Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood
-

Bharathiraja: “ `எங்கய்யா புடிச்சீங்க இவனை'ன்னு பாரதிராஜா கேட்டார்" – 16 வயதினிலே டாக்டர் சத்யஜித் | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த மண்ணை விட்டுப் பிரிந்து விட்டார். தமிழ்த் திரையுலகம் கண்ணீரில் தத்தளித்தபடி, அந்தக் கிராமத்து நாயகனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினி – கமல் ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில், ரஜினி கமல் இருவரையும் விட அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் கிராமத்து வெர்ட்னரி டாக்டராக வந்த சத்யஜித். ‘நான் லைக் பண்ணினது உன்ன இல்ல, உன் 16 வயசை’ என ஸ்ரீதேவியிடம்…
-

’16 வயதினிலே’ டு ‘கடல் பூக்கள்’!- பாரதிராஜா படங்களுக்கு விகடன் அளித்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா?| Do you know what scores Vikatan gave to Bharathiraja’s films | actpnews.com
* அண்ணன்-தங்கை பாசத்தை தமிழர்களின் வாழ்வியலோடும், கிராமத்து மண் வாசனையோடும் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடிய உன்னதமான படைப்பு ‘கிழக்கு சீமையிலே’. இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50. * சமூகத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்புகளையும், மதச் சடங்குகளையும், போலித்தனங்களையும் துணிச்சலோடு தட்டிக்கேட்ட புரட்சிகரமான திரைப்படம் ‘வேதம் புதிது’. 1987-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50. `கிழக்கு சீமையிலே’ படத்தில் * பெண் சிசுக்கொலை என்னும் சமூக அவலத்தை உலகிற்குத்…
-

"உங்களைப் பொறுத்தவரையில் எது நல்ல படம்?'' – கெளதம் மேனனின் கேள்விக்கு பாரதிராஜா அளித்த பதில்! | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்குக் கிளம்பி வந்திருக்கிறார். ஆனால், இங்கு நடந்த விஷயங்கள் அவரை வேறு திசைக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றன. பாரதிராஜா கடந்த 2023-ம் ஆண்டு, ஆனந்த விகடனுக்காக இயக்குநர் பாரதிராஜாவை, இயக்குநர் கெளதம் மேனன் பேட்டிக் கண்டார். அந்தப் பேட்டியில், பாரதிராஜாவை பொறுத்த வரையில் நல்ல படம் எது, அவருடைய…
-

பிரபாகரனை சந்தித்த அனுபவம்; விகடன் பேட்டியில் பகிர்ந்த பாரதிராஜா|Bharathiraja Shared Rare Insights on Meeting LTTE Leader | actpnews.com
2008-ம் ஆண்டு விகடனின் “தடம்’ இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது. அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து, “எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம் சென்றபோது, எல்லா இயக்கக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொண்டு என்னை கட்டியணைத்துக் கொண்டார். தமிழ்ச்செல்வன்தான் என்னை அழைத்துச் சென்றார். பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், சூசை நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று பகிர்ந்த…
-

'ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜி நடிப்பு ஈர்த்தது' – விகடன் 'தடம்' இதழில் பாரதிராஜா நினைவு! | actpnews.com
2018-ம் ஆண்டு விகடனின் ‘தடம்’ இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று – “உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?” இந்தக் கேள்விக்கு பாரதிராஜாவின் பதில்… “பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்களும் பாடல்களும் வெளிவந்துகொண்டிருந்த சமயம், ஒரு புயல்போல ‘பராசக்தி’ வெளியானது. தமிழன் அதுவரை திரையில் கேட்டிராத தமிழ், சிம்மக் குரலோன் சிவாஜியின் கம்பீரக்குரல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குது. ஒல்லி இளைஞனா,…
-

“ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன்!” – பாரதிராஜா |”I was looking for opportunities while working at a petrol bunk!” – Bharathiraja | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்குக் கிளம்பி வந்திருக்கிறார். ஆனால், இங்கு நடந்த விஷயங்கள் அவரை வேறு திசைக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றன. சினிமா ஆசை பற்றியும், நடிகர் ஆசை எப்படி டைரக்ஷன் பக்கம் சென்றது என்பது பற்றியும் 2018-ல் விகடன் தடம் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார். பாரதிராஜா அந்தப் பேட்டியில்…
-

"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" – ஸ்டாலின் நேரில் அஞ்சலி | actpnews.com
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை… “தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிராஜா -விற்கு ஸ்டாலின் அஞ்சலி 16 வயதினிலேயில் என்ட்ரி: ‘எனக்கு முகவரி கொடுத்தவர்’ – பாரதிராஜாவுக்கு…
-

‘இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!’- சிரஞ்சீவி இரங்கல் | Telugu actor Chiranjeevi condolences legendary director Bharathiraja | actpnews.com
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், ” இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்திருக்கிறது. கிராமத்து மண்ணின் வாசனை, மனித உறவுகளின் அழகு, காதலின் அப்பாவித்தனம் மற்றும் சாமானிய மக்களின் உணர்ச்சிகளை காலத்தால் அழியாத சினிமா கவிதைகளாக மாற்றியவர் அவர். பாரதிராஜா அவருடைய திரைப்படங்கள் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டதோடு, தலைமுறை தலைமுறையாகப் பல திரைப்பட இயக்குநர்களுக்கும் ஊக்கமளித்தன.…
-

பாரதிராஜா இயக்கி தேசிய விருது பெற்ற படங்கள் என்னென்ன தெரியுமா? |Do you know which films directed by Bharathiraja have won National Awards | actpnews.com
அதனைத் தொடர்ந்து, 1985-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காவியமான ‘முதல் மரியாதை’ சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்து. அதன் பிறகு, 1987-இல் சாதியக் கட்டமைப்புகளுக்கு எதிராகப் புரட்சிகரமான கருத்துக்களைப் பேசிய ‘வேதம் புதிது’ திரைப்படம் சமூகப் பிரச்சினைகளை அலசும் சிறந்த திரைப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது. பாரதிராஜா 1994-ஆம் ஆண்டு பெண் சிசுக்கொலை என்ற சமூக அவலத்தை நெஞ்சை உலுக்கும் வகையில் வெளிச்சமிட்டுக் காட்டிய…
-

Jio Hotstar: 'த்ரிடம்', 'லிங்கம்' – இம்மாத ஜியோ லைன் அப்-கள் என்னென்ன? | actpnews.com
ஜூன் மாத ரிலீஸாக அடுத்தடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் படங்களும், சீரிஸ்களும் வரவிருக்கின்றன. ஷேன் நிகமின் ‘த்ரிடம்’, யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’, கதிரின் ‘லிங்கம்’ வெப் சீரிஸ் என இம்மாதத்திற்கான ஹாட்ஸ்டார் லைன் அப்-களை இங்கு பார்ப்போம். த்ரிடம் (Dridam): ஷேன் நிகம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் தினேஷ் பிரபாகர், கிருஷ்ணா பிரபா, மேத்யூ வர்கீஸ், சானியா பாத்திமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…
-

”’ஜோ’ படத்துல இருந்துதான் என்னுடைய கரியர் தொடங்குச்சுனு சொல்லலாம்.” – மாளவிகா மனோஜ் |”You could say my career started with the movie ‘Joe’.” – Malavika Manoj | actpnews.com
நம்மிடையே பேசியவர், “‘ஹபீபி’ படத்துக்குத் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள்கிட்ட இருந்து நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. நான் இன்னும் படத்தைப் பார்க்கல. ஆனா, படத்தைப் பார்த்த இயக்குநர்கள், இப்படி முழுக்க முழுக்க இஸ்லாமிய வாழ்வியலை எந்தப் படமும் காட்டலைனு பாராட்டுறாங்க. அதையே நானும் உணர்றேன். சொல்லப்போனால், தமிழ்ல நான் முதன்முதல்ல கமிட்டான திரைப்படம் இதுதான். இந்தப் படத்துல நடிக்கும்போது நான் 10-வது படிச்சிட்டு இருந்தேன். அதனாலேயே, படம் தொடர்பான நிறைய நினைவுகள் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா,…
-

சென்சாரில் ‘தட்கல்’ முறை ரத்து – சின்ன படங்களுக்கு இதனால் என்ன பயன்? |’Tatkal’ system scrapped for film certification – How does this benefit small films? | actpnews.com
ஆனால், சினிமாவில் தட்கல் முறை என்பது வரிசையில் காத்திருக்கும் சிறிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்தான் பெரிய படங்களுக்கு வழிவகை செய்கிறது. இதன் காரணமாகப் பண பலமும், ஸ்டார் அந்தஸ்தும் உள்ளவர்களுக்கே முன்னுரிமை கிடைத்து வந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஒரு திரைப்படம், தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், டிசம்பர் 31-ம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த அவசர நேரத்தில்,…
-

“வாழ்த்து சொல்லி உள்ளே வந்த எஸ்.வி.சேகர் சங்கத்தை கபளீகரம் செய்துட்டார்”- வீதிக்கு வந்த பஞ்சாயத்து | article regarding issues in tamil thiraippada tholilalar koottamaippu lead by s ve shekher | actpnews.com
அப்படி போனில் வந்தவர், பிறகு கூட்டமைப்பு பத்தி கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சு மெல்ல மெல்ல கூட்டமைப்புக்கு உள்ளே வந்தார். தன்னுடன் தாசரதியையும் கூட்டி வந்தார். வந்த கொஞ்ச நாளிலேயே தயாரிப்பாளர் சங்க தலைவரா இருந்த முரளிகிட்ட என்ன பேசினாரோ தெரியல, அவர் ஆதரவுடனேயே ஏற்கெனவே இருந்த தலைவர் மற்றும் பொருளாளரைத் தூக்கிட்டு, தன்னைத் தலைவராகவும் தனக்கு வேண்டிய ஒருத்தரை பொருளாளராகவும் போட்டுக்கிட்டார். சங்கம் பதிவு செய்ததுக்கான சான்றிதழையும் அவரே போய் வாங்கிக்கிட்டார். இது பத்தி நான் கேட்டப்ப,…
-

அவரின் அந்த பழக்கம்தான் அவர் நம்மை விட்டு சீக்கிரம் பிரிய காரணம்! – இயக்குநர் ஓபிலிஎன்.கிருஷ்ணா director obeli n.krishna shares nedunchalai actor salimkumar memories | actpnews.com
மல்வுட் நடிகரான சலீம் குமார், கடந்த 6ம் தேதி மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 57. மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் குணச்சித்திரம், காமெடி என பன்முகக்கலைஞனாக புகழ்பெற்றார். “ஆதாமிண்டே மகன் அபு’விற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் ‘மரியான்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் சலீம் குமார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பினால் காலமானார். நேற்று ஞாயிற்றுகிழமை சலீம் குமாரின் உடலை கேரள அரசு மரியாதையுடன்…
-

“‘ஹீரோயிசத்தை வளர்த்தெடுப்பதில் தவறில்லை’ என்றார் அவர்!” – இயக்குநர் சசி |”There is nothing wrong with cultivating heroism,” he said! — Director Sasi | actpnews.com
இயக்குநர் சசி, “‘பூ’ திரைப்படத்தை எடுத்து முடித்த பிறகு 2008-ல் மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘சசி, நீங்கள் சொந்த வீடு வாங்கிவிட்டீர்களா?’ எனக் கேட்டார். அப்போது நான் வாடகை வீட்டில்தான் இருந்தேன். ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியால்தான் நான் சொந்தவீடு வாங்கினேன். மீண்டும் அவர், ‘ஏன், இன்னும் நீங்கள் வீடு வாங்கவில்லை?’ எனக் கேட்டார். நான் அவரிடம், ‘நான் ஹீரோவை வைத்துப் படம் பண்ணமாட்டேன். நான் கதைக்குள் இருக்கும்…
-

“கார் பந்தயத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன்”- அஜித்குமார் | actor ajithkumar about car racing | actpnews.com
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் பிரான்ஸில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். நேற்று நடந்த கார் பந்தயத்தில் 5 வது இடத்தை அஜித்குமாரின் அணி பிடித்திருந்தது. இந்நிலையில் பந்தயத்திற்குப் பிறகு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த அஜித்குமார், ” நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன். அஜித்குமார் ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க…
-

''அப்படி செய்திருந்தால் 'அபூர்வ சகோதரர்கள்' தோல்வி படமாகியிருக்கும்!" – நினைவுகள் பகிரும் கமல்ஹாசன் | actpnews.com
94-வது வயதில் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் ‘சிங் கீதம்’ என்ற தெலுங்குப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஜூன் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கமல்ஹாசன், சிங்கீதம் ஸ்ரீனிவாசாவுடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். கமல், சிங்கீதம் சீனிவாசராவ் இந்த நிகழ்வில் கமல்ஹாசன், “நான் திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். எங்கள் இருவருக்குமான முதல் சந்திப்பு…
-

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?! |Is Raghava Lawrence contesting the Trichy East by-election?! | actpnews.com
அந்தப் பதிவில் அவர், “நான் திருச்சி கிழக்குத் தொகுதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகப் பல்வேறு ஊடகத் தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. என்னுடைய ஊடக நண்பர்கள் பலரும் இது குறித்து விளக்கம் கேட்பதற்காக என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்திக்கக் கோரியும் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்கள். இந்த தகவல்களுக்கு நான் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையை எட்டியுள்ளதால், இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் தற்போது “பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில்…
-

What To Watch: ‘பரிமளா & கோ’ முதல் ‘பேட்ரியாட்’ வரை – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்! |parimala and co peddi patriot this week movie releases | actpnews.com
பரிமளா அண்ட் கோ – தமிழ் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் சோபன், அனந்திகா சனில்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள “பரிமளா அண்ட் கோ’ திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது. பெத்தி – தெலுங்கு புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா, போமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் கடந்த…
-

லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? – உண்மை என்ன? | actpnews.com
நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்கிற பெயரிலான இயக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசியிருந்த அவர், “எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்துக்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன் இணையலாம். லதா ரஜினிகாந்த் பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்குப் பல நன்மைகள் செய்திட முன் வாருங்கள். ஒன்றாகச் சேர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்வோம். உள்ளூர்களில் தலைவர்களை உருவாக்க வேண்டும். வலிமையும், சிந்தனைகளையும், பங்களிப்புகளையும் மக்கள் இந்த…
-

” எனக்கு பிடித்தது எளிமையான வாழ்க்கை தான். தொழில் காரணமாகத்தான் சென்னையில் இருக்கிறேன்”- விஜய் ஆண்டனி | actor vijay antony about village life in nooru samy press meet | actpnews.com
இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “நூறு சாமி’. இப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன்.5) நடைபெற்றது. நூறு சாமி இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனியிடம், ”இந்தப் படத்தில் விவசாயியாக நடித்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “எனக்கு…
-

விகடனின் ‘லிங்கம்’ வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் – மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்! \ Vikatan Televistas Lingam webseries to be Streamed on Jio Hotsar | actpnews.com
விகடன் டெலிவிஸ்டாஸின் “லிங்கம்’ வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த வெப்சீரிஸை லக்ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய பாரதியும், பூர்ணிமா ரவியும் நடித்திருக்கிறார்கள். போலீஸ் ஆசையுடன் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி ரௌடிசப் பாதை பக்கம் திரும்புகிறது என்பது தான் வெப்சீரிஸின் கதைக்களம். இதில் கபடி விளையாட்டு மையப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘போலீஸ் ஆகணும்ங்கிறது சின்ன வயசுல இருந்து மனசுல கிடக்கற ஆசை’…
-

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை நேரில் காண ஆசையா? – இதை பண்ணுங்க! |Do you wish to see top stars of Tamil cinema in person? | actpnews.com
இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த படம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மொத்தம் 28 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் (Nominees List) தற்போது வெளியாகியிருக்கிறது. awards.vikatan.com என்ற இணையதளத்தில் பரிந்துரைப் பட்டியல் முழுவதையும் நீங்கள் பார்க்கலாம். ஜூலை 3-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கவுள்ள ஆனந்த விகடன் சினிமா விருதுகள் – 2025 நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம். ஆனந்த விகடன் சினிமா விருதுகள்…
-

'மாற்றத்தை விரும்பும் மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்' – புதிய இயக்கத்தைத் தொடங்கிய லதா ரஜினிகாந்த் | actpnews.com
நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ‘மக்கள் மேடை’ என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை இன்று தொடங்கியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். View this post on Instagram A post shared by Latha Rajinikanth (@latharkofficial) இது தொடர்பான அறிவிப்பை காணொளி வாயிலாக அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அந்தக் காணொளியில் அவர், “எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்துக்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன்…
-

பரிமளா & கோ விமர்சனம்: சீரியஸாக காமெடி செய்யும் ஊர்வசி – ஜெயராம் – மிஷ்கின் கூட்டணி பாஸாகிறதா?! | actpnews.com
அப்பா பரிமளா (ஜெயராம்), அம்மா சுதந்திரம் (ஊர்வசி), மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மற்றும் மதுமிதா (அனந்திகா) என சென்னையில் ‘பரிமளா ஃபேமிலி’ பட்ஜெட் போட்டு வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். பரிமளாவின் இளைய மகளான மதுமிதாவுக்கு, ஏரியா லோக்கல் டான் வர்க்கீஸ் (சாண்டி) காதல் டார்ச்சர் தருகிறார். இதனால் டென்ஷனாகும் ‘பரிமளா & கோ’-வின் உறுப்பினர்கள் அனைவரும் வர்க்கீஸைச் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். Parimala & Co Review | பரிமளா & கோ விமர்சனம் வர்க்கீஸைக்…
-

”தமிழண்டா இயக்கத்தின் நோக்கம் இதுதான்!” – ‘பொருநை’ ஆவணப்பட இயக்குநர் |”This is the objective of the ‘Tamilanda’ movement!” — Director of the ‘Porunai’ documentary
ஹிப் ஹாப் ஆதியின் ‘தமிழண்டா இயக்கம்’ சார்பாக நாங்களும் எங்களுடைய குழுவினரும் சுமார் ஓராண்டு காலம் பொருநை நதிக்கரையோரப் பகுதிகளில் தங்கி இந்த ஆவணப் படத்திற்கான பணிகளை மேற்கொண்டோம். ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று முக்கிய வரலாற்றுத் தளங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வுகள் அனைத்தையும் இந்த பொருநை ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம். அகழ்வாய்வுக் குழிகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன, அவை எத்தனை அடி ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்படுகின்றன, தொல்லியல் அறிவியலின்…
-

‘தமிழன்’ ஷூட்டிங்கில் இயக்குநரிடம் விஜய் சார் சொன்ன விஷயம் மறக்க முடியாதது- நெகிழும் எம்.எஸ்.பாஸ்கர் | actor m.s.bhaskar shares his experience about vijay combination incidents exclusively
முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யுடன் “திருப்பாச்சி’, ‘சிவகாசி’ உள்பட பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். நேற்று நடந்த இந்தச் சந்திப்பு குறித்து எம்.எஸ்.பாஸ்கரிடம் பேசினால்… நெகிழ்கிறார் மனிதர். எம்.எஸ்.பாஸ்கர் “ அவரோடு (விஜய்) பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கேன். அதனால மரியாதை நிமித்தமாகச் சந்திச்சேன். அவங்க அம்மாவை (ஷோபா சந்திரசேகர்) நான் ‘அக்கா..’ என்றும்.. அப்பாவை (எஸ்.ஏ.சந்திரசேகர்)’மாமா..’ என்றும்தான் அன்போடு கூப்பிடுவேன். ‘சட்டம்…
-

SPB 80: "SPB பக்கத்தில் யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை!" – உருகும் இளையராஜா
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80-ஆவது பிறந்தநாள் இன்று. இளையராஜா – எஸ்.பி.பி கூட்டணி என்பது தமிழ்த் திரையிசையில் முக்கியமான வெற்றிக் கூட்டணி. இளையராஜா இசையில் அதிக ஹிட் பாடல்களைப் பாடியவரும் எஸ்.பி.பி-தான். எஸ்.பி.பி-யின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடனான நட்பு, தமிழ்த் திரையிசைக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றி உருக்கமாகப் பேசி ஒரு காணொளியை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இளையராஜா. SPB – Ilaiyaraaja அந்தப் பதிவில் இளையராஜா, “பாலா இல்லாதது என் மனதில்…
-

“ஜோதிகா பற்றி நான் எப்போதுமே அறிந்த ஒன்றை இப்போது இந்த உலகமே பார்க்கிறது!” – சூர்யா |”What I have always known about Jyothika, the whole world is seeing now!” — Suriya
அந்தப் பதிவில் அவர், “தாமதமான பதிவுதான், இருந்தாலும் இதைச் சொல்ல வேண்டும். ‘சிஸ்டம்’ திரைப்படம் சுவாரஸ்யமான மற்றும் நம்மை கட்டிப்போடும் திரைப்படம். அழுத்தமான நடிப்போடும், பல அடுக்குக் கதைக் களத்தோடும் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகள். சோனாக்ஷி சின்ஹா, நேஹாவாக நடித்திருந்தது மிகவும் பவர்ஃபுல்லாக இருந்தது. ஜோதிகா அவர் நடித்த கதாபாத்திரமாகவே முற்றிலும் மாறிவிட்டதை பார்த்தேன். நான் எப்போதுமே அறிந்த ஒன்றை இப்போது இந்த உலகமே பார்க்கிறது. உங்களது மௌனம் வார்த்தைகளை விட சத்தமாகப்…
-

Rajinikanth: உழைப்பாளி டு ஜெயிலர்- 2, 30 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டிக்கு என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்!- actor rajinikanth visit ooty after 30 years.
நடிகர் ரஜினிகாந்த் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென வருகை தந்திருக்கிறார். மைசூரில் இருந்து முதுமலை வழியாக வாடகை கார் மூலம் தனியாக ஊட்டிக்கு வருகை தந்த ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமாக ஊட்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார். ரஜினிகாந்த்தின் இந்தத் திடீர் வருகை குறித்து நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலருக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் இவரைச் சந்தித்துள்ளனர்.…
-

“விஜய் சார் முதல்வராக வந்துடுவார்னு எங்களுக்கு முன்னரே தெரியும். இது மிகப்பெரிய மேஜிக்” – லிங்குசாமி director lingusamy intiated haiku book release function in chennai
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 2ம் ஹைக்கூ கவிதைப் போட்டியினை நடத்தி வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று அதன் ஐந்தாம் ஆண்டுக்கான விழா தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை, செய்தி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், தொழிலதிபர் ஆர்.சிவக்குமார், உமறுப்புலவர் வாரிசுகள் இலக்கிய அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் பி.ருமைதீன் ஃபைஜி, வேடியப்பன், கவிஞர் அ.வெண்ணிலா, பிருந்தாசாரதி எனப் பலரும்…
-

அந்த குழந்தை நட்சத்திரமா இவர்?!; ஆச்சரியப்பட்ட ஜெயராம் – நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பரத்! |panchathanthiram-child-actor-bharath-reunion-with-jayaram
பரத் பேசுகையில், “குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் திரைப்படமான ‘நைனா’ படத்துல நான் ஜெயராம் சார்கூட நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல ஒரு காட்சியில யானை வச்சு ஒரு சீன் எடுக்கணும். ‘ஹீரோ ஜெயராம் சார் படப்பிடிப்புக்கு அவருடைய யானையைக் கொண்டு வர்றேன்’னு சொன்னதாக சொன்னாங்க. அப்போ நான் ‘யானையை ஒருத்தர் வளர்ப்பாங்களா’னு ஆச்சர்யமாக பார்த்தேன். பிறகு, ஜெயராம் சாருக்கும், ஊர்வசி ஆன்ட்டிக்கும் மகனாக நான் நடிச்சிருக்கேன். ஜெயராம் சார் இன்னும் நிறைய படங்கள்ல ஹீரோவாக நடிக்கணும்.…
-

“ஜேசன் சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர்!” – சந்தீப் கிஷன் |”Jason Sanjay is a very hard worker!” — Sundeep Kishan
அந்தப் பேட்டியில் அவர், “சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். அவரும் அவருடைய குழுவும் நீண்ட காலமாக இந்தப் படத்திற்காக உழைத்து வருகிறார்கள். அவர்கள் இதன் ஆரம்பகட்ட வேலைகளையும் எடிட்டிங் வேலைகளையும் மிக விரிவாகச் செய்தார்கள். சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரின் அந்தப் பொறுமை என்னைப் பிரமிக்க வைத்தது. 25 வயதே ஆன ஒரு நபர், ஒரு படத்தை இயக்கும்போது பொறுமையாகவும், அமைதியாகவும், தான் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவாகவும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. Jason…
-

அந்தரன்: “பிரஜின் உடைஞ்சு அழுகிறதைப் பார்த்திருக்கேன், ரொம்ப வருஷ கனவு இது”-சாண்ட்ரா எமோஷனல் | sandra speech at Prajin Andharan Press Meet
பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தரன்’. சந்தோஷ் இராவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரஜனின் மனைவியும் நடிகையுமான சாண்ட்ரா, “ரொம்ப வருஷதுக்கு அப்புறம் ஒரு மேடைக்கு வந்திருக்கேன். இது மிகச்சிறந்த ஒரு தருணம். நாங்க எவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியும். நிறைய மேடையில பிரஜினைப் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு படம் நடிக்கும்போது…
-

“லிங்குசாமியிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் சிலருக்கு மட்டுமே தெரியும்!” – ஏ.ஆர். முருகதாஸ் |”The noble humanity possessed by Lingusamy is clearly visible to only a select few!” — A.R. Murugadoss
என்னைப் பொறுத்தவரை இயக்குநர் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். ஏனெனில், அவரைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறந்த இயக்குநராகத் தெரிவார். சற்றே நெருங்கிச் சென்றால் அவர் ஒரு கவிஞராகத் தெரிவார். அவரிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் ஒரு சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும். கொரோனா இரண்டாவது அலையின்போது, மனிதர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயமும் இக்கட்டான சூழலும் நிலவியது. அந்தச் சமயத்தில், இயக்குநர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டார் என்று…
-

“விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார்!” – லிங்குசாமி |”Vijay Sir is very much in sync with the times!” — Lingusamy
அவர் ‘போட்டேன் சார். எப்பவும் எங்க வீட்டுல 12 ஓட்டு. வழக்கமாக திமுக-வுக்குத்தான் ஓட்டு போடுவோம். ஆனா, இந்தத் தடவை எங்க வீட்ல 8 பேர் தவெக-வுக்குப் போட்டோம்’ என்று சொன்னார். பிறகு எங்க வீட்டுக்கு வந்த பிளம்பர்ல தொடங்கி நிறைய பேர் என்கிட்ட தவெக-வுக்குத்தான் ஓட்டு போட்டதாகச் சொன்னாங்க. ‘எல்லோரும் தவெக-வுக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்களே’னு அப்போவே என்னமோ நடக்கப் போகுது என்று தோணுச்சு. இன்னைக்கு இவ்வளவு பெரிய மேஜிக் நடந்திருக்கு. அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு…
-

எஸ்.ஜே சூர்யா படப்பிடிப்பில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம் – என்ன நடந்தது? |On the set of a film starring S. J. Suryah, a tragic accident occurred during shooting
எஸ்.ஜே. சூர்யாவின் “கில்லர்’ திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து வருகிறார். வெடி விபத்து | represental images இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரம்பூர் பின்னி மில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பியபோது வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இன்று (ஜூன்.3) அதிகாலை…
-

கருப்பு: “அதே அன்பு, அரவணைப்பு, கனிவு” – முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!
தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் வேளையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம்,‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வெளியான…
-

“மனதிலும், புத்தியிலும் இசையை வைத்துக் கொண்டே எழுதிய படம்தான் ‘மஞ்சணத்தி’”- மாரிசெல்வராஜ் | mariselvaraj about ilayaraja and manchanathi movie
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “பைசன் காளமாடன்’. தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ‘பைசன் காளமாடன்’ படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார். Manjanathi – Mari Selvaraj- ilayaraja இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது…
-

“சத்யேந்திரா போன்ற கலைஞர்களின் வீட்டு வாடகையை ஆறு மாதங்களுக்கு நாங்களே செலுத்தினோம்!” – பகு |”We ourselves paid the house rent for artists like Satyendran for six months!” — Bagu
இது தொடர்பாக நம்மிடையே பேசியவர், “இந்தச் சமூகத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழும் மனிதர்களை நாம் எந்தளவுக்கு மதிக்கிறோம் என்ற பெரிய கேள்வி எனக்குள் இருக்கிறது. அவர்களைப் பார்த்ததும் நலம் விசாரிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. ஆனால், இன்றைய இளைஞர்கள் பலர் இவரைப் போன்றவர்களின் பரந்த சிந்தனையையும் அறிவையும் பார்த்து ஈர்க்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வழியாக இவருக்கு நல்ல ஆதரவைத் தந்தார்கள். கடந்த 2021-ஆம் ஆண்டு, எங்களது அமைப்பு சார்பாக மறைந்த இயக்குநர் அருள்மொழி நினைவாக இவருக்கு…
-

Mari Selvaraj: 'அந்த தருணம்'; இளையராஜா – மாரி செல்வராஜ் கூட்டணி – வெளியான 'மஞ்சணத்தி' பட அறிவிப்பு!
மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த ‘பைசன் காளமாடன்’ திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்தபோதே, தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் மற்றுமொரு படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மிகுந்த பொருட்செலவில் பெரிய திரைப்படமாக அது உருவாகும் எனக் கூறப்பட்டது. Manjanathi – Mari Selvaraj…
-

“அன்றைய காலகட்ட அரசியலால் ‘பருத்திவீரன்’ படத்துக்காக எனக்கு விருது கிடைக்கல” – இயக்குநர் அமீர் | director ameer speech at book event about paruthiveeran movie
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள `ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு விழா நேற்று (மே.31) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியபோது, “என்னுடைய சினிமா ஆர்வத்துக்கு எனது குடும்பம் ஆதரவு தரவில்லை என்றாலும், தொந்தரவு செய்யாமல் இருந்தார்கள். மேலும் அவர்கள் யாருமே எதாவது நடிகரைப் பார்க்க வேண்டும் என்று இதுவரை கேட்டதே இல்லை. ஆனால் இரண்டு விஷயங்கள் நடக்காமல் போனதில் வருத்தம் உண்டு. ‘Cyprus’ விழாவில் ராம் படத்துக்காக நான் விருது வாங்கினேன்.…
-

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்! |Abhishan Jeevinth to act alongside Kannada Superstar Shivarajkumar!
அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இப்படத்தை இயக்குகிறார். அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தோடு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘ஹார்ட் பீட்’ போன்ற திரைப்படம் மற்றும் சீரிஸ்களில் நடித்துப் பலருக்கும் பரிச்சயமான யோகலக்ஷ்மி, பிக் பாஸ் கானா வினோத் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். Abishan Jeevinth – Shiva Rajkumar Movie இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகராக நடிக்கும் இரண்டாவது படத்திலேயே கன்னட சினிமாவின் உச்ச நடிகரான…
-

“‘LIK’ படத்தை எடுப்பது கடினமாக இருந்தது, ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது!” – விக்னேஷ் சிவன் |”Making film ‘LIK’ was difficult; releasing it was even harder!” — Vignesh Shivan
இதுபோன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களைப் பலர் பார்ப்பதில்லை. இதை எடுப்பது கடினமாக இருந்தது. அதை ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது. அத்தனை சவால்களையும் தாண்டி வந்த பிறகு, இது இப்படி முடிவடைவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. உலக சினிமா வரலாற்றில் முதலில் வெளியானபோது ஏற்றுக்கொள்ளப்படாமல், பின்னாளில் கொண்டாடப்பட்ட எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் மட்டுமே இப்போது எனக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது. நேற்று, ஒரு இயக்குநர் என்னிடம் ஒரு…
-

"தனுஷ் அரசியலுக்கு வருவாரா?" – தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பதில் என்ன?
தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்றைய பிள்ளைகளுக்கு படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். செய்தியில் கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன். அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, உத்தியோகத்துக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த துர்மரணத்துக்கு ஒரே காரணம், காதல்…
-

‘பென்ஸ்’ படத்தில் இணைந்த முன்னணி நடிகர்: லோகேஷின் புதிய அப்டேட்! | Lokesh Kanagaraj has announced that actor Ravi Mohan has joined his LCU.
லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் “பென்ஸ்’. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். கடந்த ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் அளித்த பேட்டி ஒன்றில், ‘பென்ஸ்’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி ஆகியோருடன் இணைந்து மற்றொரு முன்னணி நட்சத்திரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அது யார்…
-

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்!பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை!
ராஜேஸ்வரி “‘திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல முரளி ராமசாமி அணியில தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினரா ஒரு தடவை இருந்தேன். அந்தச் சமயத்துல சங்கப் பதிவுப் பிரச்னை தொடர்பா அவ்வளவு வேலைகள் செஞ்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ரெண்டு முறை நியமன உறுப்பினரா இருந்தேன். பொதுக்காசை எடுத்து மீட்டிங்னு மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகள்தான்.…
-

“இந்தப் பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில்..” – அஜித் |”At this moment, as we attempt to come to terms with this immense loss…” — Ajith
அவர்கள், “எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85-வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Every day is a new beginning