Category: இந்தியா
All national news including indian states
-

7 am headlines today 2024 14th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு சிவில் கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்; குழந்தை பெற்ற மறுநாளில் தேர்வு எழுதி ஸ்ரீபதி சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கோயம்பேடு பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது – ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனைய விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு –…
-

MSP: விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த காங்கிரஸ்.. ராகுல் காந்தியின் முதல் தேர்தல் வாக்குறுதி!
<p>அடுத்த மாத இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது.</p> <h2><strong>காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் வாக்குறுதி:</strong></h2> <p>டெல்லியின் எல்லை பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி ஓராண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.</p> <p>அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்பது,…
-

Election Commissioner : தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்.. புது சட்டத்திற்கு எதிராக வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு!
<p>இந்தியாவை பொறுத்தவரையில், மக்களவை தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை, தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையிடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது. </p> <p>மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.</p> <h2><strong>தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புது சட்டம்: </strong></h2>…
-

Sonia Gandhi set to contest Rajya Sabha election to file nomination tomorrow
நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில், இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். 56 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல்: இரண்டாவது மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 250 உறுப்பினர்கள் கொண்ட…
-

PM Modi Launches Muft Bijli Free Electricity Scheme Shares Link To Join | PM Modi: பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்! 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்
PM Modi: வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமர் சூர்யா கர்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின்போது, மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஒரு வீட்டிற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். 300 யூனிட்…
-

துணை முதலமைச்சர் பதவி அரசியலமைப்புக்கு எதிரானதா? உச்சநீதிமன்றம் பரபர கருத்து!
<p>அரசியலமைப்பை பொறுத்தவரையில், துணை முதலமைச்சர் என்ற பதவி இல்லாவிட்டாலும் பல்வேறு மாநிலங்களில் துணை முதலமைச்சர்களை நியமிப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு சில மாநிலங்களில் எல்லாம் இரண்டுக்கும் மேற்பட்ட துணை முதலமைச்சர்கள் இருக்கின்றனர்.</p> <h2><strong>துணை முதலமைச்சர் பதவி அரசியலமைப்புக்கு உட்பட்டதா?</strong></h2> <p>குறிப்பாக, ஆந்திர பிரதேசத்தில் ஐந்து துணை முதலமைச்சர்கள் இருக்கின்றனர். ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு முதலமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். அரசியலமைப்பில் இல்லாத ஒரு பதவி உருவாக்கப்பட்டு, அது வழக்கமாகி…
-

பாஜகவில் சேர்ந்த முதல் நாளே இப்படியா! கட்சி பெயரை மாற்றி சொன்ன அசோக் சவான்.. வாய்விட்டு சிரித்த பட்னாவிஸ்
<p>எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், பாஜகவில் இணைந்துள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.</p> <h2><strong>காங்கிரஸ் கட்சிக்கு டாடா காண்பித்த அசோக் சவான்:</strong></h2> <p>அந்த வரிசையில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவானும் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய நிலையில், மகாராஷ்டிரா பாஜக தலைவர்…
-

PM Modi: ஏழாவது முறையாக ஐக்கிய அமீரக எமிரேட்ஸ்க்கு பிரதமர் மோடி பயணம்; நாட்டு மக்களுக்கு சென்னது என்ன?
<p>ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, </p> <p>“பிப்ரவரி 13 முதல் 14 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், பிப்ரவரி 14-15 தேதிகளில் கத்தாருக்கும் நான் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான் மேற்கொள்ளும் ஏழாவது பயணமாகும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கத்தாருக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.</p> <p>கடந்த ஒன்பது ஆண்டுகளில், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான நமது ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.…
-

India’s biggest translocation project 16,000 corals get lifeline in Gujarat
Corals Translocation Project: குஜராத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்த 16,000 பவளப்பாறைகள் , 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. Corals Translocation Project (பவளப் பாறைகள் இடமாற்றம்): ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கடல் தேசிய பூங்காவில் (MNP Marine National Park), இந்தியாவின் மிகப்பெரிய இடமாற்றத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 16,000 பவளப்பாறைகள் , வண்ணமயமான கடல் உயிரினங்கள், மரணத்திலிருந்து வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளன. அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனமான…
-

Release MGNREGS Funds For Bengal’: Rahul backs Mamata Banerjee Writes To PM Modi
Rahul Gandhi: மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் – மம்தா பானர்ஜி முரண்: ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படமாட்டாது, திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அக்கட்சி…
-

farmers protest 2.0 borders sealed as delhi gears up for march centre hopeful of resolution | Farmers’ Protest 2.0: டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்
Farmers’ Protest 2.0: விவசாயிகள் அமைப்பு மற்றும் மத்திய அரசு இடையே, திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை இரவு விவசாய பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர் அடங்கிய குழு இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.…
-

top news India today abp nadu morning top India news February 13th 2024 know full details
புது டிவிஸ்ட்.. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..! மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள்…
-

PM Modi to inaugurate first Hindu temple in UAE Check full schedule, key details in tamil | Modi UAE Visit: அபுதாபியில் முதல் இந்து கோயில்
Modi UAE Visit: இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயில்: ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக்…
-

7 am headlines today 2024 13th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: தமிழக சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி; உண்மைக்கு புறம்பாக இருந்ததாக குற்றச்சாட்டு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் பேருந்து நிலையத்தில் வசதிகளை காண்பிக்கிறோம்; கிளாம்பாக்கத்துக்கு இபிஎஸ் வர தயாரா..? அமைச்சர்…
-

7 countries including singapore, srilanka now accept UPI Payment central govt releases list | UPI Payment: இனி இந்த நாடுகளுக்கு செல்லும்போது கையில் பணமே வேண்டாம்
UPI Payment: இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணிப்பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை, தற்போது 7 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. யுபிஐ பணப்பரிவர்த்தனை: இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம்.…
-

Ranji Trophy Tamil Nadu Vs Karnataka Match Drawn Day 5 Elite Group C | Ranji Trophy: இறுதிவரை விறுவிறுப்பு; டிராவில் முடிந்த தமிழ்நாடு
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மிகவும் முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் என்றால் அது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தான். கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், குரூப் ’சி’ – யில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு கர்நாடகா அணிகள் மோதின. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள…
-

Famous Indian Scientists Who Cchanged the World APJ Abdul Kalam CV Raman homie baba Vikram Sarabhai
சர் வி ராமன்: சர்.சி.வி. ராமன் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 இல் பிறந்தார். தனது 18வது வயதில் முதல் அறிவியல் ஆய்வறிக்கையை வெளியிட்டார். ஒளியின் சிதறல் குறித்த ஆய்வில், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இவரது ஆய்வு ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு வழிவகுத்ததால், அவரது பெயருடன் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சத்யேந்திர நாத் போஸ்: சத்யேந்திர நாத் போஸ், இந்தியாவின் கணிதவியலாளர் மற்றும்…
-

SK 21 Update: வெறித்தனம்! ஆக்ஷன் விருந்து படைக்கப்போகும் சிவகார்த்திகேயன்; வீடியோ வெளியிட்ட படக்குழு
<p>தமிழ் சினிமாவில் தற்போது எவர் க்ரீன் எண்டர்டைனராக வளம் வரும் கதாநாயகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன். சிறப்பான கதைத் தேர்வினால் தனது சினிமா வாழ்க்கையில் கொடி கட்டிப் பறந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததால், படக்குழு அயலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. </p> <p>நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் இரண்டாம் பாகம் உருவாகும் திரைப்படம்…
-

Delhi: பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி: மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு – பின்னணி இதுதான்!
<p>வட இந்தியாவில் உள்ள விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி சலோ என்ற பெயரில் மாபெரும் பேரணி பிப்ரவரி 13ம் தேதி நடத்தப்படும் என்று உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.</p> <h2><strong>144 தடை உத்தரவு:</strong></h2> <p>இந்த நிலையில், விவசாயிகளின் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும், தங்களது போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளனர். இதனால், டெல்லி போலீசார்…
-

பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார் நிதிஷ்குமார்!
பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், இது நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் இருந்தது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி: இந்த நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.…
-

7 am headlines today 2024 12th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது; 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை மக்கள் வசதிப்படி சென்று பதிவு செய்துகொள்ளலாம்: தமிழ்நாடு அரசு விளக்கம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பஸ்கள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி – அமைச்சர் சிவசங்கர் தகவல் நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது; மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசு – அமைச்சர் உதயநிதி பேச்சு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்…
-

top news India today abp nadu morning top India news February 12th 2024 know full details
Bihar Trust Vote : பரபரப்பு! நிதிஷ்குமார் அரசு நீடிக்குமா? கவிழுமா? பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன்…
-

Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine
வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார். பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற…
-

செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?
<p>விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. சூரியன், செவ்வாய், நிலவு என விண்வெளியில் பலவற்றையும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா ஆதித்யா, ககன்யான், சந்திரயான் என பல செயற்கை கோள்களையும் ஏவி வருகிறது.</p> <h2>இன்சாட் செயற்கை கோள்:</h2> <p>இந்த செயற்கை கோள்களானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. அங்குள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. உள்பட ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது.</p> <p>செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள்,…
-

காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை
கத்தார் நாட்டில் தங்கி இஸ்ரேல் நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறி இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கத்தார் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில், அவர்கள் 8 பேரையும் கத்தார் நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது அவர்களது குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 7 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். மேலும் காண Source link
-

இந்த வார்த்தைய இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லயே.. புது விதியால் குழம்பும் கர்நாடக மக்கள்!
<p>கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியில் கேள்வி கேட்டால் பதில் அளிக்க மறுப்பது, இந்தி திணிப்பை விமர்சிப்பது என சித்தராமையா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.</p> <h2><strong>கர்நாடகாவில் புதிய விதியால் சர்ச்சை:</strong></h2> <p>அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகளில் கன்னட பெயர்களில் பெயர்பலகை வைக்க வேண்டும் என விதி கொண்டு வரப்பட்டது. பெயர்பலகைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதமாவது கன்னட வார்த்தைகள் இடம்பெற்றிருக்க…
-

கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!
<p>கடந்த 2022ஆம் ஆண்டு, கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மனித வெடிகுண்டு ஜமீஷா முபீன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> <h2><strong>கோவை கார் குண்டுவெடிப்புக்கு காரணம் யார்?</strong></h2> <p>கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை ஆட்சேர்ப்பது தொடர்பாகவும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிரடி சோதனையில் ஈடுபட்டு…
-

Watch Video: பாய்ந்து வந்த சிறுத்தை.. அலறியடித்து ஓடிய வனத்துறை அதிகாரிகள்.. குடியிருப்பு பகுதியில் பரபரப்பு!
<p>காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது. </p> <h2><strong>அதிகரிக்கும் மனித – வனவிலங்கு மோதல் சம்பவங்கள்:</strong></h2> <p>வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித – வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.</p> <p>இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி…
-

India To Soon Launch GPS-Based Toll Collection Here’s How It Will Work
Toll Collection: நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏராளமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டண சேவையா? சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, பாஸ்டேக் இல்லாத…
-

J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு
<p>தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் அனைவரது மனதில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு…
-

Owaisi On Ram Temple : "பகவான் ராமரை மதிக்கிறேன்" நாடாளுமன்றத்தில் மனம் திறந்த அசாதுதீன் ஓவைசி..
<p>நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, அயோத்தி ராமர் கோயில் திறப்பை புகழும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில் புது சகாப்தத்தை கொண்டு வந்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p> <h2><strong>நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் திறப்பு குறித்து தீர்மானம்:</strong></h2> <p>ராமர் கோயில் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "ராமர் பகவான் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். ஆனால்,…
-

Brain stroke will be treated by singing songs how will music therapy of AIIMS work
விஞ்ஞான உலகம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இருந்தது கிடையாது. மனித உலகை வியக்க வைக்கும் வகையில் அறிவியல் உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளை இசையின் மூலம் குணப்படுத்த எய்ம்ஸ் டெல்லி மற்றும் ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். வியக்க வைக்கும் விஞ்ஞான உலகம்: மூளை பக்கவாதத்தால் (brain stroke) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்திய இசையின் மூலம் பேச கற்றுக்கொடுக்க உள்ளார்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். இசையின் மூலம் சிகிச்சையா (மியூசிக்…
-

top news India today abp nadu morning top India news February 11th 2024 know full details | Morning Headlines: மக்களவையில் பிரதமர் மோடி உரை! அமித்ஷா திட்டவட்டம்
PM Modi: 17வது மக்களவையில் பிரதமர் மோடியின் உரை – என்னென்ன இடம் பெற்றது? பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கடந்த ஐந்து ஆண்டுகள் பல தலைமுறைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த ஐந்தாண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும்…
-

7 am headlines today 2024 11th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார். செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம்…
-

Top 10 beautiful waterfalls india jog and Elephant Falls
மக்கள் பலரும், அருவிகளுக்கு சுற்றுலா செல்லுவதை விரும்புவர். அவர்களுக்காக அழகான மற்றும் கண்கவர் 10 நீர்வீழ்ச்சிகள். 1. துத்சாகர் நீர்வீழ்ச்சி: துத்சாகர் நீர்வீழ்ச்சி கோவாவில் மண்டோவி ஆற்றில் உள்ளது. 1017 அடி உயரத்தில் உள்ள துத்சாகர் அருவி இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். குறிப்பாக மழைக்காலங்களில், நீர்வீழ்ச்சி நிரம்பி வழியும் போது, இந்த நீர்வீழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உயரத்திலிருந்து கீழே விழும் நீர், மேகங்களை உருவாக்கி, அழகியல் காட்சியை உருவாக்குகிறது. 2. அதிரப்பள்ளி…
-

PM Modi: 17வது மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை – என்னென்ன இடம் பெற்றது?
பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கடந்த ஐந்து ஆண்டுகள் பல தலைமுறைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த ஐந்தாண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானது. நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திய பல சீர்திருத்தங்கள் கடந்த ஐந்து ஆண்டில் நடந்தன.” 370வது சட்டப்பிரிவு,…
-

Lok Shaba Election: கழட்டிவிடப்பட்ட காங்கிரஸ்; பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்தே போட்டி; கெஜ்ரிவால் புது ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றது. ஆட்சியில் உள்ள பாஜகவை மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வரவிடக்கூடாது என நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தல் திட்டங்களை உருவாக்கி வருகின்றது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இது I.N.D.I.A கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும்,…
-

Amit Shah: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் – அமித்ஷா திட்டவட்டம்
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 400 இடங்களில் வெற்றி பெறுவோம்: எக்னாமிக்ஸ் டைம்ஸ் நவ் நடத்திய வணிக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர்,…
-

PM Modi:பா.ஜ.க. அரசின் தாரக மந்திரம் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!
சீர்த்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கம் ஆகிய மூன்றும் எங்களது தாரக மந்திரமாக இருந்து வருகிறது என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பை பாராட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர் கோயில் தீர்மனத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நாட்டின் வளர்ச்சி பாதிக்கவில்லை;புதிய நாடாளுமன்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் நரேந்திர மோடி உரையின் முக்கியம்சங்கள்…
-

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய போராட்டம்! மே.வங்கத்தில் 144 உத்தரவு – நடந்தது என்ன?
<p> மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானை உடனடியாக கைது செய்ய கூறியும், பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனை தொடர்ந்து, சூழலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.</p> <p>மேலும் அப்பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது கூட்டாளிகளால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகாரில் உடனடியாக நடவடிக்கை…
-

after surprise lunch with pm Union Minister L Murugan says prime minister modi sleeping only 3 and half hours
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. முதல் நாளான 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து இரு அவைகளிலும் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக இடைக்கால பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் தற்போது வரை நடந்து வருகிறது. இந்தநிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பிரதமர் மோடி,…
-

Parliament: தமிழக மீனவர்கள் நலனில் அக்கறை காட்டவில்லை.. மத்திய அரசை கண்டித்து திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு
<p>தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என கூறி மக்களவையில் இருந்து திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.</p> <p>நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. நேற்றுடன் <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a> கூட்டத்தொடர்…
-

Uttarpradesh 5 Year Old Girl Dies Of Heart Attack While Watching Cartoons On Mobile Phone In Amroha | கார்டூன் பார்த்துக்கொண்டிருந்த 5 வயது சிறுமி! மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
சமீப காலமாக இளைஞர்கள் உட்பட பலருக்கு திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த சில காலமாகவே அனைவருக்கும் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. வழக்கம் போல் வேலை செய்யும் இளைஞர்கள் என அனைவரும் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 5 வயது சிறுமி உயிரிழப்பு: சமீபத்தில் கூட, கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும்…
-

top news India today abp nadu morning top India news February 10th 2024 know full details
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்நாடு அரசு கிளாம்பாக்கத்தில் தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சொன்ன அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில்…
-

Guruvayur Temple: ஜெயலலிதா வழங்கிய யானைகளை துன்புறுத்திய பாகர்கள் .. கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
<p>குருவாயூர் கோயிலில் இருக்கு கிருஷ்ணா மற்றும் சிவன் யானையை பாகன்கள் துன்புறுத்திய சம்பவத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. </p> <p>கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னுமிடத்தில் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்திய அளவில் முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழும் குருவாயூர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குருவாயூர் கோயில் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான யானைகள் பராமரிப்பு மையம் மம்மியூர் பகுதியில்…
-

ஆந்திரா அருகே அதிர்ச்ச. சென்னையில் இருந்து சென்ற பேருந்து மீது லாரி மோதி 8 பேர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் பின்னால் இரும்பு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோத முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விபத்தை தடுக்கும் பொருட்டு அந்த லாரியை டிரைவர் திருப்பிய போது அது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து…
-

7 am headlines today 2024 10th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: பிப்ரவரி 14 முதல் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; 1768 பணிக்கு ஜூன் 23ல் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தமிழ்நாடு மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க கூட்டு நடவடிக்கை குழுவை புதுப்பிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை செம்மொழிப் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் பல்வேறு முறைகேடுகளை உறுதி செய்தது விசாரணை குழு; பெரியார்…
-

UAE's Hindu Temple: பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்து கோயில்! அபுதாபியில் ஏற்பாடுகள் மும்முரம்!
<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பாரம்பரிய இந்து கோவிலை வரும் -14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.</p> <h2><strong>அமீரகத்தில் இந்து கோயில்:</strong></h2> <p>ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் மந்திர்(BPAS), அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நட்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கோவில் கட்டுவதற்கான சுமார் 900 கோடி…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/