இந்நிலையில், படத்தின் வெற்றிக்குக் கருப்பசாமிக்கு 18 அடி அரிவாளை சாத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மதுரை அழகர்கோவிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்த பெரிய அரிவாளை ஆர்.ஜே. பாலாஜியும் அவருடைய அணியினரும் சாத்தியிருக்கிறார்கள்.
இக்கோவிலில் அரிவாள் சாத்துவது பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ‘கருப்பு’ படத்தின் டைரக்ஷன் டீம் அரிவாள் சாத்திய காணொளியைப் படக்குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கும்னு ரொம்பவே தீர்க்கமா நம்பினேன். இந்தப் படத்தை கடவுள் கொண்டு போய்ச் சேர்ப்பார்னு நம்பிக்கை இருந்தது.
முதல் நாள் ரிலீஸ் கஷ்டமாக இருந்தது, ஆனா ரிலீஸ் ஆகும்போது இந்த படம் பயங்கர பெரிய படமா, எல்லாருக்கும் புடிச்ச படமா மாறும்னு நான் நம்புனேன். அது மாதிரி இப்போ நடந்திருக்கு” எனத் தெரிவித்திருக்கிறார்.






















