Author: Sanjuthra
-

"எனக்கு நடிக்க வருமா, வராதானு எனக்கே தோணிடுச்சு!" – வினோத் கிஷன் பேட்டி | actpnews.com
நடிகர்கள் சந்தோஷ், வினோத் கிஷன், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்காக அவர்களைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Double Occupancy Poster முதலில் பேசிய வினோத் கிஷன், “நான் சினிமாவில் வந்த 16 வருஷமும் என்னை வழிநடத்துறது எனக்குச் சினிமா மேல இருக்கிற பற்றுதான். இவ்வளவு வருஷத்துல எவ்வளவு அடிபட்டிருந்தாலும், என் மேல எனக்கே சந்தேகம் வந்திருந்தாலும், இவ்வளவு வருஷங்கள் நான் பயணிக்கிறதுக்குக் காரணம் எனக்குச்…
-

"'சொல்லாமலே' படத்தின் க்ளைமேக்ஸை மாத்தணும்னு ஆர்.பி. செளத்ரி சார்கிட்ட சொன்னப்போ.!" – இயக்குநர் சசி | actpnews.com
இயக்குநர் சசி இயக்கியிருக்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனி, அவருடைய தங்கை மகன் அஜய் திஷான், ஸ்வாசிகா உள்ளிட்டோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்காக இயக்குநர் சசியை சினிமா விகடன் சேனலுக்காக நாம் பேட்டி கண்டோம். இந்த நேர்காணலில் அவர், மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி உடனான நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார். நூறு சாமி இயக்குநர் சசி பேசுகையில், “‘சொல்லாமலே’ படத்தின் கிளைமேக்ஸில் முதலில் நாக்கை வெட்டிக்கொள்வது…
-

“உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் பாரதிராஜா எனக்கு அறிமுகமானார்!” – சித்ரா லக்ஷ்மணன் |”It was during the time I was working as assistant director I introduced to Bharathiraja” – Chitra Lakshmanan | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிகின்ற திரைக் கலைஞரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பெயரிலேயே ஒரு விருதினை வழங்கிட வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “70-களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் பாரதிராஜா…
-

பாரதிராஜா – ஏ.வி.எம் சம்பவம்! |The Bharathiraja-AVM Incident! | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். சினிமாவின் அத்தனை முன்னேற்றங்களிலும் பாரதிராஜாவின் தடம் இருந்திருக்கிறது. ஃபிலிம் ரோல் தொடங்கி, ஓடிடி வரையும் பாரதிராஜா பயணித்து, 40-க்கும் மேற்பட்ட படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். பாரதிராஜா ஏ.வி.எம் நிறுவனத்தில் பாரதிராஜாவுக்கு நடந்த சம்பவமும், அங்கு பாரதிராஜா எடுத்த சபதம் பற்றியும் உங்களுக்கு தெரியுமா? Source link
-

Bharathiraja: “மகனுக்கு அப்பா கொல்லி வைக்கிற கதையில நடிச்ச கொஞ்ச நாளில்..” – வசனகர்த்தா சுருளிபட்டி சிவாஜி | dialogue writer surulipatti sivaji worked in bharathiraja’s last movie shares his experiance | actpnews.com
திரையில் இரு கரங்களைக் கூப்பியபடி கரகர குரலில் பேசிய நம் பாசத்துக்குரிய பாரதிராஜா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார். தமிழ்த் திரையுலகம் மீளாத் துயரில் விழுந்து கிடக்கிற சூழலில் கடைசியாக அவர் நடித்து இயக்கிய படம் குறித்து அந்தப் படத்தின் வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜியிடம் பேசினோம். “‘நான் வீதி நாடங்கள்ல நடிச்சிட்டிருந்தவன், திண்டுக்கல்ல ஒரு நாடக மேடையில அவரை முதன் முதலா சந்தித்தேன். முதல் சந்திப்புலயே ‘இவன் என் அப்பன் பெரியகருப்புத் தேவரை நினைவு படுத்திட்டாண்டா’னு என்னைக்…
-

பாரதிராஜா: “உன்னை பிடிக்கும், உன் நடிப்பு பிடிக்காது’ன்னு சொல்லுவாரு”- நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி| rajinikanth condolences to director bharathi raja | actpnews.com
“உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது’ என்று சொல்லுவார். அவருடன் இருந்தாலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். மறைந்த எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி போன்றவர்களுடன் நட்பாக இருந்தவர். அவர் உடல் நலம் சரியில்லாதபோது பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால், ‘அவர் விரைவில் சரியாகி விடுவார். அப்போது வாருங்கள்’ என்றார்கள். பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் இப்போது அவரைப் பார்க்க முடியாமலேயே போய்விட்டது. என்றென்றும் அவர் என் நினைவிலே இருப்பார். அவரின் ஆத்மா சாந்தி…
-

ராதிகா முதல் ரஞ்சிதா வரை; பாரதிராஜாவின் ‘ர’ பெயர் சென்டிமென்ட்|The ‘R’ Factor: Bharathiraja’s Sentimental Naming Secret | actpnews.com
தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. கோலிவுட்டில் “16 வயதினிலே’ மூலம் என்ட்ரி கொடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என வரிசையாக பிளாக்பஸ்டர்களை தொடர்ந்து கொடுத்திருக்கிறார். இவரது திரைப்படங்கள் மட்டும் ஸ்பெஷலானது அல்ல. பாரதிராஜா தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்களுக்கு தமிழ் திரையுலகில் ஸ்பெஷல் உண்டு. நடிகைகள் ராதிகா, ராதா, ரேவதி, நடிகர்கள் கார்த்திக், நிழல்கள் ரவி…
-

ஹீரோ கனவுடன் வந்த பாரதிராஜா; இயக்குநர் இமயமாக உயர்ந்த பயணம்|Bharathiraja Revealed Why He Shifted From Acting to Directio | actpnews.com
“தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன். ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்கு கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம்” – சென்னைக்கு “ஹீரோ’ ஆசையுடன் தான் வந்திருக்கிறார், பாரதிராஜா. ஆனால், அவருக்கு கிடைத்த அங்கீகாரம், ‘இயக்குநர்’ என்பதாகும். மக்கள் மனதில் ‘இயக்குநர் இமயம்’ ஆக நிறைந்திருக்கும் பாரதிராஜா, “ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன். பாரதிராஜா அப்போ, பெட்ரோல் போட வரும் காருக்குள்ள…
-

பாரதிராஜா மற்றும் இளையராஜா இடையேயான நட்பு பற்றி தெரியுமா? |Do you know about the friendship between Bharathiraja and Ilaiyaraaja? | actpnews.com
இயக்குநர் பாரதிராஜா முதலில் சுகாதாரத்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நடிப்பின் மீது பேரார்வம் கொண்டிருந்தவர் தொடர்ந்து நாடகங்களைப் போட்டிருக்கிறார். அதிலும் அவரே நடித்திருக்கிறார். இப்படி நாடகத்திற்காகப் பல்வேறு இடங்களுக்குப் பயணித்துக் கொண்டிருந்தவருக்கு இளையராஜாவுடன் நட்பு கிடைத்தது. இளையராஜா மற்றும் அவருடைய சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரன் என அனைவரும் சினிமா கனவை நோக்கித்தான் ஒன்றாகச் சுற்றி வந்தார்களாம். சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு பாரதிராஜா இயக்கிய நாடகங்களுக்கு இளையராஜாவே இசையமைத்திருக்கிறார். இதன் பிறகு, சுகாதாரத்துறை பணியை விட்டுவிட்டு மெட்ராஸூக்கு…
-

“இன்னும் பல விஷயங்கள் நடந்துச்சு; அதையெல்லாம் வெளியில சொல்ல முடியாது!” – பாரதிராஜா |”Many other things happened. I cannot reveal them publicly!” – Bharathiraja | actpnews.com
“அது ஒரு பெரிய கதை. ‘மெட்ராஸ் இன்ஜினீயரிங் குரூப்’ங்கிற பேரைப் பார்த்துட்டு, இன்ஜினீயரிங் படிக்கலாம்னு பெங்களூர் கிளம்பிப் போய்ட்டேன். போனதுக்கு அப்புறம்தான் தெரியும், அது ராணுவத்துக்கு ஆள் எடுக்கிற இடம்னு. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு நான்கு மொழிக்காரனுங்களும் இருக்கோம். பயிற்சி முடிச்சவங்க, வளாகத்துக்குள்ள வெளியில சுதந்திரமா இருப்பாங்க. எங்களைப் போல புது ஆள்களை இருட்டுன உடனே உள்ள தள்ளிப் பூட்டி, விளக்கை அணைச்சிருவாங்க. நம்ம கையும் காலும் சும்மா இருக்குமா? ராத்திரி ஆச்சுனா, இருக்கிற…
-

Bharathiraja: “ `எங்கய்யா புடிச்சீங்க இவனை'ன்னு பாரதிராஜா கேட்டார்" – 16 வயதினிலே டாக்டர் சத்யஜித் | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த மண்ணை விட்டுப் பிரிந்து விட்டார். தமிழ்த் திரையுலகம் கண்ணீரில் தத்தளித்தபடி, அந்தக் கிராமத்து நாயகனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினி – கமல் ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில், ரஜினி கமல் இருவரையும் விட அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் கிராமத்து வெர்ட்னரி டாக்டராக வந்த சத்யஜித். ‘நான் லைக் பண்ணினது உன்ன இல்ல, உன் 16 வயசை’ என ஸ்ரீதேவியிடம்…
-

’16 வயதினிலே’ டு ‘கடல் பூக்கள்’!- பாரதிராஜா படங்களுக்கு விகடன் அளித்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா?| Do you know what scores Vikatan gave to Bharathiraja’s films | actpnews.com
* அண்ணன்-தங்கை பாசத்தை தமிழர்களின் வாழ்வியலோடும், கிராமத்து மண் வாசனையோடும் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடிய உன்னதமான படைப்பு ‘கிழக்கு சீமையிலே’. இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50. * சமூகத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்புகளையும், மதச் சடங்குகளையும், போலித்தனங்களையும் துணிச்சலோடு தட்டிக்கேட்ட புரட்சிகரமான திரைப்படம் ‘வேதம் புதிது’. 1987-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50. `கிழக்கு சீமையிலே’ படத்தில் * பெண் சிசுக்கொலை என்னும் சமூக அவலத்தை உலகிற்குத்…
-

"உங்களைப் பொறுத்தவரையில் எது நல்ல படம்?'' – கெளதம் மேனனின் கேள்விக்கு பாரதிராஜா அளித்த பதில்! | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்குக் கிளம்பி வந்திருக்கிறார். ஆனால், இங்கு நடந்த விஷயங்கள் அவரை வேறு திசைக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றன. பாரதிராஜா கடந்த 2023-ம் ஆண்டு, ஆனந்த விகடனுக்காக இயக்குநர் பாரதிராஜாவை, இயக்குநர் கெளதம் மேனன் பேட்டிக் கண்டார். அந்தப் பேட்டியில், பாரதிராஜாவை பொறுத்த வரையில் நல்ல படம் எது, அவருடைய…
-

பிரபாகரனை சந்தித்த அனுபவம்; விகடன் பேட்டியில் பகிர்ந்த பாரதிராஜா|Bharathiraja Shared Rare Insights on Meeting LTTE Leader | actpnews.com
2008-ம் ஆண்டு விகடனின் “தடம்’ இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது. அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து, “எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம் சென்றபோது, எல்லா இயக்கக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொண்டு என்னை கட்டியணைத்துக் கொண்டார். தமிழ்ச்செல்வன்தான் என்னை அழைத்துச் சென்றார். பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், சூசை நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று பகிர்ந்த…
-

'ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜி நடிப்பு ஈர்த்தது' – விகடன் 'தடம்' இதழில் பாரதிராஜா நினைவு! | actpnews.com
2018-ம் ஆண்டு விகடனின் ‘தடம்’ இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று – “உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?” இந்தக் கேள்விக்கு பாரதிராஜாவின் பதில்… “பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்களும் பாடல்களும் வெளிவந்துகொண்டிருந்த சமயம், ஒரு புயல்போல ‘பராசக்தி’ வெளியானது. தமிழன் அதுவரை திரையில் கேட்டிராத தமிழ், சிம்மக் குரலோன் சிவாஜியின் கம்பீரக்குரல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குது. ஒல்லி இளைஞனா,…
-

“ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன்!” – பாரதிராஜா |”I was looking for opportunities while working at a petrol bunk!” – Bharathiraja | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்குக் கிளம்பி வந்திருக்கிறார். ஆனால், இங்கு நடந்த விஷயங்கள் அவரை வேறு திசைக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றன. சினிமா ஆசை பற்றியும், நடிகர் ஆசை எப்படி டைரக்ஷன் பக்கம் சென்றது என்பது பற்றியும் 2018-ல் விகடன் தடம் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார். பாரதிராஜா அந்தப் பேட்டியில்…
-

"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" – ஸ்டாலின் நேரில் அஞ்சலி | actpnews.com
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை… “தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிராஜா -விற்கு ஸ்டாலின் அஞ்சலி 16 வயதினிலேயில் என்ட்ரி: ‘எனக்கு முகவரி கொடுத்தவர்’ – பாரதிராஜாவுக்கு…
-

‘இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!’- சிரஞ்சீவி இரங்கல் | Telugu actor Chiranjeevi condolences legendary director Bharathiraja | actpnews.com
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், ” இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்திருக்கிறது. கிராமத்து மண்ணின் வாசனை, மனித உறவுகளின் அழகு, காதலின் அப்பாவித்தனம் மற்றும் சாமானிய மக்களின் உணர்ச்சிகளை காலத்தால் அழியாத சினிமா கவிதைகளாக மாற்றியவர் அவர். பாரதிராஜா அவருடைய திரைப்படங்கள் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டதோடு, தலைமுறை தலைமுறையாகப் பல திரைப்பட இயக்குநர்களுக்கும் ஊக்கமளித்தன.…
-

பாரதிராஜா இயக்கி தேசிய விருது பெற்ற படங்கள் என்னென்ன தெரியுமா? |Do you know which films directed by Bharathiraja have won National Awards | actpnews.com
அதனைத் தொடர்ந்து, 1985-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காவியமான ‘முதல் மரியாதை’ சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்து. அதன் பிறகு, 1987-இல் சாதியக் கட்டமைப்புகளுக்கு எதிராகப் புரட்சிகரமான கருத்துக்களைப் பேசிய ‘வேதம் புதிது’ திரைப்படம் சமூகப் பிரச்சினைகளை அலசும் சிறந்த திரைப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது. பாரதிராஜா 1994-ஆம் ஆண்டு பெண் சிசுக்கொலை என்ற சமூக அவலத்தை நெஞ்சை உலுக்கும் வகையில் வெளிச்சமிட்டுக் காட்டிய…
-

FIFA: சர்ச்சை கோல்… சரித்திர கோல்! ஒரே போட்டியில் கடவுளும் சாத்தானுமாக மாறிய மரடோனா! | actpnews.com
கால்பந்து உலகில் சில போட்டிகள் வெறும் ஆட்டமாக முடிந்துவிடுவதில்லை; அவை சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக இடம்பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் அர்ஜென்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்றது. அந்தப் போட்டியில், டியகோ அர்மாண்டோ மரடோனா என்ற ஒற்றை மனிதர், கால்பந்தின் கடவுளாகவும், அதே நேரத்தில் அதன் சாத்தானாகவும் அவதாரம் எடுத்தார். சர்ச்சைக்குரிய ஒரு கோலும், சரித்திரம் போற்றும் ஒரு கோலும் ஒரே ஆட்டத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டது. போட்டி என்பதைத் தாண்டிய…
-

Jio Hotstar: 'த்ரிடம்', 'லிங்கம்' – இம்மாத ஜியோ லைன் அப்-கள் என்னென்ன? | actpnews.com
ஜூன் மாத ரிலீஸாக அடுத்தடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் படங்களும், சீரிஸ்களும் வரவிருக்கின்றன. ஷேன் நிகமின் ‘த்ரிடம்’, யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’, கதிரின் ‘லிங்கம்’ வெப் சீரிஸ் என இம்மாதத்திற்கான ஹாட்ஸ்டார் லைன் அப்-களை இங்கு பார்ப்போம். த்ரிடம் (Dridam): ஷேன் நிகம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் தினேஷ் பிரபாகர், கிருஷ்ணா பிரபா, மேத்யூ வர்கீஸ், சானியா பாத்திமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…
-

“எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு” – விராட் கோலி நெகிழ்ச்சி | actpnews.com
“ஈசாலா கப் நம்தே’ என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. பல வருடங்களாக விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த ஒரு அணி, பேக்-டு-பேக் கோப்பைகளை வென்று சாதித்து பலரது…
-

விசா இருந்தும் அமெரிக்காவில் அனுமதி மறுப்பு! – உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த பிரபல சோமாலிய நடுவர் | actpnews.com
பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் மீது தற்போதைய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபிஃபா, ” போட்டியை நடத்தும் நாட்டின் (Host Country) குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் பிஃபா தலையிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஓமர்…
-

மண்டை ஓட்டுடன் பில்லி சூனியம்..மிரண்டு போன மாலத்தீவு அதிபர்.. கைதான அமைச்சர்கள் பதவி பறிப்பு – ACTPnews.com
கிராமங்களில் சொந்தக்காரர்களுக்குள் சண்டை வந்து பிடிக்காமல் போனால் செய்வினை வைப்பார்கள். குடும்பம் கெட்டுப்போக வேண்டும் பிசினஸ் நொடிந்து போக வேண்டும் என்று மந்திரவாதியிடம் போய் செய்வினை வைப்பார்கள். மாலத்தீவு அதிபருக்கே பில்லி சூனியம் வைத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர்…
-

பவன்கல்யாண் கட்சி எம்எல்ஏ ஆபாச வீடியோ லீக்: சமூக வலைதளங்களில் வைரல் – ACTPnews.com
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் ஜனசேனா கட்சியை சேர்ந்த ரயில்வே கொடுரு தொகுதி எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2024 ஆம் ஆண்டில் ஸ்ரீதர் எம் எல் ஏ வாக பதவியேற்ற சில நாட்களில், ஒருமுறை தன்னை காரில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் அரவ ஸ்ரீதர் ஈடுபட்டார்.…
-

சட்டமன்ற தேர்தலில் நடந்திருப்பது சாகசமோ, சாதனையோ கிடையாது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி : ஸ்டாலின் ஆதங்கம் – ACTPnews.com
சட்டமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக ஆராய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: ”என்ன நடந்தாலும், சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதிக்கும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் அமைந்திருக்கிறது. அதுவும் நமது…
-

அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் அனல்பறக்க பேசிய ஜோ பைடன்-டொனால்ட் டிரம்ப்… வெற்றி யாருக்கு? – ACTPnews.com
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் முதன்முறையாக நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்றனர். அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்று அவர்கள் நிறைவேற்றப்போகும் வாக்குறுதிகள், திட்டங்கள் குறித்து மக்களிடம் நேரலையில் எடுத்துச்…
-

”’ஜோ’ படத்துல இருந்துதான் என்னுடைய கரியர் தொடங்குச்சுனு சொல்லலாம்.” – மாளவிகா மனோஜ் |”You could say my career started with the movie ‘Joe’.” – Malavika Manoj | actpnews.com
நம்மிடையே பேசியவர், “‘ஹபீபி’ படத்துக்குத் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள்கிட்ட இருந்து நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. நான் இன்னும் படத்தைப் பார்க்கல. ஆனா, படத்தைப் பார்த்த இயக்குநர்கள், இப்படி முழுக்க முழுக்க இஸ்லாமிய வாழ்வியலை எந்தப் படமும் காட்டலைனு பாராட்டுறாங்க. அதையே நானும் உணர்றேன். சொல்லப்போனால், தமிழ்ல நான் முதன்முதல்ல கமிட்டான திரைப்படம் இதுதான். இந்தப் படத்துல நடிக்கும்போது நான் 10-வது படிச்சிட்டு இருந்தேன். அதனாலேயே, படம் தொடர்பான நிறைய நினைவுகள் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா,…
-

இனி ஏடிஎம்களில் .10.20,50 ரூபாய் நோட்டுகளை எடுக்கலாம்: மத்திய புது ஐடியா – ACTPnews.com
ஏடிஎம்களிலும் ரூ.1,000, ரூ.500, ரூ.100 ஆகிய கரன்சி நோட்டுகள் மட்டுமே மக்களால் எடுக்க முடியும். இதனால் குறைந்த மதிப்புள்ள பணம் கிடைப்பதில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் ரூ. 10, 20 மற்றும் 50 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ. 500, 200 போன்ற நோட்டுகளை கொடுத்து சிறிய மதிப்புள்ள நோட்டுகளை பெறும் வகையில் ’ஹைப்ரிட் ஏடிஎம்’கள் வைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது…
-

சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்: ரோந்து வாகனம் ஒட்டிய முதல்வர் விஜய்! – ACTPnews.com
முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், பெண் காவலர்களின் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், இந்த அதிரடிப்படைக்காக வழங்கப்பட்டுள்ள புதிய மஹிந்திரா பொலேரோ வாகனத்தை அவரே இயக்கிப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:…
-

சென்சாரில் ‘தட்கல்’ முறை ரத்து – சின்ன படங்களுக்கு இதனால் என்ன பயன்? |’Tatkal’ system scrapped for film certification – How does this benefit small films? | actpnews.com
ஆனால், சினிமாவில் தட்கல் முறை என்பது வரிசையில் காத்திருக்கும் சிறிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்தான் பெரிய படங்களுக்கு வழிவகை செய்கிறது. இதன் காரணமாகப் பண பலமும், ஸ்டார் அந்தஸ்தும் உள்ளவர்களுக்கே முன்னுரிமை கிடைத்து வந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஒரு திரைப்படம், தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், டிசம்பர் 31-ம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த அவசர நேரத்தில்,…
-

அஜித் பவார் உடல் தகனம்: அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி – ACTPnews.com
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் அஜித் பவார், விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில், அஜித் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம்…
-

தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா – ACTPnews.com
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகளுடனும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.அதன்பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ஒவ்வொரு உறுப்பினர்களும் தொகுதி பிரச்னைகளை அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் வில்லிவாக்கத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனும் அரசு ஊழியர்களுடன் நடைபெற்றது. அதன்படி மூன்று வகையாக பிரச்னைகளை…
-

“வாழ்த்து சொல்லி உள்ளே வந்த எஸ்.வி.சேகர் சங்கத்தை கபளீகரம் செய்துட்டார்”- வீதிக்கு வந்த பஞ்சாயத்து | article regarding issues in tamil thiraippada tholilalar koottamaippu lead by s ve shekher | actpnews.com
அப்படி போனில் வந்தவர், பிறகு கூட்டமைப்பு பத்தி கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சு மெல்ல மெல்ல கூட்டமைப்புக்கு உள்ளே வந்தார். தன்னுடன் தாசரதியையும் கூட்டி வந்தார். வந்த கொஞ்ச நாளிலேயே தயாரிப்பாளர் சங்க தலைவரா இருந்த முரளிகிட்ட என்ன பேசினாரோ தெரியல, அவர் ஆதரவுடனேயே ஏற்கெனவே இருந்த தலைவர் மற்றும் பொருளாளரைத் தூக்கிட்டு, தன்னைத் தலைவராகவும் தனக்கு வேண்டிய ஒருத்தரை பொருளாளராகவும் போட்டுக்கிட்டார். சங்கம் பதிவு செய்ததுக்கான சான்றிதழையும் அவரே போய் வாங்கிக்கிட்டார். இது பத்தி நான் கேட்டப்ப,…
-

பரந்தூர் விமான நிலைய விவகாரம்: முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை – ACTPnews.com
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.திமுக ஆட்சியில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்தத் திட்டம் அறிவித்தது முதல் அங்குள்ள மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 2025 ஆம்…
-

”குழந்தைகளின் மலர்போன்ற கைகளில் மாமிசம் ஒழுக வேண்டுமா”..உலக நாடுகளை எச்சரிக்கும் வைரமுத்துவின் ஆழமான வரிகள் – ACTPnews.com
போர்கள் ஒழிக்கப்படவேண்டியவை இல்லையெனில் – அவை பூமியை ஒழித்துவிடும் எனவும், மூன்றாம் உலகப்போர் மூண்டால் அதுதான் இறுதிப்போர் எனவும் எச்சாரித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து…
-

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்: சட்டமன்ற தேர்தலால் தமிழ்நாட்டிற்கு லக் அடிக்க வாய்ப்பு? – ACTPnews.com
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பொதுவாக, விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றாலும், இம்முறை பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு…
-

21 எம்எல்ஏக்கள் ஓகே, ஆன 4 அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்கல்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ‘ட்விஸ்ட்’ – ACTPnews.com
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்திருந்த நிலையில், சமீபத்தில் இரு தரப்பும் ஒன்றிணைந்தன. கொறடாவின் உத்தரவை மீறி சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்காக, எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் சபாநாயகரைச் சந்தித்து, தாங்கள் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், தவெகவுக்கு…
-

இலங்கையின் புதிய அதிபராகும் முதல் இடதுசாரி அநுர குமார திசநாயக ! – ACTPnews.com
மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து, தற்போது அதில் இருந்து கொஞ்சம் கோஞ்சமாக மீண்டும் வருகிறது இலங்கை. இந்த நிலையில், இலங்கையின் 9-வது அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், 1.7 கோடி பேர் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலுக்கு அதிக செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை ரூபாய் மதிப்பில் 1,000 கோடி என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.276 கோடி…
-

சிகரெட் விலை விர்ர்ர்ரர்…பாக்கெட்க்கு ரூ.22 முதல் 25 வரை விலை உயர்வு – ACTPnews.com
பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் வளரிளம் பருவமான 18 வயதளவில், நண்பர்களோடு ‘ஜாலியாகப்’ புகைபிடிக்கத் துவங்கி அதுவே கைவிடமுடியாத பழக்கமாகி கொள்கின்றனர். சிகரெட் பிடிப்பதை சிலர் ஸ்டைலாக, கெளரவாக நினைக்கின்றனர். சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த என்ன தான் அரசு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டாலும், நாள்தோறும் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து தான் வருகிறது. இதன் காரணமாகவே அரசு ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கிறது. இதனால் அடிக்கடி சிகரெட் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.…
-

தேர்தல் தோல்வி, 234 தொகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் குழு: ஸ்டாலின் ஆலோசனை – ACTPnews.com
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில்: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.…
-

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அவ்வளவு தான்: நெதன்யாகுவை போனில் வெளுத்துவிட்ட டிரம்ப் – ACTPnews.com
பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் சமீபத்தில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் முக்கிய ராணுவ விமானத் தளங்கள் மற்றும் நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகளை வீசியது. எனினும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை நடுவானிலேயே…
-

தவெக ஆட்சி மூன்று மாதமாவது தாங்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது ? முன்னாள் அமைச்சர் தங்கம் விமர்சனம் – ACTPnews.com
விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள்…
-

பிரதமரை தாக்க தமிழக காங்., பெண் எம்பிக்கள் சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு – ACTPnews.com
சீன எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இன்றும் காலை முதல் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு மத்தியிலேயே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தைச் சபாநாயகர் நிறைவேற்றினார். நேற்று மாலை 5 மணிக்குத் குடியரசுத் தலைவர்…
-

முதல்வர் விஜய் 11-ம் தேதி டெல்லி செல்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் – ACTPnews.com
சென்னை எழிலகத்தில் வருவாய் பேரிடர் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், “வருவாய் துறையில் மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதித் சான்றிதழ் விரைந்து கிடைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். விண்ணப்பம் 5 நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ரேஷன் கார்டுகள், முதியோர்…
-

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே இன்று பதவியேற்பு – ACTPnews.com
இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே (56) இன்று பதவியேற்க உள்ளார். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தற்போதுதான் கொஞ்சம், கொஞ்சம் மீண்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் 9-வது அதிபருக்கான தேர்தல் நேற்று முன் தினம் (செப்.21) நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு இடையே எந்தவித வன்முறையும் இன்றி தேர்தல் நடைபெற்றது. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலுக்குத்தான் அதிக செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று வாக்கு…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports










Every day is a new beginning