"தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது"- ஆர்.வி உதயகுமார்| director perarasu about tamil cinema industry

வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், “முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட மஞ்சுவிரட்டு

வட மஞ்சுவிரட்டு

திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக திரைப்படம் வெளியாகி முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகளும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் திரையரங்கில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது, நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா திரைத்துறைகள் மேம்பட்டு இருக்கின்றன. அங்குள்ள நடிகர்கள் முதலில் கதையைத் தேர்வு செய்வார்கள், பிறகு அதற்குண்டான பட்ஜெட்டைக் கேட்பார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகாக வரக் கூடிய லாபத்தில் ஒரு பங்கினை எடுத்துக் கொள்வார்கள். நம்முடைய நடிகர்கள் அப்படி இருப்பதில்லை.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed