Category: இந்தியா
All national news including indian states
-

Viral Video Shows Car Driver’s Daring Stunt In Front Of Ghaziabad Police
திரைப்படங்களில் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை பின்னால் இயக்கியபடியே கார் ஓட்டுவதும், அதை மற்ற வாகனங்கள் துரத்துவது போலவும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். இந்த காட்சிகளை திரைப்படங்களுக்காக படமாக்குவதே மிகுந்த சிரமமாக இருக்கும். இதேபோல ஒரு சம்பவம் நிஜத்தில் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பரபரப்பான நகரங்களில் ஒன்று காசியாபாத். காசியாபாத்தில் அமைந்துள்ளது ராஜ்நகர். இந்த பகுதியில் ஐ -20 கார் ஒன்றை ஒருவர் குடித்து விட்டு கட்டுப்பாடின்றி ஓட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு…
-

Farmers Protest: Tear Gas Clash, March On-Hold After Farmers Claim Protester Died At Punjab-Haryana Border | Farmers Protest: பரபரப்பு..! சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி
Farmers Protest: டெல்லியை நோக்கி செல்லும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டம்: கடந்த 2021-22ம் ஆண்டு போராட்டத்தின் முடிவின் போது மத்திய அரசு கொடுத்த, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்று வரும் அவர்களை, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை கொண்டு ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.…
-

top news India today abp nadu morning top India news February 21 2024 know full details
கரும்பு கொள்முதல் விலை ரூ.340 ஆக அதிகரிப்பு – மத்திய அரசு கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 340 ரூபாய் ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் ஹரியானா எல்லையில் போராடி வருகின்றனர். இந்த நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நரேந்திர மோடி அரசு உறுதி…
-

7 Am Headlines today 2024 22nd February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல் நேர ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் பிப்ரவரி 23 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் -நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு…
-

central govts Cabinet approves hike in sugarcane procurement price to Rs 340 per quintal for 2024-25 season | sugarcane procurement price: கரும்பு விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ்..! கொள்முதல் விலை ரூ.34 ஆக அதிகரிப்பு
sugarcane procurement price: விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.340 ஆக உயர்வு: குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் ஹரியானா எல்லையில் போராடி வருகின்றனர். இந்த நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “கரும்புக்கான நியாயமான மற்றும் சரியான…
-

actore kishore support delhi farmers protest dilli chalo condemn PM Modi | விவசாயிகளே! மோடிக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுக்காதீங்க
நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கமும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி தில்லி சலோ என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகின்றனர். விவசாயிகள் துரோகிகளா? விவசாயிகள் டெல்லியின் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லி எல்லையில் இரும்புத்…
-

Lok Sabha Election 2024: இறுதியானது தொகுதிப் பங்கீடு; உ.பியில் காங்கிரஸ்க்கு 17 சீட்டுகளை ஒதுக்கிய சமாஜ்வாதி
2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதில், சாமாஜ்வாதி கட்சி காங்கிரஸ்க்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களை காங்கிரஸ்க்கு ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகும் என கூறப்படுகின்றது. மேலும் சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடப்போவதாகவும் சமாஜ்வாதி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பேரேலி, ஆமோதி, வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட…
-

Edappadi palanisamy told as DMK is a corporate company Kamal Haasan’s twist on alliance | Today’s Headlines:திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; எடப்பாடி பழனிசாமி…கூட்டணி குறித்து கமல்ஹாசன் வைத்த ட்விஸ்ட்
Edappadi Palanisamy : திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சாடிய எடப்பாடி பழனிசாமி அப்போது, அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், “இது ஜனநாயக நாடு யாரு வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம்” என்றார். திமுகவினர் வாரிசு அரசியல் செய்வதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் அவர் மகனுக்கு சீட் கேட்கிறார் இது வாரிசு அரசியல் இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அரசியல்…
-

farmers protest 5th round talks to be held police throws tear gas against farmers march
Farmers Protest : வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய போராட்டக்காரர்கள் இன்று முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். …
-

top news India today abp nadu morning top India news February 21 2024 know full details
சென்னை மாநகராட்சி பட்ஜெட்.. இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன்..! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பொது பட்ஜெட்டும், நேற்று விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 22) இந்த இரண்டு பட்ஜெட் குறித்த விவாதங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும். இப்படியான சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை…
-

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல் ..
சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது 95) காலமானார். டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை அவர் காலமானார். Eminent jurist Senior Advocate Fali S Nariman (95) passes away. pic.twitter.com/voMmFoS28k — Live Law (@LiveLawIndia) February 21, 2024 நாரிமன் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின்…
-

7 Am Headlines today 2024 21st February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்; விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர்க்கடன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜக அரசு, உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு – வேளாண் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகள் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ பேசியதற்கு திரைத்துறையை சார்ந்தோர் கண்டனம் பாடலாசிரியர் சினேகன் புகாரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது:…
-

நாளை மீண்டும் தொடங்கும் விவசாயிகள் பேரணி! போலீஸ் தடுப்புகளை முறியடிக்க புது வியூகம்!
<p>விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய போராட்டக்காரர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.</p> <h2><strong>விவசாயிகள் வியூகம்:</strong></h2> <p>நாளை முதல் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதால் டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் நுழைவதை தடுப்பதற்காக இரும்புத் தடுப்புகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.</p> <p>இந்த தடுப்புகளை முறியடித்து உள்ளே…
-

சோனியா காந்தி போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு
மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க. உள்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. ராஜ்ய சபா எம்.பி. ஆனார் சோனியா காந்தி: இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்த முறையும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று…
-

Chandigarh Mayor Election: ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல்: ஜனவரி மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும்,…
-

India Contributes 1 Million dollar To Fund Combating Poverty And Hunger
உலக வங்கியின் தரவுகளின்படி (2019ஆம் ஆண்டுக்கானது), உலக மக்கள் தொகையில் 8.5 சதவிகிதத்தினர் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அதாவது, உலகம் முழுவதும் 60 கோடியே 60 லட்சம் பேர் கடும் வறுமையில் தவித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு, அந்த எண்ணிக்கை 73 கோடியே 30 லட்சமாக உயர்ந்ததாகவும் 2022ஆம் ஆண்டு, அந்த எண்ணிக்கை 68 கோடியே 20 லட்சமாக குறைந்ததாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 1 மில்லியன் டார் வழங்கிய இந்தியா: உலகின் வறுமையை ஒழிக்க உலக…
-

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக எல்.முருகன் தேர்வு..!
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Source link
-

top news India today abp nadu morning top India news February th 2024 know full details
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பத்தி பேசுறீங்க.. இதை பண்ணுங்க.. மத்திய அரசை கேள்விகேட்ட உச்சநீதிமன்றம் பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள்…
-

9 reasons to be at the ABP Network Ideas of India Summit know more details here
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2024 உச்சி மாநாடு, வரும் பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில், யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் டாக்டர் சசி தரூர்: 200…
-

Kalki Dham Mandir: check all the Interesting facts, Features, Location about the Sambhal temple | Kalki Dham Mandir: இந்தியாவில் முக்கியமாக மாறும் மற்றொரு பிரமாண்ட கல்கி கோயில்
Kalki Dham Mandir: உத்தரபிரதேசத்தில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள கல்கி கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். கல்கி கோயில்: கலியுகத்தின் இறுதியில் பகவான் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி தோன்றுவார் என இந்து சமயத்தினர் கருதுகின்றனர். அதிலும், உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் தான் பிறப்பு நடக்கும் என்றும் நம்புகின்றனர். இந்நிலையில் தான், அந்த மாவட்டத்தில் கட்டப்பட உள்ள கல்கி கோயிலுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “அயோத்தி ஸ்ரீ…
-

Latest Gold Silver Rate Today February 20 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 46,280 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,785 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,040 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,255 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
-

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை.. சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
<p>கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p> <p> </p> Source link
-

Delhi: எல்லாம் ஒரு விளம்பரத்திற்குத்தான்.. விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு..
<p><strong>டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் அழைத்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.</strong></p> <p>இதனால் விமான நிலையம் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மேலும், விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. பல மணி நேரம் சோதனை செய்த பிறகு விமான நிலையத்தில் வெடிகுண்டு இல்லை என தெரிய…
-

Union Education Minister Dharmendra Pradhan says class 10 12 exams will be held twice a year from 2025
பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை (NCF) மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. அதன்படி, பொதுத் தேர்வுகள் நடத்தும் முறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு மாநில பாடத்திட்டங்களின் கீழ் படித்து வரும் மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு: அதன்படி, ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு…
-

Supreme Court says You Speak Of Women Power Show It Here pays way for permanent commission of women in Coast Guard
Supreme Court On Women Empowerment : பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். பாலின சமத்துவத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்: அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள்…
-

Farmers rejected the central government’s suggestion on MSP announcement that the protest will continue towards Delhi | Farmers Protest: 5 வருட திட்டம் வேண்டாம்
Farmers Protest: டெல்லியை நோக்கி செல்லும் தங்களது போராட்டம் நாளை தொடரும் என, விவசாய சங்கங்கள் அற்வித்துள்ளன. விவசாயிகளின் போராட்டமும், கோரிக்கைகளும்: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிடும் நோக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியான எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சேர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைவதை…
-

Passports: விசா இன்றி செல்ல உதவும் பவர்ஃபுல் பாஸ்போர்ட்டு: பரிதாப நிலையில் இந்தியா! மாலத்தீவோட மோசம்!
<p>வெளிநாடு பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு உங்கள் அடையாளச் சான்று ஆவணமாகவும் பாஸ்போர்ட் செயல்படும். எனவே, ஒவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட்டை பெற்று கொள்வதும், அது காலாவதி ஆனதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமான ஒன்று.</p> <h2><strong>பிரான்ஸ் நாடு முதலிடம்:</strong></h2> <p>இந்த நிலையில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் நாடு முதலிடம் பெற்றுள்ளது. எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவித்திருக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு…
-

Sandeshkhali Case: “மணிப்பூரோட ஒப்பிடாதீங்க” சந்தேஷ்காலி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்!
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்த நிலையில் தான், மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சந்தேஷ்காலி வன்முறை: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் முகமது ஷேக்கிற்கு எதிராக பாலியல் புகார்கள் வந்த நிலையில், மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.…
-

"வயநாட்டுக்கு போகாமா போட்டி போடட்டும்" ராகுல் காந்திக்கு சவால் விட்ட ஸ்மிருதி இராணி
<p>காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவது அமேதி தொகுதி. உத்தர பிரசேதத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தலில் (இடைத்தேர்தல் உள்பட) 13 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. </p> <p>நேரு குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.</p> <h2><strong>அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா ராகுல் காந்தி?</strong></h2> <p>குறிப்பாக ராகுல் காந்தி கடந்த 2004ஆம் ஆண்டு முதல்…
-

"இது அதிகார துஷ்பிரயோகம்" சந்தா கோச்சார் வழக்கில் சிபிஐ-யை லெப்ட் ரைட் வாங்கிய மும்பை உயர் நீதிமன்றம்!
<p>வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ கைது செய்தது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது என மும்பை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.</p> <h2><strong>முறைகேட்டில் ஈடுபட்டதா ஐசிஐசிஐ வங்கி?</strong></h2> <p>கடந்த 2012ஆம் ஆண்டு, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. கடன் அளிக்கப்பட்டதில் பல முறைகேடுகள்…
-

Farmers Protest: குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக மத்திய அரசு தந்த வாக்குறுதி
Farmers Protest: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிடும் நோக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியான எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சேர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைவதை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிலர் படுகாயமடைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் தான்,…
-

top news India today abp nadu morning top India news February 19th 2024 know full details
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மாநில நிதியமைச்சரான தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20ம் தேதி) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக,…
-

Tripura: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்.. வாக்குமூலம் கொடுக்க வந்த இடத்தில் நீதிபதியால் நேர்ந்த கொடூரம்..
<p>திரிபுராவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிபதி ஒருவரே பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட அமர்வு நீதிபதி கௌதம் சர்க்கார் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. </p> <h2><strong>என்ன நடந்தது..?</strong></h2> <p>திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற அறையில் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஒருவரால் உடல் ரீதியாக…
-

As the price of garlic continues to rise, farmers are monitoring their farmland with CCTV cameras to prevent theft
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள் வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை அதிகமாக தான் விற்பனை செய்யப்படும். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டின் விலை கடந்த மாதம் முதல் உச்சத்தில் உள்ளது.…
-

7 am headlines today 2024 19th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: 2024-2025ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் இன்று தாக்கல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்: படகுகளில் கருப்பு கொடி ஏற்றம் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அரசு பணிகளில் 60, 567 பேர் நியமனம் – தமிழ்நாடு அரசு விளக்கம் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அங்கன்வாடி வேலைகளில் முன்னுரிமை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு இலங்கை சிறையில் உள்ள…
-

Chandigarh Mayor Manoj Sonkar resigns Ahead Of Supreme Court Hearing; 3 AAP councillors join BJP | Chandigarh Mayor: சண்டிகர் மேயர் ராஜினாமா
Chandigarh Mayor: சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு: கடந்த 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம்…
-

சஸ்பென்ஸ்க்கு முடிவு கட்டிய கமல்நாத்! கடைசியில் நடந்த ட்விஸ்ட் – கட்சி தாவுகிறாரா? இல்லையா?
<p>எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு தாவுவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.</p> <h2><strong>சஸ்பென்ஸ்க்கு முடிவு கட்டிய கமல்நாத்:</strong></h2> <p>சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத்,…
-

"குடும்பத்திற்காக அதிகாரம் பெற நினைப்பவர்கள் ஏழைகள் பற்றி யோசிப்பார்களா?" அமித்ஷா கேள்வி
<p><strong>Amit Shah:</strong> இந்தியா கூட்டணித் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை முதல்வராக்கவும், பிரதமராக்கவும் நினைக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். </p> <p>கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.</p> <h2><strong>"குடும்பக் கட்சிகளின் கூட்டே இந்திய கூட்டணி”</strong></h2> <p>இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று…
-

Rahul Gandhi slams BJP says youth of UP is suffering from the disease of unemployment
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது. “வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நோய்” அடுத்த மாதம், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் யாத்திரை நடந்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது. யாத்திரையில் நாட்டின் முக்கிய பிரச்னைகளை…
-

PM Modi:"அடுத்த 100 நாள் ரொம்ப முக்கியம்" பா.ஜ.க. கூட்டத்தில் ஸ்கெட்ச் போட்ட பிரதமர் மோடி!
<p>கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.</p> <h2>”பாஜக மட்டும் 370 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும்"</h2> <p>இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய…
-

Actress Sunny Leone’s photo appears on UP Police recruitment exam admit card | Sunny Leone: காவலர் பணி தேர்வில் சன்னி லியோன்?
Sunny Leone: உத்தரபிரதேசத்தில் காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. உத்தரபிரதேச காவலர் தேர்வு: உத்தரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு, நடிகை சன்னி லியோன் பெயரில் வெளியான ஹால்டிக்கெட் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 17ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான அந்த ஹால்டிக்கெட்டில், விண்ணப்பதாரருக்கு கன்னௌஜ்ஸ் திருவாவில் உள்ள ஸ்ரீமதி சோனஸ்ரீ மெமோரியல் பெண்கள் கல்லூரி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. …
-

India sends assistance to cholera-hit Zambia 3.5 tonnes of water purification supplies, chlorine tablets and ORS sachets provided
ஜாம்பியா நாட்டில் காலரா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக இருந்தது. தற்போது வரை 613 பேர் காலரா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக லுகாசா மாகாணத்தில் தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. ஜாம்பியா நாட்டில் வரும் மே மாதம் வரை மழைக்காலம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் காலரா தொற்று நோய்…
-

Bird Flu: ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்! தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு அலர்ட் – கண்காணிப்பு தீவிரம்!
<p>உலக நாடுகள் அவ்வப்போது ஏதாவது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா வைரஸ் மீதான அச்சமும், மற்ற வைரஸ்கள் ஏதாவது பரவிவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.</p> <h2><strong>ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்:</strong></h2> <p>இந்த நிலையில் தான், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளனர். சதகுட்லா மற்றும்…
-

top news India today abp nadu morning top India news February 1th 2024 know full details
சென்னை மற்றும் சென்னை புறநகரில் இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கடை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கமாக செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வார இறுதி நாளான இன்று கூடுதல் மெட்ரோ…
-

7 am headlines today 2024 18th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: விருதுநகர் பட்டாசு குடோன் தீ விபத்து; 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; பிரதமர், முதலமைச்சர் நிதிஉதவி அறிவிப்பு தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை; புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதால் தமிழ்நாடு அரசு அறிவிப்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்; காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார் நியமனம். பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து நடப்பதை தடுக்க அரசு கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும் – அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு…
-

farmers protest continues in delhi fourth round talk with central govt will happen today
Farmers Protest: தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு, தற்போது அரசாங்கத்தின் மீது உள்ளது என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம்: குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது போன்ற, ஏற்கனவே வழங்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் பேரணியாக செல்லும் நோக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு குழுக்களாக டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். ஆனால், டெல்லி எல்லைப்பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு,…
-

அடுத்த விக்கெட்டை இழக்கும் காங்கிரஸ்.. கமலாலயம் பக்கம் செல்லும் கமல்நாத்?
<p>எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு கட்சி தாவுவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.</p> <h2><strong>அடுத்த விக்கெட்டை இழக்கிறதா காங்கிரஸ்?</strong></h2> <p>சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான…
-

ஒவ்வொரு தொகுதியிலும் தாமரை.. 370 டார்கெட்.. தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஸ்கெட்ச் போட்ட பிரதமர் மோடி!
<p>கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.</p> <h2><strong>பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம்:</strong></h2> <p>இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. அதில், பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக மூத்த…
-

Ram Lalla is a five year old child Ayodhya Ram Mandir to remain shut for an hour daily | Ayodhya Ram Temple: அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ரெஸ்ட்! அறக்கட்டளை எடுத்த திடீர் முடிவு
Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் இன்று முதல் தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று வந்தாலும், குழந்தை…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/