Month: January 2024

  • Bhavatharini: "அவரோட குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும்" – பவதாரிணி இறப்பு குறித்து கலங்கும் திரையுலகம்

    Bhavatharini: "அவரோட குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும்" – பவதாரிணி இறப்பு குறித்து கலங்கும் திரையுலகம்


    <p>இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி பிறந்தார்.&nbsp;</p>
    <h2><strong>தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளையராஜா மகளின் மரணம்:</strong></h2>
    <p>பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இன்று மாலை 5.30 மணிக்கு அவர் காலமானதாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றதாகக் கூறப்படுகிறது. நாளை சென்னைக்கு விமானம் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட உள்ளது. இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜாவும் இலங்கையில் உள்ளார்.&nbsp;</p>
    <p>தந்தை இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவரது குரலில் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் பாரதி படத்தில் &nbsp;வரும் மயில்போல பொண்ணு ஒன்னு பாடலும், ராமன் அப்துல்லா படத்தில் இடம் பெற்றுள்ள என் வீட்டு ஜன்னல் வழி ஏன் பாக்குற பாடலும் இவரின் புகழை பட்டித் தொட்டி எங்கும் எடுத்து சென்றது.</p>
    <h2><strong>"என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்"</strong></h2>
    <p>பவதாரிணியின் இறப்புக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "இந்த செய்தி அதிர்ச்சியை தருகிறது. அவரது குரல் மிகவும் மென்மையானது. தனித்துவமானது" என்றார்.</p>
    <p>&nbsp;</p>
    <p>இசையமைப்பாளர் தினா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "இது, துக்கமான செய்தி. சின்ன வயதில் அவர் விட்டு பிரிந்தது ஏற்கவே முடியாதது. எல்லாரையும் கவர்ந்த குரல். அனைவருக்கும் பிடித்த குரல். அதில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="ta">என் நண்பனுக்கு<br />எப்படி ஆறுதல்<br />சொல்வேன்..<br />மகள் பவதாரிணியின்<br />மறைவு, எங்கள்<br />குடும்பத்தினருக்கு<br />ஈடு செய்யமுடியாத<br />பேரிழப்பாகும்.<a href="https://twitter.com/ilaiyaraaja?ref_src=twsrc%5Etfw">@ilaiyaraaja</a> <a href="https://t.co/TvQ6xxuSLz">pic.twitter.com/TvQ6xxuSLz</a></p>
    &mdash; Bharathiraja (@offBharathiraja) <a href="https://twitter.com/offBharathiraja/status/1750548688194388176?ref_src=twsrc%5Etfw">January 25, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்" என தெரிவித்துள்ளார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Republic Day 2024 Wishes Inspiring Quotes Images Message Whatsapp Facebook Status

    Republic Day 2024 Wishes Inspiring Quotes Images Message Whatsapp Facebook Status

    நாடு முழுவதும் குடியரசு தின விழாவை (Republic Day 2024) கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறது. இந்தியா குடியரசு பெற்று 75-வது ஆண்டு கொண்டாட்டம் இது. 
    இந்திய குடியரசு தினம்
    1950 -ம் இந்தியா குடியரசு பெற்றது. இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதை உணர்த்தும் விதமாக ஜனவரி 26 தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நாளில் 1930 இல், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) காலனித்துவ ஆட்சியைக் கண்டித்து, பூர்ண ஸ்வராஜை அறிவித்தது. அதாவது – ஆங்கிலேயர்களிடமிருந்து “முழு சுதந்திரம்” பெறுவதாகும்.  1947 ஆகஸ்டு 29 அன்று பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்பு நிர்ணய மன்றம் இந்திய அரசமைப்புச் சட்ட வரைவை ஏற்றுக்கொண்டது.  அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள், ஜனவரி-26.

    Facebook, WhatsApp மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உங்கள் நண்பர்கள், சகாக்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள், படங்கள், தேசபக்தி மேற்கோள்கள் மற்றும் செய்திகளை அனுப்ப இந்த நாளை கொண்டாடலாம். நமது மகத்தான தேசம் மற்றும் அரசியலமைப்பை நமக்கு ஆசீர்வதித்த தலைவர்களுக்கு நன்றி உணர்வைத் தூண்டும் வகையில் உங்களுக்கு தேவையான தொகுப்பு இங்கே உள்ளது.
    வாழ்த்து மெசேஜ்கள்

    நாட்டின் 75-வது குடியரசு தினம். பெருமையுடன் சொல்வோம் வந்தே மாதரம்.
    குடியரசு தின வாழ்த்துகள். கொண்டாடி மகிழுங்கள்.
    செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட  நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள். இந்தியராக பெருமை கொள்வோம்.
    நமது தேசத்தின் பன்முகத்தன்மை அதன் முக்கிய பலங்களில் ஒன்று. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையுடன் குடியரசு தின வாழ்த்துக்கள்.
    நாட்டின் வளர்ச்சிக்கு இடையூராக இருக்கும் எதையும் செய்ய மாட்டோம் என்று உறுதி ஏற்போம்.
    சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை இந்த நாளில் நாள்கூர்வோம்.  இந்த குடியரசு தினத்தில் வரலாற்று நிகழ்வுகளை மறக்காமல் இருக்க உறுதிமொழி ஏற்போம். 
    உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும். குடியரசு தின வாழ்த்துகள்.
    அமைதியும் செழிப்பும் உண்டாகட்டும். குடியரசு தின வாழ்த்துகள்.
    உங்கள் வாழ்வில் அமைதி நிறைந்திருக்கட்டும். குடியரசு தின வாழ்த்துகள்.
    அரசியலமைப்பு சட்டம் நமக்கு கிடைத்ததற்கு வணங்குவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்.
    தேசத்தினை வணங்குவோம். குடியரசு தின வாழ்த்துகள்.
    வந்தே மாதரம் என்று முழங்கி குடியரசு தினத்தை கொண்டாடுவோம். குடியரசு தின வாழ்த்துகள்.
    தனிமனித உரிமைகளை மதிப்போம். இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
    ஜனநாயகத்தைப் போற்றுவோம். இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
    எல்லாம் நன்மைக்கே. இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
    இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி விழிப்புணர்வு பெற உறுதியேற்போம். இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

    விசுவாசம் இன்னும் இருட்டாக இருக்கும்போது ஒளியை உணரும் பறவை. – ரவீந்திரநாத் தாகூர்.
    குடியரசு எனது பிறப்புரிமை, அதை நான் பெறுவேன். – பாலகங்காதர திலகர்.
    பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன். – பி.ஆர். அம்பேத்கர்.
    ஒவ்வொரு இந்தியனும் இப்போது தான் ராஜபுத்திரன், சீக்கியன் அல்லது ஜாட் என்பதை மறந்துவிட வேண்டும். அவர் ஒரு இந்தியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். – சர்தார் வல்லபாய் படேல்.
    ஒரு நாட்டின் மகத்துவம், இனத்தின் தாய்மார்களை ஊக்குவிக்கும் அன்பு மற்றும் தியாகத்தின் அழியாத இலட்சியங்களில் உள்ளது. – சரோஜினி நாயுடு

     

    Source link

  • Bhavatharini | Bhavatharini

    Bhavatharini | Bhavatharini

    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்.  இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    தனது மெல்லிய குரலினால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பவதாரிணி. இவர் காலமானது அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், இசைப் பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது குரலில் இடம்பெற்ற பாடகள் எதுஎது என இங்கு காணலாம். 
     
    1. மஸ்தானா மஸ்தானா பாடல் – 1955ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படம். இந்த பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். 
    2. என்னை தாலாட்ட வருவாளா பாடல் – 1997ஆம் ஆண்டு வந்த காதலுக்கு மரியாதை படத்தில் இடம் பெற்ற பாடல். இந்த பாடல் எப்போதும் காதலர்களின் பிரியமான பாடலாக இருக்கும். 

    3. மயில் போல பொண்ணு ஒன்னு  – 2000ஆம் ஆண்டு வெளியான பாரதி படம். இந்த பாடலுக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
    4. ஒளியிலே தெரிவது தேவதையா – 2002 ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தில் இப்பாடல்  இடம் பெற்றுள்ளது. இப்பாடல் இன்றுவரை பலரது இரவு நேர ப்ளே லிஸ்ட்களில் இந்த பாடல் உள்ளது. 
    5. ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி – 2018ஆம் ஆண்டு வெளியான அநேகன் படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. 

    #Bhavatharini #RIPBhavatharini pic.twitter.com/LPTliyOv2D
    — நெற்களஞ்சியம் (@DeltaVoice_1) January 25, 2024

    6. என் வீட்டு ஜன்னல் வழி ஏன் பாக்குற –  1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா படத்தில் இப்பாடல் வெளியாகியுள்ளது. 
    7. மெஹரஸைலா  – 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. 
    8. தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா – 2001ஆம் ஆண்டு வெளியான நடிகர்கள் விஜயய், சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. 

    Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்
     

    Source link

  • Khelo India Youth Games TN: Khelo India Youth Games…Tamil Nadu Players Won Gold!

    Khelo India Youth Games TN: Khelo India Youth Games…Tamil Nadu Players Won Gold!

    கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி:
    ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. 
    கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 
    தங்கம் வென்ற தமிழக வீரர்கள்:
    அந்த வகையில், இன்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோகுல் பாண்டியன் தங்கம் வென்றார். அதேபோல்,உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை அலைஸ் தேவா பிரசன்னா. மகளிர் 1000 மீட்டர் sprintmedleyrelay போட்டியில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வென்ற அசத்தியது. 
    முன்னதாக, இன்று நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் அணியும்  தமிழ்நாடு பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தியது. ஆண்கள் அணி 86 – 85 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. அதேபோல் மகளிர் பிரிவில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி 70 – 66 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
     
    மேலும் படிக்க: Virat Kohli: ஐசிசி விருது… நான்காவது முறையாக தட்டிச் சென்ற ‘ரன் மிஷின்’ விராட் கோலி!
    மேலம் படிக்க: IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! விவரம் உள்ளே!
     

    Source link

  • Watch Video: 15 மணி நேரமாக வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண்! வீடியோ!

    Watch Video: 15 மணி நேரமாக வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண்! வீடியோ!


    <p>கலிஃபோர்னியாவில் மழை வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p>
    <p>சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த வாரம் பெய்த பெரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. திங்களன்று வெள்ளப்பகுதி சூழ்ந்த சாலையில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வெள்ளநீர் அதிகம் சூழ்ந்திருக்கிறது. காரில், சாலையை கடந்துவிடலாம் என்று என்று பெண் நினைத்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்ததைவிட நிலமை மோசமாக இருந்திருக்கிறது. வெள்ளநீரில் கார் நிலைத்தடுமாறி கவிழ்ந்துள்ளது. வெள்ளநீர் கடுமையாக இருந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பெண் நீந்தி காரின் மீது ஏறி தன்னை பாதுகாக்க முயன்றுள்ளார். காரின் மீது அமர்ந்துள்ளார். அவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருடைய ஃபோன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. பிறகு, கலிஃபோர்னியா தேசிய நெடுஞ்சாலை பாட்ரோல் அதிகாரிகள் ‘Alameda தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை 15 மணி நேரத்திற்கு பிறகு மீட்டுள்ளனர்.&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="en">At 10:06a.m., Alameda County Fire Department responded to a call where a women&rsquo;s small truck got swept into Del Valle Creek in Livermore. She had been there since 7:00p.m. Monday night. <br />A CHP did a helicopter rescue. She was cold and in good condition. <a href="https://t.co/lu9OomT41K">pic.twitter.com/lu9OomT41K</a></p>
    &mdash; Alameda County Fire (@AlamedaCoFire) <a href="https://twitter.com/AlamedaCoFire/status/1749948574547484922?ref_src=twsrc%5Etfw">January 24, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>இது தொடர்பான &nbsp;Alameda தீயணைப்பு துறையினர் தெரிவிக்கையில், &ldquo;மழையும் தொடர்ந்து பெய்து வந்ததால் எங்களால் மீட்பு பணியில் ஈடுபடுவது கடினமாக இருந்தது. மேலும், வெள்ளத்தில் சிக்கிய பெண் யாரையும் தொடர்பு கொள்ளும் சூழல் இல்லை.&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p>
    <p>வெள்ளத்தில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>
    <hr />
    <p>மேலும் வாசிக்க..</p>
    <p><a title="CUET PG 2024: க்யூட் முதுகலை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்?" href="https://tamil.abplive.com/education/cuet-pg-2024-registration-dates-extended-for-postgraduate-entrance-exam-163841" target="_blank" rel="dofollow noopener">CUET PG 2024: க்யூட் முதுகலை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்?</a></p>
    <p><a title="11th 12th Practical Exam: 11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் இவைதான்! முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு" href="https://tamil.abplive.com/education/tamil-nadu-11th-12th-practical-exam-date-2024-education-department-dse-issues-important-guidelines-163762" target="_blank" rel="dofollow noopener">11th 12th Practical Exam: 11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் இவைதான்! முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு</a></p>

    Source link

  • Republic Day 2024 Parade How To Book Tickets Online, Offline. From Price To Timing, Here’s Everything You Need To Know

    Republic Day 2024 Parade How To Book Tickets Online, Offline. From Price To Timing, Here’s Everything You Need To Know

    நாட்டின் குடியரசு தின விழா நாளை (26,ஜனவரி,2024) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 
    குடியரசு தின கொண்டாட்டம்:
     பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை (26.01.2024) காலை டெல்லியில் நடக்கும் பிரம்மாண்ட குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.  இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மேக்ரான் ஜெய்ப்பூரில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு (25.01.2024) 8.50 மணிக்கு தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, முப்படை வீரர்களின் சாகசங்களும் நடைபெற உள்ளது. இன்று முதலே ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
    குடியரசு தின விழாவின் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும், யூட்யூப் பக்கங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.
    எவ்வாறு பார்ப்பது?
    குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். இதை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
    இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளிக்கலாம். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட உள்ளது. இந்திய அரசின் இணையதள பக்கமான https://indianrdc.mod.gov.in/  -என்ற இணையதளத்தில் சென்று இலவசமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை காணலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வழங்கும் தளமான பி.ஐ.பி.யிலும் (PIB) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    📡Watch LIVE 📡President Droupadi Murmu to address the nation on the eve of 75th #RepublicDay @rashtrapatibhvn Watch on #PIB’s📺Facebook: https://t.co/ykJcYlNrjjYouTube: https://t.co/7Oz2ScHnab
    — PIB India (@PIB_India) January 25, 2024

    கம்பீர அணிவகுப்பு
    சாமானியர்களும் கண்டு களிக்கும் விதமாக மத்திய அரசு ஆமாந்த்ரன் என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த தளத்தில் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்கலாம். குடியரசு தின விழாவில் பங்கேற்க நினைக்கும் பொதுமக்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை அதற்கான பிரத்யேக இணையதளமான https://aamantran.mod.gov.in/login-என்ற இணையதளத்தில் சென்றும் பெறலாம்.
    டிக்கெட் பெறுவது எப்படி?

    குடியரசு தின விழா அணிவகுப்பை நேரில் சென்று காண வேண்டுமென விரும்புபவர்கள் https://aamantran.mod.gov.in/login- என்ற இணைப்பை க்ளிக் செய்து டிக்கெட் பெற வேண்டும்.
    முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.
    செல்போன் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
    பங்கேற்க உள்ள நிகழ்வின் விவரங்களை கேப்ட்சாவுடன் நிரப்ப வேண்டும்.
    ஒரு முறை மட்டுமே வரும் கடவுச்சொல் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
    அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
    பின்பு இணையதளம் மூலமாக உங்களுடைய டிக்கெட் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும்.

    Source link

  • Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

    Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்.  இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
    இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார். புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மரணம். பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி.  இவர் இன்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கே காலமானதாக கூறப்படுகின்றது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
    தந்தை இளையராஜா சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசைகளில் இசையமைத்துள்ளார்.  இவர் இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். 

    Source link

  • Karur News Five-year-old Girl Died Due To Electric Shock Near Kulithalai – TNN | மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழப்பு

    Karur News Five-year-old Girl Died Due To Electric Shock Near Kulithalai – TNN | மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழப்பு

    குளித்தலை அருகே சிவாயத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     
     

     
    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் கபிஷா வயது 5. ரங்கசாமி மனைவி பார்வதி தனது வீட்டில் சமையலறையில் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வாளியில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சுட வைத்து விட்டு சமையல் செய்து கொண்டிருந்தார்.
    அப்போது  வீட்டினுள் வந்த சிறுமி வாளியில் இருந்த சுடு தண்ணீரில் கையை வைத்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அவரது பெற்றோர் தங்களது பைக்கில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
     

     
    இதனை அடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் இருந்த குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பயந்து ஐந்து வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
     
     

    Source link

  • Agriculture Budget 2024: கடன் முதல் மானியம் வரை.. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

    Agriculture Budget 2024: கடன் முதல் மானியம் வரை.. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?


    <p>இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.&nbsp;</p>
    <p>ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p>இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p>
    <h2><strong>இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?</strong></h2>
    <p>பொதுவாக பட்ஜெட் என்றால் எவ்வளவு செலவாகும், எதற்கு எவ்வளவு செலவு செய்யப்படும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும். எதற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும், அரசின் கொள்கைகள் என்பதும் அதில் சொல்லப்படும்.&nbsp;</p>
    <p>ஆனால், தேர்தல் ஆண்டில் ஆட்சி மாறுவதற்கான வாய்ப்பிருப்பதால், எந்த ஒரு அரசாலும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதில், தேர்தல் நடந்து முடியும் வரை, இடைக்காலத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன்மூலம், நிதியை பயன்படுத்த அரசுக்கு அனுமதி வழங்கப்படும். இது, Vote on Account என சொல்லப்படுகிறது.</p>
    <h2><strong>விவசாய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?</strong></h2>
    <p>தீவிர காலநிலை மாற்றங்களாலும், பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தாலும், பணவீக்கத்தாலும் விவசாயத்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. அதுமட்டும் இன்றி, தேர்தல் ஆண்டு என்பதால் விவசாயத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p>
    <p>2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கு என 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2013-14 நிதியாண்டை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2013-14 ஆண்டில், 27,662.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.</p>
    <p>விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள், வரி நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில், விவசாய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் தொடரும் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>
    <h2><strong>விவசாயிகள் கடன்:</strong></h2>
    <p>அடுத்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 22-25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அரசின் நிறுவனங்கள் மூலம் கடன் கிடைப்பதை உறுதிசெய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அரசின் விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், டிசம்பர் 2023 வரை, விவசாயக் கடன் இலக்கான 20 லட்சம் கோடி ரூபாயில் 82 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>மானியம்:</strong></h2>
    <p>அரசு வழங்கும் மானியங்களில் பெரும்பகுதி உணவு மற்றும் உரத்துக்கும் வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளை பாதிக்காத வகையில் யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவர்களை குறிவைத்து மானியம் வழங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, ​​உணவு மானியத் திட்டம் ‘வீட்டு நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு 2011-12’ல் இருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.</p>

    Source link

  • Meenakshi Ponnunga Serial Contest Five Star Hotel Dinner And More

    Meenakshi Ponnunga Serial Contest Five Star Hotel Dinner And More

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகையின் போது சீதா விட்டு சீதனம் என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தியது. அதாவது சீதாராமன் சீரியலின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்கும் 5 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப் புடவை, மற்றும் அரை சவரன் மோதிரம் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளர்களின் விவரங்கள் நேற்று புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய ‘நினைத்தேன் வந்தாய்’ தொடரின் இறுதியில் அறிவிக்கப்பட்டன.
    இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்த போட்டியை அறிவித்துள்ளது ஜீ தமிழ். வின்னர் வின்னர் 5 ஸ்டார் டின்னர் என்ற பெயரில் இந்த போட்டி நடைபெற உள்ளது. அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலைப் பார்த்து அதில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். 
    ஒவ்வொரு நாளும் ஐந்து போட்டியாளர்கள் வீதம் மொத்தம் ஐந்து நாட்களுக்கு 25 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் ( அதிகபட்சம் 4 நபர்கள் ) இணைந்து சென்னையில் உள்ள மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 
    எனவே நேயர்கள் தவறாமல் மீனாட்சி பொண்ணுங்க சீரியலைப் பார்த்து பரிசுகளை தட்டிச்செல்லுமாறு சீரியல் குழு ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
    மேலும் படிக்க: Blue Star Review: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சிறந்த படம் – ப்ளூ ஸ்டார் படத்தின் விமர்சனம் இதோ!
    Singapore Saloon: தியேட்டரை அலறவிடும் காமெடி.. ஆர்.ஜே.பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்” படத்தின் விமர்சனம் இதோ..!

    Source link

  • Job Fair Agniveer Vayu Recruitment 2024 Apply For Indian Air Force Tiruvannamalai Dist – TNN

    Job Fair Agniveer Vayu Recruitment 2024 Apply For Indian Air Force Tiruvannamalai Dist – TNN

    (Tiruvannamalai News திருவண்ணாமலை) இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு, இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு ஜனவரி 17 2024 முதல் பிப்ரவரி 06 2024 வரையில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது
    வயது வரம்பு; 
    இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வயது வரம்பு ஜனவரி 02 2004 முதல் ஜுலை 02 2007 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் 21 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
    கல்வி தகுதி; 
    கல்வித் தகுதியாக Central > State > UT உறுப்பினராகப் பட்டியலிடப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை 10,12 சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) மூன்றாண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Instrumentation Technology / Information Technology அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் மொத்தம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் (அல்லது டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் இடைநிலை மெட்ரிகுலேஷன்) பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடங்கள் தவிர மற்றவையாக சிஓபிஎஸ்இ உறுப்பினராக பட்டியலிடப்பட்ட மத்திய, மாநில கல்வி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பாடத்திலும் இடைநிலை, 10, 12 சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்தத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
    உடற் தகுதி;
    உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ ஆண்களும் 152 செ.மீ பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
    மாதம் சம்பளம் ;
    இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ 30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ550 மற்றும் புளுவு வரியுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பில் தேர்வு முறை தேர்வுக்கு வேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

    Source link

  • ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கப்பட்ட மேக்னோமீட்டர் பூம்.. தொடர்ந்து அசத்தும் ஆதித்யா எல் 1 விண்கலம்

    ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கப்பட்ட மேக்னோமீட்டர் பூம்.. தொடர்ந்து அசத்தும் ஆதித்யா எல் 1 விண்கலம்

    ஆதித்யா எல் 1 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள மேக்னோமீட்டர் பூம் கருவியை ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 
    ஆதித்யா எல்1 விண்கலம்:
    சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்தாண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது.
    புவியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஆதித்யா எல்-1 விண்கலம்,  படிப்படியாக அடுத்தடுத்து இலக்கை நோக்கி உந்தி தள்ளப்பட்டன.  செப்டம்பர் 30 ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. பூமியின் ஈர்ப்பு  விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லெக்ராஞ்சியன் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது. இதையடுத்து, பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் எல்1 புள்ளியை ஆதித்யா எல்1 விண்கலம் எட்டியது.
    இந்த நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள மேக்னோமீட்டர் பூம் கருவியை ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
    காந்த மண்டலங்களை ஆராய உதவும் 6 மீட்டர் மேக்னோமீட்டர் பூம் கருவியை கடந்த 132 நாள்களாக விண்கலம் ஏந்தி சென்றது. மேக்னோமீட்டர் பூமில் 2 ஃப்ளக்ஸ்கேட் மேக்னோமீட்டர்கள் கருவிகள் உள்ளன. விண்வெளியில் உள்ள கிரகங்களுக்கு இடையேயான காந்தப்புலத்தை அளவிட இது உதவும்.
     

    Aditya-L1 Mission:The 6m magnetometer boom, previously stowed for 132 days, is now successfully deployed in the Halo orbit.The boom houses two fluxgate magnetometers that measure the interplanetary magnetic field in space.Details: https://t.co/ZrSKAVu1z4 pic.twitter.com/Xq4LmwBhwE
    — ISRO (@isro) January 25, 2024

    ஆராய்ச்சிப் பணிகள்:
    ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதற்காக அந்த செயற்கைகோளில், சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. லெக்ராஞ்சியன் புள்ளியில் எந்த கிரகணமும் (சந்திர கிரகணம், சூரிய கிரகணம்) குறுக்கே வராத காரணத்தால், இடையூறு ஏதுமின்றி ஆய்வுப் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Source link

  • ஒசூர் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து; விண்ணை சூழந்த கரும்புகை; போராடும் தீயணைப்பு வீரர்கள்

    ஒசூர் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து; விண்ணை சூழந்த கரும்புகை; போராடும் தீயணைப்பு வீரர்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகே உள்ள ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருகின்றது. இதனால் குடோனைச் சுற்றியும் குடோனுக்கு மேலேயும் பல மீட்டர்கள் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துவருகின்றனர். குடோனுக்குள் ஆட்கள் யாரேனும் உள்ளார்களா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. முதற்கட்ட விசாரணையில் தீவிபத்துக்குள்ளான குடோன் வடிவேலு என்பவருக்குச் சொந்தமானது என தெரிவந்துள்ளது. 

    Source link

  • Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.!

    Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.!


    Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.!

    Source link

  • 26 Criminals, Including A Woman, Arrested In Chennai Police In The Last One Week Under Goondas Act – Police | Goondas Act: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

    26 Criminals, Including A Woman, Arrested In Chennai Police In The Last One Week Under Goondas Act – Police | Goondas Act: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

    சென்னையில் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட மொத்தம் 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 
    இது தொடர்பாக காவல் துறை தரப்பில், “சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர். உத்தரவின்பேரில், கடந்த 01.01.2024 முதல் 24.01.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 31 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 14 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 13 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 60 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 18.01.2024 முதல் 24.01.2024 வரையிலான ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    குற்றவாளிகள் 1.நயன் பக்டி, வ/28, த/பெ.நில்ரடன் பக்டி, பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் என்பவர் கடந்த 28.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, C-1 பூக்கடை காவல் நிலையத்திலும், 2.மாரிமுத்து (எ) மாரி (எ) ஆலிகுடி மாரி, வ/37, த/பெ.சங்கரவேல் தேவர், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம் என்பவர் கடந்த 05.09.2023 அன்று ஜெகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக V-7 நொளம்பூர் காவல் நிலையத்திலும், 3.அகஸ்டின் (எ) கான்டு, வ/29, த/பெ.சார்லஸ், வடபழனி, சென்னை என்பவர் கடந்த 22.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும் (PEW/AnnaNagar) வழக்குகள் பதிவு செய்து, கைது செய்ப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    Source link

  • ஐசிசி விருது… நான்காவது முறையாக தட்டிச் சென்ற ரன் மிஷின் விராட் கோலி!

    ஐசிசி விருது… நான்காவது முறையாக தட்டிச் சென்ற ரன் மிஷின் விராட் கோலி!

     
    ஐசிசி ஒருநாள் விருது:
    ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி பெற்றிருக்கிறார். 
     
    நான்காவது முறை:
    இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இதற்கு முன்னர் கடந்த 2012, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஐசிசியின் ஒரு நாள் போட்டிகளின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். முன்னதாக, தென்னாப்பிரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தான் உலக அளவில் அதிக முறை ஐசிசி விருதை வென்ற வீரராக இருந்தார். தற்போது இந்த சாதனையை விராட் கோலி முறியடித்து நான்காவது முறையாக இந்த விருதை வென்றிருக்கிறார். 
     
     
     
     

    Player of the tournament at the ICC Men’s @cricketworldcup 2023 😎The extraordinary India batter has been awarded the ICC Men’s ODI Cricketer of the Year 💥 https://t.co/Ea4KJZMImE
    — ICC (@ICC) January 25, 2024

    Source link

  • India To Begin Export Of Ground Systems For BrahMos Supersonic Cruise Missiles In Next 10 Days.

    India To Begin Export Of Ground Systems For BrahMos Supersonic Cruise Missiles In Next 10 Days.

    இந்தியா அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தரை அமைப்புகளின் ஏற்றுமதியைத் தொடங்க உள்ளது. டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் கூறுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கப்பல் ஏவுகணைகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

    India to begin export of ground systems for BrahMos supersonic cruise missiles in next 10 days. The cruise missiles are expected to be sent by March this year: DRDO Chairman Dr Samir V Kamat to ANI pic.twitter.com/Kgbz6bbVEP
    — ANI (@ANI) January 25, 2024

    பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கான தரை அமைப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான முடிவு, சர்வதேச நாடுகளுடன் உள்நாட்டு திறன்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மூலோபாய நகர்வைக் குறிக்கிறது.
    செய்தி நிறுவனத்திடம் பேசிய டாக்டர் காமத், ஆயுதப்படைகளில் டிஆர்டிஓ-உருவாக்கிய தயாரிப்புகளின் வரவிருக்கும் சேர்க்கை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். ஆயுதப் படையில் கூடுதல் வலுசேர்க்கும் வகையில், LCA Mk-1A, அர்ஜுன் Mk-1A, QRSAM மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது. டிஆர்டிஓவால் உருவாக்கப்பட்ட பல தந்திரோபாய ஏவுகணைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். 
    தொடர்ந்து பேசிய டாகடர் காமத், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டி, தோராயமாக ரூ. 4.94 லட்சம் கோடி மதிப்பில் டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள், வெற்றிகரமாக defence acqusition council மூலம் அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் அவற்றின் துல்லியம் மற்றும் வேகத்திற்காக புகழ்பெற்றவை, அவை நவீன போரில் ஒரு வல்லமைமிக்க சொத்தாக கருதப்படுகிறது. தரை அமைப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையானது, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அதன் தொழில்நுட்ப வல்லமையை உலக அரங்கில் வெளிப்படுத்துவதற்கும் உறுதியளிப்பதாக கூறப்படுகிறது. 
    பிரம்மோஸ் ஏவுகணை 2004ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த போது 13 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உதிரி பாகங்கள் இருந்தன. ஆனால் கடந்த 19 ஆண்டுகளில் இது 75 சதவீதமாக அதிகரித்துள்ளது என பிரபல விஞ்ஞானியும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே தெரிவித்திருந்தார்.
    ஆனால் 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக இந்த ஏவுகணையை தயாரிக்க முடியாது. ஏனெனில் பிரம்மோஸ் ஏவுகணை என்பது ரஷ்யா மற்றும் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் கூட்டு திட்டமாகும். மேலும் ரஷ்யாவின் ஒரு சில தொழில்நுட்பங்களை நாம் சார்ந்துள்ளதால் 100 சதவீதம் எட்ட முடியாது என தெரிவித்தார்.  75 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பங்களால், பிரம்மோஸ் ஏவுகணையின் ஒட்டுமொத்த விலை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் ரானே தெரிவித்தார். 

    இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Source link

  • Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

    Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!


    Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

    Source link

  • Helo India Youth Games 2024 Tournament Villupuram Girls Won The Silver Medal In The Mallarkambam Competition – TNN

    Helo India Youth Games 2024 Tournament Villupuram Girls Won The Silver Medal In The Mallarkambam Competition – TNN

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு  போட்டியில், மல்லர்கம்பம் போட்டியில், தமிழ்நாடு மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் குழு விளையாட்டு போட்டி மற்றும் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றதையடுத்து, மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனியிடம் பதக்கம் மற்றும் கோப்பையினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
     
    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுலக வளாகத்தில், 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2024 போட்டியில், மல்லர்கம்பம் போட்டியில், தமிழ்நாடு மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் குழு விளையாட்டு போட்டி மற்றும் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றதையடுத்து, மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, அவர்களிடம் பதக்கம் மற்றும் கோப்பையினை இன்று (25.01.2024) காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்தியா அளவில் தேசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சகத்தின் கேலோ இந்தியா அமைப்பின் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2024 போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஜனவரி 19 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
     
    ஜனவரி 21 தொடங்கி 24 வரை நான்கு நாட்கள் திருச்சியிலுள்ள தமிழ்நாடு விளையட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்களுக்கான மல்லர்கம்பம் விளையாட்டு போட்டியில் 22 மாநிலங்களை சார்ந்த 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர். விழுப்புரத்தை சேர்ந்த மதிவனி, பூமிகா, சங்கீதா, மற்றும் பாலாஜி ஆகியோர்கள் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் அணியானது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழு விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கமும், செல்வி. பூமிகா அர்கள் மல்லர்கம்பம் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி அவர்கள் அணி மேலாளராகவும், ஆண்கள் அணி பயிற்றுநராக நடராஜன் மற்றும் பெண்கள் அணி பயிற்றுநாரக திரு.ஆதித்தன் அவர்களும் சென்றனர்.
     
    வெற்றி பெற்ற மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்களிடம் பதக்கம் மற்றும் கோப்பையினை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, நகராட்சி ஆணையர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் கிருஷ்ணதாஸ், மல்லர்கம்பம் நிறுவனர் உலக துரை உட்பட பலர் உடனிருந்தனர்.

    Source link

  • தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!

    தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!

    வீட்டு வேலைகளுக்கு வந்த இளம்பெண்ணை துன்புறுத்திய புகாரில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன், மருமகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை வெளியான பின்னரும் காவல் துறை தரப்பில் எந்தவிதமான நடவடிக்கைடும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தலைமறைவாக இருந்த இருவரையும் ஆந்திராவில் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். 

    Source link

  • தடைகளை தகர்க்கும் டிரம்ப்.. சிம்ம சொப்பனமாக திகழும் பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்

    தடைகளை தகர்க்கும் டிரம்ப்.. சிம்ம சொப்பனமாக திகழும் பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்


    <p>அமெரிக்க அரசியலை பொறுத்தவரையில் இரண்டு முக்கிய கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று ஜனநாயக கட்சி. மற்றொன்று குடியரசு கட்சி. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினாலும், இந்த இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கிடையேதான் போட்டி இருக்கும்.</p>
    <h2><strong>இறுதி கட்டத்தை நோக்கி நகரும் அமெரிக்க அதிபர் தேர்தல்:</strong></h2>
    <p>இந்த சூழிலில், அமெரிக்க அதிபர் தேர்தல், இந்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, வரும் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>பைடனை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.</p>
    <p>பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து இருவரும் டிரம்ப்-க்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.</p>
    <h2><strong>டிரம்ப்-க்கு சவாலாக மாறியுள்ள நிக்கி ஹேலி:</strong></h2>
    <p>அயோவா மாகாணத்தை தொடர்ந்து நியூ ஹாம்ப்ஷயரில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலிலும் டிரம்பே வெற்றிபெற்றுள்ளார். குடியரசு கட்சியினர் மத்தியில் இருக்கும் ஆதரவை பொறுத்தவரையில், டிரம்ப் முதல் இடத்திலும் நிக்கி ஹேலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதை தொடர்ந்து, நிக்கி ஹேலியின் சொந்த மாகாணமான தெற்கு கரோலினாவில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.</p>
    <p>சொந்த மாகாணம் என்பதால் தனது ஆதரவை பெருக்கி கொள்ள நிக்கி ஹேலி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அயோவா, நியூ ஹாம்ப்ஷயரை போன்று தெற்கு கரோலினாவிலும் ட்ரம்ப் வெற்றிபெற்றுவிட்டால், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.</p>
    <p>அதிபராக இருக்கும் போது அவரை பதவி நீக்கம் செய்ய இரண்டு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இரண்டு முறையும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் அதிபர் பதவியை தக்க வைத்து கொண்டார் டிரம்ப். சர்ச்சைகளுக்கு பெயர் போன டிரம்ப், சட்ட ரீதியாக பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், மூன்று மாகாண உட்கட்சி தேர்தலில் அவர் வெற்றிபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.</p>
    <p><strong>இதையும் படிக்க: <a title="வேலையை காட்டும் சீனா! பரபரப்பை கிளப்பும் ஆய்வு கப்பல் – இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?" href="https://tamil.abplive.com/news/world/china-vessel-in-indian-ocean-region-heading-to-maldives-will-it-be-a-security-threat-163391" target="_blank" rel="dofollow noopener">வேலையை காட்டும் சீனா! பரபரப்பை கிளப்பும் ஆய்வு கப்பல் – இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?</a></strong></p>

    Source link

  • எடியூரப்பா போட்ட ஸ்கெட்ச்.. யூடர்ன் அடித்த முன்னாள் முதலமைச்சர்.. கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்..!

    எடியூரப்பா போட்ட ஸ்கெட்ச்.. யூடர்ன் அடித்த முன்னாள் முதலமைச்சர்.. கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்..!


    <p>கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று மீண்டும் இணைந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.</p>
    <h2><strong>பாஜகவில் மீண்டும் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்:</strong></h2>
    <p>இதனால், கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர், தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பு அளித்த போதிலும், அவர் தோல்வியை தழுவினார். இருப்பினும், அவருக்கு சட்டமேலவை உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.</p>
    <p>இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவுடன் டெல்லிக்கு சென்ற ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர், பாஜக தலைமை அலுவலகத்தில் கர்நாடக பாஜக தலைவர் பி. ஒய். விஜயேந்திரா முன்னிலை பாஜகவில் மீண்டும் இணைந்தார்.</p>
    <p>இதுகுறித்து பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், "நான் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்கிறேன் (காங்கிரஸ் அளித்த பதவி). நான் ஏற்கனவே எனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டேன். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு தெரிவித்துவிட்டேன்.</p>
    <h2><strong>கர்நாடக அரசியலில் திருப்பம்:</strong></h2>
    <p>பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்னை பாஜகவுக்கு திரும்புமாறு வற்புறுத்தி வந்தனர். குறுகிய காலத்தில் கட்சியில் தன்னை நன்றாக நடத்தியதற்காக காங்கிரஸுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.</p>
    <p>குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, "அவர் (ஷெட்டர்) பாஜகவுக்கு சென்றுவிட்டார் என்பது எனக்குத் தெரியாது. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக செய்தியாளர் சந்திப்பில் ஏதேனும் கூறியுள்ளரா?</p>
    <p>அவருக்கு பாஜக தலைமை அவமரியாதை செய்ததற்காகவும், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்காகவும் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகினார். காங்கிரஸில் சேர்ந்தார். ஹூப்பள்ளியில் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். இருந்தும் கட்சி அவரை எம்எல்சி ஆக்கியது. காங்கிரஸில் ஷெட்டருக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. காங்கிரஸில் மரியாதையுடன் நடத்தப்பட்டார்" என்றார்.</p>
    <p>ஹூப்ளி ஊரக தொகுதியில் இருந்து மூன்று முறையும் ஹூப்ளி – தர்வாட் மத்திய தொகுதியில் இருந்து மூன்று முறையும் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டும் இன்றி, சபாநாயகராவும் அமைச்சராக பல முக்கிய துறைகளையும் தன் வசம் வைத்திருந்தார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்!

    Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்!


    Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்!

    Source link

  • With The Power Of Your Voteyou Have To Defeat Parivarwadi Parties Says Pm Modi

    With The Power Of Your Voteyou Have To Defeat Parivarwadi Parties Says Pm Modi

    வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மேலும், அந்தந்த மாநில கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை துவங்கிவிட்டன. 
    ”இந்தியாவின் எதிர்காலத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்”
    இந்த நிலையில், இன்று தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்களார்களுடன் கலந்துரையாடினார்.  நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.
    அப்போது பேசிய அவர், “இந்த நாளில், முதல்முறை வாக்காளர்களில் ஒருவராக இருப்பது எனக்கு ஆற்றலை ஏற்படுத்துகிறது.  நீங்கள் இப்போது ஜனநாயக நாட்டில் முக்கிய அங்கமாக உள்ளீர்கள். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் எதிர்காலத்தை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இளைஞர்களின் ஒவ்வொரு கனவையும் நினைவேற்ற பாஜக அரசு இரவு, பகலாக உழைத்து வருகிறது. எனது முன்னுரிமை அனைத்தும் இளைஞர்கள் தான். ” என்றார்.
    “குடும்ப அரசியலுக்கு முற்றிப்புள்ளி வையுங்கள்”
    தொடர்ந்து பேசிய அவர், “2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது. நாட்டில் பெரும்பான்மை அரசு இருக்கும்போது, ​​கொள்கைகள் மற்றும் முடிவுகளில் தெளிவு இருக்கும். உலகத் தலைவர்களைச் சந்திக்கும் போது, சந்திப்பது நான் மட்டும் அல்ல. என்னுடன் 140 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள்.
    பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னையை பாஜக அரசு தீர்த்து வைத்துள்ளது. மக்கள் ஊழல் பற்றி பேசுவதற்கு பதில் நம்பகத்தன்மை பற்றி பேசுகிறார்கள். பாஜக ஆட்சியில் மக்கள் ஊழல், மோசடி பற்றி பேசாமல்,  வெற்றி கதைகள் பற்றி பேசுகிறார்கள். பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் பட்டியலில் இருந்த இந்தியா இன்று பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது.  வரும் ஆண்டுகளில், பொருளாதார பட்டியில் முதல் மூன்று இடங்களில் இந்தியா இருக்கும்.
     

    #WATCH | While addressing new voters, PM Modi says, “With the power of your vote, you have to defeat ‘parivarwadi’ parties.” pic.twitter.com/pd6JpC7Y5Q
    — ANI (@ANI) January 25, 2024

    மற்ற நாடுகளுக்கு நான் செல்லும்போது இந்தியாவை பெருமையாக நினைக்கிறார்கள். நாட்டில் குடும்பக் கட்சிகள் இருந்தால் இளைஞர்கள் முன்னேற வாய்ப்பிருக்காது. இளைஞர்களை முன்னேற விடாமல் தடுப்பதே உறவுமுறைகள் தான்.  குடும்பக் கட்சிகளின் சிந்தனை இளைஞர்களுக்கு எதிரானது.  அதனால் தான், உங்கள் (இளைஞர்கள்) வாக்குகளை வைத்து குடும்ப அரசியலுக்கு முற்றிப்புள்ளி வையுங்கள்” என்றார் பிரதமர் மோடி.

     
    மேலும் படிக்க
    BJP Election Campaign: ‘’மோடியின் உத்தரவாதம்: கனவுகளை நனவாக்குவோம்’’- லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முதல் பிரச்சாரப் பாடல் வெளியீடு!
     

    Source link

  • Lijo Jose Pellissery Directed Mohanlal Starrer Malaikottai Vaaliban Movie Review

    Lijo Jose Pellissery Directed Mohanlal Starrer Malaikottai Vaaliban Movie Review

    Malaikottai Vaaliban

    Historical Fantasy
    இயக்குனர்: Lijo Jose Pellissery
    கலைஞர்: Mohanlal , Sonalee Kulkarni , Katha Nandi , Danish Sait , Hareesh Peradi ,

    மலையாள சினிமாவில் பெரும் பொருட்செலவில், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் ‘மலைகோட்டை வாலிபன்’. இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஹரீஷ் பரேடி, தானிஷ் சைத், சோனாலி குல்கரனி, கதா நந்தி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரஷாந்த் பிள்ளை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலைக்கோட்டை வாலிபன் படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
    மலைக்கோட்டை வாலிபன்

    மலைகோட்டை வாலிபன் (மோகன்லால்) என்கிற மல்யுத்த வீரன், அவனது ஆசான் அய்யனார் (ஹரிஷ் பேரடி)  மற்றும் ஆசானின் மகன் சின்னப்பையன் (மனோஜ் மோஸஸ்) ஆகிய மூவரும் ஒவ்வொரு ஊராக சுற்றித் திரிகிறார்கள். ஒரு மல்யுத்த வீரனான மலைகோட்டை வாலிபன் தான் செல்லும் இடங்களில் தனக்கு சவாலாக இருப்பவர்களை சண்டையிட்டு வெற்றி கொள்கிறான். சிறு சிறு மல்யுத்த வீரர்கள் முதல் டாராண்டினோ படத்தின் கதாபாத்திரங்களின் ஸ்டைலில் சண்டையிடும் வெள்ளைக்காரர்கள் மற்றும் வானத்தை தொடும் சக்திகொண்ட (ஒரு சர்ப்ரைஸ்)  வரை இதில் அடக்கம்.
    “வெற்றிகளை சேர்த்துக் கொண்டு போவதே மலைக்கோட்டை வாலிபனின் விதி” என்று அவனது ஆசான் அய்யனார் அவனிடம் தொடர்ந்து கூறிவருகிறார். இந்தப் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள் முதலியவை கொஞ்சம் அதீதமான கற்பனை கலந்து ஹாலிவுட் கௌவ் பாய் ஸ்டைடில் சொல்லப்பட்டிருக்கும் கதையே மலைக்கோட்டை வாலிபன்.

    நாட்டார் கதை
    நாட்டார் கதைப்பாடல்களில் வரும் வீரம், சாகசம், துரோகம், சூழ்ச்சி, வீழ்ச்சி போன்ற அம்சங்களை மையமாக வைத்து ஒவ்வொரு காட்சிகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.  ஒரு கதைப்புத்தகம் படிப்பது போல் மலைக்கோட்டை வாலிபனின் சாதனைகள் மட்டுமே அடுத்தடுத்த நிகழ்வுகளாக முதல் பாதியில் இடம்பெறுகின்றன. கதை நடக்கும் இடம், காலம் ஆகியவை எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.
    முந்தைய காட்சியில் இதுதான் படமாக இருக்கும் என்று யோசிக்கும் தருணத்தில் அடுத்த காட்சியில் புதிய திருப்பத்தை எடுக்கிறது கதை. வழக்கமான தொடக்கம் இடைவேளை முடிவு என்று படம் பார்த்து பழக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு , இந்தப் படம் கொஞ்சம் சிதறலான அனுபவத்தையே கொடுக்கும். சொல்லப்போனால் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தான் மாறி வந்துவிட்டதோ என்கிற சந்தேகம் கூட ஏற்படலாம். 
    இந்திய நிலத்தில் பல்வேறு நாட்டார் கதைகள் இருக்கின்றன. பல நூறு ஆண்டுகளாக இந்தக் கதைகள் மக்களிடம் வாய்மொழிக் கதைகளாக கடத்தப்பட்டு வருகின்றன. ஒரே கதைக்கு பல்வேறு தொடக்கம், முடிவு, திருப்புமுனைகள் இருக்கின்றன. இதில் எது நிஜம் என்று கண்டு பிடிப்பது சுலபமான காரியம் இல்லை. ஒரு கதை எத்தனை விதமாக நமக்கு சொல்லப்படுகிறதோ அவை எல்லாவற்றையும் நாம் கேட்டுகொள்வது மட்டும்தான் வரலாற்றை புதிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி.
    இந்த தர்க்கத்தின் அடிப்படையில் தான் மலைகோட்டை வாலிபன் படத்தின் கதையை இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். “இதுவரை நீங்கள் பார்த்தது எல்லாம் பொய். இனிமேல் நீங்கள் பார்க்கப் போவதுதான் நிஜம்” என்கிற வசனம் தான் படத்தின் கதாநாயகனான மலைக்கோட்டை வாலிபனை புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே அலகு.

    தனது விதி தன்னை எங்கு அழைத்துச் சென்றாலும் அதை மலைக்கோட்டை வாலிபன் எதிர்கொள்ள வேண்டும். அவனது விதி அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் விருப்பு வெறுப்புகளால் திட்டமிடப்படுகின்றன. சிலர் அவனை பழிவாங்கத் துடிக்கிறார்கள், அவன் மரணத்தை நோக்கிச் செல்லும் வகையில் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். ஆனால் மலைகோட்டை வாலிபனைப் பொறுத்தவரை தன் விதி என்னவென்பதை தானே தீர்மானித்துக் கொள்ளும் இடத்தில் தான் இருக்கிறான். அதனால் தான் அவன் “நீங்கள் இதுவரை பார்த்தவை எல்லாம் பொய். இனிமேல் பார்க்கப் போவது மட்டுமே நிஜம்“ என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறான்.
    படத்தில் என்ன ப்ளஸ்?
    இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது ஓவ்வொரு படத்திலும் கதைசொல்லும் கட்டமைப்புகளை உடைத்துக் கொண்டே போகிறார். இந்த முறை வெஸ்டர்ன் பாணியுடன் கலந்து மிகை எதார்த்த காட்சிகள் உருவாக்கி ஒரு புதுவிதமான திரையனுபவத்தை அளித்திருக்கிறார். 
    இப்படியான ஒரு கதையை தனது உருவத்தால் மிக இயல்பாக நம்ப வைக்கிறார் மோகன்லால். ஒரு மல்யுத்த வீரருக்கான ஆஜானுபாகுவான உடல் மோகன்லாலிடம் இருக்கிறது. அதே நேரத்தில் அவரது சண்டைக் காட்சிகள் அனைத்தும் கற்பனைக்கு மீறியவையாக இருந்தாலும் ஒரு விதமான நளினத்துடன் கட்டமைக்கப்பட்டிருப்பது நம்பகத் தன்மையைக் கூட்டுகின்றன. அவ்வளவு பெரிய உடல் உள்ள ஒரு மனிதர், ஒரு சிறு கம்பின் துணையுடன் காற்றில் பறப்பதை பார்வையாளர்களாகிய நம்மால் ஏற்றுகொள்ள முடிகிறது.

    ஹரிஷ் பரேடியின் கதாபாத்திரம் கதையை நகர்த்தும் அம்சங்களுடம் அமைந்திருக்கின்றன. தானிஷ் சைத்தின் கதாபாத்திரம் படம் முழுவதும் மலைக்கோட்டை வாலிபனை பழிவாங்கும் எண்ணத்துடன் வருகிறது. மிகவும் தனித்துவமான குணாம்சம் உடல்மொழி, முகபாவனைகளை தானிஷ் சைத் வெளிப்படுத்தி இருக்கிறார்.
    ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மிக நுட்பமாக நம்மை ஒரு பழமையான கதையில் இருப்பது போல் உணரவைக்கிறார். கதாபாத்திரங்களை விட அவர்களைச் சுற்றி இருக்கும் பொருட்களின் பிரம்மாண்டத்தை அவர் முதன்மைப்படுத்துகிறார். இதனால் பார்வையாளர்கள் தான் எவ்வளவு பெரிய உலகத்தில் இருக்கிறோம் என்பதை கிரகித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் கேமரா இந்த அடிப்படையில் பொறுத்தப்பட்டிருக்கிறது.
    படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புகள் பெரும்பாலும் ஹாலிவுட் வெஸ்டர்ன் படங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
    குறை
    இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு கதையாடல், வடிவ ரீதியாக இன்னும் சரியாக கையாளப்பட வேண்டிய நெருக்கடி இந்தப் படத்தில் அதிகம் இருக்கிறது. ஒரு நெடுங்கதை சொல்லப்படும்போது அது பலவித நுண்மையான அழகியல் மற்றும் கவித்துவத்தால் மட்டுமே முழுமை பெற முடியும். அப்படி நுண்மையான அழகியல் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பதே, படத்தையோ அல்லது இயக்குநர் சொல்லவரும் கருத்தையோ நேர்கோட்டில் வைத்து புரிந்துகொள்ள சிக்கலானதாக மாற்றுகிறது. 
    எனினும், மலைக்கோட்டை வாலிபன், திரைப்படங்களில் தொன்மையான கதைகளை நவீன முறையில் எடுத்துரைக்க பல கதவுகளை திறந்து வைத்துள்ளது.

    Source link

  • Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

    Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

    தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை.. முதலமைச்சர் அதிரடி..!
    திருப்பூர் பல்லடத்தில் தாக்குதலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் படிக்க
    Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?
    மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவின் தாக்கம் பெரியளவில் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்பதே அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. மேலும் படிக்க
    TNPSC Group 2A Result: குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 2 நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் படிக்க
    Republic Day 2024: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்க தடை- குடியரசு தின விழாவையொட்டி பலத்த ஏற்பாடு!
    குடியரசு தின விழா கொண்டாட்டத்தை  முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதுமே 7500 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க
    TN Weather Update: வறண்ட வானிலையில் லேசான மழை? வானிலை நிலவரம் சொல்லும் தகவல் இதோ..
    தென்னிந்திய  பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 31 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 31 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

    Source link

  • Hardik Pandya : திரும்ப வந்துட்டேன் சொல்லு! கெத்துக்காட்டும் பாண்டியா | Workout

    Hardik Pandya : திரும்ப வந்துட்டேன் சொல்லு! கெத்துக்காட்டும் பாண்டியா | Workout

    Sports
    25 Jan, 01:18 PM (IST)

    Hardik Pandya : திரும்ப வந்துட்டேன் சொல்லு! கெத்துக்காட்டும் பாண்டியா | Workout

    Source link

  • Thaipusam 2024: கரூர் தான்தோன்றிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    Thaipusam 2024: கரூர் தான்தோன்றிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு


    <p><strong>தைப்பூசத்தை முன்னிட்டு தான்தோன்றி மலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.</strong></p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/e8581b642f613dddffa5002274f326e61706164470142113_original.jpeg" /></strong></p>
    <p>தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, தீர்த்த காவடியினர் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில்&nbsp; சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தான்தோன்றி மலை பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தனர்.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/1b05301fa4914d49463aaa2ce589c96c1706164487358113_original.jpeg" /></p>
    <p>&nbsp;</p>
    <p>தாரை தப்பட்டைகள் முழங்க நடைபெற்ற பக்தர்கள் பால்குட திருவீதி உலா தாந்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. அதன் தொடர்ச்சியாக மூலவர் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு பக்தர்கள் வழங்கிய பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடைபெற்றது.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/e74c21418b1b3e648ab53fdee86ab1711706164503350113_original.jpeg" /></p>
    <p>&nbsp;</p>
    <p>தைப்பூசத்தை முன்னிட்டு தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆறுமுக சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பாலாபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Maldives Opposition Parties Mdp And Democratic Parties Hit Out At Government For Its ‘anti-India Stance’

    Maldives Opposition Parties Mdp And Democratic Parties Hit Out At Government For Its ‘anti-India Stance’

    மாலத்தீவு அரசாங்கத்தின் “இந்தியா-விரோத நிலைப்பாடு” குறித்து கவலை தெரிவித்து, அந்நாட்டின் இரண்டு முதன்மை எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) மற்றும் ஜனநாயகக் கட்சி , இந்தியாவை “நீண்ட கால நட்பு நாடு” என அறிவித்தன. சமீபத்தில் மாலத்தீவு அரசு, அந்நாட்டின் துறைமுகத்தில் சீன கப்பல் ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியது, இதனை தொடர்ந்து இரு கட்சிகளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டன. 

    Joint Press Statement by the Maldivian Democratic Party and The Democrats.https://t.co/ioIfMd5Yyp pic.twitter.com/thHelqRM9K
    — MDP Secretariat (@MDPSecretariat) January 24, 2024

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பதவியேற்ற பிறகு பெய்ஜிங்கை தனது முதல் துறைமுகமாக மாற்றுவதற்கான சமீபத்திய முடிவு காரணமாக இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. மாலத்தீவு அதிபருக்கான முதல் துறைமுகமாக புது தில்லி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தற்போதைய அரசாங்கம், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. நீண்ட காலமாக நட்பு நாடாக இருந்து வரும் இந்தியா மாலத்திவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 
    எம்.பி.டி இன் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஃபயாஸ் இஸ்மாயில், பாராளுமன்ற துணை சபாநாயகர் எம்.பி. அஹமட் சலீம், ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.பி. ஹசன் லத்தீப் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எம்.பி. அலி அசிம் ஆகியோருடன் இணைந்து, பல்வேறு ஆட்சி தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது, 87 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 55 இடங்களைக் கொண்ட இரண்டு எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி விவகாரத்தில் ஒத்துழைக்க உறுதியளித்தன. மேலும் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிப்படைத்தன்மை பிரச்சனைகள் குறித்து கவலை தெரிவித்தன. முக்கியமாக நாட்டில் இருக்கும் நிதிநிலை பற்றி வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், எந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து தெளிவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    பிரதமர் மோடி அண்மையில் தான் லட்சத்தீவு சென்றது தொடர்பான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இது மாலத்தீவிற்கு எதிரான பரப்புரை என அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, இனி மாலத்தீவுகளுக்கு செல்லப்போவதில்லை என பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதோடு, ஏற்கனவே மாலத்தீவு பயணத்திற்காக செய்து இருந்த முன்பதிவுகளையும் ரத்து செய்தனர். இதனால் மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
    நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்கு மாலத்தீவு  சுற்றுலா தொழிற்சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் இன்னும் தனிந்தபாடில்லை.

    Source link

  • Thaipusam 2024 Mailam Thaipusa Festival Held At Murugan Temple – TNN

    Thaipusam 2024 Mailam Thaipusa Festival Held At Murugan Temple – TNN

    விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வடிவ மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், காலை 6 மணிக்கு 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகன் தங்க கவசம் அணிந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான  ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார். இதேபோல் செஞ்சி கிருஷ்ணாபுரம்-கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு 108 திரவிய அபிஷேகம் நடந்தது.
    அதைத்தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம், கோவில் குருசாமிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், தீமிதித்தல், அலகு குத்துதல், வேல் குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி லாரி, கிரேன், டிராக்டர் போன்ற பல்வேறு வாகனங்களை இழுத்தபடி ஊர்வலமாக பறக்கும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக சாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் திருமுருகன் சுவாமிகள் மற்றும் கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Source link

  • Karnataka Government Announces Old Pension Scheme Benefits For 13000 Employees Siddaramaiah NPS

    Karnataka Government Announces Old Pension Scheme Benefits For 13000 Employees Siddaramaiah NPS

    கர்நாடக மாநிலத்தில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 13 ஆயிரம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
    கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் சித்தராமைய்யாவைச் சந்தித்து வலியுறுத்திய நிலையில், கர்நாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    6ஆவது மாநிலமாக கர்நாடகம்
    கடந்த சில மாதங்களில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மாநிலங்களைத் தொடர்ந்து ஆறாவது மாநிலமாக கர்நாடகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 13 ஆயிரம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

    2006 ಏಪ್ರಿಲ್‌ ಪೂರ್ವ ನೇಮಕಾತಿ ಅಧಿಸೂಚನೆಯಾಗಿ 2006 ರ ನಂತರ ನೇಮಕಾತಿಗೊಂಡ ರಾಜ್ಯ ಸರ್ಕಾರದ ಸುಮಾರು 13,000 ಸರ್ಕಾರಿ ನೌಕರರಿಗೆ ಹಳೆ ಪಿಂಚಣಿ ಯೋಜನೆ ವ್ಯಾಪ್ತಿಗೆ ಒಳಪಡಿಸಿ ಆದೇಶ ಹೊರಡಿಸಲಾಗಿದೆ.ಚುನಾವಣೆಗೂ ಪೂರ್ವದಲ್ಲಿ ಎನ್.ಪಿ.ಎಸ್ ನೌಕರರು ಮುಷ್ಕರು ಮಾಡುವ ವೇಳೆ ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿನೀಡಿ ನಾವು ಅಧಿಕಾರಕ್ಕೆ ಬಂದ ನಂತರ ಬೇಡಿಕೆ… pic.twitter.com/IJTzZACw2R
    — Siddaramaiah (@siddaramaiah) January 24, 2024

    இதுகுறித்து அவர் கூறும்போது, தேர்தலுக்கு முன்னதாக அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று உறுதி அளித்திருந்தேன். இப்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின்கீழ் 13 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
    ஓய்வூதியத் திட்டங்கள்: என்ன வித்தியாசம்?
    பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு, மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் தொகை கடைசியாக அவர் வாங்கிய ஊதியத்தில் சுமார் பாதியளவுக்கு இருக்கும்.
    புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, ஓய்வூதியத் தொகையில் பங்களிக்கும். அதன் அடிப்படையில், ஒருமுறை மொத்தத் தொகை அளிக்கப்படும்.
    தமிழ்நாட்டில் என்ன நிலைமை?
    முன்னதாக இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.  
    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் அமைப்பு, பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Source link

  • Thalapathy 69 Vijay Next Movie Director Karthik Subbaraj Sun Pictures Tamil Cinema Latest News

    Thalapathy 69 Vijay Next Movie Director Karthik Subbaraj Sun Pictures Tamil Cinema Latest News

    தளபதி 69
    வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய்யுடன் அவர் இணைய இருப்பது குறித்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

    #Thalapathy69 #vijaythalapathy #KarthikSubbaraj pic.twitter.com/OZJVLoNf5a
    — SIIMA (@siima) January 25, 2024

    Source link

  • தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை.. முதலமைச்சர் அதிரடி..!

    தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை.. முதலமைச்சர் அதிரடி..!


    <p>திருப்பூர் பல்லடத்தில் தாக்குதலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p>

    Source link

  • VCK MLA Sindhanai Selvan Talks About Pig Is Not Shame Identification Dravidians

    VCK MLA Sindhanai Selvan Talks About Pig Is Not Shame Identification Dravidians

    காட்டுமன்னார் கோயில் தொகுதி எம்.எல்.ஏ.வான வி.சி.க.வைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன் சமீபத்தில் யூ டியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பன்றிகள், எருமைகளுக்கும், அப்போது வாழ்ந்த மக்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் பேசியுள்ளார்.
    பன்றி, எருமை மீது பண்பாட்டு தாக்குதல்:
     எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் பேசியதாவது, “பன்றி என்பதும், எருமை என்பதும் மிகவும் முக்கியமான விஷயம். இந்த கால்நடைகள் பழங்குடி மக்கள், எளிய மக்கள், பூர்வகுடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இவைகள் மீது மிகப்பெரிய பண்பாட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எருமை என்பது திராவிடர்களின் அடையாளமாகவும், பசுமாடு ஆரியர்களின் அடையாளமாகவும் கருதப்பட்டது. இன்று எருமை வீழ்த்தப்பட்டுள்ளது.

    ‘பன்றி இழிவானது அல்ல , பூர்வக்குடி மக்களின் அடையாளம்’இழிவாக சித்தரிப்பது பண்பாட்டு சிதைவு..#periyar #VCK pic.twitter.com/knpEU4fAh2
    — Sinthanai Selvan (@sinthanaivck) January 25, 2024

    தென்னிந்தியாவில் வாழ்ந்த தொன்மையான திராவிடர்கள் எருமையை ஒரு அடையாளமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த பண்பாட்டு அடையாளங்கள் வீழ்த்தப்பட்டு, வெறும் வசைச்சொற்களாக மாறியுள்ளது. நாம் யாரையும் திட்டும்போது கூட போடா பசுமாடு என்று சொல்வது அல்ல. போடா எருமை மாடு என்றுதான் சொல்கிறோம். போடா ஆடு என்று சொல்வது இல்லை. போடா பன்றி என்று சொல்கிறோம்.
    மிகப்பெரிய வணிகம்:
    அப்போ எருமையும், பன்றியும் ஏன் வசைச்சொற்களாக மாற்றப்பட்டுள்ளது? என்ற கேள்வி வருகிறது. நம் இலக்கியங்களில் பன்றி, ஆடு நம் மக்களால் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது தெரிகிறது. பன்றி வியாபாரம்தான் ஒரு மன்னனுக்கு மிகப்பெரிய அளவில் லாபம், தங்க நாணயங்களை தரும் அளவிற்கு வணிகமாக இருந்தது.
    அதன் விளைவுதான் தங்கக்காசுகளின் பன்றிகளின் தலையை போட்டனர். அதனால், அதை வராக என்று கூறுவார்கள். திருவிளையாடல் புராணங்களில் ஆயிரம் வராகம், ஆயிரம் வராகம் என்று கூறுவார்கள். அப்படி என்றால் ஆயிரம் பொற்காசு என்று அர்த்தம். தஞ்சை பெருங்கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் குலதெய்வம், அந்த பெருங்கோயிலுக்கு மிக அருகில் சிறிய அளவில் உள்ளது. அந்த குலதெய்வம் வராகி அம்மன்.
    காரணம் இதுதான்
    வராகி என்று சமஸ்கிருதத்தில் கூறினால், அதை நீங்கள் சௌகரியமாக உணர்கிறீர்கள். பன்றி என்று கூறினால் உங்களுக்கு சங்கடமாக உணர்கிறீர்கள். இவற்றை வளர்த்த பூர்வகுடி மக்கள் நிலம் இழந்தார்கள். இதனால், இவர்களின் கால்நடைகளும் இந்த நிலைக்கு வந்துள்ளது. இவற்றை சரியான முறையில் சுத்தமாக வளர்க்க முடிந்தால் மிகப்பெரிய லாபத்தை அது தரும். மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவாகவும் அவை அமையும்.”
    இவ்வாறு அவர் பேசினார்.

    Source link

  • Tamil Nadu Is Likely To Experience Dry Weather For The Next Few Days, The Meteorological Department Said

    Tamil Nadu Is Likely To Experience Dry Weather For The Next Few Days, The Meteorological Department Said

    TN Weather Update : தென்னிந்திய  பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 31 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
    27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
    ஜனவரி 31 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    உறைபனி எச்சரிக்கை:
    25.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:
    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிர்காலமாகும். இந்த மூன்று மாதங்களும் பகல் நேரங்களில் அதிக வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்துள்ள நீர் துளிகள் பனித்துகள்களாக படிந்து உறைப்பனியாக காட்சியளிப்பது வழக்கம். இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம்,  காந்தள்,  தலைக்குந்தா , அவலாஞ்சி,  அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள  புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. குறிப்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது.  
    கடந்த வாரம் உறை பனி பொழிவு காரணமாக உதகை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியஸும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. 
    மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
    28.01.2024 மற்றும் 29.01.2024: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். 

    Source link

  • Punjab: ஒற்றை கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு.. பஞ்சாபில் வைரலாகும் புகைப்படம்- என்ன காரணம் தெரியுமா?

    Punjab: ஒற்றை கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு.. பஞ்சாபில் வைரலாகும் புகைப்படம்- என்ன காரணம் தெரியுமா?


    <p>பஞ்சாப்பில் ஒற்றை கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின்னணி குறித்து காணலாம்.&nbsp;</p>
    <p>பொதுவாக திருவிழா காலங்களில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படும். அதுவே உயிரினங்களைக் கொண்டு நடத்தப்படும் பண்டிகைகளுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. புறா பந்தயம், சேவல், கிடாய், எருது விடும் விழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் என பல வகைகளில் இந்த போட்டிகளானது நடத்தப்படும். ஆனால் உயிரினங்கள் தொடர்பான போட்டிகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் தடையும் அமலில் உள்ளது.&nbsp;</p>
    <p>இப்படியான நிலையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் உள்ள பல்லுவானா என்ற கிராமத்தில் சேவல் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. &nbsp;இதில் பங்கேற்ற சேவல் துன்புறுத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். ஆனால் போலீசார் விரட்டி பிடித்ததில் இரண்டு சேவல்கள் மற்றும் ஒரு நபர் மட்டுமே பிடிபட்டார்கள்.&nbsp;</p>
    <p>இதனைத் தொடர்ந்து சண்டையில் காயமடைந்த சேவலுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் உணவு வழங்கப்பட்டு அதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் ஜெயித்தால் வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த 11 கோப்பைகளும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று குற்றவாளிகளில் ஒருவரான ராஜ்விந்தர் மீது விலங்கு வதை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார்.</p>
    <p>அதேசமயம் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சேவல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த கோழியை போலீசார் தங்கள் காவல் நிலையத்தில் உள்ள ஒருவரிடம் விட்டுச் சென்றுள்ளனர்.</p>
    <p>போலீஸ் ஸ்டேஷனில் வைத்தால் தனிமையாகிவிடும் என்பதால், கோழியை பராமரிக்கும் பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், கோழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், நேரில் சென்று பார்வையிட்டு அதன் சிகிச்சை பற்றி விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Unforgettable Day Says Actress Revathy Pens A Heartwarming Post On Ram Lalla | Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?’ ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி

    Unforgettable Day Says Actress Revathy Pens A Heartwarming Post On Ram Lalla | Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?’ ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி

    Actress Revathy: மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை  வெளிப்படுத்தக்கூடாது என்கிற நிலை தான் காணப்படுகிறது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில்:
    அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
    மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டுகளித்தனர். கோயில் திறப்பு விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி,  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
    ”ஆன்மிக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடாதா?”
     அயோத்தி ராமர்  கோயில் கட்டியதற்காக ஒரு தரப்பு பாஜக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ரஜினி உள்ளிட்ட சினிமா பிரபலங்களை பலர் விமர்சித்து வருகின்றனர். 
    இந்த நிலையில், நடிகை ரேவதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராமர் கோயில் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளை மறக்க முடியாது. அயோத்தி கோயிலுக்குள் குழந்தை ராமர் வருவதை பார்த்தபோது எனக்குள் எழுந்த உணர்வு அப்படி இருந்தது.
    எனக்குள் உணர்வு ரீதியான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால்,  இந்துக்களாக இருப்பவர்கள் நமது மத நம்பிக்கைகளை நமக்குள் மட்டுமே வைத்திருக்கிறோம். பிற மத உணர்வுகளை காயப்படுத்தக்கூடாது என நினைத்து அப்படி செய்கிறோம்.

    மதசார்பற்ற இந்தியாவில், நமது ஆன்மீக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடாது என்ற நிலைதான் காணப்படுகிறது. ஸ்ரீராமரின் வருகை, இந்த விஷயத்தை பலரிடம்  மாற்றியுள்ளது.  ராமரின் பக்தர்கள்தான் நாமெல்லாம் என்பதை முதல்முறை நம்பியிருக்கிறோம். ஜெய் ஸ்ரீராம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை ரேவதி குறிப்பிட்டுள்ளார்.   இவரது பதவி இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர். 

    Source link

  • Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?

    Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?


    <p>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிறைவடைந்த நிலையில், ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் தற்போது மக்களவைத் தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், வளரும் கட்சிகள் என்று அனைத்து கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்காக தங்களை கடந்த ஓராண்டாக தயார்படுத்தி வருகின்றனர்.</p>
    <h2><strong>மக்களைவைத் தேர்தல்:</strong></h2>
    <p>இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவின் தாக்கம் பெரியளவில் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்பதே அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.</p>
    <p>ஆளுங்கட்சியான தி.மு.க. தன்னுடைய கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க., என பல பலமான கட்சிகளை கொண்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் கூட்டணியில் யார்? யார்? என்று இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.</p>
    <h2><strong>கொங்கு மண்டலம்:</strong></h2>
    <p>அ.தி.மு.க. முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுக்குள் அதாவது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அ.தி.மு.க. சந்திக்கும் முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும். கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து சந்தித்த அ.தி.மு.க., இந்த தேர்தலை பா.ஜ.க. இல்லாமல் எதிர்கொள்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சர்ச்சையான கருத்துகள் அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்களை கொந்தளிக்கச் செய்த நிலையில், கடந்தாண்டு அ.தி.மு.க. &ndash; பா.ஜ.க. கூட்டணி முறிந்தது.</p>
    <p>அ.தி.மு.க. &ndash; பா.ஜ.க. கூட்டணி முறிந்தது பலவித கருத்துக்களை உண்டாக்கினாலும் உண்மையில் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஜெயலலிதா போன்ற பெரிய ஆளுமை இல்லாமல் எடப்பாடி பழனிசாமி &ndash; ஓ.பி.எஸ். இணைந்து கடந்த முறை சட்டசபைத் தேர்தலை சந்தித்தனர். அதில் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட செல்வாக்கின் மூலமாக கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு உதவியது.</p>
    <h2><strong>வியூகம்:</strong></h2>
    <p>இந்த மக்களவைத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பலரும் கொங்குமண்டலம் என்பதாலும், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அதிகளவு இருப்பதாலும் மக்களவைத் தேர்தலில் மற்ற தொகுதிகளை காட்டிலும் கொங்கு மண்டல தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த அ.தி.மு.க. வியூகம் வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p>ஏனென்றால் தென்தமிழகத்தில் சசிகலா ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிகளவு இருப்பதாலும், தி.மு.க. வலுவாக இருப்பதாலும் அ.தி.மு.க.விற்கு வாக்குகளை கவர்வதால் சிக்கல் உள்ளது.</p>
    <h2><strong>தி.மு.க.விற்கு சவால் அளிக்குமா?</strong></h2>
    <p>ஆனால், ஏற்கனவே தாங்கள் வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் மேலும் களத்தில் இறங்கி பணிபுரிந்தால் இன்னும் அதிகளவு வாக்குகளை பெறலாம் என்று கட்சித் தலைமை நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த முறை ஆளுங்கட்சியாக இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. 40 தொகுதிகளையும் தி.மு.க.விடம் இழந்தது.</p>
    <p>ஆனால், இந்த முறை கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் அ.தி.மு.க. களமிறங்குகிறது. எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு, வரும் சட்டசபைத் தேர்தல் உள்ளிட்டவற்றை கணக்கில் வைத்து மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களை வெற்றி பெற அ.தி.மு.க. முனைப்பு காட்ட திட்டமிட்டுள்ளது.</p>
    <h2><strong>என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?</strong></h2>
    <p>கொங்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தினாலும் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் அதிகளவில் உள்ள தென் தமிழகத்திலும் அ.தி.மு.க. கடந்த முறையை காட்டிலும் அதிகளவு வாக்குகளை பெற வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
    <p>இந்த முறை பா.ஜ.க.வைத் தவிர மற்ற பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டு வர அ.தி.மு.க. முனைப்பு காட்டும் என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த இரு கட்சிகளும் அ.தி.மு..க கூட்டணியில் இருந்தால் வட தமிழகத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது உண்மையாகும். இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வகுக்கும் வியூகம் என்ன? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>

    Source link

  • Villupuram Bus Stand School And College Students Clashed In Front Of Police – TNN | போலீஸ் முன் மோதிக்கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள்

    Villupuram Bus Stand School And College Students Clashed In Front Of Police – TNN | போலீஸ் முன் மோதிக்கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள்

     
    விழுப்புரம்: போதையில் இருந்த கல்லூரி மாணவரிடம் பள்ளி மாணவர் பேருந்தில் செல்ல நேரம் கேட்டபோது ஏற்பட்ட பிரச்சனையில் பள்ளி மாணவரின் மண்டையை கல்லூரி மாணவர் உடைத்துள்ளார். இதனால் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவரும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு பேருந்து மூலம் வருகைபுரிந்து கல்வி பயில செல்கின்றனர். இந்நிலையில், பள்ளி கல்லூரியை முடித்துவிட்டு பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பள்ளி கல்லூரியை முடித்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி கல்லூரி வகுப்பு நேரங்களை முடித்துவிட்டு பள்ளி மாணவர் அபிஷ் பிரதிப் ஆகியோர் பழையபேருந்து நிலையத்தில் இருந்து நன்னாடு கிராமத்திற்கு செல்ல பழையபேருந்து நிலையம் வந்துள்ளனர். பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவர் சதீஷிடம் சென்று இரு பள்ளி மாணவர்களும் நேரம் கேட்டுள்ளனர். அதற்கு போதையில் இருந்த கல்லூரி மாணவர் யாரிடம் வந்து நேரம் கேட்கிறாய் என்று வாக்கு வாதம் செய்து சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
    இதில் ஆத்திர மடைந்த பள்ளி மாணவர் அபிஷ்யை கல்லூரி மாணவர் சதீஷ் தாக்கியதில் பள்ளி மாணவரின் மண்டை உடைந்துள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்தனது சக நண்பர்களை அழைத்து கல்லூரி மாணவரை பழைய பேருந்து நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடத்தில் கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் தாக்கி கொள்ளவதை அப்பகுதியில் இருந்த வர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவானது வேகமாக பரவி வருகிற நிலையில் இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

    Source link

  • Watch Video: என்னடா இது.. சிங்கக்குட்டியுடன் காரில் ஜாலியாக வலம் வந்த இந்தியர்..வைரல் வீடியோ!

    Watch Video: என்னடா இது.. சிங்கக்குட்டியுடன் காரில் ஜாலியாக வலம் வந்த இந்தியர்..வைரல் வீடியோ!


    <p>தாய்லாந்தில் சிங்கக்குட்டியுடன் காரில் ஒருவர் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>
    <p>பூமியில் மனிதர்கள், தாவரம், விலங்குகள் என பல வகையான உயிர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் விலங்குகளை எடுத்துக் கொண்டால் அதன் குணங்களை வைத்து வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என பிரிக்கப்பட்டிருப்பதை சிறுவயதில் படித்திருப்போம். சிங்கம்,புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட மிருங்கங்கள் தொடங்கி பறவைகள், நீர்வாழ் விலங்குகள் என பல வகைகள் வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. அதுவே சில நாடுகளில் சிங்கம் தொடங்கி அனைத்து வகையான விலங்குகளும் சட்டத்திற்கு உட்பட்டு வளர்க்க அனுமதிக்கப்படுகிறது.&nbsp;</p>
    <p>இதுதொடர்பான வீடியோக்களை பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். உதாரணமாக ஆக்ரோஷமான குணம் படைத்ததாக சொல்லப்படும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் செல்லப்பிராணிகளாக சாதுவாக வளர்ந்து இருப்பதை பார்க்கும்போது &ldquo;உன் பவர் உனக்கே தெரியலையப்பா&rdquo; என கமெண்டுகள் பறக்கும். இப்படிப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="qme">🧐🧐🧐🧐🧐🧐🧐 <a href="https://t.co/xPx7cfjZP6">pic.twitter.com/xPx7cfjZP6</a></p>
    &mdash; Petchi Avudaiappan (@karthik0728) <a href="https://twitter.com/karthik0728/status/1750378578909528113?ref_src=twsrc%5Etfw">January 25, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>மடமன்தோன் என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் இருந்துதான் இந்த வீடியோ பதிவாகியுள்ளது. அதில் காரின் பின் &nbsp;இருக்கையில் சிங்கக்குட்டி அமர்ந்திருக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ கடந்த டிசம்பர் மாதம் சோன்புரி மாகாணத்தின் பாங் லாமுங் மாவட்டத்தில் உள்ள சோய் ஃபிரதம்நாக் நகரில் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சிங்கக்குட்டி வீடியோ வைரலாக உடனடியாக அந்நாட்டின் வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.&nbsp;</p>
    <p>தாய்லாந்து நாட்டின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புத் துறை சட்டத்தின்படி, அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பதிவு செய்து வளர்க்கலாம். இதற்காக இந்திய &nbsp;மதிப்பில் ஒரு விலங்குக்கு சுமார் ரூ. 11,64,613 விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் விலங்குகளை வளர்ப்பவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்திருக்க வேண்டும். முன் அனுமதியின்றி காட்டு விலங்கை பொது வெளியில் எடுத்துச் செல்வது, அதன் இருப்பிடத்தை மாற்றுவது என்பது கூடாது. இது சட்டப்படி விலங்குகளை துன்புறுத்துவதற்கு சமமாகும்.&nbsp;</p>
    <p>வீடியோவில் இருக்கும் சிங்கக்குட்டி பிறந்து 4 அல்லது 5 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் எனவும், அதன் உரிமையாளர் சவாங்ஜித் கொசூங்னெர்ன் தான் எனவும் கண்டறியப்பட்டது. ஆனால் காரை ஓட்டிச் சென்றது அவரின் நண்பரான இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரை கண்டுபிடிக்க தாய்லாந்து வனத்துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>

    Source link

  • BJP Election Campaign: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பிரச்சாரப் பாடலை வெளியிட்ட பாஜக

    BJP Election Campaign: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பிரச்சாரப் பாடலை வெளியிட்ட பாஜக

    பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இன்று  பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் அதிகாரப்பூர்வ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். ‘இதனால்தான் மோடியை தேர்ந்தெடுகின்றனர்’ (tabhi toh sab modi ko chunte hai) என்ற பிரச்சாரம் மக்களிடையே தோன்றி பாஜக அதனை ஏற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த புதிய பிரச்சாரத்தின் கருப்பொருள், ‘மோடியின் உத்தரவாதம்’ (modi ki guarantee) என்பது ஆகும். முதல் முறை வாக்காளர் மாநாட்டில் (Nav Matdata Sammelan) இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அப்போது ​​பிரதமர் மோடி கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுககளை எப்படி நனவாக்கினார் என்பதை விளக்கும் ஒரு பிரச்சார காணொளியும் வெளியிடப்பட்டது.

    ‘सपने नहीं, हक़ीक़त बुनते हैं।तभी तो सब मोदी को चुनते हैं।’#NaMoNavMatdataSammelan #MeraPehlaVoteModiKo pic.twitter.com/utcGJPIXg6
    — BJYM (@BJYM) January 25, 2024


    நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சி தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக இம்முறையில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆயத்தமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவின் முதல் பிரச்சார பாடல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டார். அப்போது, இந்த பிரச்சார முழக்கம் ஒரு சிலரின் உணர்வு மட்டுமல்ல, மக்களிடையே எதிரொலிக்கும் ஒன்று என தெரிவிக்கப்பட்டது. 
    கட்சித் தொண்டர்கள் அனைவரும்  மக்களின் உணர்வுடன் தங்களை எதிரொலிக்க வேண்டும் என்றும், இந்த முக்கியமான பிரச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரப்ப வேண்டும் என்றும் நட்டா கேட்டுக் கொண்டார்.

    Source link

  • Chengalpattu Van Accident Pilgrimis Melmaruvathur Temple More Than 10 Injured – TNN | மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து

    Chengalpattu Van Accident Pilgrimis Melmaruvathur Temple More Than 10 Injured – TNN | மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் கோயிலுக்குச்  பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து பக்தர்கள் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழாவையொட்டி இருமுடி விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா கடந்த 1ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இருமுடி விழாவிற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் இருமுடி அணிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு ரயில், விமானம், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தி வருகின்றனர்.
    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சிவகிரியில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு பக்தர்கள் திண்டிவனம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பக்தர்கள் சென்ற வேன் திண்டிவனம் அருகே உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை சின்ன நெற்குணம் லேபர் அருகே சென்று கொண்டிருந்த போது வேனின் பின் சக்கரம் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 வயது சிறுவன் மற்றும் பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படும்காயங்ம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் சிறிது நேரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Source link

  • Shanthanu Bhagyaraj Posted Emotional Tweet On Blue Star Movie | Blue Star: ”உங்க வீட்டு பிள்ளைங்க ஜெயிக்கிற படம்.. கண்டிப்பா பாருங்க”

    Shanthanu Bhagyaraj Posted Emotional Tweet On Blue Star Movie | Blue Star: ”உங்க வீட்டு பிள்ளைங்க ஜெயிக்கிற படம்.. கண்டிப்பா பாருங்க”

    குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் நடித்துள்ள நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
    இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி பாண்டியராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் விளையாட்டில் இருக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஞ்சித் என்ற கேரக்டரில் அசோக் செல்வனும், ராஜேஷ் என்ற கேரக்டரில் சாந்தனுவும் நடித்துள்ளனர். 
    இந்த படம் முன்னதாக பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஒருவழியாக இன்று ரிலீசாகியுள்ளது. மேலும் இப்படத்தின்போது தான் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் காதலிக்க தொடங்கி படம் வெளிவருவதற்குள் கல்யாணம் செய்து கொண்டனர். தம்பதிகளாக அவர்களின் முதல் படம் வெளியாகவுள்ளதும் ப்ளூ ஸ்டார் படம் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணங்களில் ஒன்றாக உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் சாந்தனு எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
    அதில், “நான் நடித்த சக்கரகட்டி படம் முதல் ப்ளூ ஸ்டார் படம் வரையிலான இந்த சினிமா பயணம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. இது எனக்கு பல்வேறு விதமான உணர்வுகளை எனக்கு கொடுத்துள்ளது. மேலும் வாழ்க்கையில் பல மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்துள்ளது. இனி எப்போதும் பாசிட்டிவிட்டி மட்டும் தான். ப்ளூ ஸ்டார் உங்க வீட்டு பசங்க ஜெய்க்கிற படம். இன்று முதல் தியேட்டரில் வெளியாகிறது. கண்டிப்பாக பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும். ஜெய்க்கிறோம்” என தெரிவித்துள்ளார். 

    My journey from #Sakkarakatti to #Bluestar… a journey that has taught me so many lessons, a rollercoaster of emotions & unforgettable memories which I’m thankful for in life 🫶🏻Only Positivity here onwards ❤️Unga veetu pasanga jeikre padam dhan #Bluestar 💙💫WORLDWIDE from… pic.twitter.com/TuYUnOq9Pb
    — Shanthnu (@imKBRshanthnu) January 25, 2024

    வெற்றிக்காக காத்திருக்கும் சாந்தனு 
    இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு அவரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சாந்தனு. அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சித்து பிளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கோடிட்ட இடங்களை நிரப்புக, வானம் கொட்டட்டும்  என பல படங்களில் நடித்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி என்பது அமையவே இல்லை. விஜய் நடித்த மாஸ்டர் படம் தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என மிகவும் எதிர்பார்த்த அவருக்கு, படத்தின் நீளம் காரணமாக சாந்தனு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தார். இந்த நிலையில் தான்  2024 ஆம் ஆண்டு தனக்கு நல்ல ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் ப்ளூ ஸ்டார் படத்தை எதிர்நோக்கியுள்ளார். 

    Source link

  • Jallikattu 2024 First Jallikattu Event Held At The Jallikattu Arena Near Alankanallur In Madurai District Ended With A Bang – TNN

    Jallikattu 2024 First Jallikattu Event Held At The Jallikattu Arena Near Alankanallur In Madurai District Ended With A Bang – TNN


    கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு  முதலமைச்சர் துவக்கி வைக்க  கோலாகலமாக நடந்து முடிந்தது.
     
    478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு – பூவந்தியைச் சேர்ந்த  மாடுபிடி வீரர் அபிசித்தர் மற்றும் காளைக்கு தலா ஒரு மகேந்திரா தார் ஜீப் பரிசு மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கபணம் பரிசு வழங்கப்பட்டது.
     
    சிறந்த காளை புதுக்கோட்டை மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரின் காளைக்கு முதல் பரிசு கார் மற்றும் 1லட்சம் ரொக்க பரிசு
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து போட்டியை பச்சைக்கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார்.  போட்டிக்கான உறுதிமொழி ஏற்பு தொடங்கிய நிலையில் காலை 11 மணிக்கு  போட்டியின் முதல் சுற்று தொடங்கியது.
     

     
    இதில் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 சுற்றுகளாக போட்டி நடைபெற்ற நிலையில் 5 சுற்றுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த மாடுபிடி வீரர்கள் 6 ஆவதாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு களம் கண்டனர். இதில் சிறப்பாக  களம் கண்ட காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் 10 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். அவருக்கு முதல் பரிசாக மகேந்திரா தார் கார் மற்றும் அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரருக்கான 2ஆம் பரிசாக சின்னப்பட்டி தமிழரசன், விளாங்குடி பரத்குமார் ஆகிய இருவரும் 6 காளைகளை அடக்கிய நிலையில் தலா 75 ஆயிரம் காசோலைகளும், பைக் இருவருக்கும் பகிர்ந்தும் அளிக்கப்பட்டது. 3ஆம் பரிசு மணிகண்டன் என்ற மாடுபிடி வீரருக்கு 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதேபோன்று போட்டியில் சிறந்தகாளைகளாக முதலாவது இடம் : புதுக்கோட்டை மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரது காளைக்கு ஒரு தார் ஜீப்  மற்றும் 1 லட்சம் காசோலையும்,  2ஆம் இடம் : திருச்சி அணைக்கரை வினோத் காளை என்பவருக்கு பைக் மற்றும் 75ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

     
    3ஆம் இடம். மதுரை அண்ணாநகர் பிரேம் ஜெட்லி என்பவது காளைக்கு 50ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் போட்டியின்போது சிறப்பாக களம்காணும் மாடுபிடிவீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மோதிரம், தங்க நாணயங்கள் முதல் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட்டது. காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    Source link

  • Republic Day 2024 Ahead Of The Republic Day Celebrations 5 Layers Of Security Have Been Put In Chennai | Republic Day 2024: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்க தடை

    Republic Day 2024 Ahead Of The Republic Day Celebrations 5 Layers Of Security Have Been Put In Chennai | Republic Day 2024: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்க தடை

    குடியரசு தினம்:
    இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெறும். இந்த விழாவில் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும்.
    மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.  குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
    சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
    இந்த நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்தை  முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதுமே 7500 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை பெருநகர் முழுவதும் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், , துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    ட்ரோன்களுக்கு தடை:
    மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மாதவரம் பேருந்து நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காவல் அதிகாரிகளின் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு, மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் நாச வேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை  மீறும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க
    குடியரசு தின கொண்டாட்டம்! சிறப்பு விருந்தினராக இன்று இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர்!

    Source link

  • On Camera Telangana Cops Drag Protesting Student By Hair Shocking Video | Shocking Video: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி! தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்த சென்ற பெண் காவலர்கள்

    On Camera Telangana Cops Drag Protesting Student By Hair Shocking Video | Shocking Video: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி! தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்த சென்ற பெண் காவலர்கள்

    Shocking Video: தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின்  தலைமுடியை பிடித்து காவலர்கள் இரண்டு பேர் இழுத்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    மாணவிக்கு நேர்ந்த கொடூரம்:
    தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர்.  
    இருப்பினும், சில மாணவர்கள் தடுப்பை மீறி வெளியே சென்றதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் சாலையை நோக்கி சென்றிருப்பதாக தெரிகிறது. அந்த நேரத்தில், இரண்டு பெண் காவலர்கள், அந்த மாணவியை பின் தொடர்ந்தனர்.
    பின்னர், மாணவி ஓடி செல்ல, இவருக்கு பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண் காவலர்கள் மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.  இந்த சம்பவத்தின் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    வீடியோ வைரல்:
    அந்த வீடியோவில், மாணவி ஒருவர் ஓடி சென்றிருக்கிறார். அப்போது, இவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண் காவலர்கள்  மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றிப்பது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.  இந்த வீடியோவிற்கு அரசியில் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    Student was Chased and dragged by hair, by two cops for reportedly protesting against allocating land of Professor Jayashankar Telangana State Agricultural University to the new Telangana High Court. Students want the GO55 to be withdrawn by Govt.Cyberabad police said, “A Video… pic.twitter.com/9sNciJe9VH
    — Naveena (@TheNaveena) January 24, 2024

    இச்சம்பவம் குறித்து பேசிய ராஜேந்திர நகர் காவல் ஆய்வாளர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை தடுப்புக் காவலில் வைத்திருந்தோம். சில போராட்டக்காரர்கள் சாலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்றிருக்கிறார்.  
    காவலர்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து நடந்ததை கூறினர். தனிப்பட்ட காரணம் எதுவும் என்று பெண் காவலர்கள்  ஏற்றுக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவி எந்த புகாரும் அளிக்கவில்லை” என்றார்.  இதுகுறித்து பாரத ராஷ்டிர சமித்தின் தலைவரான கவிதா கண்டம் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், “தெலங்கானாவில் இரண்டு பெண் காவலர்கள்,  மாணவியை தரதரவென இழுத்து சென்ற சம்பவம் கவலையை ஏற்படுத்தியதோடு, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த  சம்பவத்திற்கு தெலுங்கானா காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார். 

    Source link

  • Shaitaan Movie Teaser Is Out Jyotika R Madhavan Ajay Devgan Cinema Update

    Shaitaan Movie Teaser Is Out Jyotika R Madhavan Ajay Devgan Cinema Update

    நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவ்கன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘ஷைத்தான்’ (Shaitaan Teaser) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஷைத்தான். இந்தப் படத்தின் மூலம் நடிகை ஜோதிகா பல ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார்.
    முன்னதாக வெளியான இப்படத்தின் போஸ்டர் பில்லி, சூனிய உருவ பொம்மைகளுடன் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரிட்த்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
    ஷைத்தான் எனும் பெயருக்கேற்றபடி, ஷைத்தான் இந்த டீசரில் உரை நிகழ்த்துவது போல அமைந்துள்ள நிலையில், ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி, நரகத்தை ஆள்பவன், நானே விஷம், நானே மருந்து என அமானுஷ்ய வசனங்களுடன் தொடங்கி, பரபரப்பை ஏற்படுத்துகிறது.
    மேலும் “ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என பில்லி சூனிய பொம்மை, மாதவன் சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஜோதிகாவும், அஜய் தேவ்கனும் அரண்டு நிற்கும் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.
    திகில் காட்சிகள் மற்றும் மாதவனின் அச்சுறுத்தும் குரலுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
     

    வரும் மார்ச் 8ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    Source link

  • Thaipusam 2024: | Thaipusam 2024:

    Thaipusam 2024: | Thaipusam 2024:

    Thaipusam 2024:  தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனத்தை பார்ப்பதற்காக காலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா:
    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.   
    வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான சபையில் தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கிவருகிறது.   25.17.1872 அன்று தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்ம் வழிபாடு விழா நடைபெற்றது. 20.10.1973 அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு வள்ளலார் அருளுரை வழங்கியதாக நம்பப்படுகிறது. 
    வள்ளலார் அன்று முதல் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.  வள்ளலார்  ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  வள்ளலார் ஏற்றிய அந்த அகல் தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. 
    குவியும் பக்தர்கள்:
    தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.
    தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். காலை 6 மணி 10 மணி நண்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை ஐந்து முப்பது மணி என ஆறு காலங்களில் ஜோதி தரிசனத்தை காணும் பக்தர்கள்  அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை என கோஷத்துடன்  தரிசனம் செய்வார்கள். 

    #WATCH | Cuddalore, Tamil Nadu: Thousands of devotees thronged Sathya Gnana Sabai on the occasion of ‘Thai Pusam’. The 153rd Thai Pusa Jothi Dharshin was held in Vadalur Vallalar town. pic.twitter.com/BhuK9U8HJz
    — ANI (@ANI) January 25, 2024

    இந்த நிலையில், இன்றைய தினம் தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி சத்திய ஞான சபையில் காலை 6 மணிக்கு  ஏழு திரைகள் நீக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது. இன்றை தினம் காலை 10 மணி  முதல் பகல் 1.00 மணி, இரவு 7 மணி முதல் 10 மணி வரை, நாளை காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
    கருப்புத்திரை, நீலத்திரை,பச்சைத்திரை, சிவப்புத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.  இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.  அப்போது, கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

    Source link

  • Srilanka State Minister Sanath Nisantha Passes Away In Road Accident

    Srilanka State Minister Sanath Nisantha Passes Away In Road Accident

    இலங்கை நாட்டில் நடைபெற்ற கார் விபத்தில் அந்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    கட்டுநாயக்க நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி நிஷாந்த சென்று கொண்டிருந்தபோது  இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதோடு மட்டுமல்லாமல் சாலையின் மீதிருந்த தடுப்புச் சுவரிலும் மோதியது. இதில் அமைச்சருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
    சனத் நிஷாந்த அரசியல் வாழ்க்கை 
    கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து சனத் நிஷாந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒரு பகுதியாக அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். அவர் இலங்கை அரசின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். 

    State minister of #Srilanka Sanath Nishantha died following an accident in highway colombo.Minister was heavy injured and rushed to hospital ,but was unsuccessful to save his life. https://t.co/2EZ3Bw3jJd pic.twitter.com/KRSchY54AF
    — Vajira Sumedha🐦 🇱🇰 (@vajirasumeda) January 25, 2024

    விபத்தில் இறந்த சனத் நிஷாந்த பல தடவை தாக்குதல்கள் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு அவரும், அவரது சகோதரர் ஜகத் சமந்தவும் இணைந்து ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கினர். பணியில் இடையூறு செய்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து  2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது சனத் நிஷாந்த் மற்றும் அவரது ஆதரவாளர்களும், அதிபர்  வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்தைத் தாக்கி அவரது ஆதரவாளர்களைத் தாக்கினர். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் மீது கடந்தாண்டு பிடிவாரண்டு பிறக்கப்பட்டது. 
    கடந்த 2020 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் உள்ள சதுப்புநிலங்களை அழித்து கைப்பந்து மைதானம் அமைக்க உள்ளூர் மக்களை நிர்ப்பந்தம் செய்வதாக சனத் நிஷாந்த் மீது சர்ச்சை எழுந்தது. இப்படியான நிலையில் அவர் கார் விபத்தில் மரணமடைந்தது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    Source link

  • Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா?  வலுக்கும் கண்டனங்கள்..

    Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா? வலுக்கும் கண்டனங்கள்..


    <p><strong>திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டியதில் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</strong></p>
    <p>திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று காலை முதல் சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், தன்னை யாரோ சிலர் பின் தொடர்வதாகவும், தனது தந்தையிடம் முகவரி உள்ளிட்டவை அந்த நபர்கள் கேட்டறிந்ததாகவும் காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்திருந்தார்.&nbsp;</p>
    <p>பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்த நேசபிரபுவை மர்ம கும்பல் திடீரென வந்து சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதில் செய்தியாளர் நேசபிரபு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>
    <p>மேலும் செய்தியாளர் நேசபிரபுவை மர்ம கும்பல் வெட்டிய சம்பவத்தை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், &ldquo;<em>திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 &nbsp;தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு. இவரை நேற்று இரவு , செய்தியாளர் அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு &nbsp;தப்பியுள்ளனர், ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் &nbsp;மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.</em></p>
    <p><em>&nbsp;செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்துகிறோம்</em>&rdquo; என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>

    Source link

  • India Republic Day Celebration Chief Guest France President Emmanuel Macron Visit Today

    India Republic Day Celebration Chief Guest France President Emmanuel Macron Visit Today

    இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர்:
    ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
    இதையடுத்து, நாளை நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்படும் அவர் நேரடியாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூருக்கு செல்கிறார். ஜெய்ப்பூரில் பிரதமர் மோடி இருப்பதால் அவர் அங்கு செல்கிறார்.
    ஜெய்ப்பூரில் சாலை பேரணி:
    பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரதமர் மோடி – அதிபர் மேக்ரான் சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மேலும், பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் என்று கருதப்படுகிறது. இன்று ஜெய்ப்பூரில் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இணைந்து பங்கேற்கும் சாலை பேரணியும் நடைபெற உள்ளது. இதன்காரணமாக, ஒட்டுமொத்த ஜெய்ப்பூர் நகரமும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர் சிறந்த சுற்றுலா தளம் என்பதால் அங்கு வருகை தரும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அங்குள்ள புகழ் பெற்ற ஆம்பர்கோட்டை, ஜந்தர்மந்தர், ஹாவா மகால் உள்ளிட்ட பல சுற்றுலா தளங்களையும் சுற்றிப்பார்க்க உள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் மேக்ரான் ஜெய்ப்பூரில் இன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு இரவு 8.50 மணிக்கு தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
    குடியரசு தின கொண்டாட்டம்:
    அங்கு இன்று இரவு ஓய்வு எடுக்கும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை காலை டெல்லியில் நடக்கும் பிரம்மாண்ட குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, முப்படை வீரர்களின் சாகசங்களும் நடைபெற உள்ளது. இன்று முதலே ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
    மேலும் படிக்க: தடைகளை தகர்க்கும் டிரம்ப்.. சிம்ம சொப்பனமாக திகழும் பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்
    மேலும் படிக்க: கைது செய்யப்படுகிறாரா ராகுல் காந்தி? அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி

    Source link

  • Rohit Shetty: ரத்த காயத்துடன் என் அப்பா வீட்டுக்கு வருவார், அம்மா  ஸ்டண்ட் மாஸ்டர்! பிரபல இயக்குநர் பகிர்ந்த உண்மை!

    Rohit Shetty: ரத்த காயத்துடன் என் அப்பா வீட்டுக்கு வருவார், அம்மா ஸ்டண்ட் மாஸ்டர்! பிரபல இயக்குநர் பகிர்ந்த உண்மை!


    <h2><strong>ரோஹித் ஷெட்டி</strong></h2>
    <p>பாலிவுட் இயக்குநர்களில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கோலமான், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ரோஹித் ஷெட்டி தனது இளமைக் காலத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுவதில் இருந்து தொடங்கினார். ரோஹித் ஷெட்டியின் தந்தை எம்.பி ஷெட்டி மற்றும் தாயார் ரத்னா ஷெட்டி ஆகிய இருவரும் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடும் கலைஞர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரோஹித் ஷெட்டி தனது பெற்றோர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.</p>
    <h2><strong>ரத்தக் காயங்களுட திரும்பி வருவார்!</strong></h2>
    <p>ஒரு ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்த தனது தந்தையை சிறிய வயதில் தனது உடன் படிக்கும் குழந்தைகள் எல்லாரும் பார்த்து பயப்படுவார்கள் என்று ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார். தனது தந்தையின் உயரம் மற்றும் அவரது கூர்மையான கண்கள் எல்லாம் தான் இதற்கு காரணம் என்றும், ஆனால் உண்மையில் தனது தந்தை மிகப் பணிவாகவும் மிக அன்பாகவும் பழகக்கூடியவர் என்று அவர் தெரிவித்தார்.</p>
    <p>பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு தனது தந்தை டூம் போட்டுள்ளதாகவும் அவரது திறமையைப்&nbsp; பார்த்த நாஸிர் ஹுஸைன் தனது படத்தில் அவருக்கு ஸ்டண்ட் டைரக்டராக வாய்ப்பு கொடுத்ததையும் அவர் விவரித்தார். <span class="Y2IQFc" lang="ta">தீவார், யாதோன் கி பராத், கிரேட் காம்ப்லர், டான்,&nbsp; மற்றும் திரிசூல் போன்ற படங்களுக்கு தனது தந்தை சண்டைக் காட்சிகள் இயக்கியுள்ளார் என்று ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">சினிமாவில் தனது தந்தை தான் முதல் முறையாக கண்ணாடியை உடைக்கும் ஸ்டண்ட் காட்சியை பயன்படுத்தியதாகவும் இதனால் பல&nbsp; நாட்களில் அவர் வீட்டிற்கு ரத்த காயங்களுடனும் தையல்களுடனும் திரும்பியதை தான் பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.&nbsp;</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">தனது தந்தையைப் போல் தனது தாயும் பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு ஸ்டண்ட் காட்டிகளில் டூப் கொடுத்துள்ளார் என்று அவர் தெரித்தார். அன்றைய புகழ்பெற்ற நடிகைகளாக இருந்த ஹேமா மாலினி மற்றும் வைஜயந்தி மாலா உள்ளிட்டவர்களின் புகழ்பெற்ற சண்டைக் காட்சிகளில் தனது அம்மா நடித்துள்ளதாக அவர் கூறினார்.</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">தனது பெற்றோரைப் போலவே தானும் தனது சினிமா பயணத்தை ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக தொடங்கினார் ரோஹித் ஷெட்டி . தனித்துவமான அவரது சண்டைக் காட்சிகள் பரவலான கவனம் பெற்றிருக்கின்றன, இதனால் பலமுறை தனது எலும்புகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறார் அவர். இது தன்னுடைய குடும்ப வழக்கமாகிவிட்டது என்று அவர் நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.</span></p>
    <h2><strong><span class="Y2IQFc" lang="ta">சிங்கம் அகெயின்</span></strong></h2>
    <p><span class="Y2IQFc" lang="ta">தற்போது ரோஹித் ஷெட்டி அக்&zwnj;ஷய் குமார், ரன்பீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய மூவரை வைத்து சிங்கம் அகெயின் படத்தை இயக்கி வருகிறார், இந்த மூன்று நடிகர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது. </span></p>

    Source link

  • Latest Gold Silver Rate Today 25 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    Latest Gold Silver Rate Today 25 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,830  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.77.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,830 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,830 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,830 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,830 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,300 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,315 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,790 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,300 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,300 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,300 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,300 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,315 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,790 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,300 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.

    Source link

  • Vegetable Price: காய்கறி வரத்தில் மாற்றம்.. விலையிலும் சற்று ஏற்ற இறக்கம்.. இன்றைய பட்டியல் இதோ..

    Vegetable Price: காய்கறி வரத்தில் மாற்றம்.. விலையிலும் சற்று ஏற்ற இறக்கம்.. இன்றைய பட்டியல் இதோ..


    <p>Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.</p>
    <p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.</p>
    <div id="v-abplive-v4-0">
    <div id="_vdo_ads_player_ai_10244" class="vdo_video_unit vdo_floating">
    <div id="vdo_logo_parent">
    <div id="cross_div"><strong>இன்றைய நாளில் (ஜனவரி 25) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)&nbsp;</strong></div>
    </div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    <div class="vjs-control-bar" dir="ltr">&nbsp;</div>
    </div>
    </div>
    <div class="uk-overflow-auto">
    <table class="uk-table" style="width: 593px; height: 1044px;" border="1" width="608">
    <tbody>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">&nbsp;<strong>&nbsp;காய்கறிகள் (கிலோவில்)&nbsp;</strong></td>
    <td style="width: 93.4375px; height: 44px;">&nbsp;&nbsp;<strong>முதல் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 134.625px; height: 44px;">&nbsp; &nbsp;<strong>இரண்டாம் ரகம்&nbsp;</strong></td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;<strong>மூன்றாம் ரகம்&nbsp;</strong></td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெங்காயம்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">22 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; 14 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தக்காளி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">26 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 10 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நவீன் தக்காளி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உருளை &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">22 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; 18 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி கேரட்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">65 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp;50 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 10px;">சின்ன வெங்காயம்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 10px;">60 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 10px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 10px;">&nbsp; &nbsp; &nbsp;40 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பெங்களூர் கேரட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீன்ஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">ஊட்டி பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">65 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp; &nbsp;&nbsp;&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கர்நாடகா பீட்ரூட்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">32 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சவ் சவ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">13 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;10 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முள்ளங்கி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40&nbsp; ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முட்டை கோஸ்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;13 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெண்டைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">உஜாலா கத்திரிக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வரி கத்திரி &nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;13 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காராமணி</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">45 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பாகற்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">35&nbsp; ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">புடலங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">23 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சுரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">18 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேனைக்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">52 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">முருங்கைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">140 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">110 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">சேமங்கிழங்கு</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">35 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">காலிபிளவர்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சை மிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">55 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அவரைக்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">45 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பச்சைகுடைமிளகாய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 44px;">
    <td style="width: 194.875px; height: 44px;">வண்ண குடை மிளகாய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 44px;">80 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 44px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">மாங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">140 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">120 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp;</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளரிக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பட்டாணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">45 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">இஞ்சி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">100 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;90 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">80 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பூண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">320 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">300 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">170 ரூபாய்</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">&nbsp;மஞ்சள் பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வெள்ளை பூசணி&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">15 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">-</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">பீர்க்கங்காய்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">45 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">&nbsp;40 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">எலுமிச்சை&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">70 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">60 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">நூக்கல்</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">30 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கோவைக்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; text-align: center; height: 22px;">25 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; text-align: center; height: 22px;">20 ரூபாய்&nbsp;</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">கொத்தவரங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">50 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">45 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; text-align: center; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைக்காய்</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">8 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">7 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைத்தண்டு&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">40 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 30 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">வாழைப்பூ</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">20 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 15 ரூபாய்</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">அனைத்து கீரை</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">14 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-</td>
    <td style="width: 115.562px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; -</td>
    </tr>
    <tr style="height: 22px;">
    <td style="width: 194.875px; height: 22px;">தேங்காய்&nbsp;</td>
    <td style="width: 93.4375px; height: 22px; text-align: center;">35 ரூபாய்</td>
    <td style="width: 134.625px; height: 22px; text-align: center;">&nbsp; &nbsp; &nbsp; 32 ரூபாய்</td>
    <td style="text-align: center; height: 22px; width: 115.562px;">&nbsp;</td>
    </tr>
    </tbody>
    </table>
    <p>&nbsp;</p>
    </div>

    Source link

  • Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 950 கன அடியில் இருந்து 649 கன அடியாக குறைவு..

    Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 950 கன அடியில் இருந்து 649 கன அடியாக குறைவு..


    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 961 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 950 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 649 கன அடியாக குறைந்துள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/b6e325dd35e7de7881b93358d87d2fb81706155681874113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நீர்மட்டம்:</p>
    <p>அணையின் நீர் மட்டம் 70.80 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.39 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/e169b7a196b86d9f2aade9339c0db4b21706155705133113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>கர்நாடக அணைகள்:</p>
    <p>கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 93.44 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 18.09 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 401 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3,815 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.26 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.34 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 242 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 25 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 25 2024 Know Full Details


    ராம பக்தர்களை குண்டர்கள் என கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்கவேண்டும் – வானதி

    கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”வேல் வழிபாடு என்பது நம்முடைய கலாச்சாரத்தில் பல்ல நூறு ஆண்டுகளாக கலந்து உள்ளது.  வேலினை வழிபடுவதால் துன்பங்களில் இருந்து விடுபடுவதுடன் வாழ்க்கையில் வளங்களுக்காகவும், அமைதிக்காகவும் இந்த வேல் வழிபாடு ஆன்மீக பெரியோர்களால் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் படிக்க.,

    அதிர்ச்சி! குத்துசண்டை ஜாம்பவான் மேரி கோம் ஓய்வு – சோகத்தில் ரசிகர்கள்

    இந்தியாவில் ஒவ்வொரு விளையாட்டை பற்றி குறிப்பிடும்போதும் சில வீரர்கள் அதற்கு அடையாளமாக திகழ்வார்கள். இந்தியாவில் குத்துச்சண்டை என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது மேரி கோம் ஆவார். ஆண்களை காட்டிலும் குத்துச்சண்டை போட்டியில் மிகச்சிறப்பான செயல்பாடுகள் மூலம் உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்று புகழ்பெற்றவர். இவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார்.  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேரி கோம் இந்த அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க.,

    இன்று தேசிய சுற்றுலா தினம்; முக்கியத்துவமும் சில டிப்ஸ்களும்!

    இந்தியாவின் பன்முகத்தன்மை, காலாச்சார, பாரம்பரியம்,  சுற்றுலா நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும்வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள பாரம்பரியமிக்க இடங்கள் உலக அளவில் பிரபலமானவை. சுற்றுலா துறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 1948-ம் ஆண்டு முதல் ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலா துறையின் பங்களிப்பு, அது சார்ந்து இயக்கும் மனிதர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நாளாகவும் இந்த நாள் இருக்கிறது. மேலும் படிக்க.,

    நெருங்கும் மக்களவைத் தேர்தல்! அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்காட்டும் திமுக

    நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இதுவரை அறிவிக்காவிட்டாலும், கடந்த ஓராண்டாகவே அரசியல் கட்சிகள் அந்த பணியைத் தொடங்கிவிட்டன.  மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வௌியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தமிழ்நாட்டில் தி.மு.க. தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தேர்தல் பணிகளை கண்காணிக்க, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த என 3 குழுக்களை தி.மு.க. அமைத்தது. மேலும் படிக்க.,

    இன்று தைப்பூசம்! களைகட்டும் முருகன் கோயில்கள்! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

    தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூச நன்னாளில் மற்ற நாட்களை காட்டிலும் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அலைமோதும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் படிக்க.,

    Source link

  • காஞ்சியில் கைது செய்யப்பட்ட குட்டி ரவுடிகள்.. "என் கணவரை என்கவுண்டர்ல போடுவாங்க” பதறும் மனைவி..

    காஞ்சியில் கைது செய்யப்பட்ட குட்டி ரவுடிகள்.. "என் கணவரை என்கவுண்டர்ல போடுவாங்க” பதறும் மனைவி..


    <div dir="auto" style="text-align: justify;"><span style="color: #007319;"><strong>என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2&nbsp; ரவுடிகள் கைது : ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் போலீசாரே காரணம் என வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு</strong></span></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>&nbsp;சென்னை புறநகரில் ரவுடி சாம்ராஜ்யம்..</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">சென்னை புறநகர் பகுதிகளில் அதிக வளர்ச்சியை நோக்கி பயணிப்பதால், பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. &nbsp;இவற்றை மையமாக வைத்து பணம் பறிக்கும் நோக்குடன் பல ரவுடி கும்பல்கள் உருவாகி உள்ளன. ரவுடி கும்பல்களை அடக்குகிறோம் என போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளும், &nbsp;போதுமானதாக இல்லை. &nbsp;இதனால் &nbsp; அனைத்து பகுதிகளிலும் &nbsp;குட்டி ரவுடிகளில் தொடங்கி ஏ ப்ளஸ் ரவுடிகள் வரை வளர்ந்து வருகின்றனர். ரவுடிகள் வளர்வதற்கு காவல்துறை தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாக இறந்து வருகின்றன. அவ்வப்பொழுது தனி படை மற்றும் சிறப்பு படை அமைப்பதும், &nbsp;ஒரு கட்டத்திற்கு மேல் &nbsp;அந்த சிறப்பு படை செயல்படாமல் போவதும் தொடர்கதை ஆகியுள்ளது.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong> விஷ்வாவின் கூட்டாளி</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்துரு (24) பாலச்சந்தர் (22). இருவரும் சகோதரர்கள். இருவர் மீதும் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற குற்ற வழக்குகள் இவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ளன. மேலும் இரண்டு பேரும் <strong>பிரபல ஏ ப்ளஸ் கேட்டகிரி</strong> ரவுடியாக இருந்து வந்த&nbsp; விஷ்வாவின் கூட்டாளிகளாக இருந்து கொண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.&nbsp;</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/fa2dfcbe8aa6a2f33bbfe93077b44f881706148749354113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>இரும்பு கழிவுகளை ஒப்பந்தம் </strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இந்தநிலையில் இங்கு உள்ள தனியார் ஆலைகளில் இருந்து ஸ்கிராப் எனப்படும் இரும்பு கழிவுகளை ஒப்பந்தம் எடுப்பதில் முக்கிய புள்ளிகள் இடையே தொழில் போட்டி நிலவுகிறது. தொழிலதிபர்கள் , அரசியல் கட்சி பிரமுகர்களை கொலை செய்வதில் கூலிப்படைகளாக இருந்து வந்தனர். ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் நடகும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தனிப்படை போலீசார் தீவிரமாக ரவுடிகளை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/818712b753c1e655fc0a6100e534db5a1706148776013113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>ரவுடி விஷ்வா மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு&nbsp;</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">அப்போது கடந்த ஆண்டு 9-ஆம் மாதம் பிரபல ரவுடி விஷ்வா சுங்குவார்சத்திரம் அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய ரவுடி விஷ்வா மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் இறந்து போனார். என்கவுண்டர் அச்சத்தால் விஷ்வாவின் கூட்டாளிகளான சந்துரு, பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் தலைமறைவாகினர்.&nbsp;</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/749e5b894edf4aa4dd64ee1458409f7c1706148796519113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>தனிப்படை போலீசார்&nbsp;</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இதற்கிடையே தொழில் போட்டியால் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் ரமேஷ் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக அரக்கோணம் அருகே தலைமறைவாக இருந்த சந்துரு பாலச்சந்தர் ஆகிய இரண்டு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/f6ad4b6afbe6d2e10f5e34242776a1011706148851036113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>வீடியோ&nbsp;</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இதற்கிடையே சந்துருவின் மனைவி தனது கணவனுக்கும், மைத்துனருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி, மற்றும் மாவட்ட எஸ்.பி தான் பொறுப்பு என வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.</div>

    Source link

  • Mysskin: “அப்பான்னு கூப்பிடாத, நீ எனக்கா பிறந்த?” இளையராஜாவின் வார்த்தையால் கதறி அழுத மிஷ்கின்!

    Mysskin: “அப்பான்னு கூப்பிடாத, நீ எனக்கா பிறந்த?” இளையராஜாவின் வார்த்தையால் கதறி அழுத மிஷ்கின்!


    <h2><strong>மிஷ்கின்</strong></h2>
    <p>சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த திரைமொழியை உருவாக்கி இருக்கிறார் மிஷ்கின். தற்போது ரிலீஸூக்கு தயாராக இருக்கும் டெவில் படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.&nbsp;</p>
    <h2><strong>டெவில்</strong></h2>
    <p>மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் &nbsp;எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் &ldquo;டெவில்&rdquo;. &nbsp;சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ, ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.</p>
    <p>டெவில் படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்திற்கு இசையமைத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.</p>
    <h2><strong>டைரக்&zwnj;ஷன் மட்டும் எனக்கு பத்தல</strong></h2>
    <p>டெவில் படத்திற்கு தன்னை இசையமைக்கும்படி இயக்குநர் ஆதித்யா தன்னிடம் கேட்டபோது தான் ஆச்சரியப்படும் விதமாக உடனே சம்மதித்ததாக மிஷ்கின் கூறினார். சினிமாவில் டைரக்&zwnj;ஷன் ஒன்று மட்டும் தனக்கு போதவில்லை என்றும், தொடர்ந்து ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று ஒரு தாகம் தனக்குள் இருந்துகொண்டே இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இந்த தாகத்தை தீர்த்துகொள்ள முடியும் என்று தனக்கு தோன்றியதால் தான் உடனே சம்மதம் தெரிவித்ததாக மிஷ்கின் கூறினார்.&nbsp;</p>
    <h2><strong>இளையராஜாவை யாராலும் வெறுக்க முடியாது</strong></h2>
    <p>மேலும், இந்த நேர்காணலில் தனது வாழ்க்கையில் உடைந்து அழுத தருணம் ஒன்றைப் பற்றி மிஷ்கின் பகிர்ந்துகொண்டுள்ளார். &ldquo;என் வாழ்க்கையில் நிறைய தருணங்களில் நான் அழுதிருக்கிறேன், ஆனால் உடைந்து அழுத தருணம் என்றால் இளையராஜாவின் அலுவலகத்தின் முன் நின்ற அழுத நிகழ்வை குறிப்பிடுவேன். ஒரு முறை எனக்கும் இளையராஜாவுக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வந்தது.&nbsp; நான் எப்போதும் அவரை அப்பா என்று தான் கூப்பிடுவேன்.</p>
    <p>நாங்கள் சண்டைபோடும்போதும்நான் அவரை அப்பா என்று அழைத்து தான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது வெளியே நின்றபோது இளையராஜா ஏதோ சொல்ல என்னை அழைத்தார். நான் சொல்லுங்க அப்பா என்று கேட்டேன். உடனே அவர் &ldquo;என்னை அப்பா என்று கூப்பிடாத, நீ என்ன எனக்கா பிறந்த?&rdquo; என்று என்னை கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.</p>
    <p>தான் எனது தாயின் இடத்தில் வைத்த ஒருவர் என்னை அப்படி கேட்டது என்னை உடைத்துவிட்டது. அந்த இடத்தில் ஒரு மணி நேரம் நின்றபடி அழுதுகொண்டிருந்தேன். அவர் ரொம்ப சாதாரணமாக அதை சொன்னார். என்னால் அவரை வெறுக்க முடியவில்லை. இளையராஜாவை யாராலும் வெறுக்கவே முடியாது&ldquo; என்று மிஷ்கின் கூறியுள்ளார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Rohit Sharma Has Explained Why Youngster Rajat Patidar Was Replaced By Virat Kohli In The Test Match Against England.

    Rohit Sharma Has Explained Why Youngster Rajat Patidar Was Replaced By Virat Kohli In The Test Match Against England.

    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி:
    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    இச்சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விளையாடமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனை நேற்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் உறுதிபடுத்தினார். மேலும், விராட் கோலிக்கு பதிலாக மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக முதல் 2 போட்டிகளில் மத்திரயபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 151 ரன்களை குவித்த இவர், சமீபகாலமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் தான் இவரை பிசிசிஐ தேர்ந்தெடுத்திருக்கிறது.
    இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்தது ஏன்?
    அதேநேரம், மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்காமல் இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்தது ஏன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் மூத்த வீரர் ஒருவரை மீண்டும் தேர்வு செய்யலாம் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால், நம்மிடம் இருக்கும் இளம் வீரர்களுக்கு எப்போது வாய்ப்பு வழங்குவது?  அனுபவம் வாய்ந்த ஒரு வீரரை வெளியேற்றுவதோ அல்லது அவர்களது அனுபவத்தை கருத்தில் கொள்ளமல் புறக்கணிப்பது என்பதோ மிகவும் கடினம்.
    ஆனால், சில நேரங்களில் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை வழங்குவது முக்கியமான ஒன்று. இளம் வீரர்களை நேரடியாக வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பை அவர்களுக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்று ரோகித் சர்மா கூறினார்.
    மேலும் படிக்க: Rohit Sharma: “வெறும் 156 ரன்கள்தான்” கங்குலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் சர்மா! விவரம் உள்ளே!
    மேலும் படிக்க: Virat Kohli: ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட் அணியில் ரோகித், விராட் கோலிக்கு இடம் இல்லை – ரசிகர்கள் ஷாக்

    Source link

  • Kilambakkam Bus Stand Public And Commuters Protested By Holding The Bus Captive As Not Enough Buses Were Plying To Tiruvannamalai

    Kilambakkam Bus Stand Public And Commuters Protested By Holding The Bus Captive As Not Enough Buses Were Plying To Tiruvannamalai

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்தை சிறைபிடித்து பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
     
    Kilambakkam bus terminus, Chennai (கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்)
     
    தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.
     
    தென் மாவட்டத்திற்கு பேருந்துகளை இயக்குவதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து,  பயணிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இழந்து வண்ணம் உள்ளன. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்து ஒரு மாதத்தை நெருங்கி வரும் நிலையில், பயணிகள் தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.
     

    அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்றதால் காலியாக உள்ள சேர்கள்

     
    திருவண்ணாமலை நோக்கி மக்கள்
     
    இந்தநிலையில் நேற்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில், கிரிவலம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை செல்வது வழக்கம். நாளை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை, விட அதிக அளவு பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.

     
    கூட்ட நெரிசல்
     
    கிளாம்பாக்கத்திற்கு மாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்தில் கூட்ட நெரிச்சலுடன் காணப்பட்டது. ஆனால் சரியான பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகள் முழுவதும் கூட்டத்துடன் காணப்பட்டது. நின்று கொண்டும் படியில் தொங்கிக்கொண்டும் பலர் பயணம் செய்தனர். அப்பொழுதும், பேருந்துகள் முறையாக இல்லாததால் அதை பலர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரியும் என்ன செய்வது தெரியாமல் பயணிகள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் , அங்கிருந்து தப்பித்து சென்றால் போதும் என அங்கிருந்து அதிகாரியும் ஓடியது பயணிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து பேருந்துகளை மறித்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தலா பரபரப்பு ஏற்பட்டது.

    இதன் அடுத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். ஏற்கனவே, பொங்கல் பண்டிகையின்பொழுது , பேருந்துகள் இயக்கப்படவில்லை என கிளாம்பாக்கத்தில் பயணிகள் பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. போராட்டத்திற்கு பிறகு சில பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     

    இது குறித்த பயணிகள் தெரிவித்ததாவது : திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொழுது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அதிக அளவு பயணிகள் வரும்பொழுது அதை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. கோயம்பேட்டில் இருந்து சில பேருந்துகளும் இங்கிருந்து சில பேருந்துகளும் இயக்கப்படுவதால் இந்த சிக்கல் நிலவுகிறது. இந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

    Source link

  • Gold Mine Collapse More Than 70 People Died In Mali | Mali Gold Mine Collapse: தங்கச்சுரங்கம் இடிந்த விபத்தில் 73 பேர் உயிரிப்பு

    Gold Mine Collapse More Than 70 People Died In Mali | Mali Gold Mine Collapse: தங்கச்சுரங்கம் இடிந்த விபத்தில் 73 பேர் உயிரிப்பு

    மாலியில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 74க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் மாலி, ஆப்பிரிக்காவின் தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் மாலியில் 72.2 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. அங்குள்ள தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்று  இதனிடையே மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது.
    இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இப்படியான நிலையில் இந்த சுரங்கம் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் உள்ளே இருந்த அனைவரும் மண்ணில் புதைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் வந்து சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பின் அந்நாட்டின் சுரங்கத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
    அதில், ‘சுரங்கம் இடித்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த சுரங்கத் துறையை அரசு ஒழுங்கமைக்க வேண்டும் என்ற கருத்தை தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி கரீம் பெர்தே முன்வைத்துள்ளார். இதேபோல் சுரங்கம் இடிந்து விழுந்த நேரத்தில் சுமார் 100 பேர் உள்ளே இருந்ததாக அந்த இடத்தில் இருந்த மாலி சேம்பர் ஆஃப் மைன்ஸ் தலைவர் அப்துலே போனா கூறியுள்ளார். 
    சமீபகாலமாக மாலியில் நிகழும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தப்படும் நிகழ்வு அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில் இந்த சுரங்க விபத்து மேலும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேவை அதிகரித்துள்ளதால் பழைய மற்றும் கைவிடப்பட்டப்பட்ட சுரங்கங்களில் பணிகள் நடைபெற்று வருவதால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

    மேலும் படிக்க: Russia Plane Crash: போர் கைதிகளை ஏற்றி சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து! 65 பேரின் கதி என்ன? உக்ரைனில் பரபரப்பு!

    Source link

  • கைது செய்யப்படுகிறாரா ராகுல் காந்தி? அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி

    கைது செய்யப்படுகிறாரா ராகுல் காந்தி? அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி


    <p>நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரையை தொடங்கியுள்ளார். &ldquo;பாரத ஒற்றுமை யாத்திரை&rdquo; &nbsp;என முதல்கட்ட யாத்திரைக்கு பெயரிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட பயணத்துக்கு &nbsp;&ldquo;இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை&rdquo; என பெயரிடப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>அஸ்ஸாமில் பரபரப்பு:</strong></h2>
    <p>கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தில் நாளுக்கு நாள் பிரச்சினை மேல் பிரச்சினை வெடித்து வருகிறது. தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் நகோன் நகரில் உள்ள துறவி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் கோயிலில் வழிபாடு நடத்த சென்றார்.&nbsp;</p>
    <p>ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அந்த கோயிலில் வழிபாடு நடத்த ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மதியம் 3 மணிக்கு மேல் வரும்படி காவல்துறை அறிவுறுத்தியது. இதனால், அவர்களுடன் வாக்குவாதம் செய்த ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;</p>
    <p>நேற்று அஸ்ஸாமில் கவுகாத்தி வழியாக செல்ல முயன்றபோது ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
    <h2><strong>கைது செய்யப்படுகிறாரா ராகுல் காந்தி?</strong></h2>
    <p>இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என அஸ்ஸாம் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யாத்திரையின் போது ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டது, தொண்டர்களை தூண்டியது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.</p>
    <p>அவருக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மக்களவை தேர்தலுக்கு பின், அவரை கைது செய்வோம். ஏனெனில், தேர்தலுக்கு முன் எடுக்கும் எந்த நடவடிக்கையும் தேவையற்ற விமர்சனத்தை ஏற்படுத்தும். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பிரச்னையை ஏற்படுத்துவதற்காகவும் படத்ரவா கோயிலில் நுழைய ராகுல் காந்தி முயற்சி செய்தார்.&nbsp;</p>
    <p>அவர் அஸ்ஸாமை மிகவும் நேசிப்பவராக இருந்தால், யாத்ரா வழியில் பூபென் ஹசாரிகாவின் சமாதிக்குச் சென்றிருக்கலாம். அவர் ஸ்ரீமந்த சங்கரதேவரை மதித்திருந்தால், வழியில் உள்ள பார்பெட்டா சத்ராவில் பிரார்த்தனை செய்திருக்கலாம். இந்து மதத்தில் நம்பிக்கை இருந்தால், வழியில் உள்ள காமாக்யா கோயிலில் தரிசனம் செய்திருக்கலாம்" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • காலையிலேயே சோகம்! அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு!

    காலையிலேயே சோகம்! அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு!

    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்துள்ளார். ஜனவரி 18ஆம் தேதி தீக்காயங்களுடன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பூர்ணிமா, இன்று உயிரிழந்திருக்கிறார்.

    Source link

  • Yogi Babu Responds To Reporters Asking About Ayodhya Ram Mandir

    Yogi Babu Responds To Reporters Asking About Ayodhya Ram Mandir

    ஸ்கூல்
    வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய வித்யாதரன் தயாரித்து இயக்கியுள்ள படம் ஸ்சூல். யோகிபாபு , பூமிகா மற்றும் கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குவாண்டம் ஃபிலிம் ஃபாக்டரி இந்தப் படத்தை வழங்குகிறது. பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை மையமாக வைத்து ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.
    இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில்  நடைபெற்றது.  நடிகர் யோகிபாபு, கே.எஸ் ரவிகுமார், மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யோகிபாபு (Yogi Babu) படம் குறித்து பேசினார்.
    சொல்றதுக்கு கூச்சமா இருக்கு
    இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து யோகி பாபு பேசினார். “எனக்கு சொல்றதுக்கு கொஞ்சம் கூச்சமாக தான் இருக்கிறது. இந்தப் படத்தில் நான் மாணவனாக நடிக்கவில்லை ஆசிரியராக நடித்திருக்கிறேன். பூமிகா மேடம்  மற்றும் கே.எஸ் ரவிகுமார் சார் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நிச்சயமாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த படத்திற்கு நீங்கள் உங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
    இஷ்டத்துக்கு கேள்வி கேட்காத..
    தான் நடிக்கும் படங்களின்  இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத காரணம் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யோகி பாபு “இந்தக் கேள்விய நீ கேப்பனு எனக்கு தெரியும். இரவு, பகலாக தான் ஷூட் போய் வருகிறேன். என்னை லீடாக வைத்து படம் எடுக்கும் இயக்குநர்களிடம் கேட்டால் உங்களுக்கு என்னுடைய நிலைமை தெரியும்” என்று பதிலளித்தார்.
    தொடர்ந்து பத்திரிகையாளர் தூக்குதுரை படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு வராமல் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றது தொடர்பாக கேள்வி கேட்டபோது, யோகி பாபு சற்று கடுமையாக பதிலளித்தார். “நீ சாப்பிடுற சாப்பாட்டுக்கு தகுந்த மாதிரி கேள்வி கேட்கணும். தூக்குதுரை படத்தில் நான் 6 நாட்கள் நடித்திருக்கிறேன்.
    அந்தப் படத்தில் நான் ஹீரோ கிடையாது. நான் ஏன வரவில்லை என்று படக்குழுவிற்கு எல்லாம் தெரியும். அந்தப் படத்தின் இயக்குநர் என்னை வைத்து ட்ரிப் என்று ஒரு படம் இயக்கியுள்ளார். இன்னும் ஒரு படம் அவர் இயக்கத்தில் நான் நடிக்க இருக்கிறேன். எதுவும் தெரியாமல் சும்மா கேள்வி கேட்கக் கூடாது’ என்று அவர் பதில் கொடுத்தார்.
    தொடர்ந்து அதே பத்திரிகையாளர் ராமர் கோயிலுக்கு அழைப்பு வந்தும் போகாததற்கான காரணம் தொடர்பாக தனது கேள்வியைத் தொடங்கியபோது யோகிபாபு கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்து விட்டு அந்த இடத்தைவிட்டு சென்றார். அவர் போகிற போக்கில் “ இவன் எங்க இருந்தோ கிளம்பி வந்திருக்கான்’ என்று புலம்பியபடியே சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

    Source link

  • 7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகள் – காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

    7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகள் – காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!


    <h2>தமிழ்நாடு:</h2>
    <ul>
    <li>மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</li>
    <li>மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஏறுதழுவுதல் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி – வெற்றி பெற்ற காளை, வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது</li>
    <li>நாடாளுமன்ற தேர்தல்; திமுக – காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை&nbsp;</li>
    <li>தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் மேம்பாலத்தில் கார், லாரிகள் விபத்தில் சிக்கியது – 4 பேர் உயிரிழப்பு&nbsp;</li>
    <li>தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்&nbsp;</li>
    <li>தைப்பூசம், குடியரசு தினம் என தொடர் விடுமுறை நாட்கள் எதிரொலி – சொந்த ஊருக்கு படையெடுத்த மக்களால் போக்குவரத்து நெரிசல்&nbsp;</li>
    <li>கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு தடை – ஆம்னி பேருந்து சங்கத்தினர் எதிர்ப்பு&nbsp;</li>
    <li>கிளாம்பாக்கமா? கோயம்பேடா? – தென்மாவட்டத்துக்கு ஆம்னி பேருந்து ஏற எங்கு செல்ல வேண்டும் என பரிதவித்த பயணிகள்&nbsp;</li>
    <li>மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்&nbsp;</li>
    <li>குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பு&nbsp;</li>
    <li>ராமர் கோயில் கட்டியதால் மக்கள் பாஜக பக்கம் போவார்கள் என்பது தவறான கருத்து – எடப்பாடி பழனிசாமி&nbsp;</li>
    <li>பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் – அதிமுக சார்பில் போராட்டம் அறிவிப்புன்&nbsp;</li>
    <li>கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா – தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி&nbsp;</li>
    </ul>
    <h2><strong>இந்தியா:&nbsp;</strong></h2>
    <ul>
    <li>பிப்ரவரி 16 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு&nbsp;</li>
    <li>அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – போலீசார் பலத்த பாதுகாப்பு&nbsp;</li>
    <li>பல நூற்றாண்டு கனவு நிறைவேறியுள்ளது – ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு&nbsp;</li>
    <li>குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்&nbsp;</li>
    <li>கொல்கத்தா செல்லும் வழியில் மமதா பானர்ஜி சென்ற கார் விபத்து – தலையில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு&nbsp;</li>
    <li>கார் விபத்தில் காயமடைந்த மமதா பானர்ஜி விரைந்து குணமடைய <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரார்த்தனை&nbsp;</li>
    <li>நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் – அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்மா சர்மா தகவல்&nbsp;</li>
    </ul>
    <h2><strong>உலகம்:</strong></h2>
    <ul>
    <li>மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 70 பேர் உயிரிழப்பு&nbsp;</li>
    <li>சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து – பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு&nbsp;</li>
    <li>உக்ரைன் போர் கைதிகளுடன் சென்ற விமானம் விபத்து – 70 பேர் உயிரிழப்பு&nbsp;</li>
    <li>கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் குறைக்கப்படும் என அந்நாட்டு அரசு தகவல்&nbsp;</li>
    <li>சீனாவில் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த 31 பேர் மீட்பு&nbsp;</li>
    <li>அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்; குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை&nbsp;</li>
    </ul>
    <h2><strong>விளையாட்டு:</strong></h2>
    <ul>
    <li>ப்ரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி</li>
    <li>இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடக்கம்&nbsp;</li>
    <li>ப்ரோ கபடி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி தபாங் வெற்றி&nbsp;</li>
    </ul>
    <p>&nbsp;</p>

    Source link

  • HBD Urvashi : நடிப்பு ராட்சஷி.. பெண் சார்லி.. ஊர்வசியின் பிறந்தநாள் இன்று..

    HBD Urvashi : நடிப்பு ராட்சஷி.. பெண் சார்லி.. ஊர்வசியின் பிறந்தநாள் இன்று..


    <p>திரையுலகை பொறுத்தவரையில் நடிகைகளின் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதில் அனைவரும் அமைந்துவிடாது. பல போராட்டங்கள் கடந்து தான் அவர்களால் முன்னுக்கு வர முடிகிறது. ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் பெரும்பாடுபட்டு தன்னுடைய திறமைகளால் முன்னுக்கு வந்து இன்று வரை நான் சினிமாவில் தான் இருப்பேன் என விடப்பிடியாக அதே சுறுசுறுப்புடனும், குறும்புத்தனத்துடனும் ஒரு ராட்சசிபோல ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய கைக்குள் அடக்கி வைத்திருக்கும் சகலகலாவல்லி நடிகை ஊர்வசியின் 55வது பிறந்தநாள் இன்று.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/d9580cf04d973680a48304c1b69244581706117344415224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>தன்னுடைய 10 வயதில் திரையுலகத்திற்குள் அடியெடுத்து வைத்த ஊர்வசி 13 வயதிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தது தான் ஆச்சரியம். ‘முந்தானை முடிச்சு’ பரிமளத்தை அவ்வளவு எளிதாக யாரது மறந்து விடமுடியுமா என்ன? 80ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மட்டுமின்றி 90ஸ், 2kகிட்ஸ் மத்தியிலும் மிகவும் ஜாலியான ஒரு நடிகையாக வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஊர்வசி.&nbsp;</p>
    <p>மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்திய ஊர்வசி இன்றும் ஆக்டிவான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ஊர்வசி காமெடியாக நடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, அவர் பேசும் வசனமும் அவரின் முக பாவனைகளுமே பார்ப்பவர்களுக்கு குபீர் என சிரிப்பை வரவைத்துவிடும். &nbsp;சீரியஸ் கேரக்டரில் நடித்தால் கூட அதில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும். அதுதான் ஊர்வசியின் தனிச்சிறப்பே. சமீபத்தில் ஊர்வசியின் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், யானை முகத்தான் உள்ளிட்ட படங்கள் அவரின் வெகுளித்தனத்தை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியது.&nbsp;</p>
    <p>டப்பிங் ஆர்டிஸ்டாக தன்னுடைய &nbsp;பயணத்தை துவங்கிய ஊர்வசி தமிழில் அறிமுகமாகும்போது அவருக்கு வயது 13. தன்னுடைய கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்து எடுக்கும் ஊர்வசி ஒருபோதும் தன்னுடைய சம்பளம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. ஒரு சின்ன கேரக்டரில் நடிப்பது என்றலும் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அதில் நடித்துள்ளார். அவர் மிகவும் பிஸியான இருந்த காலகட்டங்களில் எந்தெந்த படங்களுக்கு சம்பளம் வாங்கினார், எதற்கு வாங்கவில்லை என்பது பற்றி கணக்கு செய்தது கூட கிடையாதாம்.&nbsp;</p>
    <p>ஊர்வசியின் நடிப்புக்கு தீனியாய் அமைந்த திரைப்படங்களின் வரிசையில் நிச்சயமாக மகளிர் மட்டும், மைக்கேல் மதன காமராஜன், சூரரைப்போற்று, &nbsp;மாயா பஜார் படங்கள் இடம்பெற்று இருக்கும். பெண் சார்லி சாப்ளின் என்றும் நடிப்பு ராட்சஷி என்றும் செல்லமாக அழைக்கப்படும் ஊர்வசி மேலும் மேலும் தன்னுடைய வெகுளித்தனம் நடிப்பால் ரசிகர்களை கவர வாழ்த்துக்கள்.&nbsp;</p>

    Source link

  • Thaipusam 2024 Today January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

    Thaipusam 2024 Today January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

    தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூச நன்னாளில் மற்ற நாட்களை காட்டிலும் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அலைமோதும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது.
    தைப்பூசம்:
    தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தைப்பூசம் என்பதால், கடந்த ஒரு வாரமாகவே பக்தர்கள் கூட்டம் முருகன் கோயில்களில் அதிகளவு காணப்பட்டது.
    நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் முருகன் ஆலயங்களில் அதிகளவு காணப்பட்டு வருகிறது. தைப்பூசத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருவதை முன்னிட்டு, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கு அதிகளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, தைப்பூசம் என்றால் மற்ற முருகன் கோயில்களை காட்டிலும் பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். பழனியில் நேற்று முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    குவியும் பக்தர்கள்:
    இதனால், பழனிக்கு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    இன்றும் காலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து திரளாக கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்களின் வசதிகளுக்காக பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வரிசைகளும், சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    சிறப்பு ஏற்பாடுகள்:
    சென்னையிலும் வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடபழனி மட்டுமின்றி திருப்போரூர், சிக்கல் சிங்காரவேலர் கோயில் உள்பட பல முக்கியமான முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற உள்ளது. தைப்பூசமான முருகப்பெருமான் மட்டுமின்றி சிவபெருமானுக்கும் உகந்த நாள் என்பதால் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்பட சிவாலயங்களிலும் இன்று தைப்பூச சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
    மேலும் படிக்க: Thaipusam 2024: பழனியில் களைகட்டும் தைப்பூசத் திருவிழா; பக்தி பாடல்கள் பாடியபடி குவிந்து வரும் பக்தர்கள்
    மேலும் படிக்க: Arupadai Veedu: “திருப்பரங்குன்றம் முதல் பழமுதிர்சோலை வரை” முருகனின் அறுபடை வீடுகள் எது? எது?

    Source link

  • Lok Sabha Election: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்காட்டும் திமுக

    Lok Sabha Election: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்காட்டும் திமுக


    <p>நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இதுவரை அறிவிக்காவிட்டாலும், கடந்த ஓராண்டாகவே அரசியல் கட்சிகள் அந்த பணியைத் தொடங்கிவிட்டன.</p>
    <h2><strong>மக்களவைத் தேர்தல்:</strong></h2>
    <p>மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வௌியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தமிழ்நாட்டில் தி.மு.க. தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தேர்தல் பணிகளை கண்காணிக்க, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த என 3 குழுக்களை தி.மு.க. அமைத்தது.</p>
    <p>ஆளுங்கட்சியான தி.மு.க. சட்டசபையில் பலத்துடன் இருப்பது போல கூட்டணியிலும் பலத்துடன் உள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக தற்போது தி.மு.க. உள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என செல்வாக்கு மிகுந்த கட்சிகள் தி.மு.க.வின் கூட்டணியில் உள்ளன. தி.மு.க. ஆட்சியை கைப்பற்றிய பிறகு, கமல்ஹாசனும் தி.மு.க.விற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்.</p>
    <h2><strong>அதிக தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. ஆர்வம்:</strong></h2>
    <p>இதனால், வரும் தேர்தலில் அவர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவதை உறுதி செய்த கமல்ஹாசன், எந்த தொகுதி என்பதை பின்னர் அறிவிப்பதாக ஏற்கனவே கூறினார். இந்த முறை ஏற்கனவே உள்ள கட்சிகளுடன் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> கட்சியும் இணையும் என்பதால் தி.மு.க. கூட்டணி மேலும் பலப்படும் என்று கருதப்படுகிறது.</p>
    <p>அதேசமயம், கூட்டணி கட்சிகள் அதிகளவில் இருப்பதால் எந்தளவு பலம் உள்ளதோ, அதே அளவு தொகுதியை பங்கீடு செய்வதிலும் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை தி.மு.க.விற்கு 20, கூட்டணி கட்சிகளுக்கு 20 என்று தி.மு.க. கூட்டணியினர் பங்கீடு செய்து கொண்டனர். ஆனால், இந்த முறை ஆளுங்கட்சி என்பதால் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>
    <h2><strong>காங்கிரசுக்கு எத்தனை இடங்கள்?</strong></h2>
    <p>கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை தி.மு.க. வழங்கியது. ஆனால், இந்த முறை 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறி என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக ராகுல்காந்தி தொடர் நடைபயணம் மேற்கொண்டாலும், வட இந்தியாவில் பா.ஜ.க.வின் செல்வாக்குக்கு சவால் விடும் அளவில் அமையவில்லை என்றே கருத்துக்கணிப்புகள் கூறுகிறது. குறிப்பாக, ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பிறகு பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>
    <p>இந்த நிலையில், காங்கிரஸ் மத்தியில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கோணத்தில் தி.மு.க. கருதினால் அவர்களுக்கு, கடந்த முறை போல 10 தொகுதிகளை தர தி.மு.க. தயக்கம் காட்டும் என்றே கருதப்படுகிறது. மேலும், இந்த முறை தி.மு.க. 20 முதல் 25 தொகுதிகள் வரை போட்டியிட ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>
    <h2><strong>கூட்டணி பங்கீட்டில் நெருக்கடி:</strong></h2>
    <p>கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தும் விதமாகவும், அதேசமயம் தங்களுக்கு போதிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும் தி.மு.க. விரும்புகிறது. இதனால், தொகுதி பங்கீட்டில் இந்த முறை இழுபறி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை மாநிலங்களவைத் தொகுதிகளும் கூட்டணி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. வழங்கியது. இந்த முறை அதுபோல வழங்குமா? என்பதும் கேள்விக்குறியே ஆகும்.</p>
    <p>தி.மு.க.வுடனான கூட்டணி பங்கீட்டில் மற்ற கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகள் வழங்கப்பட்டாலும், காங்கிரசுக்கு 10 இடங்கள் வரை இந்த முறையும் வழங்கப்படுமா? என்பதும் மிகுந்த கேள்விக்குறியாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை அதிக இடங்கள் கேட்டு 10 தொகுதிகள் மட்டுமே தி.மு.க. வழங்கியது. இந்த முறையும் குறைந்தது 10 தொகுதிகளையாவது வாங்கிவிட வேண்டும் என்று காங்கிரசும் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், கடந்த முறையை காட்டிலும் இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பங்கீடு இந்த முறை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.</p>

    Source link

  • Fast Bowler James Anderson Was Left Out Of England’s Squad For The First Test Against India

    Fast Bowler James Anderson Was Left Out Of England’s Squad For The First Test Against India

    இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து:
    கடந்த 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் நேரடியாக மோத உள்ளன. அதன்படி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் நாளை ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் தொடர் ஹைதராபாத் நகரில் உள்ள ரஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. 
    நாளை போட்டி தொடங்க உள்ள சூழலில் இங்கிலாந்து அணி தங்களது ஆடும் லெவன் வீரர்களை அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஆண்டர்சன் கழட்டிவிடப்பட்டுள்ளார். அதன்படி, நான்கு ஸ்பின்னர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி லெக்பிரேக் பவுலர் ரெஹான் அகமது, இடது கை ஸ்பின்னர்களான டாம் ஹார்ட்லீ, ஜேக் லீச் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேநேரம் வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்து அணியில் ஒரு ஒரு வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

    We’ve named our XI for the first Test in Hyderabad! 🏏🇮🇳 #INDvENG 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 | #EnglandCricket
    — England Cricket (@englandcricket) January 24, 2024


    ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர்:
    அதாவது அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட்டுக்கு மட்டுமே இடம் கிடைத்து இருக்கிறது. இதற்கான காரணம் நாளை விளையாட உள்ள மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரம், மார்க் வுட்டுக்கு இந்திய மண்ணில் விளையாடும் முதல் போட்டி இது என்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல் ஸ்பின் பவுலர்களை பொறுத்தவரை ஜேக் லீச் மட்டுமே இதற்கு முன்னர் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க் வுட்டுடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் பந்துவீச உள்ளார்.
    முன்னதாக, இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது அந்த போட்டியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஆலி போப் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்குகிறார்கள். இங்கிலாந்து அணியின் மற்றொரு ஸ்பின்னராக ஷோயிப் பசீர் சேர்க்கப்பட்டுள்ளார். விசா தாமதம் காரணமாக அவர் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், விசா பிரச்சனையை சரி செய்து இந்தியாவில் அவர் விளையாடுவார் என்று நம்புவதாக ரோகித் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: IND vs ENG: டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா ஆண்டர்சன்? காத்திருக்கும் அற்புத சாதனைகள்!
    மேலும் படிக்க:India vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? – விவரம்

    Source link

  • Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நச் புகைப்படங்கள்..!

    Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நச் புகைப்படங்கள்..!


    Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நச் புகைப்படங்கள்..!

    Source link

  • Big Bash League 2023-24 Sydney Sixers Vs Brisbane Heat Final Brisbane Heat Won By 54 Runs

    Big Bash League 2023-24 Sydney Sixers Vs Brisbane Heat Final Brisbane Heat Won By 54 Runs

    இந்தியாவில் ஐபிஎல் எப்படியோ அதேபோலத்தான் ஆஸ்திரேலியாவில் பி.பி.எல். பிக் பேஸ் லீக் எனப்படும் இந்த பிபிஎல் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் ஐபிஎல் ஒரே ஆண்டில் நடப்பதைப் போல் இல்லாமல், பி.பி.எல். ஒரு ஆண்டின் இறுதியில் தொடங்கி மறு ஆண்டின் முதல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.
    11 ஆண்டுகளுக்கு பின் மகுடம்:
    இதனடிப்படையில் இதுவரை 13 சீசன்கள் நடைபெற்றுள்ளது.  மொத்தம் 8 அணிகள் களமிறங்கிய 13வது பிபிஎல் சீசனை பிர்ஸ்பேன் ஹீட் அணி வென்றுள்ளது. மூன்று முறை சாம்பியனான சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிர்ஸ்பேன் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 11 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2012-13ஆம் ஆண்டில் வென்றிருந்தது. 
    இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனால் பிர்ஸ்பேன் ஹீட் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் ஓவரிலேயே பிரிஸ்பேன் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 5வது பந்தில் தொடக்க வீரர் பெயர்சன் தனது விக்கெட்டினை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர், வந்த மக் ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பிரவுனுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் பொறுப்பாக ஆடியதுடன் அதிரடியாக பவுண்டரிகளையும் விளாசினர். ஆனால் இருவரும் அணியின் ஸ்கோர் 90 ரன்களாக இருந்தபோது அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதில் ஜாஸ் பிரவுன் 38 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்திருந்தார். 

    Lift it high, Brisbane 🏆 You’re the champions of #BBL13 👏 pic.twitter.com/jyMLcigHS3
    — KFC Big Bash League (@BBL) January 24, 2024

    அதன் பின்னர் வந்த ரென்ஷாவ் மற்றும் மேக்ஸ் பிரயாண்ட் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இருவரின் ஆட்டமும் ருத்ரதாண்டவமாக இருந்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் பிர்ஸ்பேன் ஹீட் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் இமாலய இலக்கை செட் செய்யமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்திருந்தது. 
    54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:
    அதன் பின்னர் களமிறங்கிய மூன்று முறை கோப்பையை வென்ற பலமான சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னர் வந்த வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் பிர்ஸ்பேன் ஹீட் அணியின் பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் சிட்னி அணியின் டாப் ஆர்டர் வீரர்களின் விக்கெட்டுகளை அள்ளியதால் சிட்னி அணியால் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை.
    இறுதியில் சிட்னி சிக்ஸர் அணி 17.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பிர்ஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இதன்மூலம் 11 ஆண்டுகளுப் பின்னர் பிர்ஸ்பேன் ஹீட் அணி பிபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய பிர்ஸ்பேன் ஹீட் அணியின் பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வழங்கப்பட்டது.  
     

    Source link

  • Ayalaan Box Office Collection: ரூ.75 கோடி வசூலைக் கடந்த அயலான்: பொங்கல் ரேஸில் முந்திய சிவகார்த்திகேயன்!

    Ayalaan Box Office Collection: ரூ.75 கோடி வசூலைக் கடந்த அயலான்: பொங்கல் ரேஸில் முந்திய சிவகார்த்திகேயன்!


    <p>நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு பேமிலி ஆடின்ஸை டார்கெட் செய்து ரிலீசான படம் அயலான். இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீசானது. ஏலியன் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி வந்த இந்தப் படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டும் சி செண்டர் ஆடியன்ஸ் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துடன் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன், <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> சேதுபதியின் மெரி கிருஸ்துமஸ் ஆகிய படங்களும் ரிலீசாகின.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/8928328a864ac759a4c89ba10c2ea9e61706103493951102_original.jpg" width="598" height="898" /></p>
    <p>இந்தப் படத்தின் வசூல் குறித்து பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் இணையதளங்கள் தகவல்கள் வெளியிட்டு வந்தாலும், தற்போது படக்குழு இரண்டாம் முறையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பகிர்ந்துள்ளது. அதன்படி அயலான் திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி வரை உலகம் முழுவதிலும் ரூபாய் 75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>
    <p>இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘அயலான்’.</p>
    <p>ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார். &nbsp;ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.</p>
    <p>இந்த ஆண்டு&nbsp;<a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> வெளியீடாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. குழந்தைகளைக் குறிவைத்து அயலான் திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடியே குழந்தை ஆடியன்ஸை குடும்பத்துடன் ஈர்த்து இப்படம் கல்லா கட்டி வருகிறது. முதல் நான்கு நாள்களிலேயே அயலான் திரைப்படம் ரூ.50 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்ததாக கூறப்பட்டது.&nbsp;</p>
    <p>இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி அயலான் படத்தின் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், &nbsp;வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து படக்குழு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.</p>
    <p>அயலான் படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவுடன் போட்டுள்ள ஒப்பந்த அறிக்கையை தற்போது வெளியிட்டது. இந்த அறிக்கையில் அயலான் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு தங்களது நிறுவனம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளது. மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மட்டுமே முதற்கட்டமாக ரூ.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.&nbsp; படத்தின் தரத்தை மேம்படுத்த இந்த செலவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி நிலவும் பட்சத்தில் அது மேற்கொண்டு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் ஃபாண்டம் நிறுவனத்தின் உரிமையாளர் பிஜாய் அற்புதராஜின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.</p>

    Source link

  • Karthigai Deepam Today Zee Tamil Serial January 24th Episode Written Update

    Karthigai Deepam Today Zee Tamil Serial January 24th Episode Written Update

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 
    இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாடப்போகும் விஷயத்தை சொல்ல, “அவள் வேண்டாம், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு” என சொல்ல, தீபா இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடுக்கப்போவதாக சொல்ல, கார்த்திக் அங்கு வந்து விட பேச்சை மாற்றி மழுப்பி விடுகின்றனர். 
    இதைத் தொடர்ந்து இன்னொரு பக்கம் ரூபஸ்ரீ கோகிலா சிக்கிக் கொண்டதை நினைத்து உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாள். மறுபக்கம் கோகிலா ரவுகளிடம் தப்பிக்க ப்ளான் போட்டு “பாத்ரூம் போகணும் கட்டை அவிழ்த்து விடுங்கடா” என சொல்ல, ரவுடிகள் முடியாது என மறுக்கின்றனர். 
    அடுத்ததாக தீபா சாமி முன்னால் நின்று “இந்த ஒருமுறை கார்த்திக்கு தெரியாமல் பாடப் போறேன், இந்த முறை மட்டும் அவர் கண்ணுல படாமல் காப்பாற்றிடு, பாடி முடிச்சதும் உண்மையை சொல்லிடப் போறேன்” என வேண்டுகிறாள். 
    அங்கு வரும் கார்த்திக் முக்கியமான விஷயம் காரணமாக வெளியே செல்வதாக சொல்ல, தீபா பூஜை செய்து ஆரத்தி காட்டி அனுப்பி வைக்கிறாள். கார்த்திக் தீபாவிடம் பல்லவியை கண்டுபிடிக்க செல்லும் விஷயத்தை மறைத்து வெளியே கிளம்புகிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது. 
    மேலும் படிக்க: To Kill a Tiger: ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படம் “To Kill a Tiger”.. இதுவரை வென்ற விருதுகள் என்னென்ன?
    Dr Ramadoss: திரைப்படமாகும் ராமதாஸ் வாழ்க்கை.. ஹீரோவாக சரத்குமார்? – வெளியான தகவல்!

    Source link

  • அயோத்தி கோயிலுக்கு ராமரை பார்க்க வந்தது குரங்கா? அனுமனா? பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

    அயோத்தி கோயிலுக்கு ராமரை பார்க்க வந்தது குரங்கா? அனுமனா? பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!


    <p>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.&nbsp;</p>
    <h2><strong>ராமர் கோயிலுக்குள் புகுந்த குரங்கு:</strong></h2>
    <p>இந்த நிலையில், கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு உள்ளே குரங்கு ஒன்று நேற்று புகுந்துள்ளது. மாலை 5:50 மணி அளவில், பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கோயிலின் கருவறைக்கு உள்ள தெற்கு வாசல் வழியே குரங்கு நுழைந்துள்ளது. பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை நோக்கி குரங்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
    <p>கோயிலுக்கு உள்ளே குரங்கு நுழைந்ததை பார்த்து அங்கு பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, &nbsp;சிலையை சேதப்படுத்துவிடுமோ என்று பயந்து குரங்கை நோக்கி அவர்கள் விரைந்தனர். இதற்கிடையில், கருவறை வழியாக வடக்கு வாசலை நோக்கி குரங்கு நகர்ந்தது.</p>
    <p>அங்கு கதவுகள் மூடப்பட்டிருந்ததை பார்த்தவுடன் குரங்கு கிழக்கு நோக்கி நகர்ந்தது. அங்குதான், பக்தர்கள் அனைவரும் கூடியிருந்தனர். கோயிலில் குரங்கு பார்த்து, பக்தர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.</p>
    <h2><strong>பக்தி பரவசத்தில் திளைக்கும் பக்தர்கள்:</strong></h2>
    <p>இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்ட தகவலில், "மாலை 5:50 மணியளவில் தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்த குரங்கு உற்சவர் சிலை நோக்கி சென்றது. இதைப் பார்த்த பாதுகாப்புப் பணியாளர்கள், உற்சவர் சிலையை குரங்கு தரையில் தள்ளிவிடுமோ என்று நினைத்து குரங்கை நோக்கி ஓடினர்.&nbsp;</p>
    <p>ஆனால், போலீசார் குரங்கை நோக்கி ஓடியதும் குரங்கு வடக்கு வாசலை நோக்கி ஓடியது. கேட் மூடப்பட்டதால், கிழக்கு நோக்கி நகர்ந்து, கூட்டத்தை கடந்து, யாருக்கும் சிரமம் ஏற்படுத்தாமல், கிழக்கு வாசல் வழியாக வெளியே சென்றது. குழந்தை ராமர் சிலையை பார்க்க ஹனுமான் ஜியே வந்ததைப் போல எங்களுக்கு இருக்கிறது என்று பாதுகாப்புப் பணியாளர்கள் கூறுகிறார்கள்" என்றார்.</p>
    <p>&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="hi">आज श्री रामजन्मभूमि मंदिर में हुई एक सुंदर घटना का वर्णन:<br /><br />आज सायंकाल लगभग 5:50 बजे एक बंदर दक्षिणी द्वार से गूढ़ मंडप से होते हुए गर्भगृह में प्रवेश करके उत्सव मूर्ति के<br />पास तक पहुंचा। बाहर तैनात सुरक्षाकर्मियों ने देखा, वे बन्दर की ओर यह सोच कर भागे कि कहीं यह बन्दर उत्सव&hellip;</p>
    &mdash; Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) <a href="https://twitter.com/ShriRamTeerth/status/1749850186950824443?ref_src=twsrc%5Etfw">January 23, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>அயோத்தி கோயிலுக்கு ராமரை பார்க்க அனுமனே வந்ததாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் திளைக்கின்றனர்.</p>

    Source link

  • Saipallavi Sister Engagement : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்து முடிந்த சாய்பல்லவி வீட்டு நிச்சயதார்த்தம்!

    Saipallavi Sister Engagement : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்து முடிந்த சாய்பல்லவி வீட்டு நிச்சயதார்த்தம்!


    Saipallavi Sister Engagement : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்து முடிந்த சாய்பல்லவி வீட்டு நிச்சயதார்த்தம்!

    Source link

  • ஞானவாபி வழக்கு.. வாரணாசி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.. தொல்லியல் துறையின் ஆய்வால் திருப்பமா?

    ஞானவாபி வழக்கு.. வாரணாசி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.. தொல்லியல் துறையின் ஆய்வால் திருப்பமா?


    <p>அயோத்தியை போல தொடர் சர்ச்சையை கிளப்பி வருவது ஞானவாபி மசூதி வழக்கு. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>
    <p>ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.</p>
    <h2><strong>தொடர் சர்ச்சையை ஏற்படுத்தும் ஞானவாபி வழக்கு:</strong></h2>
    <p>காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.</p>
    <p>ஞானவாபி மசூதியில் ஆய்வு நிறைவுபெற்றதை தொடர்ந்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் அது தொடர்பான ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை சீலிடப்பட்ட கவரில் சமர்பித்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஆய்வறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டால், அது தேவையற்ற வதந்திகளுக்கு வழிவகுக்கும் என்றும் தவறான தகவல்கள் வேண்டுமென்றே பரப்பப்படும் என்றும் இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் கூறியது.</p>
    <p>ஆனால், ஆய்வறிக்கையின் நகலை தங்களுக்கு அளிக்க வேண்டி, இந்து தரப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ், "ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை பொதுவெளியில் வெளியிடலாமா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆய்வறிக்கையின் நகலை வழங்கலாமா? வேண்டாமா? என்பது தொடர்பான முடிவும் வரும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி எடுக்கப்படும்" என்றார்.</p>
    <h2><strong>வாரணாசி மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு:</strong></h2>
    <p>இந்த நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வு அறிக்கையின் நகலை மனுதாரர்களுக்கும், வழக்கின் பிற தரப்பினருக்கும் வழங்க வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், அறிக்கை, பொதுவெளியில் வெளியிடப்படாது என உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
    <p>இதுகுறித்து மசூதி தரப்பு வழக்கறிஞர் மும்தாஜ் அகமது பேசுகையில், "தரப்பினர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவர்களுக்கு தொல்லியல் துறை அறிக்கையின் நகல் வழங்கப்படும் என்றும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.விஷ்வேஷா, இந்த உத்தரவை பிறப்பித்தார்" என்றார்.</p>
    <p>உத்தரவு குறித்து இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், "இன்று விசாரணை நடந்தது. உத்தரவின் நகலை வழக்கில் உள்ள தரப்பினருக்குக் கிடைக்கச் செய்வது குறித்து இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும். நீதிமன்றம் தனது உத்தரவில் என்ன எழுதுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தரப்பினருக்கு உத்தரவின் நகல்களை வழங்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Tamil Thalaivas vs Telugu Titans: சரவெடி.. 25 புள்ளிகள் வித்தியாசம்; தெலுகு டைட்டன்ஸை ஊதித்தள்ளி தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி

    Tamil Thalaivas vs Telugu Titans: சரவெடி.. 25 புள்ளிகள் வித்தியாசம்; தெலுகு டைட்டன்ஸை ஊதித்தள்ளி தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி


    <p style="text-align: justify;">ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுகு டைட்டன்ஸ் அணிகள் இன்று அதாவது&nbsp; ஜனவரி 24 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு முன்னர் இந்த சீசனில் இரு அணிகளும் மோதிக்கொண்டதில் தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.&nbsp;</p>
    <p style="text-align: justify;">மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக புள்ளிக்கணக்கை தமிழ் தலைவாஸ் அணி தெலுகு அணியின் பலமான வீரரான பவான் ஷெர்வத்தை அவுட் ஆக்கி தொடங்கினர். இந்த போட்டியில் பவன் ஷெராவத்தை தமிழ் தலைவாஸ் வீரர்கள் தொடர்ந்து டிஃபெண்ட்ங்கில் அவுட் ஆக்கி வந்தனர்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">முதல் 10 நிமிடங்கள் முடியும் இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் என்பது ஒரு புள்ளியாகத்தான் இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளும் தெலுகு அணி 6 புள்ளிகளும் எடுத்திருந்தது. ஆனால் அதன் பின்னர் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக சாஹர் சிறப்பாக விளையாடி எதிரணி வீரர்களை மடக்கினார். இதுவரை சாஹர் 58 டேக்கிள் புள்ளிகள் எடுத்து நடப்பு ப்ரோ கபடி லீக்கில் அதிக டேக்கிள் பாய்ண்ட்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான அபிஷேக் சிறப்பாக விளையாடினார். அபிஷேக்கின் டார்கெட் பவான் ஷெராவத்தாக இருந்ததால் அவரை அதிகப்படியாக அவுட் ஆக்கி வந்தார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">போட்டியின் முதல் பாதி முடியும்போது 20 புள்ளிகளும் தெலுகு 11 புள்ளிகளும் எடுத்திருந்தது. முதல் பாதி ஆட்டம் முடியும்போது தெலுகு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் ஆக்கியிருந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதனால் தெலுகு அணி இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆனது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் ஆட்டம் முடியும்போது தமிழ் தலைவாஸ் அணி 34 புள்ளிகளும் தெலுகு டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளும் எடுத்திருந்தது. கடைசி 10 நிமிடங்களில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து வந்தாலும் தமிழ் தலைவாஸ் அணியின் கரங்களே ஓங்கி இருந்தது. கடைசி 10 நிமிடங்களில் தமிழ் அணி தெலுகு அணியை மூன்றாவது முறையாக ஆல் அவுட் செய்தது. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 54 புள்ளிகளும் தெலுகு டைட்டன்ஸ் அணி 29 புள்ளிகளும் எடுத்திருந்தது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழ் தலைவாஸ் அணியின் ஒட்டுமொத்த ப்ரோ கபடி லீக்கின் முதல் ஹாட்ரிக் வெற்றியாகவும் பதிவானது. இந்த வெற்றி மூலம் தமிழ் தலைவாஸ் அணியின் புள்ளிகள் வித்தியாசம் 28ஆக மாறியுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.&nbsp;</p>
    <p style="text-align: justify;">தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனின் முதல் 11 போட்டிகளில் பெரும்பான்மையான போட்டிகளில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சொதப்பி வந்தது. இதனால் தொடர் தோல்விகளையும் சந்தித்தது. ஆனால் இரண்டாவது 11 போட்டிகளின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடி வருகின்றது. தமிழ் தலைவாஸ் அணி&nbsp;</p>

    Source link

  • Kriti Sanon Photos : இது நம்ம ஆதிபுருஷ் சீதாவா? இவ்வளவு ஸ்டைலா இருக்காங்களே..!

    Kriti Sanon Photos : இது நம்ம ஆதிபுருஷ் சீதாவா? இவ்வளவு ஸ்டைலா இருக்காங்களே..!


    Kriti Sanon Photos : இது நம்ம ஆதிபுருஷ் சீதாவா? இவ்வளவு ஸ்டைலா இருக்காங்களே..!

    Source link

  • முதல் நாளே அமோகம்.. கோடிகளை குவித்த குழந்தை ராமர்.. அயோத்தி ராமர் கோயிலுக்கு இவ்வளவு நன்கொடையா?

    முதல் நாளே அமோகம்.. கோடிகளை குவித்த குழந்தை ராமர்.. அயோத்தி ராமர் கோயிலுக்கு இவ்வளவு நன்கொடையா?

    அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    அயோத்தி கோயிலில் அலைமோதும் பக்தர்கள்:
    மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்று எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 23ஆம் தேதி, 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உத்தரப்பிரதேசம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில், நாட்டின் முக்கிய புனித தலமாக உருவெடுக்கும் என கருதப்படுகிறது. எனவே, கோடிக்கணக்கான மக்கள் ராமர் கோவிலுக்கு வந்து பணத்தை நன்கொடை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ராமர் கோயில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே நன்கொடுகளை குவிந்து வருகின்றன.
    அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக அறக்கட்டளை ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது. தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு பிரிவினரும் இதற்காக பங்களித்து வருகின்றனர்.
    கோடிகளை குவிக்கும் குழந்தை ராமர்:
    நேற்று முன்தினம் ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ.2.51 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்தனர். ராமர் கோயிலால் வருங்காலத்தில் ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    அயோத்தி கோயில் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “ராமர் கோயில் திறப்பாலும் அயோத்தியை மதச் சுற்றுலா தலமாக ஊக்குவிக்க உத்தரப் பிரதேச அரசு எடுத்த நடவடிக்கையாலும் நிதியாண்டில் 25,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 5 கோடி பார்வையாளர்கள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    உலகெங்கிலும் உள்ளவர்கள் Google Pay மற்றும் BharatPe போன்ற UPI செயலிகளை பயன்படுத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு பணத்தை நன்கொடையாக வழங்கலாம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆன்லைனில் நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
     

    Source link

  • Mrunal Thakur viral instagram video : உயிர் பாதி உனக்கே… உன்னில் பாதி எனக்கே…

    Mrunal Thakur viral instagram video : உயிர் பாதி உனக்கே… உன்னில் பாதி எனக்கே…


    <p>&nbsp;உயிர் பாதி உனக்கே&hellip; உன்னில் பாதி எனக்கே&hellip;</p>

    Source link

  • பிரம்மாஸ்திரத்தை எடுத்த பாஜக! சிக்னல் கொடுக்கும் நிதிஷ் குமார்! கதை ஓவர் ஓவர்!

    பிரம்மாஸ்திரத்தை எடுத்த பாஜக! சிக்னல் கொடுக்கும் நிதிஷ் குமார்! கதை ஓவர் ஓவர்!


    <p>தேசிய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், பிகார் மாநில முதலமைச்சராக 8 முறை பதவி வகித்துள்ளார். பாஜகவுக்கு எதிரான I.N.D.I.A கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய இவர், ஒரு காலத்தில் பாஜகவுடன் நெருக்கமான உறவை பேணி வந்தார்.</p>
    <h2><strong>கூட்டணி மாறுகிறாரா நிதிஷ் குமார்?</strong></h2>
    <p>அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை தொடங்கி ரயில்வே வரை பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.&nbsp;</p>
    <p>மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சரானார். 2015ஆம் ஆண்டு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பரம எதிரியாக கருதப்படும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.&nbsp;</p>
    <p>தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மீண்டும் முதலமைச்சரானார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மெகா கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், மீண்டும், பாஜகவுடன் கைகோர்த்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.&nbsp;</p>
    <p>தன்னுடைய கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து மீண்டும் விலகி லாலுவுடன் கைகோர்த்தார். இப்படி, மாறி மாறி கூட்டணி வைத்த நிதிஷ், பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.</p>
    <h2><strong>பாஜக எடுத்த பிரம்மாஸ்திரம்:</strong></h2>
    <p>I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், சமீப காலமாக, நிதிஷ் குமார் செய்து வரும் செயல்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க மறுத்த சம்பவம் பேசுபொருளானது. அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்வாரோ என கேள்விகளை எழுப்பியது.</p>
    <p>இந்த நிலையில், மறைந்த பிகார் முதலமைச்சரும் சோசலிச தலைவர்களில் ஒருவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது I.N.D.I.A கூட்டணியில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஒரு நல்ல முடிவை எடுத்திருப்பதாக பாஜகவுக்கு நிதிஷ் குமார் பாராட்டு தெரிவித்திருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <p>"முன்னாள் முதலமைச்சரும், மாபெரும் சோசலிஸ்ட் தலைவருமான மறைந்த கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது மத்திய அரசின் நல்ல முடிவு" என எக்ஸ் தளத்தில் நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.</p>
    <p>இதற்கு நேர்மாறாக பாஜக மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளது நிதிஷ் குமாரின் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம். இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த மிருத்யுஞ்சய் திவாரி பேசுகையில், "கர்பூரி தாக்கூர் உயிருடன் இருந்தபோது பாஜக அவரை வார்த்தைகளால் திட்டியது. 9 ஆண்டுகளாக அவரை நினைவில் கொள்ளவில்லை.</p>
    <p>எங்கள் கட்சியும் தலைவர் லாலு யாதவும் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் கர்பூரி தாக்கூரை நினைவு கூர்ந்து அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார்கள். வாக்குகளுக்காக அவரை நினைவுகூருகிறார்கள்" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Anna Serial: ரத்னா ரூட்டை க்ளியர் செய்ய ஷண்முகம் கொடுத்த வாக்கு, நடக்கப் போவது என்ன? அண்ணா சீரியல் இன்று

    Anna Serial: ரத்னா ரூட்டை க்ளியர் செய்ய ஷண்முகம் கொடுத்த வாக்கு, நடக்கப் போவது என்ன? அண்ணா சீரியல் இன்று


    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.&nbsp;</p>
    <p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் மற்றும் வைகுண்டம் கோயிலுக்கு வர, பாக்கியம் சௌந்தர பாண்டியிடம் விஷயத்தை சொல்லி வரவேற்க கூப்பிட, சௌந்தர பாண்டி வர மறுக்கிறார்.&nbsp;</p>
    <p>இதனைத் தொடர்ந்து ரொம்ப ஓவராக பண்ணா சந்தேகமும் வந்து விடும் என எடுத்துச் சொல்லி முத்து பாண்டியும் பாண்டியம்மாவும் சௌந்தரபாண்டியை கூட்டிச் செல்கின்றனர். வேண்டா வெறுப்பாக இருவரையும் வரவேற்க ஷண்முகம் சிரித்த முகத்துடன் வரவேற்றால் தான் வருவோம் என அடம்பிடிக்கின்றனர்.&nbsp;</p>
    <p>வேறு வழியின்றி சௌந்தரபாண்டி சிரித்துக் கொண்டே அவர்களை வரவேற்க, இருவரும் கோயிலுக்குள் வருகின்றனர். கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் கவிதா, ஷண்முகம் வந்ததும் அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி தனக்கு அக்கா மாமாவை தவிர யாரும் இல்லை எனச் சொல்கிறாள்.&nbsp;</p>
    <p>அதைக் கேட்டு ஷண்முகம் இனிமே உனக்கு அண்ணனாக இருந்து இந்தக் கல்யாணத்தை நான் நடத்தி கொடுக்கிறேன் என வாக்கு கொடுக்கிறான். பிறகு தட்டு மாற்றுவதற்கான வேலைகள் நடக்கிறது. இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது</p>

    Source link

  • Ayodhya Ram Mandir Inaguration After Denied Leave Man Quitting Job | அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல லீவு கொடுப்பீங்களா? இல்லையா?

    Ayodhya Ram Mandir Inaguration After Denied Leave Man Quitting Job | அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல லீவு கொடுப்பீங்களா? இல்லையா?

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு விடுமுறை தராததால், ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில்:
    அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.  கருங்கல்லில் செதுக்கப்பட்ட குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையில் வைக்கப்பட்ட சிலைக்கு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.  
    உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.  
    வேலையை ராஜினாமா செய்த நபர்:
    இதற்கிடையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்தது.  மேலும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள்,  நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ம் தேதியன்று அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, சில தனியார் நிறுவனங்களும் சலுகைகளையும் அறிவித்தது. 

    Bro I quit my job today. My company GM is Muslim, He denied my leave for 22 Jan. https://t.co/9PXyEjChHQ
    — Gagan Tiwari 🇮🇳 (@TuHaiNa) January 21, 2024

    இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவின்போது விடுமுறை தராததால் நபர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். இது பற்றி கங்கர் திவார் என்பவர் தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருக்கிறார். அதில்,  “ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, மேலாளர் தனக்கு விடுப்பு தரவில்லை.

    Don’t worry gagan bhai, Prabhu Shri Ram will bless you with a better job 🙏 Jai shri Ram 🕉️ https://t.co/kV6FvDgjJg
    — ABHISHEK SEMWAL (@Abhiisshhek) January 22, 2024

    எனது மேலாளர் ஒரு இஸ்லாமியர். எனக்கு விடுப்பு தரவில்லை என்பதால் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவதோடு, நெட்டிசன்கள் பலரும் இவருக்கு ஆதரவு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
     

    Source link

  • Tamil Thalaivas vs Telugu Titans LIVE Updates Pro Kabaddi League 2023-24 PKLSeason10

    Tamil Thalaivas vs Telugu Titans LIVE Updates Pro Kabaddi League 2023-24 PKLSeason10


    10-வது ப்ரோ கபடி லீக்  இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்:
    நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வி என மொத்தம் 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், 15 போட்டிகளில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் 2 போட்டிகளில்  வெற்றியும், 13 போட்டிகளில் தோல்வி அடைந்து 16 புள்ளிகளுடன் 12-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தான் இந்த இரு அணிகளும் களம் காண்கிறது.
     
    நேருக்கு நேர் 
    ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் 13 முறை தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில், தமிழ் தலைவாஸ் 7 முறை வெற்றி பெற்று உள்ளது, தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் 38-36 என்கிற கணக்கில் தமிழ் தலைவாஸ்  அணி வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது.  
     
    மேலும் படிக்க: Yuvraj Singh: இந்தியாவுக்கு திறமை இருக்கு; ஆனாலும் தோல்வி ஏன்? – ஆலோசகராக விரும்பும் யுவராஜ் சிங்!
     
    மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி… அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!
     

    Source link

  • Maari Serial: மாரி பற்றி அறியும் தாரா: கருப்பு உருவத்தை வைத்து தீட்டும் அதிரடி ப்ளான்: மாரி சீரியல் இன்று!

    Maari Serial: மாரி பற்றி அறியும் தாரா: கருப்பு உருவத்தை வைத்து தீட்டும் அதிரடி ப்ளான்: மாரி சீரியல் இன்று!


    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.&nbsp;</p>
    <p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா மாரியின் கை ரேகையை வாங்கிய நிலையில் சங்கரபாண்டியை அழைத்துக் கொண்டு ஜோசியரை சந்திக்க வருகிறாள்.&nbsp;கை ரேகை மற்றும் ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்த ஜோசியர் இரண்டும் ஒருவருடைய ஜாதகம் தான் என்று சொல்ல தாரா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு ஃப்ளாஷ் கட் ஓபனாகிறது.</p>
    <p>அம்மாவை இழந்த சோகம் தெரியாமல் சூர்யா துர்காவுடன் விளையாடிக் கொண்டிருக்க, இவனுக்கு அம்மாவோட ஏக்கத்தை வரவைத்து தாய் பாசத்தை காட்டி ஜெகதீஷை திருமணம் செய்ய ப்ளான் போடுகிறாள்.&nbsp;</p>
    <p>இதற்கு தடையாக இருக்கும் பார்வதி மற்றும் துர்காவை காலி செய்ய முடிவெடுக்கிறாள். அதற்கேற்றார் போல பார்வதி துர்காவையும் சூர்யாவையும் கூட்டி கொண்டு கோயிலுக்கு கிளம்ப, தாரா சூர்யாவை நிறுத்திக் கொண்டு பார்வதி செல்லும் காரை லாரியால் மோத ஏற்பாடு செய்கிறாள்.&nbsp;</p>
    <p>&ldquo;பார்வதியைக் கொன்று குழந்தையை வேறு எங்கேயாவது கொண்டு போய் விட்டுடுங்க&rdquo; என சொல்கிறார். பிறகு துர்கா நீலகண்டனிடம் சென்றது, மீண்டும் இங்கு வந்தது என அனைத்தும் தேவியின் கணக்கு தான் என்பதை தெரிந்து கொள்கின்றாள்.&nbsp;</p>
    <p>மேலும் இதை உறுதி செய்ய ஸ்ரீஜாவிடம் &ldquo;உங்க தாத்தா சின்ன வயது குழந்தைகளோட நகை, துணி போன்றவற்றை வைத்திருக்காரா?&rdquo; எனக் கேட்க, ஸ்ரீஜா ட்ரங்க் பெட்டி விஷயத்தை சொல்ல கருப்பு உருவத்தை வைத்து அதைத் திருட திட்டம் போடுகிறாள்.&nbsp; இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

    Source link

  • Body Of Missing Teacher Deepika Found Buried Karnataka Police Apathy | மாயமான இளம் ஆசிரியை! உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

    Body Of Missing Teacher Deepika Found Buried Karnataka Police Apathy | மாயமான இளம் ஆசிரியை! உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

    கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது மாண்டியா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பாண்டவபுர தாலுகாவில் அமைந்துள்ள மாணிக்யாகாளியில் வசித்து வந்தவர் தீபிகா. அவருக்கு வயது 28. இவர் அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தீபிகாவிற்கு வெங்கடேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.
    மாயமான ஆசிரியை:
    இந்த நிலையில், கடந்த 20ம் தேதி தீபிகா வழக்கம்போல பள்ளிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். வேலைக்குச் சென்ற தீபிகா அன்று இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனுக்கு அழைத்துபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தீபிகா குடும்பத்தினர் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
    இதையடுத்து, காவல்துறையினர் அவரது செல்போன் சிக்னல் கடைசியாக காட்டிய இடம் ஆகிய தடயங்களை வைத்து விசாரணை நடத்தினர். அவரை கடைசியாக அங்கிருந்த கோயில் அருகே சிலர் பார்த்துள்ளனர். அதன்பின்பு, அவரை யாரும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு கடைசியாக தீபிகா வசிக்கும் கிராமத்தில் வசிக்கும் நிதின் கவுடா என்ற இளைஞர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து பேசியுள்ளார்.
    சடலமாக மீட்பு:
    இந்த நிலையில், தீபிகாவின் ஸ்கூட்டர் மேலுகோட்டேவில் உள்ள பூட்ஹில்ஸ்  மலைப்பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது, அங்கே எரிந்த நிலையில் சடலம் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த சடலம் மாயமான ஆசிரியை தீபிகாவின் சடலம் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
    தீபிகாவை முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்து பின்னர் உடலை எரித்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபிகாவுடன் கடைசியாக செல்போனில் பேசிய நிதின் கவுடா தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீபிகாவை நிதின் கவுடாதான் கொலை செய்தாரா? தீபிகாவின் மரணத்திற்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆசிரியை தீபிகாவை பாலியல் வன்கொடுமை செய்தே கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரும் அதிர்ச்சி:
    மேலும், கொலை செய்யப்பட்ட தீபிகா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்குச் சென்ற ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
     மேலும் படிக்க: Cyber Crime: ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம்; ரூ.1 கோடியே 26 லட்சத்தை இழந்த நபர்
    மேலும் படிக்க: Crime: உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்! ஆசையில் ஓடிய வாலிபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பணமும் அபேஸ்!

    Source link

  • Deepika Padukone Photos : கருப்பு நிற கோட் சூட்டில் அசத்தும் நடிகை தீபிகா படுகோன்..!

    Deepika Padukone Photos : கருப்பு நிற கோட் சூட்டில் அசத்தும் நடிகை தீபிகா படுகோன்..!


    Deepika Padukone Photos : கருப்பு நிற கோட் சூட்டில் அசத்தும் நடிகை தீபிகா படுகோன்..!

    Source link

  • Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” – கலங்கிய மணிச்சந்திரா!

    Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” – கலங்கிய மணிச்சந்திரா!


    <p>பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது. இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனாவும், ரன்னர் அப்பாக மணிச்சந்திராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு மணிச்சந்திரா முதன்முறையாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனக்கும் ரவீணாவுக்கும் இடையே இருந்த உறவு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளா மணிச்சந்திரா.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/726b8c776b703d36317a99239df71de01706098039035224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>&nbsp;</p>
    <p>எனக்கும் ரவீணாவுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னரே நல்ல ஒரு நட்பு இருந்தது. அவங்க பிக்பாஸ் வீட்டுக்கு வராங்க என்ற விஷயம் எனக்கு கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது. அப்போ எனக்கு ரொம்ப யோசனையாவே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போகலாமா இல்லை வேணாமா? போனா எங்க இரண்டு பேராலும் சகஜமா விளையாட முடியுமா? இப்படி பல கேள்விகள் இருந்தது. சரி என்ன ஆகிவிடப் போகுது என என் மேல நம்பிக்கை இருந்ததால தான் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனேன்.&nbsp;</p>
    <p>பிக்பாஸ் வீட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பைத் தாண்டிய ஒரு உறவு இருந்தது உண்மை தான். அதற்காக நான் அவங்க விளையாட்டை தடுத்தேன் என்பது எல்லாம் உண்மையில்லை. பலரும் &ldquo;நான் சேஃப் கேம் ஆடுறேன், ரவீணாவை வைத்து தான் விளையாடுறேன்&rdquo; இப்படி பல குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். ஆனால் எனக்கு தெரியும் நான் யார் என்பது, அது எனக்கு போதும்.&nbsp;</p>
    <p>ரவீணா அம்மா வீட்டுக்கு வந்த போது நான் கொடுத்த ரியாக்ஷன் என்னையும் அறியாமல் வந்தது தான். சரி ஸ்டோர் ரூமுக்கு வரச்சொன்னதும் அவங்க சேஃப் பண்ண தான் அப்படி சொல்றாங்க என நினச்சேன். ஆனால் அங்க ரவீணா அம்மா இருப்பாங்க என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அது இருக்க தானே செய்யும்! ஏன்னா முதல் நாள் தான் ரவீணா சொந்தகாரங்க ஒருத்தங்க வந்து பயங்கரமா என்னை ஆட்டி வச்சுட்டு போனாங்க. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலேயே அதுதான் பயங்கரமான பரபரப்பு ஏற்படுத்திய ஒரு எபிசோடாக இருந்து இருக்கும் என நினைக்கிறன்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/ddd078022aeb084c9e94494fd45e0e5e1706098168134224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>&nbsp;</p>
    <p>ரவீணா நிக்சனிடம் பேசியது பற்றி பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவங்க ஏன் அப்படி சொல்லணும் என புரியவேயில்லை. அப்படி அவங்க நினச்சு இருந்தா அதை என்கிட்டேயே சொல்லி இருக்கலாம். அது ரொம்ப வருத்தமா இருந்துது.&nbsp;</p>
    <p>நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு ரவீணா உடன் சரியாக பேச முடியவில்லை. அவர் தன்னுடைய குடும்பத்துடனும் ஜோடி நிகழ்ச்சியிலும் பிஸியாக இருக்கிறார். நானும் வேறு சில வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். அதனால் எங்களால் சந்தித்து சரியாக பேச முடியவில்லை&rdquo; எனப் பேசியுள்ளார்.</p>
    <p>மணி நிறைய விஷயங்களை தன்னிடமிருந்து&nbsp;மறைத்துவிட்டதாக நிக்சனிடம் கூறியிருந்தார் ரவீணா. ஏற்கெனவே அவருக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்தார் என்றும், அதைப் பற்றி அவர் சொல்லவில்லை என்றும் ரவீணா பேசி உள்ளார். மேலும் மணியால் தான், தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சரியாக விளையாட முடியாமல் போனது என்றும் நிக்சனிடம் பேசி உள்ளார் ரவீணா என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Edappadi Palanisamy: | Edappadi Palanisamy:

    Edappadi Palanisamy: | Edappadi Palanisamy:

    Edappadi Palanisamy: அயோத்தி கோயில் திறப்பு விழாவை புறக்கணித்த நிலையில், தற்போது அது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார். 
    “கோயில் கட்டினால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்”
    சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் கோயில்கள் கட்டப்பட்டு தான் வருகிறது. சேலத்திலும் ஏகப்பட்ட கோயில்கள் கட்டப்பட்டு தான் வருகிறது.  அப்படி ஒவ்வொரு கோயிலும் கட்டி மக்கள் ஆதரிப்பார்கள் என்றால், அனைவரும் கோயில் கட்டும் வேலைக்கு தான் செல்ல வேண்டும்.  ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவரவர்களுக்கு விருப்பப்பட்ட கோயில், ஆலயங்கள், மசூதிகளை கட்டி வருகிறார்கள்.
    ஆலயம், கோயிலை கட்டினால் அவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது. கோயில் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. இந்தியா நாடு என்பது பல்வேறு மதங்களை கொண்ட அமைப்பு.  அவரவர்களுக்கு பிரியப்பட்ட கடவுளை வணங்குகின்றனர். 
    இதனால், ஒரு கோயில் கட்டினால் மக்கள் அவர்களுக்கே (பிரதமர் மோடி) வாக்களிப்பார்கள் என்று நினைப்பது தவறானது. முதல்வராக தான் இருந்தபோது ஏராளமான கோயில்களை கட்டியுள்ளேன். அதன் அடிப்படையில் பார்த்தால் தனக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில்தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் நிதிகள் வழங்கப்பட்டது. அனைத்து மதங்களுக்கும் சமமாக செயல்பட்டோம்” என்றார். 
    “அதிமுக சரியான வழியில் கூட்டணி அமைக்கும்”
    மேலும், “அதிமுக ஆட்சியில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசரப்பட்டு திறந்து விட்டனர். முழுமையான பணிகள் முடிந்த பின்னரே திருத்திருக்க வேண்டும். அவசரத்தில் திறந்ததால்தான் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    முழுமையாக கவனம் செலுத்தி செயல்படவில்லை.  கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும்.  அதிமுக சரியான வழியில் கூட்டணி அமைக்கும். நாளை அதிமுக தலைமை அறிவித்த குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்குகின்றனர்”  என்றார். 
    தொடர்ந்து பேசிய அவர், “வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட 26 கட்சிகள் கொண்ட கூட்டணி இந்தியா கூட்டணி. அந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது கடினம். மேற்குவங்க முதல்வர் மம்தா கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வந்துள்ளது.
    இன்னும் யார் யாரெல்லாம் வெளியே போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை திமுக இளைஞரணி மாநாட்டில் தெரிவித்து விட்டனர். சீட்டு ஆடுவது, மது அருந்துவது, தூங்குவது, இது போன்ற மாநாட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்” என்றார் எடப்பாடி பழனிசாமி. 

    மேலும் படிக்க
    Thaipoosam 2024: தைப்பூசத்தில் எதிரிகளை வெல்ல வேண்டுமா? 12 ராசிக்காரர்களும் முருகனை எப்படி வழிபட வேண்டும்?

    Source link

  • Girl Child Change-makers Who Make Our Nation And Society Better Pm Modi On National Girl Child Day | PM Modi: பெண் குழந்தைகள் இந்த சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்

    Girl Child Change-makers Who Make Our Nation And Society Better Pm Modi On National Girl Child Day | PM Modi: பெண் குழந்தைகள் இந்த சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்

    நம் சமுதாயத்தை நல்ல முறையில் மாற்றத்தை கொண்டு வர பெண் குழந்தைகள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என பிரதமர் மோடி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக சமூகத்தில் அவர்களின் நிலையை மேம்படுத்துவதும் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

    On National Girl Child Day, we salute the indomitable spirit and accomplishments of the Girl Child. We also recognise the rich potential of every girl child in all sectors. They are change-makers who make our nation and society better. Over the last decade, our government has…
    — Narendra Modi (@narendramodi) January 24, 2024

    பிரதமர் நரேந்திர மோடி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பெண் குழந்தைகள் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என்று பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த அரசாங்கம் பெண் குழந்தைகள் கல்வி பயின்று வளர்ச்சியடைந்து சாதனைகள் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 
    இது தொடர்பான அவரது எக்ஸ் பக்க பதிவில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தையின் அசைக்க முடியாத மனப்பான்மை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறனையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நம் நாட்டையும் சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு பெண் குழந்தையும் கற்கவும், வளரவும், செழிக்கவும் வாய்ப்புள்ள ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நமது அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். பெண்குழந்தை பாலின விகிதத்தை அதிகரிக்கவும், பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மோடி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தனது முதன்மைத் திட்டமான ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ அறிமுகப்படுத்தியது

    Source link

  • நீடிக்கும் பிரச்சினை; அச்சத்தில் தமிழக மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    நீடிக்கும் பிரச்சினை; அச்சத்தில் தமிழக மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இந்தியா</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;"> – </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இலங்கை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நாடுகளுக்கு இடையேயான</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கூட்டு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">குழுவின்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மூலம்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பிரச்சினையைத்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தீர்ப்பதற்கும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இலங்கைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கடற்படையினரால்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கைது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">செய்யப்பட்டுள்ள</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்களையும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அவர்களது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீன்பிடிப்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">படகுகளையும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">விடுவித்திடவும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">விரைந்து</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மேற்கொள்ள</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வலியுறுத்தி,</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மத்திய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வெளியுறவுத்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">துறை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அமைச்சர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">டாக்டர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">எஸ்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;. </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">ஜெய்சங்கருக்கு</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தமிழ்நாடு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">முதலமைச்சர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">ஸ்டாலின்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கடிதம்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">எழுதியுள்ளார். </span></p>
    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இதுதொடர்பாகத் தமிழக அரசு தெரிவித்து உள்ளதாவது:</span></p>
    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தமிழ்நாட்டைச்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சேர்ந்த</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;"> 6 </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்கள்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இலங்கைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கடற்படையினரால்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; 22-1-2024 </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அன்று</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கைது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">செய்யப்பட்டுள்ள</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நிலையில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அவர்களையும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அவர்களது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீன்பிடிப்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">படகுகளையும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">விடுவிக்க</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உரிய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தூதரக</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கைகளை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மேற்கொள்ள</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வலியுறுத்தி தமிழ்நாடு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">முதலமைச்சர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மு</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">.</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">க</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">. </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">ஸ்டாலின்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மத்திய வெளியுறவுத்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">துறை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அமைச்சர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">டாக்டர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">எஸ்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;. </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">ஜெய்சங்கருக்கு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இன்று</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;"> (24-1-2024) </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கடிதம்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">எழுதியுள்ளார்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;.</span></p>
    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அக்கடிதத்தில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இராமநாதபுரம்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மாவட்டத்தைச்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சேர்ந்த</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">ஆறு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்கள்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; IND &ndash; TN &ndash; MM &ndash; 769, IND &ndash; TN &ndash; MM &ndash; 750 </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">என்ற பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">படகுகளுடன்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீன்பிடிக்கச்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சென்றிருந்த</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நிலையில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, 22-1-2024 </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அன்று</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இலங்கை கடற்படையினரால்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கைது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">செய்யப்பட்டுள்ளதாகக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">குறிப்பிட்டுள்ளார்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;.</span></p>
    <p style="background: white;"><strong><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கைது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">செய்யப்படுவது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கவலையளிக்கிறது</span></strong></p>
    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சமீப</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">காலமாக</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தமிழ்நாடு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்கள்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தொடர்ந்து</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இதுபோன்று</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இலங்கைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கடற்படையினரால்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கைது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">செய்யப்படுவது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கவலையளிப்பதாக</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உள்ளது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">என்றும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இத்தகைய போக்கு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பதட்டமான</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சூழ்நிலையை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உருவாக்கும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">என்பதால்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இதில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">ஒன்றிய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அரசு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உடனடி கவனம்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">செலுத்த</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வேண்டிய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அவசியம்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">ஏற்பட்டுள்ளதாகவும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">முதலமைச்சர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தனது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கடிதத்தில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">குறிப்பிட்டுள்ளார்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;.</span></p>
    <p style="background: white;"><strong><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">அச்சத்தில் தமிழக மீனவர்கள்</span></strong></p>
    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இத்தகைய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தொடர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கைது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கைகள்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தமிழ்ச்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சமூகத்தின்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பாரம்பரிய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீன்பிடி</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உரிமைகளைப்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பறிப்பதோடு</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவ</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மக்களிடையே அச்சத்தையும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நிச்சயமற்ற</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சூழலையும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உருவாக்கியுள்ளதாகவும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தமிழ்நாட்டைச்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சேர்ந்த மீனவச்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சமூகங்களின்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கலாச்சார</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மற்றும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பொருளாதாரக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கட்டமைப்பை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அச்சுறுத்தும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வகையில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உள்ளதாகவும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">முதலமைச்சர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மேலும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">குறிப்பிட்டுள்ளார்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;.</span></p>
    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இந்தப்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பிரச்சினைக்குத்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தீர்வு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">காண</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உரிய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தூதரக</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வழிமுறைகளைப்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பின்பற்றி</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தேவையான</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கைகளை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">எடுக்க</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வேண்டும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">என்று</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கேட்டுக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கொண்டுள்ள</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">முதலமைச்சர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்கள்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தொடர்பான</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பிரச்சினைகளுக்குத்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தீர்வு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">காண</span></p>
    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இந்தியா</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;"> -</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இலங்கை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நாடுகளுக்கிடையேயான</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கூட்டு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">குழுவினை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அமைப்பதன்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மூலம்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">சாத்தியமாகும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">என்றும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தெரிவித்துள்ளார்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;.</span></p>
    <p style="background: white;"><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அப்பாவி</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்கள்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தொடர்ந்து</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இதுபோன்று</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கைது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">செய்யப்படுவதைத்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தவிர்க்கவும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இந்திய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்களுக்கும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இலங்கைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கடற்படையினருக்கும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இடையே</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நீண்ட காலமாக</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நிலுவையில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உள்ள</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">பிரச்சினைகளைத்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தீர்ப்பதற்கு ஏதுவாகவும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உரிய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தூதரக</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வழிமுறைகளை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மேற்கொண்டு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கூட்டு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">குழுவினை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கூட்டுவதற்கு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உரிய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">எடுக்க வேண்டும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">என்று</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மத்திய</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வெளியுறவுத்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">துறை</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அமைச்சரைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கேட்டுக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கொண்டுள்ள</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தமிழ்நாடு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">முதலமைச்சர்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">இலங்கைக்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">காவலில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">உள்ள</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தமிழ்நாடு</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">மீனவர்களையும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;, </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">அவர்களது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">படகுகளையும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">விரைந்து</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">விடுவித்திட</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">தனது</span> <span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">கடிதத்தில்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj; </span><span style="font-size: 13.5pt; font-family: ‘Nirmala UI’,sans-serif; color: #2e2e2e;">வலியுறுத்தியுள்ளார்</span><span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color: #2e2e2e;">&zwnj;.</span></p>

    Source link

  • KULANTHAI C/O KAVUNDAMPALAYAM:  சர்ச்சையை கிளப்பிய டீசர்! என்ன சொல்ல வருகிறார் ரஞ்சித்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

    KULANTHAI C/O KAVUNDAMPALAYAM: சர்ச்சையை கிளப்பிய டீசர்! என்ன சொல்ல வருகிறார் ரஞ்சித்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!


    <p>தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படங்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசு பல நல்லதிட்டங்களை நடைமுறைப்படுத்தவும் காரணமாக இருந்துள்ளது. குறிப்பாக சூர்யா, மணிகண்டன் நடிப்பில் வெளியான &ldquo;ஜெய் பீம்&rdquo; திரைப்படம், பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் அவர்களுக்கு அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட அநீதிகளையும் எடுத்துரைக்கும் விதமாக வெளிவந்தது. இது உண்மைக் நிகழ்வை மையப்படுத்திய படமாக இருந்தாலும், இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம் ஆட்சியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவும் பல்வேறு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.&nbsp;</p>
    <p>திரைப்படங்களினால் பல்வேறு சமூக மாற்றங்கள் நடந்துவரும் இந்த நவீன உலகில் மிகவும் பிற்போக்குத்தனமான திரைப்படங்களும் வெளிவருவதை பார்க்கத்தான் முடிகின்றது. அந்த வரிசையில் இடம்பிடிக்க தயாராக உள்ள குழந்தை <span class="style-scope yt-formatted-string" dir="auto">C/O கவுண்டம்பாளையம். இந்த படத்தினை இயக்கி நடித்துள்ளார் நடிகர் ரஞ்சித். இந்த படத்தின் டீசர் கடந்த 16ஆம் தேதி அதாவது மாட்டுப்<a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> தினத்தன்று வெளியாகி உள்ளது. மொத்தம் 30 நொடிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரில் இடம் பெற்றுள்ள வசனங்கள், &ldquo;நாமெல்லாம் மாட்டுக்கறி திங்கறவங்கடா. ஒருமுறை ருசி கண்டுட்டா நம்ம காலடியிலேயே கெடப்பாளுக, நானு ஓசிக மாநிலத் தலைவர், காதலிக்கும்போது சாதி தேவையில்லை, ரிஜிஸ்ட்டர் ஆஃபீஸ் போகும்போது தேவையில்லை. ஏன் பெத்த அப்பா அம்மாவே தேவையில்ல.. சமத்துவம்&rdquo; இந்த வசனங்கள்தான்.&nbsp;</span></p>
    <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/tGXNaV10XOY?si=qBaDIVuKc5h57WAN" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
    <p><span class="style-scope yt-formatted-string" dir="auto">இந்த வசனங்கள் மூலம் இந்த படத்தின் இயக்குநரும் நடிகருமான ரஞ்சித் கூற வருவதை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவரே இந்தபடத்தின் கதை என்பது &rdquo; நாடகக்காதல்&rdquo; எனக் கூறியுள்ளார். நாடகக் காதல் என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக்கொண்டு அவர் பேசியுள்ளது முழுக்க முழுக்க விஷமத்தனமான கருத்துக்களைக் கக்கியுள்ளார் என்றே மக்களால் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் காதலித்தவர்கள் தாங்களாகவே பிரிவதை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்று இன்றுவரை பாராட்டைப் பெற்றுள்ள படங்கள் உள்ளன. உதாரணத்திற்கு நாடோடிகள், ஆதலால் காதல் செய்வீர் போன்றவை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சி செய்யும் போக்குகளின் ஒருபகுதியாகத்தான் இந்த படத்தின் டீசர் அமைந்துள்ளது.&nbsp;</span></p>
    <p><span class="style-scope yt-formatted-string" dir="auto">இந்த படத்தின் டீசரில் மாட்டுக்கறி, ஓசிக போன்ற வார்த்தைகள் பட்டியலின சமூகத்தையும், தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கட்சியையும் அந்தக் கட்சியின் தலைவரையும் குறிவைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். விமர்சகர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் படத்தின் இயக்குநர் ரஞ்சித் இந்த படம் ஒரு உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது எனக் கூறி, நேரடியாகவே அந்த சமூகத்தின் பெயரையும் அந்த கட்சியின் பெயரையும் கட்சியின் தலைவரின் பெயரையும் குறிப்பிடலாமே? ஆனால் படத்தின் டீசர் தொடங்கும்போது இது உண்மை சம்பவங்ங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என குறிப்பிடவில்லை. இதன் மூலம் தெரியவருவது, நடிகர் ரஞ்சித் இயக்குநர் அவதாரம் எடுக்க ஒரு சமூக மக்களையும் ஒரு அரசியல் கட்சியையும் அதன் தலைவரையும் வேண்டுமென்றே இட்டுக்கட்டி குளிர்காய நினைக்கின்றார் என்றே தெரிகிறது.&nbsp;</span></p>
    <p><span class="style-scope yt-formatted-string" dir="auto">மேலும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ள முதல் வசனமான நாமெல்லாம் மாட்டுக்கறி திங்கறவங்கடா. ஒருமுறை ருசி கண்டுட்டா நம்ம காலடியிலேயே கெடுப்பாளுக எனும் வசனத்தின் மூலம் பெண்களையே தரக்குறைவாக சித்தரித்துள்ளது அம்பலமாகின்றது. அதாவது அந்த வசனம் மாட்டுக்கறி சாப்பிடும் ஒருவருடன் உடலறவு கொள்ளும் பெண் உடலுறவுக்காகவே அந்த நபரை நாடியிருப்பார் என பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பீப் பாடலுக்கு கொதித்தெழுந்த மாதர் சங்கங்கள் இந்த டீசரைக் கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழாமல் இல்லை.&nbsp;</span></p>
    <p><span class="style-scope yt-formatted-string" dir="auto">உள்ளதைச் சொல்கின்றேன்,&nbsp; என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நடந்ததை படமாக்கியுள்ளேன் எனக் கூறி நடிகர் ரஞ்சித் செய்ய முயல்வது இருநபர்களுக்கு இடையே நடந்ததை ஒட்டுமொத்தமாக இரண்டு சமூகங்களை எதிரெதிர் துருவங்களில் நிறுத்தி அவர்களை எதிரிகளாக மாற்ற முயல்வது அப்பட்டமாகத் தெரிகின்றது.&nbsp; ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் காதலர்கள் பிரிவை கதைக்களமாகக் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதைவிடுத்து நடிகர் ரஞ்சித் தேர்ந்தெடுத்துள்ள திரைக்கதை அவரின் காழ்புணர்ச்சியினை தோலுரித்துக் காட்டுகின்றது.&nbsp;</span></p>
    <p><span class="style-scope yt-formatted-string" dir="auto">இப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மாநில தலைநகர் தொடங்கி மாவட்டத் தலைநகர் வரை ஹேப்பி ஸ்டீரீட்ஸ் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் இவரை பூமர் என கமெண்ட் செக்ஸனில் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</span></p>

    Source link

  • Salem News PMK MLA Apologized For Falling On The Feet Of Students At The Free Bicycle Distribution Event – TNN | மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ

    Salem News PMK MLA Apologized For Falling On The Feet Of Students At The Free Bicycle Distribution Event – TNN | மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ

    சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டி பகுதியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இன்று பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக யாரும் அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் சிலர் பள்ளியில் இலவச சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு தங்களை அழைக்கவில்லை என பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து பாமக எம்எல்ஏக்கு பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அப்போது திமுக நிர்வாகிக்கும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகி இணைந்து மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்க முடிவெடுத்தனர். அதன்படி பாகல்பட்டி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. 

    தொடர்ந்து, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மாணவர்கள் இடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, மாணவர்கள் சைக்கிளை இயக்கும் போது கவனமாக இயக்க வேண்டும். சைக்கிள் ஓட்டும்போது 360 டிகிரியில் கவனத்தோடு சைக்கிளை இயக்க வேண்டும். இன்று சைக்கிள் ஓட்டும் நீங்கள் நாளை விமானம் ஓட்டும் அளவிற்கு வளர்வீர்கள். அப்போதும் உங்களது கவனத்தை சிதற விடாமல் கவனித்து இயக்க வேண்டும் என்று மாணவர்களிடையே கூறினார். 
    பின்னர், பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், திமுக நிர்வாகியின் செயலுக்காக மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவர்கள் இதைப் பற்றி நினைக்காமல் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மாணவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

    Source link

  • Wangal Railway Station Is Permanently Closed Due To Lack Of Passenger Reception At Karur – TNN | நிரந்தரமாக மூடப்படும் வாங்கல் ரயில் நிலையம்

    Wangal Railway Station Is Permanently Closed Due To Lack Of Passenger Reception At Karur – TNN | நிரந்தரமாக மூடப்படும் வாங்கல் ரயில் நிலையம்

    கரூரில் பயணிகள் வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம்  நிரந்தரமாக மூடப்படுகிறது.
     
     
     

     
    கரூர்-சேலம் ரயில்வழி தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே நிலையம் மூடப்படுகிறது. இனி அந்த ஸ்டேஷனில் ரயில்கள் ஏதும் நிற்காது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டபோது மோகனூருக்கும், கரூருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 
     

     
     
    இந்த ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து, பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் நின்று, சென்று வந்தது. ஆனால், அப்பகுதி மக்களிடையே வாங்கல் ஸ்டேசன் பயன்பாடு பெரிய அளவில் இல்லை. சில நாட்கள் மட்டும் ஒருசில பயணிகள் ஸ்டேஷனுக்கு வந்து, ரயிலில் ஏறி சென்று வந்தனர். அதனால், வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை மூடுவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வந்தது.
     

     
    இதன் அடிப்படையில் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை  மூடுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம்  அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் இனிமேல் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் சேலம்-கரூர் ரயில் நின்று செல்லாது. அதேபோல், பயணிகளுக்கான எந்த சேவையும் அங்கிருக்காது. சேலம்-கரூர் ரயில், மோகனூருக்கு அடுத்து கரூரில் தான் நிற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 2013ல் திறக்கப்பட்ட வாங்கல் ரயில் நிலையம் 11-வது ஆண்டில் நிரந்தரமாக மூடப்பட்டது.
     
     
     
     

    Source link

  • 29வது மாடியில் இருந்து குதித்து 7ம் வகுப்பு மாணவி தற்கொலை! மன உளைச்சல் காரணமா?

    29வது மாடியில் இருந்து குதித்து 7ம் வகுப்பு மாணவி தற்கொலை! மன உளைச்சல் காரணமா?


    <p>கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர். இங்கு அமைந்துள்ளது ஹூலிமவு பகுதி. இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியர் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் வசித்து வந்தார். தென்கிழக்கு பெங்களூரில் வசித்து வந்த இந்த சாப்ட்வேர் எஞ்சனியர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.</p>
    <h2><strong>7ம் வகுப்பு மாணவி:</strong></h2>
    <p>வீட்டில் இருந்தபடியே பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறார். இவரது மனைவி வீட்டில் உள்ளார். அவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர்களது மகள் மிகவும் விரைவாக எழுந்துள்ளார். &nbsp;அப்போது, அந்த சிறுமி அவரது அறைக்கு வெளியே இருந்துள்ளார்.</p>
    <p>அதைக்கண்ட அவரது தாய் ஏன் இவ்வளவு விரைவாக எழுந்துவிட்டாய் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மழுப்பலான பதிலை கூறியுள்ளார். பின்னர், அந்த சிறுமி தனது அறைக்கு சென்றுவிட்டார். இந்த சூழலில், காலை 5 மணியளவில் மிகப்பெரிய சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அதைக்கேட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர் சென்று பார்த்துள்ளார்.</p>
    <h2><strong>29வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை:</strong></h2>
    <p>அப்போது, அந்த சிறுமி ரத்தவெள்ளத்தில் தரையில் கிடந்துள்ளார். உடனடியாக அந்த காவலர் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் தங்களது மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சிறுமியை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். ஆனாலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
    <p>இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி சமீப நாட்களாகவே மன உளைச்சலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, சிறுமி தாங்கள் வசிக்கும் 29வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>
    <p>சிறுமியின் மன உளைச்சலுக்கு என்ன காரணம்? இது தற்கொலை தானா? சிறுமி கால் தவறி விழுந்துவிட்டாரா? அல்லது கொலையா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 7ம் வகுப்பு பயிலும் 12 வயது சிறுமி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.</p>
    <p>சமீபகாலமாக மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பதின்ம வயது குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது ஆரோக்கியமற்ற போக்காகும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவதே இதற்கு சிறந்த தீர்வு என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.</p>
    <p><strong>வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.</strong></p>
    <p><strong>மாநில உதவி மையம் :104</strong></p>
    <p><strong>சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,</strong></p>
    <p><strong>எண்; 11, பார்க் வியூவ் சாலை,</strong></p>
    <p><strong>ஆர்.ஏ. புரம், சென்னை – 600 028. தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)</strong></p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • India Vs England 1st Test Match Preview | India Vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன?

    India Vs England 1st Test Match Preview | India Vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன?

     
    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
    இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
     
    IND vs ENG நேருக்கு நேர்:
    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இந்திய அணி 31 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதேநேரம், இங்கிலாந்து அணி 50 போட்டிகள் வெற்றி பெற்றிருக்கிறது. 50 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. முதன் முதலில் இரு அணிகளும் விளையாடிய போட்டி கடந்த 1932 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல்,கடைசியாக இரு அணிகளும் சேர்ந்து விளையாடிய போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்றது.
     
    IND vs ENG, 1வது டெஸ்ட் ஒளிபரப்பு விவரங்கள்:
    தேதி: ஜனவரி 25 முதல் ஜனவரி 29 வரை.
    நேரடி ஒளிபரப்பு: ஜியோ சினிமா மற்றும் Sports18
     
    ஆடும் லெவன் வீரர்கள்:
    விராட் கோலிக்கு பதிலாக  ரஜத் படிதார் இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்திய அணி:
    ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா,கே.எஸ்.பரத், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது  ரஜத் படிதார்.
    இங்கிலாந்து அணி:
    ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லீ, மார்க் வுட், ஜேக் லீச்
    மேலும் படிக்க: BCCI Awards 2024: இரண்டு விருதுகளை தட்டிச்சென்ற அஸ்வின்.. விருது பெற்றவர்களின் முழு விவரம் உள்ளே..
     
    மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்- ராகுல் ட்ராவிட்!
     

    Source link

  • காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

    காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!


    <div dir="auto"><span style="color: #007319;"><strong>காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட விளகொடி கோவில் தோப்பு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர்&nbsp; கோயில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது</strong></span></div>
    <div dir="auto">&nbsp;</div>
    <h2 dir="auto"><span style="color: #007319;"><strong><span style="color: #000000;">ஸ்ரீ செல்வ விநாயகர்&nbsp; கோயில்</span> </strong></span></h2>
    <div dir="auto">காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளகொடி கோயில் தோப்பு தெரு உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் சிதலமடைந்து இருந்த நிலையில் கோயில் நிர்வாகி சார்பில் கோவில் புரணைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.&nbsp; இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/6e8779023ba24fbc4a4865f47409624f1706090180858113_original.jpg" alt="ஸ்ரீ செல்வ விநாயகர்&nbsp; கோயில்" />
    <figcaption>ஸ்ரீ செல்வ விநாயகர்&nbsp; கோயில்</figcaption>
    </figure>
    <p>&nbsp;</p>
    <div dir="auto" style="text-align: justify;">கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் அருகாமையில் உள்ள வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம், விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று. இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது. அதன்பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு&nbsp; பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது&nbsp; வெகு விமரிசையாக நடைபெற்றது.&nbsp;</div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><strong>புனித நீர் ஊற்றப்பட்டது</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">அதன்பின் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண மேலும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/750e872016f8f8e9736672fbeafc19b31706090256991113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto"><strong>கும்பாபிஷேகம் என்றால் என்ன ?</strong></div>
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto">கும்பாபிஷேகம் (அ) குடமுழுக்கு விழா ( அ ) நன்னீராட்டு பெருவிழா, ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12&nbsp; ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கோவில் கருவறையில் உள்ள கடவுள்களுக்கு சக்தி புதுவிக்கப்படுவதாகவும், தெய்வத்தன்மை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடத்தில் பல்வேறு நீர் நிலைகளில் கொண்டுவரப்பட்ட நீரை நிரப்பி பல்வேறு மூலிகைகள் ஆன்மீகச் சார்ந்த பொருட்கள் கலக்கப்பட்டு, சில நாட்கள் மாபெரும் யாகம் வளர்க்கப்படும்.</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/87634505cdb510c8bab7de8d9d0f425f1706090290287113_original.jpg" /></div>
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto">எவ்வாறு வளர்க்கப்படும் யாகசாலையில், பல்வேறு ஆன்மீகப் பொருட்கள் மூலம் வேள்வி வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உற்சவிக்கப்படும். இவ்வாறு கூறப்படும் மந்திரத்தால் புனித நீர் சக்தி பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த புனித நீரை கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது, குறிப்பிட்ட நன்னாளில் ஊற்றும் பொழுது அந்த கலசங்கள் சக்தி பெற்று, அதன் மூலம் கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகத்தை வருடத்திற்கு மூன்று முறை நேரில் கண்டால் ஒரு கோவில் கட்டியதற்கு சமம் என நம்பப்படுகிறது. இந்த பொண் மக்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, பாவங்கள் நீங்கி மனது நிம்மதி அடையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.</div>
    </div>
    <div class="yj6qo" style="text-align: justify;">&nbsp;</div>
    <div class="adL" dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>

    Source link

  • Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!

    Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!


    Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!

    Source link

  • Puducherry Graduate Teacher Recruitment 300 Post Application Opens From Today- TNN | Graduate Teacher Recruitment: அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    Puducherry Graduate Teacher Recruitment 300 Post Application Opens From Today- TNN | Graduate Teacher Recruitment: அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    புதுச்சேரி: அரசு பள்ளிகளில் காலியாக 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
    புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் 67 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்து குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பதவியான 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ள பள்ளி கல்வித் துறை விண்ணப்பம் வரவேற்றுள்ளது.
    விண்ணப்பம் :
    23 ம்தேதி காலை 10 மணி முதல் அடுத்த மாதம் 22 ம்தேதி மாலை 5.45 மணி வரை https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்த பிறகு அதனை பதிவிறக்கம்  செய்து, இயக்குனர், பள்ளி கல்வித்துறை, பெருந்தலைவர் காமராஜர் வளாகம், 100 அடி ரோடு, அண்ணா நகர், புதுச்சேரி-605005. என்ற முகவரிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு என குறிப்பிட்டு, பிப்ரவரி 29ம் தேதி மாலை 5 மணிக்கு அனுப்ப வேண்டும்.
    பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா அல்லது மத்திய அரசின் டெட் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது,இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் 90 சதவீத மதிப்பெண்,ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினர் 82 சதவீதம், எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மாற்றுதிறனாளிகள் 75 சதவீதம் மதிப்பெண் டெட் தேர்வுகளில் எடுத்து இருக்க வேண்டும்.
    வயது தளர்வு
    பயற்சி பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 12.02.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்று திறனாளிகளுக்கு 45 வயது வரையிலும், எஸ்.சி., பிரிவு மாற்றுதிறனாளிகளுக்கு 50 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 300 பயற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் பிராந்திய ரீதியாக புதுச்சேரி, காரைக்கால் 286, மாஹே 12, ஏனாம் 2 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன.
    புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்திற்கான மொத்தமுள்ள 286 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பொது 128, எம்.பி.சி 49, எஸ்.சி 44, ஓ.பி.சி 29, இ.டபுள்யூ.எஸ் 26, மீனவர் 5, முஸ்லீம் 5 இட ஒதுக்கீடு அடிப்படையில் செய்யப்பட உள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடாக 11 இடங்கள் உள்ளன. பாடரீதியாக ஆங்கிலம்-52, கணிதம்-58, லைப் சயின்ஸ்-35, இயற்பியல் அறிவியல்-46, சமூக அறிவியல்-94, பிரெஞ்சு-1 என்ற அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாகி பிராந்தியத்திற்கு கணிதம்-4, சமூக அறிவியல்-7, பிரெஞ்சு-1 என்ற அடிப்படையிலும், ஏனாமில் கணிதம்-1, சமூக அறிவியல்-1 என்ற அடிப்படையிலும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு 0413-2207369 என்ற எண்ணை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தொடர்பு கொள்ளவும்.

    Source link

  • //தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

    //தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உடற்பயிற்சி சிகிச்சை மையம் ( பிஸியோதெரபி கிளினிக்) தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்பட்டு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) அமைத்தும் தொழில்முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
    மேலும் படிக்க ;TNHRCE Recruitment: சென்னையிலுள்ள கோயிலில் வேலைவாய்ப்பு; ரூ.58,000 சம்பளம் – விண்ணப்பிப்பது எப்படி?

     
    இதற்கான உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். உடற்பயிற்சி சிகிச்சை (பிஸியோதெரபி) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது எதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் தகுதியுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன்  www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் உடற்பயிற்சி சிகிச்சை (பிஸியோதெரபி) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தொழிலுக்கு ரூ 6 இலட்சம் திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 அல்லது அதிகபட்சம் ரூ 2.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 முதல் 10 சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    மேலும் படிக்க ;Southern Railway: தெற்கு ரயில்வேயில் வேலை; 10,12-வது, ஐ.டி.ஐ. தேர்ச்சி போதும் – விண்ணப்பிப்பது எப்படி?

    Source link