Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood
-

“சூர்யா சார் சில விஷயங்களுக்கு மட்டும் ‘இதை கண்டிப்பா பேசணுமா’னு கேட்பார்!” – ஆர்.ஜே. பாலாஜி “For certain topics, Surya Sir would ask, ‘Do we really have to talk about this?’” — R.J. Balaji
இந்த வசனம் பற்றி ஆர்.ஜே. பாலாஜி, “சூர்யா சார் அந்த வசனத்தைப் பேசவே மாட்டேன்னு சொல்லிட்டார். நான் நடிச்ச வெவ்வேறு படங்களுடைய டைட்டில் சொல்லிப் பேசச் சொன்னேன். ஆனா, அவர் பண்ண மாட்டேன்னு உறுதியாகச் சொன்னார். ‘கருப்பு’ படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த வசனத்தை நீக்கச் சொல்லிட்டார். இன்னொருத்தருடைய படத்தை நான் கலாய்க்கக் கூடாதுனுதான் அவர் பேச மாட்டேன்னு சொன்னார். நான்தான் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணினேன்னு பேசச் சொன்னேன். தியேட்டர்ல அந்த…
-

“ரஜினி சார் பேசும்போது எனக்கு அப்படித்தான் இருந்தது!” – ஆர்.ஜே. பாலாஜி |”That is exactly how I felt when Rajini Sir spoke!” — R.J. Balaji
“என் மனசுல இதெல்லாம் நடக்கும்னு நான் யோசிச்சிருக்கேன். ரஜினி சார் பேசினார். சூர்யா சாருக்கு அமீர்கான் சார் மெசேஜ் அனுப்பிச்சாரு. சிம்பு பேசினாரு. இது மாதிரி பெரிய இயக்குநர்கள் நிறைய பேர் பேசினாங்க. உண்மையில இவங்க எல்லாரும் பேசணும்னு அவசியமே இல்லை. படம் பார்த்துட்டு, ‘படம் நல்லாருக்கு, பரவாயில்லை இது இப்படி இருக்கு, அது அப்படி இருக்கு’னு அவங்களுக்குள்ளேயே பேசிட்டுப் போயிருக்கலாம். ஆனா இவங்க எல்லோரும் பெரிய மனிதர்கள். இன்னொருத்தருக்கு போன் பண்ணி, ‘படம் நல்லா இருந்தது’னு…
-

“தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார்” – முதல்வர் விஜய் |”Friend Ajith Kumar, grieving the loss of his mother” — Chief Minister Vijay
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து வந்தார். துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தி கேள்விப்பட்டதும் சென்னைக்குக் கிளம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. தாயாருடன் நடிகர் அஜித் திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், முதல்வர் விஜய் அஜித்குமாரின் தாயார்…
-

நடிகர் அஜித் குமாரின் தாய் மோகினி மணி காலமானார்|Tragic Loss for Ajith Kumar as Mother Mohini Mani Passes Away
நடிகர் மற்றும் கார் ரேசருமான அஜித் குமாரின் அம்மா மோகினி மணி. இவருக்கு வயது 85. தெலங்கானாவைப் பூர்வீகமாக கொண்ட அஜித் குமார், தமிழில் நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் செட்டில் ஆனார். சென்னையில் அஜித் குமாருடன் வசித்து வந்த அவருடைய அம்மா மோகினி மணி இன்று உடல் நல குறைப்பாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். அஜித் குமார் – தனது பெற்றோருடன் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், “அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின்…
-

What To Watch: 'பிளாஸ்ட்', 'கர', 'லீடர்' – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் என்னென்ன?
இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் வந்திருக்கும் படங்கள் என்னென்ன?பிளாஸ்ட் – தமிழ் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், பவன் கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் நேற்று (மே 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஈகோ ராமன் – தமிழ் கணேசன் நாச்சிமுத்து இயக்கி சிபி சந்திரன், ரோபோ சங்கர், கீர்த்தனா ஸ்ரீகுமார், சேரன் ராஜ், கவிதா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ள…
-

"இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' – KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!
‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக ‘ரீமேட்ச்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். KPY Bala – Rematch Movie ‘ரீமேட்ச்’ பட பூஜையில் கலந்துகொண்ட பாலா, தனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “ஜினிமா மீடியா மற்றும் இந்தத் திரைப்படக் குழுவினருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்ல முதல் முதல்ல பேட்மிண்டன் ஸ்கிரிப்ட் எழுதியிருக்காங்க.…
-

"அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன்!" – சத்யேந்திராவுக்கு மிஷ்கின் இரங்கல்
நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் சத்யேந்திரா நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் காலமானார். Actor Satyendra இவருடைய உறவினர்கள் எவரையும் தொடர்பு கொள்ள முடியாததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு இவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்கு செய்வதற்கு அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். சினிமா தொடர்பான எந்தவொரு நிகழ்வு எந்தத் தொலைவில் நடைபெற்றாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார். அந்தளவிற்குச் சினிமா மீது காதல் கொண்டவர் அவர். இவருடைய மறைவிற்குத்…
-

“ஜேசன் சஞ்சய் மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் படத்தை அணுகியுள்ளார்!” – தமிழ்குமரன் |”Jason Sanjay has approached this film with great clarity and dedication!” — Tamilkumaran
ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய், “‘சிக்மா’ எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்துத் தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஜூலை 31-ஆம் தேதி ‘சிக்மா’வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரசியமான அப்டேட்ஸ் பகிர இருக்கிறோம்” எனத்…
-

20 ரூபாயில் படம்; தயாநிதி மாறனின் மகன் தொடங்கிய மைக்ரோ டிராமா தளம்! |dhayanidhi maaran son karan kadhai shorts platform launch
மொபைல் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப, ‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் வெறும் இரண்டு நிமிட சினிமா தரத்திலான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை இந்த தளம் அறிமுகப்படுத்துகிறது. உள்ளூர் வட்டார வழக்கு, நமது கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்த மைக்ரோ டிராமாக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வெறும் 20 ரூபாய் மட்டுமே செலுத்தி கதைஷார்ட்ஸ் செயலியில் தங்களுக்குப் பிடித்தமான தொடர்களைக் பார்க்கும் வசதிகளை இது ஏற்படுத்தி தருகிறது. Actress Rohini –…
-

நடிகர் சத்யேந்திரா காலமானார்! – உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; காவல்துறை தகவல்!
நடிகர் சத்யேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தவர் இன்று இயற்கை எய்தினார். இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். நடிகராக ‘ஏழாவது மனிதன்’, ‘மண்வாசனை’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். Actor Satyendra ‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’18 வயசு’ என்ற படத்தில் வில்லனாகவும் இவர் நடித்திருக்கிறார். இதனைத் தாண்டி இன்னும் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு,…
-

Blast: “சனாதானம் என்பது மதம் சார்ந்தது கிடையாது!” – நடிகர் அர்ஜூன் |actor arjun about sanatana dharma in blast press show
இந்த நிகழ்வில் நடிகர் அர்ஜுன், “சனாதனம் என்பது வாழ்க்கையின் வழி. நம் வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டோம், எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது இது. தவறு செய்யக் கூடாது, திருடக் கூடாது, மற்றவர்களின் பொருள்களுக்கு ஆசைப்படக் கூடாது என்பதும் சனாதன தர்மம்தான். சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், அவரவர் அப்பா, அம்மாவை வெளியே துரத்திவிட வேண்டும். சனாதன தர்மம் என்பது மதம் சார்ந்தது கிடையாது. அது வாழ்க்கையின் வழி. எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.…
-

Blast Review: இது 10000 வாலா வெடியா? ஆக்ஷன் கிங் – ப்ரீத்தி முகுந்தன் காம்போ `பிளாஸ்ட்’ செய்கிறதா? |arjun abhirami preity mukundan blast movie vikatan tamil review
குடும்பஸ்தனாக அர்ஜுன், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைக் குறையின்றி அள்ளித் தந்திருக்கிறார். அமைதி மோடு பொத்தானை நடிப்பில் அழுத்தியிருந்தாலும், ஆக்ஷன் களத்தில் ‘நான் ஸ்டாப்’ – ஆக வலம் வந்திருக்கிறார். கதையின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் தந்திருக்கும் வேலையை நல்லபடியாகச் செய்து முடித்திருக்கிறார். கராத்தே பயின்று ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் செலுத்திய உழைப்பிற்கு க்ளாப்ஸ்! நீலவேணியாக அபிராமி, இளங்கோவாக விவேக் பிரசன்னா ஆகியோர் ஆக்ஷன், நடிப்பு என அவர்களுடைய மைதானத்தில் ஆல் ரவுண்டர்களாக ஸ்கோர் செய்கிறார்கள். Blast Review…
-

”வில் அம்பு’ பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார் – இறுதிச்சடங்கு நாளை கோவையில் நடக்கிறது! vil ambu movie director ramesh subramaniam passed away today
வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், கடந்த 2016ல் வெளியான “வில் அம்பு’ படத்தின் மூலம் இயக்குநரானார். ‘மாநகரம்’ ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கும் ‘வில் அம்பு’வை சுசீந்திரன் தயாரித்திருந்தார். அதன் பின்னர் விக்ராந்த், யோகிபாபுவை வைத்து, ‘தி கில்லர் மேன்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருந்தார். இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரமேஷ்…
-

“கருப்பு படத்துக்காக நாங்கள் சூர்யாவுடன் 51 நாட்கள் மட்டுமே ஷூட் செய்தோம்”- ஆர்ஜே பாலாஜி| rj balaji about surya in karuppu movie
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு பிறகு ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி சூர்யா குறித்து பேசியிருக்கிறார். ‘கங்குவா’ படத்துக்காக சூர்யா சார் மூன்று ஆண்டுகள் செலவிட்டார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு பத்து நாட்களிலேயே அவர் என்னுடைய செட்டுக்கு வந்துவிட்டார். அவரது எனர்ஜி அப்படியேத்தான்…
-

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது, அதில இருந்துதான்.’ – ஆர்.ஜே. பாலாஜி| RJ.Balaji about karuppu movie
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி ‘கருப்பு’ படம் தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். கருப்பு படம் அந்தவகையில் ‘கருப்பு’ பட காட்சிகள் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, ” ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது. நான் அந்த படத்தோட இயக்குநரைக்…
-

“‘Good Bad Ugly’ வெளியாகியிருந்தாலும் என்னால் ‘சிங்கம்’ ரெஃபரன்ஸை தவிர்க்க முடியவில்லை”- ஆர்.ஜே பாலாஜி| r.j balaji about karuppu movie compare with good bad ugly
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி ‘கருப்பு’ படத்தை ‘Good Bad Ugly’ படத்துடன் ஒப்பிடுவது குறித்து பேசியிருக்கிறார். கருப்பு திரைப்படம் இது தொடர்பாக பேசிய அவர், ” எனக்கு முதல்…
-

“கருப்பு விஜய் சாரின் கடைசிப் படமாக இருந்திருக்க வேண்டியது”- ஆர்.ஜே. பாலாஜி| ‘Karuppu’ should have been Vijay sir’s last film” – RJ Balaji about Vijay
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி முதலில் ‘கருப்பு’ படத்தை நடிகரும், முதல்வருமான விஜய்காக எழுதியதாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், ” உண்மையில் ‘கருப்பு’ படம் விஜய்…
-

"என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்
சுந்தர்.சியின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘டபுள் ஆக்குபன்சி’. இந்தப் படத்தில் சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார். சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கிறார். ‘டபுள் ஆக்குபன்சி’ சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அனந்திதா…
-

“‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது!” – அர்ஜூன் |”The story of ‘Mudhalvan’ was narrated to me after it had been pitched to Rajini Sir and Vijay!” — Arjun
அர்ஜுன் பேசுகையில், “‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது. ஒருவேளை நான் அந்தப் படத்துல நடிக்கலைனா நிச்சயமாக மிஸ் பண்ணியிருப்பேன். ஏன்னா, அது அவ்வளவு அருமையான திரைப்படம். அவ்வளவு சுலபமாகவும் அந்த கேரக்டர்ஸ் நமக்குக் கிடைச்சிடாது. ‘முதல்வன்’ திரைப்படத்தை சமகால அரசியலோடு பொருத்திப் பதிவிடுகிற சமூக வலைதளப் பதிவுகளைப் பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. அவரை நான் சமீபத்துல மீட் பண்ணியிருந்தேன். அவரை நான் மீட் பண்ணின அப்போ, ‘ரொம்ப…
-

‘உப்பு புளி காரம்’ சீசன் 2 எதனால் ‘ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ என மாற்றப்பட்டது? – ராஜ் ஐயப்பா பேட்டி |Why Was ‘Uppu Puli Karam’ Season 2 Renamed ‘Brothers & Sisters’? — Raj Ayyappa Interview
பிறகு ஆடிஷன் சமயத்துல அவர் நம்ரிதாவையும் ஒரு கேரக்டருக்கு ஆடிஷன் வரச் சொல்லிக் கேட்டார். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஆடிஷனுக்குப் போனோம். இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னன்னா, என்னுடைய அப்பாதான் (நடிகர் பானு ப்ரகாஷ்) இந்த சீரிஸிலும் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். நாங்க மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறது ரொம்பவே ஸ்பெஷல்! அம்மாவும் எங்களை ஒன்றாகப் பார்க்கிறதுக்கு ஆசையோட காத்திருக்காங்க.” என்றவரிடம், “இந்த சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் 2-வது சீசனாக தொடங்கப்பட்டது…
-

“அபிஷேக் பச்சனும் மணி ரத்னம் மாதிரி மிமிக்ரி பண்ணினார்!” – ஜெயராம் |”Abhishek Bachchan also mimicked Mani Ratnam!” — Jayaram
ஜெயராம் பேசுகையில், “மணி ரத்னம் சார் மாதிரி நான் மிமிக்ரி பண்ணின வீடியோ பயங்கர வைரல் ஆகிடுச்சு. அப்போ, நான் சுஹாசினி மேம்கிட்ட அனுமதி வாங்கிட்டுதான் மேடையில மிமிக்ரி பண்ணினேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது. ஆனா, தயாரிப்பாளர்கள் வரத் தாமதமானது. அப்போ மணி ரத்னம் சார் ஒரு லெட்டர்ல ‘ஸ்டேஜ்ல ஏதாவது பெர்பார்ம் பண்ண முடியுமா’னு கேட்டு அனுப்பினார். தொடர்ந்து, பிரபு சார்கிட்டையும் அனுமதி வாங்கி மேடையில…
-

பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டது கஷ்டமா இருக்கு!-மறைந்த நடிகை தமிழ்செல்வியின் கணவர் பிரேம்நாத்
கணவருடன் தமிழ்ச்செல்வி சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பி எல்லா வேலைகளையும் பார்த்திட்டிருந்தாங்க. எங்க சொந்த ஊரான சிவகங்கைக்கு காரை அவங்களே ஓட்டிட்டுப் போவாங்க. எந்தப் பிரச்னையும் இல்லாத சூழல்லதான் அன்னைக்கு திடீர்னு கொஞ்சம் டயர்டா இருக்குன்னு சொன்னாங்க. ஏற்கனவே சிகிச்சை எடுத்தவங்கங்கிற காரணத்தால் உடனே மருத்துவமனைக்குப் போயிட்டோம். அங்க ஒருநாள் அட்மிட் ஆகி பார்த்துட்டுப் போயிடலாம்னு அட்மிட் ஆனோம். நார்மல் வார்டுதான். பேசிட்டே இருந்தவங்க கொஞ்ச நேரத்துல ‘கொஞ்ச நேரம் படுத்துகிடுறேன்’னு சொல்லி படுத்தவங்கதான், பிறகு…
-

"இவரால் பாதிப்படைந்தவர்களில் நானும் ஒருவன்!" – 'ரெட் ஜெயண்ட்' செண்பமூர்த்தி பற்றி சுரேஷ் காமாட்சி
ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்த்திருந்தார். விளையாட்டு மீது செண்பகமூர்த்தி ஆர்வம் கொண்டவர் என்பதனால், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செண்பகமூர்த்தியால் தான் பாதிக்கப்பட்டதாக அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆதவ் அர்ஜூனா அவருடைய எக்ஸ் பக்கத்தில், “தமிழ் சினிமாவை தனது…
-

“என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!”- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்! |”The person who included everyone else’s name forgot to include their own!” — Khushbu
இந்த நிகழ்வில் குஷ்பு பேசுகையில், “பசங்களுக்கு இப்போ அட்வைஸ் தேவையில்லை. அவங்ககிட்ட இருந்து நம்மதான் கத்துக்கணும். நம்மகிட்ட நிறைய பழைய சிந்தனைகள் இருக்கும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. என்னுடைய மூத்த மகள் அவந்திகா சுந்தர் மலையாள திரைப்படத்துல நடிச்சிட்டு இருக்காங்க. அதைத்தாண்டி தமிழ்ல ரெண்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்காங்க. தினமும் கதைக் கேட்டுட்டு இருக்காங்க. இந்த விஷயங்கள் தாயாக என்னை பெருமைப்பட வைக்குது. இரண்டாவது மகள் அனந்திதா சுந்தர்…
-

“தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது”- ஆர்.வி உதயகுமார்| director perarasu about tamil cinema industry
வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், “முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வட மஞ்சுவிரட்டு திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக திரைப்படம் வெளியாகி முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகளும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் திரையரங்கில்…
-

“என்ன நடக்குது ஒண்ணுமே புரியல’னு சூர்யா சார் சொன்னார்!” – ‘கருப்பு’ ரைட்டர் சரவணன் பேட்டி |”Surya Sir said, ‘I don’t understand what is happening at all!’” — ‘Karuppu’ Writer Saravanan Interview
தொடர்ந்து பேசியவர், “‘கருப்பு’ படத்திற்கான திரைக்கதையை நாங்க ரொம்ப மாதங்கள் எழுதினோம். ஏன்னா, ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’னு மூன்று படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான். ஆனா, அது மாஸ் படங்கள் கிடையாது. எங்களுக்கு மாஸ் கமர்ஷியல் படத்திற்கு திரைக்கதை எழுதுவதுதான் கொஞ்சம் சவாலாக இருந்தது. புதுசாகவும் இருந்தது. இப்படியான கமர்சியல் விஷயங்கள் நம்ம படத்துல இருக்கலாமானு எங்களுக்குள்ள சில சீன்கள் பத்தி டிஸ்கஷன் வரும். ஆனா, அதை எப்படி வேறு வழியில செய்யலாம்னு முடிவு பண்ணி…
-

“அவரை அவராக இருக்க விடுங்கள்” – இளையராஜா மீதான விமர்சனம் குறித்து கங்கை அமரன்|gangai amaran critisicm about fake news against ilayaraja
திரைக்கலைஞர் கங்கை அமரன் எழுதியுள்ள “உயிரிணையே’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன், “பத்திரிகையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள். சிலர் மாதிரி இளையராஜா சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கிறார் என்பது போன்றவற்றை எல்லாம் எழுதாதீர்கள். யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டில் ஆகிவிட்டார். கார்த்திக் ராஜா இளையராஜாவுடன்தான் இருக்கிறார். அவரது மனைவிதான் அண்ணனுக்குச் சமைத்துக்கொடுக்கிறார். ஆனால் இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்று ஏன் எழுத வேண்டும்.…
-

” என்னை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டன், தி.மு.க ஆதரவாளன் என சொல்றாங்க, ஆனா.!”- ஆர்.ஜே பாலாஜி | RJ Balaji responds to being labelled as sanghi
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனிடையே கடவுள்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்டு படம் இயக்குவதால் ஆர்.ஜே.பாலாஜியை சங்கி என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” என்னை பா.ஜ.க,…
-

ஆனந்தம் 25: ‘கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!’ – நெகிழும் லிங்குசாமி | director lingusamy shares his memories about anandam 25th year
இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான “ஆனந்தம்’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று ‘ஆனந்தம்’ வெளியானது. சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், ரம்பா, தேவயானி, சினேகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு அழகான குடும்பக் கதையாக ‘ஆனந்தம்’ வெளியாகி இருந்தது. ஆனந்தம் படத்தில் தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்பக் கதைகளில் தனி இடத்தைப் பிடிக்கும் படங்களில் ‘ஆனந்தம்’ உண்டு.…
-

Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' – நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?
நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் படத்தைத் தயாரிக்கிறது. படப்பூஜையில் கார்த்தி இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’வில் நடித்து முடித்துவிட்டார். கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்தது வருகின்றன. இதனை…
-

‘கருப்பு’ படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி! |Following the success of ‘Karuppu’, RJ Balaji offers an 18-foot sickle to Lord Pathinettampadi Karuppasamy!
இந்நிலையில், படத்தின் வெற்றிக்குக் கருப்பசாமிக்கு 18 அடி அரிவாளை சாத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மதுரை அழகர்கோவிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்த பெரிய அரிவாளை ஆர்.ஜே. பாலாஜியும் அவருடைய அணியினரும் சாத்தியிருக்கிறார்கள். இக்கோவிலில் அரிவாள் சாத்துவது பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ‘கருப்பு’ படத்தின் டைரக்ஷன் டீம் அரிவாள் சாத்திய காணொளியைப் படக்குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். ஆர்.ஜே பாலாஜி இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படம் மக்களுக்குப்…
-

“‘கருப்பு’ போன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை உருவாக்கினால் கண்டிப்பாக நடிப்பேன்” – ஆர்.ஜே. பாலாஜி |”If interesting characters like ‘Karuppu’ are created, I will definitely act in them.” — R.J. Balaji
சூர்யாவின் “கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளுக்குத் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில், நேற்று திண்டுக்கல் சென்றவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். கருப்பு திரைப்படம் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் இனி நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கு நானே ஒரு கதாபாத்திரத்தை எழுதிக்கொள்ளவில்லை…
-

What To Watch: ‘கருப்பு, துரந்தர் 2, அதிரடி’ – இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் வந்திருக்கும் படங்கள் | karuppu dhurandhar 2 athiradi this week theatre and ott releases
கருப்பு – தமிழ் ஆர் ஜே. பாலாஜி இயக்கி சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சட்டென்று மாறுது வானிலை – தமிழ் பாபு விஜய் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும், “சற்றென்று மாறுது வானிலை’ படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, ஆதித்யா கதிர், ராமச்சந்திர ராஜு, ஸ்ரீமன், சத்யன்…
-

TVK: “விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகுகின்றன” – செளந்தர்யா ரஜினிகாந்த் | Soundarya Rajinikanth says TVK: “Vijay has many more challenges ahead” –
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கினர். அதன் பின்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்னைக்கு 27 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கியுள்ளோம். ஐந்து மகளிருக்கு ஆட்டோக்களும் நாங்க கொடுத்திருக்கோம். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய மக்களுக்கு நல்லது செய்யணும்னு எப்பவுமே நினைச்சிருக்கோம். அப்பாவும் நிறைய செஞ்சிட்டு இருக்காரு.…
-

Ravi Mohan: "எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப் போவதில்லை" – கண் கலங்கிய ரவி மோகன்
கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன், ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். அப்போது இத்தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாடகி ஒருவருடன், ரவி மோகன் ஒன்றாக இணைந்து நிகழ்வுகளுக்கும், பொது இடங்களுக்கும் செல்வதால், அவர் மீதும் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு மேடையில் ஒன்றாக இணைந்து பாடிய காணொளியும் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அப்பாடகி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு மனிதரைக் காப்பாற்ற…
-

“17 நாள்களாக தனி மனிதனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்”- நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு என்னாச்சு? | actor muthu kalai’s wife admitted in hospital
நகைச்சுவை, ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முத்துக்காளை காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். அவரின் மனைவி…
-

Karuppu: "கண்ணுகளா… செல்லங்களா… என் சாமிகளா… உங்க அன்புக்கு!" – நன்றி தெரிவித்த சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். ரிலீஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மே 14 ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் மே 15 ஆம் தேதி தான் வெளியானது. கருப்பு திரைப்படம் இன்னல்களுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ”…
-

“விஜய் முதலமைச்சர் ஆகக்கூடாது. அதை தடுப்பதற்காக ரஜினி அங்கே போயிருக்கார் என..” – ரஜினி |”That Vijay should not become Chief Minister—and that Rajini has gone there specifically to prevent that…” — Rajini
அதுக்கு நான் வாழ்த்துகள் சொல்லலைனு விமர்சனம் செய்றாங்க. விஜய் மீது எனக்கு பொறாமைனு சொல்றாங்க. நான் அரசியல்ல இல்லை. அதுல நான் இல்லைனு நான் விலகிட்டேன். பிறகு ஏன் எனக்கு பொறாமை வரப் போகிறது. ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால், எனக்கு பொறாமை வந்திருக்குமோ தெரியாது (சிரித்துக் கொண்டே…) எனக்கும் விஜய்க்கும் ஒரு ஜெனரேஷன் இடைவேளை இருக்கு. விஜய்கூட என்னை கம்பேர் பண்ணி பேசினால் எனக்கு நல்லது இல்லை. அதே மாதிரி அவர் கம்பேர் பண்ணினால்,…
-

“தளபதி விஜய்யைக் கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும்!” – மாளவிகா மோகனன் |”I have known Thalapathy Vijay well for the past seven years!” — Malavika Mohanan
அந்தப் பதிவில் அவர், “நேற்றைய தினம் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது எனக்குப் பேரன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. ஆனால், அங்கிருந்த ஒரு சிலர் மட்டும் தேவையின்றி கதையைத் திசைதிருப்பும் வகையிலும், ரசனைக்கு அப்பாற்பட்டும் சில கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அது முற்றிலும் தேவையற்ற ஒன்று. தளபதி விஜய்யை கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மீது எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதையும் உண்டு. அவரை…
-

‘புரோமோஷனின்போது என்னைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். ஆனால்’ – வெற்றிவீரன் ஆதங்கம் | Director Vetriveeran has expressed disappointment about actor Soori.
இயக்குநர் வெற்றிவீரன் “பூ காய் கனி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, சந்தோஷ் நம்பிராஜன், மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மே.16) நடைபெற்றது. பூ காய் கனி இயக்குநர் வெற்றிவீரன் அப்போது இயக்குநர் வெற்றிவீரன் நடிகர் சூரி குறித்து ஆதங்கமாகப் பேசியிருக்கிறார். சூரி குறித்து பேசிய வெற்றிவீரன், “சூரிகிட்ட இந்த நேரத்தில் நான் ஒரு தகவலைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பல பேட்டிகளில்…
-

“என்னுடைய பிட்னெஸ் பயணம் எனக்கு பாடங்களைக் கற்றுக்கொடுத்தது!” – கீர்த்தி சுரேஷ் |”My fitness journey taught me lessons!” – Keerthy Suresh
அந்தப் பதிவில் அவர், “என்னுடைய பிட்னெஸ் பயணம் குறித்து நான் இதுவரை எங்கும் விரிவாகப் பேசியதே இல்லை. ஆனால், அதுதான் எனக்குப் மிகப்பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு நாளும் என்னுடைய உடலைப் பற்றியும், என்னைப் பற்றியும் புதிய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். கடந்த 2013-ம் ஆண்டு நான் ஒரு நடிகையாக அறிமுகமாகும்போது எதைப் பற்றியும் பெரிய புரிதல் இல்லாத ஒரு சாதாரணப் பெண்தான். பலரைப் போலவே, ஜிம்மிற்கும் நமக்கும் ஒத்துவராது என்றுதான் நானும் நினைத்தேன். என்னுடைய…
-

Karuppu: "இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில நான் தியேட்டர்ல பார்க்கல" – சூர்யா எமோஷனல்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கருப்பு இந்நிலையில் இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று (மே.23) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, “நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. இந்தப் படத்தில் நடிக்க வேண்டும்…
-

TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" – அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோதே, அவருடன் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்று ஒரு வாரத்திற்குப் பிறகும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. நேற்றைய தினம் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. விஜய் – ராஜ்மோகன் அதில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, தொல்லியல் துறை, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் விஷால் சினிமா…
-

“நானும் ரஜினியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டது கிடையாது!” – கமல்ஹாசன் |”Rajini and I have never envied each other!” — Kamal Haasan
இது குறித்துச் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன், “அதை அவர் சிரிப்புடன்தான் கூறினாரே தவிர, நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டது கிடையாது. நாங்கள் போட்டி போடுவோம். ஆனால் பொறாமைப்பட மாட்டோம். நாம் சினிமா துறையில் இருக்கிறோம், ஒருவேளை நாங்கள் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்” என்றவர், முதலமைச்சர் விஜய் ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்த கேள்விக்கு, “இப்போது இரண்டு நாள்களில் எதையும் கூறிவிடுவது ஜோதிடமாகத்தான் இருக்க முடியும். Kamal Haasan – கமல் ஹாசன் ஆறு…
-

அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை! |Producer K. Rajan Commits Suicide by Jumping into Adyar River!
இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டாதாகச் சொல்லப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். K Rajan with his son KR Prabhu கடந்த சில காலமாக, தமிழ் சினிமா நிகழ்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசி வந்தவர் அதற்காகப் பல சர்ச்சைகளையும் சந்தித்தார். இவருடைய மகன் கே.ஆர். பிரபுதான் ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தை இயக்கியவர் என்பது…
-

“சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான் சினிமாவில் 'சிறுபான்மை' மக்கள்; முதல்வர் விஜய்.! – பார்த்திபன்
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான ‘ஹபீபி’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi Movie கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படை தொடர்பான விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், “காசு சம்பாதிப்பதை விடக் கலையை நேசித்து மீரா கதிரவன் இப்படத்தை…
-

ஹபீபி: "இப்படத்தின் சிறப்புகளைப் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பேன்!" – பட விழாவில் தவெக முஸ்தபா
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான ‘ஹபீபி’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi Movie கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விழாவில் பேசிய மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, “நான் 1998-ஆம் ஆண்டிலிருந்தே அரசியல் மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், திரையுலக…
-

“என்னுடைய தந்தை கே ராஜனும் அதைக் கேட்டுப் பார்த்தார்!” – கே ராஜனின் மகன்! “My father, K. Rajan, also tried asking for that!” — K. Rajan’s son.
நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டார். தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று இவருடைய உடல் தண்டையார்பேட்டையிலுள்ள இவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையையும் நடத்தி வருகிறார்கள். தற்போது இவருடைய மகன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அவர், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவரும், நடிகருமான என்னுடைய தந்தை கே. ராஜன் சில நாட்களாகவே…
-

காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் – சொந்த ஊரில் இறுதிச்சடங்கு |actor muthukalai’s wife passed away in hospital
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) இன்று காலை 9 மணிக்கு காலமானார். காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். அவரின் மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக கடந்த 19 நாட்களுக்கு முன் சென்னை கே.எம்.சி மருத்துமனையில்…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Every day is a new beginning