Month: May 2026
-

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்!பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை!
ராஜேஸ்வரி “‘திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல முரளி ராமசாமி அணியில தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினரா ஒரு தடவை இருந்தேன். அந்தச் சமயத்துல சங்கப் பதிவுப் பிரச்னை தொடர்பா அவ்வளவு வேலைகள் செஞ்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ரெண்டு முறை நியமன உறுப்பினரா இருந்தேன். பொதுக்காசை எடுத்து மீட்டிங்னு மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகள்தான்.…
-

“இந்தப் பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில்..” – அஜித் |”At this moment, as we attempt to come to terms with this immense loss…” — Ajith
அவர்கள், “எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85-வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத…
-

“சூர்யா சார் சில விஷயங்களுக்கு மட்டும் ‘இதை கண்டிப்பா பேசணுமா’னு கேட்பார்!” – ஆர்.ஜே. பாலாஜி “For certain topics, Surya Sir would ask, ‘Do we really have to talk about this?’” — R.J. Balaji
இந்த வசனம் பற்றி ஆர்.ஜே. பாலாஜி, “சூர்யா சார் அந்த வசனத்தைப் பேசவே மாட்டேன்னு சொல்லிட்டார். நான் நடிச்ச வெவ்வேறு படங்களுடைய டைட்டில் சொல்லிப் பேசச் சொன்னேன். ஆனா, அவர் பண்ண மாட்டேன்னு உறுதியாகச் சொன்னார். ‘கருப்பு’ படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த வசனத்தை நீக்கச் சொல்லிட்டார். இன்னொருத்தருடைய படத்தை நான் கலாய்க்கக் கூடாதுனுதான் அவர் பேச மாட்டேன்னு சொன்னார். நான்தான் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணினேன்னு பேசச் சொன்னேன். தியேட்டர்ல அந்த…
-

“ரஜினி சார் பேசும்போது எனக்கு அப்படித்தான் இருந்தது!” – ஆர்.ஜே. பாலாஜி |”That is exactly how I felt when Rajini Sir spoke!” — R.J. Balaji
“என் மனசுல இதெல்லாம் நடக்கும்னு நான் யோசிச்சிருக்கேன். ரஜினி சார் பேசினார். சூர்யா சாருக்கு அமீர்கான் சார் மெசேஜ் அனுப்பிச்சாரு. சிம்பு பேசினாரு. இது மாதிரி பெரிய இயக்குநர்கள் நிறைய பேர் பேசினாங்க. உண்மையில இவங்க எல்லாரும் பேசணும்னு அவசியமே இல்லை. படம் பார்த்துட்டு, ‘படம் நல்லாருக்கு, பரவாயில்லை இது இப்படி இருக்கு, அது அப்படி இருக்கு’னு அவங்களுக்குள்ளேயே பேசிட்டுப் போயிருக்கலாம். ஆனா இவங்க எல்லோரும் பெரிய மனிதர்கள். இன்னொருத்தருக்கு போன் பண்ணி, ‘படம் நல்லா இருந்தது’னு…
-

“தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார்” – முதல்வர் விஜய் |”Friend Ajith Kumar, grieving the loss of his mother” — Chief Minister Vijay
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து வந்தார். துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தி கேள்விப்பட்டதும் சென்னைக்குக் கிளம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. தாயாருடன் நடிகர் அஜித் திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், முதல்வர் விஜய் அஜித்குமாரின் தாயார்…
-

நடிகர் அஜித் குமாரின் தாய் மோகினி மணி காலமானார்|Tragic Loss for Ajith Kumar as Mother Mohini Mani Passes Away
நடிகர் மற்றும் கார் ரேசருமான அஜித் குமாரின் அம்மா மோகினி மணி. இவருக்கு வயது 85. தெலங்கானாவைப் பூர்வீகமாக கொண்ட அஜித் குமார், தமிழில் நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் செட்டில் ஆனார். சென்னையில் அஜித் குமாருடன் வசித்து வந்த அவருடைய அம்மா மோகினி மணி இன்று உடல் நல குறைப்பாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். அஜித் குமார் – தனது பெற்றோருடன் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், “அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின்…
-

Vaibhav Sooryavanshi : எலிமினேட்டர் மேட்ச்சில் 12 சிக்சர்.. கிறிஸ் கெய்ல் ரிக்கார்டை எளிதாக முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி… | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:May 27, 2026 8:32 PM IST வேகப்பந்து மற்றும் ஸ்லோயர் பந்துகள் என எதற்கும் அஞ்சாமல் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர் மழை பொழிந்தார். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் நீண்டகால…
-

IPL 2026 : சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்.. ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 29, 2026 11:46 PM IST ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த கேப்டன் ஷுப்மன் கில், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் ஷுப்மன் கில்லின் அதிரடி சதம் அணியின் இந்த இமாலய வெற்றிக்கு வழிவகுத்தது. முல்லன்பூரில்…
-

What To Watch: 'பிளாஸ்ட்', 'கர', 'லீடர்' – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் என்னென்ன?
இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் வந்திருக்கும் படங்கள் என்னென்ன?பிளாஸ்ட் – தமிழ் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், பவன் கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் நேற்று (மே 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஈகோ ராமன் – தமிழ் கணேசன் நாச்சிமுத்து இயக்கி சிபி சந்திரன், ரோபோ சங்கர், கீர்த்தனா ஸ்ரீகுமார், சேரன் ராஜ், கவிதா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ள…
-

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன? | Rishabh Pant steps down as LSG captain
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் மட்டுமே பெற்ற அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது. ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால்…
-

"இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' – KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!
‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக ‘ரீமேட்ச்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். KPY Bala – Rematch Movie ‘ரீமேட்ச்’ பட பூஜையில் கலந்துகொண்ட பாலா, தனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “ஜினிமா மீடியா மற்றும் இந்தத் திரைப்படக் குழுவினருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்ல முதல் முதல்ல பேட்மிண்டன் ஸ்கிரிப்ட் எழுதியிருக்காங்க.…
-

"அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன்!" – சத்யேந்திராவுக்கு மிஷ்கின் இரங்கல்
நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் சத்யேந்திரா நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் காலமானார். Actor Satyendra இவருடைய உறவினர்கள் எவரையும் தொடர்பு கொள்ள முடியாததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு இவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்கு செய்வதற்கு அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். சினிமா தொடர்பான எந்தவொரு நிகழ்வு எந்தத் தொலைவில் நடைபெற்றாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார். அந்தளவிற்குச் சினிமா மீது காதல் கொண்டவர் அவர். இவருடைய மறைவிற்குத்…
-

“ஜேசன் சஞ்சய் மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் படத்தை அணுகியுள்ளார்!” – தமிழ்குமரன் |”Jason Sanjay has approached this film with great clarity and dedication!” — Tamilkumaran
ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய், “‘சிக்மா’ எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்துத் தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஜூலை 31-ஆம் தேதி ‘சிக்மா’வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரசியமான அப்டேட்ஸ் பகிர இருக்கிறோம்” எனத்…
-

IPL Eliminator : மைதானத்தில் சிக்சர் மழை.. ஐதராபாத்திற்கு 244 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து அசாத்திய தொடக்கம் தந்தது. குறிப்பாக, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஹைதராபாத் பந்துவீச்சை…
-

“வெற்றி அல்லது மரணம்!” – உலகக்கோப்பை வீரர்களுக்கு முசோலினி விடுத்த மிரட்டல்! | Benito Mussolini 1938 World Cup threat
விளையாட்டு என்பது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டம். ஆனால், ஒரு கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி, வீரர்கள் மனதில் மரண பயத்தோடு விளையாடப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், 1938-ல் நடந்த அந்தப் போட்டியில், இத்தாலி அணிக்கு அதன் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியிடமிருந்து வந்த ஒரு தந்தி, ஒட்டுமொத்த கால்பந்து உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தந்திதான், “வெற்றி அல்லது மரணம்!”. போர் மேகங்கள் சூழ்ந்த 1938 உலகக்கோப்பை! 1938-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மூன்றாவது உலகக்கோப்பை கால்பந்து தொடர்…
-

20 ரூபாயில் படம்; தயாநிதி மாறனின் மகன் தொடங்கிய மைக்ரோ டிராமா தளம்! |dhayanidhi maaran son karan kadhai shorts platform launch
மொபைல் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப, ‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் வெறும் இரண்டு நிமிட சினிமா தரத்திலான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை இந்த தளம் அறிமுகப்படுத்துகிறது. உள்ளூர் வட்டார வழக்கு, நமது கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்த மைக்ரோ டிராமாக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வெறும் 20 ரூபாய் மட்டுமே செலுத்தி கதைஷார்ட்ஸ் செயலியில் தங்களுக்குப் பிடித்தமான தொடர்களைக் பார்க்கும் வசதிகளை இது ஏற்படுத்தி தருகிறது. Actress Rohini –…
-

நடிகர் சத்யேந்திரா காலமானார்! – உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; காவல்துறை தகவல்!
நடிகர் சத்யேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தவர் இன்று இயற்கை எய்தினார். இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். நடிகராக ‘ஏழாவது மனிதன்’, ‘மண்வாசனை’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். Actor Satyendra ‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’18 வயசு’ என்ற படத்தில் வில்லனாகவும் இவர் நடித்திருக்கிறார். இதனைத் தாண்டி இன்னும் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு,…
-

Blast: “சனாதானம் என்பது மதம் சார்ந்தது கிடையாது!” – நடிகர் அர்ஜூன் |actor arjun about sanatana dharma in blast press show
இந்த நிகழ்வில் நடிகர் அர்ஜுன், “சனாதனம் என்பது வாழ்க்கையின் வழி. நம் வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டோம், எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது இது. தவறு செய்யக் கூடாது, திருடக் கூடாது, மற்றவர்களின் பொருள்களுக்கு ஆசைப்படக் கூடாது என்பதும் சனாதன தர்மம்தான். சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், அவரவர் அப்பா, அம்மாவை வெளியே துரத்திவிட வேண்டும். சனாதன தர்மம் என்பது மதம் சார்ந்தது கிடையாது. அது வாழ்க்கையின் வழி. எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.…
-

Blast Review: இது 10000 வாலா வெடியா? ஆக்ஷன் கிங் – ப்ரீத்தி முகுந்தன் காம்போ `பிளாஸ்ட்’ செய்கிறதா? |arjun abhirami preity mukundan blast movie vikatan tamil review
குடும்பஸ்தனாக அர்ஜுன், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைக் குறையின்றி அள்ளித் தந்திருக்கிறார். அமைதி மோடு பொத்தானை நடிப்பில் அழுத்தியிருந்தாலும், ஆக்ஷன் களத்தில் ‘நான் ஸ்டாப்’ – ஆக வலம் வந்திருக்கிறார். கதையின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் தந்திருக்கும் வேலையை நல்லபடியாகச் செய்து முடித்திருக்கிறார். கராத்தே பயின்று ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் செலுத்திய உழைப்பிற்கு க்ளாப்ஸ்! நீலவேணியாக அபிராமி, இளங்கோவாக விவேக் பிரசன்னா ஆகியோர் ஆக்ஷன், நடிப்பு என அவர்களுடைய மைதானத்தில் ஆல் ரவுண்டர்களாக ஸ்கோர் செய்கிறார்கள். Blast Review…
-

”வில் அம்பு’ பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார் – இறுதிச்சடங்கு நாளை கோவையில் நடக்கிறது! vil ambu movie director ramesh subramaniam passed away today
வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், கடந்த 2016ல் வெளியான “வில் அம்பு’ படத்தின் மூலம் இயக்குநரானார். ‘மாநகரம்’ ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கும் ‘வில் அம்பு’வை சுசீந்திரன் தயாரித்திருந்தார். அதன் பின்னர் விக்ராந்த், யோகிபாபுவை வைத்து, ‘தி கில்லர் மேன்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருந்தார். இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரமேஷ்…
-

“கருப்பு படத்துக்காக நாங்கள் சூர்யாவுடன் 51 நாட்கள் மட்டுமே ஷூட் செய்தோம்”- ஆர்ஜே பாலாஜி| rj balaji about surya in karuppu movie
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு பிறகு ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி சூர்யா குறித்து பேசியிருக்கிறார். ‘கங்குவா’ படத்துக்காக சூர்யா சார் மூன்று ஆண்டுகள் செலவிட்டார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு பத்து நாட்களிலேயே அவர் என்னுடைய செட்டுக்கு வந்துவிட்டார். அவரது எனர்ஜி அப்படியேத்தான்…
-

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது, அதில இருந்துதான்.’ – ஆர்.ஜே. பாலாஜி| RJ.Balaji about karuppu movie
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி ‘கருப்பு’ படம் தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். கருப்பு படம் அந்தவகையில் ‘கருப்பு’ பட காட்சிகள் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, ” ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது. நான் அந்த படத்தோட இயக்குநரைக்…
-

“‘Good Bad Ugly’ வெளியாகியிருந்தாலும் என்னால் ‘சிங்கம்’ ரெஃபரன்ஸை தவிர்க்க முடியவில்லை”- ஆர்.ஜே பாலாஜி| r.j balaji about karuppu movie compare with good bad ugly
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி ‘கருப்பு’ படத்தை ‘Good Bad Ugly’ படத்துடன் ஒப்பிடுவது குறித்து பேசியிருக்கிறார். கருப்பு திரைப்படம் இது தொடர்பாக பேசிய அவர், ” எனக்கு முதல்…
-

“கருப்பு விஜய் சாரின் கடைசிப் படமாக இருந்திருக்க வேண்டியது”- ஆர்.ஜே. பாலாஜி| ‘Karuppu’ should have been Vijay sir’s last film” – RJ Balaji about Vijay
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி முதலில் ‘கருப்பு’ படத்தை நடிகரும், முதல்வருமான விஜய்காக எழுதியதாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், ” உண்மையில் ‘கருப்பு’ படம் விஜய்…
-

IPL 2026 : எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்.. குவாலிஃபையர் 2-இல் குஜராத்துடன் மோதல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 27, 2026 11:46 PM IST வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 50 ரன்களும் குவித்து அணியின் அசுரத்தனமான ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர். ராஜஸ்தான் அணி ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத்தை எதிர்கொள்கிறது. சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்ற…
-

"என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்
சுந்தர்.சியின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘டபுள் ஆக்குபன்சி’. இந்தப் படத்தில் சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார். சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கிறார். ‘டபுள் ஆக்குபன்சி’ சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அனந்திதா…
-

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்.. 3வது சுற்றுக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்.! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:May 28, 2026 6:59 AM IST ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், 39 வயதான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. களிமண் தரையில் விளையாடப்படும் இந்த தொடரை வென்று 25 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஜோகோவிச் தீவிரம் காட்டி…
-

2026 உலகக் கோப்பையை மாற்றும் FIFA-வின் 5 புதிய விதிகள்! | fifa 2026 world cup new football rules
கால்பந்து உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 FIFA உலகக் கோப்பை தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், பல புதிய மாற்றங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது. குறிப்பாக, ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து, ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் “நேரம் கடத்தும்’ யுக்திகளுக்கு முடிவு கட்ட FIFA மற்றும் சர்வதேச கால்பந்து சங்க வாரியம் (IFAB) இணைந்து 5 புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.…
-

“‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது!” – அர்ஜூன் |”The story of ‘Mudhalvan’ was narrated to me after it had been pitched to Rajini Sir and Vijay!” — Arjun
அர்ஜுன் பேசுகையில், “‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது. ஒருவேளை நான் அந்தப் படத்துல நடிக்கலைனா நிச்சயமாக மிஸ் பண்ணியிருப்பேன். ஏன்னா, அது அவ்வளவு அருமையான திரைப்படம். அவ்வளவு சுலபமாகவும் அந்த கேரக்டர்ஸ் நமக்குக் கிடைச்சிடாது. ‘முதல்வன்’ திரைப்படத்தை சமகால அரசியலோடு பொருத்திப் பதிவிடுகிற சமூக வலைதளப் பதிவுகளைப் பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. அவரை நான் சமீபத்துல மீட் பண்ணியிருந்தேன். அவரை நான் மீட் பண்ணின அப்போ, ‘ரொம்ப…
-

‘உப்பு புளி காரம்’ சீசன் 2 எதனால் ‘ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ என மாற்றப்பட்டது? – ராஜ் ஐயப்பா பேட்டி |Why Was ‘Uppu Puli Karam’ Season 2 Renamed ‘Brothers & Sisters’? — Raj Ayyappa Interview
பிறகு ஆடிஷன் சமயத்துல அவர் நம்ரிதாவையும் ஒரு கேரக்டருக்கு ஆடிஷன் வரச் சொல்லிக் கேட்டார். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஆடிஷனுக்குப் போனோம். இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னன்னா, என்னுடைய அப்பாதான் (நடிகர் பானு ப்ரகாஷ்) இந்த சீரிஸிலும் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். நாங்க மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறது ரொம்பவே ஸ்பெஷல்! அம்மாவும் எங்களை ஒன்றாகப் பார்க்கிறதுக்கு ஆசையோட காத்திருக்காங்க.” என்றவரிடம், “இந்த சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் 2-வது சீசனாக தொடங்கப்பட்டது…
-

“அபிஷேக் பச்சனும் மணி ரத்னம் மாதிரி மிமிக்ரி பண்ணினார்!” – ஜெயராம் |”Abhishek Bachchan also mimicked Mani Ratnam!” — Jayaram
ஜெயராம் பேசுகையில், “மணி ரத்னம் சார் மாதிரி நான் மிமிக்ரி பண்ணின வீடியோ பயங்கர வைரல் ஆகிடுச்சு. அப்போ, நான் சுஹாசினி மேம்கிட்ட அனுமதி வாங்கிட்டுதான் மேடையில மிமிக்ரி பண்ணினேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது. ஆனா, தயாரிப்பாளர்கள் வரத் தாமதமானது. அப்போ மணி ரத்னம் சார் ஒரு லெட்டர்ல ‘ஸ்டேஜ்ல ஏதாவது பெர்பார்ம் பண்ண முடியுமா’னு கேட்டு அனுப்பினார். தொடர்ந்து, பிரபு சார்கிட்டையும் அனுமதி வாங்கி மேடையில…
-

பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டது கஷ்டமா இருக்கு!-மறைந்த நடிகை தமிழ்செல்வியின் கணவர் பிரேம்நாத்
கணவருடன் தமிழ்ச்செல்வி சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பி எல்லா வேலைகளையும் பார்த்திட்டிருந்தாங்க. எங்க சொந்த ஊரான சிவகங்கைக்கு காரை அவங்களே ஓட்டிட்டுப் போவாங்க. எந்தப் பிரச்னையும் இல்லாத சூழல்லதான் அன்னைக்கு திடீர்னு கொஞ்சம் டயர்டா இருக்குன்னு சொன்னாங்க. ஏற்கனவே சிகிச்சை எடுத்தவங்கங்கிற காரணத்தால் உடனே மருத்துவமனைக்குப் போயிட்டோம். அங்க ஒருநாள் அட்மிட் ஆகி பார்த்துட்டுப் போயிடலாம்னு அட்மிட் ஆனோம். நார்மல் வார்டுதான். பேசிட்டே இருந்தவங்க கொஞ்ச நேரத்துல ‘கொஞ்ச நேரம் படுத்துகிடுறேன்’னு சொல்லி படுத்தவங்கதான், பிறகு…
-

"இவரால் பாதிப்படைந்தவர்களில் நானும் ஒருவன்!" – 'ரெட் ஜெயண்ட்' செண்பமூர்த்தி பற்றி சுரேஷ் காமாட்சி
ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்த்திருந்தார். விளையாட்டு மீது செண்பகமூர்த்தி ஆர்வம் கொண்டவர் என்பதனால், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செண்பகமூர்த்தியால் தான் பாதிக்கப்பட்டதாக அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆதவ் அர்ஜூனா அவருடைய எக்ஸ் பக்கத்தில், “தமிழ் சினிமாவை தனது…
-

“என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!”- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்! |”The person who included everyone else’s name forgot to include their own!” — Khushbu
இந்த நிகழ்வில் குஷ்பு பேசுகையில், “பசங்களுக்கு இப்போ அட்வைஸ் தேவையில்லை. அவங்ககிட்ட இருந்து நம்மதான் கத்துக்கணும். நம்மகிட்ட நிறைய பழைய சிந்தனைகள் இருக்கும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. என்னுடைய மூத்த மகள் அவந்திகா சுந்தர் மலையாள திரைப்படத்துல நடிச்சிட்டு இருக்காங்க. அதைத்தாண்டி தமிழ்ல ரெண்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்காங்க. தினமும் கதைக் கேட்டுட்டு இருக்காங்க. இந்த விஷயங்கள் தாயாக என்னை பெருமைப்பட வைக்குது. இரண்டாவது மகள் அனந்திதா சுந்தர்…
-

33 பந்துகளில் 93 ரன்கள் குவித்த பட்டிதார்… குவாலிஃபையர் 1-ல் குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 26, 2026 9:41 PM IST விராட் கோலி 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரின் மிக முக்கிய கட்டமான முதலாவது குவாலிஃபையர் (Qualifier 1) சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) ஆகிய அணிகள்…
-

குவாலிபையர் 1: 'எங்கள் அணியின் பலம் அதுதான்; குஜராத் அணியை..!'- ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இதில் இன்று (மே.26) நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி-யும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. rcb vs gt இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் ஆர்சிபி கேப்டன், ரஜத் பட்டிதார், “எந்த மாதிரியான ஆடுகளம் அல்லது சூழல் இருந்தாலும் எங்களது…
-

IPL 2026 : ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி.. 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 26, 2026 11:57 PM IST நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.…
-

“தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது”- ஆர்.வி உதயகுமார்| director perarasu about tamil cinema industry
வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், “முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வட மஞ்சுவிரட்டு திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக திரைப்படம் வெளியாகி முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகளும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் திரையரங்கில்…
-

“என்ன நடக்குது ஒண்ணுமே புரியல’னு சூர்யா சார் சொன்னார்!” – ‘கருப்பு’ ரைட்டர் சரவணன் பேட்டி |”Surya Sir said, ‘I don’t understand what is happening at all!’” — ‘Karuppu’ Writer Saravanan Interview
தொடர்ந்து பேசியவர், “‘கருப்பு’ படத்திற்கான திரைக்கதையை நாங்க ரொம்ப மாதங்கள் எழுதினோம். ஏன்னா, ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’னு மூன்று படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான். ஆனா, அது மாஸ் படங்கள் கிடையாது. எங்களுக்கு மாஸ் கமர்ஷியல் படத்திற்கு திரைக்கதை எழுதுவதுதான் கொஞ்சம் சவாலாக இருந்தது. புதுசாகவும் இருந்தது. இப்படியான கமர்சியல் விஷயங்கள் நம்ம படத்துல இருக்கலாமானு எங்களுக்குள்ள சில சீன்கள் பத்தி டிஸ்கஷன் வரும். ஆனா, அதை எப்படி வேறு வழியில செய்யலாம்னு முடிவு பண்ணி…
-

“அவரை அவராக இருக்க விடுங்கள்” – இளையராஜா மீதான விமர்சனம் குறித்து கங்கை அமரன்|gangai amaran critisicm about fake news against ilayaraja
திரைக்கலைஞர் கங்கை அமரன் எழுதியுள்ள “உயிரிணையே’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன், “பத்திரிகையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள். சிலர் மாதிரி இளையராஜா சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கிறார் என்பது போன்றவற்றை எல்லாம் எழுதாதீர்கள். யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டில் ஆகிவிட்டார். கார்த்திக் ராஜா இளையராஜாவுடன்தான் இருக்கிறார். அவரது மனைவிதான் அண்ணனுக்குச் சமைத்துக்கொடுக்கிறார். ஆனால் இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்று ஏன் எழுத வேண்டும்.…
-

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய மைல்ஸ்டோன்.. அதிக ரன்கள் குவித்தவர்கள் லிஸ்டில் இணைந்த ருதுராஜ் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 18, 2026 10:00 PM IST இன்று நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 180 ரன்கள் எடுத்துள்ளது ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புதிய சாதனையை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்படுத்தியுள்ளார். டாடா ஐபிஎல் 2026 சீசனின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…
-

சிஎஸ்கே வீரர்களுடன் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட தோனி.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 18, 2026 10:23 PM IST காயம் காரணமாக விளையாடாவிட்டாலும், தனது அணியை நேரில் வந்து ஊக்குவிக்கும் அவரது செயல் சிஎஸ்கே ரசிகர்களைப் நெகிழ வைத்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 63-வது லீக் போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மைதானத்திற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இந்த சீசன் முழுவதும் தசைநார்…
-

குரிந்தர்வீர் சிங்: இந்தியாவின் புதிய அதிவேக மனிதர்! 10.09 விநாடி தேசிய சாதனை Gurindervir Singh: India’s New Fastest Man! National Record of 10.09 Seconds.
பந்தயத்தை முடித்தவுடன், விமர்சகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்தவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, குரிந்தர்வீர் தனது நெஞ்சில் குத்தியிருந்த எண் அட்டையின் (Bib) பின்புறம் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பை கேமராக்களுக்கு முன்பு காட்டினார். அதில், “Task is not finished yet. 10.10. Wait. I am still standing.” என்று ஐபிஎல் பாணியில் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களையும் சிலிர்க்க வைத்தது. இந்த வெற்றிக்கு தற்போதைய பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரின்…
-

” என்னை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டன், தி.மு.க ஆதரவாளன் என சொல்றாங்க, ஆனா.!”- ஆர்.ஜே பாலாஜி | RJ Balaji responds to being labelled as sanghi
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனிடையே கடவுள்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்டு படம் இயக்குவதால் ஆர்.ஜே.பாலாஜியை சங்கி என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” என்னை பா.ஜ.க,…
-

ஆனந்தம் 25: ‘கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!’ – நெகிழும் லிங்குசாமி | director lingusamy shares his memories about anandam 25th year
இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான “ஆனந்தம்’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று ‘ஆனந்தம்’ வெளியானது. சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், ரம்பா, தேவயானி, சினேகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு அழகான குடும்பக் கதையாக ‘ஆனந்தம்’ வெளியாகி இருந்தது. ஆனந்தம் படத்தில் தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்பக் கதைகளில் தனி இடத்தைப் பிடிக்கும் படங்களில் ‘ஆனந்தம்’ உண்டு.…
-

Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' – நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?
நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் படத்தைத் தயாரிக்கிறது. படப்பூஜையில் கார்த்தி இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’வில் நடித்து முடித்துவிட்டார். கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்தது வருகின்றன. இதனை…
-

ஆறுதல் வெற்றியுடன் ஐபிஎல் தொடரை முடித்த டெல்லி அணி! – கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி?
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான கொல்கத்தா vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணியினருக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போனாலும், தனது கெத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆடிய போட்டிதான் இது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சைத் தேர்வு செய்தார். dc vs kkr இந்தச் சீசனில் டெல்லி தனது ஓப்பனர்களை மட்டுமல்ல, அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களையும் மாற்றி மாற்றி இறக்கிப்…
-

IPL 2026 : லீக் சுற்று இன்றுடன் நிறைவு.. பிளே ஆஃப் செல்ல 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 24, 2026 3:20 PM IST இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது. மாறாக வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் ஐபிஎல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதுவரை RCB, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. நான்காவது இடத்திற்கு பஞ்சாப்,…









suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz