Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

  • “விஜய் சார் முதல்வராக வந்துடுவார்னு எங்களுக்கு முன்னரே தெரியும். இது மிகப்பெரிய மேஜிக்” – லிங்குசாமி director lingusamy intiated haiku book release function in chennai

    “விஜய் சார் முதல்வராக வந்துடுவார்னு எங்களுக்கு முன்னரே தெரியும். இது மிகப்பெரிய மேஜிக்” – லிங்குசாமி director lingusamy intiated haiku book release function in chennai

    கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 2ம் ஹைக்கூ கவிதைப் போட்டியினை நடத்தி வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று அதன் ஐந்தாம் ஆண்டுக்கான விழா தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை, செய்தி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், தொழிலதிபர் ஆர்.சிவக்குமார், உமறுப்புலவர் வாரிசுகள் இலக்கிய அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் பி.ருமைதீன் ஃபைஜி, வேடியப்பன், கவிஞர் அ.வெண்ணிலா, பிருந்தாசாரதி எனப் பலரும்…

    Continue Reading

  • அந்த குழந்தை நட்சத்திரமா இவர்?!; ஆச்சரியப்பட்ட ஜெயராம் – நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பரத்! |panchathanthiram-child-actor-bharath-reunion-with-jayaram

    அந்த குழந்தை நட்சத்திரமா இவர்?!; ஆச்சரியப்பட்ட ஜெயராம் – நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பரத்! |panchathanthiram-child-actor-bharath-reunion-with-jayaram

    பரத் பேசுகையில், “குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் திரைப்படமான ‘நைனா’ படத்துல நான் ஜெயராம் சார்கூட நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல ஒரு காட்சியில யானை வச்சு ஒரு சீன் எடுக்கணும். ‘ஹீரோ ஜெயராம் சார் படப்பிடிப்புக்கு அவருடைய யானையைக் கொண்டு வர்றேன்’னு சொன்னதாக சொன்னாங்க. அப்போ நான் ‘யானையை ஒருத்தர் வளர்ப்பாங்களா’னு ஆச்சர்யமாக பார்த்தேன். பிறகு, ஜெயராம் சாருக்கும், ஊர்வசி ஆன்ட்டிக்கும் மகனாக நான் நடிச்சிருக்கேன். ஜெயராம் சார் இன்னும் நிறைய படங்கள்ல ஹீரோவாக நடிக்கணும்.…

    Continue Reading

  • “ஜேசன் சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர்!” – சந்தீப் கிஷன் |”Jason Sanjay is a very hard worker!” — Sundeep Kishan

    “ஜேசன் சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர்!” – சந்தீப் கிஷன் |”Jason Sanjay is a very hard worker!” — Sundeep Kishan

    அந்தப் பேட்டியில் அவர், “சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். அவரும் அவருடைய குழுவும் நீண்ட காலமாக இந்தப் படத்திற்காக உழைத்து வருகிறார்கள். அவர்கள் இதன் ஆரம்பகட்ட வேலைகளையும் எடிட்டிங் வேலைகளையும் மிக விரிவாகச் செய்தார்கள். சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரின் அந்தப் பொறுமை என்னைப் பிரமிக்க வைத்தது. 25 வயதே ஆன ஒரு நபர், ஒரு படத்தை இயக்கும்போது பொறுமையாகவும், அமைதியாகவும், தான் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவாகவும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. Jason…

    Continue Reading

  • அந்தரன்: “பிரஜின் உடைஞ்சு அழுகிறதைப் பார்த்திருக்கேன், ரொம்ப வருஷ கனவு இது”-சாண்ட்ரா எமோஷனல் | sandra speech at Prajin Andharan Press Meet

    அந்தரன்: “பிரஜின் உடைஞ்சு அழுகிறதைப் பார்த்திருக்கேன், ரொம்ப வருஷ கனவு இது”-சாண்ட்ரா எமோஷனல் | sandra speech at Prajin Andharan Press Meet

    பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தரன்’. சந்தோஷ் இராவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரஜனின் மனைவியும் நடிகையுமான சாண்ட்ரா, “ரொம்ப வருஷதுக்கு அப்புறம் ஒரு மேடைக்கு வந்திருக்கேன். இது மிகச்சிறந்த ஒரு தருணம். நாங்க எவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியும். நிறைய மேடையில பிரஜினைப் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு படம் நடிக்கும்போது…

    Continue Reading

  • “லிங்குசாமியிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் சிலருக்கு மட்டுமே தெரியும்!” – ஏ.ஆர். முருகதாஸ் |”The noble humanity possessed by Lingusamy is clearly visible to only a select few!” — A.R. Murugadoss

    “லிங்குசாமியிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் சிலருக்கு மட்டுமே தெரியும்!” – ஏ.ஆர். முருகதாஸ் |”The noble humanity possessed by Lingusamy is clearly visible to only a select few!” — A.R. Murugadoss

    என்னைப் பொறுத்தவரை இயக்குநர் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். ஏனெனில், அவரைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறந்த இயக்குநராகத் தெரிவார். சற்றே நெருங்கிச் சென்றால் அவர் ஒரு கவிஞராகத் தெரிவார். அவரிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் ஒரு சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும். கொரோனா இரண்டாவது அலையின்போது, மனிதர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயமும் இக்கட்டான சூழலும் நிலவியது. அந்தச் சமயத்தில், இயக்குநர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டார் என்று…

    Continue Reading

  • “விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார்!” – லிங்குசாமி |”Vijay Sir is very much in sync with the times!” — Lingusamy

    “விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார்!” – லிங்குசாமி |”Vijay Sir is very much in sync with the times!” — Lingusamy

    அவர் ‘போட்டேன் சார். எப்பவும் எங்க வீட்டுல 12 ஓட்டு. வழக்கமாக திமுக-வுக்குத்தான் ஓட்டு போடுவோம். ஆனா, இந்தத் தடவை எங்க வீட்ல 8 பேர் தவெக-வுக்குப் போட்டோம்’ என்று சொன்னார். பிறகு எங்க வீட்டுக்கு வந்த பிளம்பர்ல தொடங்கி நிறைய பேர் என்கிட்ட தவெக-வுக்குத்தான் ஓட்டு போட்டதாகச் சொன்னாங்க. ‘எல்லோரும் தவெக-வுக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்களே’னு அப்போவே என்னமோ நடக்கப் போகுது என்று தோணுச்சு. இன்னைக்கு இவ்வளவு பெரிய மேஜிக் நடந்திருக்கு. அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு…

    Continue Reading

  • எஸ்.ஜே சூர்யா படப்பிடிப்பில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம் – என்ன நடந்தது? |On the set of a film starring S. J. Suryah, a tragic accident occurred during shooting

    எஸ்.ஜே சூர்யா படப்பிடிப்பில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம் – என்ன நடந்தது? |On the set of a film starring S. J. Suryah, a tragic accident occurred during shooting

    எஸ்.ஜே. சூர்யாவின் “கில்லர்’ திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து வருகிறார். வெடி விபத்து | represental images இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரம்பூர் பின்னி மில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பியபோது வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இன்று (ஜூன்.3) அதிகாலை…

    Continue Reading

  • கருப்பு: “அதே அன்பு, அரவணைப்பு, கனிவு” – முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!

    கருப்பு: “அதே அன்பு, அரவணைப்பு, கனிவு” – முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!

    தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் வேளையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம்,‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வெளியான…

    Continue Reading

  • “மனதிலும், புத்தியிலும் இசையை வைத்துக் கொண்டே எழுதிய படம்தான் ‘மஞ்சணத்தி'”- மாரிசெல்வராஜ் | mariselvaraj about ilayaraja and manchanathi movie

    “மனதிலும், புத்தியிலும் இசையை வைத்துக் கொண்டே எழுதிய படம்தான் ‘மஞ்சணத்தி’”- மாரிசெல்வராஜ் | mariselvaraj about ilayaraja and manchanathi movie

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “பைசன் காளமாடன்’. தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ‘பைசன் காளமாடன்’ படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார். Manjanathi – Mari Selvaraj- ilayaraja இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது…

    Continue Reading

  • “சத்யேந்திரா போன்ற கலைஞர்களின் வீட்டு வாடகையை ஆறு மாதங்களுக்கு நாங்களே செலுத்தினோம்!” – பகு |”We ourselves paid the house rent for artists like Satyendran for six months!” — Bagu

    “சத்யேந்திரா போன்ற கலைஞர்களின் வீட்டு வாடகையை ஆறு மாதங்களுக்கு நாங்களே செலுத்தினோம்!” – பகு |”We ourselves paid the house rent for artists like Satyendran for six months!” — Bagu

    இது தொடர்பாக நம்மிடையே பேசியவர், “இந்தச் சமூகத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழும் மனிதர்களை நாம் எந்தளவுக்கு மதிக்கிறோம் என்ற பெரிய கேள்வி எனக்குள் இருக்கிறது. அவர்களைப் பார்த்ததும் நலம் விசாரிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. ஆனால், இன்றைய இளைஞர்கள் பலர் இவரைப் போன்றவர்களின் பரந்த சிந்தனையையும் அறிவையும் பார்த்து ஈர்க்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வழியாக இவருக்கு நல்ல ஆதரவைத் தந்தார்கள். கடந்த 2021-ஆம் ஆண்டு, எங்களது அமைப்பு சார்பாக மறைந்த இயக்குநர் அருள்மொழி நினைவாக இவருக்கு…

    Continue Reading

  • Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையராஜா – மாரி செல்வராஜ் கூட்டணி – வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!

    Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையராஜா – மாரி செல்வராஜ் கூட்டணி – வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!

    மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த ‘பைசன் காளமாடன்’ திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்தபோதே, தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் மற்றுமொரு படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மிகுந்த பொருட்செலவில் பெரிய திரைப்படமாக அது உருவாகும் எனக் கூறப்பட்டது. Manjanathi – Mari Selvaraj…

    Continue Reading

  • “அன்றைய காலகட்ட அரசியலால் ‘பருத்திவீரன்’ படத்துக்காக எனக்கு விருது கிடைக்கல” – இயக்குநர் அமீர் | director ameer speech at book event about paruthiveeran movie

    “அன்றைய காலகட்ட அரசியலால் ‘பருத்திவீரன்’ படத்துக்காக எனக்கு விருது கிடைக்கல” – இயக்குநர் அமீர் | director ameer speech at book event about paruthiveeran movie

    பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள `ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு விழா நேற்று (மே.31) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியபோது, “என்னுடைய சினிமா ஆர்வத்துக்கு எனது குடும்பம் ஆதரவு தரவில்லை என்றாலும், தொந்தரவு செய்யாமல் இருந்தார்கள். மேலும் அவர்கள் யாருமே எதாவது நடிகரைப் பார்க்க வேண்டும் என்று இதுவரை கேட்டதே இல்லை. ஆனால் இரண்டு விஷயங்கள் நடக்காமல் போனதில் வருத்தம் உண்டு. ‘Cyprus’ விழாவில் ராம் படத்துக்காக நான் விருது வாங்கினேன்.…

    Continue Reading

  • கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்! |Abhishan Jeevinth to act alongside Kannada Superstar Shivarajkumar!

    கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்! |Abhishan Jeevinth to act alongside Kannada Superstar Shivarajkumar!

    அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இப்படத்தை இயக்குகிறார். அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தோடு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘ஹார்ட் பீட்’ போன்ற திரைப்படம் மற்றும் சீரிஸ்களில் நடித்துப் பலருக்கும் பரிச்சயமான யோகலக்ஷ்மி, பிக் பாஸ் கானா வினோத் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். Abishan Jeevinth – Shiva Rajkumar Movie இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகராக நடிக்கும் இரண்டாவது படத்திலேயே கன்னட சினிமாவின் உச்ச நடிகரான…

    Continue Reading

  • “‘LIK’ படத்தை எடுப்பது கடினமாக இருந்தது, ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது!” – விக்னேஷ் சிவன் |”Making film ‘LIK’ was difficult; releasing it was even harder!” — Vignesh Shivan

    “‘LIK’ படத்தை எடுப்பது கடினமாக இருந்தது, ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது!” – விக்னேஷ் சிவன் |”Making film ‘LIK’ was difficult; releasing it was even harder!” — Vignesh Shivan

    இதுபோன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களைப் பலர் பார்ப்பதில்லை. இதை எடுப்பது கடினமாக இருந்தது. அதை ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது. அத்தனை சவால்களையும் தாண்டி வந்த பிறகு, இது இப்படி முடிவடைவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. உலக சினிமா வரலாற்றில் முதலில் வெளியானபோது ஏற்றுக்கொள்ளப்படாமல், பின்னாளில் கொண்டாடப்பட்ட எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் மட்டுமே இப்போது எனக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது. நேற்று, ஒரு இயக்குநர் என்னிடம் ஒரு…

    Continue Reading

  • "தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" – தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?

    "தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" – தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?

    தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்றைய பிள்ளைகளுக்கு படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். செய்தியில் கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன். அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, உத்தியோகத்துக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த துர்மரணத்துக்கு ஒரே காரணம், காதல்…

    Continue Reading

  • Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!-புகைப்படங்கள் வைரல்| Suriya gifts cars to Sai Abhyankkar and GK Vishnu photos go viral

    Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!-புகைப்படங்கள் வைரல்| Suriya gifts cars to Sai Abhyankkar and GK Vishnu photos go viral

    ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படம் கிட்டதட்ட 300 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜி.கே விஷ்ணு ‘கருப்பு’ படத்தின் வெற்றி மூலம் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் சூர்யா படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கும் ‘மஹிந்திரா பேட்மேன்’ மாடல் காரை பரிசாக வழங்கியிருக்கிறார். இதன் விலை சுமார் 30 லட்சம் என்று கூறப்படுகிறது. புதிய காரின் முன் நிற்கும் புகைப்படத்தை இருவரும்…

    Continue Reading

  • ‘பென்ஸ்’ படத்தில் இணைந்த முன்னணி நடிகர்: லோகேஷின் புதிய அப்டேட்! | Lokesh Kanagaraj has announced that actor Ravi Mohan has joined his LCU.

    ‘பென்ஸ்’ படத்தில் இணைந்த முன்னணி நடிகர்: லோகேஷின் புதிய அப்டேட்! | Lokesh Kanagaraj has announced that actor Ravi Mohan has joined his LCU.

    லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் “பென்ஸ்’. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். கடந்த ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் அளித்த பேட்டி ஒன்றில், ‘பென்ஸ்’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி ஆகியோருடன் இணைந்து மற்றொரு முன்னணி நட்சத்திரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அது யார்…

    Continue Reading

  • திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்!பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை!

    திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்!பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை!

      ராஜேஸ்வரி “‘திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல முரளி ராமசாமி அணியில தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினரா ஒரு தடவை இருந்தேன். அந்தச் சமயத்துல சங்கப் பதிவுப் பிரச்னை தொடர்பா அவ்வளவு வேலைகள் செஞ்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ரெண்டு முறை நியமன உறுப்பினரா இருந்தேன். பொதுக்காசை எடுத்து மீட்டிங்னு மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகள்தான்.…

    Continue Reading

  • “இந்தப் பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில்..” – அஜித் |”At this moment, as we attempt to come to terms with this immense loss…” — Ajith

    “இந்தப் பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில்..” – அஜித் |”At this moment, as we attempt to come to terms with this immense loss…” — Ajith

      அவர்கள், “எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85-வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத…

    Continue Reading

  • “சூர்யா சார் சில விஷயங்களுக்கு மட்டும் ‘இதை கண்டிப்பா பேசணுமா’னு கேட்பார்!” – ஆர்.ஜே. பாலாஜி “For certain topics, Surya Sir would ask, ‘Do we really have to talk about this?'” — R.J. Balaji

    “சூர்யா சார் சில விஷயங்களுக்கு மட்டும் ‘இதை கண்டிப்பா பேசணுமா’னு கேட்பார்!” – ஆர்.ஜே. பாலாஜி “For certain topics, Surya Sir would ask, ‘Do we really have to talk about this?’” — R.J. Balaji

      இந்த வசனம் பற்றி ஆர்.ஜே. பாலாஜி, “சூர்யா சார் அந்த வசனத்தைப் பேசவே மாட்டேன்னு சொல்லிட்டார். நான் நடிச்ச வெவ்வேறு படங்களுடைய டைட்டில் சொல்லிப் பேசச் சொன்னேன். ஆனா, அவர் பண்ண மாட்டேன்னு உறுதியாகச் சொன்னார். ‘கருப்பு’ படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த வசனத்தை நீக்கச் சொல்லிட்டார். இன்னொருத்தருடைய படத்தை நான் கலாய்க்கக் கூடாதுனுதான் அவர் பேச மாட்டேன்னு சொன்னார். நான்தான் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணினேன்னு பேசச் சொன்னேன். தியேட்டர்ல அந்த…

    Continue Reading

  • “ரஜினி சார் பேசும்போது எனக்கு அப்படித்தான் இருந்தது!” – ஆர்.ஜே. பாலாஜி |”That is exactly how I felt when Rajini Sir spoke!” — R.J. Balaji

    “ரஜினி சார் பேசும்போது எனக்கு அப்படித்தான் இருந்தது!” – ஆர்.ஜே. பாலாஜி |”That is exactly how I felt when Rajini Sir spoke!” — R.J. Balaji

    “என் மனசுல இதெல்லாம் நடக்கும்னு நான் யோசிச்சிருக்கேன். ரஜினி சார் பேசினார். சூர்யா சாருக்கு அமீர்கான் சார் மெசேஜ் அனுப்பிச்சாரு. சிம்பு பேசினாரு. இது மாதிரி பெரிய இயக்குநர்கள் நிறைய பேர் பேசினாங்க. உண்மையில இவங்க எல்லாரும் பேசணும்னு அவசியமே இல்லை. படம் பார்த்துட்டு, ‘படம் நல்லாருக்கு, பரவாயில்லை இது இப்படி இருக்கு, அது அப்படி இருக்கு’னு அவங்களுக்குள்ளேயே பேசிட்டுப் போயிருக்கலாம். ஆனா இவங்க எல்லோரும் பெரிய மனிதர்கள். இன்னொருத்தருக்கு போன் பண்ணி, ‘படம் நல்லா இருந்தது’னு…

    Continue Reading

  • “தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார்” – முதல்வர் விஜய் |”Friend Ajith Kumar, grieving the loss of his mother” — Chief Minister Vijay

    “தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார்” – முதல்வர் விஜய் |”Friend Ajith Kumar, grieving the loss of his mother” — Chief Minister Vijay

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து வந்தார். துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தி கேள்விப்பட்டதும் சென்னைக்குக் கிளம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. தாயாருடன் நடிகர் அஜித் திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், முதல்வர் விஜய் அஜித்குமாரின் தாயார்…

    Continue Reading

  • நடிகர் அஜித் குமாரின் தாய் மோகினி மணி காலமானார்|Tragic Loss for Ajith Kumar as Mother Mohini Mani Passes Away

    நடிகர் அஜித் குமாரின் தாய் மோகினி மணி காலமானார்|Tragic Loss for Ajith Kumar as Mother Mohini Mani Passes Away

    நடிகர் மற்றும் கார் ரேசருமான அஜித் குமாரின் அம்மா மோகினி மணி. இவருக்கு வயது 85. தெலங்கானாவைப் பூர்வீகமாக கொண்ட அஜித் குமார், தமிழில் நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் செட்டில் ஆனார். சென்னையில் அஜித் குமாருடன் வசித்து வந்த அவருடைய அம்மா மோகினி மணி இன்று உடல் நல குறைப்பாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். அஜித் குமார் – தனது பெற்றோருடன் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், “அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின்…

    Continue Reading

  • What To Watch: 'பிளாஸ்ட்', 'கர', 'லீடர்' – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் என்னென்ன?

    What To Watch: 'பிளாஸ்ட்', 'கர', 'லீடர்' – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் என்னென்ன?

    இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் வந்திருக்கும் படங்கள் என்னென்ன?பிளாஸ்ட் – தமிழ் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், பவன் கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் நேற்று (மே 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஈகோ ராமன் – தமிழ் கணேசன் நாச்சிமுத்து இயக்கி சிபி சந்திரன், ரோபோ சங்கர், கீர்த்தனா ஸ்ரீகுமார், சேரன் ராஜ், கவிதா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ள…

    Continue Reading

  • "இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' – KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!

    "இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' – KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!

    ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக ‘ரீமேட்ச்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். KPY Bala – Rematch Movie ‘ரீமேட்ச்’ பட பூஜையில் கலந்துகொண்ட பாலா, தனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “ஜினிமா மீடியா மற்றும் இந்தத் திரைப்படக் குழுவினருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்ல முதல் முதல்ல பேட்மிண்டன் ஸ்கிரிப்ட் எழுதியிருக்காங்க.…

    Continue Reading

  • "அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன்!" – சத்யேந்திராவுக்கு மிஷ்கின் இரங்கல்

    "அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன்!" – சத்யேந்திராவுக்கு மிஷ்கின் இரங்கல்

    நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் சத்யேந்திரா நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் காலமானார். Actor Satyendra இவருடைய உறவினர்கள் எவரையும் தொடர்பு கொள்ள முடியாததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு இவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்கு செய்வதற்கு அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். சினிமா தொடர்பான எந்தவொரு நிகழ்வு எந்தத் தொலைவில் நடைபெற்றாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார். அந்தளவிற்குச் சினிமா மீது காதல் கொண்டவர் அவர். இவருடைய மறைவிற்குத்…

    Continue Reading

  • “ஜேசன் சஞ்சய் மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் படத்தை அணுகியுள்ளார்!” – தமிழ்குமரன் |”Jason Sanjay has approached this film with great clarity and dedication!” — Tamilkumaran

    “ஜேசன் சஞ்சய் மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் படத்தை அணுகியுள்ளார்!” – தமிழ்குமரன் |”Jason Sanjay has approached this film with great clarity and dedication!” — Tamilkumaran

    ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய், “‘சிக்மா’ எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்துத் தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஜூலை 31-ஆம் தேதி ‘சிக்மா’வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரசியமான அப்டேட்ஸ் பகிர இருக்கிறோம்” எனத்…

    Continue Reading

  • 20 ரூபாயில் படம்; தயாநிதி மாறனின் மகன் தொடங்கிய மைக்ரோ டிராமா தளம்! |dhayanidhi maaran son karan kadhai shorts platform launch

    20 ரூபாயில் படம்; தயாநிதி மாறனின் மகன் தொடங்கிய மைக்ரோ டிராமா தளம்! |dhayanidhi maaran son karan kadhai shorts platform launch

    மொபைல் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப, ‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் வெறும் இரண்டு நிமிட சினிமா தரத்திலான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை இந்த தளம் அறிமுகப்படுத்துகிறது. உள்ளூர் வட்டார வழக்கு, நமது கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்த மைக்ரோ டிராமாக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வெறும் 20 ரூபாய் மட்டுமே செலுத்தி கதைஷார்ட்ஸ் செயலியில் தங்களுக்குப் பிடித்தமான தொடர்களைக் பார்க்கும் வசதிகளை இது ஏற்படுத்தி தருகிறது. Actress Rohini –…

    Continue Reading

  • நடிகர் சத்யேந்திரா காலமானார்! – உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; காவல்துறை தகவல்!

    நடிகர் சத்யேந்திரா காலமானார்! – உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; காவல்துறை தகவல்!

    நடிகர் சத்யேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தவர் இன்று இயற்கை எய்தினார். இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். நடிகராக ‘ஏழாவது மனிதன்’, ‘மண்வாசனை’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். Actor Satyendra ‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’18 வயசு’ என்ற படத்தில் வில்லனாகவும் இவர் நடித்திருக்கிறார். இதனைத் தாண்டி இன்னும் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு,…

    Continue Reading

  • Blast: “சனாதானம் என்பது மதம் சார்ந்தது கிடையாது!” – நடிகர் அர்ஜூன் |actor arjun about sanatana dharma in blast press show

    Blast: “சனாதானம் என்பது மதம் சார்ந்தது கிடையாது!” – நடிகர் அர்ஜூன் |actor arjun about sanatana dharma in blast press show

    இந்த நிகழ்வில் நடிகர் அர்ஜுன், “சனாதனம் என்பது வாழ்க்கையின் வழி. நம் வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டோம், எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது இது. தவறு செய்யக் கூடாது, திருடக் கூடாது, மற்றவர்களின் பொருள்களுக்கு ஆசைப்படக் கூடாது என்பதும் சனாதன தர்மம்தான். சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், அவரவர் அப்பா, அம்மாவை வெளியே துரத்திவிட வேண்டும். சனாதன தர்மம் என்பது மதம் சார்ந்தது கிடையாது. அது வாழ்க்கையின் வழி. எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.…

    Continue Reading

  • Blast Review: இது 10000 வாலா வெடியா? ஆக்ஷன் கிங் – ப்ரீத்தி முகுந்தன் காம்போ `பிளாஸ்ட்’ செய்கிறதா? |arjun abhirami preity mukundan blast movie vikatan tamil review

    Blast Review: இது 10000 வாலா வெடியா? ஆக்ஷன் கிங் – ப்ரீத்தி முகுந்தன் காம்போ `பிளாஸ்ட்’ செய்கிறதா? |arjun abhirami preity mukundan blast movie vikatan tamil review

    குடும்பஸ்தனாக அர்ஜுன், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைக் குறையின்றி அள்ளித் தந்திருக்கிறார். அமைதி மோடு பொத்தானை நடிப்பில் அழுத்தியிருந்தாலும், ஆக்ஷன் களத்தில் ‘நான் ஸ்டாப்’ – ஆக வலம் வந்திருக்கிறார். கதையின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் தந்திருக்கும் வேலையை நல்லபடியாகச் செய்து முடித்திருக்கிறார். கராத்தே பயின்று ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் செலுத்திய உழைப்பிற்கு க்ளாப்ஸ்! நீலவேணியாக அபிராமி, இளங்கோவாக விவேக் பிரசன்னா ஆகியோர் ஆக்ஷன், நடிப்பு என அவர்களுடைய மைதானத்தில் ஆல் ரவுண்டர்களாக ஸ்கோர் செய்கிறார்கள். Blast Review…

    Continue Reading

  • ”வில் அம்பு’ பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார் – இறுதிச்சடங்கு நாளை கோவையில் நடக்கிறது! vil ambu movie director ramesh subramaniam passed away today

    ”வில் அம்பு’ பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார் – இறுதிச்சடங்கு நாளை கோவையில் நடக்கிறது! vil ambu movie director ramesh subramaniam passed away today

    வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், கடந்த 2016ல் வெளியான “வில் அம்பு’ படத்தின் மூலம் இயக்குநரானார். ‘மாநகரம்’ ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கும் ‘வில் அம்பு’வை சுசீந்திரன் தயாரித்திருந்தார். அதன் பின்னர் விக்ராந்த், யோகிபாபுவை வைத்து, ‘தி கில்லர் மேன்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருந்தார். இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரமேஷ்…

    Continue Reading

  • “கருப்பு படத்துக்காக நாங்கள் சூர்யாவுடன் 51 நாட்கள் மட்டுமே ஷூட் செய்தோம்”- ஆர்ஜே பாலாஜி| rj balaji about surya in karuppu movie

    “கருப்பு படத்துக்காக நாங்கள் சூர்யாவுடன் 51 நாட்கள் மட்டுமே ஷூட் செய்தோம்”- ஆர்ஜே பாலாஜி| rj balaji about surya in karuppu movie

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு பிறகு ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி சூர்யா குறித்து பேசியிருக்கிறார். ‘கங்குவா’ படத்துக்காக சூர்யா சார் மூன்று ஆண்டுகள் செலவிட்டார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு பத்து நாட்களிலேயே அவர் என்னுடைய செட்டுக்கு வந்துவிட்டார். அவரது எனர்ஜி அப்படியேத்தான்…

    Continue Reading

  • ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது, அதில இருந்துதான்.’ – ஆர்.ஜே. பாலாஜி| RJ.Balaji about karuppu movie

    ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது, அதில இருந்துதான்.’ – ஆர்.ஜே. பாலாஜி| RJ.Balaji about karuppu movie

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி ‘கருப்பு’ படம் தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். கருப்பு படம் அந்தவகையில் ‘கருப்பு’ பட காட்சிகள் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, ” ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது. நான் அந்த படத்தோட இயக்குநரைக்…

    Continue Reading

  • “‘Good Bad Ugly’ வெளியாகியிருந்தாலும் என்னால் ‘சிங்கம்’ ரெஃபரன்ஸை தவிர்க்க முடியவில்லை”- ஆர்.ஜே பாலாஜி| r.j balaji about karuppu movie compare with good bad ugly

    “‘Good Bad Ugly’ வெளியாகியிருந்தாலும் என்னால் ‘சிங்கம்’ ரெஃபரன்ஸை தவிர்க்க முடியவில்லை”- ஆர்.ஜே பாலாஜி| r.j balaji about karuppu movie compare with good bad ugly

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி ‘கருப்பு’ படத்தை ‘Good Bad Ugly’ படத்துடன் ஒப்பிடுவது குறித்து பேசியிருக்கிறார். கருப்பு திரைப்படம் இது தொடர்பாக பேசிய அவர், ” எனக்கு முதல்…

    Continue Reading

  • “கருப்பு விஜய் சாரின் கடைசிப் படமாக இருந்திருக்க வேண்டியது”- ஆர்.ஜே. பாலாஜி| ‘Karuppu’ should have been Vijay sir’s last film” – RJ Balaji about Vijay

    “கருப்பு விஜய் சாரின் கடைசிப் படமாக இருந்திருக்க வேண்டியது”- ஆர்.ஜே. பாலாஜி| ‘Karuppu’ should have been Vijay sir’s last film” – RJ Balaji about Vijay

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி முதலில் ‘கருப்பு’ படத்தை நடிகரும், முதல்வருமான விஜய்காக எழுதியதாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், ” உண்மையில் ‘கருப்பு’ படம் விஜய்…

    Continue Reading

  • "என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்

    "என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்

    சுந்தர்.சியின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘டபுள் ஆக்குபன்சி’. இந்தப் படத்தில் சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார். சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கிறார். ‘டபுள் ஆக்குபன்சி’ சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அனந்திதா…

    Continue Reading

  • “‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது!” – அர்ஜூன் |”The story of ‘Mudhalvan’ was narrated to me after it had been pitched to Rajini Sir and Vijay!” — Arjun

    “‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது!” – அர்ஜூன் |”The story of ‘Mudhalvan’ was narrated to me after it had been pitched to Rajini Sir and Vijay!” — Arjun

    அர்ஜுன் பேசுகையில், “‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது. ஒருவேளை நான் அந்தப் படத்துல நடிக்கலைனா நிச்சயமாக மிஸ் பண்ணியிருப்பேன். ஏன்னா, அது அவ்வளவு அருமையான திரைப்படம். அவ்வளவு சுலபமாகவும் அந்த கேரக்டர்ஸ் நமக்குக் கிடைச்சிடாது. ‘முதல்வன்’ திரைப்படத்தை சமகால அரசியலோடு பொருத்திப் பதிவிடுகிற சமூக வலைதளப் பதிவுகளைப் பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. அவரை நான் சமீபத்துல மீட் பண்ணியிருந்தேன். அவரை நான் மீட் பண்ணின அப்போ, ‘ரொம்ப…

    Continue Reading

  • ‘உப்பு புளி காரம்’ சீசன் 2 எதனால் ‘ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ என மாற்றப்பட்டது? – ராஜ் ஐயப்பா பேட்டி |Why Was ‘Uppu Puli Karam’ Season 2 Renamed ‘Brothers & Sisters’? — Raj Ayyappa Interview

    ‘உப்பு புளி காரம்’ சீசன் 2 எதனால் ‘ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ என மாற்றப்பட்டது? – ராஜ் ஐயப்பா பேட்டி |Why Was ‘Uppu Puli Karam’ Season 2 Renamed ‘Brothers & Sisters’? — Raj Ayyappa Interview

    பிறகு ஆடிஷன் சமயத்துல அவர் நம்ரிதாவையும் ஒரு கேரக்டருக்கு ஆடிஷன் வரச் சொல்லிக் கேட்டார். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஆடிஷனுக்குப் போனோம். இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னன்னா, என்னுடைய அப்பாதான் (நடிகர் பானு ப்ரகாஷ்) இந்த சீரிஸிலும் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். நாங்க மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறது ரொம்பவே ஸ்பெஷல்! அம்மாவும் எங்களை ஒன்றாகப் பார்க்கிறதுக்கு ஆசையோட காத்திருக்காங்க.” என்றவரிடம், “இந்த சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் 2-வது சீசனாக தொடங்கப்பட்டது…

    Continue Reading

  • “அபிஷேக் பச்சனும் மணி ரத்னம் மாதிரி மிமிக்ரி பண்ணினார்!” – ஜெயராம் |”Abhishek Bachchan also mimicked Mani Ratnam!” — Jayaram

    “அபிஷேக் பச்சனும் மணி ரத்னம் மாதிரி மிமிக்ரி பண்ணினார்!” – ஜெயராம் |”Abhishek Bachchan also mimicked Mani Ratnam!” — Jayaram

    ஜெயராம் பேசுகையில், “மணி ரத்னம் சார் மாதிரி நான் மிமிக்ரி பண்ணின வீடியோ பயங்கர வைரல் ஆகிடுச்சு. அப்போ, நான் சுஹாசினி மேம்கிட்ட அனுமதி வாங்கிட்டுதான் மேடையில மிமிக்ரி பண்ணினேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது. ஆனா, தயாரிப்பாளர்கள் வரத் தாமதமானது. அப்போ மணி ரத்னம் சார் ஒரு லெட்டர்ல ‘ஸ்டேஜ்ல ஏதாவது பெர்பார்ம் பண்ண முடியுமா’னு கேட்டு அனுப்பினார். தொடர்ந்து, பிரபு சார்கிட்டையும் அனுமதி வாங்கி மேடையில…

    Continue Reading

  • பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டது கஷ்டமா இருக்கு!-மறைந்த‌ நடிகை தமிழ்செல்வியின் கணவர் பிரேம்நாத்

    பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டது கஷ்டமா இருக்கு!-மறைந்த‌ நடிகை தமிழ்செல்வியின் கணவர் பிரேம்நாத்

    கணவருடன் தமிழ்ச்செல்வி சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பி எல்லா வேலைகளையும் பார்த்திட்டிருந்தாங்க. எங்க சொந்த ஊரான சிவகங்கைக்கு காரை அவங்களே ஓட்டிட்டுப் போவாங்க. எந்தப் பிரச்னையும் இல்லாத சூழல்லதான் அன்னைக்கு திடீர்னு கொஞ்சம் டயர்டா இருக்குன்னு சொன்னாங்க. ஏற்கனவே சிகிச்சை எடுத்தவங்கங்கிற காரணத்தால் உடனே மருத்துவமனைக்குப் போயிட்டோம். அங்க ஒருநாள் அட்மிட் ஆகி பார்த்துட்டுப் போயிடலாம்னு அட்மிட் ஆனோம். நார்மல் வார்டுதான். பேசிட்டே இருந்தவங்க கொஞ்ச நேரத்துல ‘கொஞ்ச நேரம் படுத்துகிடுறேன்’னு சொல்லி படுத்தவங்கதான், பிறகு…

    Continue Reading

  • "இவரால் பாதிப்படைந்தவர்களில் நானும் ஒருவன்!" – 'ரெட் ஜெயண்ட்' செண்பமூர்த்தி பற்றி சுரேஷ் காமாட்சி

    "இவரால் பாதிப்படைந்தவர்களில் நானும் ஒருவன்!" – 'ரெட் ஜெயண்ட்' செண்பமூர்த்தி பற்றி சுரேஷ் காமாட்சி

    ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்த்திருந்தார். விளையாட்டு மீது செண்பகமூர்த்தி ஆர்வம் கொண்டவர் என்பதனால், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செண்பகமூர்த்தியால் தான் பாதிக்கப்பட்டதாக அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆதவ் அர்ஜூனா அவருடைய எக்ஸ் பக்கத்தில், “தமிழ் சினிமாவை தனது…

    Continue Reading

  • “என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!”- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்! |”The person who included everyone else’s name forgot to include their own!” — Khushbu

    “என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!”- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்! |”The person who included everyone else’s name forgot to include their own!” — Khushbu

    இந்த நிகழ்வில் குஷ்பு பேசுகையில், “பசங்களுக்கு இப்போ அட்வைஸ் தேவையில்லை. அவங்ககிட்ட இருந்து நம்மதான் கத்துக்கணும். நம்மகிட்ட நிறைய பழைய சிந்தனைகள் இருக்கும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. என்னுடைய மூத்த மகள் அவந்திகா சுந்தர் மலையாள திரைப்படத்துல நடிச்சிட்டு இருக்காங்க. அதைத்தாண்டி தமிழ்ல ரெண்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்காங்க. தினமும் கதைக் கேட்டுட்டு இருக்காங்க. இந்த விஷயங்கள் தாயாக என்னை பெருமைப்பட வைக்குது. இரண்டாவது மகள் அனந்திதா சுந்தர்…

    Continue Reading

  • “தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது”- ஆர்.வி உதயகுமார்| director perarasu about tamil cinema industry

    “தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது”- ஆர்.வி உதயகுமார்| director perarasu about tamil cinema industry

    வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், “முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வட மஞ்சுவிரட்டு திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக திரைப்படம் வெளியாகி முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகளும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் திரையரங்கில்…

    Continue Reading

  • “என்ன நடக்குது ஒண்ணுமே புரியல’னு சூர்யா சார் சொன்னார்!” – ‘கருப்பு’ ரைட்டர் சரவணன் பேட்டி |”Surya Sir said, ‘I don’t understand what is happening at all!'” — ‘Karuppu’ Writer Saravanan Interview

    “என்ன நடக்குது ஒண்ணுமே புரியல’னு சூர்யா சார் சொன்னார்!” – ‘கருப்பு’ ரைட்டர் சரவணன் பேட்டி |”Surya Sir said, ‘I don’t understand what is happening at all!’” — ‘Karuppu’ Writer Saravanan Interview

    தொடர்ந்து பேசியவர், “‘கருப்பு’ படத்திற்கான திரைக்கதையை நாங்க ரொம்ப மாதங்கள் எழுதினோம். ஏன்னா, ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’னு மூன்று படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான். ஆனா, அது மாஸ் படங்கள் கிடையாது. எங்களுக்கு மாஸ் கமர்ஷியல் படத்திற்கு திரைக்கதை எழுதுவதுதான் கொஞ்சம் சவாலாக இருந்தது. புதுசாகவும் இருந்தது. இப்படியான கமர்சியல் விஷயங்கள் நம்ம படத்துல இருக்கலாமானு எங்களுக்குள்ள சில சீன்கள் பத்தி டிஸ்கஷன் வரும். ஆனா, அதை எப்படி வேறு வழியில செய்யலாம்னு முடிவு பண்ணி…

    Continue Reading

  • “அவரை அவராக இருக்க விடுங்கள்” – இளையராஜா மீதான விமர்சனம் குறித்து கங்கை அமரன்|gangai amaran critisicm about fake news against ilayaraja

    “அவரை அவராக இருக்க விடுங்கள்” – இளையராஜா மீதான விமர்சனம் குறித்து கங்கை அமரன்|gangai amaran critisicm about fake news against ilayaraja

    திரைக்கலைஞர் கங்கை அமரன் எழுதியுள்ள “உயிரிணையே’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன், “பத்திரிகையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள். சிலர் மாதிரி இளையராஜா சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கிறார் என்பது போன்றவற்றை எல்லாம் எழுதாதீர்கள். யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டில் ஆகிவிட்டார். கார்த்திக் ராஜா இளையராஜாவுடன்தான் இருக்கிறார். அவரது மனைவிதான் அண்ணனுக்குச் சமைத்துக்கொடுக்கிறார். ஆனால் இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்று ஏன் எழுத வேண்டும்.…

    Continue Reading

  • `புது படங்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி!’ – திரைத்துறைக்கு முதல்வர் கொடுத்த `ட்ரீட்’ |Permission Granted for Five Daily Screenings of New Films, Treat for the Industry from the Chief Minister!

    `புது படங்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி!’ – திரைத்துறைக்கு முதல்வர் கொடுத்த `ட்ரீட்’ |Permission Granted for Five Daily Screenings of New Films, Treat for the Industry from the Chief Minister!

    திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கடந்த மே 16-ம் தேதி முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். உள்ளாட்சி வரி ரத்து, திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகளுக்கு அனுமதி, சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் விஜய்யை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் முதல்வர் விஜய், புதிய திரைப்படம் வெளியான நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர்…

    Continue Reading

  • ” என்னை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டன், தி.மு.க ஆதரவாளன் என சொல்றாங்க, ஆனா.!”- ஆர்.ஜே பாலாஜி | RJ Balaji responds to being labelled as sanghi

    ” என்னை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டன், தி.மு.க ஆதரவாளன் என சொல்றாங்க, ஆனா.!”- ஆர்.ஜே பாலாஜி | RJ Balaji responds to being labelled as sanghi

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனிடையே கடவுள்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்டு படம் இயக்குவதால் ஆர்.ஜே.பாலாஜியை சங்கி என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” என்னை பா.ஜ.க,…

    Continue Reading

  • ஆனந்தம் 25: ‘கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!’ – நெகிழும் லிங்குசாமி | director lingusamy shares his memories about anandam 25th year

    ஆனந்தம் 25: ‘கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!’ – நெகிழும் லிங்குசாமி | director lingusamy shares his memories about anandam 25th year

    இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான “ஆனந்தம்’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று ‘ஆனந்தம்’ வெளியானது. சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், ரம்பா, தேவயானி, சினேகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு அழகான குடும்பக் கதையாக ‘ஆனந்தம்’ வெளியாகி இருந்தது. ஆனந்தம் படத்தில் தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்பக் கதைகளில் தனி இடத்தைப் பிடிக்கும் படங்களில் ‘ஆனந்தம்’ உண்டு.…

    Continue Reading

  • Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' – நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?

    Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' – நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?

    நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் படத்தைத் தயாரிக்கிறது. படப்பூஜையில் கார்த்தி இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’வில் நடித்து முடித்துவிட்டார். கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்தது வருகின்றன. இதனை…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed