Author: Sanjuthra
-

“எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு” – விராட் கோலி நெகிழ்ச்சி | actpnews.com
“ஈசாலா கப் நம்தே’ என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. பல வருடங்களாக விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த ஒரு அணி, பேக்-டு-பேக் கோப்பைகளை வென்று சாதித்து பலரது…
-

விசா இருந்தும் அமெரிக்காவில் அனுமதி மறுப்பு! – உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த பிரபல சோமாலிய நடுவர் | actpnews.com
பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் மீது தற்போதைய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபிஃபா, ” போட்டியை நடத்தும் நாட்டின் (Host Country) குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் பிஃபா தலையிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஓமர்…
-

மண்டை ஓட்டுடன் பில்லி சூனியம்..மிரண்டு போன மாலத்தீவு அதிபர்.. கைதான அமைச்சர்கள் பதவி பறிப்பு – ACTPnews.com
கிராமங்களில் சொந்தக்காரர்களுக்குள் சண்டை வந்து பிடிக்காமல் போனால் செய்வினை வைப்பார்கள். குடும்பம் கெட்டுப்போக வேண்டும் பிசினஸ் நொடிந்து போக வேண்டும் என்று மந்திரவாதியிடம் போய் செய்வினை வைப்பார்கள். மாலத்தீவு அதிபருக்கே பில்லி சூனியம் வைத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர்…
-

பவன்கல்யாண் கட்சி எம்எல்ஏ ஆபாச வீடியோ லீக்: சமூக வலைதளங்களில் வைரல் – ACTPnews.com
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் ஜனசேனா கட்சியை சேர்ந்த ரயில்வே கொடுரு தொகுதி எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2024 ஆம் ஆண்டில் ஸ்ரீதர் எம் எல் ஏ வாக பதவியேற்ற சில நாட்களில், ஒருமுறை தன்னை காரில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் அரவ ஸ்ரீதர் ஈடுபட்டார்.…
-

சட்டமன்ற தேர்தலில் நடந்திருப்பது சாகசமோ, சாதனையோ கிடையாது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி : ஸ்டாலின் ஆதங்கம் – ACTPnews.com
சட்டமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக ஆராய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: ”என்ன நடந்தாலும், சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதிக்கும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் அமைந்திருக்கிறது. அதுவும் நமது…
-

அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் அனல்பறக்க பேசிய ஜோ பைடன்-டொனால்ட் டிரம்ப்… வெற்றி யாருக்கு? – ACTPnews.com
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் முதன்முறையாக நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்றனர். அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்று அவர்கள் நிறைவேற்றப்போகும் வாக்குறுதிகள், திட்டங்கள் குறித்து மக்களிடம் நேரலையில் எடுத்துச்…
-

”’ஜோ’ படத்துல இருந்துதான் என்னுடைய கரியர் தொடங்குச்சுனு சொல்லலாம்.” – மாளவிகா மனோஜ் |”You could say my career started with the movie ‘Joe’.” – Malavika Manoj | actpnews.com
நம்மிடையே பேசியவர், “‘ஹபீபி’ படத்துக்குத் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள்கிட்ட இருந்து நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. நான் இன்னும் படத்தைப் பார்க்கல. ஆனா, படத்தைப் பார்த்த இயக்குநர்கள், இப்படி முழுக்க முழுக்க இஸ்லாமிய வாழ்வியலை எந்தப் படமும் காட்டலைனு பாராட்டுறாங்க. அதையே நானும் உணர்றேன். சொல்லப்போனால், தமிழ்ல நான் முதன்முதல்ல கமிட்டான திரைப்படம் இதுதான். இந்தப் படத்துல நடிக்கும்போது நான் 10-வது படிச்சிட்டு இருந்தேன். அதனாலேயே, படம் தொடர்பான நிறைய நினைவுகள் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா,…
-

இனி ஏடிஎம்களில் .10.20,50 ரூபாய் நோட்டுகளை எடுக்கலாம்: மத்திய புது ஐடியா – ACTPnews.com
ஏடிஎம்களிலும் ரூ.1,000, ரூ.500, ரூ.100 ஆகிய கரன்சி நோட்டுகள் மட்டுமே மக்களால் எடுக்க முடியும். இதனால் குறைந்த மதிப்புள்ள பணம் கிடைப்பதில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் ரூ. 10, 20 மற்றும் 50 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ. 500, 200 போன்ற நோட்டுகளை கொடுத்து சிறிய மதிப்புள்ள நோட்டுகளை பெறும் வகையில் ’ஹைப்ரிட் ஏடிஎம்’கள் வைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது…
-

சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்: ரோந்து வாகனம் ஒட்டிய முதல்வர் விஜய்! – ACTPnews.com
முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், பெண் காவலர்களின் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், இந்த அதிரடிப்படைக்காக வழங்கப்பட்டுள்ள புதிய மஹிந்திரா பொலேரோ வாகனத்தை அவரே இயக்கிப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:…
-

சென்சாரில் ‘தட்கல்’ முறை ரத்து – சின்ன படங்களுக்கு இதனால் என்ன பயன்? |’Tatkal’ system scrapped for film certification – How does this benefit small films? | actpnews.com
ஆனால், சினிமாவில் தட்கல் முறை என்பது வரிசையில் காத்திருக்கும் சிறிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்தான் பெரிய படங்களுக்கு வழிவகை செய்கிறது. இதன் காரணமாகப் பண பலமும், ஸ்டார் அந்தஸ்தும் உள்ளவர்களுக்கே முன்னுரிமை கிடைத்து வந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஒரு திரைப்படம், தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், டிசம்பர் 31-ம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த அவசர நேரத்தில்,…
-

அஜித் பவார் உடல் தகனம்: அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி – ACTPnews.com
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் அஜித் பவார், விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில், அஜித் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம்…
-

தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா – ACTPnews.com
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகளுடனும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.அதன்பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ஒவ்வொரு உறுப்பினர்களும் தொகுதி பிரச்னைகளை அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் வில்லிவாக்கத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனும் அரசு ஊழியர்களுடன் நடைபெற்றது. அதன்படி மூன்று வகையாக பிரச்னைகளை…
-

“வாழ்த்து சொல்லி உள்ளே வந்த எஸ்.வி.சேகர் சங்கத்தை கபளீகரம் செய்துட்டார்”- வீதிக்கு வந்த பஞ்சாயத்து | article regarding issues in tamil thiraippada tholilalar koottamaippu lead by s ve shekher | actpnews.com
அப்படி போனில் வந்தவர், பிறகு கூட்டமைப்பு பத்தி கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சு மெல்ல மெல்ல கூட்டமைப்புக்கு உள்ளே வந்தார். தன்னுடன் தாசரதியையும் கூட்டி வந்தார். வந்த கொஞ்ச நாளிலேயே தயாரிப்பாளர் சங்க தலைவரா இருந்த முரளிகிட்ட என்ன பேசினாரோ தெரியல, அவர் ஆதரவுடனேயே ஏற்கெனவே இருந்த தலைவர் மற்றும் பொருளாளரைத் தூக்கிட்டு, தன்னைத் தலைவராகவும் தனக்கு வேண்டிய ஒருத்தரை பொருளாளராகவும் போட்டுக்கிட்டார். சங்கம் பதிவு செய்ததுக்கான சான்றிதழையும் அவரே போய் வாங்கிக்கிட்டார். இது பத்தி நான் கேட்டப்ப,…
-

பரந்தூர் விமான நிலைய விவகாரம்: முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை – ACTPnews.com
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.திமுக ஆட்சியில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்தத் திட்டம் அறிவித்தது முதல் அங்குள்ள மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 2025 ஆம்…
-

”குழந்தைகளின் மலர்போன்ற கைகளில் மாமிசம் ஒழுக வேண்டுமா”..உலக நாடுகளை எச்சரிக்கும் வைரமுத்துவின் ஆழமான வரிகள் – ACTPnews.com
போர்கள் ஒழிக்கப்படவேண்டியவை இல்லையெனில் – அவை பூமியை ஒழித்துவிடும் எனவும், மூன்றாம் உலகப்போர் மூண்டால் அதுதான் இறுதிப்போர் எனவும் எச்சாரித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து…
-

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்: சட்டமன்ற தேர்தலால் தமிழ்நாட்டிற்கு லக் அடிக்க வாய்ப்பு? – ACTPnews.com
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பொதுவாக, விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றாலும், இம்முறை பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு…
-

21 எம்எல்ஏக்கள் ஓகே, ஆன 4 அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்கல்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ‘ட்விஸ்ட்’ – ACTPnews.com
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்திருந்த நிலையில், சமீபத்தில் இரு தரப்பும் ஒன்றிணைந்தன. கொறடாவின் உத்தரவை மீறி சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்காக, எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் சபாநாயகரைச் சந்தித்து, தாங்கள் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், தவெகவுக்கு…
-

இலங்கையின் புதிய அதிபராகும் முதல் இடதுசாரி அநுர குமார திசநாயக ! – ACTPnews.com
மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து, தற்போது அதில் இருந்து கொஞ்சம் கோஞ்சமாக மீண்டும் வருகிறது இலங்கை. இந்த நிலையில், இலங்கையின் 9-வது அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், 1.7 கோடி பேர் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலுக்கு அதிக செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை ரூபாய் மதிப்பில் 1,000 கோடி என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.276 கோடி…
-

சிகரெட் விலை விர்ர்ர்ரர்…பாக்கெட்க்கு ரூ.22 முதல் 25 வரை விலை உயர்வு – ACTPnews.com
பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் வளரிளம் பருவமான 18 வயதளவில், நண்பர்களோடு ‘ஜாலியாகப்’ புகைபிடிக்கத் துவங்கி அதுவே கைவிடமுடியாத பழக்கமாகி கொள்கின்றனர். சிகரெட் பிடிப்பதை சிலர் ஸ்டைலாக, கெளரவாக நினைக்கின்றனர். சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த என்ன தான் அரசு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டாலும், நாள்தோறும் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து தான் வருகிறது. இதன் காரணமாகவே அரசு ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கிறது. இதனால் அடிக்கடி சிகரெட் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.…
-

தேர்தல் தோல்வி, 234 தொகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் குழு: ஸ்டாலின் ஆலோசனை – ACTPnews.com
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில்: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.…
-

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அவ்வளவு தான்: நெதன்யாகுவை போனில் வெளுத்துவிட்ட டிரம்ப் – ACTPnews.com
பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் சமீபத்தில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் முக்கிய ராணுவ விமானத் தளங்கள் மற்றும் நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகளை வீசியது. எனினும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை நடுவானிலேயே…
-

தவெக ஆட்சி மூன்று மாதமாவது தாங்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது ? முன்னாள் அமைச்சர் தங்கம் விமர்சனம் – ACTPnews.com
விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள்…
-

பிரதமரை தாக்க தமிழக காங்., பெண் எம்பிக்கள் சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு – ACTPnews.com
சீன எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இன்றும் காலை முதல் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு மத்தியிலேயே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தைச் சபாநாயகர் நிறைவேற்றினார். நேற்று மாலை 5 மணிக்குத் குடியரசுத் தலைவர்…
-

முதல்வர் விஜய் 11-ம் தேதி டெல்லி செல்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் – ACTPnews.com
சென்னை எழிலகத்தில் வருவாய் பேரிடர் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், “வருவாய் துறையில் மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதித் சான்றிதழ் விரைந்து கிடைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். விண்ணப்பம் 5 நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ரேஷன் கார்டுகள், முதியோர்…
-

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே இன்று பதவியேற்பு – ACTPnews.com
இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே (56) இன்று பதவியேற்க உள்ளார். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தற்போதுதான் கொஞ்சம், கொஞ்சம் மீண்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் 9-வது அதிபருக்கான தேர்தல் நேற்று முன் தினம் (செப்.21) நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு இடையே எந்தவித வன்முறையும் இன்றி தேர்தல் நடைபெற்றது. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலுக்குத்தான் அதிக செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று வாக்கு…
-

எதிர்கட்சிகள் வெளிநடப்பு, நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே பிரதமர் மோடி பேச்சு – ACTPnews.com
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றினார். மேலும், “என்னைப் பேச விடுங்கள்..” என அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து தொடர்ந்து உரையாற்றினார்.பிரதமர் மோடி பேசுகையில், “உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா வலிமைமிக்க நாடாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் கடந்த ஆண்டுகள் மைல் கற்களாக அமைந்துள்ளன. வளர்ந்த நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரத்தில்…
-

பிளவு , உட்கட்சி மோதல், சமாதான தூதுவரான ரஜினி: அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை – ACTPnews.com
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் மோதல் ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி என இரு அணி உருவாகி உள்ளது. தவெகவை ஆதரவு நிலைப்பாடுடன் வேலுமணி செயல்பட தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்ற குரல் அதிமுக ஒலிக்க தொடங்கி உள்ளது. பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு கையெழுத்து கேட்டால் யாரும் போட வேண்டாம் என எடப்பாடி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள…
-

இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் – பிரதமர் மோடிக்கு சுந்தர் பிச்சை பாராட்டு – ACTPnews.com
ஏஐ தொழில்நுட்பம் மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பாராட்டியுள்ளார். குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற் கடந்த 21ம் தேதி 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளின் நல்லுறவு உள்ளிட்டவை குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்த பேசி அவர், அமெரிக்கா வாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாற்றினார். முன்னதாக அமெரிக்கா வந்த பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், நியூயார்க்கில் உலகின்…
-

இந்தியாவின் `ஆல்ரவுண்ட்’ ஆட்டம்! இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் சரணடைந்த ஆப்கானிஸ்தான்! | actpnews.com
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திய இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணியின் பிரம்மாண்டமான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைத் தொடர்ந்து, இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாரின் மாயாஜால சுழலும், வாஷிங்டன் சுந்தரின் துல்லியமான பந்துவீச்சும் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைச் சிதைத்தன. IND v AFG | கில், ராகுல் முதல் இன்னிங்ஸில் 412…
-

அரசு மருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை கிடையாது: ரூ 5 முதல் 40 ஆயிரம் வரை கட்டணம்,எந்த மாநிலத்தில் தெரியுமா? – ACTPnews.com
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இலவசமாக சிகிச்சை அளிக்கப்படாது என்று அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”மகராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனைகளில் சாமானிய மக்கள் சிகிச்சை பெற கட்டணம் செலுத்த வேண்டும். மராட்டிய அரசு மருத்துவமனைகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு ஊழியர்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம். உள்நோயாளிகள் சேர்க்கைக்கு ஒரு நாளைக்கு ரூ.10 செலுத்த வேண்டும்.…
-

முதல்வர் விஜய் உள்பட 9 அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு – ACTPnews.com
தமிழக முதல்வராக மே 10-ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் சேர்த்து புஸ்ஸிஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்பட 9 பேர் பதவியேற்று கொண்டனர். 6 நாட்கள் ஆகியும் அமைச்சர்களின் இலாகா ஒதுக்காமல் இருந்தது. இது முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர்களாக பொறுப்பேற்றும், இலாகாவிற்கு அமைச்சர்கள் ஒதுக்காமல் இருந்ததால் கோப்புகள் தேக்கம் அடைந்தன. இந்த நிலையில், இன்று மதியம் முதல்வர் விஜய் முதன்மை செயலர் செந்தில் ஆளுநரை நேரில் சந்தித்து இருந்தார்.…
-

”ட்ரம்பை கொல்பவருக்கு 1.25 கோடி ரூபாய்..” விசாரணையில் வெளியான பகீர் லெட்டர்.. – ACTPnews.com
டொனால்டு ட்ரம்பை கொல்பவருக்கு இந்திய மதிப்பின்படி சுமார்1.25 கோடி ருபாய் தருகிறேன் என்று கொலையாளி எழுதி வைத்திருந்த லெட்டர் சிக்கியதால் பரபரப்பு வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் தொடர் பிரசார…
-

தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்திய பெண் டிஎஸ்பி: ரூ.2.5 கோடி அபேஸ் செய்த அவலம் – ACTPnews.com
சட்டீஸ்கர் மாநிலத்தில் தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் காவல் அதிகாரி அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் டாண்டனுக்கும், பெண் டிஎஸ்பி கல்பனா வர்மாவின் தந்தைக்கும் இடையே காசோலை தொடர்பான பணத் தகராறு ஏற்கனவே இருந்து வந்துது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் அந்தத் தொழிலதிபரைத் தனது காதல் வலையில் வீழ்த்திய கல்பனா வர்மா. அவரிடம் நெருங்கி பழகுவது போல நடித்துள்ளார். அவரை ஏமாற்றி பல முறை பணம்…
-

கோடிக்கணக்கில் பணம் வாங்கியவர், ஒரு வேளை சோறு போட்டதில்லை: சீமான் மீது இலங்கை எம்பி காட்டம் – ACTPnews.com
தமிழகம் வந்துள்ள இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனன், சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழக மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள். ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும். சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத்தமிழர் பிரச்னையை பேசினார். விஜய் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை. பிரசாரத்திற்கு மட்டும் சீமான் இலங்கை தமிழர் பிரச்னை சீமான் பேசுகிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே சீமான் ஈழதமிழர்களை பயன்படுத்துகிறார். யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரத்தில்…
-

`வேகத்தை யோசிக்கவில்லை, லென்த் மட்டுமே குறி!’ – பௌலிங் சீக்ரெட்டை உடைத்த வாஷிங்டன் சுந்தர்! | actpnews.com
பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி, தனது ஆல்-ரவுண்டர் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியக் போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்திற்கான ரகசியம் என்ன என்பதைப் பற்றி அவர் பேசியுள்ளார். வேகத்தைக் காட்டிலும், சரியான ரிதம் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்தியதே தனது வெற்றிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரிதம்தான் முக்கியம், வேகம் அல்ல! போட்டிக்குப் பிறகு தனது பந்துவீச்சு குறித்துப் பேசிய சுந்தர்,…
-

2 கிலோ கோதுமை திருடிய நபரை 45 ஆண்டுகள் பிறகு கைது செய்த போலீஸ் – ACTPnews.com
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமாத்தில் அமைந்துள்ள வயல் பகுதிகளில் கோதுமை பயிரிடுவது வழக்கம். குறிப்பிட்ட ஒரு வயலில் ரூ 100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது. 1980ம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது. தனது நிலத்தில் இருந்து கோதுமை திருடு போனது தொடர்பாக விவசாயி காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது வழக்குப்…
-

ரீல்ஸ் இல்லை ரியல்… உங்களுக்குத்தான் சால்வை… உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் விஜய்! – ACTPnews.com
“முதல்வர் அறைக்குள் நாங்க நுழையும்போது அவர் எழுந்து நின்று, எங்களை ‘வாங்க… வாங்க…’ என வரவேற்றார். சென்னை ஐ.ஐ.டி_யின் அணுகல்தன்மை ஆய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் பார்வைக் குறைபாடு உள்ளவர். இதைக் கவனித்த முதல்வர், முன்னே வந்து அவரது கையைப் பிடித்தும் சேரில் உட்கார வைத்தார். நாங்க உட்கார இந்த சேர் போதுமா, வேறு ஏற்பாடு செய்யணுமான்னு கேட்டார். இந்த வரவேற்புக்குப் பிறகு, ‘சொல்லுங்க’ என்று முதல்வர் சொன்னவுடன், நாங்கள் கொண்டு சென்றிருந்த கோரிக்கை மனுவைக்…
-

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்… ஹமாஸ் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் பலி – ACTPnews.com
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹாமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதையடுத்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக…
-

சபரிமலை தங்கக்கவச முறைகேடு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் – ACTPnews.com
சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது குறித்து கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இரு வழக்குகளைப் பதிவு செய்து, கேரள காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விவகாரத்தில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு…
-

தவெக அமைச்சரவையில் விஜயபாஸ்கர்? விஜய் போட்ட கண்டிஷன்..! – ACTPnews.com
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக இருந்தது. ஆனால், சிவி சண்முகம் அணியானது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தகையச் சூழலில், சிவி சண்முகம் அணி ஆதரவோடு தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆதரவளித்த சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…
-

“பிரச்னைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்” – உக்ரைன் குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேச்சு – ACTPnews.com
அமைதியான முறையில் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனா, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களுடன் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்புடனும் பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளுடன், 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் காசன் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வகையில் ரஷ்யாவின் காசன் நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…
-

Manav Suthar: `ஸ்லோ விக்கெட்… சிம்பிள் பிளான்!’ – பந்துவீச்சு ரகசியம் பகிரும் `அறிமுக’ ஆட்ட நாயகன் | actpnews.com
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது… தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்கு, “இல்லை சார், நிச்சயமாக அப்படி இல்லை” என யதார்த்தமாகப் பதிலளித்த அவர், தனது பந்துவீச்சின் வெற்றி ரகசியத்தையும், அந்த மறக்க முடியாத தருணங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கனவு நனவான தருணம்! இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான தருணம் எப்படிப்பட்ட உணர்வைத் தந்தது? எனும் கேள்விக்கு, “அது…
-

அரசு மருத்துவமனைகளின் அவலம்:சட்டசபையில் அமைச்சரை அலற விட்ட ஆளும்கட்சி பெண் எம்எல்ஏ – ACTPnews.com
பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரபல நாட்டுப்புறப் பாடகி மைத்லி தாக்கூர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளரை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆனார்.. 25 வயதே ஆன இவர், பீகார் சட்டப்பேரவையின் மிக இளவயது எம்எல்ஏ ஆவார். நாட்டுப்புறப் பாடகியான இவர், அரசியலில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனது தொகுதி மக்களின் நலனுக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து…
-

ராஜ்யசபாவில் சீமான்? ஆஃபர் கொடுத்த எடப்பாடி..! இது செம ட்விஸ்டா இருக்கே..! – ACTPnews.com
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக இருந்தது. ஆனால், சிவி சண்முகம் அணியானது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தகையச் சூழலில், சிவி சண்முகம் அணி ஆதரவோடு தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆதரவளித்த சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…
-

புதிய இடத்திற்கு அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. காரணம் இதுதானா? – ACTPnews.com
உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அமைந்துள்ளது.இந்நிலையில், அமேசான் நிறுவனம் தங்களது அலுவலகத்தை பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்ற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. செலவுகளை குறைக்கும் விதமாகவும், வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமேசான் நிறுவனம், உலக வர்த்தக மைய…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports












Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/