Author: Sanjuthra
-

அரசு நிகழ்ச்சி, பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் இனி கட்டாயம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு – ACTPnews.com
வந்தே மாதரம் பாடலில் உள்ள 6 பத்திகளையும் (3.10 நிமிடங்கள்) முழுமையாக பாட வேண்டும் என்றும், தேசியக் கொடி ஏற்றும்போதும், ஆளுநர் உரை மற்றும் ஜனாதிபதி உரை ஆகிய சமயங்களிலும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமான ‘ஜன கண மண’ இசைக்கப்படுவதற்கு முன்பாகவே ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து…
-

திருமண விழாவில் துப்பாக்கியுடன் நடனமாடிய எம்எல்ஏ உதவியாளர்: போலீசார் தீவிர விசாரணை – ACTPnews.com
கர்நாடகா மாநில கல்புர்கி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எம்.ஒய்.பாட்டீல். இவரின் நெருங்கிய உதவியாளர் மதீன் படேல். இந்த மதீன் படேல் துப்பாக்கியை ஏந்தியபடி திருமணக் கொண்டாட்டம் ஒன்றில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அரசியல் ரீதியாக காங்கிரஸ் மீது பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதீன் படேல், ”என் சகோதரி மகளின்…
-

Workout ஆன மாமியார் – மருமகன் பிளான்! மாவட்டம் முதல் கிளை வரை.. காலியாகும் அதிமுக கூடாரம்? – ACTPnews.com
ஆரம்பத்தில் த.வெ.க.விற்கு ஆதரவு மட்டும் அளித்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் ஓரிரண்டு பின்வாங்கினாலும் ஆட்சிக்கு ஆபத்து என முடிவெடுத்த த.வெ.க. தரப்பு, 47 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள அதி.மு.க. மீது பார்வையை திருப்பியது. இந்த அசைன்மென்டை, அ.தி.மு.க தரப்பில் லாட்டரி அதிபர் மார்டினின் மனைவியும் எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸூம், த.வெ.க தரப்பில் ஆதவ் அர்ஜுனாவும் முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பப்படியே, அ.தி.மு.க அதிருப்தி அணி, த.வெ.க.வுக்கு வாக்களித்தது. ஆனால், டீல் பேசியபடி எதுவும் நடக்கவில்லை. அதிருப்தி அணிக்கு அமைச்சரவையிலும் இடமில்லாமல்…
-
கைவிரித்தது அமெரிக்கா- என்ன செய்யப் போகிறது உக்ரைன்? – ACTPnews.com
கடந்த பிப்.,28 ஆம் தேதி உலக அரசியலை திக்குமுக்காடச் செய்தது வெள்ளை மாளிகையில் நடைப்பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே நடைப்பெற்ற பேச்சுவார்த்தை. அனல் பறந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து விருந்தினை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார் ஜெலென்ஸ்கி. இந்நிலையில் புதிய உத்தரவு ஒன்றினை டிரம்ப் வெளியிட்டுள்ளது உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான சண்டை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்படும்…
-

நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்,உங்களுக்கு வெட்கமாக இல்லையா?: மோடி மீது ராகுல்காந்தி அட்டாக் – ACTPnews.com
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: “நாம் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சீனா, ரஷியா மற்றும் பிற சக்திகள் சவால் விடுகின்றன. போர் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடியும், பாதுகாப்பு ஆலோசகரும் சில நாள்களுக்கு முன் தெரிவித்தார்கள். ஆனால், நாம் போர் சகாப்தத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன், காஸா, மத்திய கிழக்குகளில் போர் நடைபெற்று வருகின்றன. ஈரானில் போர் அச்சுறுத்தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்தூரை சந்தித்தோம். …
-

கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்: எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய அதிமுகவில் ஐடி விங்க் – ACTPnews.com
இதுகுறித்து அதிமுக ஐடி பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் எனது எக்ஸ் பதிவில், அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராக நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக கழக பணி ஆற்றக்கூடிய கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், “கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்” என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம்…
-

நான் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன்.. பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் முதல் பேட்டி – ACTPnews.com
போயிங் ஸ்டார்லைனர் (Boeing’s starliner) விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். கிட்டத்தட்ட 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கியிருந்த வீரர்கள், ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூல் (spaceX’s Dragon capsule) மூலமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டு பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்விற்கு பிறகு, முதன் முறையாக நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 (NASA’s SpaceX crew-9) வாஷிங்டனில்…
-

பிரதமர் மோடி வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு தெரியுமா ? 2021-25 ஆண்டுகளில் ரூ.462 கோடி – ACTPnews.com
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவுகள் குறித்த அவ்வபோது செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதில், கடந்த 2021 முதல் 2025ம் என 5 ஆண்டுகளில் சுமார் ரூ.462 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு மட்டும் ரூ.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக சராசரியாக ஆண்டுக்கு ரூ.115 கோடி செலவிடப்படுகிறது என்றும் கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு…
-

ஜூன் 4-ம் தேதி பிறந்தநாளில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடும் அண்ணாமலை ? – ACTPnews.com
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் பணிக்குழுவிலிருந்து விலகி இருந்த அண்ணாமலை, தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காமல் அதிருப்தியில் இருந்தால். அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுவும் கூட அண்ணாமலை தாக்கல் செய்யவில்லை. இதனிடையே சிங்கநல்லூர் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு பெற்று அங்கு அண்ணாமலை போட்டியிட வைக்க பாஜக தலைமை முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதிமுக சிங்காநல்லூர் தொகுதியை ஒதுக்க முன்வரவில்லை. இதனால் தேர்தல் பிரசாரத்தில்…
-

Google Android: 16 GB மொபைல் .. செக் வைத்தது கூகுள் ஆண்ட்ராய்டு 15 – ACTPnews.com
பிளே ஸ்டோர் சர்வீஸ்களை ஸ்மார்ட்போனில் பெற தற்போதுள்ள குறைந்தபட்ச ரேம் மற்றும் சேமிப்பிட கொள்ளளவினை அதிகரித்துள்ளது கூகுள். மொபைல் போன் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ராய்டு 15 உடன் புதிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய விரும்பினால், அவர்கள் குறைந்தபட்சம் 32 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பிடத்தை (32 GB Internal storage) சேர்க்க வேண்டும். 32 GB சேமிப்பிடம் இல்லையென்றால், நீங்கள் கூகுள் மொபைல் சர்வீஸ்களை பயன்படுத்த முடியாமல் போகலாம். சேமிப்பு கொள்ளளவினை கூகுள் உயர்த்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக…
-

“தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை” – நாடாளுமன்றத்தில் தீர்மானம் – ACTPnews.com
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவின் வலிமையே மக்கள் தொகைதான். அமெரிக்காவிற்கு இந்தியர்களின் தரவுகள் முக்கியம். வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிற்கு மோடி விற்றுவிட்டார். அமெரிக்காவிற்கு சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தாமல், மோடி அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர்…
-

திமுகவின் அடுத்த கூட்டணி அவுட்..? தவெகவுடன் இணைகிறாரா வைகோ? – ACTPnews.com
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இது பாஜகவிற்கு எதிரான கூட்டணி… இது மதசார்பற்ற கூட்டணி… இந்த கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது .. என்று ஏறும் மேடைகளிலெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுகவின் கூட்டணிக் கூடாரம் காலியாகத் தொடங்கியதே ஸ்டாலினுக்கு பெருத்த அடியாக அமைந்தது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பதால் மக்கள் தீர்ப்பை மதித்து தான் திமுக…
-

Honda Dio: ஹோண்டாவின் புதிய டியோ 125 .. மிரட்டலான புதிய வசதிகளுடன் 1 லட்சத்திற்கும் குறைவாக – ACTPnews.com
இருச்சக்கர வாகனங்களான பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹோண்டா நிறுவனம் டியோ (Dio) 125 ஸ்கூட்டர் மாடலை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரிலுள்ள தனித்துவமான அம்சங்கள் என்ன? என்ன விலைக்கு கிடைக்கிறது? போன்ற தகவல்களை இந்த பகுதியில் காணலாம். புதிய டியோ 125, இதன் முந்தைய மாடலின் வடிவமைப்பிலிருந்து மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே, பேர்ல் ஸ்போர்ட்ஸ் மஞ்சள், பேர்ல் இக்னியஸ் பிளாக்…
-

இறந்த பாட்டிக்கு திதி கொடுக்க ஆமைக்கறி சமைத்த இளைஞர்கள்: அதிரடியாக கைது செய்த போலீஸ் – ACTPnews.com
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் சோமாவதி ஆறு உள்ளது. இந்தநிலையில், பெல்தங்கடி போலீசாருக்கு சோமா வதி ஆற்றில் சிலர் ஆமைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆற்றின் கரையில் வாலிபர்கள் 4 பேர் ஆமைகளை கொன்று அவற்றை சமைத்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்கள்…
-

மக்கள் சேவையாற்ற தயாராக இருக்கிறோம் தவெக அமைச்சர்கள் பேச்சு – ACTPnews.com
தவெக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜயை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி வரை சுமார் 10 கி.மீ முதல்-அமைச்சர் சாலை வலம் மேற்கொண்டார். முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லூரி மைதான திடலுக்கு முதலமைச்சர் விஜய்…
-

TikTok ban: டிக் டாக் செயலிக்கு மேலும் 75 நாள் கெடு: மனமிறங்கிய டொனால்டு டிரம்ப் – ACTPnews.com
டிரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றது முதலே உலகின் ஒட்டுமொத்த கவனமும் டிரம்ப் நோக்கி தான் இருக்கிறது. இதற்கு காரணம் அவர் எடுக்கும் சில அதிரடி முடிவுகள் தான். சமீபத்தில் பரஸ்பர வரி விதிப்பு என அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அந்நிய நாட்டு பொருட்கள் மீதான வரி விதிப்பு தொடர்பான டிரம்பின் அறிவிப்பு கிட்டத்தட்ட ஒரு பொருளாதார யுத்தத்திற்கு வழி வகுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனிடையே புகழ்பெற்ற சமூக வலைத்தளமாக விளங்கும், டிக் டாக்…
-

அவரின் அந்த பழக்கம்தான் அவர் நம்மை விட்டு சீக்கிரம் பிரிய காரணம்! – இயக்குநர் ஓபிலிஎன்.கிருஷ்ணா director obeli n.krishna shares nedunchalai actor salimkumar memories | actpnews.com
மல்வுட் நடிகரான சலீம் குமார், கடந்த 6ம் தேதி மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 57. மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் குணச்சித்திரம், காமெடி என பன்முகக்கலைஞனாக புகழ்பெற்றார். “ஆதாமிண்டே மகன் அபு’விற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் ‘மரியான்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் சலீம் குமார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பினால் காலமானார். நேற்று ஞாயிற்றுகிழமை சலீம் குமாரின் உடலை கேரள அரசு மரியாதையுடன்…
-

“ச்சீ கருமம் இப்படியா எல்லாமா பண்ணுவீங்க” மாமியாரை திருமணம் செய்த மருமகன் – ACTPnews.com
இருவரும் அங்குள்ள கோர்ட்டில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது திருமண சான்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் காணொலி சேஷசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கீழ் மோசமான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநில கான்பூரில் சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருமகனும் மாமியாரும் சில வருடங்கள் காதலித்து வந்து இருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக மாமியாருடன் ரகசிய உறவில் இந்த மருமகன் இதற்கு மேல்…
-

நைஸாக கழட்டிவிடப்படும் நயினார்…? மாறும் பாஜக மாநிலத் தலைமை..? – ACTPnews.com
திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் அண்ணாமலை. DMK files, செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு, திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, என டெல்லி கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்தவர் அண்ணாமலை. திமுக வெறுப்பை தவெக கையில் எடுப்பதற்கு முன்பே அதற்கான அடித்தளத்தை ஆழமாக போட்டவர் அண்ணாமலை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவகையில் திமுக ஆட்சி கவிழ அண்ணாமலையும் ஒரு மிக முக்கியக் காரணமே. அப்படிப்பட்ட அண்ணாமலையை, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்காக தலைமை…
-

புதிய போப் யார்? தயாராகும் வாடிகன்.. தனிமைப்படுத்தப்படும் கார்டினல்கள் – ACTPnews.com
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.,21 ஆம் தேதி உடல்நலக் குறைப்பாட்டினால் காலமானார். அவருக்கு வயது 88. போப் பிரான்சிஸ் மறைவினைத் தொடர்ந்து செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைப்பெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு உட்பட உலகின் அனைத்து முன்னணி தலைவர்களும் பங்கேற்று தங்களது மரியாதையினை செலுத்தியினர். இதனைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்வதற்காக நாளை (மே 7) கூடுகிறது கார்டினல்கள் கூட்டம்.…
-

“‘ஹீரோயிசத்தை வளர்த்தெடுப்பதில் தவறில்லை’ என்றார் அவர்!” – இயக்குநர் சசி |”There is nothing wrong with cultivating heroism,” he said! — Director Sasi | actpnews.com
இயக்குநர் சசி, “‘பூ’ திரைப்படத்தை எடுத்து முடித்த பிறகு 2008-ல் மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘சசி, நீங்கள் சொந்த வீடு வாங்கிவிட்டீர்களா?’ எனக் கேட்டார். அப்போது நான் வாடகை வீட்டில்தான் இருந்தேன். ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியால்தான் நான் சொந்தவீடு வாங்கினேன். மீண்டும் அவர், ‘ஏன், இன்னும் நீங்கள் வீடு வாங்கவில்லை?’ எனக் கேட்டார். நான் அவரிடம், ‘நான் ஹீரோவை வைத்துப் படம் பண்ணமாட்டேன். நான் கதைக்குள் இருக்கும்…
-

டெல்லி ஏஐ மாநாட்டில் உணவு, குடிநீர் பற்றாக்குறை, பொருட்கள் திருட்டு: சீன ரோபோக்கள் என தொடரும் சர்ச்சை – ACTPnews.com
5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர். பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர். லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள்…
-

முழுசாக மாறப்போகும் அறிவாலயம்: திமுக மாவட்ட செயலாளர் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறது ? – ACTPnews.com
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பறிகொடுத்தது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் நேரடியாகத் தொகுதிகளுக்குச் சென்று நிர்வாகிகளிடம் கருத்துக்களைக் கேட்டு, அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதில் திமுக தனித்து போட்டியிட வேண்டும், கட்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் பரிந்துரை செய்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கட்சி பல மாற்றங்களை…
-

லண்டனில் லலித் மோடி பிறந்தநாள் : விஜய் மல்லையா கூத்தாட்டம் – வைரலாகும் வீடியோ – ACTPnews.com
பணமோசடி வழக்கில் தண்டனையில் இருந்து தப்பிக்க லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு கூத்தடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா…
-

தற்குறி என்று கூறியவர்கள்தான், உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள்: திமுக மீது முதல்வர் விஜய் சாடல் – ACTPnews.com
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது: “6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள், ஆனால் 6 நாள்கள்கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக – தவெக இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடமில்லை.தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தவெக ஆட்சியமைக்கக் கூடாது என திமுக மற்றும் பலரும் நினைத்தார்கள்.திமுக நம்மை எதிர்க்க, அவமானப்படுத்த,…
-

இஸ்லாமியர்கள் புனித தலம் மக்காவில் தற்கொலை முயற்சி : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ – ACTPnews.com
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா அமைந்துள்ளது. மக்கா அல் ஹராம் மசூதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மக்கா அல் ஹராம் மசூதிக்கு சென்ற இஸ்லாமியர் ஒருவர் திடீரென்று தற்கொலைக்கு முயன்றார். மசூதியின் மேல்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் அந்த நபர், திடீரென்று அவர் மசூதியில் மேல் இருந்து கீழே குதித்தார். அப்போது மசூதியின் தரைளத்தில் சவுதி அரேபியாவின் பாதுகாவலர் கண்காணிப்பு…
-

“கார் பந்தயத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன்”- அஜித்குமார் | actor ajithkumar about car racing | actpnews.com
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் பிரான்ஸில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். நேற்று நடந்த கார் பந்தயத்தில் 5 வது இடத்தை அஜித்குமாரின் அணி பிடித்திருந்தது. இந்நிலையில் பந்தயத்திற்குப் பிறகு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த அஜித்குமார், ” நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன். அஜித்குமார் ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க…
-

ஏலியன்கள் குறித்த ரகசிய கோப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன சீக்ரெட் – ACTPnews.com
ஏலியன்கள் (Aliens) அல்லது வேற்றுலகவாசிகள் என்பது பூமியைத் தவிர்த்து, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் முதல் மேம்பட்ட உயிரினங்கள் வரையிலான வேற்று கிரக வாழ்க்கையைக் குறிக்கிறது. இது குறித்து உறுதியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா போன்றோர் ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உறுதி செய்துள்ளனர். NASA மற்றும் பிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், குறிப்பாக K2-18b போன்ற வாழத்தகுந்த சூழல் கொண்ட கிரகங்களில் ஏலியன் உயிரினங்களுக்கான…
-

நாற்காலி டூ அதி நவீன குசன் சேர்: தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் திடீர் மாற்றம் – ACTPnews.com
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அவர், தினமும் தலைமைச் செயலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் நேரக் கட்டுப்பாடு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. காலை 9:30 அல்லது 10:00 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார்.அலுவல் பணிகள்: மாலை 4:00 மணி வரை அங்கேயே தங்கி துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொள்கிறார்.மதிய உணவு: மதிய உணவிற்காக…
-

வெனிசுலா அதிபர் அவரது மனைவி நாடு கடத்தல் : அமெரிக்கா செயலுக்கு கியூபா, ஈரான் கண்டனம் – ACTPnews.com
அமெரிக்கா, வெனிசுலா இருநாடுகள் இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்துவரும் சூழலில், அதிகளவில் குற்றவாளிகளையும், போதைப் பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். தவிர, மதுரோவை தானாக முன்வந்து பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ட்ரம்ப்…
-

திருப்பதி கோயிலில் அன்னதானம் கூட தரமாக இல்லை?: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வேதனை – ACTPnews.com
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளை மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. 1985-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், திருமலையில் மாதா புஷ்பாஞ்சலி மண்டபம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் பல இடங்களில் காலை முதல் இரவு வரை தடங்கலின்றி, அன்னதானம் மற்றும் லட்டு பிரசாதத்தை வழங்கி வருகிறது. அன்னபிரசாதத்தில் ரசம், சாம்பார், கூட்டு, தயிர், இனிப்பு வகைகள் மற்றும் மசால் வடை பரிமாறப்படுகிறது.தினமும் சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான…
-

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூலை மாதம் இடைத்தேர்தல் ? – ACTPnews.com
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் தனிபெருபான்மை கிடைக்காத காரணத்தால் காங், விசிக, கம்யூ.., கட்சிகள் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே அதிமுகவில் தவெக ஆதரவு அணி ஒன்று உருவானது. எஸ்.பி.வேலுமணி தலைமையில் உருவான இந்த அணி பின்னர் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டது. இதனால் வேலுமணி அணியில் இருந்த மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல்; பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயகுமார்; தாராபுரத்தில் களமிறங்கிய சத்யபாமா; அம்பாசமுத்திரம் தொகுதியில்…
-

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ACTPnews.com
நேற்றிரவு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் படியாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குலை நடத்திவருக்கிறது. இதையடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி அமலான…
-

செல்ல நாயை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அடிதடி,ரகளை,மண்டை உடைப்பு கலவரமான கல்யாண மண்டபம் – ACTPnews.com
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் காகா கோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த புதன்கிழமை சுமித் கேஷர்வானி என்ற மணமகனுக்கும், அவரது காதலிக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பதேபூருக்கு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வந்திருந்தனர். மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் அந்த இடத்தை அடைந்தனர். மாலை மாற்றுதல் உள்ளிட்ட ஆரம்ப விழாக்கள் அமைதியாக நிறைவடைந்தன. அதிகாலை 4 மணியளவில், திருமண பீடத்தில் நகைகள் வழங்கும் சடங்குகள்…
-

டெல்லியில் அறிவாலயம் தொடங்கிய அட்டாக்: ராகுல் காங்கிரசை விமர்சனம் செய்து திமுக பேனர் – ACTPnews.com
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த பேரவைத் தேர்தல்களில் சில முக்கிய கூட்டணிக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. இந்தச் சரிவுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் மனக்கசப்புகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறியதைக் கடுமையாக விமர்சித்த திமுக, இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. …
-

பில்கேட்ஸ் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த ரூ.71,100 கோடி – ACTPnews.com
உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் இருவரும் பரஸ்பர விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அந்த தம்பதி இணைந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில்கேட்ஸ், மெலிண்டா தம்பதி அந்த பதிவில்…
-

“என்ன கருமம் டா இது” BSNL இயக்குநருக்கு உள்ளாடை, செருப்பு எடுத்து தர 50 அதிகாரிகள் நியமனம் – ACTPnews.com
பொதுதுறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லில் மூத்த இயக்குநராக பணியாற்றுபவர் விவேக் பன்சால். இவர் இன்றும், நாளை என இரு தினங்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அங்கு திரிவேணி சங்கத்தில் புனித நீராடுதல், கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் குடும்பத்துடன் பங்கேற்க இருந்தார். இதற்காக, பன்சாலின் பயண ஏற்பாடுகளை செய்து கவனிக்க 50 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 50 அதிகாரிகளுக்கு தலா 20 விதமான பொறுப்புகள் வழங்கப்பட்டு…
-

திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் இவரா? வெளியான ட்விஸ்ட்! – ACTPnews.com
2026 சட்டமன்றத் தொகுதியில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் நின்ற விஜய், இரண்டு தொகுகளிலும் வெற்றிப் பெற்றதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது. இதனால், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார் விஜய். இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத அவர், தன் மேலாளர் வீட்டு நிகழ்ச்சிக்காக ‘சிங்கப்பெண்’ திட்ட தொடக்க…
-

வாட்ஸ்அப், டெலிகிராம் முடக்கம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யும் அரசு! – ACTPnews.com
உலகப்புகழ் பெற்ற தகவல் தொடர்புச் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது ரஷ்யா. அந்நாட்டின் சட்டங்களுக்குப் புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ‘வீசாட்’ (WeChat) பாணியில், ரஷ்யா ‘மேக்ஸ்’ (MAX) என்ற புதிய சூப்பர் ஆப்-ஐ உருவாக்கியுள்ளது. இதில் வீடியோ கால், ஆடியோ கால் மற்றும் பணப்பரிவர்த்தனை போன்ற வசதிகளுடன் அரசுச் சேவைகளையும் பெற முடியும். இந்தச் செயலியை மக்கள்…
-

“மக்களே உஷாரா இருங்க” 215 மருந்துகளுக்கு தடை?: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வார்னிங் – ACTPnews.com
தரமற்ற மருந்துகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அடிக்கடி மருந்தங்கள், மருந்து உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை மேற்கொள்கின்றன. இந்த சோதனைகளின் போது தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால். அதனை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டுவாரியம் தடை விதித்து வருகிறது. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி,…
-

புதுக்கட்சி தொடங்குவது உறுதி: அடம் பிடிக்கும் அண்ணாமலை, டீல் பேசும் பாஜக – ACTPnews.com
மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு அரசியலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை மெளனம் காத்து வந்தார். பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினரில் இருந்து அண்ணாமலை விலகி, இளைஞர்களை மையப்படுத்திய புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப் போவதாக கூறப்பட்டு வந்தது. இதற்கான அறிவிப்பை ஜூன் 4 தனது பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 2 நாட்கள்…
-

3 நாட்களில், 10 ஆயிரம் ஆணுறைகள் காலி: குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் ஜாலி, கூடுதலாக வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறல் – ACTPnews.com
2026 மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்கில் உலக நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். போட்டி தொடங்கிய முதல் சில நாட்களுக்குள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்து போய்விட்டன. போட்டி ஏற்பாட்டளர்கள் வழங்கிய 10,000 பேக் ஆணுறைகள் விரைவாக தீர்ந்து போனதால், மீண்டும் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். இந்த போட்டிகளின் போது ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் வாரக்கணக்கில் அருகிலேயே வசிக்கின்றனர், எனவே நிச்சயம் அவர்களுக்கு ஆணுறை அதிகளவில் தேவைப்படலாம். 2024 ஆம் ஆண்டு பாரிஸில்…
-

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுதலை: டெல்லி நீதிமன்றம் அதிரடி – ACTPnews.com
டெல்லியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகச் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில்…
-

ராஜ்யசபா எம்பி பதவி எங்களுக்கு வேணும்: தவெகவிடம் காங்கிரசு டிமொண்ட் – ACTPnews.com
அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் தற்போது காலியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி நாடாளுமன்ற அரசியலில் தடம் பதிக்கத் தவெகவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்குத் தகுதியான வேட்பாளரைத் தவெக தலைமை தீவிரமாகத் தேடி வருகிறது. இதற்கிடையே, நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பெயர் தவெக தரப்பில் பலமாகப்…
-

உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம் – ACTPnews.com
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக…
-

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை ? ஜூன் 4-ல் ‘மக்கள் சக்தி இயக்கம்’ கட்சியை அறிவிக்கிறார்! – ACTPnews.com
அதிமுகவுடனான கூட்டணிக்காக அண்ணாமலை தலைவர் பதவியை பாஜக மேலிடம் பறித்தது. அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்குத் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தொகுதி பொறுப்பாளர் பணி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். சட்டமன்ற தேர்தலிலும் அண்ணாமலை போட்டியிட வைக்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த சிங்கநல்லூர் தொகுதியை அதிமுக ஒதுக்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாமல் பிரசாரத்தோடு நிறுத்தி…
-

போலீஸ் ஸ்டேஷனாக மாற போகும் ஹிட்லர் பிறந்த வீடு: மக்கள் அமோக வரவேற்பு – ACTPnews.com
ஜெர்மனி நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள பிரானாவ் அம் இன் (Braunau am Inn) என்ற ஊரில், சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு உள்ளது. நீண்ட நாட்களாகப் பாழடைந்து கிடக்கும் இந்தக் கட்டிடத்தைக் காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடம் நாஜி ஆதரவாளர்கள் மற்றும் தீவிர வலதுசாரி அமைப்பினர் கூடும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கம். 2016-ஆம் ஆண்டில் ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த…
-

ஈரான்-இஸ்ரேல் போர் சென்னை விமான சேவை பாதிப்பு, இன்று 36 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மட்டுமில்லாது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகளை குறி வைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகள் தங்களது வான்வழி மற்றும் விமான நிலையங்களை மூடி உள்ளன. இதன் காரணமாக நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 2-வது நாளான நேற்று சென்னையில் இருந்து…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/