஸ். இளங்கோவன்
    திமுக


    2014
    வெங்கடேஷ் பாபு
    அதிமுக


    2019
    கலாநிதி வீராசாமி
    திமுக


     
     
     

    வாக்காளர்கள் விவரம் (2024):
    ஆண் வாக்காளர்கள் – 7,24,968
    பெண் வாக்காளர்கள் – 7,59,208
    மூன்றாம் பாலினத்தவர் – 513
    மொத்த வாக்காளர்கள் – 14,84,689
    சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
    திருவொற்றியூர் – கே.பி. சங்கர் (திமுக)
    ராதாகிருஷ்ணன் நகர் – ஜான் எபிநேசர்.ஜே (திமுக)
    பெரம்பூர் – ஆர்.டி.சேகர் (திமுக)
    கொளத்தூர் – மு.க. ஸ்டாலின் (திமுக)
    திரு.வி.க. நகர் (தனி) – பி.சிவகுமார் (திமுக)
    ராயபுரம் – மூர்த்தி.ஐட்ரீம் (திமுக)
    வடசென்னை எம்.பி., கலாநிதி விராசாமி சாதித்ததும், சறுக்கியதும்?
    எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் 141 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைத்து கொடுத்து பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசின் நிதி உதவியோடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் 98 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை துவங்க ஒப்புதல் பெற்றுள்ளார்.
    அதேநேரம்,  கொடுங்கையூர் குப்பைமேட்டை அகற்றி சீரமைக்கப்படும் தேர்தல் வாக்குறுதிக்கான பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளன. சென்னை துறைமுகத்திற்கு செல்லும் மணலி சாலை திருவொற்றியூர் சந்திப்புக்கு கடல் வழியாக மேம்பாலம் கட்டுவது,   ராயபுரம் ரயில் நிலையத்தை மும்முனை ரயில் நிலையமாக மாற்றுவது,  எண்ணூரில் இருந்து துறைமுகம் செல்லும் பறக்கும் சாலை அமைத்தல் மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கலாநிதி வீராசாமி நிறைவேற்றவில்லை.
     

    மேலும் காண

    Source link

  • Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்?

    Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்?


    Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்?

    Source link

  • alexei navalny death case: vladimir putin responsible for alexei navalny death american president joe biden allegation | Alexei Navalny Death Case: அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதினே காரணம்

    alexei navalny death case: vladimir putin responsible for alexei navalny death american president joe biden allegation | Alexei Navalny Death Case: அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதினே காரணம்


    ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் பிதினே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக விமர்சித்துள்ளார். 
    எதிர்க்கட்சித் தலைவர் மரணம்:
    ரஷ்யாவில் புதினை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புதினுக்கு எதிராக ரஷ்யாவில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின் விமான விபத்து ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 
    அதனை தொடர்ந்து, புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு சமீபத்தில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், சிறையில் இருந்தபோது அவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. 
    மரணம் ஏற்பட்டது எப்படி?
    இதை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம் தொடர்பாக சிறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “அலெக்ஸி நவல்னி தினந்தோறும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இந்தநிலையில், எப்போதும் போல நடைபயிற்சி சென்று வந்த நவல்னி, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினு, அவர் நீண்ட நேரமாக சுயநினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. 
    சில மணிநேரத்தில் அலெக்ஸி நவல்னியின் மரணமடைந்ததாக சுகாதார பணியாளர்கள் உறுதி செய்தனர். மரணத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என தெரிவித்தது. அலெக்ஸி நவல்னி நடைப்பயணத்திற்குப் பின் மயங்கி விழுந்து இறந்ததாக ரஷ்ய பெடரல் சிறைச் சேவை நேற்று தெரிவித்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை சிறை நிர்வாகம் வெளியிடவில்லை.

    #WATCH | On the death of jailed Russian opposition figure and Kremlin critic Alexey Navalny, US President Joe Biden says, “…Putin is responsible for Navalny’s death. Putin is responsible…”(Video source: Reuters) pic.twitter.com/6xpoKvAnA4
    — ANI (@ANI) February 17, 2024

    எதிர்க்கட்சி தலைவர் மரணத்திற்கு புதினே காரணம்: 
    இந்தநிலையில், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் பிதினே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக விமர்சித்துள்ளார். அதில், “ ரஷ்ய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவல்னியின் மரணத்தில் பெரியளவில் சந்தேகம் எழுகிறது. புதின் தனது சொந்த மக்களுக்கு எதிராக பயங்கரமான குற்றங்களைச் செய்கிறார். நவல்னிக்கு என்ன நடந்தது என்பது புதினின் கொடுமைக்கு மேலும் சான்று. இதற்கு புதின்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்றார். 
    அலெக்ஸியின் தாய் என்ன சொன்னார்?
    நவல்னியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிறை துறை வெளியிட்ட அறிக்கைகள் பொய் என  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அலெக்ஸின் தாய் லியுட்மிலா ” என் மகன் உயிருடன் இருக்கும்போது நலமுடன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறினார். இப்போது திடீரென என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றுகிறது.” என தெரிவித்தார். 

    மேலும் காண

    Source link

  • Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

    Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை


    தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் காண

    Source link

  • கரூர் கல்யாண வெங்கட்ராம சுவாமி ஆலயத்தில்  தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்

    கரூர் கல்யாண வெங்கட்ராம சுவாமி ஆலயத்தில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்


    <p style="text-align: justify;"><strong><em>அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு ஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது.</em></strong></p>
    <p style="text-align: justify;">தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இதன் முக்கிய நிகழ்வாக இன்று ஆலயக்கொடி மரத்தில் கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/aa6ea6ab5b1df89b1c5caf739868b60f1708092992540113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதியபடி சக்கரத்தாழ்வார் ஆலய வளம் பிறகு மேள தாளங்கள் முழங்க கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு சந்தன பொட்டிட்டு, பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் பட்டாச்சாரியார்கள் ஒன்று கூடி கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், மஞ்சள், துளசி உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/ff140c5368285dc8dcedeac0ca4b7c1d1708093025078113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">அதன் தொடர்ச்சியாக கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய வாசலில் திருதேர்க்கு தேவையான பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து திருத்தேர் பராமரிப்பு பணியும், பாதுகாப்பு பணியும் ஆலய நிர்வாகிகள் சார்பாக நடைபெற்று வருகிறது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/61c17c8add23c271056f413d2d59eef31708093051513113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி கருட வாகனம், வெள்ளி கருட வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், கஜலட்சுமி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் இன்று (நேற்று) முதல் இரவு திருவீதி உலா காட்சி தருகிறார். மேலும் வருகின்ற 24.02.2024 சனிக்கிழமை காலை 08.15 முதல் 08.45 மணிக்குள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து அன்று மாலை சுவாமி வண்டி கால் நிகழ்ச்சியும் நடைபெறும்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/221c80151f835ebf544c0819bb1c885f1708093114032113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">பின்னர் வருகின்ற 26.02.2024 திங்கட்கிழமை மாலை 06:30 மணிக்குள் ஆலையம் அருகே உள்ள தெப்பத்தில் சுவாமி எழுதருளி தொடர்ச்சியாக மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுவார். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தற்போது ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.</p>

    Source link

  • The water inflow of Mettur dam has remained at 54 cubic feet for the fourth day

    The water inflow of Mettur dam has remained at 54 cubic feet for the fourth day


    தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக அதிகரித்துள்ளது. 

    நீர்மட்டம்:
    அணையின் நீர் மட்டம் 65.49 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 28.94 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
    இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகள்:
    கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

    மேலும் காண

    Source link

  • top news India today abp nadu morning top India news February 16th 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 16th 2024 know full details



    ஒன் பிளஸ் 12ஆர் மாடல் ஆனதா வீண்? ரிட்டர்ன் கொடுத்து பணத்தை வாங்கிக்கோங்க!

    ஒன்பிளஸ் ஆர் மாடல் செல்போன்களை திருப்பிக் கொடுக்க, பயனாளர்களுக்கு மார்ச் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. One Plus நிறுவனம் தனது One Plus 12R மாடல் செல்போன்களை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதில்,  12R 256GB வெர்ஷன் ஆனது UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
    இருப்பினும், பல பயனர்கள் அந்த வெர்ஷனின் குறைந்த வாசிப்பு மற்றும் எழுதும் வேகம் குறித்து புகார்களை எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம், பிழையை ஒப்புக் கொண்டதோடு OnePlus 12R இன் அனைத்து வெர்ஷன்களும் UFS 3.1 சேமிப்பகத்துடன் மட்டுமே வருகின்றன என்பதை உறுதிப்படுத்தியது. மேலும் படிக்க..

    ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் – உங்கள் ஊருக்கு என்ன பலன் தெரியுமா?

    பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதோடு, அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளார். மேலும் படிக்க..

    இன்று விண்ணில் பாயும் GSLV-F14 விண்கலம் – நோக்கம் இதுதான்!

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம் மூலம், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. வானிலை மற்றும் பேரிடர்  எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக  GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் நேற்று பிற்பகல் 02.05 மணிக்கு தொடங்கியது. மேலும் படிக்க..

    முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்; தற்காலிகமாக செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் ஒப்புதல்

    அகில இந்திய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியதாக இன்று அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கண்டனங்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக முறையிடப்பட்டது. இதனால், வருமானவரித்துறை தரப்பில் இருந்து தற்காலிகமாக வங்கிக் கணக்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க..

    பெருமூச்சு விட்ட மக்கள்! பேடிஎம் பேமெண்ட் சேவையை நிறுத்த கூடுதல் அவகாசம் – எத்தனை நாட்கள் தெரியுமா?

    இந்தியாவின் மிகப்பெரிய நிதி பரிமாற்ற தளமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  பேடிஎம் வங்கி விதிமுறைகளி மீறி பணப் பரிமாற்றம் செய்தது என பல  குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் படிக்க..

    மேலும் காண

    Source link

  • Crime: தொழிலில் ஏற்பட்ட போட்டி! திருநங்கையை அடித்து கொன்ற சக திருநங்கைகள்!

    Crime: தொழிலில் ஏற்பட்ட போட்டி! திருநங்கையை அடித்து கொன்ற சக திருநங்கைகள்!


    <p><strong>செம்மஞ்சேரி:</strong> பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிம்மி (வயது 21) திருநங்கை. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர்கள் அவரை காணவில்லை என நீலாங்கரை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, தாழம்பூர் ஆகிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p>
    <h2><strong>திருநங்கை கொலை:</strong></h2>
    <p>புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சிம்மியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 28 ஆம் தேதி செம்மஞ்சேரி, ராஜீவ் காந்தி சாலை அடுத்து முட்புதரில் அழுகிய நிலையில் ஓர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர் உடலில் வெட்டுக் காயம் இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.</p>
    <p>இதனால் சிம்மியின் பெற்றோரை அழைத்துள்ளனர். அவர்கள் அந்த உடலை பார்த்து சிம்மி என உறுதி செய்தனர். பின்னர் சிம்மியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் சிம்மி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவர் மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றி விசாரணை தொடங்கினர்.</p>
    <h2><strong>5 திருநங்கையினர் கைது:</strong></h2>
    <p>பின் உடல் மீட்கப்பட்ட பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிம்மி உடல் கிடைத்த இடத்தில் 4 திருநங்கைகள் வெளியே வந்தது தெரியவந்தது. இதனால் இவர்கள் சிம்மி கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால் அந்த கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.</p>
    <p>இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி 60 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில் ஐந்து திருநங்கையினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த திருநங்கையரான அபர்ணா (வயது 27), ஆனந்தி (வயது 37), ரதி (வயது 36), கண்ணகி நகரைச் சேர்ந்த அபி (வயது 32), ஆகியோர் கஞ்சா தொழிலில் இருந்த போட்டியின் காரணமாக சிம்மியை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையின் அடைத்தனர்.</p>

    Source link

  • Sivakarthikeyan celebrates his 39th birthday today

    Sivakarthikeyan celebrates his 39th birthday today


    சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் செய்த எத்தனையோ நடிகர்களை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. ஆனால் அப்படி பயணித்த  அனைவராலும் ஹீரோ அந்தஸ்தை பெற்று விட முடியுமா? என்றால் அதன் சதவீதம் சற்று குறைவு தான். ஆனால் சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்து, அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  சிவா அண்ணன், நம்ம வீட்டு பையன் என செல்லமாக கொண்டாடும் சிவகார்த்திகேயனின் 39வது பிறந்தநாள் இன்று. 
     

    விஜய் டிவியில் துவங்கிய பயணம் : 
    விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கே வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வந்து செலக்டான அந்த தருணத்தில் இருந்தே சிவகார்த்திகேயன் வெற்றியின் முதல் படியில் அடி எடுத்து வைத்தார். போட்டியாளராக இருந்து தொகுப்பாளரானார். பல ரியாலிட்டி ஷோ, அவார்டு ஷோ என தொகுத்து வழங்கி வந்தார். அதற்கு பிறகு மெரினா, 3 படம் மூலம் சினிமா பயணத்தை இனிதே துவங்கினார்.
    வாய்ப்பை வெற்றியாக்கிய எஸ்.கே :  
    மெல்ல மெல்ல அவரின் நடிப்பு திறன் வெளிப்பட அதை தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டனர். மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என படிப்படியாக தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொண்டார். பெரிய பட்ஜெட் படங்கள் வந்து குவியும் அளவுக்கு உயர துவங்கினார். கனா, டான், டாக்டர் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் செய்யும் அளவுக்கு வெற்றி படங்களை கொடுத்து திக்குமுக்காட வைத்தார். 
     

    அசுர வளர்ச்சி : 
    தற்போது 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிவகார்த்திகேயன் பயணித்து வந்த பாதை வெகு தூரம் என்றாலும் அதை அவர் மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே எட்டிவிட்டார். இந்த ஆண்டு துவக்கமே சிவகார்த்திகேயனுக்கு சரவெடி பொங்கலாக ‘அயலான்’ அமைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படம், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் ஒரு படம் என படு பிஸியாக சுழன்று வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 
    அடுத்த விஜய் :
    இடைப்பட்ட காலத்தில் ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் தூணில் அடிபட்ட பந்தை போல மிகவும் வேகமாக பவுன்ஸ் பேக் செய்து கலக்கி வருகிறார். சவாலான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவது எஸ்.கேவின் தனிச்சிறப்பு. நடிகர் விஜய் அரசியலில் கவனம் செலுத்த இருக்கும் நிலையில் அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சிவகார்த்திகேயனுக்கு இந்த பிறந்தநாளில் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள். 
     

    மேலும் காண

    Source link

  • IND vs ENG: இந்திய அணிக்கு பெரும் சிக்கல்! ராஜ்கோட் டெஸ்டில் இருந்து வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்ன காரணம்?

    IND vs ENG: இந்திய அணிக்கு பெரும் சிக்கல்! ராஜ்கோட் டெஸ்டில் இருந்து வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்ன காரணம்?


    <p>இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ராஜ்கோட்டில் நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், ரவிசந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். இருப்பினும், இந்த சாதனைக்கு பிறகு, அஸ்வின் ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகினார்.&nbsp;</p>
    <p>அஸ்வின் தனது குடும்பத்தில் ஏதோ எமர்ஜென்சி என்று கூறி, ராஜ்கோட்டில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.&nbsp;</p>
    <h2><strong>பிசிசிஐ சொன்னது என்ன..?&nbsp;</strong></h2>
    <p>சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முழுமையாக விளையாடமாட்டார் என கூறப்பட்டது. இதையடுத்து, அஸ்வின் தொடர்பான ஒரு அதிகாரப்பூர்வ தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்து கொண்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், குடும்ப நெருக்கடி காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், அணியும் அஸ்வினுக்கு முடு ஆதரவை தரும். பிசிசிஐ மற்றும் அணி அஸ்வினுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என தெரிவித்திருந்தார்.&nbsp;</p>
    <h2><strong>500 விக்கெட்களை தனது தந்தைக்கு அர்ப்பணித்த அஸ்வின்:&nbsp;</strong></h2>
    <p>ராஜ்கோட் டெஸ்டின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் குரோலியை அவுட் செய்ததன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை பூர்த்தி செய்தார். இந்த சாதனைக்கு பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின், "<span>இது மிக நீண்ட பயணம்.&nbsp;</span><span>எனது 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.&nbsp;</span><span>வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், என் தந்தை எனக்கு ஆதரவாகவே இருந்தார்.&nbsp;</span><span>என் அப்பாவால்தான் நான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்க முடிந்தது. </span><span>எனது தந்தையின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. இருப்பினும்</span><span>, எனது பந்துவீசுவதை அவர் கண்டிப்பாகப் பார்ப்பார் என நம்புகிறேன். </span><span>அவர் இப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்&rdquo; </span>என பேசினார்.&nbsp;</p>
    <h2><strong>விராட் கோலிக்கு அடுத்த அஸ்வின்:&nbsp;</strong></h2>
    <p>இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விலகிய முதல் வீரர் அஸ்வின் அல்ல. இவருக்கு முன், தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார். இந்த இரண்டு வீரர்கள் இல்லாதது, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிகப்பெரிய சிக்கலை இந்திய அணிக்கு கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.&nbsp;</p>
    <h2><strong><span>ராஜ்கோட் சோதனையில் இதுவரை என்ன நடந்தது?</span></strong></h2>
    <p><span>இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.&nbsp;டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது.&nbsp;இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp;</span></p>
    <p><span>இந்தியாவின் 445 ரன்களுக்கு பதிலடியாக, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 8 ரன்களுடனும் கிரீஸில் உள்ளனர். அதேசமயம், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளனர்.&nbsp;</span></p>

    Source link

  • A magnitude 4.7 earthquake struck Pakistan early this morning, the National Seismological Center said.

    A magnitude 4.7 earthquake struck Pakistan early this morning, the National Seismological Center said.


    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. நில அதிர்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் அதிகாலை 12:57 மணிக்கு உணரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் ஆழம் 190 கிலோமீட்டராக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  

    An earthquake of magnitude 4.7 on the Richter Scale hit Pakistan today at 12.57 am: National Centre for Seismology pic.twitter.com/vnnZVvwgfj
    — ANI (@ANI) February 16, 2024

    நில நடுக்கம்:
    உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே மிக மோசமானதாகும்.
    மேலும், 2024 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் நாளிலேயே, ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஜனவரி 23 ஆம் தேதி, சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோயில் 7.2 ஆக இருந்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி – என்சிஆர் வரை உணரப்பட்டது. நிலநடுக்கமானது நேபாளம் – சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 
       
     

    மேலும் காண

    Source link

  • "அரசு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை" பிச்சை எடுக்க போவதாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர் வேதனை!

    "அரசு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை" பிச்சை எடுக்க போவதாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர் வேதனை!


    <p><span style="background-color: #ffffff;"><span style="background-color: #c2e0f4;"><strong>&rdquo;</strong><em>தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். இப்படியான கலைஞர்களை அரசு ஊக்கிவித்து வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்</em><strong>&rdquo;.</strong></span></span></p>
    <p><span style="background-color: #bfedd2;"><strong>அ</strong></span>ருகிவரும் கலைகளின் வரிசையில் தோல்பாவைக் கூத்துக் கலையும் ஒன்று. தென் மாவட்டங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தோல்பாவைக் கூத்துக் கலையை அரிதாக பார்க்க முடிகிறது. அப்படியான கலையை தன் குடும்பத்துடன் தாங்கிப் பிடித்து அதனை வாழ்வாதாரமாக கொண்டு செல்பவர் தான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த&nbsp; முத்து லெட்சுமண ராவ் (67).</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/fb04ae928fbae0de4c00dd5acb5f1f8f1708090627392184_original.jpeg" /></p>
    <h2><strong>5வது தலைமுறை:</strong></h2>
    <p>இவர் 5-வது தலைமுறையாக இந்த தொழிலை செய்துவருகிறார். தனது நான்கு மகன்களுக்கும் &nbsp;தொழிலை கற்றுக் கொடுத்து அவர்களையும் இதே தொழிலில் ஈடுபட செய்துவருகிறார். தோல்பாவைக் கூத்தின் மூலம் தனது குடும்பத்தில் 20 பேர் வயிறு பிழைக்கின்றனர் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார். ஆனால் தனது தொழிலை விரிவுபடுத்த அரசு கலைப் பண்பாட்டுத் துறை மூலம் வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது, என்று நம்மிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும் முத்து லெட்சுமண ராவ் கண்ணீரை துடைத்தபடி நம்மிடம் பேசினார்.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/95415496af223a88c5f2b34fd65745341708090704859184_original.jpeg" /></p>
    <h2><strong>கிராமிய கலைஞர்கள்:</strong></h2>
    <p>சென்னை சங்கமம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனால் எனக்கு கலை பண்பாட்டுத்துறை சார்பாக வாய்ப்புகளே வழங்கப்படாமல் இருக்கிறது. தேனி மாவட்டம் தேவதானபட்டியில் வசித்து வருகிறேன். மாவட்டத்தில் வேறு சில கிராமிய கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எனக்கு அரசு சார்பாக வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிப்படுகிறேன். இதனை தேர்வு கமிட்டி செய்கிறதா? இல்லை கலைப் பண்பாட்டுத்துறை புறக்கணிக்கிறதா? என்று தெரியவில்லை.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/bcef4bfe985355a1e17d825d4ff14f3c1708090805848184_original.jpeg" /></p>
    <p>இன்று பிப்ரவரி 17 மற்றும் 18-ம் தேதி சென்னை சங்கமம் கிராமிய நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் என்னை புறக்கணித்துள்ளனர். என்னை சிறப்பு பார்வையாளராக பார்க்க அழைத்துள்ளனர். நானும் கலைஞன் தான் எனக்கும் வயிறு இருக்கிறது. நானும் பிழைக்க வேண்டாமா? தென்மாவட்ட பகுதியில் எங்கள் குடும்பம் மட்டும் தான் தோல்பாவைக் கூத்தை செய்து வருகிறோம். இப்படி இருக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்காதது வேதனையின் உச்சம். எனவே அதிகாரிகள் எனக்கும் அரசு நிகழ்ச்சியில் அவ்வப்போது வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் அரசு கலைநிகழ்ச்சியில் பிச்சை எடுத்து அறவழி போராட்டம் நடத்த உள்ளேன்&rdquo; என்று தெரிவித்தார்.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/89ec41c48e6ea9a6f8d00cf79b7670ce1708090863630184_original.jpeg" /></p>
    <p><br />இது குறித்து மதுரை கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணனிடம் பேசினோம்," நான் மதுரைக்கு பணிமாறுதலில் வந்து 3 மாதம் தான் ஆகிறது. முத்து லெட்சுமண ராவ் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படதாதது குறித்து ஆய்வு செய்கிறேன். தற்போது நடைபெற உள்ள <span style="background-color: #bfedd2;">நம்ம ஊர் திருவிழாவில்</span> பங்கேற்பாளர்கள் லிஸ்ட் சென்னையில் இருந்து வந்ததுள்ளது. எனவே அடுத்த, அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக தோல்பாவைக் கூத்து கலைஞர் முத்து லெட்சுமண ராவிற்கு வாய்ப்பு வழங்க முயற்சி எடுக்கிறேன்" என நம்பிக்கை தெரிவித்தார்.&nbsp;</p>
    <p>தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். இப்படியான கலைஞர்களை அரசு ஊக்கிவித்து வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.</p>
    <p>மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் – <a title="Alipur Fire Accident: அதிகரித்த பலி எண்ணிக்கை – டெல்லி தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியான சோகம்" href="https://tamil.abplive.com/news/india/delhi-alipur-fire-accident-at-least-7-people-dead-investigation-going-167776" target="_blank" rel="noopener">Alipur Fire Accident: அதிகரித்த பலி எண்ணிக்கை – டெல்லி தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியான சோகம்</a></p>

    Source link

  • Vegetables price list february 17 2024 chennai koyambedu market

    Vegetables price list february 17 2024 chennai koyambedu market


    Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.430 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
    ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இன்றைய நாளில் (பிப்ரவரி 17) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     
     




      காய்கறிகள் (கிலோவில்) 
      முதல் ரகம் 
       இரண்டாம் ரகம் 
     மூன்றாம் ரகம் 


    வெங்காயம் 
    22ரூபாய்
    18 ரூபாய்
        14 ரூபாய்


    தக்காளி 
    20 ரூபாய் 
    15 ரூபாய்
          13 ரூபாய்


    நவீன் தக்காளி
    35 ரூபாய்
     
     


    உருளை  
    30 ரூபாய்
    25 ரூபாய்
          17 ரூபாய்


    ஊட்டி கேரட்
    80 ரூபாய்
    75 ரூபாய்
         70 ரூபாய்


    சின்ன வெங்காயம்
    38 ரூபாய்
    35 ரூபாய்
         30 ரூபாய்


    பெங்களூர் கேரட் 
    40 ரூபாய்
    30 ரூபாய்
           -


    பீன்ஸ் 
    30 ரூபாய்
    25 ரூபாய்
           -


    ஊட்டி பீட்ரூட் 
    60 ரூபாய்
    55 ரூபாய்
              


    கர்நாடகா பீட்ரூட் 
    30 ரூபாய்
    25 ரூபாய்
           -


    சவ் சவ் 
    16 ரூபாய்
     15 ரூபாய் 
           – 


    முள்ளங்கி 
    15 ரூபாய்
    13 ரூபாய் 
           – 


    முட்டை கோஸ் 
    15 ரூபாய்
     12 ரூபாய்
           -


    வெண்டைக்காய் 
    50 ரூபாய்
    45 ரூபாய்
           -


    உஜாலா கத்திரிக்காய்
    30 ரூபாய்
    25 ரூபாய்
           -


    வரி கத்திரி  
    20 ரூபாய்
     15 ரூபாய்
           – 


    காராமணி
    40 ரூபாய்
    30 ரூபாய்
     


    பாகற்காய் 
    35  ரூபாய்
    30 ரூபாய்
           – 


    புடலங்காய்
    30 ரூபாய்
    20 ரூபாய்
           – 


    சுரைக்காய்
    20 ரூபாய்
    15 ரூபாய்
          -


    சேனைக்கிழங்கு
    50 ரூபாய்
    48 ரூபாய்
          -


    முருங்கைக்காய்
    70 ரூபாய்
    55 ரூபாய்
           -


    சேமங்கிழங்கு
    45 ரூபாய்
    42 ரூபாய்
     


    காலிபிளவர்
    17 ரூபாய்
    15 ரூபாய்
          -


    பச்சை மிளகாய் 
    30 ரூபாய்
    25 ரூபாய்
          -


    அவரைக்காய்
    40 ரூபாய்
    30 ரூபாய்
          -


    பச்சைகுடைமிளகாய் 
    50 ரூபாய்
    40 ரூபாய்
          -


    வண்ண குடை மிளகாய்
    70 ரூபாய்
     
     


    மாங்காய் 
    90 ரூபாய் 
    70 ரூபாய்
     


    வெள்ளரிக்காய் 
    20 ரூபாய்
    10 ரூபாய்
          -


    பட்டாணி 
    50 ரூபாய்
    40 ரூபாய்
          -


    இஞ்சி 
    105 ரூபாய்
     90 ரூபாய்
    80 ரூபாய்


    பூண்டு 
    430 ரூபாய்
    400 ரூபாய்
    350 ரூபாய்


     மஞ்சள் பூசணி 
    20 ரூபாய்
    17 ரூபாய்
            -


    வெள்ளை பூசணி 
    20 ரூபாய்
    -
            -


    பீர்க்கங்காய்
    35 ரூபாய்
     30 ரூபாய்
           -


    எலுமிச்சை 
    90 ரூபாய்
    80 ரூபாய்
            -


    நூக்கல்
    20 ரூபாய்
    15 ரூபாய் 
            -


    கோவைக்காய் 
    25 ரூபாய்
    20 ரூபாய் 
            -


    கொத்தவரங்காய் 
    50 ரூபாய்
    45 ரூபாய்
            -


    வாழைக்காய்
    8 ரூபாய்
    7 ரூபாய்
            -


    வாழைத்தண்டு 
    35 ரூபாய்
          30 ரூபாய்
            -


    வாழைப்பூ
    25 ரூபாய்
          15 ரூபாய்
            -


    அனைத்து கீரை
    10 ரூபாய்
             -
            -


    தேங்காய் 
    33 ரூபாய்
          32 ரூபாய்
     

     

    மேலும் காண

    Source link

  • cm mkstalin will lay the foundation stone for the new project worth rupees 732 crore today | CM Stalin: ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

    cm mkstalin will lay the foundation stone for the new project worth rupees 732 crore today | CM Stalin: ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்


     CM Stalin: பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டி டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
    முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டும் விழா:
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதோடு, அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளார்.
    அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள புதிய ராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி என மொத்தம் 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
    புதிய கட்டிடங்களை திறந்து வைக்கும் முதலமைச்சர்:
    பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,374 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் 80 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டிடங்களை பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். 
    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டிடம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் 59.57 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடம் (IT Tower),
    வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 3 கோடியே 62 இலட்சம்ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா என மொத்தம் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு துறைக் கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
    மருத்துவ உபகரணங்கள்:
    இறுதியாக, இன்போசிஸ் அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்குகிறார்.

    மேலும் காண

    Source link

  • 7 am headlines today 2024 17th February headlines news tamilnadu india world | 7 AM Headlines: 1,598 பேருக்கு பணி நியமன ஆணை! 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலை

    7 am headlines today 2024 17th February headlines news tamilnadu india world | 7 AM Headlines: 1,598 பேருக்கு பணி நியமன ஆணை! 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலை

    தமிழ்நாடு:

    தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: 1,598 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    ரூ.732 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
    10ம் வகுப்பில் விருப்ப பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்; 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு
    அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    மேகதாது அணை கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் அனுமதி வேண்டும், அனுமதி பெறாமல் கட்ட முடியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    என் மண் என் மக்கள் நிறைவு விழா தேதியில் அரசு நிகழ்ச்சி இருப்பதால், பிரதமரின் வருகை தேதியை உறுதி செய்த பின் தேதி அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    மதுரையில் வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    தமிழ்நாட்டில் வரும் 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தியா:

    வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி – தீர்ப்பாயம் நடவடிக்கை
    டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு
    வாலட், ஃபாஸ்டாக் உள்ளிட்ட பே-டிஎம் சேவைகளை பயன்படுத்த மேலும் 15 நாள் அவகாசம் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவு
    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக உத்தர பிரதேச  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
    கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    டெல்லி ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.

    உலகம்: 

    ரஷ்ய தம்பதியினர் குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென புதின் வலியுறுத்தியுள்ளார்.
    ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு புதினே பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    கிரீஸ் நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்
    அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு – 1,000 விமானங்கள் ரத்து

    விளையாட்டு:

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றினார்.
    டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முன்னேறினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்
    சர்பராஸ் கானின் தந்தை நவுசாத் கானுக்கு கார் பரிசளிப்பதாக ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

    Published at : 17 Feb 2024 07:05 AM (IST)

    மேலும் காண

    Source link

  • ராணுவ அதிகாரி வேடத்தில் சிவகார்த்திகேயன்! யார் இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு?

    ராணுவ அதிகாரி வேடத்தில் சிவகார்த்திகேயன்! யார் இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு?


    <p>ராணுவத்தை ரொமான்டிசைஸ் செய்து பல திரைப்படங்கள் வந்துள்ளன. குறிப்பாக, தீவிரவாதிகளை வேட்டையாடும் ஹீரோக்கள், ராணுவ அதிகாரிகளாக வந்து மிரட்டுவர். அந்த திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வெற்றியையும் பெற்றன. ஷாருக்கான், சல்மான் கான், &nbsp;தொடங்கி கமல், விஜய் என பலர் ராணுவ அதிகாரிகளாக நடித்துள்ளனர். இம்மாதிரியான படங்கள் பெரும் விமர்சினத்திற்கும் உள்ளாகியுள்ளன.&nbsp;</p>
    <p>குறிப்பாக, மக்களின் தரப்பில் கதையை கூறாமல், ராணுவத்தின் தரப்பில் கதை சொல்லப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கமல், <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> வரிசையில் தமிழ் சினிமாவில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடக்க போகிறார் சிவகார்த்திகேயன்.&nbsp;</p>
    <p>அதுவும், ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அதிகாரியாக வலம் வரப்போகிறார். ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு என்றால் என்ன? அது எதற்காக தொடங்கப்பட்டது? அதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன? ராணுவ அதிகாரி வேடத்தை முன்னணி நடிகர்கள் தேர்வு செய்வது ஏன்? போன்ற பல கேள்விகளுக்கு இந்த கட்டுரை விடை தேடுகிறது.</p>
    <h2>ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு என்றால் என்ன?&nbsp;</h2>
    <p>எல்லை பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காகவும் ஆயுத புரட்சியை எதிர்கொள்வதற்காகவும் தொடங்கப்பட்ட பிரிவுதான் ராஷ்டிரிய ரைபிள்ஸ். 1990களின் தொடக்கத்தில், எல்லைகளில் போதுமான படைப்பிரிவு இல்லை என கருதப்பட்டதால் ராணுவம் போன்று அல்லாமல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக பிரத்யேகமான பிரிவு ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டது. அப்போது, கொந்தளிப்பான சூழலில் இருந்து வந்த பஞ்சாப்பிலும், பயங்கரவாத தாக்குதலால் அதிகம் பாதிப்புக்குள்ளான ஜம்மு காஷ்மீரிலும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் களத்தில் இறக்கப்பட்டது.</p>
    <p>இரண்டு இடங்களிலும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன. குறிப்பாக, காலிஸ்தானி பிரிவினைவாத இயக்கங்களை அடக்க ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு பெரும் பங்காற்றின. தொடக்கத்தில் 5,000 வீரர்களுடன் இயங்கி வந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் தற்போது 80,000 வீரர்கள் உள்ளனர்.</p>
    <p>இந்திய ராணுவம், துணை ராணுவப் படைகளான எல்லை பாதுகாப்பு படை (BSF) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் பணியமர்த்தப்படுவர்.</p>
    <h2><strong>ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்:</strong></h2>
    <p>ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறி, அங்கு ராணுவத்தை குவித்து வருகிறது மத்திய அரசு. ஆனால், எல்லா பிரச்னைக்கும் பயங்கரவாதமே காரணம் இல்லை என வாதம் முன்வைக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை எனக் கூறி, அப்பாவி மக்களை ராணுவம் துன்புறுத்தி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.</p>
    <p>அந்த வகையில்தான், ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு மீதும் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, பூஞ்ச் மாவட்டத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பழங்குடியின குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த 8 பேரை ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.</p>
    <p>விசாரணை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட அப்பாவி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களில் 3 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். முகமது சபீர், ஷபீர் அகமது மற்றும் ஷோகத் ஹுசைன் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டது. இதற்கு மத்தியில், ராணுவ முகாமில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலானது.</p>
    <p>அதில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு வீரர்கள் என நம்பப்படும் சில நபர்கள், மிளகாய் தூள், தூவுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ, பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு உள்பட இந்திய ராணுவம் மீது இம்மாதிரியான எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.&nbsp;</p>
    <h2>ராணுவ அதிகாரி வேடத்தை முன்னணி நடிகர்கள் தேர்வு செய்வது ஏன்?</h2>
    <p>காஷ்மீர் என்று சொன்னாலே, பயங்கரவாதம் என்பது நினைவுக்கு வரும் அளவுக்கு நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடி வரும் மக்களை, தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இம்மாதிரியான சூழலில், ராணுவ அதிகாரி வேடத்தை மற்றொரு முன்னணி நடிகர் தேர்வு செய்துள்ளார்.&nbsp;</p>
    <p>காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு வகை என்றால், பாதுகாப்பான தென்னிந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக நிறுவ முயற்சிக்கும் பீஸ்ட் திரைப்படம் ஒரு வகை. இப்படியிருக்க, ராணுவ அதிகாரியாகவும் காவல்துறை அதிகாரியாகவும் முன்னணி நடிகர்கள் நடிப்பது தொடர் கதையாகி வருகிறது. தேசியவாதம் என்ற போர்வையில் பெரும்பான்மையினரை கவர நடிகர்கள் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களாகவே இவை உள்ளன.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • isro insat 3d satelite will launch today from sriharikotta by GSLV-F14 rocket | GSLV-F14: இன்று விண்ணில் பாயும் GSLV-F14 விண்கலம்

    isro insat 3d satelite will launch today from sriharikotta by GSLV-F14 rocket | GSLV-F14: இன்று விண்ணில் பாயும் GSLV-F14 விண்கலம்


    GSLV-F14: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம் மூலம், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
    இன்று விண்ணில் பாய்கிறது GSLV-F14 ராக்கெட்: 
    வானிலை மற்றும் பேரிடர்  எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக  GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் நேற்று பிற்பகல் 02.05 மணிக்கு தொடங்கியது.
    பூமி அறிவியல் அமைச்சகம் இந்த திட்டத்திற்கான மொத்த செலவையும் ஏற்றுள்ளது. INSAT-3DS புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான நேரலையை மாலை 5 மணி முதலே, இஸ்ரோ யூடியூப் பக்கத்தில் பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். 

    GSLV-F14/INSAT-3DS Mission: 27.5 hours countdown leading to the launch on February 17, 2024, at 17:35 Hrs. IST has commenced. pic.twitter.com/TsZ1oxrUGq
    — ISRO (@isro) February 16, 2024

    ராக்கெட் வடிவமைப்பு:
    420 டன் எடைகொண்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-14 விண்கலம் 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்டுள்ளது. முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் இடம்பெற்றுள்ளது. 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். 
    இன்சாட்-3 டி.எஸ். என்றால் என்ன?
    INSAT-3DS என்பது வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை வழங்கும் மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது தற்போதைய சுற்றுப்பாதையில் உள்ள இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்கள் வழங்கும் சேவைகளைத் தொடர அனுமதிக்கிறது.  INSAT-3DS ஒரு புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி,  INSAT-3DS ஆனது INSAT அமைப்பின் திறன்களை மேம்படுத்தவும் உதவும். இந்த செயற்கைக்கோளின் மொத்த நிறையானது 2,275 கிலோகிராம் ஆகும். இதற்கு செயல் வடிவம் வழங்குவதில் இந்தியத் தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
    இன்சாட்-3 டிஎஸ்-ல் உள்ள கருவிகள் என்ன?
    INSAT-3DS ஆனது மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை மேற்கொள்ளவும், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக நிலம் மற்றும் கடல் பரப்பை கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் பல அதிநவீன பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன, அதில் ஆறு சேனல் இமேஜர், 19 சேனல் சவுண்டர் மற்றும் இரண்டு தகவல் தொடர்பு பேலோடுகள் அடங்கும். டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (டிஆர்டி) கருவி மற்றும் செயற்கைக்கோள் உதவி தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஎஸ்&ஆர்) டிரான்ஸ்பாண்டர் ஆகியவை இரண்டு தொடர்பு பேலோடுகள் ஆகும். 
    தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து வானிலை, நீரியல் மற்றும் கடல்சார் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவது டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டரின் நோக்கமாகும். செயற்கைக்கோளின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள SAS&R டிரான்ஸ்பாண்டர், பீக்கான் டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து டிஸ்ட்ரஸ் சிக்னல் அல்லது எச்சரிக்கை கண்டறிதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு சேவைகளை எளிதாக்கும்.

    மேலும் காண

    Source link

  • petrol and diesel price chennai on February 16th 2024 know full details | Petrol Diesel Price Today: மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை?

    petrol and diesel price chennai on February 16th 2024 know full details | Petrol Diesel Price Today: மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை?


    Petrol Diesel Price Today, February 17: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 17ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 637வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

    மேலும் காண

    Source link

  • Most Wickets In Test Cricket History List All Time Anil Kumble Ravichandran Ashwin Muttiah Muralitharan Ashwin 500 Wickets

    Most Wickets In Test Cricket History List All Time Anil Kumble Ravichandran Ashwin Muttiah Muralitharan Ashwin 500 Wickets

    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது.
    வரலாற்றில் இடம்பிடித்த அஸ்வின்:
    இதில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 445 ரன்களை குவித்தது. பின்னர், தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களம் இறங்கினார்கள். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் சாக் கிராவ்லி தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே சாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.

    𝙏𝙝𝙖𝙩 𝙇𝙖𝙣𝙙𝙢𝙖𝙧𝙠 𝙈𝙤𝙢𝙚𝙣𝙩! 👏 👏Take A Bow, R Ashwin 🙌 🙌Follow the match ▶️ https://t.co/FM0hVG5pje#TeamIndia | #INDvENG | @ashwinravi99 | @IDFCFIRSTBank pic.twitter.com/XOAfL0lYmA
    — BCCI (@BCCI) February 16, 2024


    அதாவது அந்த சாதனை என்னவென்றால் சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500- விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள்:

    முத்தையா முரளிதரன் (இலங்கை) – 800 விக்கெட்டுகள்
    ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) – 708 விக்கெட்டுகள்
    ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) – 695* விக்கெட்கள்
    அனில் கும்ப்ளே (இந்தியா) – 619 விக்கெட்டுகள்
    ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) – 604 விக்கெட்கள்
    கிளென் மெக்ராத் – 604 விக்கெட்டுகள்
    கர்ட்னி வால்ஷ் (வெஸ்ட் இண்டீஸ்) – 519 விக்கெட்டுகள்
    நாதன் லயன் (ஆஸ்திரேலியா) – 517* விக்கெட்கள்
    ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா)- 500*

    இரண்டாவது வேகமான முதல் 500 டெஸ்ட் விக்கெட்டுகள்
    இலங்கையின் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 100-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றிருக்கிறார். அதிவேகமாக 50, 100, 150, 200, 350, 400 மற்றும் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அஸ்வின், உலகிலேயே அதிவேகமாக 250 மற்றும் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    மேலும் படிக்க: India vs England 3rd Test: தவறான புரிதலால் அவுட் ஆவது சகஜம்தான் – ரன் அவுட் குறித்து பேசிய சர்ஃபராஸ் கான்!
     
    மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃபராஸ் கான் ரன் அவுட்.. கடுமையாக சாடிய ரசிகர்கள்! வருத்தம் தெரிவித்த ஜடேஜா!

    Source link