Month: February 2024

  • Thai amavasai 2024: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த மேல்மலையானூர் அங்காளம்மன்

    Thai amavasai 2024: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த மேல்மலையானூர் அங்காளம்மன்


    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையானூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோவிலாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் <strong>ராஜராஜேஸ்வரி</strong> அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.</p>
    <p style="text-align: justify;">அமாவாசை தினம் என்பதால் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடப்படும். தை அமாவாசை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
    <p style="text-align: justify;"><strong>தை அமாவாசை – சிறப்பு பேருந்து&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">தை அமாவாசையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பஸ்களும், வேலூரில் இருந்து 15 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து 20 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 20 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து 20 பஸ்களும், திருக்கோவிலூரில் இருந்து 10 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து 5 பஸ்களும், ஆரணி, ஆற்காடு, திருப் பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 10 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.</p>
    <p style="text-align: justify;">மேலும் 11-ந் தேதியன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 10, 11-ந் தேதிகளில் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;"><strong>முன்பதிவு</strong>&nbsp;</p>
    <p style="text-align: justify;">எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p>

    Source link

  • முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிப்பு!

    முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிப்பு!

    இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. 
    பாரத ரத்னா விருது அறிவிப்பு:

    அந்த வகையில், மறைந்த பிகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மேலும் மூவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாட்டின் முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    நரசிம்ம ராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ” சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், பல்வேறு பதவிகளை வகித்து நரசிம்ம ராவ் இந்தியாவுக்கு சேவை செய்துள்ளார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்படும்.
    நரசிம்ம ராவ்:
    அவரது தொலைநோக்கு பார்வையால் தலைமை பண்பால் இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறியது. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். பிரதமராக நரசிம்ம ராவ் பதவி வகித்தபோது, இந்தியாவை உலக சந்தைகளுக்கு சிறந்துவிட்டு பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை படைத்தார். 
    மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், முக்கியமான மாற்றங்களின் மூலம் இந்தியாவை வழிநடத்தியது மட்டுமல்லாமல் அதன் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தையும் செழுமைப்படுத்திய ஒரு தலைவராக அவரது பன்முக மரபை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
     

    Delighted to share that our former Prime Minister, Shri PV Narasimha Rao Garu, will be honoured with the Bharat Ratna. As a distinguished scholar and statesman, Narasimha Rao Garu served India extensively in various capacities. He is equally remembered for the work he did as… pic.twitter.com/lihdk2BzDU
    — Narendra Modi (@narendramodi) February 9, 2024

    எம்.எஸ். சுவாமிநாதன்:
    எம்.எஸ். சுவாமிநாதன் குறித்து குறிப்பிடுகையில், “விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
    இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
    டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு பார்வை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது. அவர் எனக்கு நெருக்கமாகத் தெரிந்த ஒருவர், அவருடைய நுண்ணறிவு மற்றும் உள்ளீடுகளை நான் எப்போதும் மதிப்பேன்” என பதிவிட்டுள்ளார்.
    சரண் சிங்:
    சரண் சிங் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, “நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர்.
    உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும் சரி தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவர் எப்போதும் உத்வேகம் அளித்தார். எமர்ஜென்சிக்கு எதிராகவும் உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
     

    மேலும் காண

    Source link

  • Lal Salam: வேலூரில் லால் சலாம் கொண்டாட்டம்;  மும்மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை

    Lal Salam: வேலூரில் லால் சலாம் கொண்டாட்டம்; மும்மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை


    <p style="text-align: justify;">ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து, கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.</p>
    <h2 style="text-align: justify;"><strong>மொய்தீன் பாய் கதாபாத்திரம்</strong></h2>
    <p style="text-align: justify;">விஷ்ணு&nbsp; விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று காலை வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.</p>
    <p style="text-align: justify;">மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், படத்தில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சிறப்பாக ரஜினி பாத்திரத்துக்கு பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/749a9f14b6bc49974b898f936b03c1b81707458316496113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <h2 style="text-align: justify;"><strong>ரஜினிகாந்த் உணர்ச்சிகரம்</strong></h2>
    <p style="text-align: justify;">இதனிடையே, தன்னை முதன்முறையாக இயக்கியுள்ள தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் உணர்ச்சிகரமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். &ldquo;என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்&rdquo; எனத் தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் தன்னை ஐஸ்வர்யா வீல் சேரில் அமர்த்தி தள்ளிச் செல்லும் புகைப்படம் ஒன்றிணையும் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.</p>
    <h3 style="text-align: justify;">இந்து கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை</h3>
    <p style="text-align: justify;">தமிழ்நாட்டில் &lsquo;லால் சலாம்’ திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று முதலே ரஜினிகாந்த் ரசிகர்களால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் வேலூரில் உள்ள அலங்கார திரையரங்கத்தில் ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர். பட்டாசுகள் வெடித்து, மயிலாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேளதாளத்துடன் நடத்தி ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் இறுதியாக தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணி உள்ளிட்டவைகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர்.</p>
    <p style="text-align: justify;"><strong>மேலும் படிக்க:&nbsp;<a title="Lal Salaam: &ldquo;மொய்தீன் பாய்&rdquo; மட்டுமா..? ரஜினி இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய கேரக்டர்கள் என்னென்ன தெரியுமா?" href="https://tamil.abplive.com/entertainment/lal-salaam-movie-release-here-the-full-list-of-rajinikanth-s-islamic-characters-in-movies-166458" target="_blank" rel="dofollow noopener">Lal Salaam: &ldquo;மொய்தீன் பாய்&rdquo; மட்டுமா..? ரஜினி இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய கேரக்டர்கள் என்னென்ன தெரியுமா?</a></strong></p>
    <p style="text-align: justify;"><strong><a title="Lal Salaam Release LIVE : மொய்தீன் பாய் தரிசனம்.. முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடும் ரசிகர்கள்.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!" href="https://tamil.abplive.com/entertainment/lal-salaam-release-live-updates-rajinikanth-vishnu-vishal-aishwarya-kapil-dev-lal-salaam-review-twitter-celebs-reaction-166473" target="_blank" rel="dofollow noopener">Lal Salaam Release LIVE : மொய்தீன் பாய் தரிசனம்.. முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடும் ரசிகர்கள்.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!</a></strong></p>

    Source link

  • Actor Vijay Tamizhaga Vetri Kazhagam TVK Advisory Meeting Held in Panayur Last Night – TNN

    Actor Vijay Tamizhaga Vetri Kazhagam TVK Advisory Meeting Held in Panayur Last Night – TNN


    அரசியலில் குதித்த விஜய்:
    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான தகவல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வந்த  நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  (Tamilaga Vettri Kazhagam) வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
    வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் கொடி சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என தெரிவித்துள்ளார்.
    தமிழக வெற்றி கழகம்
    விஜய் தனது கட்சி பெயர் குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்து, தொடர்ந்து பல்வேறு விதங்களில் அவர்கள் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆதரவை தெரிவித்து மக்கள் பணியாற்றி வருகின்றனர் தொடரும் 
    ஆலோசனைக் கூட்டம்
    இந்தநிலையில் பனையூரில்  விஜயின் வலதுகரமாக அறியப்படும்  புஸ்ஸி ஆனந்த்  தலைமையில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது அறிவிக்கப்பட்டும் வருகிறது.  முன்னதாக கேரளாவிலும் கால் பதிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் கேரளாவை சேர்ந்த நிர்வாகிகள்  மத்தியிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று தொடர்ந்து மக்கள் பணி செய்யுமாறு அந்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது.
     இரவில் நடந்த ஆலோசனை கூட்டம்
    இந்த நிலையில் நேற்று இரவு  தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளா ஆலோசனை கூட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது கட்சியை மேம்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார் புஸ்ஸி ஆனந்த். முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில்,  உங்கள் பகுதி பிரச்சனைகளை முதலில் தெரிந்து மக்களிடம் சேர்ந்து அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
     அதிகாரம் யாருக்கு ?
    தற்பொழுது விஜய் மக்கள் இயக்க  அடிப்படையில்,  மாவட்ட தலைவருக்கே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கட்சியின் தலைவராக விஜய் இருக்கும் நிலையில்  இந்த நிலை நீடிக்குமா என கேள்வி எழுந்த நிலையில்,  திமுக, அதிமுக  உள்ளிட்ட   பல்வேறு கட்சிகளில் மாவட்ட செயலாளருக்கு அதிக   அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று  தமிழக வெற்றி கழகத்திலும்  மாவட்ட செயலாளருக்கு அதிக முக்கியத்துவம்,  அதிகாரமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    மேலும் காண

    Source link

  • vijay tv siragadikka aasai serial february 9th episode update | Siragadikka Aasai :வெயிட்டர் வேலை பாக்குறியா என கேட்கும் ரோகினி.. அதிர்ச்சியில் மனோஜ்

    vijay tv siragadikka aasai serial february 9th episode update | Siragadikka Aasai :வெயிட்டர் வேலை பாக்குறியா என கேட்கும் ரோகினி.. அதிர்ச்சியில் மனோஜ்


    சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
    ”சபதத்துல நீ ஜெயிச்சிட்டன்றத சொல்லிக்காட்ட தான் இப்படியெல்லாம் பண்ணனு எனக்கு தெரியும்” என்று விஜயா மீனாவிடம் சொல்கிறார். “ஏதோ கொஞ்சமா தங்கம் வாங்கிக் கொடுத்து இருக்கான், சீக்கிரமே அவன் இன்னொரு முகத்தை காட்டுவான் அப்போ உனக்குத் தெரியும். கனவு கண்டுகிட்டு இருக்காம சீக்கிரம் வேலையை முடி” என்கிறார் விஜயா. முத்து கோயிலில் தாலி கட்டியபோது எடுத்து புகைப்படத்தை எடுத்து வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டுகிறார். 
    “நீங்க என்ன ராஜா, ராணியா? உங்களுக்கு கல்யாணம் ஆன வரலாறை அப்டியே ஃபோட்டோ எடுத்து வச்சி இருக்கீங்களா?” என்று கலாய்க்கிறார் விஜயா. அதற்கு முத்து ”வீட்டை விட்டு பணத்தைத் தூக்கிட்டு ஓடுறது, திருட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டு வர்ரது, இதானே உங்களுக்கு பெரிய விஷயம்” என்கிறார் முத்து.  முத்துவின் கல்யாண போட்டோவை வீட்டு ஹாலில் மாட்ட விஜயாவிற்கு விருப்பம் இல்லை. இதனால் முத்து வீட்டு ஹாலில் பெரிய சைஸில் போட்டோ மாட்டப் போறேன்” என்று கூறி வெறுப்பேற்றுகிறார்.  
    மனோஜ் தூக்கத்தில் மசால் தோசை, இட்லி, ராவா, தோசை, ஆனியன் தோசை, கிச்சடி, பொங்கல், பூரி என உளறுகிறார். ரோகிணி அவரை எழுப்புகிறார். “நான் தூங்கல சார்” என்று அலறி எழுகிறார் மனோஜ். ஹோட்டல் வெய்யிடர் மாதிரி காத்திக்கிட்டு இருந்த என்கிறார் ரோகிணி. அதற்கு மனோஜ் “நான் வெயிட்டரா?” என்கிறார். ரோகிணி, ஆமா “நீ தான் தோசை, மசால் தோசை என்று ரிப்பீட்டடா சொல்லிக்கிட்டே இருந்த” என்கிறார். “ஏன் அப்படி சொல்லிக்கிட்டு இருக்க?” எனக் கேட்கிறார் ரோகிணி.
    மசால் தோசை சாப்பிட ஆசைப்பட்டதால் தோசை கனவில் வந்ததாக சொல்லி சமாளிக்குறார் மனோஜ். ஆனால் ரோகிணி அதை நம்பவில்லை. பின் சிரித்துக் கொண்டே “சில ஆம்பளைங்க கனவுல சினிமா ஹீரோயின் எல்லாம் வருவாங்கனு சொல்லுவாங்க, நீ என்னடானா தோசை வருதுனு சொல்ற” என சொல்கிறார். பின் இருவரும் அடித்து விளையாடுகின்றனர். இதனையடுத்து விஜயா தூங்கி கொண்டிருக்கும் அண்ணாமலையை எழுப்பி ”என்னங்க முதல்ல அங்க சிரிப்பு சத்தம் கேட்டுச்சி, அப்றம் இங்க கேட்டுச்சி, இப்போ மனோஜ் ரூம்லயும் கேட்குது. நடு ராத்திரியில என்னங்க சிரிப்பு வேண்டிக் கிடக்கு” என்கிறார் விஜயா.
    அதற்கு அண்ணாமலை ”எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க, இதுல உனக்கு என்ன பிரச்சனை” என்கிறார். ரோகிணி மனோஜிக்கு மசால் தோசை வாங்கி வந்து வைத்திருக்கிறார். வீட்டில் சமைக்காததால் ஹோட்டலில் இருந்து மசால் தோசை வாங்கி வந்து வைத்திருப்பதாக நினைத்து அதை முத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ரோகிணி எனக்காக வாங்கிட்டு வந்த மசால் தோசையை முத்து எடுத்து சாப்பிடுகிறான் என்று மனோஜ், அண்ணாமலையிடம் கம்ளைண்ட் செய்கிறார். பின் விஜயா, ரவி அனைவரும் முத்துவை கேள்வி கேட்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

    மேலும் காண

    Source link

  • kanchipuram book fair 2024 Starts today In Kanchipuram 9th february to 19 th february 2024 at kanchipuram collector office ground TNN

    kanchipuram book fair 2024 Starts today In Kanchipuram 9th february to 19 th february 2024 at kanchipuram collector office ground TNN


    காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா- 2024 09.02.2024 முதல்  19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது.
    காஞ்சிபுரம் புத்தக திருவிழா 2024 ( kanchipuram book fair 2024 )
    காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்தும் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா-2024 தொடங்கப்படவுள்ளது. இப்புத்தக திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறுகின்றது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 50,000 தலைப்புகளில் பல இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டவுள்ளன. இப்புத்தக கண்காட்சி அறிவு பசிக்கு மாபெரும் விருந்தாகும், இப்புத்தக கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் படைப்புகளும் இடம் பெறுகின்றன.
    கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் ?
    மேலும் புத்தக திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதல் நாள் துவக்க விழாவினை தொடர்ந்து, 2-வது நாள் ஆயிஷா இரா.நடராஜன் மற்றும் .எம்.பி.நாதன் அவர்களின் சொற்பொழிவுகளும், 3-வது நாள் சியாமளா ரமேஷ்பாபு அவர்களின் சொற்பொழிவும், சூப்பர் சிங்கர் மற்றும் இசைப் பள்ளி குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், 4-வது நாள் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவும், பட்டிமன்றம் ராஜா அவர்களின் தலைமையில் பட்டிமன்றமும், 5-வது நாள் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் திரைக்கலைஞர் பொன்வண்ணன் ஆகியோரின் சொற்பொழிவுகளும், 6-வது நாள் விழாவில் இயக்குநர் அஜயன் பாலா மற்றும்  பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளும், 7-வது நாள் விழாவில் கோபிநாத் அவர்களின் நீயா நானா நிகழ்ச்சியும், ஈரோடு மகேஷ் அவர்களின் பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 8-வது நாள் விழாவில் கு.சிவராமன் மற்றும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் ஆகியோரின் சொற்பொழிவுகளும், 9-வது நாள் விழாவில் மோகனசுந்தரம் மற்றும் பாவலர் அறிவுமதி ஆகியோரின் சொற்பொழிவுகளும்,  10-வது நாள் விழாவில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் சொற்பொழிவு மற்றும் கலக்கப்போவது யாரு குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும், 11-வது நாள் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா என 11 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
    புத்தகத் திருவிழா செயல்படும் நேரம் ?
    மேலும் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 03 மணி முதல் மாலை 04 மணி வரை பள்ளி, மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 04 மணி முதல் மாலை 05 மணி வரை கல்லூரி மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 05 மணி முதல் 06 மணி வரை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. மாபெரும் இப்புத்தக திருவிழா பொதுமக்கள் மற்றும் மாணவ /மாணவியர்களிடையே வாசிப்பு திறனை உருவாக்கிட 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. புத்தக ஆர்வலர்கள் மாணவ/ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் காண

    Source link

  • Add A ‘Little Dragon’ in Your Family”: Singapore PM’s Message For Couples | Singapore PM’s: ”குடும்பத்தில் ஒரு குட்டி டிராகனை சேர்த்துக் கொள்ளுங்கள்”

    Add A ‘Little Dragon’ in Your Family”: Singapore PM’s Message For Couples | Singapore PM’s: ”குடும்பத்தில் ஒரு குட்டி டிராகனை சேர்த்துக் கொள்ளுங்கள்”


    Singapore PM’s: டிராகன் ஆண்டை ஒட்டி சிங்கப்பூர் தம்பதிகள், குழந்தை பெற முன்வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
    ”குட்டி டிராகனை சேர்த்து கொள்ளுங்கள்” – சிங்கப்பூர் பிரதமர் 
    சீன வம்சாவளியினர் டிராகன் ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் மங்களகரமானவை, என்ற நம்பிக்கைய கொண்டுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதைமுன்னிட்டு வெளியாகியுள்ள அவரது உரையில், “இளம் தம்பதிகள் தங்கள் குடும்பத்தில் ஒரு ‘குட்டி டிராகனை’ சேர்ப்பதற்கான சிறந்த நேரம் இது” என வலியுறுத்தியுள்ளார். 
    ”குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்”
    அதோடு, ”குடும்ப வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது. குழந்தைகளை இந்த உலகிற்கு கொண்டு வருவது பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவர்கள் கற்று வளர்வதைப் பார்த்து, ஒரு மைல்கல்லை ஒன்றன் பின் ஒன்றாக அடைந்து, ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருவதைப் பார்க்கிறோம். என்னைப் போலவே தாத்தா பாட்டிகளும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் பேரக்குழந்தைகளை நாங்கள் மதிக்கிறோம், வம்பு செய்கிறோம், அவர்களை வளர்க்க பெற்றோருக்கு உதவுகிறோம், மகிழ்ச்சி, நோக்கம் மற்றும் அன்பு நிறைந்த இந்த பயணத்தில் எங்கள் பங்களிப்பை வழங்குகிறோம். டிராகன்  என்பது சக்தி, வலிமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னம். எனவே தம்பதிகள் இந்த ஆண்டில் தங்களது குடும்பத்தில் ஒரு குட்டி டிராகனை சேர்த்து கொள்ள வேண்டும்” என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் வலியுறுதியுள்ளார். இவரும் டிராகன் ஆண்டான கடந்த 1952ம் ஆண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.

    Tonight, we will be gathering with our loved ones to usher in the #YearoftheDragon. I hope more couples will be encouraged this year to add a “little dragon” to your family. 🐉🧧👶🏻 Read my #ChineseNewYear message here: https://t.co/U4A9UJdaAw – LHL https://t.co/oFLvFc0wHV pic.twitter.com/RfZiObTRd8
    — leehsienloong (@leehsienloong) February 9, 2024

    சரியும் பிறப்பு விகிதம்:
    ”குழந்தைகளைப் பெற வேண்டுமா, வேண்டாமா என்பதை தம்பதிகள் தான் முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலானோர் குழந்தை பெற முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன். வளர்ந்த சிங்கப்பூர் நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் காண முடிகிறது” எனவும் சிங்கப்பூர் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 2022ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் பிறப்பு விகிதம் 1.05 ஆக சரிந்துள்ளது. முன்னதாக, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் முறையே, சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 1.1 மற்றும் 1.12 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான், தம்பதிகள் குழந்தை பெற்றெடுக்க முன்வர வேண்டும், அவர்களுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் என சிங்கப்பூர் பிரதமர் பேசியுள்ளார்.
    டிராகன் புத்தாண்டு கொண்டாட்டம்:
    சீனாவில் புத்தாண்டு என்பது சந்திர நாட்காட்டியின்படி, 12 விலங்குகளை கொண்டு அடையாளபப்டுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு அந்நாட்டு மக்களுக்கு எப்படி அமையும் என்பதை கணிக்கின்றனர். அந்த வகையில் 2024ம் ஆண்டு சீனர்களுக்கு டிராகன் ஆண்டு ஆகும். அதன்படி, நடப்பாண்டு சீனர்களுக்கு செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் இருக்கும் என நம்புகின்றனர்.

    மேலும் காண

    Source link

  • Sabarimala Temple: | Sabarimala Temple:

    Sabarimala Temple: | Sabarimala Temple:


    Sabarimala Temple: மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ஆம் தேதி மாலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சபரிமலை ஐயப்பன் கோயில்:
    கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.  கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
    மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி  தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு, இரண்டு நாட்களுக்கு பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு, கடந்த மாதம் 20ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. 
    மாசி மாத பூஜை:
    கடந்த சபரிமலை சீசனின்போது முன் எப்போது இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  இதனால்,  நடப்பு  2023-24ஆம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357,47,71,909 என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 
    இந்த நிலையில், மாசி மாத  ஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று எந்த பூஜைகளும் நடைபெறாது.
    மீண்டும்  பிப்ரவரி 14ஆம் தேதி காலை கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். பிப்ரவரி 14ஆம் தேதி காலை ஐந்து மணிக்கே பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18ஆம் தேதி இரவு ஹிரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்பட உள்ளது.
    யாரெல்லாம் அனுமதி?
    இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் படிக்க
    GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம் – இஸ்ரோவின் புதிய இலக்கு என்ன?

    மேலும் காண

    Source link

  • Chennai Bomb Threat News Schools Bomb Scare Hoax Chennai Commissioner of Police

    Chennai Bomb Threat News Schools Bomb Scare Hoax Chennai Commissioner of Police


    Chennai Bomb Threat Latest News: சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது விவகாரத்தில், வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரைக் கொண்ட முகவரியில் இருந்து இ- மெயில் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. 
    சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் இன்று (பிப்.7) வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல சாந்தோம், பெரம்பூர், பூந்தமல்லி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தினர்.
    9 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு
    பள்ளி நிர்வாகத்தினர் குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின இதுகுறித்துத் தனித்தனியாக 9 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    சென்னையில் அண்ணா நகர், ஜெ.ஜெ. நகர், பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரைக் கொண்ட முகவரி
    துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    இமெயில் எந்த ஐ.பி. முகவரி கொண்ட கணினியில், எந்தப் பகுதியில் இருந்து வந்துள்ளது என்பதை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சட்டம் ஒழுங்கு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரைக் கொண்ட முகவரியில் இருந்து இ- மெயில் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இதற்கிடையே வழக்கு சென்னை மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    முன்னதாக, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே இ- மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் வந்ததாக சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேற்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இதையும் வாசிக்கலாம்:  Chennai Bomb Threat: பரபரப்பு… சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை

    மேலும் காண

    Source link

  • OTT Release Today: தியேட்டருக்கு நிகராக ஓடிடியில் இன்று வெளியான மாஸ் ஹீரோ படங்கள்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

    OTT Release Today: தியேட்டருக்கு நிகராக ஓடிடியில் இன்று வெளியான மாஸ் ஹீரோ படங்கள்: உற்சாகத்தில் ரசிகர்கள்!


    <p>இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. மற்றொருபுறம் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மேலும் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிப் படங்களும் இன்று திரையரங்குகளுக்குப் படையெடுத்துள்ள நிலையில், மற்றொருபுறம் இன்றைய ஓடிடி ரிலீஸ் படங்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>
    <p>குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களின் மாஸ் படங்கள் இன்று ஓடிடியில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்தப் படங்களின் லிஸ்ட்:</p>
    <h2><strong>அயலான்:</strong></h2>
    <p>ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் ப்ரீத் நடிப்பில் ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அயலான் திரைப்படம், குழந்தைகளை ஈர்த்து குடும்ப ஆடியன்ஸை திரையரங்குக்கு வரவைத்தது. கடந்த ஃபிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இப்படம், உலகம் முழுவதும் 96 கோடிகளை வசூலித்ததாகத் தகவல். இன்று சன் நெக்ஸ்ட் தளத்தில் இப்படம் இன்று வெளியாகிறது.</p>
    <h2>கேப்டன் மில்லர்:</h2>
    <p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் தேதி <a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. சுமார் 50 கோடி <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a>டில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் 104.79 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்தது.&nbsp; இப்படத்தின் அடுத்த பாகத்தை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், இன்று இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.</p>
    <h2>குண்டூர் காரம்:</h2>
    <p>மகேஷ் பாபு நடிப்பில் சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. டோலிவுட் சினிமாவின் மாஸ் இயக்குநர்களில் இருவரான த்ரி விக்ரம் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் 180 கோடிகளை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.</p>
    <p>இந்தப் படங்கள் தவிர, &nbsp;பரத் – ஜனனி நடித்த இப்படிக்கு காதல் ஆஹா தளத்தில், பாலிவுட்டில் பாக்&zwnj;ஷாக் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் என பிற மொழி திரைப்படங்களும் இன்று வெளியாகின்றன.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Chennai Metro Rail: | Chennai Metro Rail:

    Chennai Metro Rail: | Chennai Metro Rail:


    Chennai Metro Rail: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் மாதிரி வடிவத்தை சென்னை மெட்ரா ரயில் நிறுவனம் வெளியிட்டது. இதில் 3 பெட்டிகள் கொண்ட 36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கவுள்ளன.
    சென்னை மெட்ரோ ரயில்:
    சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது.
    இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.  மேலும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
    ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்: 
    இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லா ரயில்களையும் அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூ.269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 
    இதில் 3 பெட்டிகள் கொண்ட 36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.  இந்தநிலையில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் மாதிரி வடிவத்தை சென்னை மெட்ரா ரயில் நிறுவனம் வெளியிட்டது. அதோடு, ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் இருக்கும் வசதிகள் பற்றியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
    சிறப்பம்சங்கள் என்னென்ன?
    அதன்படி, 1000 பயணிகள் வரை பயணிக்கு திறன் கொண்ட மூன்று பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில்கள்  உட்புறத்தில் விசாலமான இடங்களை வழங்குவதன் மூலம் தடையற்ற உள்நகர்வுகளை அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன.
    குளிரூட்டப்பட்ட சூழல், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்தேய இடங்களுடன் சிறப்பு வசதி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு கைப்பிடிகளும், பெண்களின் பகுதியை வேறுபடுத்த  கைப்பிடிகளில் வெவ்வேறு வண்ணங்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளன.
    அவசரகால வெளியேற்ற கதவுகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தடைகளை கண்டறியும் கருவிகள், ரயில்களில் ஆற்றல் திறனுக்காக மீளுருவாக்கம் செய்யக்கூடிய பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயணிகள் சரியான இடத்தில் இறங்குவதற்கு ஏதுவாக, எல்சிடி திரைகளில் வரைபடங்களுடன் வழிக்காட்டுதல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    ஒட்டுமொத்தமாக, இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ இரயில்கள் நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு புதிய தரநிலையை அமைத்து, வசதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் என்று மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் படிக்க

    மேலும் காண

    Source link

  • பாஜகவின் திருவிளையாடல்.. சிக்குவாரா சந்திரபாபு நாயுடு? பரிதாப நிலையில் I.N.D.I.A கூட்டணி!

    பாஜகவின் திருவிளையாடல்.. சிக்குவாரா சந்திரபாபு நாயுடு? பரிதாப நிலையில் I.N.D.I.A கூட்டணி!


    <p>அடுத்த மாத இறுதியில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. வலுவாக இருந்த I.N.D.I.A கூட்டணியில், தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வரும் சூழலில், அதற்கு நேர் மாறாக பாஜக கூட்டணி வலுப்பெற்று வருகிறது.</p>
    <h2><strong>நிதிஷ் குமார் வரிசையில் கூட்டணியில் இணைகிறாரா சந்திரபாபு?</strong></h2>
    <p>பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்ல கடந்த மாதம் இணைந்தார். அந்த வரிசையில், ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.</p>
    <p>டெல்லிக்கு சென்ற சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து நேற்று பேசியுள்ளார். இதனால், நிதிஷ் குமாரை போன்று சந்திரபாபு நாயுடுவும் பாஜக கூட்டணியில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.</p>
    <p>ஆனால், பாஜக கூட்டணியில் இணைய சந்திரபாடு நாயுடு தயக்கம் காட்டி வருவதாக தெலுங்கு தேச கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.</p>
    <p>நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் ஆந்திர பிரதேசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே, பாஜக கூட்டணியில் இணைவதால் சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள் போய்விடுமோ என சந்திரபாபு நாயுடு அச்சப்படுவதாக கூறப்படுகிறது.</p>
    <h2><strong>அடித்து ஆடும் பாஜக:</strong></h2>
    <p>தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கு முன்பு, அதாவது 2 வாரங்களுக்குள், கூட்டணி குறித்த முடிவை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவிடம் நட்டா கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் பாஜகவை இணைப்பதால் வரும் நன்மை, தீமைகளை தெலுங்கு தேசம் ஆராய்ந்து வருகிறது.</p>
    <p>வரும் மக்களவை தேர்தலிலும் வெற்றிபெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி நம்புகிறது. அதன் கூட்டணியில் இணைவது சில பலன்களை தந்தாலும், ஆந்திராவை பொறுத்தவரை பாஜகவுக்கு எந்த விதமான பலமும் இல்லை.&nbsp;</p>
    <p>கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தலிலும் 1 விழுக்காட்டுக்கு குறைவாகவே பாஜக வாக்குகளை பெற்றிருந்தது. சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைந்து ஜெகன் மோகன் அரசு எடுத்த நடவடிக்கைக்கு பாஜகவின் ஆதரவு இருந்ததாக தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் சிலர் நம்புகின்றனர். எனவே, சந்திரபாபு நாயுடு, என்ன முடிவு எடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.</p>
    <p>I.N.D.I.A கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியாறிய நிலையில், ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளமும் வெளியேற உள்ளதாகக் கூறப்படுகிறது. I.N.D.I.A கூட்டணி பலவீனம் அடைந்து வரும் சூழலில், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரிய லோக் தளம் போன்ற முன்னாள் கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • மருத்துவக் கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூடத் தொடங்காத திமுக அரசு : அன்புமணி கண்டனம்

    மருத்துவக் கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூடத் தொடங்காத திமுக அரசு : அன்புமணி கண்டனம்


    <p>மருத்துவக் கல்விக்காக 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூடத் தொடங்கப்படாத நிலையில், அரசு என்ன செய்யப்போகிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
    <p>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:</p>
    <p>&rsquo;&rsquo;தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதோ, மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதோ சாத்தியமில்லை என்றாகி விட்ட நிலையில், மருத்துவக் கல்வி கட்டமைப்பை விரிவாக்குவதில் அரசு காட்டும் அலட்சியம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.<br /><br />தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், அவற்றில் 32 மாவட்டங்களில் மட்டும்தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p>
    <h2><strong>எந்த முயற்சியும் எடுக்கவில்லை</strong></h2>
    <p>ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.<br /><br />இதன்மூலம், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டு விட்டது. 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள் தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைப்படுத்தியது.</p>
    <p>அந்த விதிகளின்படி, தமிழக மக்கள் தொகைக்குத் தேவையானதை விட கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ ஆணையம் ஆணையிட்டது. அதற்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் இந்தியப் பிரதமருக்கு கடிதமும் எழுதினேன்.</p>
    <h2><strong>தமிழக அரசு பயன்படுத்தியிருக்க வேண்டும்</strong></h2>
    <p>அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டன. அதன்படி 2024- 25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது. அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது எனும் போது, பா.ம.கவின் போராட்டத்தால் கிடைத்த கடைசி வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.<br /><br />ஆனால், அந்த வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டு விட்டது. அதுமட்டுமின்றி புதிய கல்லூரிகள் மற்றும் கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பிக்காதது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி அளித்துள்ள விளக்கம் வருத்தத்தை அளிக்கிறது, &lsquo;&lsquo;இந்தியாவிலேயே எங்களிடம் (தமிழ்நாட்டில்) தான் &nbsp;அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றை அதே எண்ணிக்கையிலான இடங்களுடன் தொடர்ந்து நடத்துவோம்&rsquo;&rsquo; என்று மருத்துவர் சங்குமணி கூறியிருக்கிறார். புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்பதையே மருத்துவக்கல்வி இயக்குனர் அளித்துள்ள விளக்கம் காட்டுகிறது. இது மருத்துவக் கல்வி வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும்.<br /><br />இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கபட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு ஆகும். அந்த இலக்கை எட்ட தமிழக அரசு அனைத்து வகைகளிலும் போராடியிருக்க வேண்டும்.</p>
    <h2><strong>வெற்று வசனம்</strong></h2>
    <p>தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.<br /><br />ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை என்பதை மன்னிக்கவே முடியாது. 1984ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 40 ஆண்டுகளில் முழுமையாக நீடித்த எந்த ஆட்சியிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததே இல்லை. 40 ஆண்டுகளில் நடப்பு திமுக அரசுதான், அதன் ஐந்தாண்டு ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு கூடுதல் மாணவர் சேர்க்கை இடத்தைக் கூட உருவாக்கவில்லை என்ற அவப்பெயரை சுமக்கப் போகிறது.<br /><br />திமுக அரசு அதன் கடந்தகால தவறுகளை களைவதற்கு சிறந்த வழி புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது மட்டும்தான். எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”.</p>
    <p>இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.</p>

    Source link

  • Keerthi suresh shares a tragedy she faced because of a drunken fellow

    Keerthi suresh shares a tragedy she faced because of a drunken fellow


    தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமாவில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் இதுவாகும். 

    நெருங்கி வரும் ‘சைரன்’ :
    நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதை தவிர ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.     
    மறக்கமுடியாத சம்பவம் :
    ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் ‘சைரன்’ படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் குறித்து பகிர்ந்து இருந்தார். 

    “ஒரு முறை இரவில் என்னுடைய தோழியுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருக்கும் போது குடி போதையில் இருந்த ஆள் ஒருவன் என் மேல வந்து விழுந்தான். கோபத்தில் அந்த ஆளை ஓங்கி அறைந்துவிட்டேன். பின்னர் நானும் என்னுடைய தோழியும் கொஞ்ச தூரம் நடந்து சென்று விட்டோம். அப்போது என் தலையில் பலமாக ஏதோ அடிபட்டதுபோல இருந்தது. கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் போனது. திரும்பி பார்த்தால் அந்த குடிகாரன்தான் என்னை தாக்கி விட்டு ஓடுவதை பார்த்தேன். உடனே நானும் என்னுடைய தோழியும் அவனை விரட்டி பிடித்து அருகில் இருந்த போலீஸ் பூத்தில் நடந்ததை சொல்லி ஒப்படைத்தோம்” என்றார் கீர்த்தி சுரேஷ். 
    இந்த கதையை கேட்ட பிறகு கீர்த்தி சுரேஷ் துணிச்சலையும், தைரியத்தையும் அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் அவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அதிர்ச்சி சம்பவமாக இருந்தாலும் அவர் அதை எதிர்கொண்ட விதம் மற்ற பெண்களுக்கும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. 

    மேலும் காண

    Source link

  • Periyar University: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்: அரசு அதிரடி உத்தரவு- பின்னணி இதுதான்!

    Periyar University: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்: அரசு அதிரடி உத்தரவு- பின்னணி இதுதான்!


    <p>சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
    <p>கணிதத் துறைப் பேராசிரியராக இருந்து, கணினி அறிவியல் துறையிலும் பணிபுரிந்தவர் தங்கவேலு. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்டபோதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.</p>
    <h2><strong>என்ன குற்றச்சாட்டுகள்?</strong></h2>
    <p>தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவதில் ஆகியவற்றில் தங்கவேலு நிதி முறைகேடு செய்ததாகவும் கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதேபோல, அளவுக்கு அதிகமாக கணினிகள் வாங்கி, அதிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.&nbsp; ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு, அவுட்சோர்சிங் பணிகளுக்கான ஆள் தேர்வில் மோசடி என பதிவாளர் தங்கவேலு மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் குவிந்தன.</p>
    <p>இவற்றை விசாரித்த தமிழக அரசு, குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நிரூபணம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தது. தொடர்ந்து பதிவாளர் தங்கவேலுவைப் பணியிடை நீக்கம் செய்யவும், பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு உத்தரவிட்டது. பதிவாளர் தங்கவேலு பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
    <h2><strong>விசாரணைக் குழு அமைப்பு</strong></h2>
    <p>முன்னதாக, சேலம்&zwnj; பெரியார்&zwnj; பல்கலைக்கழகத்தில்&zwnj; ஆசிரியர்&zwnj; நியமனத்தில்&zwnj; முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்&zwnj;, ஊழல்கள்&zwnj; நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள்&zwnj; தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்&zwnj; குழு அமைத்தது. குறிப்பாக உயர் கல்வித்&zwnj;துறை அரசு கூடுதல்&zwnj; செயலாளர்&zwnj; பழனிசாமி மற்றும்&zwnj; அரசு இணைச்&zwnj; செயலாளர்&zwnj; இளங்கோ ஹென்றி தாஸ்&zwnj; ஆகியோர்&zwnj; கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.&zwnj;</p>
    <h2><strong>துணை வேந்தர் கைது</strong></h2>
    <p>எல்லாவற்றுக்கும் மேலாக பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p>

    Source link

  • GSLV-F14: ISRO To Launch INSAT-3DS Spacecraft On February 17. Know Exact Timing, And Mission Details in tamil | GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம்

    GSLV-F14: ISRO To Launch INSAT-3DS Spacecraft On February 17. Know Exact Timing, And Mission Details in tamil | GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம்


    GSLV-F14: GSLV-F14 விண்கலத்தில் உள்ள INSAT-3DS செயற்கைக்கோள்,  வானிலை மற்றும் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்: 
    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி-எஃப்14 திட்டத்தின் ஒரு பகுதியாக,  இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த செயற்கைக்கோளானது  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிப்ரவரி 17ம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.  இது இஸ்ரோவின் ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிளின் (ஜிஎஸ்எல்வி) 16வது விண்கலமாகும். இதைமுன்னிட்டு, கடந்த ஜனவரி 25ம் தேதியன்று, செயற்கைக்கோள் சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    இன்சாட்-3டிஎஸ் என்றால் என்ன?
    INSAT-3DS என்பது வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை வழங்கும் மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது தற்போதைய சுற்றுப்பாதையில் உள்ள இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்கள் வழங்கும் சேவைகளைத் தொடர அனுமதிக்கிறது.  INSAT-3DS ஒரு புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி,  INSAT-3DS ஆனது INSAT அமைப்பின் திறன்களை மேம்படுத்தவும் உதவும். இந்த செயற்கைக்கோளின் மொத்த நிறையானது 2,275 கிலோகிராம் ஆகும். இதற்கு செயல் வடிவம் வழங்குவதில் இந்தியத் தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
    இன்சாட்-3டிஎஸ்-ல் உள்ள கருவிகள் என்ன?
    INSAT-3DS ஆனது மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை மேற்கொள்ளவும், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக நிலம் மற்றும் கடல் பரப்பை கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் பல அதிநவீன பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன, அதில் ஆறு சேனல் இமேஜர், 19 சேனல் சவுண்டர் மற்றும் இரண்டு தகவல் தொடர்பு பேலோடுகள் அடங்கும். டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (டிஆர்டி) கருவி மற்றும் செயற்கைக்கோள் உதவி தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஎஸ்&ஆர்) டிரான்ஸ்பாண்டர் ஆகியவை இரண்டு தொடர்பு பேலோடுகள் ஆகும். 
    தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து வானிலை, நீரியல் மற்றும் கடல்சார் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவது டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டரின் நோக்கமாகும். செயற்கைக்கோளின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள SAS&R டிரான்ஸ்பாண்டர், பீக்கான் டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து டிஸ்ட்ரஸ் சிக்னல் அல்லது எச்சரிக்கை கண்டறிதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு சேவைகளை எளிதாக்கும்.
    ஜிஎஸ்எல்வி எஃப்14 இஸ்ரோவின் 93வது விண்கலமாகும். இந்த ஆண்டு இஸ்ரோ முன்னெடுத்துள்ள இரண்டாவது பணி இதுவாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் மற்றும் FCPS அமைப்பு இடம்பெற்று இருந்தது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
     
     

    மேலும் காண

    Source link

  • Mettur dam’s water flow has reduced from 83 cubic feet to 25 cubic feet.

    Mettur dam’s water flow has reduced from 83 cubic feet to 25 cubic feet.


    தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 48 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 83 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 25 கன அடியாக குறைந்துள்ளது. 

    நீர்மட்டம்:
    அணையின் நீர் மட்டம் 67.07 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 30.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
    இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 5,600 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகள்:
    கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.08 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,002 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

    மேலும் காண

    Source link

  • lal salaam rajinikanth share emotional tweet wishing his daughter aishwarya | Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்”

    lal salaam rajinikanth share emotional tweet wishing his daughter aishwarya | Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்”


    தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. தன் மகள் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார்.
    மேலும் விஷ்ணு  விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்புகளை முன்னதாக அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று காலை வெளி நாடுகள், அண்டை மாநிலங்களில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.
    மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில் படத்தில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சிறப்பாக ரஜினி பாத்திரத்துக்கு பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
    இந்நிலையில், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் உணர்ச்சிகரமான ட்வீட்டினைப் பதிவிட்டுள்ளார். “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
     

    என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்@ash_rajinikanth #LalSalaam pic.twitter.com/bmRe8AGLkN
    — Rajinikanth (@rajinikanth) February 9, 2024

    மேலும் காண

    Source link

  • top news India today abp nadu morning top India news February 9th 2024 know full details | Morning Headlines: வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்; பினராயி விஜயன் தலைமையில் போராட்டம்

    top news India today abp nadu morning top India news February 9th 2024 know full details | Morning Headlines: வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்; பினராயி விஜயன் தலைமையில் போராட்டம்



    வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.!

    மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.  மேலும் படிக்க

    UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!

    விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும். இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. மேலும் படிக்க

    CM Stalin Slams BJP: மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் விரும்பாத பிரதமர் மோடி : முதல்வர் ஸ்டாலின் சாடல்

    டெல்லி ஐந்தர்மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டியும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். மேலும் படிக்க

    BJP White Paper: காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நிலை! வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தெரிவித்துள்ளதாவது, பிரதமர் மோடி பதவியேற்றபோது நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது எனவும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் குறைந்த அளவில்தான் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் படிக்க

    Hemant Soren: ஜார்க்கண்டில் திருப்பம்! ஹேமந்த் சோரனுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்கும் இடையே தொடர்பா? அதிர்ச்சி தகவல்

    ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும், கடந்தாண்டு வருமான வரித்துறை சோதனையில் ரூ.351 கோடியுடன் சிக்கிய காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாஹூவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி, காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

    மேலும் காண

    Source link

  • Lal Salaam: அதிர்ச்சி.. லீக்கான லால் சலாம் படம்.. சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு

    Lal Salaam: அதிர்ச்சி.. லீக்கான லால் சலாம் படம்.. சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு


    <p>நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதன் காட்சிகளை வெளியிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்&zwnj;ஷன்ஸ் தயாரித்துள்ள படம் &ldquo;லால் சலாம்&rdquo;. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் &nbsp;ஹீரோக்களாக நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் இன்று (பிப்ரவரி 9) தியேட்டரில் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="is">Endrum 🔥 <a href="https://twitter.com/hashtag/LalSalaam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LalSalaam</a> <a href="https://twitter.com/hashtag/SuperstarRajinikanth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SuperstarRajinikanth</a> <a href="https://twitter.com/hashtag/Rajinikanth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Rajinikanth</a> <a href="https://t.co/GcwbVkXYVy">pic.twitter.com/GcwbVkXYVy</a></p>
    &mdash; Devendran Panersilbam (@DevendranDave) <a href="https://twitter.com/DevendranDave/status/1755759877849567338?ref_src=twsrc%5Etfw">February 9, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>இப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் என்பதால் இதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் நடித்திருக்கிறார். இதில் ரஜினியின் கேரக்டருக்கு &nbsp;&ldquo;மொய்தீன் பாய்&rdquo; என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. விளையாட்டில் கலந்துள்ள மத அரசியலுக்கு எதிரான கருத்துகளை லால் சலாம் படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
    <p>ஏற்கனவே கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்ற லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியிருந்தது. இதில் நடிகர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யுடனான சர்ச்சைகளுக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். இதேபோல் தன்னுடைய அப்பாவை சங்கீ என சொல்லாதீர்கள். அவர் அப்படி இருந்திருந்தால் இந்த மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்திருக்கவே மாட்டார் என உணர்ச்சி பொங்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருந்தார்.&nbsp;</p>
    <p>மேலும் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியான லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் ரஜினி பேசிய வசனங்கள்,அவருக்காக வைக்கப்பட்ட வசனங்கள் என எல்லாம் ட்ரெண்டாகின. இந்நிலையில் லால் சலாம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது. அதேசமயம் மற்ற மாநிலங்களில் காலையிலேயே முதல் காட்சி தொடங்கி விட்டது.</p>
    <p>இப்படியான நிலையில் காலை காட்சி பார்க்கும் பிற மாநில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் லால் சலாம் பட காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு லைகா நிறுவனம் தரப்பில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படி எல்லாம் வீடியோ எடுத்து பதிவிட்டால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என கண்டித்துள்ளனர்.&nbsp;</p>

    Source link

  • Pakistan Election Results 2024 Imran Khan party backed independent candidates leads Nawaz sharif faces tough contest

    Pakistan Election Results 2024 Imran Khan party backed independent candidates leads Nawaz sharif faces tough contest


    Pakistan Election: பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
    பாகிஸ்தான் பொதுத்தேர்தல்:
    பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பொதுத் தேர்தம் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்களும் சிறுபான்மை சமூகத்திற்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். எனவே, 266 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பஜாவூரில் ஒரு வேட்பாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு இடத்தில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
    இந்த நிலையில், 265 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதுமட்டும் இன்றி, பல்வேறு இடங்களில் வன்முறை நடந்துள்ளது. பாகிஸ்தான் முழுவதும் மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
    வன்முறைகளுக்கு மத்தியில் நடந்த வாக்குப்பதிவு:
    வாக்குப்பதிவு முடிந்து 10 மணி நேரம் ஆகியம், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படாமல் இருந்தது. பெரும் தாமதத்திற்கு பிறகே, தேர்தல் ஆணையம் தலையிட்டு வாக்குகள் எண்ணும் பணியை தொடங்க வேண்டும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
    ஊழல் வழக்கில் சிக்கியதால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உட்கட்சி தேர்தலை நடத்தாத காரணத்தால் அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டுள்ளது. எனவே, சிறையில் உள்ள இம்ரான் கான் சார்பில், அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
    பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு வருகிறது. தேர்தல் நடைபெற்ற 265 இடங்களில் 125 இடங்களில் இம்ரான் கான ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சிறையில் இருந்து டஃப் கொடுக்கும் இம்ரான் கான்:
    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 44 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கு வருகிறது. லாகூரில் NA 123 தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமரும் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
     

    Despite every possible method employed to undermine the will of the people, our people have spoken via #MassiveTurnout for vote today. As we have repeatedly stated, “no force can defeat an idea whose time has come.” It is now critical to guard the vote by getting Form 45. pic.twitter.com/p8BZZBzsug
    — Imran Khan (@ImranKhanPTI) February 8, 2024

    இந்த தேர்தலில், நவாஸ் ஷெரீப்புக்கு ராணுவத்தின் ஆதரவோடு இருப்பதாக கூறப்படுகிறது. ஊழல் வழக்கில் சிக்கி லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து, அவர் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார்.
    ராணுவத்தின் ஆதரவோடுதான், அவர் பாகிஸ்தான் திரும்பியிருப்பதாகவும் அவரை வெற்றிபெற வைக்க தேர்தலில் ராணுவம் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும், தேர்தலில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருவது நவாஸ் ஷெரீப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டி கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது.
     

    மேலும் காண

    Source link

  • on facebook live Shiv Sena UBT leader Abhishek Ghosalkar shot dead in mumbai | Mumbai Gun Shot: ஃபேஸ்புக் நேரலையில் கொடூரம்

    on facebook live Shiv Sena UBT leader Abhishek Ghosalkar shot dead in mumbai | Mumbai Gun Shot: ஃபேஸ்புக் நேரலையில் கொடூரம்


    Mumbai Facebook Gun Shot: மும்பையில் ஃபேஸ்புக் நேரலையின் போது அரசியல் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    ஃபேஸ்புக் நேரலையில் கொலை:
    உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர், ஃபேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்த போது ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதோடு, தாக்குதல் நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் ஃபேஸ்புக் நேரலையில்  பதிவாகியுள்ளது.  தஹிசார் பகுதியில் உள்ள MHB காலனி காவல் நிலைய எல்லைக்குள் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    நடந்தது என்ன?
    கோசல்கர்,  சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவின் முன்னாள் கவுன்சிலரான வினோத் கோசல்கரின் மகன் ஆவார். துப்பாக்கிச் சூடு நடத்திய மோரிஷ் எனும் நபருக்கும், கோசல்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இதையடுத்து, மவுரிஸ் பாய் என்று பிரபலமாக அறியப்படும் மொரிஸ் நோரோன்ஹாவில் நடைபெற்ற, தனது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். அந்த ஃபேஸ்புக் நேரலை நிகழ்ச்சி முடிவுற்ற சமயத்தில் தான், மோரிஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் 3 முறை கோசல்கரை சுட்டுள்ளார். இதில் காயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதேநேரம்,  மோரிஷ் உடனே தன்னை தானே சுட்டு உயிரிழந்துள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோசல்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    Tragic and shocking..!! 🤬Shiv Sena UBT leader Abhishek Ghosalkar was brutally murdered during a Facebook live session in Dahisar, Mumbai. The accused, Morish, later shot himself, Both died..!!📍Mumbai#Mumbai #Shivsena #ShivsenaUBT#AbhishekGhosalkar #BreakingNews pic.twitter.com/M47hjyYVzZ
    — Sandeep Kumar Yadav (@Sandy92_SKY) February 8, 2024

    எதிர்க்கட்சிகள் சாடல்:
    ஏக்நாத் ஷிண்டே பிரிவின் தலைவரான மகேஷ் கெய்க்வாட் மீது, காவல்நிலையத்தில் வைத்தே பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அண்மையில் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஃபேஸ்புக் நேரலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை உத்தவ்தாக்ரே தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமாக சட்ட-ஒழுங்கு மாநிலத்தில் சீர்கெட்டு இருப்பதாகவும், டிரிபிள் இன்ஜின் அரசு செயலற்று இருப்பதாகவும் சாடியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்ரே பேசுகையில், “மகாராஷ்டிராவிற்கு இதனால் அவதூறு ஏற்பட்டது மட்டுமின்றி, மக்களும் பயப்படுகிறார்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழில்துறை முதலீடுகள் மகாராஷ்டிராவிற்கு வராது எனும் மோசமான சூழல்  மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது” என கவலை தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Lal salaam telugu version saikumar dubbed super star rajinikanth voice | Lal Salaam Rajini: லால் சலாம் படத்திற்கு டப்பிங் பேசிய பிரபலம்

    Lal salaam telugu version saikumar dubbed super star rajinikanth voice | Lal Salaam Rajini: லால் சலாம் படத்திற்கு டப்பிங் பேசிய பிரபலம்


    Lal Salaam Rajini: லால் சலாம் படத்தில் ரஜினிக்கு டப்பிங் பேசிய பிரபலம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
     
    ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் இன்று திரைக்கு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். இவர்களை தவிர செந்தில், லிவிங்ஸ்டன், ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 
     
    லால் சலாம் படத்தின் ரிலீஸை ஒட்டி ரஜினி இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், ரஜினிக்கு டப்பிங் பேசிய தகவலும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. ரஜினியின் படங்கள் தெலுங்கில் ரிலீசாகும்போது அவரைப்போல் அதே குரலில் டப்பிங் பேசுவது வழக்கம். அந்தவகையில் ரஜினி நடித்த படங்கள் தெலுங்கில் ரிலீஸ் செய்யும்போது பாடகர் மனோ டப்பிங் பேசியுள்ளார். ரஜினி குரலை அப்படியே பேசி அசத்தி இருப்பார் மனோ. ஆனால், இந்த முறை லால் சலாம் படத்திற்கு மனோ டப்பிங் பேசவில்லை. அவருக்கு பதிலாக சாய்குமார் என்பவர் ரஜினி குரலில் டப்பிங் பேசியுள்ளார். 

     
    இவர் ஏற்கெனவே ரஜினி நடித்த பாட்ஷா, நாட்டாமை படத்தின் ரீமேக்கான பெத்தராயுடு உள்ளிட்ட படங்களில் டப்பிங் பேசியுள்ளார். இவரது டப்பிங் வாயிஸ் ரஜினிக்கு செட்டாகவே படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அந்த சென்டிமெண்ட்டின் அடிப்படையில் லால் சலாம் படத்திற்கு சாய் குமார் டப்பிங் பேசியுள்ளார்.  கிரிக்கெட் சார்ந்த படமாக இருந்தாலும், அதில் எப்படி சாதி அரசியல் நுழைந்தது என்பதை படம் பேசுவதாக ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். அதேநேரம் ரஜினி நடித்துள்ள மொய்தீன் பாய் கேரக்டர், மத அரசியலை தவிர்த்து மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்ட வாழ வேண்டும் என்பதை கூறுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 
     

     

    மேலும் காண

    Source link

  • 7 am headlines today 2024 9th February headlines news tamilnadu india world

    7 am headlines today 2024 9th February headlines news tamilnadu india world

    தமிழ்நாடு:

    மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் பிரதமர் மோடி விரும்பவில்லை – டெல்லியில் நடைபெற்ற கேரள அரசின் போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை
    தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் – இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துகணிப்பில் தகவல்
    திமுக அரசு 30 மாதங்களில் 8.65 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது – எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கை கோரிக்கைக்கு பதிலடி
    ஆட்சியின் கடைசிக் காலத்திலாவது நிதிப்பகிர்வை தந்திடுங்கள் – பாஜக அரசுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
    மக்கள் பிரச்னையை பாஜக காது கொடுத்து கேட்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்தோம் – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
    அண்ணாமலையை நம்பி சென்றால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை தான் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
    முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு – ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை
    அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – நிதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி
    கோடை காலம் தொடங்கும் முன்பே கொளுத்தும் வெயில் – ஈரோட்டில் இரண்டாவது நாளாக சதமடித்த வெப்பநிலை

    இந்தியா:

    பாஜக அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் – 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக சாடல்
    உத்தராகண்டில் மாநகராட்சி நிர்வாகம் மதராசா கட்டடத்தை இடிகக் முயன்றதால்  கலவரம் – வன்முறையில் வாகனங்கள், காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்
    உத்தராகண்டில் வன்முறையை கட்டுப்படுத்த ஹல்த்வாணி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு  அமல் – துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
    சென்னை – பெங்களூரு தேசிய நெடுங்சாலை பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
    பிரதமர் மோடி பிறப்பால் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல – ராகுல் காந்தி பேச்சு
    மக்களவை தேர்தலில் அசாம் மாநிலத்தில் தனித்து போட்டி என ஆம் ஆத்மி அறிவிப்பு – 3 வேட்பாளர்கள் பெயர் வெளியீடு
    பேஸ்புக் நேரலையில் பயங்கரம் – மும்பையில் சிவசேனா தலைவர் மகன் சுட்டுக் கொலை

    உலகம்:

    பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை – விரைவில் முழு முடிவு வெளியாகும்
    புதிய காலநிலை செயற்கைகோளை செலுத்திய நாசா – வானிலை நிலவரங்களை துல்லியமாக வழங்கும் என விளக்கம்
    அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை சுவிட்ச் ஆஃப்  செய்யும் உரிமை – ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

    விளையாட்டு:

    ஜுனியர் உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி – 11ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது
    மகளிர் புரோ ஹாக்கி:  இந்தியா – அமெரிக்கா அணிகள் இன்று மோதல்

     

    Published at : 09 Feb 2024 07:04 AM (IST)

    மேலும் காண

    Source link

  • list of Singer Anuradha Sriram was singing songs with kollywood top heroes

    list of Singer Anuradha Sriram was singing songs with kollywood top heroes


    1995 ஆம் ஆண்டு பம்பாய் படத்தில் இடம்பெற்ற மலரோடு மலர் இங்கு என்ற பாடல் மூலம் திரைத்துறையில் அனுராதா ஸ்ரீராம் அறிமுகமானார். தொடர்ந்து இந்திரா படத்தில் இடம்பெற்ற அச்சம் அச்சம் இல்லை பாடலும், மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே பாடலும் அவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. 
     தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அனுராதா ஸ்ரீராம், தனது 6வது வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார்.குழந்தை நட்சத்திரமாக  ‘காளி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படியான நிலையில் இவர் ஹீரோக்களுடன் இணைந்து பாடிய 6 பாடல்கள் பற்றி காணலாம். 
    விஜய்
    கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய்,சிம்ரன், விவேக், தலைவாசல் விஜய் என பலரும் நடித்த படம் ‘பிரியமானவளே’. செல்வபாரதி இயக்கிய இந்த படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வாலி எழுதிய “மிஸ்ஸிஸிப்பி நதி குலுங்க குலுங்க” என்ற பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ளார். 

    சரத்குமார்
    2004 ஆம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார், நமீதா, வடிவேலு, கலாபவன் மணி என பலரும் நடித்த படம் ‘ஏய்’. இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த நிலையில் இதில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. அதில், ‘ஓர் ஒன்னும் ஒன்னு’ என்ற பாடலை நடிகர்கள் சரத்குமார், வடிவேலு, பறவை முனியம்மா ஆகியோருடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ளார். 

    தனுஷ் 
    2004 ஆம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீதேவி, மயில்சாமி, கருணாஸ், குணால் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘தேவதையைக் கண்டேன்’. தேவா இசையமைத்த இப்படத்தில் ‘துண்டக்காணும் துணியைக் காணும்’ பாடல் இடம் பெற்றது. இதனை நடிகர் தனுஷூடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம் இப்பாடலை பாடியிருந்தார். 

    வடிவேலு 
    1998 ஆம் ஆண்டு கே. கிருஷ்ணன் இயக்கத்தில் ராஜ்கிரண் , குஷ்பு, வினிதா, ன் மணிவண்ணன் , வடிவேலு , R. சுந்தர்ராஜன் , வெண்ணிற ஆடை மூர்த்தி , விட்டல் ராவ் என பலரும் நடித்த படம் ‘பொண்ணு விளையிற பூமி’. இந்த படத்தில் வாலி எழுதிய “போயா உன் மூஞ்சில” என்ற பாடலை நடிகர் வடிவேலுடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம் பாடியிருந்தார். 

    மேலும் காண

    Source link

  • PM Modi does not like Chief Minister post Stalin spoke in Delhi in support of Kerala govt protest | Stalin Slams BJP: மாநமுதலமைச்சர்களை விரும்பாத பிரதமர் மோடி

    PM Modi does not like Chief Minister post Stalin spoke in Delhi in support of Kerala govt protest | Stalin Slams BJP: மாநமுதலமைச்சர்களை விரும்பாத பிரதமர் மோடி


    CM Stalin Slams BJP: இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருந்து பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
    கேரள முதலமைச்சர் போராட்டம்:
    டெல்லி ஐந்தர்மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டியும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.
    முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
    முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “கேரளத்தில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுறேன். அண்மையில் தான் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தினார். தற்போது திமுகவைச் சேர்ந்த எம்பிக்களாலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதி பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கு காரணமான ஒன்றிய பாஜ அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.
    முதலமைச்சர்களை விரும்பாத பிரதமர் மோடி – ஸ்டாலின்
    சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியிடம் ஒரு கருத்தை சொன்னார். “தமிழ்நாட்டின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டெல்லிக்கு வரத் தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றி தருவேன்” என்றார். மாநிலங்களையும், மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி – மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார். மாநிலங்கள் இருப்பதோ – மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை.
    இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர். ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையை பறித்ததுதான். மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்கு சமம். அதைத்தான் பாஜ அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.
    வளர்ச்சிக்கு தடை:
    பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதலமைச்சர் காம்ரேட் பினராயி விஜயனும் போராடி வருகிறார். ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு மாபெரும் நிதி நெருக்கடி பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம். அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய ஒன்றிய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண்டும். ஆனால் அப்படி செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சி பணிகளுக்காக கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகிறார்கள்.
    மாநிலங்களுடைய பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது மாநில அரசுகள்தான். மாநில அரசிடம் தான் எல்லா அன்றாட தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும்.
    I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசை கைப்பற்றி, பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் – சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். காம்ரேட் பினராயி விஜயனுக்கும், கேரள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்” என முதலமைச்சர் பேசினார்.ம்ப்

    மேலும் காண

    Source link

  • petrol and diesel price chennai on February 7th 2024 know full details

    petrol and diesel price chennai on February 7th 2024 know full details


    Petrol Diesel Price Today, February 9: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 9ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 629வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

    மேலும் காண

    Source link

  • Lal Saalam Audio Launch Superstar Rajinikanth speech about sanatana dharma

    Lal Saalam Audio Launch Superstar Rajinikanth speech about sanatana dharma


    Rajinikanth: லால் சலாம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, தனது அப்பாவை சங்கி என விமர்சிப்பது வருத்தம் அளிப்பதாக கூறிய அதே மேடையில் இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். 
    லால் சலாம்:
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படம் நாளை ரிலீசாக உள்ளது. படத்தில் மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. 
     
    இந்த நிலையில் அண்மையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “ அப்பாவை சங்கி சங்கின்னு சொல்றாங்க. எனக்கு புரியல. சங்கி என்றால் என்னன்னு கேட்டேன். அதுக்கு அரசியல் சார்ந்த சிலரை அப்படி கூப்பிடுவாங்க என்றனர். என் அப்பா ரஜினிகாந்த் சங்கி இல்லை. ரஜினிகாந்த் என்ற மனிதன் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் இருக்கமாட்டார்.
     
    சங்கி இந்த படத்தை பண்ண முடியாது. மனிதநேயமிக்க ஒருத்தரால் மட்டும் தான் இந்த படத்தில் நடித்திருக்க முடியும். வேற யாரும் இந்த கேரக்டரில் நடித்திருக்க மாட்டார்கள். அவரால் மட்டும் தான் இப்படி தைரியமாக நடிக்க முடியும். படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்” என்று எமோஷனலாக பேசியுள்ளார். 
    சனாதனம் என்றால் என்ன?
    ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, “ லால் சலாம் படம் மத நல்லிணக்கத்தை பேசியுள்ளது. மனிதன் கடவுளிடம் செல்ல வேண்டும், கடவுளை தெரிந்து வாழ்க்கையில் சந்தோஷமாக மாற மதங்கள் உருவானது. எல்லா மதங்களுக்கும் கிஸ்த்துவ மதம், இஸ்லாம் மதம் மற்றும் பவுத்த மதங்களுக்கு ஸ்தாபர்கள் இருந்தனர். அவர்களின் சீடர்கள் ஸ்தாபனம் செய்தனர். இந்து மதத்திற்கு மட்டும் ஸ்தாபர்கள் இல்லை.
     
    சதானம் என்றால் புராதனம். அதாவது ஆதி. ரிஷிகளின் சப்தங்களே வேதமானது. வேதங்களை எளிதாக புரிந்து கொள்ள உபநிஷதங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த உபநிஷதங்களை எளிமையாக புரிந்து கொள்ள பகவத் கீதை கொண்டு வரப்பட்டது. பரமாத்மா ஜீவாத்மாவுடன் பேசுவது தான் பகவத் கீதை. இப்படி மதங்கள் எல்லாமே மக்களுக்கு நன்மை செய்யவே கூறுகிறது. கிஸ்துவம், இஸ்லாம், புத்தம் மற்றும் இந்து மதங்களில் உண்மை இருப்பதால் காலம் காலமாக இருந்து வருகிறது” என உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 
     

     

    மேலும் காண

    Source link

  • karthigai deepam zee tamil serial today 8th february episode update | Karthigai Deepam Feb 08:: ஐஸ்வர்யாவிடம் கார்த்திக் கேட்ட கேள்வி, வீட்டில் வெடித்த பிரச்சனை

    karthigai deepam zee tamil serial today 8th february episode update | Karthigai Deepam Feb 08:: ஐஸ்வர்யாவிடம் கார்த்திக் கேட்ட கேள்வி, வீட்டில் வெடித்த பிரச்சனை


    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்று துணிக்கடையில் ஆனந்த் பெண்ணுடன் வந்திருக்க கார்த்திக், மீனாட்சி அதே கடைக்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
    அதாவது, ஆனந்த் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள, கார்த்திக் மீனாட்சியை பார்க்க மீனாட்சி துணி எடுக்க வந்ததாக சொல்ல, அவன் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆனந்தை தேடி மேலே செல்ல, ஆனந்த் அந்தப் பெண்ணை கூட்டி கொண்டு வெளியே எஸ்கேப் ஆகி விடுகிறான். 
    பிறகு அங்கிருந்து கிளப்பி வீட்டிற்கு வரும் கார்த்திக் ஐஸ்வர்யாவை முறைத்துக் கொண்டே ரூமுக்கு சென்று “என்ன தீபா கல்யாணம் எல்லாம் எப்படி நடந்தது?” என்று கேட்க, அவள் உண்மையை மறைத்து “நல்லா நடந்தது” என சொல்கிறாள். “புடவையைப் பார்த்து என்ன சொன்னாங்க?” என்று கேட்க, நல்லா இருந்ததாக சொன்னாங்க என்று சமாளிக்கிறாள். 
    “எல்லாமே எனக்குத் தெரியும்” என கார்த்திக் சொன்னதும், தீபா கலங்கி அழுகிறாள். “இது எப்படி நடந்தது? யார் பண்ணாங்கனு எனக்கு தெரியும்” என சொல்லி வெளியே வந்து ஐஸ்வர்யாவைப் பார்த்து “எதுக்கு கடைக்கு வந்தீங்க, எதுக்கு எங்க ரூமுக்கு வந்தீங்க. புடவையை நீங்க தான் மாத்தி வச்சிருப்பீங்கனு எனக்கு தெரியும்” என சொல்ல, ஐஸ்வர்யா நான் ஒன்னும் பண்ணல என்று சொல்கிறாள். 
    கார்த்திக் ஐஸ்வர்யாவை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அருண் ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்து தீபா உண்மையை மறைத்த விஷயத்தை எடுத்துப் பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. அபிராமி “இதுக்கு தான் கார்த்திக்கிட்ட நடந்த விஷயத்தை சொல்லாதேன்னு சொன்னேன்” என்று கோபப்பட. கார்த்திக் “தீபா சொல்லல, பெரியம்மா தான் சொன்னாங்க” என்று கூறுகிறான். 
    ஐஸ்வர்யா “பொண்டாட்டியை விட்டுக் கொடுக்கிறானா பாரு” என சொல்ல, கார்த்திக் “தேவையில்லாமல் பேசாதீங்க” என்று சொல்ல, மீண்டும் அருணுக்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. இதனால் கோபமடையும் அபிராமி “போதும் நிறுத்துங்க” என சத்தம் போடுகிறாள். இப்படியான பரபரப்பான கட்டத்தில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: Sherina: பிக்பாஸ் பிரபலத்துக்கு பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் – கார் டிரைவரை கைது செய்தது ஏன்?
    Lal Salaam: கடவுள் முன் மன்றாடுவது போல இருந்தது.. லால் சலாம் ‘அன்பாளனே’ பாடல் பற்றி தேனிசைத் தென்றல் தேவா!
     

    மேலும் காண

    Source link

  • sandhya raagam serial zee tamil episode today february 8th written episode

    sandhya raagam serial zee tamil episode today february 8th written episode


    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாருவை ரகுராம் வீட்டில் தங்க வைக்க பார்வதி பிளான் போட்டு சம்மதம் வாங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
    அதாவது, மாயா டைரியை கொண்டு வந்து ரகுராம் முன்பாக வைத்திருக்க, அவரும் அதை எடுக்க போன சமயத்தில் போட்டோ கீழே விழ, மாயா எடுக்கப் போகிறாள். அப்போது சீனு முந்தி கொண்டு எடுத்து விடுகிறான். உடனே மாயா “நீ போட்டோ ஒன்னும் காட்ட வேண்டாம், யாரை காதலிக்கிறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று சொல்கிறாள். இவர்கள் பேசிக் கொண்டதை பார்த்து கடுப்பாகும் ஷாரு, மாயாவை வெளியே துரத்துறேன் என மனதுக்குள் சபதம் எடுக்கிறாள்.
    அடுத்ததாக ரமணியம்மா “நாளைக்கு நோன்பு அதற்கான ஏற்பாடுகளை செய்யணும்” என்று சொல்ல, எல்லாரையும் இம்ப்ரெஸ் செய்ய பிளான் போடும் ஷாரு, “எல்லாவற்றையும் நானே கவனித்துக் கொள்கிறேன்” என்று சொல்கிறாள். எல்லாரும் “தனம் தான் எப்பவும் கோலம் போடுவா, அவளை மாதிரி யாராலும் போட முடியாது” என்று சொல்ல, “அதைக் கோலம் போட்டு முடித்த பிறகு சொல்லுங்க” என்று சொல்கிறாள்.
    பிறகு நோன்பிற்கான ஏற்பாடுகள் நடக்க, தனம் ஒரு பக்கமும் ஷாரு ஒரு பக்கமும் கோலம் போடத் தொடங்குகின்றனர். மாயா தனத்திற்கு உதவ, ஷாரு தனியாக இருக்க, சீனு கலர் பவுடர்களைக் கொண்டு வர, அதைப் பார்த்து பார்வதியும் பத்மாவும் “உனக்கு உதவ தான் சீனு வரான்” என்று சொன்னதும் ஷாரு சந்தோசப்படுகிறாள். 
    கடைசியாக சீனு இவர்களைக் கடந்து மாயா மற்றும் தனத்திற்கு உதவ, ஷாரு கடுப்பாக, மாயா தனத்திற்காக தான் இங்கே வந்தான் என்று வழக்கம் போல் தவறாக புரிந்து கொள்கிறாள். எல்லாரும் தூங்கிய பிறகு தன்னை விட தனம் கோலத்தை நன்றாக போட்டிருப்பதைப் பார்த்த ஷாரு, மோட்டார் போட்டு விட்டு கோலத்தை களையச் செய்து விடுகிறாள். 
    ஷாரு எங்கேயோ சென்று வருவதை மாயா பார்த்து விட, மறுநாள் எல்லாரும் முதல் வேலையாக கோலத்தைப் பார்க்க வெளியே வருகின்றனர். முதலில் ஷாரு கோலத்தை பார்த்து எல்லாரும் பாராட்டுகின்றனர். பிறகு தனத்தின் கோலத்தை பார்க்க அது முழுவதும் தண்ணீரால் கலைந்து கிடக்க தனம் கண்கலங்கி அழுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் எபிசோட் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: Sherina: பிக்பாஸ் பிரபலத்துக்கு பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் – கார் டிரைவரை கைது செய்தது ஏன்?
    Lal Salaam: கடவுள் முன் மன்றாடுவது போல இருந்தது.. லால் சலாம் ‘அன்பாளனே’ பாடல் பற்றி தேனிசைத் தென்றல் தேவா!

    மேலும் காண

    Source link

  • Hemant Soren: ஜார்க்கண்டில் திருப்பம்! ஹேமந்த் சோரனுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்கும் இடையே தொடர்பா? அதிர்ச்சி தகவல்

    Hemant Soren: ஜார்க்கண்டில் திருப்பம்! ஹேமந்த் சோரனுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்கும் இடையே தொடர்பா? அதிர்ச்சி தகவல்


    <p>ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும், கடந்தாண்டு வருமான வரித்துறை சோதனையில் ரூ.351 கோடியுடன் சிக்கிய காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாஹூவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>ஹேமந்த் சோரன் கைது:</strong></h2>
    <p>ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி, காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், சட்டவிரோதமாக சுரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து அதன்மூலம் பண பலன்கள் அடைந்ததாக 2022 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.&nbsp;</p>
    <p>இதனை சாதகமாக கொண்டு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்து வந்தது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனை 7 முறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக சொல்லியும், அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் தடாலடியாக முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் வீட்டுக்குள் நுழைந்து விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின் 2 சம்மன்கள் அவருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனை அதிரடியாக கைது செய்தது.&nbsp;</p>
    <h2><strong>காங்கிரஸ் எம்.பி.க்கு தொடர்பா?</strong></h2>
    <p>இப்படியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக அவர் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர். இதனிடையே அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீதான ஊழல் புகார் மீது நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p>
    <p>அதாவது, &lsquo;காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் சுமார் ரூ.351 கோடி அளவுக்கு கருப்பு பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் 5 நாட்களாக எண்ணப்பட்ட நிலையில் தீரஜ் சாஹூ தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். தீரஜ் சாஹூவிடம் பணம் கைப்பற்ற நிகழ்வை கடுமையாக விமர்சித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டார்.</p>
    <h2><strong>அமலாக்கத்துறை விசாரணை:</strong></h2>
    <p>ஆனால் அவரிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்ட நிகழ்வுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் கொடுத்தது. இந்த நிலையில் தான் தீரஜ் சாஹூவுக்கும், ஹேமந்த் சோரனுக்கும் இடையே தொடர்பு உள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது உள்ளிட்ட அடுத்தக்கட்ட விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>

    Source link

  • Santhosh Narayana Neeye Oli Music Concert Press Meet and shared breakup with arivu | Neeye Oli Concert: தெருக்குரல் அறிவு என் நம்பரை பிளாக் செய்துள்ளார்

    Santhosh Narayana Neeye Oli Music Concert Press Meet and shared breakup with arivu | Neeye Oli Concert: தெருக்குரல் அறிவு என் நம்பரை பிளாக் செய்துள்ளார்


    Neeye Oli Concert: பாடகர் அறிவு என் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். 
     
    சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தலைமையில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி 6 மணி நேரம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனையாகும் நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீயே ஒளி படத்திற்கு அறிவு பாடல் எழுதியது குறித்தும், அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 
     
    அதற்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், “நீயே ஒளி பாடலை அறிவு எழுதியுள்ளார். அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். வந்தால் மகிழ்ச்சி.அவர் என்னை பிளாக் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். தீ மற்றும் அறிவு பாடிய பாடல்கள் பல உள்ளன. என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் சில கோபங்கள் இருக்கலாம். காத்திருந்தால் எல்லாம் சரியாகும். கோபம் இருந்தால் எதனால் பிரச்சனை நடந்தது என புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும். அதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.
     
    என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து தன்னை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகளும், பாடகியுமான தீ புறக்கணித்து விட்டதாக கூறி தெருக்குரல் அறிவு குற்றம்சாட்டினார். இதனால் அறிவுக்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணனை பா. ரஞ்சித் கடிந்துக் கொண்டனர். அட்டக்கத்தி படத்தில் பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஒன்றாக பணியாற்றிய நிலையில் தங்கலான் படத்தில் வேறொரு இசையமைப்பாளருடன் பா. ரஞ்சித் பணியாற்றி வருகிறார். 
     
    சில காலங்களாக இருந்த சந்தோஷ் நாரயணன், அறிவு பிரச்சனை நீயே ஒளி என்ற இசை நிகழ்ச்சியால் முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில், அறிவு தன் தொலைபேசி எண்ணை பிளாக் செய்திருப்பார் என பேசி சந்தோஷ் நாராயணன் அதிர்ச்சி அளித்துள்ளார். 
     
    “ரஞ்சித் தான் இந்த நிகழ்ச்சி குறித்து முதலில் ட்வீட் செய்திருந்தார். சினிமாவில் ஒரு கூட்டணி அமைத்து படம் பண்ணும் நாட்கள் முடிந்தவிட்டதாக நினைக்கிறேன். அந்தந்த படத்துக்கு எது செட் ஆகுமோ அப்படித்தான் வேலைசெய்கிறார்கள். அதற்காக அந்தப் படத்தில் இணைந்து பணியாற்றாதவர்கள் சண்டையிட்டு கொண்டார்கள் என்றெல்லாம் இல்லை. கார்த்திக் சுப்புராஜூம் நானும் நல்ல நண்பர்கள். ஆனால், அவருடன் அனிருத், நான் என மாறி, மாறி வேலை செய்துள்ளோம். மற்றப்படி சண்டை எல்லாம் இல்லை. பா. ரஞ்சித் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவரது தங்கலான் படம் வெற்றிப்பெற வாழ்த்துகள் என்றார்.
     

     

    மேலும் காண

    Source link

  • வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.!

    வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.!


    <p>மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.&nbsp;</p>
    <h2><strong>வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்?</strong></h2>
    <p>இப்படிப்பட்ட சூழலில், வரி பகிர்வு விவகாரம், பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. மாநிலங்கள் தரும் வரியிலிருந்து நிதியை பெற்றுக் கொண்டு, திருப்பி தர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநில முதலமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.</p>
    <p>வரி பகிர்வில் கர்நாடகாவையும் தென் மாநிலங்களையும் மத்திய அரசு பாகுபாடுடன் நடத்துவதாக கூறி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது.</p>
    <p>கர்நாடகாவை சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தென் மாநில தலைவர்கள் மட்டும் இன்றி எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
    <h2><strong>பாஜகவுக்கு எதிராக பினராயி விஜயனுடன் கைக்கோர்த்த பிடிஆர்:</strong></h2>
    <p>டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான கபில் சிபல், தமிழ்நாடு அமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பழனிவேல் தியாகராஜன், கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) எம்எல்ஏக்கள், எம்பிக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.</p>
    <p>போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "கூட்டாட்சி முறையை அழித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு இழப்பை ஏற்படுத்துகிறது. இதை எல்லாம் தாண்டி, பாஜக ஆளாத மாநிலங்களுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளன.&nbsp;</p>
    <p>மாநிலங்களின் உண்மையான கோரிக்கைகளை வடக்கு-தெற்கு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாக சித்தரிக்க சில பிரிவுகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது. கூட்டாட்சி முறையை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகவும் வடக்கு, தெற்கு என இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு எதிராக ஜனநாயக போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும், நமது மக்கள் மற்றும் நமது மாநிலத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் அமைதியாக இருக்க முடியாது" என்றார்.</p>
    <p>போராட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "மாநிலங்கள் தங்களின் உரிமைகளை கோரி ஜந்தர் மந்தருக்கு வந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பினராயி விஜயன், தன் குடும்பத்திற்காக கொஞ்சம் பணம் கேட்க வரவில்லை.</p>
    <p>கேரளாவுக்கு வரவேண்டிய ஒதுக்கீடுகளைப் பெறவே அவர் வந்துள்ளார். சேர வேண்டிய நிதியை வழங்க மறுப்பது மட்டும் இன்றி, எதிர்க்கட்சி ஆளும் அரசாங்கங்களுக்கு இடையூறுகளை உருவாக்க ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களை பயன்படுத்துகிறது" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Rajinikanth throwback video goes viral on grounds lal salaam release

    Rajinikanth throwback video goes viral on grounds lal salaam release


    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அன்று முதல் இன்று வரை அதே சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 9ம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 
    இதுவே போதும்:
    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் த்ரோ பேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசுகையில் “பணம், பெயர், புகழ் இதை எல்லாம் சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் எதிர்பார்த்தது எல்லாம் சின்ன சின்ன கதாபாத்திரங்கள், வில்லன் கேரக்டர் பண்ணிக்கிட்டு, ஒரு ஸ்கூட்டர், கையில சிகரெட், ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கி சந்தோஷமா வாழ்ந்த போதும்னு நினச்சு நடிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீங்க என்ன எங்கயோ போய் உட்கார வைச்சுட்டீங்க. எனக்கு இதெல்லாம் எப்படி வந்ததுன்னு ஒன்னுமே புரியல. அந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. 
     

    ஆண்டவன் கிருபை:
    நான் ஷூட்டிங்ல டான்ஸ் பண்ணறதே ரொம்ப ரொம்ப கஷ்டம். என் கூட இருக்குறவங்க, டான்ஸ் மாஸ்டர் எல்லாருக்குமே அது நல்லா தெரியும். சில நேரத்துல அது இருபது டேக் எடுக்கும். அப்படி இருக்கும் போது நான் எப்படி ஸ்டேஜ்ல ஆடுவேன். அத நினைச்சு கூட பார்க்க முடியல. ஆனா போன தடவை இந்த நிகழ்ச்சில சீஃப் கெஸ்ட்டா கலந்துக்கிட்ட போது ஒரு சின்ன மூவ்மெண்ட் போட்டேன். அதுக்கே எல்லாரும் அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. அதனால நா என்ன கஷ்டபட்டாலும் சரி இந்த முறை ஆடி தான் ஆகணும்னு சொல்லி முடிவு பண்ணி அந்த ஆண்டவன் கிருபையில என்னமோ எனக்கு தெரிஞ்சதை நான் ஆடினேன். நீங்க எல்லாரும் சந்தோஷபட்டு இருப்பீங்கனு நம்புறேன். 
    என்னோட ரசிகர் பெருமக்களுக்கு நான் ஒண்ணே ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன். தயவு செய்து இதை யாரும் அட்வைஸா நினைக்காதீங்க. அந்த அளவுக்கு நான் வளரல. உங்களை பெற்றவர்கள் தான் நடமாடும் தெய்வங்கள். அவங்கள நீங்க சந்தோஷமா பாத்துக்கிட்டீங்கனா அந்த ஆண்டவன் நிச்சயமா உங்களை சந்தோஷமா பாத்துக்குவான். அதை விட பெரிய பூஜை இந்த உலகத்துல எதுவுமே கிடையாது. 
     

    Good morning friends❤#அன்புள்ள_ரஜினிகாந்த்#Vettaiyan #Thalaivar171 #Rajinikanth #LalsalaamFeb9 pic.twitter.com/16lahOKCOJ
    — Viju (@Viju16614469) February 4, 2024

    உங்களுடைய 14 வயதில் இருந்து 30 வயசு வரைக்கும் கோல்டன் பீரியட். அந்த 16 வருஷத்துல தான் நீங்க நல்லா படியா படிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை பெத்துக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகிடனும். அந்த 16 வருஷத்தை நீங்க வேஸ்ட் பண்ணிடீங்கன்னா உங்களோட வாழ்க்கையே வேஸ்ட்டா போயிடும்” என பேசி இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.  
     

    மேலும் காண

    Source link

  • Uttarakhand Curfew Imposed Shoot On Sight Order Issued After Violence Erupts In Haldwani

    Uttarakhand Curfew Imposed Shoot On Sight Order Issued After Violence Erupts In Haldwani


    உத்தரகாண்ட் மாநிலம் பன்புல்புராவில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், நைனிடால் மாவட்டம் ஹல்த்வானி நகரில் மதக்கலவரம் வெடித்துள்ளது. அரசு நிலத்தில் மதரஸாவை சட்டவிரோதமாக கட்டியதாகக் கூறி மாவட்டம் நிர்வாகம் இடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மதரஸா இடிக்கப்பட்டதால் வெடித்த கலவரம்:
    அதுமட்டும் இன்றி, தரைதளத்தில் இருந்த மசூதி போன்ற கட்டுமானமும் இடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக பன்புல்புரா பகுதியில் நைனிடால் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    மதரஸாவை இடித்த காரணத்தால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், நிலைமை மேலும் மோசமானது. பதற்றமான சூழலுக்கு மத்தியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதில் சிக்கி, பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காயமடைந்தனர்.
    உத்தரகாண்டில் தொடர் பதற்றம்:
    நிலைமையை ஆய்வு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அவசர கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராதா ரதுரி, உத்தரகாண்ட் காவல்துறை தலைவர் அபினவ் குமார் மற்றும் ஏடிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஏ.பி.அன்சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    இதை தொடர்ந்து பேசிய புஷ்கர் சிங் தாமி, “ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நிர்வாகத்தின் ஒரு குழு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றது. அப்போது, ​​சமூக விரோதிகள் சிலர், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில், சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் காயம் அடைந்தனர். 
    கூடுதல் போலீஸ் மற்றும் மத்தியப் படைகள் அங்கு அனுப்பப்படுகின்றன. அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கலவரக்காரர்கள், பொது சொத்துகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
     

    #BREAKING: Violence breaks out in Uttarakhand’s Haldwani after a Madrasa was demolished in the area… reports of stone pelting and arson by an angry mob pic.twitter.com/biz2nlA2DW
    — Akshita Nandagopal (@Akshita_N) February 8, 2024

    தொடர்ந்து பேசிய உத்தரகாண்ட் டி.ஜி.பி. அபினவ் குமார், “நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி, பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. நிலைமை பதற்றமாக உள்ளது. ஆனால் கட்டுக்குள் உள்ளது. வரும் நாட்களில் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    மேலும் காண

    Source link

  • Vijay fame minsara kanna film heroine Monica Castelino picture goes on viral

    Vijay fame minsara kanna film heroine Monica Castelino picture goes on viral


    Vijay Heroine: விஜய் நடித்த மின்சார கண்ணா பட்டத்தில் நடித்த மோனிகாவுன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதால் அவரா இவர் என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
     
    மின்சார கண்ணா ஹீரோயின்:
     
    1999ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மின்சார கண்ணா. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து குஷ்பு, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், அனுமோகன், சுந்தரராஜன், கோவை சரளா என பலர் நடித்திருப்பார்கள். காமெடி, பாடல், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்த படம் மின்சார கண்ணா. 
     
    படத்தில் ஆண்களை வெறுக்கும் கேரக்டரில் குஷ்பு நடித்திருப்பார். அவரது தங்கையான மோனிகாவை காதலிக்கும் விஜய் தனது குடும்பத்துடன் குஷ்பு வீட்டில் தங்கி இருந்து, அவரது மனதை மாற்றுவது படத்தின் கதையாக இருக்கும். இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக கே.எஸ். ரவிக்குமார் நடித்திருப்பார். படத்தில் விஜய் கோடீஸ்வரரின் மகனாக நடித்திருப்பார். படத்தில் நடித்த மோனிகாவுக்கு வரவேற்பு இருந்தது.
     
    வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்:
     
    மோனிகா அடுத்தத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடியாமல் போனது. மோனிகா எங்கே சென்றார் என்ற தகவலும் இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்தி சீரியல்களில் நடித்து வந்த மோனிகா, சத்யபிரகாஷ் சிங் என்ற துணை இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாட்டால் கணவரை ஒரே ஆண்டில் பிரிந்துள்ளார் மோனிகா. 
     
    இந்த நிலையில் 90களில் விஜய் ஹீரோயினாக இருந்த மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து இந்தி சீரியகளில் காமெடி மற்றும் முக்கிய ரோல்களில் நடித்து வரும் மோனிகா அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 
     

     

    மேலும் காண

    Source link

  • India Myanmar relationship witness crack suspends Free Movement Regime

    India Myanmar relationship witness crack suspends Free Movement Regime


    இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக இருப்பது மியான்மர். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதி 1,500 கி.மீட்டருக்கு மேல் நீள்கிறது. வரலாற்று ரீதியாகவும், இன ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக உறவை பேணி வருகிறது.
    மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மக்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்:
    இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேணி வருவதால், இந்திய – மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் இந்தியர்கள், மியான்மர் எல்லைக்குள் விசா இன்றி 16 கிமீ வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, இந்திய – மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மியான்மர் நாட்டு மக்கள், இந்திய எல்லைக்குள் 16 கிமீ வரை விசா இன்றி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் (Free Movement Regime) ஒரு பகுதியாக இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
    இந்த நிலையில், சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை (Free Movement Regime) உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது இந்தியா. இதனால், எல்லைப்பகுதியில் வசிக்கும் மியான்மர் நாட்டு மக்கள், இந்தியாவுக்கு செல்ல விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
    சாட்டையை சுழற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா:
    எக்ஸ் வலைதளத்தில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடுகையில், “இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மியான்மர் எல்லையில் உள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பை பராமரிக்கவும் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் (MHA) முடிவு செய்துள்ளது. 
    வெளியுறவு அமைச்சகம் தற்போது அதை ரத்து செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமையை உடனடியாக இடைநிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
     

    It is Prime Minister Shri @narendramodi Ji’s resolve to secure our borders.The Ministry of Home Affairs (MHA) has decided that the Free Movement Regime (FMR) between India and Myanmar be scrapped to ensure the internal security of the country and to maintain the demographic…
    — Amit Shah (@AmitShah) February 8, 2024

    சுதந்திரமாக நடமாடும் சிறப்புரிமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்திய – மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த நான்கரை ஆண்டுகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. அந்த வழியாக வரும் அனைவரும் விசா பெற்றிருக்க வேண்டும்.
    வேலி அமைக்க முயற்சி:
    கடந்த 2023ஆம் ஆண்டு, இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பேசுகையில், “சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இந்திய-மியான்மர் எல்லையில் சுந்திர நடமாடும் ஒப்பந்தத்தை நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தவும் மியான்மர் எல்லையில் வேலி அமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகிறது” என்றார்.
    மணிப்பூருடன் 390 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது மியான்மர். ஆனால், 10 கிமீ தொலைவில் மட்டுமே வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் காண

    Source link

  • actor bose venkat criticizes actor vijay political entry

    actor bose venkat criticizes actor vijay political entry


    எந்த விதமான பொதுப்பணியிலும் அனுபவம் இல்லாமல் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட்
    தமிழக வெற்றி கழகம்
     நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது  கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்த சூழலில் விஜய் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
    அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை அரசியலில் தனது லட்சியம் என்னவென்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். வரும்  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்ததாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு  அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் தொடங்கி உள்ளன.
    அடுத்த விஜயகாந்த் விஜய் தானா?
    விஜய் அரசியலுக்கு வரும் தகவல் வெளியானதில் இருந்து அவரை தேமுதிக தலைவர்  விஜயகாந்துடன் பலர் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சி தொடங்கி, பெரும் வரவேற்பை பெற்று  பின் பெரும் தொய்வை எதிர்கொண்டது. அதே போல் நடிகர் விஜய்யின் கட்சியும் பலத்த வரவேற்பும் நம்பிக்கையுடன் தொடங்கி இந்த தொய்வை சந்திக்க வாய்ப்பிருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் விஜய்க்கு ஆதரவாக இருப்பவர்கள் நிச்சயமாக தமிழக அரசியல் களத்தில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறி வருகிறார்கள். 
    குறிப்பாக சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய் படவாய்ப்புகளை விட்டுவிட்டு அரசியலில் இறங்குவது அவருக்கு மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.
    விஜய் குறித்து போஸ் வெங்கட்
     நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனியார் யூடியுப் சானல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் “   நான் பொதுவாழ்க்கையில் ஈடுபட இருக்கிறேன் என்றால் குறைந்தபட்சம் ஏதாவது வார்டில் செயலாளராக இருந்து மக்கள் பணி செய்திருக்க வேண்டும்.  ஒரு தலைமைப் பண்பு இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் . என்னுடைய 19 வயதில் நான் ஆட்டோ சங்கத்திற்கு தலைவனாக இருந்தேன் , அந்த சங்கத்தைப் பற்றியும் அதன் நடைமுறைகள் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும்.
    அதே போல் நடிகர் விஜய்காந்த்  நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், விஜய்காந்த் பிறவியிலேயே அரசியல்வாதி. பிறவியிலேயே தலைமைப் பண்பு கொண்டவர். தான் தலைவராக இருந்த நடிகர் சங்கம் கஷ்டபட்டபோது அதற்காக பாடுபட்டு அதை மீட்டெடுத்தார். விஜய்காந்த் மாதிரி விஜய்  நடிகர் சங்கத்தின் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஒன்றே ஒன்று சொல்கிறேன் விஜய் ஒரு முறை மேடை ஏறி பேசட்டு, அது வேறு யாராவது எழுதிக் கொடுத்து பேசினால் கூட பரவாயில்லை. அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிடும்” என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார்

    மேலும் காண

    Source link

  • Right to Disconnect: ஆபீஸ் முடிந்த பிறகும் வேலை அழைப்பு வருகிறதா? தடுப்பதற்கு வருகிறது புது சட்டம்!

    Right to Disconnect: ஆபீஸ் முடிந்த பிறகும் வேலை அழைப்பு வருகிறதா? தடுப்பதற்கு வருகிறது புது சட்டம்!


    <p>ஒரு நாளில் பணி நேரம் முடிந்தபிறகு அலுவல் தொடர்பான ஃபோன் அழைப்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை வழங்கும் முறையில் ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது.&nbsp;</p>
    <h2><strong>பணி நேரம் கடந்தும் வேலை:</strong></h2>
    <p>அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேலை செய்து பொருளீட்டுவது என்பது காலப்போக்கில் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளது. வேலை, குடும்பம், உறவுகள், வாழ்க்கை என எல்லாவற்றையும் சமநிலையோடு அணுகுவதில் ஆண், பெண் என இருவருமே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டிலிருந்தே பணி செய்வது, ஸ்மாட்ஃபோன் இருந்தால் போதுமானது என்ற நிலையும் வந்தாயிற்று. ஸ்மாட்ஃபோன் உதவியோடு செய்ய முடியாதது என்ற ஒன்று இல்லவேயில்லை. வாட்ஸ் -அப், கூகுள் மீட், ZOOM உள்ளிட்டவை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கிடையிலான உரையாடை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது.&nbsp;</p>
    <p>வேலை பற்றிய அப்டேட்களை மெசேஜ் மூலமாக உயரதிகாரிக்கு/ முதலாளிக்கு தெரிவிப்பது என்பது பணி செய்தலின் தன்மையாக இருக்கிறது.</p>
    <h2><strong>8 மணி நேர வேலை</strong></h2>
    <p>பிரிட்டனில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு வேலை நேரம் மீதான அழுத்தம் அதிகரித்தது. முதலாளிகள் தொழிலாளர்களின் மீது கொஞ்சலும் அக்கறையில்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சி என சுய நோக்கத்துடன் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது உள்ளிட்ட பாதிப்புகளினால், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு நாளைக்கு &lsquo; 8 மணி நேரம்&rsquo; வேலை என்ற சட்டத்தை முன்வைத்தது.</p>
    <p>உலக நாடுகளில் இது கொஞ்சம் கொஞ்சமாக அமலுக்கு வந்தது. அப்படியிருக்க, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் பல துறைகளில் வேலை செய்பவர்கள் அலுவலக பணி நேரம் முடிந்த பிறகும் கூட அது தொடர்பானவே யோசிப்பது, உரையாடுவது, உயரதிகாரிகளுடன் உரையாட வேண்டிய அவசியம் என நிலைமை இருந்து வருகிறது.&nbsp;</p>
    <p>எல்லாவற்றிற்கும் எல்லையுண்டு. அப்போதுதான் அதற்கான அழகும் ஆரோக்கியம் இருக்கிறது. அலுவலக பணியும் அப்படியே. ஒரு நிறுவனத்திற்கு உற்பத்தி நல்ல முறையில் இருக்க வேண்டுமெனில் தொழிலாளர்களின் நலனையும் வேலை நேரத்தையும் கவனித்து முறைப்படுத்த வேண்டும் என்பது பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது.&nbsp;</p>
    <h2><strong>வேலை நேரம் முடிஞ்சது – இனி நீ யாரோ..நான் யாரோ..</strong></h2>
    <p>&rdquo; அய்யோ…வேலை முடிச்சிட்டு வந்துட்டேன். ஆனாலும், இதுக்கெல்லாம் பதில் சொல்லுமே..&rdquo; என்று வேலை பற்றிய அதிருப்தி ஏற்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வேலை நேரம் முடிந்தபிறகும் தொழில் ரீதியிலான அழைப்புகள், மெசேஜ்களுக்கு பதிலளிப்பது ஆரோக்கியமான முறை இல்லை என்று சொல்லப்படுகிறது.</p>
    <p>அதை சட்டமாக கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அநாவசியமாக அலுவலகம் நேரம் முடிந்த பிறகு வரும் அழைப்புகளையோ, மெசேஜ்களை புறக்கணிக்க ஊழியர்கள் / பணியாளர்கள் உரிமை உண்டு என்பதே அது. அப்படி இதை மீறும் முதலாளிகள் அபராதம் செலுத்தவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.</p>
    <h2><strong>புதிய சட்டம்:</strong></h2>
    <p>ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் நலன் அமைச்சகம் "right to disconnect" என்ற நோக்கத்தோடு பணியாளர்களின் உரிமையை பாதுகாக்க புதிய சட்டவரைவு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பணி, வாழ்க்கை இரண்டையும் சமநிலையோடு எதிர்கொள்ள இந்தப் புதிய சட்டம் உதவும் என்று சொல்லப்படுகிறது. பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர் இந்தச் சட்டவரைவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என அந்நாட்டின் வேலைவாய்ப்பு &nbsp;துறை அமைச்சர் டோனி ப்ரூக் ( Tony Burke) தெரிவித்துள்ளார். இதன் மூலம் பணியாளர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்வதும் அதிக நேரம் வேலை செய்வதும் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>பிரதமர் கருத்து:</strong></h2>
    <p>வாட்ஸ்-அப்-ல் வேலை என்பது சிக்கலானது. &lsquo; ஏன் இவ்வளவு நேரம் கழித்து ரிப்ளை பண்றீங்க?&rsquo;, &lsquo;வாட்ஸ்-அப்ல ஸ்டேட்ஸ் வைக்க தெரியுது; ஏன் குரூப்ல மெசேஜ் பார்க்கலையா?&rsquo; உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்தச் சட்டம் இடமளிக்காது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>
    <p>தொழிலாளர் நலன் புதிய சட்டவரைவு தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ்&nbsp; (Anthony Albanese) கூறுகையில்,&rdquo; எந்தவொரு பணியாளரும் / தொழிலாளரும் 24 மணிநேரத்திற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அப்படியிருக்க, அவர்கள் 24 மணி நேரமும்&nbsp; தொடர்புகொள்ள முடியும் அளவிற்கு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறானது. அவர்கள் பதிலளிக்கவில்லை என்பதற்காக அபராதம் விதிப்பதும் நியாயமில்லை.&rdquo; என்று கருத்து&nbsp; தெரிவித்துள்ளார்.</p>
    <p>இந்த சட்டவரைவு நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணி நேரத்திற்கு பிறகான அழைப்புகளை புறக்கணிக்கும் சட்டம் ஏற்கனவே ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமலில் உள்ளது.</p>
    <hr />
    <p>&nbsp;</p>

    Source link

  • Anand Mahindra Meets Couple That Inspired 12th Fail Takes Autograph

    Anand Mahindra Meets Couple That Inspired 12th Fail Takes Autograph


    12th Fail: ஐ.பி.எஸ். மனோஜ்குமார் ஷர்மா, அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ். இருவரும் தான் உண்மையான ஹீரோக்கள் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். 
    12த் ஃபெயில் படம்:
    இந்தியில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு தியேட்டரில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வெளியான படம் ‘12த் ஃபெயில் (12th Fail)’.  சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார்.
    இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், அன்ஷுமன் புஷ்கர், அனந்த் விஜய் ஜோஷி, கீதா அகர்வால், ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி, விகாஸ் திவ்யாகீர்த்தி என பலரும் நடித்துள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரியான மனோஜ் குமார் ஷர்மாவின்  வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய இந்தப் படம் பரவலான கவனம்  பெற்றது. இந்த படத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
    12த் ஃபெயில் பட நிஜ தம்பதிகளுடன் ஆனந்த் மஹிந்திரா:
    இந்த நிலையில், ’12த் ஃபெயில்’ படத்தின் உண்மையான தம்பதிகளை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சந்தித்திருக்கிறார். ஐ.பி.எஸ். அதிகாரி மனோஜ் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ். ஆகியோரை சந்தித்து ஆட்டோகிராஃப் வாங்கினார்.

    They were shy when I requested them for their autographs, which I am proudly holding. But they are the true real-life heroes Manoj Kumar Sharma, IPS and his wife Shraddha Joshi, IRS. The extraordinary couple on whose lives the movie #12thFail is based. Over lunch today, I… pic.twitter.com/VJ6xPmcimB
    — anand mahindra (@anandmahindra) February 7, 2024

    இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”நான் அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டபோது, அவர்கள் வெட்கப்பட்டனர். ஐ.பி.எஸ். மனோஜ் குமார் ஷர்மா, அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ்., இருவரும் உண்மையான ஹீரோக்கள். இன்று அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டேன். 12த் ஃபெயில் படம் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை  அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதை தெரிந்து கொண்டேன்.
    நேர்மையான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை மக்கள் பின்பற்றினால், இந்தியா மிக விரைவில் வல்லரசாகும். இவர்கள் தான் இந்த நாட்டில் உண்மையான பிரபலங்கள். அவர்களிடம் பெற்ற ஆட்டோகிராஃபை எனது பரம்பரை சொத்தாக கருதுகிறேன்” என்று ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார். 

    மேலும் காண

    Source link

  • இடிக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் ; வணிக வளாகமாக மாறும் டிலைட் தியேட்டர்!

    இடிக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் ; வணிக வளாகமாக மாறும் டிலைட் தியேட்டர்!


    <p style="text-align: justify;">தென் இந்தியாவின் முதல் சலனப்படக் காட்சியாளர் என்ற பெருமைக்குரியவர் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். ஒரு பிரெஞ்சுக்காரரிடம் இருந்து பெற்ற தன் நவீன படக்காட்சி கருவியுடனும், துண்டு படச் சுருள்களுடனும், இந்தியா முழுக்கப் பயணம் செய்து, ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தனது சலனப்படங்களை காட்டி வந்தார். பிறகு, கோவையில் ஒரு நிரந்தர கொட்டகை ஒன்றை கட்டினார். அது தற்போது வெரைட்டிஹால் சாலையில் அமைந்துள்ள டிலைட் தியேட்டர் ஆகும். அதன் பழைய பெயர் தான் வெரைட்டி ஹால் என்பதாகும். அப்பெயரிலேயே அந்த சாலை அழைக்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;">இந்த திரையரங்கம் தான் தென்னிந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நிரந்தரமான திரையரங்கமாகும். கடந்த 1914ஆம் ஆண்டில் கட்டப்பட்டு இந்த திரையரங்கில், முதன் முதலில் வள்ளித் திருமணம் படம் திரையிடப்பட்டது. மின்சாரம் இல்லாத அந்த காலகட்டத்தில் வின்சன்ட் சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து ஒரு ஆயில் இஞ்சினை தருவித்து அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து திரையரங்கை இயக்கினார். அந்த மின்சாரத்தை கொண்டு திரையரங்கம் இருந்த வெரைட்டி ஹால் சாலை முழுவதும் மின்விளக்குகளால் ஒளிர செய்தார்.</p>
    <p style="text-align: justify;"><strong>நூற்றாண்டை தாண்டிய திரையரங்கம்</strong></p>
    <p style="text-align: justify;">பிரிட்டிஷ் இந்தியாவின் ரயில்வே துறையில் வரைகலை நிபுணராக வின்சன்ட் சாமி கண்ணு பணியாற்றி வந்த போது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனது நண்பர் சொந்த ஊருக்கு செல்ல பண உதவி செய்துள்ளார். அதற்கு கைமாறாக அவர் தன்னிடம் இருந்த பிலிம் ப்ரொஜெக்டர் கருவியுடன் சில படச்சுருள்களையும் கொடுத்து விட்டு சென்றார். ஆரம்ப காலகட்டத்தில் அந்த ஃபிலிம் ப்ரொஜெக்டர் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் திரை கட்டி படங்களை திரையிட்டு வந்தார். இதில் நல்ல வருவாய் கிடைக்க கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள சாலையில் நிரந்தர திரையரங்கை கட்டினார். இப்படித்தான் கோவைக்கு முதல் நிரந்தர திரையரங்கம் வந்தது. 1950 ஆம் ஆண்டு இந்தத் திரையரங்கம் வேறொரு நபருக்கு விற்கப்பட்ட நிலையில் வெரைட்டி ஹால் என்ற பெயர் டிலைட் என மாற்றம் செய்யப்பட்டது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/08/80822b95412f5bead181d81fb2bfbdc01707397534437188_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a>, அமிதாப்பச்சன் என திரை ஜாம்பவான்களின் தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்கள் டிலைட் திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டன. கோவையின் வரலாற்றுச் சின்னமான இந்த திரையரங்கம் ஒரு நுாற்றாண்டை கடந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் &nbsp;எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில், ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த திரையரங்குகள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் நவீன வசதிகளாலும் இன்றைய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுடன் போட்டியிட முடியாமல் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றம் கண்டுவிட்ட நிலையில், டிலைட் திரையரங்கமும் இதிலிருந்து தப்பவில்லை.</p>
    <p style="text-align: justify;">இங்கு பழைய படங்கள் மட்டுமே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க நிர்வாகம் கூறிவந்த நிலையில் தற்போது வணிக வளாகம் கட்டுவதற்காக திரையரங்கை இடிக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இது குறித்து வெரைட்டி ஹால் திரையரங்கின் அருகே கடை வைத்து நடத்தி வரும் கண்ணன் என்பவர் கூறும் போது, வரலாற்று பொக்கிஷமான டிலைட் திரையரங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. பாபி என்ற இந்தி படம் எப்போது இங்கு திரையிட்டாலும் 50 நாட்களைக் கடந்து ஓடும். ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இங்கு 100 நாட்களைக் கடந்து ஓடி இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தினங்களில் எப்போதும் அரங்கு முழுவதும் நிறைந்திருக்கும். தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கம் என பெயர் பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடம் இப்போது எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இனி இந்தக் கட்டிடம் மக்கள் பார்வைக்கு இல்லாமல் விடை பெறுவதுடன் வணிக வளாகமாக மாறுவது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.</p>

    Source link

  • Krishnagiri: ஓசூர் அருகே நில அதிர்வு! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள் – மாவட்ட ஆட்சியர் பரபரப்பு விளக்கம்

    Krishnagiri: ஓசூர் அருகே நில அதிர்வு! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள் – மாவட்ட ஆட்சியர் பரபரப்பு விளக்கம்


    <p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்த அஞ்செட்டி பகுதியில் இன்று இலேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல் அம்மாவட்டத்தில் உள்ள மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியிலும் நண்பகல் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் சம்பங்கி மார்தொட்டி முனியப்பன் கோயில் உள்ளது. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் சற்று பீதியடைந்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p>
    <p>உடனடியாக அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட அறிவிப்பில், &lsquo;கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆகவும், பூமிக்கடியில் 5 கி.மீ., நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்&rsquo; என கூறினார்.&nbsp;</p>
    <p>மேலும் தமிழ்நாட்டில் நில அதிர்வுகள் அரிது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஞ்செட்டி துணை வட்டாச்சியரான பன்னீர் செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள அறிக்கையில், &lsquo;அஞ்செட்டி கிராமத்தில் 2.9 ரிக்டர் அளவுகோலில் பிற்பகல் 12.48 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வால் எவ்வித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படவில்லை&rsquo; என தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.&nbsp;</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க: <a title="CM MK Stalin: மாநில உரிமையை பறித்ததுதான் மோடி பிரதமராக செய்த முதல் வேலை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு" href="https://tamil.abplive.com/news/india/tamil-nadu-chief-minister-m-k-stalin-said-that-the-central-government-is-taking-away-the-financial-rights-of-the-states-166376" target="_self">CM MK Stalin: மாநில உரிமையை பறித்ததுதான் மோடி பிரதமராக செய்த முதல் வேலை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு</a></strong></p>

    Source link

  • CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – மிரட்டும் தமிழ்நாடு அரசு

    CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – மிரட்டும் தமிழ்நாடு அரசு


    <p>திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு &nbsp;முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், &rdquo;தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 2021இல் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளைப் புதிது புதிதாக அமைத்துத் தமிழ்நாட்டை ஒரு தொழில் கோட்டமாக உருவாக்கிடும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள்.</p>
    <h2><strong>33 மாத ஆட்சிக் காலத்தில் எவ்வளவு முதலீடு?</strong></h2>
    <p>2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது.</p>
    <p>அதன் முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.</p>
    <p>இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.</p>
    <p>மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>
    <p>நான்காம் கட்டமாக 27-1-2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன்வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்கள்.</p>
    <h2><strong>8.65 இலட்சம் கோடி முதலீடுகள்</strong></h2>
    <p>அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.</p>
    <p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு பாராட்டியது. ஆண்டுவாரி முதலீட்டாளர்கள் சந்திப்பு 2022 நடைபெற்றபோது ஆசிய- ஒசியான மண்டலத்திற்கான சிறந்த முதலீட்டு நிறுவனத்திற்குரிய விருது தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.</p>
    <p>புதிய தொழில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டைப் பெரிய அளவில் தொழில்மயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் நில வங்கி உருவாக்கப்படுகிறது. இதற்காக, சிப்காட் நிறுவனம் ஏறத்தாழ 33,489 ஏக்கர் நிலம் தெரிவு செய்துள்ளது. இதில், 22,941 ஏக்கர் நிலம் அரசின் நிருவாக அனுமதி பெற்று கையகப்படுத்தப்பட்டு வருகிறது.</p>
    <h2><strong>&nbsp;30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்</strong></h2>
    <p>முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.</p>
    <p>இப்படித் தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன், ஒப்பந்தங்கள் தொழில் நிறுவனங்களாக உருப்பெறத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். இந்த குழுவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்பு உள்ளது.</p>
    <p>&nbsp;தமிழ்நாடு <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலினு</a>டைய 33 மாத ஆட்சிக் காலத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூபாய் 8.65 இலட்சம் கோடி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அதன் மூலம் ஏறத்தாழ 30 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது முதலமைச்சருடைய ஆட்சிக்காலம் ஒரு மாபெரும் தொழிற் புரட்சிக்கான அடித்தளம் என்பதை வெளிப்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>

    Source link

  • BJP White Paper Report Indian Economy PM Modi Govt India Economic Misery Negative Impacts Economy

    BJP White Paper Report Indian Economy PM Modi Govt India Economic Misery Negative Impacts Economy


    காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.
    பாஜக வெள்ளை அறிக்கை:
    அதில் தெரிவித்துள்ளதாவது, 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றபோது நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. பணவீக்கம் அதிகமாக இருந்தது. முதலீடுகள் குறைவாக இருந்தது. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் குறைந்த அளவில்தான் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது. மேலும் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் காமன்வெல்த் ஊழல் இருந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    NDA Govt’s White Paper:”There were numerous scams bringing colossal revenue losses for exchequer and fiscal and revenue deficits.””In 2014, govt inherited a deeply damaged economy whose foundations had to be rebuilt to enable self-sustaining long-term growth: White Paper”.… pic.twitter.com/JFhSSUrzde
    — Press Trust of India (@PTI_News) February 8, 2024

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏராளமான மோசடிகள் நடந்தது, அதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி பற்றாக்குறைக்கு வழி வகுத்தது. வங்கி நெருக்கடி UPA அரசாங்கத்தின் மிக முக்கியமான ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “2014க்கு முந்தைய காலகட்டத்தில் ஒவ்வொரு சவாலும் NDA அரசின் பொருளாதார மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் மூலம் சமாளிக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம் இந்தியாவை நிலையான வளர்ச்சியின் பாதையில் வைத்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோடி அரசாங்கம்தான் இந்தியாவை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு வந்தது எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
    காங்கிரஸ் கருப்பு அறிக்கை:
    இன்று மாலை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், இன்று காலை, காங்கிரஸ் தரப்பிலிருந்து பாஜகவின் 10 ஆண்டுகள் ஆட்சி குறித்து காங்கிரஸ் கருப்பு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. காங்கிரஸ் அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது, பிரதமர் மோடி 10 ஆண்டுகால ஆட்சியில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது, விலைவாசி உயர்ந்திருக்கிறது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரே நாளில், இன்று இரு அரசியல் கட்சிகளும், அறிக்கை வெளியிட்டிருப்பது அரசியல் சூட்டைக் கிளப்பியுள்ளது.
    இதையும் படிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்: Voter List: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்?
    இதையும் படிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்: “பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல.. மக்கள ஏமாத்துறாரு” பரபரப்பை கிளப்பும் ராகுல் காந்தி!

    மேலும் காண

    Source link

  • Womens Job Fair Tomorrow is the last day to register for a camp to find qualified women entrepreneurs to provide high-quality professional services in Tiruvannamalai – TNN | Womens Job Fair: மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்

    Womens Job Fair Tomorrow is the last day to register for a camp to find qualified women entrepreneurs to provide high-quality professional services in Tiruvannamalai – TNN | Womens Job Fair: மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்


    உயர்தர தொழில் சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ரூஙரழவ் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது ரூஙரழவ் ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும் நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டமானது 6 வட்டாரங்களில் 308 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயார் செய்தல், வங்கிக் கடன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை ரூஙரழவ்மதி சிறகுகள் தொழில் மையம்” மூலமாக தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் வழங்கி வருகிறது. தொழில் நிறுவன வளர்ச்சியின் அளவு பெரிதாக பெரிதாக தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்த இன்னும் பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்கு தேவைப்படுகிறது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் முகாம் 
    உதாரணமாக மார்க்கெட்டிங், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல் தொழில் நுட்பம், இயந்திரமயமாக்கல், தொழில் சார்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்ற சேவைகள் இத்தகைய சேவைகள் பெரும்பாலும் மகளிர் தொழில் முனைவோருக்கு குறிப்பாக கிராமப்புற மகளிர் தொழில் முனைவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. மேற்க்கண்ட சிறப்பான சேவைகளை பெற பெண்கள் பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நமது மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான மேற்க்கண்ட அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் வருகின்ற (12.02.2024) அன்று தேதி திங்கள் கிழமை அன்று திருவண்ணமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கம் இடத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.
     

     
    வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்கள் 
    ஆகவே நமது மாவட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களை துவக்கும் ஆர்வமும் யுக்தியும் திறமையும் கொண்ட புதிய மகளிர் தொழில் முனைவோர்களும் ஏற்கனவே தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டு  தங்களின் தொழில் கனவுகளை அடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றேன்.தொழில்முனைவோர் அனைவரும் தவறாமல் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவும். இம்முகாம் பற்றிய மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் 9385299736 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட திட்ட அலகு எண் .1 காந்தி  4 வது தெரு திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள (09.02.2024) தேதிக்கு முன்பாக கட்டாயம் பதிவு செய்து கொள்ளவும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Trichy news Olympic Academy in Trichy official announcement is to be made in the state budget – TNN | திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி

    Trichy news Olympic Academy in Trichy official announcement is to be made in the state budget – TNN | திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி


    திருச்சி மாவட்டத்தை சென்னைக்கு நிகராக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ஆசிய அளவில் பல்வேறு வசதிகளுடன் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும் அதே பகுதியில் லாரிகள் முனையம், காய்கறிகள் சந்தை, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பேருந்து முனையம் 80 சதவீத பணிகள் முடிக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் அகாடமி திருச்சியில் அமைக்கப்படும் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று, பஞ்சப்பூரில் இடமும் தேர்வு செய்யபட்டது. இந்த பணிகள் தொடங்குவதற்கு முறையான அறிவிப்பு பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மாநில பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள திறமையான இளைஞர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொண்டு நாட்டிற்கு பதக்கம் வெல்வதற்கு தீவிர பயிற்சி அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ,மு.க. ஸ்டாலின் 2022 டிசம்பரில் திருச்சியில் நடந்த விழாவில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான 2023-24 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு மாநில அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் தான் தற்போது 2024-25 பட்ஜெட்டில் ஒலிம்பிக் அகாடமிக்கு மாநில அரசு நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்த திட்டத்தை பட்ஜெட்டில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா சமீபத்தில் திருச்சிக்கு வந்து திருச்சி-மதுரை சாலையில் பஞ்சப்பூரில் உள்ள உத்தேச இடத்தை ஆய்வு செய்தார். ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மற்றும் SDAT அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இது தொடர்பாக வெளியான தகவலில், ஒலிம்பிக் அகாடமியை அமைப்பதற்காக SDATக்கு பஞ்சப்பூரில் 30 ஏக்கர் ஒதுக்கப்பட்டதைத் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்க திருச்சி மாநகராட்சி ஒப்புக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்டும் இடத்துக்கு இணையாக நிலத்தை ஒதுக்க மாநகராட்சி முன்வந்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மாநகராட்சியால் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 30 ஏக்கர் நிலம் போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் இடம் ஏற்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுக்க அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்கவுள்ளது. விளையாட்டு பொருட்களுக்கான கிட் மொத்தமாக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கேலோ இந்தியாவின் பாராட்டு விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் இத்திட்டத்தின் கீழ் அனைத்து 12,000 கிராம பஞ்சாயத்துகளிலும் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு கருவிகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய பின் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 
    தமிழ்நாடு தற்போது விளையாட்டு துறை வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் விளையாட்டு தலைநகர் என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாடு வேகமான முன்னேற்றத்தை பெற்றுள்ளது.தொடர்ச்சியாக தேசிய, சர்வதேச போட்டிகள் தமிழ்நாட்டில் நடக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டியும் நடைபெற்றது என்றார். மேலும் வருகாலங்களில் சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • Salem district collector provided loan assistance to 18,216 women self-help group members – TNN

    Salem district collector provided loan assistance to 18,216 women self-help group members – TNN


    ஈரோட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், துணை மேயர் சாரதா தேவி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

    இதில் சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 13,799 குழுக்களும், நகர்ப்புற பகுதியில் 7,083 குழுக்கள் என மொத்தம் 2,55,943 மகளிரைக் கொண்ட 20,882 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வருடம் தோறும் வங்கிக் கடன் இணைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் நடப்பாண்டான 2023-2024 ஆம் ஆண்டி ரூ.1,124 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை ரூ.1109 கோடி கடனுதவி பெறப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று ரூ.93.55 கோடி வங்கி கடனுதவியும். சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.3.29 கோடியும் ஆக மொத்தம் ரூ.96.84 கோடி நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1518 குழுக்களைச் சார்ந்த சுமார் 18,216 மகளிருக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மகளிர் சுய உதவி குழு கடன்களை வழங்கினார்.

    மேலும் காண

    Source link

  • New Movie Release list on lal salaam lover email premalu eagle

    New Movie Release list on lal salaam lover email premalu eagle

    New Movie Release: நாளை ரஜினி நடித்த லால் சலாம், மணிகண்டன் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ்வர் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகின்றன.
    லால் சலாம்
    தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அடுத்ததாக உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய லீட் ரோலில் நடித்துள்ளனர். 
     
    படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு, அதை சார்ந்து அரங்கேறும் சாதி, மதம் உள்ளிட்டவைகளை பேசும் லால் சலாம் படம் திரைக்கு வருவதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

    லவ்வர்
    அடுத்ததாக, லால் சலாம் படத்துக்கு போட்டியாக நாளை மணிகண்டன் நடித்த லவ்வர் படம் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கி இருக்கும் படத்தில் மணிகண்டன் லீட் ரோலில் நடித்துள்ளார். காதலில் ஏற்படும் சந்தேகங்களும், காதலர்களின் நம்பிக்கை, ஈரோ, பிரேக்கப், போட்டாபோட்டி உள்ளிட்டவற்றை அழகாக கூறும் படமாக லவ்வர் படம் உருவாகி உள்ளதாக படத்தின் இயக்குநர் வியாஸ் கூறியுள்ளார். 


    காதல் அப்படி ஒன்றும் பெரிய விசயம் அல்ல ., விட்டு விலகுதல்தான்- பாப்லோ நெருதா ♥️Lover , Movie with lot of romance , breakups , patch-ups, intense side of relationship , funny side of being in love , etc told in very close to reality manner ., such a good movie with emotions and… pic.twitter.com/otp8Jr3grU
    — 𝐑𝐚𝐧𝐣𝐢𝐭 𝐉𝐞𝐲𝐚𝐤𝐨𝐝𝐢 (@jeranjit) February 8, 2024

    தெலுங்கு, மலையாளம், பாலிவுட் ரிலீஸ்
    தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ஈகில் படம் நாளை ரிலீசாக உள்ளது. கார்த்திக் கட்டானேனி இயக்கி இருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படம் ரிலீசாக உள்ளது.
    மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடித்த அன்விஷிப்பின் கண்டேதும் படமும், பிரேமலு படமும் நாளை ரிலீசாக உள்ளது. இதை தவிர, இந்தியில் தேரி பதோன் மெயின் ஐசா உஜா ஜியா படமும் ரிலீசாக உள்ளது. இந்த படங்கள் மட்டுமில்லாமல், இமெயில் படமும் தமிழில் ரிலீசாக உள்ளது. 
     

    Published at : 08 Feb 2024 05:45 PM (IST)

    மேலும் காண

    Source link

  • Wildlife Photography: "அழகாக உறங்கும் துருவக் கரடி" சிறந்த வன உயிரின புகைப்பட கலைஞர் விருதை வென்றது!

    Wildlife Photography: "அழகாக உறங்கும் துருவக் கரடி" சிறந்த வன உயிரின புகைப்பட கலைஞர் விருதை வென்றது!


    <p>சிறைய பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் பிரிட்டன் தேசிய வராலாற்று அருங்காட்சியகத்தின் சார்பில் வழங்கப்படும் ஆண்டின் &lsquo;சிறந்த வனவிலங்கு புகைப்படம்&rsquo; (மக்கள் தேர்வு) விருதைப் பெற்றுள்ளது.</p>
    <h2><strong>தூங்கும் துருவக்கரடி:</strong></h2>
    <p>துருவக் கரடி அழகாக உறங்கிய படத்தை எடுத்த பிரிட்டனைச் சேர்ந்த நிமா சரிஹானி (Nima Sarikhani) ‘ இந்தாண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்&rsquo; விருதை வென்றுள்ளார். &rsquo;Natural History Museum&rsquo; நடத்திய புகைப்படப் போட்டியில் நார்வே தீவுகளில் உள்ள துருவக் கரடியை படமெடுத்த புகைப்படத்திற்கு &lsquo;சிறந்த புகைப்பட கலைஞர்&rsquo; (மக்கள் தேர்வு) விருது அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>இந்தப் புகைப்பட போட்டியில்&nbsp; சுமார் 95 நாடுகளில் இருந்து மொத்தமாக 50,000 பேர் பங்கேற்றனர்.&nbsp; கேமராவில் ஃப்ரீஸ் செய்த வன உயிரினங்களின் வாழ்விடத்தில் அழகியலுடன் புகைப்படங்களை எடுத்து அனுப்பி இருந்தனர். அதிலிருந்து சிறந்த 25 பதிவுகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் நிமா எடுத்த, பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் படம் சிறந்த படமாக தேர்வு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. துருவக் கரடியின் புகைப்படத்திற்கு&nbsp; 75,000 பேர் வாக்களித்துள்ளனர்.&nbsp;</p>
    <h2><strong>3 நாட்கள் காத்திருப்பு:</strong></h2>
    <p>விருது குறித்து நிமா கூறுகையில், மூன்று நாட்களாக துருவக் கரடியின் வருகைக்காக காத்திருந்தேன். ஒரு நாள் வந்தது. இந்தாண்டிற்கான மக்கள் தேர்வு சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்திற்கு வடக்குப் பகுதியில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். அதை காணும்போதே அவ்வளவு அழகாக இருந்தது.&rdquo; என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p>
    <p>&rdquo; பனி அதிகம் இருக்கும் இடத்தை தேடி சென்றோம். அங்கு வயதில் இளைய மற்றும் மூத்த ஆண் துருவக் கரடிகளை பார்த்தோம். சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்தோம். ஒரு நள்ளிரவில் கரடி ஒன்று சிறிய பனிப்பாறையின் மீது ஏறி, தனது வலுவான பாதங்களைப் பயன்படுத்தி, தான் தூங்கும் இடத்தை தயார் செய்தது. நகங்களை பயன்படுத்தி அது பனியை செதுக்கியது அழகாக இருந்தது. பின்னர் தூங்கியது. அதை படமாக எடுத்தேன்&rdquo; என நிமா தெரிவித்தார்.</p>
    <p>சிறிய பனிப்பாறை மீது இயற்கையின் அழகையும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலையும் ஒரு சேர வெளிக்காட்டும்படியாக அமைந்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p>
    <hr />
    <p>&nbsp;</p>

    Source link

  • கரூர் அருகே பஞ்சாயத்து சிறப்பு கிராம சபைக்கூட்டத்திலேயே பஞ்சாயத்து ?

    கரூர் அருகே பஞ்சாயத்து சிறப்பு கிராம சபைக்கூட்டத்திலேயே பஞ்சாயத்து ?


    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாந்தூர் கிராமத்தில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற கிராம சபைக்கூட்டம் மக்கள் வராமல் முடிக்கவைக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்த பின்னர், மீண்டும், சிறப்பு கிராம சபைக்கூட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் துணைத்தலைவர் செல்வராஜ் முன்னிலையில், கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கோடாந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே நடைபெற்ற இந்த கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களும், மக்களும் கலந்து கொண்டனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/08/b4e816e97f10893ec67c6ea38c524d4c1707382301680113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">இந்நிலையில், கிராம பஞ்சாயத்திற்கு தேவையான நோட்டிஸ்கள் அடிக்கப்பட்டதற்கும், பொருட்கள் வாங்கப்பட்டதற்கும் எந்த ஒரு டெண்டர் ஒப்பந்தப்புள்ளி வைக்காமல், பல லட்சம் ரூபாய் கையாடல் நடைபெற்றுள்ளதாகவும், அந்த பில்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் பிரிண்டிங் பிரஸ்களும் இல்லை, கடைகளும் இல்லை, தவறான முகவரி மற்றும் போலியான பில்கள் கொடுத்து பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் பஞ்சாயத்து நிர்வாகம் மூடி மறைப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காரசார விவாதங்களில் ஈடுபட்டனர். மேலும், சரியான நடவடிக்கையும், முறையான தகவல்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதற்கிணங்க, பின்னர் அங்கிருந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கலைந்து சென்றனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/08/2947a5799f10459a4d71743d48810d5c1707382322104113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">ஏற்கனவே பஞ்சாயத்து கிராம சபைக்கூட்டத்தில் ஏராளமான கோரிக்கைகள் எழும், அல்லது சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவர். ஆனால், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக ஏராளமான திட்டங்கள் மற்றும் புதிய பொருட்கள் வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்காமல், பஞ்சாயத்து தலைவரும், துணைத்தலைவரும் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதையும் அதில் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதையும் ஆதாரப்பூர்வமாக சமூக நல ஆர்வலர் மொய்ஞானமூர்த்தி என்ற ஒருவர் வெளியிட்ட ஆதாரங்கள், பஞ்சாயத்திற்கே, பஞ்சாயத்து வைக்கும் செயலாக உள்ளது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!

    UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!


    <p>விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.</p>
    <h2><strong>பொது சிவில் சட்ட மசோதா:</strong></h2>
    <p>இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார்.</p>
    <p>இது தொடர்பான சட்ட முன்வடிவை உருவாக்குவதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், &nbsp;உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது உத்தரகாண்ட் பாஜக அரசு.&nbsp; சுமார் ஓராண்டாக மக்களிடம் கருத்துகளை கேட்ட குழு தனது அறிக்கையை தயாரித்தது.&nbsp;</p>
    <p>இந்த அறிக்கையை பொது சிவில் சட்ட வரைவாக தயாரித்து உத்தரகாண்ட் அரசிடம் வழங்கியது. இதற்கு உத்தரகாண்ட மாநில அமைச்சரவையும் கடந்த 4ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.&nbsp;இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.&nbsp;</p>
    <h2><strong>யார் யாரை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா?</strong></h2>
    <p>இந்த மசோதா மீது விவாதங்கள் நடத்தப்பட்டு, நேற்று நிறைவேற்றப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் &nbsp;தாமி உரைக்கு பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, நாட்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட்.&nbsp; இந்த நிலையில், பொது சிவில் சட்ட மசோதாவில் யார் யாரை திருமணம் செய்யக் கூடாது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.</p>
    <p>அதன்படி, அம்மா, இறந்த தந்தையின் மனைவி ( தாய் இல்லாமல்), பாட்டி, தாய் வழி தாத்தாவின் இறந்த விதவை மனைவி, தாய் வழி பாட்டியின் தாய் (கொள்ளுப் பாட்டி), தாத்தாவின் இரண்டாவது மனைவி, &nbsp;தாய் வழி தாத்தாவின் தாய்,&nbsp; தந்தையின் தாய், தந்தை வழி தாத்தாவின் விதவை மனைவி(பாட்டி), தந்தை வழி பாட்டியின் தாய், தந்தை வழி பாட்டியின் தந்தையின் விதவை மனைவி, தந்தை வழி தாத்தாவின் தாய், தந்தை வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி, மகள், இறந்த மகனின் மனைவி, மகள் வழி பேத்தி, மகள் வழி பேரனின் இறந்த மகனின் மனைவி, மகன் வழி பேத்தி, சகோதரி, சகோதரியின் மகள், சகோதரனின் மகள், தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி, தந்தையின் சகோதரனின் மகள், தந்தையின் சகோதரியின் மகள், தாயின் சகோதரியின் மகள், தாயின் சகோதரனின் மகள் உள்ளிட்டோர்களை திருமணம் செய்ய தடை என்று &nbsp;மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • actress yami gautam reveals about her pregnancy at article 370 trailer launch event

    actress yami gautam reveals about her pregnancy at article 370 trailer launch event


    தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகை யாமி கெளதம் (Yami Gautam) தனது படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.
    யாமி கெளதம்
    பஞ்சாப் இயக்குநர் முகேஷ் கெளதமின் மகள் யாமி கெளதம், தொடக்க காலத்தில் சோப் மற்றும் ஃபேர் & லவ்லி விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த விக்கி டோனர் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ’ தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்கிற படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்தார். அக்‌ஷய் குமார் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஒ.எம்.ஜி 2 ஆம் பாகத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    தமிழ், தெலுங்கு , கன்னடம் , இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் நடித்த யாமி கெளதம், கடந்த 2015ஆம் ஆண்டு ’சனம் ரே’ படத்தில் நடித்து வந்தார்.  அப்படத்தில் நடித்த  நடிகர் புல்கித் சாம்ராட்டை அவர் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக எந்த விளக்கமும் அவர் தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை, புல்கித் சாம்ராட்டின் மனைவி இந்தத் தகவலை வெளிப்படையாக தெரிவித்தப் பின்னர், இந்த தகவல்கள் உறுதிபடுத்தப் பட்டன.
    இதனைத் தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ’ஆதித்யா தார்’ என்பவரை திருமணம் செய்துகொண்டார் யாமி கெளதம். இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி தங்களது திருமணத்தை விமரிசையாகக் கொண்டாடினார்கள்.  திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை ’யாமி கெளதம் தார்’ என்று அவர் மாற்றவும் செய்தார்.
    முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் யாமி கெளதம்

    Poora ka Poora Kashmir, Bharat Desh ka hissa tha, hai aur rahega! #Article370Trailer Out Now! Releasing in cinemas on 23rd February#PriyaMani @vaibbhavt @arungovil12 #KiranKarmarkar @TheRajArjun @Skand2021 @koulashwini2 #IrawatiMayadev #AshwaniKumar #DivyaSeth @sumitkaul10… pic.twitter.com/nZ2GGzzjYD
    — Yami Gautam Dhar (@yamigautam) February 8, 2024

    ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம், பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ஆர்ட்டிகிள் 370. இப்படத்தை யாமி கெளதமின் கணவர் ஆதித்யா தார் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் தார் இணைந்து தயாரித்துள்ளார்கள்.  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது.
    இந்த நிகழ்ச்சியில் தனது மனைவி  5 மாதம் கருவுற்றிருப்பதாக ஆதித்யா தார் தெரிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடின் இடையில் தான் கருவுற்று இருப்பது தனக்கு தெரிய வந்ததாக யாமி கூறியுள்ளார். தனது வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு இந்தப் படத்தில் நடித்து வந்த அனுபவம் தனக்கு மிகுந்த சவாலானதாக இருந்ததாக யாமி கெளதம் தெவித்துள்ளார். தனது கணவன் மற்றும் அவரது சகோதரர் இல்லாவிட்டால் தன்னால் எதையும் செய்திருக்க முடியாது” என்றும் யாமி கூறியுள்ளார்.
    இந்நிலையில் பாலிவுட் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் யாமிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
     

    மேலும் காண

    Source link

  • Congress leader Rahul Gandhi says PM Modi Not Born In OBC Family Misleading People

    Congress leader Rahul Gandhi says PM Modi Not Born In OBC Family Misleading People


    இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்டை தொடர்ந்து ஒடிசா சென்றடைந்துள்ளது.
    பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு:
    ஒடிசா மாநிலத்தில் யாத்திரையின்போது பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தவர் அல்ல, பொதுப்பிரிவை சேர்ந்த அவர் தன்னை ஓபிசி என சொல்லி கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக பேசியுள்ளார்.
    இதுகுறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி, ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். கடந்த 2000 ஆம் ஆண்டு, தெலி சாதியை பா.ஜ.க.தான் ஓபிசி பிரிவில் சேர்த்தது. பொது பிரிவை சேர்ந்தவர் பிரதமர் மோடி. அவர் ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை, பொது பிரிவில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விடமாட்டார்” என்றார்.
    மக்களவை தேர்தலுக்கு 45 நாள்கள் கூட இல்லாத நிலையில், பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஓபிசி மற்றும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது.
    ஓபிசி அரசியலை கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி:
    குறிப்பாக, ஓபிசி மக்களுக்கான அரசியலை கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு நேர் எதிராக, தேர்தல் பிரச்சாரம் தொடங்கி நாடாளுமன்ற வரை, பிரதமர் மோடி தன்னுடைய ஓபிசி அடையாளத்தை முன்னெடுத்து வருகிறார்.
    நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருப்பதால் அவர்களை தன் பக்கம் இழுப்பதில் காங்கிரஸ், பாஜக போட்டியிட்டு வருகிறது.
     

    #WATCH | Congress MP Rahul Gandhi says, “PM Modi was not born in the OBC category. He was born Teli caste in Gujarat. The community was given the tag of OBC in the year 2000 by the BJP. He was born in the General caste…He will not allow caste census to be conducted in his… pic.twitter.com/AOynLpEZkK
    — ANI (@ANI) February 8, 2024

    ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் மாநில கட்சிகளே செல்வாக்கு மிக்கதாக உள்ளன. குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஓபிசி மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது.
    வரும் மக்களவை தேர்தலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களே மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்.
     

    மேலும் காண

    Source link

  • STR 48 Director Desingh periyasamy appreciates manikandan starrer lover movie

    STR 48 Director Desingh periyasamy appreciates manikandan starrer lover movie


    லவ்வர் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ட்வீட் வெளியிட்டுள்ளார்.
    லவ்வர்
    குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி,  ஹரிஷ் குமார்,  கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர்,  அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
    அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வரவேற்பைப் பெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வேலண்டைன்ஸ் வார ஸ்பெஷலாக இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.
    சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. எளிமையான ஒரு காதல் கதை. அதில் காதலர்களுக்கு நடுவில் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தில் நிறைய இடங்களில் நடிகர் மணிகண்டன் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மிக ஆர்வமாக குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை எதிர்பார்த்து வரும் நிலையில் லவ்வர் படத்தின் சிறப்பு திரையிடலைப் பார்த்த விமர்சகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
    எஸ்.டி ஆர் இயக்குநர் பாராட்டு
    இந்நிலையில், லவ்வர் படத்தைப் பாராட்டி இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “லவ்வர் படம் மிக நேர்த்தியாகவும் திரைக்கதை இயல்பாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்த மணிகண்டன் மற்றும் நடிகை கெளரி பிரியா இருவருமே கலக்கிட்டீங்க. கண்ணன் ரவியின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருக்கிறது. நிச்சயம் இப்படம் சிறப்பான வெற்றிபெறும்.” என்று கூறி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Watched #Lover a well written and neatly made movie…@Manikabali87 and @gouripriyareddy rendu perum kalakkitteenga,refreshing to see @iamkannaravi in this movie superb brother…sure shot hit…congrats @mageshraj and @Yuvrajganesan vaazhthukkal brother @Vyaaaas 💐💐💐 pic.twitter.com/9ecjzNbpOj
    — Desingh Periyasamy (@desingh_dp) February 8, 2024

    எஸ்.டி ஆர் 48
    ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார் தேசிங்கு பெரியசாமி. தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் எஸ்.டி. ஆர் 48 படத்தை இயக்குகிறார். சிலம்பரசன் இரண்டு கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    மேலும் காண

    Source link

  • நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன

    நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன


    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்திற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
    அதன்படி சங்கர் லால் குமாவத் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐஏஎஸ் அதிகாரியான அரவிந்தன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான அறிவிப்பானையை இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் ராகுல் சர்மா, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
    முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து 2 நாட்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் காண

    Source link

  • In Ayodhya we are ready to provide KFC a space if only veg foods allowed Govt official | KFC in Ayodhya: அயோத்தியில் கே.எஃப்.சி. கடை! இது லிஸ்ட்லயே இல்லையே

    In Ayodhya we are ready to provide KFC a space if only veg foods allowed Govt official | KFC in Ayodhya: அயோத்தியில் கே.எஃப்.சி. கடை! இது லிஸ்ட்லயே இல்லையே


    அயோத்தி ராமர் கோயில்:
    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.  குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.
    பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். அதன்பின், 23-ம் தேதி, அனைவரின் பார்வைக்கும் கோவில் திறக்கப்பட்டது.
    சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது..
    ராமர் கோயிலுக்கு அருகில் கே.எஃப்.சி. கடையா?
    இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால், அயோத்தி திணறி வருகிறது. அதே நேரத்தில், கோடிக்கணக்கல் வருவாயும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், அயோத்தியில் கே.எஃப்.சி. கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    ஆனால், சைவ உணவு வகைகளை மட்டுமே அக்கடையில் விற்பனை செய்ய வேண்டும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அயோத்தி ராமர் கோயிலை சுற்றுயுள்ள 15 கி.மீ தொலையில் உணவு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இறைச்சி  மற்றும் மதுபானங்கள வழங்கக் கூடாது என்று கோயில் நிர்வாகம் ஏற்கனவே  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    சைவ உணவுகள் மட்டுமே விற்க வேண்டும்
    ஏற்கனவே Dominos, Pizza Hut போன்ற கடைகளில் சைவ உணவுகளை மட்டுமே விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது கேஎஃப்சி கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.  ஆனால், சைவ உணவுகளை மட்டுமே விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
    இது குறித்து அயோத்தி அரசு அதிகாரி கூறுகையில், ”அயோத்தியில் கே.எஃப்.சி. கடை அமைக்க நாங்கள் அனுமதி அளிக்கிறோம். ஆனால், நாங்கள் அசைவ உணவுகளை இங்கு அனுமதிக்கவில்லை. சைவ உணவுகளை மட்டுமே விற்க முடிவு செய்தால் கே.எஃப்.சி.க்கு இடம் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

    மேலும் படிக்க
    CM MK Stalin: மாநில உரிமையை பறித்ததுதான் மோடி பிரதமராக செய்த முதல் வேலை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    Election Commission: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்

    மேலும் காண

    Source link

  • Chennai Bomb Threat News Schools Bomb Scare Hoax Chennai Additional Commissioner of Police Prem Anand Sinha | Chennai Bomb Threat: சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே; குற்றவாளியைப் பிடிக்க சைபர் படை

    Chennai Bomb Threat News Schools Bomb Scare Hoax Chennai Additional Commissioner of Police Prem Anand Sinha | Chennai Bomb Threat: சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே; குற்றவாளியைப் பிடிக்க சைபர் படை


    Chennai Bomb Threat Latest News: சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேபோல  இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
    சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் இன்று (பிப்.7) வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல சாந்தோம், பெரம்பூர், பூந்தமல்லி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தினர்.
    யாரும் பயப்பட வேண்டாம்
    பள்ளி நிர்வாகத்தினர் குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
    ஒரே இ- மெயில் முகவரி
    இந்நிலையில், சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று (பிப்.8) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ’’சோதனைகளுக்குப் பிறகு, பள்ளிகளில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இன்று காலை 10.30 முதல் 11 மணிக்குள் இ – மெயில் வந்தது.
    அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே இ- மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. எனினும் மெயிலில் எந்த தேவையும் கேட்கப்படவில்லை. அவை குறித்த கூடுதல் தகவல்களை, தற்போது அளிக்க முடியாது. பள்ளிகளில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு, ஏற்கெனவே விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளிதான் என்று தெரிய வந்துள்ளது.
    சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க சைபர் படை அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோரும் பொது மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்’’ என சென்னை தெற்கு காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Indian Cricketer Virat Kohli Unlikely To Play In 3rd And 4th Test Against England Latest Tamil Sports News

    Indian Cricketer Virat Kohli Unlikely To Play In 3rd And 4th Test Against England Latest Tamil Sports News

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளிலும் விராட் கோலி விளையாடுவது சந்தேகம்தான். அதன்படி, ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடக்கும் போட்டிகளில் விராட் கோலி களமிறங்கமாட்டார் என தெரிகிறது.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அணி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். இந்தநிலையில், அவரது மனைவி அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்ததை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலானது. 
    பிடிஐ செய்தி அறிக்கையின்படி, விராட் கோலி ஐந்தாவது டெஸ்டிலும் (மார்ச் 7-11) விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ குடும்ப விஷயங்கள் என்று வரும்போது, கிரிக்கெட் வீரருக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது. அவர் இந்திய அணிக்கு எப்போது திரும்ப நினைக்கிறாரோ, அப்போது திரும்பி வரட்டும். இதை பிசிசிஐ மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவாகும். தற்போது அவர் இந்த தொடரில் முழுவதுமாக விளையாட வாய்ப்பில்லை” என தெரிவித்தார். 
    விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அடி:
    இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய அடி. விராட் கோலி சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சாதனையை முறியடித்தார். இதன் பிறகு, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கூட, விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு நிறைய ரன்களை குவித்தார். தற்போது இந்திய அணி மிடில் ஆர்டரில் விராட் கோலி இல்லாமல் தவித்து வருகிறது. விராட் கோலியைத் தவிர, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள எந்த வீரரும் அணியில் இல்லை.
    விரைவில் அணி அறிவிப்பா..? 
    இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கி எதிராக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. தற்போது இரு அணிகளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடும். இரு அணிகள் மோதும் இந்த போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    யார் யார் அணியில் மீண்டும் களமிறங்குவார்கள்..?
    டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் திரும்பலாம் என தெரிகிறது. காயம் காரணமாக இருவரும் கடைசி போட்டியில் விளையாடவில்லை. தற்போது, இரு வீரர்களும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம் மீண்டும் களமிறங்கலாம். 
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் களமிறங்கினார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸிலும் அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • மயிலம் அருகே மண் சரிவில் சிக்கி 2  தொழிலாளர்கள்  உயிரிழப்பு

    மயிலம் அருகே மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு


    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் செயல்படும் கல்குவாரியில் வெடி வைப்பதற்காக பள்ளம் தோன்டிய போது மண் சரிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தில் இரண்டு வருடங்களாக டிபிஎல் என்ற நிறுவனத்தின் கல்குவாரி &nbsp;செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரை சார்ந்த அய்யனார் சேலத்தை ராஜேந்திரன் ஆகிய இருவரும் வழக்கம் போல் இன்று பணிக்கு வந்து கல் குவாரியில் பாறைகளை எடுப்பதற்காக பள்ளம் தோண்டி வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரும் நின்றிருந்த பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் வெடி வெடிப்பதற்கான டிரில் போட்டு மருந்து வைக்கும் இரு தொழிலாளர்களும் மண் சரிவில் சிக்கியுள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">மண் சரிவில் சிக்கி கொண்டவர்களை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு வெளியே எடுத்தபோது மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குவாரியில் பணி புரிபவர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவதில்லை என்பதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக புகார் அளியுங்கள் என கூறி கலைந்து செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.</p>
    <p style="text-align: justify;">அதன் பிறகு இறந்த இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். கல்குவாரியில் வெடி வெடித்த போது மண் சரிவு ஏற்பட்டு இரு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>

    Source link

  • Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!


    Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    Source link

  • புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய்  விற்பனை –  புதுச்சேரியில் பெற்றோர்கள் அச்சம்

    புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை – புதுச்சேரியில் பெற்றோர்கள் அச்சம்


    <p style="text-align: justify;">புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் &rsquo;பிங்க்&rsquo; நிற பஞ்சு மிட்டாயில், புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் கேன்சரை உருவாக்க கூடிய விஷ தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு&nbsp; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை வாங்கி சோதனை செய்தனர். அதில் ரோடமின் பி (RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்தது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும்.</p>
    <p style="text-align: justify;">குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த வட மாநில இளைஞர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தியதுடன் அவர்களில் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.</p>
    <p style="text-align: justify;">புதுச்சேரியில் 30 வட மாநில இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவது தெரிவததை தொடர்ந்து&nbsp; அவர்களுடைய விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தன்வந்தி நகர் போலீசார் வழக்குப் பதிவு&nbsp; செய்து பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநில இளைஞர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.</p>

    Source link

  • Tamil Nadu latest headlines news till afteroon 8th february2024 flash news details here | TN Headlines: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

    Tamil Nadu latest headlines news till afteroon 8th february2024 flash news details here | TN Headlines: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை



    Chennai Bomb Threat: பரபரப்பு… சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை

     சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

    Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

    சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என பேசியிருந்தார். மேலும் படிக்க

    Senthil Balaji ED Raid: மீண்டும் அதிரடி.. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஒரு காரில் வந்த  5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

    Gold Silver Rate: குறையும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 குறைந்தது.. இன்றைய நிலவரம்..

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,480 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க

    TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..

    தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்று, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

    மேலும் காண

    Source link

  • நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன

    நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன


    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
    அதன்படி சங்கர் லால் குமாவத் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமினம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளான அரவிந்த், ஸ்ரீகாந்த், ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து 2 நாட்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் காண

    Source link

  • oscar winner joaquin phoenix speech is similar to actor silambarasan cow speech

    oscar winner joaquin phoenix speech is similar to actor silambarasan cow speech


    சமூக வலைதளங்களில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan TR) பேசியுள்ள வீடியோ ஒன்று சமீபகாலமாக அதிகம் பகிரப்பட்டு மீம் மெட்டீரியலாக மாறியிருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உருவான ஜல்லிகட்டு போராட்டத்தின்போது, விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்பான பீட்டாவுக்கு எதிராக சிலம்பரசன் இந்தக் காணொளியில் பேசியிருந்தார்.

    “அதாவது ஒரு மாடு தன் குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை, அந்த கன்றுகுட்டியை கட்டிப்போட்டு பாலைக் கரந்து, அதில் உருவாகும் காஃபியை காஃபி டேவிலும் பரிஸ்டாவிலும் அமர்ந்து குடித்துக் கொண்டு விலங்குகளில் உரிமையைப் பற்றி பேசுறியா?” என்று சிம்பு பேசியிருந்தார். இந்த வீடியோ சமீப காலமாக மீண்டும் சமூக வலைதளத்தில் படுவைரலாகி வருகிறது.
    ஆனால் இந்த வாதத்தை வைத்தவர்  சிலம்பரசன் ஒருவர் மட்டுமில்லை. சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து ஆஸ்கர் விருது வென்ற வக்கின் ஃபீனிக்ஸ் (Joaquin Phoenix) இதையேதான் தனது ஆஸ்கர் உரையில் பேசினார் என்றால் ஆச்சரியப்படுவீர்களா? ஆமாம், சிலம்பரசன் பேசிய அதே வார்த்தைகளை அச்சி பிசிறாமல் அவர் பேசினார்.
     
    ஜோக்கர் படத்திற்கு ஆஸ்கார்
     கடந்த 2020ஆம் ஆண்டு ஜோக்கர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வக்கீன் ஃபீனிக்ஸ் தன் ஆஸ்கர் உரையில் இப்படிப் பேசினார். “என் மனது முழுவதும் நன்றியுணர்வால் நிறைந்திருக்கிறது. இந்த அரங்கில் இருக்கும் யாரைவிடவும் உயர்ந்தவனாக நான் என்னைக் கருதவில்லை. ஏனால் நாங்கள் அனைவரும் சினிமா மீதான காதலால் ஒன்றிணைந்திருக்கிறோம். இந்த ஊடகம் எனக்கு மிகச் சிறந்த ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. இது இல்லையென்றால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை.
    எனக்கும் என்னைப் போன்ற சக கலைஞர்களுக்கும் இந்தத் துறை கொடுத்த மிகப்பெரிய பரிசாக நான் கருதுவது எங்களது குரலை குரலற்றவர்களுக்காக பயன்படுத்தும் வாய்ப்பை அளித்ததே. நாம் அனைவரும் தற்போது சந்தித்து வரும் இக்கட்டான சூழ்நிலைகளைப் பற்றி நான் அடிக்கடி சிந்திக்கிறேன்.
    நாம் அனைவரும் வெவ்வேறு காரணங்களுக்காக போராடுவதாக நம்மை சிந்திக்கத் தூண்டியிருக்கிறார்கள். ஆனால் நான் நம் அனைவரது போராட்டத்திலும் ஒரு ஒற்றுமையையே பார்க்கிறேன். பாலின சமத்துவத்துக்காக, நிறவெறிக்கு எதிராக, மாற்றுப் பாலினத்திற்கு ஆதரவாக, விலங்குகளின் நலனுக்காக என எந்த போராட்டம் என்றாலும் அதன் அடிப்பை ஒன்றுதான். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையான அநீதியை எதிர்த்து போராடுகிறோம்.
    ஒரு நாடு , அந்நாட்டு மக்கள், ஒரு இனம் பிற எல்லா இனத்தின் மீதும் எந்த வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல்  அதிகாரம் செலுத்த முடியும் என்கிற நம்பிக்கைக்கு எதிராக நாம் போராட வேண்டி இருக்கிறது” என்று தனது உரையைத் தொடங்கிய அவர் தொடர்ந்து இப்படிப் பேசினார்.
    ஒரு மாடு , ஒரு குட்டி

    This is the Joaquin Phoenix Oscar speech everyone will be talking about tomorrow pic.twitter.com/0pQLxpuQI2
    — NowThis Impact (@nowthisimpact) February 10, 2020

    ”நாம் இயற்கையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டு விட்டோம். நமது தேவைகளுக்காக நாம் இயற்கை வளங்களை அழிப்பதை நியாயப்படுத்துகிறோம்.  நம்மால் ஒரு மாட்டை செயற்கையாக கருத்தரிக்க வைக்க முடிந்து, அதன் குட்டியை அதனிடம் இருந்து பிரிக்க முடிகிறது. பின் தனது குட்டிக்காக அந்த மாடு வைத்திருக்கும் பாலை எடுத்து தமது காஃபியிலும் காலை உணவிலும் பயன்படுத்துகிறோம்” என்று பேசியுள்ளார்.
    வழக்கமாக ஹாலிவுட்டை பார்த்து தான் நாம் காப்பியடிப்பதாக சொல்வார்கள்.  இந்த முறை அதற்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஒருவேளை நடிகர் சிலம்பரசனின் குரல் லாஸ் ஏஞ்சலஸ் வரை கேட்டுவிட்டதோ!

    மேலும் காண

    Source link

  • Additional Chief Secretary Panindra Reddy has ordered the formation of a 14-member committee for the negotiation of the 15th Wage Agreement | Transport Commision: 15 வது ஊதிய ஒப்பந்தம்! 14 பேர் கொண்ட குழு அமைப்பு

    Additional Chief Secretary Panindra Reddy has ordered the formation of a 14-member committee for the negotiation of the 15th Wage Agreement | Transport Commision: 15 வது ஊதிய ஒப்பந்தம்! 14 பேர் கொண்ட குழு அமைப்பு


    15 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்துக் கொள்வதற்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
    14வது ஊதிய ஒப்பந்தம்:
    இது தொடர்பான அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், “தொழிலாளர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்தமானது 31.08.2023 அன்றுடன் முடிவடைந்த நிலையில், போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அரசுக்கும், போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கும் அளித்து, 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்க கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இது குறித்து தேவையான பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைகள் தொடங்க தேவையான வழிகாட்டுதல்களை அளிக்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
    14 உறுப்பினர்கள் குழு:
    மேற்கண்ட சூழ்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்து, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு, தொழிற்தகராறு சட்டம், 1947. பிரிவு 12(3) – இன்கீழ், 15 – ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்துக் கொள்வதற்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    3ம் கட்ட பேச்சுவார்த்தை:
    பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
    இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிற்சங்களுடன் 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வரும் புதன்கிழமை (பிப்ரவரி 21,2024) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக சி.ஐ.டி.யு. மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”ஓய்வூதியர்களின் பஞ்சப் படியை அமல்படுத்த வேண்டும். எட்டு ஆண்டுகளாக நிலுவையில் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணியில்  இருக்கும் தொழிலார்கள் 14 மாதங்களுக்காக வழங்கப்படாமல் இருக்கும் பஞ்சப் படியை தாமதிக்காமல் வழங்க வேண்டும். 15-வது ஊதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசு தரப்பில் பேச்சுவார்த்தை குழுவை அமைத்து ஆணை பிறப்பித்துள்ளோம். அதில் 14- பேர் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.  

    மேலும் காண

    Source link

  • TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..

    TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..


    <p>தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>அதன்படி இன்று, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
    <p>நாளை கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
    <p>வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி, வடதமிழக கடலோர &nbsp;மாவட்டங்கள் மற்றும் &nbsp;தென்தமிழக மாவட்டங்களில் &nbsp;ஓரிரு இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp; &nbsp; வட உள்தமிழக மாவட்டங்களில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>
    <p>அதனை தொடர்ந்து 11 ஆம் தேதியும் 12 ஆம் தேதியும், வட &nbsp;தமிழக மாவட்டங்களில், தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>
    <p>பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதி, கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
    <p>அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும்.&nbsp;</p>
    <p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களி லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை&nbsp; வானிலை ஆய்வு மையம்&nbsp; தெரிவித்துள்ளது.&nbsp;</p>

    Source link

  • pm modi lauds former pm manmohan singh in rajya sabha as he retires | PM Modi Lauds Manmohan Singh: ’ மன்மோகன் சிங்கின் பங்கு மகத்தானது’

    pm modi lauds former pm manmohan singh in rajya sabha as he retires | PM Modi Lauds Manmohan Singh: ’ மன்மோகன் சிங்கின் பங்கு மகத்தானது’


    நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டதொடர் வரும் 10 ஆம் முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வுப்பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளித்தார்.

    #WATCH | PM Modi lauds the contribution of Congress MP and former PM Manmohan Singh The PM is addressing during the farewell of retiring members of the Rajya Sabha pic.twitter.com/1MATqWIGhd
    — ANI (@ANI) February 8, 2024

    அப்போது பேசிய பிரதமர் மோடி, பதவிக்காலம் முடிவுக்கு வரும் மன்மோகன் சிங்கை பாராட்டி பேசினார். அவரது உரையில், “டாக்டர் மன்மோகன் சிங்கை இன்று நினைவுகூர விரும்புகிறேன், அவரது பங்களிப்பு மகத்தானது. இவ்வளவு காலமாக, இந்த நாடாளுமன்றத்தையும் நாட்டையும் அவர் வழிநடத்திய விதம் மூலம் அவர் நினைவுக்கூரப்படுவார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆறு முறை இந்த அவையை அலங்கரித்துள்ளார்.

    Prime Minister Narendra Modi says, “I remember in the other House, during the voting, it was known that the treasury bench would win but Dr Manmohan Singh came on his wheelchair & cast his vote. This an example of a member being alert of his duties” pic.twitter.com/sjSAusQoji
    — ANI (@ANI) February 8, 2024

    கொரோனா காலத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு உறுதுணையாக நின்றனர். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க வீல் சேரில் வந்து தனது கடமையை மன்மோகன் சிங் ஆற்றினார். இந்த அவையில் இருந்து ஓய்வு பெற  இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எனது பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.   

    Prime Minister Narendra Modi speaks in Rajya Sabha during the farewell of retiring members. He says, “I want to remember Dr Manmohan Singh today, his contribution has been immense…For such a long time, the way he has guided this House & Country, Dr Manmohan Singh will always… pic.twitter.com/NC1e81sNRZ
    — ANI (@ANI) February 8, 2024

    மேலும் காண

    Source link

  • வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு

    வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு


    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10ம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மணிவண்ணன் பங்கேற்று பேசியதாவது: கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆவது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

    தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 2 அன்று வேலூரை வந்தடைந்தது. இந்த ரதமானது வேலூர் நகரின் பல்வேறு இடங்களுக்கு பயணித்த பிறகு காட்பாடி, ஆற்காடு, சோளிங்கர், கே.வி.குப்பம், குடியாத்தம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு பிப் 10 ஆம் தேதி வரை பயணிக்க உள்ளது.கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.  

    இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு கோவை ஈஷா யோக மையத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் 36 இடங்களில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ராணி மஹாலில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு மூலம் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் குணசீலன் மற்றும் விஜயகுமார் உடன் பங்கேற்றனர்.

    மேலும் காண

    Source link

  • Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்!

    Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்!


    Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்!

    Source link

  • White Paper vs Black Paper Parliament Budget Session Congress Mallikarjun Kharge Targets BJP PM Modi 10 Year Govt Over Inflation | White Vs Black Paper: பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை

    White Paper vs Black Paper Parliament Budget Session Congress Mallikarjun Kharge Targets BJP PM Modi 10 Year Govt Over Inflation | White Vs Black Paper: பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை


    Black Paper Report: மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின், கருப்பு அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.
    பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை:
    கடந்த 1ம் தேதி 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் முடிவில், முந்தைய காங்கிரஸ் அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகள், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  அதாவது காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சி 2014ம் ஆண்டு முடிவுற்ற போது நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருந்தது, பாஜக ஆட்சி அமைந்த கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலை எப்படி உள்ளது, என்பது தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய வெளிப்படையான அறிக்கை வெளியாகும் என அறிவிக்கப்படது. இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
    கருப்பு அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்: 
    நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, பாஜக பயன்படுத்தப்போகும் முக்கிய அஸ்திரமாக இந்த வெள்ளை அறிக்கை பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் தொடர்பான, 10 ஆண்டு அநியாய ஆட்சி காலம் (10 Saal Anyay Kaal) என்ற தலைப்பிலான கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருப்பு அறிக்கை என்ற பெயரில், எதிர்க்கட்சி வெளியிட்ட முதல் அறிக்கை இதுவாகும். அதில், “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்” என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
    வேலைவாய்ப்பின்மை:
    கே.ஆர்.நாராயணன் முதலில் துணை குடியரசு தலைவராகவும், பின்னர் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட கார்கே ” காங்கிரசும் உலகளவில் அறியப்பட்ட மக்களையும் குடியிஅரசு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம்.  ஆனால் உண்மையான சமூக நீதிக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.  வேலையில்லா திண்டாட்டம் பற்றி பாஜக ஒருபோதும் பேசுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளை பற்றி தான் பேசுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றி பாஜக பேசியது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நேரு தொடங்கிய HAL, BEL, BHEL போன்ற நிறுவனங்களைப் பற்றி அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள். முந்தைய அரசாங்கங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்பு மற்றும் தரமான வேலைகள் பற்றி பேச மாட்டார்கள். உண்மை என்னவென்றால், மக்களுக்கு வேலை கொடுப்பதை பாஜக விரும்பவில்லை” என்று கார்கே சாடியுள்ளார்.
    ”ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் பாஜக”
    பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி அரசாங்கங்களை கவிழ்க்க பாஜக குதிரை பேர உத்திகளைப் பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்பை ஏவுகிறது. நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. கைப்பற்றியது. பல காங்கிரஸ் தலைமையிலான அரசுகளை கவிழ்த்துள்ளது. ஜனநாயகத்தை ஒழித்துகட்டுகின்றனர்.
    மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது:
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியை வெளியிடாததால், கிராமப்புற வேலைவாய்ப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றன. பாஜக அல்லாத அரசுகளைக் கொண்ட கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
    பாஜக தனது நண்பர்களுக்கு சாதகமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தவில்லை
    பாஜக தலைமையிலான மத்திய அரசு வேண்டுமென்றே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவில்லை, ஏனெனில் அது பாஜகவின் ‘தொழில்துறை நண்பர்களுக்கு’ உதவும்.   நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோரைக் குறை கூறாமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த சட்டம் உள்ளது. ஆனால், இங்குள்ள பணவீக்கத்தால் இறக்குமதியால் பெரிதும் பயனடையும் பா.ஜ.கவின் சில நண்பர்கள் உள்ளனர். அதனால், இவர்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட கப்பல்கள் கரைக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளன. விலை உயரும் போது மட்டுமே, இந்த கப்பல்கள் தங்கள் சரக்குகளுடன் துறைமுகத்திற்கு வருகின்றன. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் அரசு வழங்குவதில்லை. 
    கலவரத்தை தூண்டுகிறீர்கள்:
    நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எப்போதும் நாட்டை உடைப்பது பற்றி பேசுகிறீர்கள்? கலவரத்தை தூண்டிவிட்டுள்ளீர்கள். நீங்கள் [பிரதமர் மோடி] உங்கள் பேச்சுகளால் கலவரத்தைத் தூண்டினீர்கள். நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது என்ன செய்தீர்கள். (2002 கலவரத்தை குறிப்பிடாமல்)
    ”சர்வாதிகாரிகளாக செயல்படும் ஆளுநர்கள்”
    ஆளுநர்கள் சர்வாதிகாரிகளுக்குக் குறைந்தவர்களில்லை.  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாஜக ஆளுநர்களை அனுப்புவதே அங்குள்ள ஆட்சியைக் கவிழ்க்க தான்.  பாஜக அரசு எங்கிருந்தாலும், ஆளுநர்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். அதேநேரம்,  பாஜக இல்லாத மாநிலங்களில் கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகின்றன அல்லது நிலுவையில் வைக்கப்படுகின்றன” என மத்திய அரசுக்கு எதிரான கருப்பு அறிக்கையில் மல்லிகர்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Babar Azam: கேப்டனாக மீண்டும் யு-டர்ன்! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மீண்டும் வாய்ப்பு? வெளியான பெரிய அப்டேட்!

    Babar Azam: கேப்டனாக மீண்டும் யு-டர்ன்! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மீண்டும் வாய்ப்பு? வெளியான பெரிய அப்டேட்!


    <p>பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.&nbsp;</p>
    <p>இந்தநிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மொஹ்சின் நக்வி என்ற புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பதவியேற்றவுடன் மற்றொரு பெரிய நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. &nbsp;அதன்படி, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>ஏன் இந்த முடிவு..?&nbsp;</strong></h2>
    <p>பாகிஸ்தான் அணியின் அனுபவ பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக்க பரிசீலிக்கப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், புதிய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, பாபர் அசாமை மீண்டும் அணியின் கேப்டனாக பார்க்க விரும்புகிறார். இப்படியான சூழ்நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p>
    <h2><strong>உலகக் கோப்பையில் மோசமான ஆட்டம்:</strong></h2>
    <p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாம் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், கேப்டனாக &nbsp;ஐசிசி போட்டிகளில் அவர் சிறப்பாக எதையும் செயல்படவில்லை. உதாரணத்திற்கு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. மேலும், இதே உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது.&nbsp;</p>
    <h2><strong>ஷான் மசூத், ஹாஹீனின் கேப்டன் பதவி என்ன ஆகும்..?&nbsp;</strong></h2>
    <p>பாபர் அசாம் விலகியதற்கு பிறகு பாகிஸ்தான் அணி புதிய கேப்டன்களாக ஷான் மசூத் மற்றும் ஹாஹீன் அப்ரிடி &nbsp;நியமிக்கப்பட்டனர். இருவரும் சமீபகாலமாக கேப்டனாக பயணத்தை தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், ஒரே ஒரு தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், பல கேள்விகள் வாரியத்தின் முன் எழும்.</p>
    <p>மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதன் பிறகு, பாகிஸ்தான் அணி ஷாஹீன் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்து மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது, அதில் அவர்கள் 4-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.&nbsp;</p>
    <p>2019 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்பராஸ் கானுக்கு பதிலாக பாபர் அசாம் பாகிஸ்தானின் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதன் பிறகு, கடந்த 2021ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியும் பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது. 2022 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>

    Source link

  • Thai amavasai 2024: தை அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    Thai amavasai 2024: தை அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


    <p style="text-align: justify;"><strong>தை அமாவாசை&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">தை அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பஸ்களும், வேலூரில் இருந்து 15 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து 20 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 20 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து 20 பஸ்களும், திருக்கோவிலூரில் இருந்து 10 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து 5 பஸ்களும், ஆரணி, ஆற்காடு, திருப் பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 10 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.</p>
    <p style="text-align: justify;">மேலும் 11-ந் தேதியன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 10, 11-ந் தேதிகளில் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;"><strong>முன்பதிவு</strong>&nbsp;</p>
    <p style="text-align: justify;">எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p>

    Source link

  • lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie

    lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie


    பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஒரிஜினல் பாட்ஷாவாகவும் நடித்த நடிகர் சரண் ராஜ், லால் சலாம் படத்தின் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ரஜினியுடன் நடித்துள்ளது பற்றி தன் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.
    ரஜினியின் நண்பன் சரண் ராஜ்

    80களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சரண் ராஜ் (Charan Raj). நடிப்பு தவிர இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றியுள்ள சரண் ராஜ், சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான லேபிள் சீரிஸிலும் நடித்துள்ளார்.
    கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த பணக்காரன், தர்மதுரை, அதிசய மனிதன், பாட்ஷா உள்ளிட்ட படங்கள் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானதொரு முகமாக மாற்றின.

    ஈவு இரக்கமற்ற வில்லன், போலீஸ், உற்ற நண்பன் என பல துணை கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த சரண் ராஜ், 1995ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    பாட்ஷா கதாபாத்திரம்

    பாட்ஷா படத்தின் அடிநாதமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் மாணிக்கமாக வரும் நடிகர் ரஜினிகாந்தின் நண்பன் பாட்ஷாவாக உயிர்விடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரஜினியின் பாட்ஷா கதாபாத்திரத்தின் ட்ரான்ஸ்ஃபர்மேஷனுக்கு காரணமான முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சரண் ராஜ், நிஜ வாழ்விலும் ரஜினிகாந்தின் உற்ற நண்பர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
    இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் தற்போது நடித்துள்ள சரண் ராஜ். சுமார் 29 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இணைந்த அனுபவம் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சுரேஷ் கிருஷ்ணாவுடன் தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேசிய சரண்ராஜ் கூறியுள்ளதாவது:
    லால் சலாம் கதாபாத்திரம்
    “ரஜினி சார் பல முறை சொல்லுவார். “என்னடா உன் கூட நடிச்சு ரொம்ப நாள் ஆகிடுச்சு, ஒரு நல்ல கேரக்டரா இருந்தா கூப்பிடு” அப்படினு சொல்லுவார். இருடா நாம பண்றோம் என சொல்லுவார், இப்போ லால் சலாம் கதாபாத்திரத்தில் அவர் நண்பனா நடிக்கறேன்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
    மராட்டிய மொழி பின்புலத்தை ரஜினி, சரண் ராஜ் இருவருமே கொண்டுள்ள நிலையில், இருவருக்கும் பல ஒற்றுமைகள் ஆஃப் ஸ்க்ரீனிலும் உள்ளன. அதனால் தான் தாங்கள் இருவரையும் பாட்ஷாவில் ஒன்றாக நடிக்க வைத்ததாகவும் சுரேஷ் கிருஷ்ணா இந்த நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

    #Lalsalaam படத்தில் தலைவரின் நண்பராக சரண்ராஜ் ❤️❤️After 29 Years, #ThalaivarRajinikanth & #CharanRaj Combo will do the same vibe in Silver Screen 🔥🔥#Baasha Vibe ❤️❤️Surprise Character 🤔🤔#SuperstarRajinikanth #LalSalaamFromFeb9 pic.twitter.com/qjuJQtmOr2
    — R 🅰️ J (@baba_rajkumar) February 8, 2024

    இந்நிலையில் ரஜினி – சரண் ராஜ் இருவரையும் இத்தனை ஆண்டுகள் கழித்து ஒன்றாக திரையில் பார்ப்பது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
    பாட்ஷா படத்துக்குப் பிறகு இஸ்லாமியராக மொய்தீன் பாய் எனு கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். தன் மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ள நிலையில் நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
     

    மேலும் காண

    Source link

  • Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

    Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே


    <p style="text-align: justify;"><strong>வேலைவாய்ப்பு முகாம்</strong></p>
    <p style="text-align: justify;">டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு (கலைஞர் 100 விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு நான்கு மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நான்காம் நிகழ்வாக 13.022024 (செவ்வாய்க்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.</p>
    <p style="text-align: justify;"><strong>150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.</p>
    <p style="text-align: justify;"><strong>கல்வி தகுதி&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.</p>
    <p style="text-align: justify;"><strong>முன்பதிவு&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">இச்சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் <a title="www.inprivatejobstn.gov.in" href="www.inprivatejobstn.gov.in" target="_self">www.inprivatejobstn.gov.in</a> என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது &nbsp;தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.</p>
    <p style="text-align: justify;">எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 13.02.2024 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p>

    Source link

  • Villupuram Students studying under government quota can apply for scholarship – TNN | Scholarship: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    Villupuram Students studying under government quota can apply for scholarship – TNN | Scholarship: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


    விழுப்புரம்: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
    அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/ சிம மாணவ / மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை :-
    நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login-இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal) புதியதிற்கு (Fresh) 01.022024 முதல் செயல்பட துவங்கும் புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணாக்கர்கள் 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
    மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகிடலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி.இ.ஆ.ப.  தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • ITR 2024 Income Tax Filing Itr Rules Who Can And Cannot File Itr1 Form In Tamil | ITR 2024: வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஐடிஆர்-1 படிவம்

    ITR 2024 Income Tax Filing Itr Rules Who Can And Cannot File Itr1 Form In Tamil | ITR 2024: வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஐடிஆர்-1 படிவம்

    ITR Forms 2024: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் ஊதியதாரர்களில் பெரும்பாலானோர், ஐடிஆர்-1 படிவத்தை பயன்படுத்துகின்றனர்.
    வருமான வரி கணக்கு தாக்கல் 2024:
    நடப்பு நிதியாண்டு (FY 2023-24) இன்னும் 50 நாட்களில் முடிவடைகிறது. பொதுவாக, வருமான வரி விதிகளின்படி, ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு நீங்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்காக ஐடிஆர் 1 (ITR-1) தொடங்கி ஐடிஆர் 7 என மொத்தம் 7 படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதில், ஐடிஆர்-1 என்பது வருமான வரி தாக்கல் செய்யும் பெரும்பாலானவர்களால் தேர்வு செய்யப்படும் படிவமாகும். பொதுவாக, சம்பளம் வாங்குபவர்கள் அதைத் தேர்வு செய்கிறார்கள். ITR-1 படிவம் சஹாஜ் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.
    ITR-1 படிவத்தை யார் பயன்படுத்தலாம்? (Who is eligible to file ITR-1 form?)
    வழக்கமாக வரி செலுத்துவோர்களில் பெரும்பாலானோர் ஐடிஆர்-1 படிவம் மூலம் தங்கள் வருமானம் மற்றும் வரிப் விவரங்களை அரசிடம் சமர்பிக்கின்றனர். சம்பளம், ஈவுத்தொகை, வங்கி வட்டி, ஒரு வீட்டு சொத்து, விவசாயம் மூலம் ஆண்டு வருமானம் ரூ. 5000 (தனிநபர்) கொண்டிருப்பவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஐடிஆர் 1 படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ரூ. 50 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம்  கொண்ட வரி செலுத்துவோர் இந்தப் படிவத்தின் மூலம் வருமான விவரங்களை சமர்ப்பிக்கலாம்.
    ITR-1 படிவத்தை யார் பயன்படுத்தக்கூடாது?  ‍‌(Who is not eligible to file ITR-1 form?)

    வரி செலுத்துபவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 50 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஐடிஆர்-1 படிவம் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யக் கூடாது.
    மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ஈக்விட்டி பங்குகள், பிற ஆதாரங்களில் வருமானம் ஈட்டுபவர்கள் ITR-1ஐத் தேர்வு செய்யக் கூடாது.
    குதிரைப் பந்தயம், லாட்டரிகள், சட்டப்பூர்வ சூதாட்டம் போன்ற சேவைகள் மூலம் வருமானம் ஈட்டினால், அவர் ITR-1ஐ தாக்கல் செய்ய தகுதியற்றவர்.
    ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துக்களில் இருந்து வருமானம் பெறுபவர்கள் ITR-1 படிவம் மூலம் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
    என்ஆர்ஐ (குடியுரிமை இல்லாத இந்தியர்) ஐடிஆர்-1 ஐ தாக்கல் செய்ய தகுதியற்றவர்.
    வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, ​​வருமான வரிச் சட்டத்தின் 194N பிரிவின் கீழ் டிடிஎஸ் (மூலத்தில் வரிக் கழிக்கப்பட்டது) கழிக்கப்பட்டிருந்தால், அத்தகைய வரி செலுத்துவோர் ITR-1 படிவத்தைப் பயன்படுத்தக்கூடாது.
    இந்து கூட்டுக்குடும்பம் குடும்பம் (HUF), நிறுவனங்கள் ITR-1ஐ தாக்கல் செய்யக்கூடாது.

    தகுதி இல்லாதவர்கள் ITR-1 தாக்கல் செய்யப்பட்டால் என்ன ஆகும்?
    ITR-1 படிவத்தை தாக்கல் செய்ய தகுதியில்லாத ஒருவர் அந்த படிவத்தின் மூலம் தனது வருமான விவரங்களை தவறுதலாக அறிவித்தால், அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டிஸ் வரக்கூடும். அதில், தவறான படிவம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டு இருக்கும். நோட்டீஸ் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சரியான படிவத்தை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், முதலில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்கு செல்லுபடியாகாது. அதன்பிறகு வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    Source link

  • Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

    Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!


    <p>சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>
    <p>கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என பேசியிருந்தார்.</p>
    <p>இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p>
    <p>தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p>
    <p>இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலைக்கு எதிரான&nbsp; வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து மனுவை தள்ளுபடி செய்தது.</p>

    Source link

  • நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்!

    நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்!


    நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்!

    Source link

  • Latest Gold Silver Rate Today February 8 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

    Latest Gold Silver Rate Today February 8 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore


    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,480 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,840 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,840 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,840 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,840 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,333 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,815 ஆகவும் விற்பனையாகிறது.

     

    Source link

  • RBI On REPO Rate: தொடர்ந்து 6வது முறை – ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

    RBI On REPO Rate: தொடர்ந்து 6வது முறை – ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

    RBI On REPO Rate: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, ரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 6வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 6.50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு ஆறாவது முறையாக நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்திலும், ரெப்போ ரேட் விகிதத்தை அதே நிலையில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டு கடன்கள், வாகனக் கடன் உள்ளிட்ட  கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகைக்கு வழங்கப்படும் வட்டியும் உயராது.
    ”வளர்ச்சி நிலையானதாக இருக்கும்”
    இதுதொடர்பாக பேசியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “2024 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சியானது, பிராந்தியங்கள் முழுவதும் பன்முகத்தன்மையுடன் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தக வேகம் பலவீனமாக இருந்தாலும், அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது மற்றும் 2024 இல் வேகமாக வளர வாய்ப்புள்ளது. பணவீக்கம் கணிசமாக தணிந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மேலும் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை பங்கேற்பாளர்கள் முக்கிய மத்திய வங்கிகளின் விகிதக் குறைப்புகளின் நேரம் மற்றும் வேகத்தில் தங்கள் எதிர்பார்ப்புகளை சரிசெய்வதால், நிதிச் சந்தைகள் நிலையற்றவையாகும்.

    #WATCH | RBI Governor Shaktikanta Das says, “…The Reserve Bank undertook six fine-tuning variable rate reverse repo auctions, that is, VRRR auctions from February 2 to February 7, 2024 to absorb surplus liquidity. Financial market segments have adjusted to the evolving… pic.twitter.com/j5WLX1zJDy
    — ANI (@ANI) February 8, 2024

    ”கடன் சுமையை குறைப்பது அவசியம்”
    உலக பொதுக் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 100% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தசாப்தத்தில், வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களில் உள்ள பொதுக் கடன் அளவுகள், உண்மையில், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. உலக அளவில் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த வளர்ச்சியின் சூழலில் கடன் நிலைத்தன்மையின் சவால்கள் புதிய ஆதாரங்களாக மாறலாம். மன அழுத்தம், பசுமை மாற்றம் உட்பட முன்னுரிமை பகுதிகளில் புதிய முதலீடுகளுக்கான நிதி இடத்தை உருவாக்க கடன் சுமைகளை குறைப்பது அவசியம்” என சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
     
     
     
     

    Source link

  • today movies in tv tamil February 8th television schedule em magan kutram 23 tamizh padam 2 kolamavu kokila

    today movies in tv tamil February 8th television schedule em magan kutram 23 tamizh padam 2 kolamavu kokila


    Thursday Movies: பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
    மதியம் 3.30  மணி: எம் மகன் 
    சன் லைஃப்
    காலை 11.00 மணி: பலே பாண்டியா  மதியம் 3.00 மணி: மன்னாதி மன்னன்
    கே டிவி
    காலை 7.00 மணி: சந்தோஷம்காலை 10.00 மணி: உன்னை வாழ்த்தி பாடுகிறேன் மதியம் 1.00 மணி: கேப்டன் மாலை 4.00 மணி: கட்டுமரக்காரன் மாலை 7.00 மணி: குட்டிப் புலி இரவு 10.30 மணி: சிநேகிதியே 
    கலைஞர் டிவி 
    மதியம் 1.30 மணி: ஆதி இரவு 11 மணி: ஆதி 
    கலர்ஸ் தமிழ்
    காலை 9 மணி: என்னங்க சார் உங்க சட்டம் மதியம் 12  மணி: அக்னி தேவி மாலை 2.30 மணி: செம திமிரு இரவு 9.00  மணி: அக்னி தேவி
    ஜெயா டிவி
    காலை 10 மணி: நாடோடி பாட்டுக்காரன் மதியம் 1.30 மணி: திரு மூர்த்தி இரவு 10.00 மணி: திரு மூர்த்தி 
    ராஜ் டிவி
    மதியம் 1.30 மணி: அலைகள் ஓய்வதில்லை இரவு 9.30 மணி: அச்சமில்லை அச்சமில்லை 
    ஜீ திரை 
    காலை 7 மணி: எனக்கு இன்னொரு பேர் இருக்கு காலை 9.30 மணி: குற்றம் 23 மதியம் 12  மணி: நேர்கொண்ட பார்வை மதியம் 3  மணி: பேபி மாலை 6 மணி: கேப்டன்இரவு 8.30 மணி: லவ்வர்இரவு 11 மணி:  கோலமாவு கோகிலா 
    முரசு டிவி 
    காலை 6.00 மணி: ரத்த கண்ணீர்மதியம் 3.00 மணி: வாழ்க்கை மாலை 6.00 மணி: திருப்பதி இரவு 9.30 மணி: தமிழ் படம்  
    விஜய் சூப்பர்
    காலை 6.00  மணி: விஸ்வரூபம் காலை 8.30 மணி: ஓ பேபி காலை 11.00 மணி: சிகரம் தொடு மதியம் 1.30 மணி: மன்னார்குடி வீரன் மாலை 4.00 மணி: தமிழ் படம் 2 மாலை 6.30 மணி: சந்தர்ப்பவாதி மாலை 9.30 மணி: தெகிடி 
    ஜெ மூவிஸ் 
    காலை 7.00 மணி: சின்னாகாலை 10.00 மணி: ஆராரோ ஆராரிரோமதியம் 1.00 மணி: ஆஹா என்ன பொருத்தம் மாலை 4.00 மணி: கோழி கூவுது  இரவு 7.00 மணி: எங்க சின்ன ராசாஇரவு 10.30 மணி: மணியோசை
    பாலிமர் டிவி
    மதியம் 2 மணி: அமரன்இரவு 7.30 மணி: தை மாசம் பூ வாசம்   
    மெகா டிவி
    காலை 9.30 மணி: நட்புமதியம் 1.30 மணி: மணி ஓசை இரவு 11 மணி: தர்மம் தலை காக்கும் 

    காலை 5.30 மணி: கௌரவம்காலை 8.00 மணி: லைலா ஓ லைலா காலை 11.00 மணி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாமதியம் 2.00 மணி: அய்யனார்மாலை 4.30 மணி: எஃப் 2இரவு 7 மணி: மெரினா இரவு 9 மணி: யு கேன் சி மீ
    வேந்தர் டிவி
    காலை 10.30  மணி: உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு மதியம் 1.30 மணி: இரு மேதைகள் 
    வசந்த் டிவி
    மதியம் 1.30 மணி: தெய்வ பிறவி மாலை 7.30 மணி: லட்சுமி வந்தாச்சு 
    மெகா 24 டிவி
    காலை 10 மணி: பூவின் ராகம்  மதியம் 2 மணி: டெல்லி மாப்பிள்ளை  மாலை 6 மணி: மேகத்துக்கும் தாகம் உண்டு
    ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
    காலை 7 மணி: சிவம் காலை 10 மணி: யமனுக்கு யமன்மதியம் 1.30 மணி: ராம்போ ராஜா ரிவால்வர் ராணிமாலை 4.30 மணி: பணக்கார பெண் மாலை 7.30 மணி: உன்னை சொல்லி குற்றமில்லை இரவு 10.30 மணி: வாழ்க்கை 

    மேலும் படிக்க: Premalatha Vijayakanth: விஜயகாந்த் பாணியில் செய்தியாளர்களை வழியனுப்பிய பிரேமலதா விஜயகாந்த்!

    மேலும் காண

    Source link

  • EPS On Tn Govt: 32 மாதங்களில் ஈர்த்த முதலீடு என்ன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

    EPS On Tn Govt: 32 மாதங்களில் ஈர்த்த முதலீடு என்ன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்


    EPS On Tn Govt: உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூட்லம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஈர்த்துள்ள முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வல்யுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயினுக்கு சென்றது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.  

    மேலும் காண

    Source link

  • top news India today abp nadu morning top India news February 8 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 8 2024 know full details



    ரூ.777 கோடி செலவு: 2 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காத பிரகதி மைதான சுரங்கப்பாதை, வெடித்த சர்ச்சை

    பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றை எளிமையாக இணைத்தது. தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என, உலக தரத்தில் இந்த சுரங்கப் பாதை கட்டமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..

    “பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள் – பதில் வருமா?” காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசம்

    பிரதமர் மோடியால் பதிலளிக்க முடியுமா என? காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் 9 கேள்விகளை பட்டியலிட்டுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, “2014ல் wஆட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அவர்கள் (பாஜக) நம்புகிறார்கள். 1947ல் சுதந்திரம் கிடைத்தது, அதற்காக காங்கிரஸ் போராடியது என்பது அவர்களுக்குத் தெரியாது.மேலும் படிக்க..

    திமுக ஷாக்..! அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் பொன்முடி ஆகியோரை சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தன. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். மேலும் படிக்க..

    மக்களவை தேர்தலை குறிவைக்கும் மனிதநேய மக்கள் கட்சி.. கேட்ட தொகுதியை கொடுக்குமா திமுக?

    அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது. மேலும் படிக்க..

    இந்தியாவில் 1,700% உயர்ந்த செல்போன் உற்பத்தி – மொத்த மதிப்பு எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

    இந்தியாவில் நடைபெறும் செல்போன் உற்பத்தி தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் செல்போன் உற்பத்தி பெரும் ஏற்றத்தை கண்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தின் படி,  2014-15ல் காலகட்டத்தில் ரூ.18,900 கோடியாக இருந்த உள்நாட்டு செல்போன் உற்பத்தியின் மதிப்பு,  2022-2023ல் சுமார் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் படிக்க..

    மேலும் காண

    Source link

  • Under 19 World Cup 2024 Pakistan Vs Australia Second Semi Final Know The Match Details Here

    Under 19 World Cup 2024 Pakistan Vs Australia Second Semi Final Know The Match Details Here

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியானது தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது. 
    இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்கும். இந்த போட்டியில் இரு அணிகளும் முதல்முறையாக நேருக்குநேர் மோதுகின்றன. தற்போதைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தோற்கடிக்க முடியாத அணியாக வலம் வருகிறது. சாத் பெய்க் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தனது கடைசி சூப்பர் சிக்ஸ் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 
    10 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024ல் பாகிஸ்தான் அணி தனது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் போட்டியில் நுழைந்தது. அங்கு வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. 
    மறுபுறம், ஆஸ்திரேலிய அணி தனது குரூப் லீக் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு தகுதிபெற்றது. இதையடுத்து, சூப்பர் சிக்ஸில் இங்கிலாந்தை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 
    இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 
    பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அண்டர் 19 உலகக் கோப்பையில் இதுவரை 35 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் அணி அதிகபட்சமாக 19 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 14 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 
    பிட்ச் எப்படி..? 
    தென்னாப்பிரிக்காவில் உள்ள பெனோனியின் ஸ்டேடியத்தின் பிட்ச் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்பிறகு, பேட்டிங் செய்யும் அணிக்கு ரன்களை குவிக்க வாய்ப்புகளை தரும். இத்தகைய சூழ்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் இங்கு நிறைய ரன்களை எடுத்து எளிதாக வெற்றியை நோக்கி பயணிக்கலாம். 
    இரு அணிகளிலும் டாப் வீரர்கள்: 
    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷா 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசியுள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரை உபைத் ஷா 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுபுறம் பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி 260 ரன்கள் குவித்துள்ள ஷாசாய்ப் கான் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இவர் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், ஆஸ்திரேலிய கேப்டன் வீப்கன் 252 ரன்களும், கால்ம் விட்லர் 11 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
    இரு அணிகளின் வீரர்கள் விவரம்: 
    பாகிஸ்தான் U19 அணி:
    ஷாமில் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அஸான் அவாய்ஸ், சாத் பைக்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), அஹ்மத் ஹசன், ஹாரூன் அர்ஷத், அராபத் மின்ஹாஸ், அலி அஸ்பாண்ட், உபைத் ஷா, முகமது ஜீஷான், அலி ரசா, அமீர் ஹாசன், குபைப் அஹ்மத், நவீத் கலீல், கான், முகமது ரியாசுல்லா
    ஆஸ்திரேலியா U19 அணி:
    ஹாரி டிக்சன், ஹர்ஜாஸ் சிங், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென்(கேப்டன்), ஆலிவர் பீக், லாச்லன் ஐட்கன்(w), ராஃப் மேக்மில்லன், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், காலம் விட்லர், ரியான் ஹிக்ஸ், டாம் காம்ப்பெல், டாம் ஸ்ட்ரேக்கர், ஐடன் ஓ கானர், கோரி வாஸ்லி

    Source link

  • மீண்டும் அதிரட.. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..

    மீண்டும் அதிரட.. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..


    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஒரு காரில் வந்த  5 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும் காண

    Source link

  • Increase in water flow of Mettur dam from 48 cubic feet to 83 cubic feet.

    Increase in water flow of Mettur dam from 48 cubic feet to 83 cubic feet.


    தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 48 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 83 கன அடியாக அதிகரித்துள்ளது. 

    நீர்மட்டம்:
    அணையின் நீர் மட்டம் 67.67 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 30.73 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
    இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 5,600 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகள்:
    கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.08 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,002 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

    மேலும் காண

    Source link

  • Bigg Boss Title winner vj archana said beauty tips for glowing face | VJ Archana: பளபளப்பான முகம் வேண்டுமா?

    Bigg Boss Title winner vj archana said beauty tips for glowing face | VJ Archana: பளபளப்பான முகம் வேண்டுமா?


    சின்னத்திரை நடிகையான அர்ச்சனா முகம் பளபளப்பாக தெரிவித்த டிப்ஸ் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    பொதுவாக பிரபலங்களாக இருக்கும் நபர்களை பின்தொடரும் ரசிகர்கள் அனைவரும் அவர்களைப் போல நடை, உடை, பாவனை, ஹேர்ஸ்டைல் தொடங்கி எல்லா விஷயங்களையும் மாற்றிக் கொள்வார்கள். மேலும் பிரபலங்கள் சொல்லும் பிட்னெஸ் மற்றும் சமையல் தொடர்பான தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதனை சரியாக ஃபாலோ பண்ணுவார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தெரிவித்த டிப்ஸ் வீடியோ வைரலாகியுள்ளது. 
    சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கலையுலக பயணத்தை தொடங்கிய விஜே அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தேன்மொழி பி.ஏ., , இந்திரா என்ற சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அவர், காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 
    இதனிடையே நடப்பாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் பங்கேற்றார். ஆரம்பம் முதலே ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் கடைசியாக பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் வைல்ட் கார்ட் எண்ட்ரீ மூலம் நுழைந்து டைட்டில் வென்ற முதல் பிக்பாஸ் போட்டியாளர் என்ற சிறப்பை அர்ச்சனா பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. 
    இந்நிலையில் முகம் பளபளப்பாக இருக்க அவர் டிப்ஸ் ஒன்றை சொல்லியுள்ளார். பழைய நேர்காணல் ஒன்றில், இந்த டிப்ஸை தான் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் செயல்படுத்தி பார்த்ததாகவும் கூறியுள்ளார். அதாவது உடலுக்கு நன்மை பயக்கும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் அடங்கிய ABC ஜூஸில் அதற்கு பதிலாக பதிலாக ஆம்லா (பெரிய நெல்லி), பீட்ரூட், தேங்காய் கொண்டு செய்யப்படும் ஜூஸில் நாட்டு சர்க்கரை கலந்து குடித்தேன். கிட்டதட்ட 7 மாதம் குடித்த நிலையில் என்னுடைய முகம் பளபளப்பாக மாறியது. எல்லாரும் இதனை முயற்சி செய்யலாம் என தெரிவித்துள்ளார். 
    அதேசமயம் இந்த ஏபிசி ஜூஸை ஆப்பிள், பீட்ரூட், கேரட் அல்லது ஆம்லா (பெரிய நெல்லி), பீட்ரூட், தேங்காய்  உள்ளிட்ட பொருட்களை கொண்டு குடிக்க விரும்புபவர்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின்படி பருகலாம். இதனை வாரத்துக்கு 3 முறை குடித்தால் உடலுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது.

    மேலும் படிக்க: AR Rahman: ரஜினிகாந்த் மகளா இருப்பது கஷ்டம்: எதை செய்தாலும் விமர்சனம்: ஐஸ்வர்யாவுக்காக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்!

    மேலும் காண

    Source link

  • Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..

    Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..


    <p>ராமேஸ்வரம் மீனவர்கள்&nbsp;&nbsp; 19 பேர் மற்றும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.</p>
    <p>இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை &nbsp;அளித்த போதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.&nbsp;&nbsp;</p>
    <p>&nbsp;ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து&nbsp; நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்&nbsp; 2,500 க்கு மேற்பட்ட மீனவர்கள்&nbsp; மீன் பிடிக்க கடலுக்கு சென்று&nbsp; கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே&nbsp; மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 19 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்று உள்ளனர்.&nbsp; இது போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.</p>
    <p>இதேபோல் கடந்த வாரம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 வாரங்களாக சுமார் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
    <p>இதனை தொடர்ந்து, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்&zwnj; குழுவின்&zwnj; மூலம்&zwnj; மீனவர்&zwnj; பிரச்சினையைத்&zwnj; தீர்ப்பதற்கும்&zwnj; இலங்கைக்&zwnj; கடற்படையினரால்&zwnj; கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்&zwnj;, அவர்களது மீன்பிடிப்&zwnj; படகுகளையும்&zwnj; விடுவித்திடவும்&zwnj; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்&zwnj; துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்&zwnj; ஸ்டாலின்&zwnj; கடிதம்&zwnj; அனுப்பினார்.</p>
    <p>இது தொடர்பான கடிதத்தில், சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள்&zwnj; தொடர்ந்து இதுபோன்று இலங்கைக்&zwnj; கடற்படையினரால்&zwnj; கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும்&zwnj;, இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்&zwnj; என்பதால்&zwnj;, இதில்&zwnj; ஒன்றிய அரசு உடனடி கவனம்&zwnj; செலுத்த வேண்டிய அவசியம்&zwnj; ஏற்பட்டுள்ளதாகவும்&zwnj; முதலமைச்சர்&zwnj; தனது கடிதத்தில்&zwnj; குறிப்பிட்டுள்ளார்&zwnj;.</p>

    Source link

  • Delhi news: Pragati Maidan tunnel unrepairable, needs total overhaul – PWD NOTICE TO L&T

    Delhi news: Pragati Maidan tunnel unrepairable, needs total overhaul – PWD NOTICE TO L&T


    Pragati Maidan tunnel: பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    பிரகதி மைதான சுரங்கப்பாதை:
    டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றை எளிமையாக இணைத்தது. தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என, உலக தரத்தில் இந்த சுரங்கப் பாதை கட்டமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
    பிரகதி மைதானம் சுரங்கப்பாதை பாதிப்பு:
    இந்நிலையில், கடந்த ஆண்டு நீர் தேங்கியதன் காரணமாக சுரங்கப்பாதை பலமுறை மூடப்பட்டது. நகரத்தில் மிதமான மற்றும் அதிக மழை பெய்யும் போதெல்லாம் சுரங்கப்பாதைக்குள் நீர் தேங்கி, பல நாட்கள் பயன்பாட்டிலேயே இல்லாமல் இருந்தது. இந்நிலையில், சுரங்கச் சாலையில் தண்ணீர் தேக்கம், விரிசல்  என பயணிகளுக்கு ஆபத்தானதாக அந்த சாலை மாறியுள்ளது. 100 ஆண்டுகள் ஆயுட்காலகத்தை கொண்டிருக்கும் என கட்டுமான நிறுவனம் உறுதியளித்த நிலையில், கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே பிரகதி மைதானம் சுரங்கப்பாதை மோசமாக சேதமடைந்துள்ளது.
    பழுதுபார்க்க முடியாது – அதிகாரிகள் தகவல்:
    இந்நிலையில் சுரங்கப்பாதையில் டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பாதிப்பு தொடர்பாக பேசிய அவர்கள் “பல சுரங்கப்பாதைகளில் நீர் கசிவு சிறிதளவு இருக்கும். ஆனால், இந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட கசிவை கட்டுமான நிறுவனம் சரி செய்யவில்லை. தொடர்ந்து நீர் கசிவு அதிகரித்ததால் கட்டுமானத்தில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது. மோசமான வடிகால் காரணமாக நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது, இது கட்டுமானத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது. பராமரிப்பில் நிலவிய அலட்சியம்  கட்டமைப்பில் பெரிய விரிசல்களுக்கு வழிவகுத்தது, அதன் காரணமாக இப்போது முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது . இந்த சுரங்கப்பாதை தற்போது பயணிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. பழுது பார்ப்பது சாத்தியமில்லைம், முற்றிலும் சீரமைக்க வேண்டும்” என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் – பதிலடி:
    பிரகதி மைதான சுரங்கச் சாலை கட்டுமான பணிகளை மேற்கொண்ட எல்&டி நிறுவனத்திற்கு டெல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 2019ம் ஆண்டிற்குள் முடித்து தரப்படும் என கூறப்பட்ட சுரங்கச் சாலை 2022ம் ஆண்டு தான் இறுதி வடிவம் பெற்றது. இதன்படி ஏற்பட்ட கால தாதமதம் மற்றும் பராமரிப்பு பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பிரகதி மைதான சுரங்கச் சாலை தற்போது சேதமடைந்துள்ளது. அதோடு, வடிவமைப்பிலும் பல குறைகள் இருக்கின்றன. இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிறுவனம் தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்புவதாக, 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு எல்&டி நிறுவனம் டெல்லி பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, பிரகதி மைதான சுரங்கச் சாலையை திறந்து வைத்து, பிரதமர் மோடி வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    மேலும் காண

    Source link

  • பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: எத்தனை இடங்களுக்கான தேர்தல்?  எந்தெந்த கட்சிகள் பங்கேற்பு? முழு விவரம்!

    பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: எத்தனை இடங்களுக்கான தேர்தல்? எந்தெந்த கட்சிகள் பங்கேற்பு? முழு விவரம்!


    <p>வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 8) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. &nbsp;இந்த தேர்தலில் மூலம் பாகிஸ்தான் மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை தீர்மானித்து, பொருளாதார நெருக்கடியை சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
    <p>பாகிஸ்தானில் தற்போது கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே தவித்து வருகின்றன. இப்படியான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இந்த தேர்தலையொட்டி, சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>
    <h2><strong>எத்தனை இடங்களில் தேர்தல்..?</strong></h2>
    <p>பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் இரு அவைகள் உள்ளது. அதன்படி, அங்குள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 336 ஆகும். இதில், மக்களால் 266 உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இந்த 266 இடங்களில் 60 இடங்கள் பெண்களுக்கும், 10 இடங்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்..?</strong></h2>
    <p>பாகிஸ்தானில் தற்போது 12.85 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6.9 கோடி ஆண் வாக்காளர்களும், 5.9 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். மேலும், இதில் 44 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். 2018 முதல் பாகிஸ்தானில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.25 கோடியாக அதிகரித்துள்ளது. அதில், 1.25 கோடி பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 52 சதவீதம் பேர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இருந்தனர்.&nbsp;</p>
    <h2><strong>எத்தனை வேட்பாளர்கள் போட்டி..?&nbsp;</strong></h2>
    <p>பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 5, 121 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 4,806, பெண் வேட்பாளர்கள் 312, மாற்றுத்திறனாளிகள் 2 பேர் ஆகும்.&nbsp;</p>
    <h2><strong>பாகிஸ்தான் தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டி..?</strong></h2>
    <p>பதிவு செய்யப்பட்ட 167 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சையாக மொத்தம் 5, 121 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளை பார்த்தால், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீ, பிலாவல் பூட்டோ மற்றும் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தேர்தல் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவரது கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இம்ரான் கான் 2022 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p>
    <h2><strong>எத்தனை வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது..?</strong></h2>
    <p>பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 90,582 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சுமார் 17,500 ‘மிகவும் பதட்டமடைந்த’ வாக்குச் சாவடிகள், 32,508 சென்சிட்டிவ் வாக்குச் சாவடிகள் மற்றும் 42,500 பொது வாக்குச் சாவடிகள் உள்ளன. மக்கள் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.இந்த தேர்தலானது இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை நடைபெறும்.</p>
    <p>பாகிஸ்தானில் 36 லட்சம் சிறுபான்மை வாக்காளர்கள் உள்ளனர். அதில் 18 லட்சம் பேர் இந்து வாக்காளர்கள். அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.&nbsp;பாகிஸ்தானில் வாக்குச் சீட்டு மூலம் வாக்களித்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இங்கு பொதுத் தேர்தலுக்காக 26 கோடி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. அதன் மொத்த எடை சுமார் 2100 டன்கள் ஆகும்.</p>
    <p><strong>தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?</strong></p>
    <p>நவாஸ் ஷெரீப்பும், அவரது பிஎம்எல்-என் கட்சியும் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>

    Source link

  • Nazriya Nazim : மலையாளத்தில் ஒரு கொரியன் டிராமா..10 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நஸ்ரியா…

    Nazriya Nazim : மலையாளத்தில் ஒரு கொரியன் டிராமா..10 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நஸ்ரியா…


    <p dir="ltr">நஸ்ரிய நஸிம் நடித்து கடந்த 2014 ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தை நினைவுகூர்ந்துள்ளார்.</p>
    <h2><strong>நஸ்ரியா நஸிம்</strong></h2>
    <p dir="ltr">அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான &lsquo;நேரம்&rsquo; படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவர் கதாநாயகியாக அறிமுகமானது மேட் டேட் படத்தில் தான். இதனைத் தொடர்ந்து 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு அவருக்கு மிக சிறப்பானதாக அமைந்தது. தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்து தள்ளினார் நஸ்ரியா. அப்படி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்து நஸ்ரியாவின் சுட்டித்தனத்தை அடையாளம் காட்டிய படம் தான் மலையாளத்தில் வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா.</p>
    <h2 dir="ltr"><strong>ஓம் ஷாந்தி ஓஷானா</strong></h2>
    <p dir="ltr">ஜுட் ஆந்தனி ஜோசஃப் இயக்கத்தில் நஸ்ரியா , நிவின் பாலி , வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்து நடித்த இப்படம் 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் ஒன்றாக மாறியது.</p>
    <p dir="ltr">இப்படத்தில் நஸ்ரியா ஸ்கூல் பெண் முதல் காலேஜ் , திருமணம் வரை பல்வேறு வயது தோற்றங்களில் நடித்திருந்தார். சிறிய வயதில் இருந்தே டாம் பாயாக வளரும் நஸ்ரியா,&nbsp; தான் திருமணம் செய்துகொள்ளும் நபர் தனக்கு பிடித்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்படி அவர் தேர்வு செய்பவர் தான் இவரை விட&nbsp; 7 வயது மூத்தவரான நிவின் பாலி. கிட்டத்தட்ட ஒரு கொரியன் படத்தைப்போல் காமெடி ரொமான்ஸ் இரண்டும் கலந்த ஒரு படமாக அமைந்தது ஓம் ஷாந்தி ஓஷானா. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அவர்களின் பாராட்டுக்களையும் பெற்றார் நஸ்ரியா.</p>
    <h2 dir="ltr"><strong>10 ஆண்டுகள்</strong>&nbsp;</h2>
    <p dir="ltr">தற்போது இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவு கூறும் வகையில் நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர். "இப்படம் வெளியாகி ஒரு தசாப்தம் முடிந்திருக்கிறது. இன்று வரை நிறைய பேர் பூஜா என்று தான் என்னை அழைக்கிறார்கள். பூஜா எல்லாருக்கும் பிடித்தமான ஒரு கேரக்டராக இருந்தாள். அவள் ஒரு ரெளடி பேபி. என்னையும் அந்த கதாபாத்திரத்தையும் நம்பியதற்காக நான் என்றும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்." என்று நஸ்ரியா பதிவிட்டுள்ளார்.</p>

    Source link

  • Chennai NIA Raid: சென்னையில் மீண்டும் என்.ஐ.ஏ., சோதனை

    Chennai NIA Raid: சென்னையில் மீண்டும் என்.ஐ.ஏ., சோதனை


    Chennai NIA Raid: சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஐதராபாத்தைச் சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட முகில் சந்திரா, கொளத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஆவடியிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. 

    மேலும் காண

    Source link

  • low GDP growth High unemployment Mallikarjun Kharge hits back at PM Modi raises 9 questions on twitter | Kharge On PM Modi: “பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள்

    low GDP growth High unemployment Mallikarjun Kharge hits back at PM Modi raises 9 questions on twitter | Kharge On PM Modi: “பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள்


    Kharge On PM Modi: பிரதமர் மோடியால் பதிலளிக்க முடியுமா என? காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் 9 கேள்விகளை பட்டியலிட்டுள்ளார். 
    பிரதமரின் விமர்சனமும், காங்கிரசின் பதிலும்:
    குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, “2014ல் wஆட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அவர்கள் (பாஜக) நம்புகிறார்கள். 1947ல் சுதந்திரம் கிடைத்தது, அதற்காக காங்கிரஸ் போராடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதை அங்கீகரிக்க விரும்பவில்லை. பிரதமர் எண்ணற்ற பொய்களைச் சொல்கிறார்,  அவருக்கு உண்மையைப் பேசும் பழக்கம் இல்லை” என சாடியுள்ளார். அதோடு, டிவிட்டர் பக்கத்தில் சில கேள்விகளையும் பட்டியலிட்டுள்ளார்.
    கார்கே எழுப்பும் கேள்விகள்..!
    கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், “தண்டி யாத்திரை” மற்றும் “வெள்ளையனே வெளியேறு இயக்கம்” போன்றவற்றில் பங்கேற்காதவர்கள், இன்று காங்கிரஸ் கட்சிக்கு தேசபக்தியை போதிக்கின்றனர்! ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பற்றி எண்ணற்ற பொய்யான விஷயங்களை மோடி கூறினார். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்,

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின்போது வேலையின்மை விகிதம் 2.2% ஆக இருந்தது, உங்கள் பதவிக்காலத்தில் அது 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்து இருப்பது ஏன்?
    UPA ஆட்சியின் 10 ஆண்டுகளில், சராசரி GDP வளர்ச்சி விகிதம் 8.13% ஆக இருந்தது, உங்கள் ஆட்சிக் காலத்தில் அது 5.6% ஆக இருப்பது ஏன்? உலக வங்கியின் கூற்றுப்படி, 2011ம் ஆண்டே இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளில் 14 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வந்தோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச்சு வார்த்தைகளை பேசி பொய்யை மட்டும் பரப்புகிறீர்கள்!
    டிஜிட்டல் மாற்றத்தில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு, ஆதார்-டிபிடி-வங்கி கணக்கு கட்டமைப்பின் கீழ் காங்கிரஸ் கூட்டணி அரசால் அடித்தளம் அமைக்கப்பட்டது. நாங்கள் ஏற்கனவே 2014 வரை 65 கோடி ஆதார் அட்டைகளை பதிவு செய்துள்ளோம். DBT-PAHAL இன் கீழ் மானியங்களின் நேரடி பரிமாற்றம் தொடங்கியுள்ளது. ஸ்வாபிமான் யோஜனா திட்டத்தின் கீழ் 33 கோடி ஏழைகளின் வங்கிக் கணக்குகளையும் தொடங்கியுள்ளோம்.
    மோடி ஜி பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றி ஏதோ சொன்னார். உங்களின் “விற்பனை மற்றும் கொள்ளை” கொள்கையால் ஏப்ரல் 2022 வரை 147 பொதுத்துறை நிறுவனங்கள் முழு/பாதி/அல்லது பகுதி அளவு தனியார்மயமாவதற்கு வழிவகுத்துள்ளது என்பதை நினைவூட்டுகிறோம்.
    அரசாங்கத்தில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் பெரும்பாலான SC, ST, OBC பணியிடங்கள் காலியாக உள்ளன.  ரயில்வே, எஃகு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு (துருப்புக்கள் இல்லாமல்) மற்றும் பெட்ரோலியம் ஆகிய 5 அமைச்சகங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    நீங்கள் ஏக்லவ்யா பள்ளிகளைப் பற்றி சொன்னீர்கள், ஆனால் அதில் 70% ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே உள்ளனர் என்று சொல்லவில்லை.
    கடந்த 10 ஆண்டுகளில் நமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையேயான இடைவெளி 3 மடங்கு அதிகரித்துள்ளதோடு, இந்த உண்மை தெரிந்திருந்தும், அரசு இதை ஒரு பிரச்னையாக ஏற்றுக் கொள்ளாமல், சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
    மோடி ஜி, இரு அவைகளிலும் உங்களின் பேச்சுக்களில் காங்கிரஸைத்தான் திட்டினீர்கள். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், தன்னைப் பற்றி பேசாமல், காங்கிரஸ் கட்சியை மட்டும் விமர்சிக்கிறார். இன்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி பேசவில்லையே?
    உண்மையில் அரசிடம் எந்தத் தகவலும் இல்லை. NDA என்பது எந்த தரவும் கிடைக்கவில்லை (No Data Available) என்று பொருள்படும் அரசு மட்டுமே.  மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 நடத்தப்படவில்லை, வேலைவாய்ப்பு தரவு இல்லை, சுகாதார கணக்கெடுப்பு இல்லை. அரசு அனைத்து புள்ளிவிவரங்களையும் மறைத்து பொய்களை பரப்புகிறது. “மோடியின் கியாரண்டி” என்பது பொய்களை பரப்புவதற்கு மட்டுமே” என காங்கிரஸ் தலைவர் கார்கே பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜக தரப்பிலிருந்து தற்போது வரை எந்த விளக்கமமும் வெளியாகவில்லை. 

    மேலும் காண

    Source link

  • What will the Tamil cinema industry look like without Vijay?

    What will the Tamil cinema industry look like without Vijay?


    Vijay Tamil Cinema: அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகுவது, திரைத்துறைகயுலகின் வணிகத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
    அரசியலில் நடிகர் விஜய்:
    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் வேளையிலேயே நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலுமே, தற்போது அவர் தமிழ் சினிமாவில் பிடித்துள்ள இடம் என்பது யாருமே எதிர்பார்க்காதது தான். அப்படி தமிழ் சினிமாவின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் நேரத்தில், சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருப்பது தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. 
    உச்சாணிக் கொம்பில் விஜய்..!
    ஆரம்ப காலங்களில் உருவ கேலிக்கு ஆளான விஜய், வருடங்கள் கடந்தோட கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அவர் பெற்றுள்ள வளர்ச்சியான அசுரத்தனமானது என்றே கூறலாம். கேட்கும் கோடிகளை சம்பளமாக கொடுத்து அவரது படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையரங்குகள் பக்கம் இழுத்து படம் பார்க்க வைக்கும் ஒரு சில தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மிக முக்கிய இடம் உண்டு. இதன் காரணமாகவே சுமாரான படமாகவே இருந்தாலும் சில நூறு கோடிகளை வசூலாக வாரிக் குவிப்பது என்பது விஜய் படங்களுக்கு சர்வ சாதாரண செயலாகிவிட்டது. அதற்கு உதாரணம் தான் மோசமான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், 300 கோடிகளை வாரிக் குவித்த வாரிசு திரைப்படம்.
    தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக திகழும் விஜய்:
    இந்தியாவின் பன்மொழி திரைத்துறைகளில், தமிழ் சினிமாவின் கோலிவுட்டிற்கு என தனி இடம் உண்டு. தரமான படங்களை தயாரிப்பதோடு, சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படங்களை வழங்குவதிலும் தமிழ் சினிமா கைதேர்ந்தது. ஆனாலுமே, அதன் பெரும்பாலான வணிகம் என்பது இன்னும் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களையே அதிகளவில் சார்ந்துள்ளது. அதில் மிக முக்கிய நபர் மற்றும் தவிர்க்க முடியாத நபர் தான் விஜய்.
    உதாரணமாக கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே துவண்டு கிடந்தது. பொதுமக்கள் திரையரங்கிற்கு வர அஞ்சியதால், சில நடிகர்கள் தங்களது படத்தை நேரடியாக ஒடிடியில் வெளியிட்டனர். ஆனால், விஜயோ ஊரடங்கு முடியும் வரை காத்திருந்து, தனது மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டார். 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே வெளியான இந்த படம், மொத்தமாக 300 கோடி ரூபாய் வரை வசூலிது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது அவரது ரசிகர் பட்டாளத்தின் பலத்தை மட்டுமின்றி, விஜய் படம் என்றால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கூட்டம் குவியும் என்பதை உரக்க உணர்த்தியது.   இப்படி இருக்கையில், சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் எடுத்துள்ள முடிவு அவரது சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தமிழ் சினிமாவின் வணிகத்திலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
    இனி இந்த பிரச்னைகள் இருக்காது?  

    இனி தலயா, தளபதியா என்ற அநாவசிய தலைப்பிலான சமூக வலைதள விவாதங்கள் இருக்காது என நம்பலாம்
    தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் சக்ரவர்த்தி யார் என்ற தலைப்பில் அஜித் – விஜய் ரசிகர்கள் இடையேயான வரம்பு மீறும் சண்டைகள் இருக்காது
    மிக மோசமான வார்த்தைகளை உள்ளடக்கிய ஹேஷ்டேக்குகள் அஜித் – விஜய் ரசிகர்களால் தேசிய அளவில் டிரெண்டாகாது
    விஜய் படங்களில் இடம்பெறும் அரசியல் வசனங்களால் ஏற்படும் சர்ச்சைகள் இனி குறைந்து விடும் (நேரடியாகவே அரசியல் பேசுவார்)
    முதல் நாள் முதல் காட்சிக்கு என கூறிக்கொண்டு நள்ளிரவு முதலே திரையரங்க வளாகங்களில் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் கூட்டம் காணாமல் போகும்
    விஜய் படத்திற்கு அநாவசியமாக கூடுதல் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் பிரச்னை இருக்காது 

    தமிழ் சினிமா வணிகம் பாதிக்குமா?

    என்ன தான் சிறிய படங்கள் வெளியானாலும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் தருவது என்றால் அது உச்சநட்சத்திரங்களின் படங்கள் தான். அந்த லிஸ்டில் இருந்து விஜய் விலகுவது, விநியோகஸ்தர்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது
    திரையரங்குகளில் கூட்டம் குவிந்தால் தான் அதன் உரிமையாளர்களுக்கு லாபம். அப்படி ஒட்டுமொத்த மக்களையும் திரைக்கு இழுக்கும் வல்லமை கொண்ட விஜய் படம் இனி வராது என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பே.
    விஜய் போன்ற ஒரு சில நடிகர்களின் படங்களை தான் ஒடிடி நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் வரை கொடுத்து விலைக்கு வாங்கும். அந்த வருவாயையும் தமிழ் சினிமா இழக்கும்
     விஜயின் நூறு கோடியை கடந்த ஊதியம் மற்றும் அவரது படங்கள் வசூலிக்கும் சில நூறு கோடிகள் மூலம் கிடைக்கும் அரசுக்கான வரி வருவாயும் தடைபடும் 
    தொலைக்காட்சிகளில் விஜய் படம் ஒளிபரப்பானால் அன்றைய நாளின் டிஆர்பி வின்னர் அதுவாக தான் இருக்கும். அந்த வகையில் ஒளிபரப்ப இனி புதிய படங்கள் எதுவும் கிடைக்காது.
    விஜய் படம் வெளியாகிறது என்றாலே அதற்கான மார்கெட்டிங் என்பது மும்முரமாக நடைபெறும். எங்கு திரும்பினாலும் அந்த படத்தை பற்றி பேசும் வகையில் தான் விளம்பரங்கள் இருக்கும். இனி அந்த துறையும் இழப்பை சந்திக்கும்.
    விஜய் படம் என்றாலே திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பும் இனி பறிபோகும் 

    மேலும் காண

    Source link

  • petrol and diesel price chennai on February 7th 2024 know full details

    petrol and diesel price chennai on February 7th 2024 know full details


    Petrol Diesel Price Today, February 8: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 8ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 628வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

    மேலும் காண

    Source link

  • EthirNeechal: 2 ஆண்டுகளை நிறைவு செய்த எதிர்நீச்சல் .. மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் வேதனை

    EthirNeechal: 2 ஆண்டுகளை நிறைவு செய்த எதிர்நீச்சல் .. மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் வேதனை


    <p>சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்துள்ளதை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளது.&nbsp;</p>
    <p>சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். அந்த சீரியலில் அவர் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில் நடித்தும் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமானார். இருந்தால் இப்படி ஒரு தோழனாக பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்ற அந்த கேரக்டர் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்படியான நிலையில் திருச்செல்வம் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.</p>
    <p>பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எதிர்நீச்சல் சீரியலில் கனிகா, ஹரிப்பிரியா இசை, மதுமிதா, கமலேஷ், சத்யப்பிரியா, விபு ராமன், சபரி பிரசாந்த், காயத்ரி கிருஷ்ணன், பிரியதர்ஷினி, பாம்பே ஞானம், விஜே விமல், சத்யா தேவராஜன் என பலரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் அஸ்திவாரமே ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தின் மூத்த நபராக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர் தான். முதலில் இந்த கேரக்டரில் மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நடித்தார்.&nbsp;</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/C3DHraAxZh3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/C3DHraAxZh3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sathya Devarajan (@sathya_devarajan_official)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </p>
    <p>ஆனால் கடந்தாண்டு மாரடைப்பு காரணமாக அவர் மறைந்த நிலையில் தற்போது எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். மாரிமுத்து இருந்த காலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் தான் நம்பர் 1 ஆக இருந்தது. அவர் மறைவுக்குப் பின் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. நல்லபடியாக சென்று கொண்டிருப்பதால் எதிர்நீச்சல் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பானது. ஆனால் டிஆர்பியில் அடிவாங்கியதால் 6 நாட்கள் மட்டுமெ ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.&nbsp;</p>
    <p>இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனைப் பார்த்த அந்த சீரியலின் ரசிகர்கள், &ldquo;என்னதான் இருந்தாலும் &ldquo;இந்தாம்மா ஏய்&rdquo; என தனது கம்பீர குரலால் அனைவரையும் கவர்ந்த மாரிமுத்துவை மிஸ் செய்கிறோம்&rdquo; என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சீரியலில் நடிக்கும் அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.&nbsp;</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க: <a title="Actor Manikandan: நடிகனாவதற்கு முன் தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் இருந்திருக்கிறேன்: மணிகண்டன் பளிச்!" href="https://tamil.abplive.com/entertainment/lover-actor-manikandan-say-he-had-a-lot-of-inferiority-complex-at-his-early-stage-166133" target="_self">Actor Manikandan: நடிகனாவதற்கு முன் தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் இருந்திருக்கிறேன்: மணிகண்டன் பளிச்!</a></strong></p>

    Source link

  • மக்களவை தேர்தலை குறிவைக்கும் மனிதநேய மக்கள் கட்சி.. கேட்ட தொகுதியை கொடுக்குமா திமுக?

    மக்களவை தேர்தலை குறிவைக்கும் மனிதநேய மக்கள் கட்சி.. கேட்ட தொகுதியை கொடுக்குமா திமுக?


    <p>அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது.&nbsp;</p>
    <p>ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை ஆட்சிக்கு எதிரான மனநிலை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடந்த முறை பெற்றது போல எளிதான வெற்றியை பாஜகவால் பெற முடியாது என கருதப்படுகிறது.</p>
    <h2><strong>பரபரக்கும் தேர்தள் களம்:</strong></h2>
    <p>எனவே, வட மாநிலங்களில் பெறும் தோல்வியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிபெறுவது மூலம் ஈடுகட்ட பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு திமுக தலைமையிலான கூட்டணி பெரும் சவாலாக உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி என பலமான கூட்டணியை கொண்டுள்ளது.&nbsp;</p>
    <p>மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினரும் கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.&nbsp;</p>
    <p>இவர்கள் தான் கூட்டணி கட்சிக்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன. விடுதலை சிறுத்தைகளுடன் வரும் 12ஆம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.</p>
    <h2><strong>தயாரான மனிதநேய மக்கள் கட்சி:</strong></h2>
    <p>இந்த சூழலில், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, இப்போது வரை ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.</p>
    <p>இப்படிப்பட்ட சூழலில், சென்னை காமராஜர் அரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.&nbsp;</p>
    <p>பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து இந்தப் பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
    <p>இதை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, "2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என தீர்மானித்துள்ளோம். திமுக கண்டிப்பாக எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானித்துள்ளோம்" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகள் வெறிச்செயல்.. நடந்தது என்ன?

    காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகள் வெறிச்செயல்.. நடந்தது என்ன?


    <p>கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.</p>
    <h2><strong>புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்:</strong></h2>
    <p>சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.&nbsp;</p>
    <p>ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.</p>
    <p>இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு புலம்பெயர் தொழிலாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் பெயர் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர்.</p>
    <h2><strong>ஜம்மு காஷ்மீரில் தொடர் பதற்றம்:</strong></h2>
    <p>தாக்குதலில் காயமடைந்த புலம்பெயர் தொழிலாளரின் விவரம் இன்னும் தெரியவில்லை. அம்ரித்பால் சிங், வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "ஸ்ரீநகரில் உள்ள ஷஹீத் கஞ்ச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதி காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. காயமடைந்த புலம்பெயர் தொழிலாளர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளது.</p>
    <p>கடந்த அக்டோபரில், புல்வாமாவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் நடந்த இரண்டாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும். ஈத்கா பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காவல்துறை ஆய்வாளர் மஸ்ரூர் அகமது வானி மீது 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p>
    <p>கடந்த காலங்களில், ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் இத்தகைய தாக்குதல்கள், சூழலை மேலும் பதற்றமடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல், வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!

    Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!


    <p>இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, வருண் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>
    <p>எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, கியான் பார்தி காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட வருணை ஜலந்தரில் தேடி வருகின்றனர். வருண் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது ஜலந்தர் பகுதியில் வசித்து வருகிறார்.&nbsp;</p>
    <h2><strong>என்ன நடந்தது..?</strong></h2>
    <p>பாதிக்கப்பட்ட பெண் தற்போது விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு அர்ஜூனா விருது வென்ற வருண் குமாருடன் தனக்கு 17 வயதாக இருந்தபோது நட்பு ஏற்பட்டதாக அந்த பெண் எப்.ஐ.ஆரில் கூறியுள்ளார். அந்த நேரத்தில், வருண் குமார் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.</p>
    <p>எப்.ஐ.ஆரில் இருவரும் பழகியபோது, ​​பாதிக்கப்பட்டவருக்கு 17 வயதுதான்.&nbsp;வருண் குமாரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) பயிற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. வருண் குமார் தன்னை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வற்புறுத்தினார்.&nbsp;தொடர்ந்து, சந்திக்க வருமாறு கூறி அவரது காதலையும் என்னிடம் வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் நானும் காதலை வெளிப்படுத்தினேன்.&nbsp;</p>
    <p>பின்னர் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் வருண் குமார் எதிர்காலத்தை பற்றி பேசுவதாக கூறி என்னை பெங்களூரு ஜெய்நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து, அந்த நேரத்தில் உள்ள நான் மைனர் என்பதை அறிந்திருந்தும் என்னிடம் பாலியல் ரீதியாக உறவு வைத்து கொண்டார். அப்போது, அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோதும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.</p>
    <p>திருமணம் செய்து கொள்வதாக கூறி வருண் குமார் தொடர்ந்து தன்னிடம் ஐந்து வருடமாக உடல் ரீதியாக என்னிடம் பழகி வந்தார். அதன்பிறகு, வருண் குமார் தன்னிடம் பேசிவதையும், பழகுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார்.&nbsp;</p>
    <h2><strong>மிரட்டல்:&nbsp;</strong></h2>
    <p>&nbsp;பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் வருண் குமார், இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டுவேன் என மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், &ldquo; பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஹாக்கி வீரர் மீது பெண்ணிடம் கடந்த திங்கள்கிழமை போக்சோ சட்டம் மற்றும் அது தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். வழக்குப்பதிவு செய்து கொண்டதை அறிந்துகொண்ட வருண் குமார் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணி தற்போது நடந்து வருகிறது.&rdquo; என்று தெரிவித்திருந்தார்.&nbsp;</p>
    <h2><strong>யார் இந்த வருண் குமார்..?</strong></h2>
    <p>ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த வருண் குமார், கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியா ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றபோது, ஹிமாச்சல பிரதேச அரசு வருண் குமாருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்திருந்தது. 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.&nbsp;</p>

    Source link

  • Cases against dmk Ministers Hearing in chennai High Court today | Chennai Highcourt: திமுக ஷாக்..! அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்

    Cases against dmk Ministers Hearing in chennai High Court today | Chennai Highcourt: திமுக ஷாக்..! அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்


    Chennai Highcourt: திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
    அமைச்சர்கள் மீதான வழக்குகள்:
    அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் பொன்முடி ஆகியோரை சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தன. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
    கோரிக்கையும், உச்சநீதிமன்ற உத்தரவும்:
    தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதேநேரம்,  மறு ஆய்வு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிகக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநாளில் மறு ஆய்வு வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார். அதையேற்று, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
    திமுகவிற்கு வந்த ஷாக்..!
    ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்றைய விசாரணை பட்டியலில் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்  இடம் பெறவில்லை. இதன் மூலம், மறு-ஆய்வு வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிற்கு அனுமதி கிடைக்கவில்லையா? புதிய நீதிபதி யாரேனும் நியமிக்கப்படுவார்களா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்தநிலையில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகலில் கடைசி வழக்குகளாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
    இதன் மூலம் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேசே விசாரிக்கலாம் என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கிவிட்டார் என கருதப்படுகிறது. அதேநேரம், இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக் கூடாது, என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த திமுகவினருக்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

    மேலும் காண

    Source link