2 கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே

Last Updated:

இந்த வெற்றிகளின் மூலம் ‘ஐ’ பிரிவில் பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகள் தங்களது நிலையை வலுப்படுத்தியுள்ளன.

2 கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே
2 கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே

அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகளில், முன்னணி அணிகளான பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகியவை தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ‘ஐ’ பிரிவில் (Group I) இடம்பெற்றுள்ள இந்த அணிகளின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் பிரான்ஸ் மற்றும் செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தை நேர்த்தியாகக் கையாண்டதால், ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என சமனில் முடிந்தது.

இருப்பினும், இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. போட்டியின் 66-ஆவது நிமிடத்தில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 82-ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா மற்றொரு கோல் அடிக்க, பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், செனகல் அணியின் இளம் வீரர் இப்ராஹிம் ஒரு மிரட்டலான கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ஆட்டம் 2-1 என மாறியதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஆனால், அடுத்த நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் எம்பாப்பே தனது இரண்டாவது கோலை அடித்து செனகலின் நம்பிக்கையைத் தகர்த்தார். இறுதியாக, பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செனகலை பந்தாடி அபார வெற்றி பெற்றது.

இதே பிரிவில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் ஈராக் மற்றும் நார்வே அணிகள் மோதின. இப்போட்டியின் தொடக்கம் முதலே நார்வே அணி வீரர்கள் மைதானத்தில் முழு ஆதிக்கத்தை செலுத்தினர். ஈராக் அணியின் தற்காப்பு அரணைத் தகர்த்து நார்வே வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை விளாசினர்.

குறிப்பாக, நார்வே அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலண்ட் அதிரடியாக விளையாடி இரண்டு முக்கிய கோல்களை அடித்து அணியின் வெற்றிப் பாதையை எளிதாக்கினார்.

ஈராக் அணியால் ஒரு கோல் மட்டுமே திருப்பிக் கொடுக்க முடிந்தது. ஆட்டத்தின் முடிவில் நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிகளின் மூலம் ‘ஐ’ பிரிவில் பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகள் தங்களது நிலையை வலுப்படுத்தியுள்ளன.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed