Month: January 2024

  • Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

    Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here


    NEET SS Cut-Off: நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப்- அதிர்ச்சி அறிவிப்பு

    முதுகலை நீட் படிப்புகளைத் தொடர்ந்து, நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது. இது மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

    INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுக்கு சீட் இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி – மம்தா பானர்ஜி

    மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்குவங்கத்தில் தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். மேலும் படிக்க

    Madurai Jallikattu Ground: தமிழர் பண்பாட்டை அந்த கால ஆளுநர்கள் நன்கு அறிந்திருந்தனர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

    ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.62.78 கோடி செலவில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

    Dr Ramadoss: திரைப்படமாகும் ராமதாஸ் வாழ்க்கை.. ஹீரோவாக சரத்குமார்? – வெளியான தகவல்!

    பொதுவாக மக்களையும், சினிமாவையும் எந்த காலக்கட்டத்திலும் பிரிக்க முடியாது. காதல், ஆக்‌ஷன், பக்தி, பேய் மற்றும் குடும்பக்கதை என பலவிதமான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தான் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று நிகழ்வுகள், வாழும், வாழ்ந்த பிரபலங்கள் பற்றியும் படங்கள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றது. மேலும் படிக்க

    கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..

    தென் மாவட்ட பயணிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  பயன்பாட்டிற்கு வந்தது. இருந்தும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்பொழுது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எழுந்த வண்ணம் உள்ளன . இந்த நிலையில் தமிழ்நாடு அரசு  ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில்,  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க

    Source link

  • கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!

    கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!

    மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 
    விபத்தில் சிக்கிய மம்தா:
    முதலமைச்சர் மம்தாவின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார். இதனால், மம்தாவின் நெற்றியிலும் கையிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார் மம்தா.
    ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால், சாலை மார்க்கமாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், சாலையில் செல்லும்போது சிறிய விபத்து நடந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின்போதும் மம்தாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. 
    மேற்குவங்கத்தில் பரபரப்பு:
    தேர்தலுக்காக நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா பரபர குற்றச்சாட்டு சுமத்தினார். 4 முதல் 5 பேர், தன்னை காரை நோக்கி தள்ளியதாகவும் காருக்கு உள்ளே அவரை தள்ளிவிட்டு அதன் கதவுகளை மூடியதாகவும் கூறப்பட்டது. இதனால், அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது. 
    இந்த சம்பவம் நடக்கும்போது, தன்னை சுற்றி காவல்துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்றும் மம்தா கூறியிருந்தார். இந்த சம்பவம், மேற்குவங்கத்தில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் பரபரப்பை கிளப்பியது. இது, பாஜகவின் திட்டமிட்ட சதி என மம்தா குற்றம்சுமத்தினார். 
    மம்தாவை தாக்கிவிட்டதாக வெளியான செய்தி அம்மாநில தேர்தலில் பெரிய அளவில் எதிரொலித்தது. வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அந்த தேர்தலில் மம்தா பெரிய வெற்றியை பதிவு செய்தார். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து, மூன்றாவது முறையாக மம்தா முதலமைச்சரானார். 
    இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் மம்தா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ராமர் கோயில் திறந்த அதே நாளில், அனைத்து மத நம்பிக்கை பேரணியை மேற்கொண்டார். இதற்கிடையே, மம்தாவின் கோட்டையாக கருதப்படும் மேற்குவங்கத்தில் வெற்றி கொடி நாட்ட வேண்டும் என பாஜக தீவிர முயற்சிகளை மேற்காண்டு வருகிறது. 
    இதையும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில்: 7000 கிலோ ஹல்வா, 400 கிலோ பூட்டு.. விதவிதமான பரிசுகளின் பட்டியல் இதோ..

    Source link

  • Sonam Kapoor Photos : ரொமாண்டிக் டின்னருக்கு சென்ற தனுஷின் ரீல் ஜோடி!

    Sonam Kapoor Photos : ரொமாண்டிக் டின்னருக்கு சென்ற தனுஷின் ரீல் ஜோடி!


    Sonam Kapoor Photos : ரொமாண்டிக் டின்னருக்கு சென்ற தனுஷின் ரீல் ஜோடி!

    Source link

  • Salem District: இரண்டாகப் பிரிக்கப்படுகிறது சேலம் மாவட்டம்?  – புதிதாக உருவாகும் மாவட்டம் எது?

    Salem District: இரண்டாகப் பிரிக்கப்படுகிறது சேலம் மாவட்டம்? – புதிதாக உருவாகும் மாவட்டம் எது?


    <p style="text-align: justify;">இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமைக்குரிய சேலம் மாவட்டம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இன்று மாவட்டங்களாக உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இணைந்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தது. அப்போது, நிலப்பரப்பில் இந்தியாவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகவும், தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் இருந்து வந்தது. சேலம் மாவட்டத்தில் உருக்காலை, சேலம் ரயில்வே கோட்டம், விமான நிலையம், அனல் மின் நிலையம், சேகோ உற்பத்தி நிலையம், தாதுக்கள் மற்றும் மால்கோ என அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/d15bb737ca7e98c5e44559fa97f540b81706064563783113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">சேலம் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 11 சட்டமன்றத் தொகுதிகள், 6 நகராட்சி, 32 பேரூராட்சி, 30 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இத்தகைய பெருமைமிக்க சேலம் மாவட்டத்தை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது, மாவட்டத்தை இரண்டாக பிரித்து எடப்பாடியை மையமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பேச்சுகள் எழுந்தது.</p>
    <p style="text-align: justify;">கடந்த ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த ஊரான எடப்பாடியை தலைமையாகக் கொண்டு சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், நங்கவள்ளி சட்டமன்றத் தொகுதிகளை ஒன்றிணைத்து எடப்பாடி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் எடப்பாடி சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்கப்பட்டால், பல்வேறு பொருளாதார பாதிப்புகள் சேலம் மாவட்டத்திற்கு ஏற்படும் நிலை இருந்தது.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/c852b7437c2437e5b30b864968b7111c1706064605337113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">குறிப்பாக, தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, சங்ககிரி கோட்டை, சேலம் விமான நிலையம், சேலம் உருக்காலை, பெரியார் பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி போன்றவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வணிகத்தைப் பொருத்தவரை மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஓமலூர் பகுதியில் உள்ள கைத்தறி பட்டு நிறுவனங்கள், சங்ககிரியில் உள்ள லாரி உதிரி பாகங்கள், கரும்பு மற்றும் தக்காளி விவசாயம் என பல வணிகம் சார்ந்தவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த முறை சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதியை மையமாகக் கொண்டு ஏற்காடு, கெங்கவல்லி, வாழப்பாடி, ராசிபுரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓரிரு தொகுதிகள் சேர்க்கப்பட்டு புதிய மாவட்டம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. பதினோரு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிப்பதின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காடு, உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவில் உள்ளிட்டவைகள் ஆத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்படும். விவசாயத்தைப் பொறுத்தவரை மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் என பல விவசாயத் தொழில்கள் உள்ள மாவட்டமாக ஆத்தூர் மாவட்டம் உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் அவ்வப்போது இது போன்ற வதந்திகள் பரவி வருவதாகவும், ஆத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதில் சேலம் மாவட்டத்திற்கு அதிக அளவு பாதிப்பு இல்லை என்றாலும், ஒரு மாவட்டத்திற்கு தேவையான வாக்காளர்கள் ஆத்தூர் மாவட்டத்தில் இல்லை என்பதாலும், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாவட்டமாக சேலம் சிறந்து விளங்கி வருகிறது. எனவே சேலம் மாவட்டத்தில் இரண்டாக பிரிக்கும் நடவடிக்கையை அரசு கையில் எடுக்கக் கூடாது என சேலம் மாவட்ட பொது மக்கள் கூறுகின்றனர்.</p>

    Source link

  • கரூரில் வட்டி கொடுமையால் பெண் தற்கொலை விவகாரம்; பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

    கரூரில் வட்டி கொடுமையால் பெண் தற்கொலை விவகாரம்; பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைது


    <p><strong>கரூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக எலிமருந்து குடித்து உயிரிழந்த பெண்மணி விவகாரத்தில் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</strong></p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/b768033517dcb63851d31865336c393f1706070718206113_original.jpeg" /></strong></p>
    <p>கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்லானி – பாத்திமா பீவி தம்பதி. ஜெய்லானி (டீ) மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமா பீவி வீட்டின் அருகே உள்ள ஒரு குடும்பத்திற்கு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க 33000 ரூபாய்க்கு கடனாக வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/e4f69c7f3c26b6f89602059b75a0efd31706070739959113_original.jpeg" /></p>
    <p>&nbsp;</p>
    <p>மேலும், மூன்று மாதம் சரியாக தவணை கட்டிய நிலையில், தொடர்ந்து தவணை கட்டாமல் அந்த குடும்பம் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பைனான்ஸ் நிறுவனத்தினர் கடன் வாங்கி கொடுத்த பாத்திமாபீவி-யை பைனான்ஸ் நிறுவனத்திற்கு அழைத்து தகாத வார்த்தையால் திட்டியும், அதிக வட்டி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.&nbsp; இதனால் மனம் உடைந்த பாத்திமா பீவி கடந்த 20ஆம் தேதி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் மருத்துவமனையில் சேர்த்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் . சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி பரிதாபமாக உயிரிழந்தார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/aed14142a1153fdf069bd552502c65bf1706070759810113_original.jpeg" /></p>
    <p>&nbsp;</p>
    <p>இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் SDPI உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பைனான்ஸ் நிறுவனம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தகாத வார்த்தையிலும், மிரட்டல் தோணியில் பேசிய பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாத்திமா பீவி உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக காத்திருக்கின்றனர். மேலும், இறப்பதற்கு முன்பு பாத்திமா பீவி பேசிய வீடியோவும், கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது. இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், கார்த்தி, நாகராஜ் ஆகிய மூன்று பேரை கரூர் நகர போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • போர் கைதிகளை ஏற்றி சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு! உக்ரைனில் நடந்தது என்ன?

    போர் கைதிகளை ஏற்றி சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு! உக்ரைனில் நடந்தது என்ன?

    உக்ரைன் போர் கைதிகள் 65 பேரை  ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற இடத்தில் ரஷ்யாவின் Ilyushin Il-76 என்ற  விமானம் கிழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
    உக்ரைன்-ரஷ்யா பிரச்னை:
    உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
    இதில் இருநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கியுள்ள ரஷ்யா – உக்ரைன் இடையேயான  போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது.  
    இந்த போர் உலகளவில் பெரும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகிறது. போரை கைவிட சொல்லி உலக நாடுகள் வலியுறுத்தினாலும் ரஷ்யா செவிசாய்க்கவே இல்லை. இப்படியான நிலையில், உக்ரைன் போர் கைதிகள் 65 பேரை  ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ரஷ்ய விமானம் விபத்து:

    Russian military jet with 65 Ukrainian Prisoners of War on board crashes in #Belgorod region.#Russia #UkraineWar #planecrashpic.twitter.com/wMACnGOnbm
    — Annu Kaushik (@AnnuKaushik253) January 24, 2024

    அதாவது, ரஷ்யாவின்  Ilyushin Il-76  என்ற விமான 65 போர் கைதிகளை ஏற்றி கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. 65 போர் கைதிகளுடன் விமானத்தில் 6 பணியாளர்கள், 3 துணை ராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக தெரிகிறது. அப்போது, உக்ரைன் எல்லை பகுதியான பெல்கோரோட் பகுதியில் இன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
     கைதிகள் பரிமாற்றத்திற்காக 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்றபோது விமானம விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

    Source link

  • Kamal Haasan On Ram Mandir My Answer Is Same As What It Was 30 Years Ago

    Kamal Haasan On Ram Mandir My Answer Is Same As What It Was 30 Years Ago

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில்:
    அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
    மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர். 
    கோயில் திறப்பு விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி,  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
    “30 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன்”
    இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதன்படி, “நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி பேசி உள்ளேன். அதே கருத்து தான் இப்பவும் சொல்லுவேன்.
    அதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார் கமல்ஹாசன்.  இதனை அடுத்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல் என்ன பேசியிருப்பார்? என்று கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி குறித்து கமல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    30 ஆண்டுகளுக்கு முன்பு கமல் சொன்னது என்ன?
    அதில், “பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகராக நான் இதையெல்லாம் பேசக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் பேசுவேன். 3.7 ஏக்கர் நிலத்தில் இருந்த மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

    ராமர் கோவில் பற்றி என்ன சொல்லி இருப்பார்னு தேடி பாத்தேன்உண்மையாவே Great 👍ரஜினியை விட கமல் இந்த விஷயத்தில் புரிதல் உள்ள மனிதர்.#குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு pic.twitter.com/i6BR4brB88
    — 🖤♥️தூய துறவி (@iam_Vsk) January 22, 2024

    டிசம்பர் 6ஆம் தேதியை வரலாற்றிலேயே அழிக்கனும். இவை எல்லாம் அரசியல். யாரும் மதத்தை வைத்து  அரசியல் செய்யக் கூடாது. இது தான் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது” என்றார் கமல். மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, டெல்லியில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. 
     

    Source link

  • Government Explains What Makes Ram Lalla’s Idol Extraordinary Explains Sun At Centre Of Crown Ayodhya Ram Mandir

    Government Explains What Makes Ram Lalla’s Idol Extraordinary Explains Sun At Centre Of Crown Ayodhya Ram Mandir

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.
    நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் திறக்கப்பட்டிருக்கும் ராமர் கோயில் கருவறையில் இருக்கும் குழந்தை ராமர் சிலையின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து மத்திய அரசின் mygovindia என்ற எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

    Sunlight Blesses Ram Lalla’s Idol on Ram Navami!Every Ram Navami at noon, mirrors and lenses systems align to focus sunlight on Ram Lalla’s idol’s forehead. An eco-friendly spectacle with no electricity or batteries needed.#RamMandir #Ayodhya#JaiShriRam#ShriRamJanmbhoomi… pic.twitter.com/2L5kceq162
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    ஒவ்வொரு ராம் நவமியன்று நண்பகல் நேரத்தில் குழந்தை ராமர் நெற்றியில் சூரிய கதிர்கள் விழும் வகையில் கண்ணாடி மற்றும் லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு எந்த விதமான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பேட்டரிகளோ மின்சாரமோ பயன்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    Ram Lalla’s Idol Graced by Vishnu’s Ten Avatars!A majestic portrayal showcasing the ten incarnations of Lord Vishnu. Additionally, adorned with Hanuman on one side and Garuda on the other.#RamMandir #Ayodhya#JaiShriRam#ShriRamJanmbhoomi#RamMandirPranPratishtha pic.twitter.com/zcP4BQKILe
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    குழந்தை ராமர் சிலை மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒருபுறம் கருடனும் மற்றொரு புறம் ஆஞ்சநேயரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    A Timeless Wonder!Carved from 2.5 Billion-Year-Old Black Granite, this sacred masterpiece stands tall. The special black granite, brought all the way from Karnataka, adds to the sanctity.#RamMandir #Ayodhya#JaiShriRam#ShriRamJanmbhoomi#RamMandirPranPratishtha pic.twitter.com/HwuX2JRvpt
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான கருப்பு கிரானைட்டில் இருந்து செதுக்கப்பட்டது இந்த புனிதமான தலைசிறந்த படைப்பு. இந்த கருப்பு கிரானைட் கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    A Crown for Ayodhya’s King!Facts about Ram Lalla’s crown or ‘mukut’ are fashioned from yellow gold, Weighs ~1.7 kilos, Adorned with 75 carats of diamonds, and the Sun at the center symbolizes the Suryavanshi logo.#RamMandir #Ayodhya#JaiShriRam#ShriRamJanmbhoomi… pic.twitter.com/caSrOylE8x
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    ராமரின் தலையில் அணிவிக்கப்பட்டுள்ள தங்க கிரீடம் வட இந்திய பாரம்பரியத்தில் மஞ்சள் தங்கம் கொண்டு (yellow gold) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணிக்கங்கள், மரகதம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு,  மையத்தில் சூர்ய நாராயனரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் வலது பக்கத்தில், முத்து இழைகள் நெய்யப்பட்டிருக்கின்றன. இதன் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    A Tilak That Illuminates with Precious Elements!Ram Lalla’s tilak boasts a central 3-carat natural diamond, surrounded by smaller diamonds totaling approximately 10 carats. Natural Burmese rubies are used to adorn the Ajana Chakra.#RamMandir #Ayodhya#JaiShriRam… pic.twitter.com/uCkMeN7i1V
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    ராமர் சிலையின் நெற்றியில் உள்ள வெள்ளை-சிவப்புத் திலகம் வைரம் மற்றும் மாணிக்கங்களால் உருவாக்கப்பட்டதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியில் 3 கேரட் கொண்ட இயற்கை வைரம் உடன் சுற்றி சிறிய வைரம் சேர்த்து சுமார் 10 கேரட் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபி கற்களால் சிவப்பு திலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
    அருண் யோகிராஜ் என்பவர் தான் இந்த குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தவர். இவர் 5 ஆம் தலைமுறை சிலை வடிவமைப்பாளர் ஆவர். டெல்லியில் சுமார் 30 அடி உயரமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையும் கேதார்நாத்தில் 12 அடி உயரமுள்ள ஆதி சங்கராச்சாரியர் சிலையும் வடிவமைத்தவர் அருண் யோகிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • Thaipusam 2024 Tomorrow January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

    Thaipusam 2024 Tomorrow January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

    தமிழ் கடவுள் என்று போற்றி வணங்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். முருகனுக்கு மிக மிக உகந்த நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வணங்கினால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை கொண்டாப்படுகிறது.
    நாளை தைப்பூசம்:
    தை மாதத்தில் பௌர்ணமி திதியில் வரும் பூச நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு பிறந்தது முதலே தைப்பூச கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் தயாராகி வந்தனர். முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வந்தது. பல கோயில்களில் கொடியேற்றத்துடன் ஏற்கனவே தைப்பூச திருவிழா தொடங்கியது.
    இந்த நிலையில், நாளை தைப்பூசம் என்பதால் இன்றே முருகன் கோயில்கள் எல்லாம் களைகட்டி காணப்படுகிறது. குறிப்பாக, முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மற்ற அறுபடை வீடுகளை காட்டிலும் தைப்பூச தினத்தில் பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
    களைகட்டும் முருகன் கோயில்கள்:
    இதனால், பழனி உள்பட முருகன் கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்பட்டு வந்தது. தைப்பூசத்திற்காக பல பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குவிந்து வருகின்றனர்.
    பக்தர்கள் வசதிக்காக பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு ஏராளமான பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. அறுபடை வீடுகள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பிரபலமான முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    குவியும் பக்தர்கள், சிறப்பு ஏற்பாடுகள்:
    தலைநகர் சென்னையில் வடபழனி முருகன் கோயிலில் நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவியத் தொடங்குவார்கள் என்பதால் போலீசார் அதற்கான முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் மட்டுமின்றி சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிவார்கள் என்பதாலும், சிவபெருமான் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும் என்பதாலும் அங்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.
    நாளை முருகன் கோயில்களுக்கு காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக சிறப்பு வரிசைகளும், வசதிகளும் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற மலேசியா முருகன் கோயிலிலும் நாளை லட்சக்கணக்கான முருக பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அங்கும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
    மேலும் படிக்க: பிரம்மபுரீஸ்வரர் கோயில் தைப்பூச விழா கோலாகலம்.. திருத்தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..
    மேலும் படிக்க: Thaipusam 2024: பழனியில் களைகட்டும் தைப்பூசத் திருவிழா; பக்தி பாடல்கள் பாடியபடி குவிந்து வரும் பக்தர்கள்

    Source link

  • V.S.Raghavan: தனித்துவமான குரல், சிறந்த குணச்சிர நடிகர், 1500 படங்கள்! வி.எஸ்.ராகவன் நினைவலைகள்!

    V.S.Raghavan: தனித்துவமான குரல், சிறந்த குணச்சிர நடிகர், 1500 படங்கள்! வி.எஸ்.ராகவன் நினைவலைகள்!


    <p>தமிழ் சினிமா எத்தனையோ குணச்சித்திர நடிகர்களை கடந்து வந்து இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே காலம் காலமாக நெஞ்சில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பார்கள். அப்படிப்பட்ட ஒப்பில்லா கலைஞர்களில் ஒருவர் தான் பழம்பெரும் நடிகர், நாடக நடிகர் வி.எஸ். ராகவன். அவரின் தனித்துமான சிறப்பு என இன்றும் கருதப்படுவது அவரின் குரல் தான். அதை இன்றளவும் பலரும் மிமிக்ரி செய்ய முயற்சி செய்தாலும் வி.எஸ். ராகவன் போல அச்சு அசலாக பேசக்கூடிய ஒருவர் நிச்சயம் எந்தக் காலத்திலும் வரவே முடியாது. அப்படி தனித்துவம் வாய்ந்த வி.எஸ். ராகவனின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/5f574de2b4019cf4f956163aa3a022871706089352335224_original.jpg" alt="" width="720" height="540" /><br />செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் என்ற கிராமத்தில் 1925ம் ஆண்டு பிறந்த வி.எஸ். ராகவனுக்கு சிறு வயது முதலே கலைத்துறை மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் பல நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். &nbsp;சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்த பிறகு ‘மாலதி’ என்ற இதழில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். அதன் மூலம் பத்திரிகை துறையில் அவருக்கு &nbsp;இருந்த அதிகப்படியான ஆர்வம் வெளிப்பட்டது.&nbsp;</p>
    <p>பத்திரிகை துறையில் வேலைபார்த்து வந்த அதே சமயத்தில் நாடகங்களிலும் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி இந்தி நடங்களிலும் நடித்து வந்தார். தமிழிலும், இந்தியிலும் அவரின் வசன உச்சரிப்பிற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மிகவும் பிரபலமான நாடகக் கலைஞராக இருந்த வி.எஸ். ராகவனுக்கு, கே. பாலச்சந்திரன் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.</p>
    <p>அதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து அதை வெகு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் வி.எஸ்.ராகவன். 1957ம் ஆண்டு ‘சமய சஞ்சீவி’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக &nbsp;அறிமுகமானார். ஆனால் அப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு பிறகு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்ததால் வேறு எந்த பக்கமும் செல்லவில்லை.&nbsp; &nbsp;&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/5a9d12a615ecaf6991b1193249483e011706089372329224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><br />எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – கார்த்தி என மூன்று தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள பெருமைக்குரியவர் வி.எஸ். ராகவன். 1954ம் ஆண்டு வெளியான ‘வைரமாலை’ திரைப்படம் மூலம் தான் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றறவருக்கு தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உரிமைக் குரல், சங்கே முழங்கு, வசந்த மாளிகை, சுமைதாங்கி, காதலிக்க நேரமில்லை, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார்.&nbsp;</p>
    <p>இன்றைய இளைஞர்களுக்கு வி.எஸ். ராகவன் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம், மனோபாலா உள்ளிட்டோரின் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘கலகலப்பு’ படத்தில் சமையல்கார தாத்தாவாக நடித்தவர் தான் வி.எஸ். ராகவன். அதைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகு ராஜா, சகுனி, தமிழ் படம், இன்று நேற்று நாளை, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல இன்றைய காலத்துக்கு வெற்றிப்படங்களிலும் நடித்துள்ளார்.&nbsp;</p>
    <p>சுமார் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ். ராகவன், தன்னுடைய 30 – 35 வயதிலேயே பல ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் தந்தையாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகர் நாகேஷ் – வி.எஸ். ராகவன் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. சினிமா உள்ள காலம் வரை வி.எஸ். ராகவன் நினைவுகளும் நிலைத்து இருக்கும்.&nbsp;</p>

    Source link

  • Chengalpattu District Consumer Court Imposes A Fine Of Rs.50 Thousand On Paranur Toll Booth For Charging Extra Fee

    Chengalpattu District Consumer Court Imposes A Fine Of Rs.50 Thousand On Paranur Toll Booth For Charging Extra Fee

    கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
    செங்கல்பட்டு ( Chengalpattu News ) : தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி என்பது மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், பிற சாலைகள் என்றும் தரத்துடன் அமைக்கப்படும். இதனால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமாகிறது.  ஆரம்பத்தில் பொதுமக்களுக்கு,  வாகன ஓட்டிகளுக்கும்  வரப்பிரசாதமாக அமைந்த, இந்த சுங்கச்சாவடிகள் வாகனங்கள் பெருக  தலைவலியை உருவாக்கியது.   சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்க கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.   ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தக்கூடிய ஃபாஸ்ட் டேக் (fastag ) முறையை   அறிமுகப்படுத்தியது. இந்த முறை மூலம்  காத்திருக்காமல் வேகமாக செல்வதை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனையால், ஃபாஸ்ட் டேக் வேலை செய்யாமல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் அவ்வபோது குற்றச்சாட்டை முன் வைத்தும் வருகின்றனர். அதுபோன்ற சமயங்களில் இரண்டு மடங்கு பணம் நேரடியாக வசூலிக்கப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை   முன் வைக்கின்றனர். 
     

    செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி – Paranur Toll Plaza

     
     
     செங்கல்பட்டில் ஒரு சம்பவம்
     
    செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் தனசிங். இவருக்கு சொந்தமாக ஒரு டெம்போ வேன் உள்ளது. அந்த அந்த டெம்போ வேனை  வைத்து அவர்  சுய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 29-06-2021 அன்று சேலையூரில் உள்ள ஒரு வீட்டை காலி செய்து அதில் உள்ள பொருட்களை ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்க சவாரி வந்துள்ளது. அதன்படி தனசிங் அன்றைய தினமே தனியார் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் பாஸ்டேக் ரீச்சார்ஜ் செய்துள்ளார்.
     

    செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி – Paranur Toll Plaza

     
    பரனூர் சுங்கச்சாவடி 
     
    பின்னர் சேலையூரிலிருந்து செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி வழியாக கடந்து மண்டபம் சென்று அங்குள்ள வீட்டில் சாமான்களை இறக்கி விட்டு மீண்டும் அவர் வந்த வழியே வீடு நோக்கி வந்துள்ளார். அப்போது பரனூர் சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் வேலை செய்யவில்லை என கூறி இருமடங்கு தொகையை வசூலித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தன்சிங் சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது ஃபாஸ்ட் டேக் நன்றாகவே உள்ளது. இதில் எந்த கோளாறும் இல்லை என விளக்கம் அனுப்பி உள்ளனர். 
     

    மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம்

     
     
     செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
     
    இதனையடுத்து மன உலைச்சல் அடைந்த தனசிங் பரனூர் சுங்கச்சாவடி மீது செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 06-09-2022 அன்று வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கினை விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் காசி பாண்டியன், உறுப்பினர்கள் ஜவகர், விமலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் ஃபாஸ்ட் டேக்கில் போதிய பணம் இருந்தும் கூடுதல் கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக பரனுர் சுங்கச்சாவடிக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும்,  வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.

    Source link

  • அரசு அலுவலக கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாததால் ஆலமரம் வேரூன்றி கட்டிடம் பழுதாகி இருப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

    அரசு அலுவலக கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாததால் ஆலமரம் வேரூன்றி கட்டிடம் பழுதாகி இருப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

    திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி சுவற்றை துலையிட்டு வெளியே வந்து தொங்கும் நிலையில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் பழுதடைந்து விரிசல் ஏற்படும் நிலை உள்ளதால் வட்டாட்சியர் உடனடியாக ஆலமரத்தை அகற்றி கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் 1898 ஆம் ஆண்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1989-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டமாக பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டதால் மீண்டும் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி துளையிட்டு தரையில் ஊன்றும் அவல நிலை நீடித்து வருகிறது.
     

    அதோடு மட்டுமில்லாமல் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் பிரிட்டிஷ் காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால்  இதன் மேல் ஆலமரம் வளர்ந்து ஆலமரத்தின் வேர்கள் கட்டிடத்தில் பல இடங்களில் படர்ந்து கட்டிடத்தின் உள்பகுதியிலும், வெளிப்பக்கத்திலும் வேரூன்றி இருப்பதால் கட்டிடம் சிதலம் ஏற்பட்டு நிலை உள்ளது.  திமுக ஆட்சியில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் எ.வ.வேலு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேவையில்லாத கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் சொந்த தொகுதியில் உள்ள திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பழமையான நிலையில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் இருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடமும், அரசு அலுவலர்களிடமும், பொது மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     

    இதுகுறித்து சமூக ஆர்வலர் வினித்குமாரிடம் பேசுகையில்:
    திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகமாக உள்ள கட்டிடம் பிரிட்டிஸ் காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் சிறைச்சாலை , குழந்தைகள் நீதிமன்றம் போன்ற அரசின்  முக்கிய அலுவலகமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடத்தில் சரியான பராமரிப்பு செய்யாததால் இந்த பழங்கால கட்டிடத்தில் ஆலமரம் வேரூன்றி அதனுடைய விழுதுகள் கட்டிடத்தின் கீழே வரையில் பரவி உள்ளது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை போய்விடும், தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் 20 வருடங்கள் மட்டுமே உறுதியாக உள்ளது.அதன்பிறகு கட்டிடத்தின் உறுதிதன்மை இல்லாமல் சிதிலமடைந்து விடுகிறது. இதனால் மிகவும் பழமையான கட்டிடமாக  பிரிட்டிஸ் காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது வரையில் உறுதியோடு உள்ளது. அதன் உறுதி இல்லாமல் ஆவதற்கு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என தெரிவித்தார்.

    Source link

  • IND Vs ENG Test Rahul Dravid Talks About Virat Kohli Absence Vs Eng Test | IND Vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்

    IND Vs ENG Test Rahul Dravid Talks About Virat Kohli Absence Vs Eng Test | IND Vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்

    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
    இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    அந்த வகையில் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் விராட் கோலியின் விலகல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட் பேசியுள்ளார்.
    நல்ல விசயம் தான்:
    இது தொடர்பாக பேசிய அவர், “விராட் கோலி போன்ற ஒரு தரமான வீரரை இந்திய அணி தற்போது இழந்துள்ளது சற்று பின்னடைவுதான். ஏனெனில் அவர் ஒரு அற்புதமான வீரர் ஆனால் அவர் தற்போது அணியில் இல்லாததும் ஒரு நல்ல விசயம்தான். ஏனெனில் அவருக்கு பதிலாக வேறு யாரையாவது அந்த இடத்தில் பயன்படுத்தி அவர்களது செயல்பாட்டை முன்னேற்ற இந்த போட்டிகள் கொஞ்சம் உதவியாக இருக்கும்.
    அந்த வகையில் விராட் கோலியின் இடத்தில் மற்றொரு வீரர் விளையாடி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் விராட் கோலிக்கு தற்போது எங்களால் உதவ முடியாத சூழலில் இருப்பதால்தான் அவர் இந்த இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
     
    மேலும் படிக்க: IND vs ENG: ஷார்ட் பந்தில் இரையாகும் ஷ்ரேயாஸ் ஐயர்! இங்கிலாந்துக்கு எதிராக சரி செய்வாரா?
     
    மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் படைக்க இருக்கும் சாதனை! விவரம் உள்ளே!
     

    Source link

  • மம்தாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.. INDIA கூட்டணிக்கு எண்ட் கார்ட் போட்ட ஆம் ஆத்மி..!

    மம்தாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.. INDIA கூட்டணிக்கு எண்ட் கார்ட் போட்ட ஆம் ஆத்மி..!

    மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா அறிவித்த நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
    INDIA கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில் காரணமாக தனித்து போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Source link

  • Udayanidhi Stalin Says I Don’t Believe In God As Far As I Am Concerned Fishermen Also God | எனக்கு இறை நம்பிக்கை இல்லை; என்னை பொருத்தவரை இவர்கள்தான் கடவுள்

    Udayanidhi Stalin Says I Don’t Believe In God As Far As I Am Concerned Fishermen Also God | எனக்கு இறை நம்பிக்கை இல்லை; என்னை பொருத்தவரை இவர்கள்தான் கடவுள்

    ”எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. எவர் ஒருவரு மற்ற ஒருவர்  உயிரை காப்பாற்றுகிறாரோ அவர் தான் கடவுள். இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன்” என  மிக்ஜாம் புயலில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசினார்.
    சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ,  மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணபணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்  வழங்கி பாராட்டும் விழா நடைபெற்றது. இதில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன்,  மா.சுப்புரமணியன் , சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
    அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2015 ஆம் ஆண்டு சென்னை செம்பரம்பாக்கம் ஏரி இரவோடு இரவாக திறந்து விட்ட சமயத்தில் நான் வசித்த சைதைப்பேட்டை பகுதியில் 2 மாடிக்கு மேலாக வெள்ள நீர் சூழ்ந்தது. 3 நாட்கள் மாடியில் தான் இருந்தோம். அப்போது  ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்தான் என்னையும் என் குடும்பத்தினரை மீட்டனர்” என்றார். 
    தொடர்ந்து மீனவர்களை பாராட்டி பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 147 மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்கரை கைபற்றி வைத்துள்ளது. அதை மீட்க மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. ராமேஸ்வரம் வரை சென்ற பிரதமர் மீனவர்களை ஏன் சந்திக்கவில்லை. அவர்களின் படகுகளை மீட்க ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை”  என கேள்வி எழுப்பினார்.
    பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,   ”மழை வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முன்வந்தவர்கள் மீனவர்கள். மீட்பு பணிகளில்  மீனவர்கள்  துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் களத்தில் நின்றோம். உதவி கேட்காமலே உதவி செய்ய முன்வருபவர்கள் மீனவர்கள். ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் மழை வெள்ளத்தில் மக்களை மீட்டவர்கள் மீனவர்கள்” என பாராட்டினார். 
    ”நேர்மையும் துணிச்சலும் தான் மீனவ மக்களிடம் எனக்கு  பிடித்த விஷயம். நம்பி வந்தவர்களை தோளோடு தோள் நின்று காப்பவர்கள் தான் மீனவர்கள். இன்று மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். 2017ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைத்த போது  போராடிய மாணவர்களுக்கு துணை நின்றவர்கள் மீனவர்கள். ஜல்லிக்கட்டு உள்ளவரை மீனவர்கள் புகழ் நிலைத்து இருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.
    தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரமான படகே  உடைந்தாலும் பரவாயில்லை என மக்களை காப்பாற்றி இருக்கிறீர்கள். மழை வெள்ள பாதிப்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அரசு தயார் செய்துவிடும். ஆனால் அதை மக்களிடம் சேர்த்தது மீனவர்கள். மழை வெள்ள பாதிப்பில் அரசுக்கு நற்பெயர் கிடைக்க காரணம் மீனவர்கள் தான்” என்றார்.
    ”மீனவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசு திமுக என்று பல்வேறு மீனவர்கள் நல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. எவர் ஒருவர் மற்ற ஒருவர்  உயிரை காப்பாற்றுகிறாரோ அவர்தான் கடவுள். இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
    பின்னர் மீனவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு, உணவு பந்தியில் மீனவர்களுக்கு உணவும் பரிமாறினார். இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட் மீனவர்கள் கலந்து கொண்டனர்..

    Source link

  • Ayalaan Ott Release Sivakarthikeyan Starring Movie Ott Release Date Platform Details

    Ayalaan Ott Release Sivakarthikeyan Starring Movie Ott Release Date Platform Details

    ‘அயலான்’ (Ayalaan) திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
    இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘அயலான்’.
    ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
    இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. குழந்தைகளைக் குறிவைத்து அயலான் திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடியே குழந்தை ஆடியன்ஸை குடும்பத்துடன் ஈர்த்து இப்படம் கல்லா கட்டி வருகிறது. முதல் நான்கு நாள்களிலேயே அயலான் திரைப்படம் ரூ.50 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்த நிலையில், தற்போது இப்படத்தின் வசூல் ரூ.100 கோடிகளை நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
    இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி அயலான் படத்தின் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளதாகவும்,  வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து படக்குழு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

    Source link

  • Save Soil Movement : தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

    Save Soil Movement : தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..


    <p>தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் &ldquo;தென்னிந்திய தென்னை திருவிழா&rdquo; எனும் பிரமாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரமாண்ட&nbsp; நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.&nbsp;</p>
    <p>இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜன. 24) நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக &nbsp;கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, &ldquo;<strong>கடந்த சில ஆண்டுகளாக தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே &nbsp;பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த &ldquo;தென்னிந்திய தென்னை திருவிழா&rdquo; நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.&nbsp;</strong></p>
    <p><strong>இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.&nbsp;</strong></p>
    <p><strong>மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் &ldquo;இயற்கை சந்தையில்&rdquo; 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன. இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.&nbsp;</strong></p>
    <p><strong>இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்</strong>&rdquo; என தெரிவித்தார். ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக &nbsp;கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பேசும்போது அவருடன் முன்னோடி விவசாயி வள்ளுவன் உடன் இருந்தார்.</p>

    Source link

  • Ayodhya Ram Lalla Idol Ram Mandir Which Lost Out. Rajasthan Sculptor’s White Marble Version | Ayodhya Ram Idol: அயோத்தி ராமர் கோயிலுக்கு செய்யப்பட்ட வெள்ளை பளிங்கு சிலை

    Ayodhya Ram Lalla Idol Ram Mandir Which Lost Out. Rajasthan Sculptor’s White Marble Version | Ayodhya Ram Idol: அயோத்தி ராமர் கோயிலுக்கு செய்யப்பட்ட வெள்ளை பளிங்கு சிலை

    Ayodhya Ram Idol: இணையத்தில் வைரலாகி வரும் வெள்ளை பளிங்கு சிலை, அயோத்தி ராமர் கோயிலின் ஏதேனும் ஒரு பகுதியில் நிறுவப்படும் என கூறப்படுகிறது.
    அயோத்தி ராமர் கோயில்:
    பெரும் பொருட்செலவில் அயோத்தியில் கட்டடப்பட்ட, பால ராமர் கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடந்து முடிந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டின் முக்கிய பிரமுகர்கள் சுமார் 7000 பேர் பங்கேற்றனர். கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோயில் கருவறையில் நிறுவப்பட்டு இருந்த, கருங்கல்லால் செய்யப்பட்டு இருந்த ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டு இருந்த துணி விலக்கப்பட்டது. தொடர்ந்து, ஆரத்தி வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  அயோத்தி ராமர் கோயிலுக்கு என செய்யப்பட்ட மற்றொரு சிலையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    இதையும் படிங்க: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுக்கு சீட் இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி – மம்தா பானர்ஜி
    வெள்ளை பளிங்கில் ராமர் சிலை:
    அயோத்தி ராமர் கோயில் கருவறையில் நிறுவுவதற்கு 3 சிலைகள் வடிவமைக்கப்பட்டன. அவை இறுதி வடிவம் பெற்ற பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் தான், மைசூரைச் சேர்ந்த சிற்ப கலைஞரால் செய்யப்பட்ட கருங்க சிலை இறுதி செய்யப்பட்டனது. 51 அங்குலம் உயரமான இந்த சிலை, 5 வயது ராமரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. 150 முதல் 200 கிலோ வரையிலான எடைகொண்ட அந்த சிலையில், விஷ்ணுவின் 10 அவதாரங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டுகள் பழமையான கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த சிலை, குறைந்தபட்ச பராமரிப்பு பணிகள் மூலமே 1000 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ராமர் கோயிலுக்காக ராஜஸ்தானைச் சேர்ந்த சிற்பியால், வெள்ளை பளிங்கு கல்லில் செதுக்கப்பட்ட பால ராமரின் சிலையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. வட இந்தியா பாணியில் உருவாக்கப்பட்டடுள்ள இந்த சிலை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    This is one of the three Ram lalla Vigrahas sculpted by Shilpis for Ram mandir. It was made by Shri Satyanarayan Pandey of Rajasthan using single stone white marble. This will also feature in the temple. See how beautiful this is ❤️ #RamMandir #RamLalla pic.twitter.com/84a7glun7Z
    — மாயோன்Tweetz | GTSR 🚩🕉️ (@vettrikondan786) January 24, 2024

    ராஜஸ்தான் சிற்பி வடித்த சிலை:
    ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல சிற்பியான சத்யநாராயன் பண்டே என்பவர் தான், இந்த பளிங்கு சிலையை வடிவமைத்துள்ளார். சிலையை முழு உயரத்தைச் சுற்றியுள்ள வளைவில்,  விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. கைகளில் தங்கத்தாலான வில் மற்றும் அம்பின் வடிவம் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த பளிங்கிலேயே தெய்வத்தை அலங்கரிக்கும் நகைகள் மற்றும் ஆடைகள்  வடிக்கப்பட்டு இருப்பது, சிற்பியின் கைவினைத்திறனைக் காட்டுகிறது. தற்போது வரை இந்த சிலை கோயில் நிர்வாகத்திடம் தான் இருப்பதாகவும், முழுமையான கட்டுமான பணிகள் முடிந்த பிறகு இந்த சிலையும் அயோத்தி ராமர் கோயிலின் ஏதேனும் ஒரு பகுதியில் நிறுவப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Source link

  • Sathiyaraj Speech  : "RJ பாலாஜி அடுத்த கட்டம் போக போறாரு''  | Singapore Saloon Movie Pressmeet

    Sathiyaraj Speech : "RJ பாலாஜி அடுத்த கட்டம் போக போறாரு'' | Singapore Saloon Movie Pressmeet


    <p>"RJ பாலாஜி அடுத்த கட்டம் போக போறாரு” | Sathiyaraj Speech | Singapore Saloon Movie Pressmeet</p>

    Source link

  • மேட்டூர் அணையின் நீர்வரத்து 961 கன அடியில் இருந்து 950 கன அடியாக குறைவு..

    மேட்டூர் அணையின் நீர்வரத்து 961 கன அடியில் இருந்து 950 கன அடியாக குறைவு..


    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 961 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 950 கன அடியாக குறைந்துள்ளது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/5c0d63d161b968cc642cbd47859d619b1706065258554113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>நீர்மட்டம்:</p>
    <p>அணையின் நீர் மட்டம் 70.81 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.40 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.</p>
    <p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/fcedfc7d4959b2d0ec402e9f8597c4231706065280765113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>கர்நாடக அணைகள்:</p>
    <p>கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 93.44 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 18.09 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 401 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3,815 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.26 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.34 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 242 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>
    <p>கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.&nbsp;</p>

    Source link

  • Virudhunagar Fire Accident: தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரம் : விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

    Virudhunagar Fire Accident: தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரம் : விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு


    <p>விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி, அங்கு பணியாற்றி வந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர். நகரில் இருந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகியுள்ளன. விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பாக தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, விபத்தில் பலியானவர்களின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.</p>

    Source link

  • South India Cocunut Festival: தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி..? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

    South India Cocunut Festival: தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி..? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..


    <p>தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் &ldquo;தென்னிந்திய தென்னை திருவிழா&rdquo; எனும் பிரமாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரமாண்ட&nbsp; நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.&nbsp;</p>
    <p>இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜன. 24) நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக &nbsp;கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது,&nbsp;&ldquo; கடந்த சில ஆண்டுகளாக தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே &nbsp;பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த &ldquo;தென்னிந்திய தென்னை திருவிழா&rdquo; நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.&nbsp;</p>
    <p>இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.&nbsp;</p>
    <p>மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் &ldquo;இயற்கை சந்தையில்&rdquo; 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன. இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.&nbsp;</p>
    <p>இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்&rdquo; என தெரிவித்தார். ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக &nbsp;கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பேசும்போது அவருடன் முன்னோடி விவசாயி வள்ளுவன் உடன் இருந்தார்.</p>

    Source link

  • INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுடன் கூட்டணி இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி

    INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுடன் கூட்டணி இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி

    INDIA Bloc: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜியின் முடிவு, I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
    மேற்குவங்கத்தில் தனித்து போட்டி- மம்தா பானர்ஜி:
    மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்குவங்கத்தில் தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி மற்றும் மேற்குவங்கத்தில் இருக்கிறோம்.  நாங்கள் தனியாகவே பாஜகவை தோற்கடிப்போம். நாங்கள் இந்திய கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறோம். ராகுல் காந்தியின் நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது, ஆனால் அது குறித்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    West Bengal CM Mamata Banerjee says “I had no discussions with the Congress party. I have always said that in Bengal, we will fight alone. I am not concerned about what will be done in the country but we are a secular party and in Bengal, we will alone defeat BJP. I am a part of… pic.twitter.com/VK2HH3arJI
    — ANI (@ANI) January 24, 2024

    I.N.D.I.A. கூட்டணியில் சிக்கல்:
    மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்குவங்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க அவர் விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஏற்கனவே, கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது என்பது போன்ற பிரச்னைகள், பல்வேறு மாநிலங்களில் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னிற்கு மேற்கொண்ட, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கியபோதும் கூட, அதனை ஏற்க மறுத்தார். மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது எனவும், காங்கிரசுக்கு சொற்ப தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூறி வந்தது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில், தொகுதிகளை ஒதுக்க முடியாது என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த முடிவு, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ள I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

    Source link

  • Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 6 Celebration Thiruvizha TNN

    Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 6 Celebration Thiruvizha TNN

     ஸ்ரீ  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் Brahma Purishvarar Temple  
    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்  பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்   கோயில் ( perunagar brahmapureeswarar temple) அமைந்துள்ளது. இக்கோவில் சுயம்புலிங்கமாக மூலவர் காட்சியளிக்கிறார். மூலவர் சன்னதி கஜபிரதிஷ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஈசான மூலையில் பச்சை கல்லிலான மகா பைரவர் வாகனமின்றி தனித்து காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.  இக்கோவில் காஞ்சி மாநகரின்  தென் எல்லையாக கச்சியப்ப முனிவரால் போற்றப்படுகின்ற திருத்தலம் கோயிலில் பல்வேறு விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    அந்தவகையில் ,பெருநகர் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வெகு விமரிசையாக தைப்பூச விழா துவங்கியது. இதனை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பகல் மற்றும் இரவு வேளையில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் காலை திருக்கல்யாணம் ரிஷப வாகன சேவை மற்றும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தைப்பூச பெருவிழாவில் இரவு உற்சவங்கள் சிறப்பு  இடத்தை பிடிக்கும். நேற்று இரவு  திருக்கோவிலில் சுவாமி  யானை வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏழாம் நாள் உற்சாகத்தை முன்னிட்டு திருத்தேர் உற்சவம்  விமரிசையாக நடைபெற்றது.
     கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பெரியோர்கள் மற்றும்  பக்தர்கள் செய்திருந்தனர்.

    தைப்பூசம் எப்போது?
    கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
    தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    களைகட்டும் முருகன்  கோயில்கள்:
    தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக, அறுபடை வீடுகளான திரு ப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் குவிவார்கள். தைப்பூச தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அறுபடை வீடுகள் தலங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பக்தர்கள் விரதம்:
    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • Sneha Prasanna Daughter : ஹாப்பி பர்த்டே ஆது குட்டி.. மகளை அன்போடு வாழ்த்திய நடிகர் பிரசன்னா!

    Sneha Prasanna Daughter : ஹாப்பி பர்த்டே ஆது குட்டி.. மகளை அன்போடு வாழ்த்திய நடிகர் பிரசன்னா!


    Sneha Prasanna Daughter : ஹாப்பி பர்த்டே ஆது குட்டி.. மகளை அன்போடு வாழ்த்திய நடிகர் பிரசன்னா!

    Source link

  • பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு


    <div dir="auto">
    <p style="text-align: justify;"><strong>பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்க இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் 29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.<br /></strong></p>
    <p style="text-align: justify;"><strong>முன்னாள் டி.ஜி.பி.</strong></p>
    <p style="text-align: justify;">தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது&nbsp; பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ்பியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;">இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது &nbsp;ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.</p>
    <div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle" style="text-align: justify;">
    <div class="uk-text-center">
    <div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CLqSiPj5moMDFYf2cwEdsLcI2A">
    <div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__"><strong>பாலியல் வழக்கு:</strong></div>
    </div>
    </div>
    </div>
    <p style="text-align: justify;">இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.</p>
    <p style="text-align: justify;">இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><strong>கடந்து வந்த பாதை:</strong></p>
    <p style="text-align: justify;">அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி&nbsp; தரப்பு வழக்கறிஞர்கள்&nbsp; வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>
    <p style="text-align: justify;">இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழகறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.</p>
    <p style="text-align: justify;">இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் தீர்ப்பு வெளியானது.</p>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>வழக்கின் தீர்ப்பு விவரம் :</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. இவ்வழக்கில் 61 பக்கங்கள் வாதுரையை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பினை நீதிபதி புஷ்பராணி இன்று வழங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதால்&nbsp; 3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை&nbsp; தண்டனையும் 20 ஆயிரத்து 500 ருபாய் அபராதம் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்னனுக்கு 500 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>மேல்முறையிடு வழக்கு&nbsp;</strong></div>
    <div dir="auto">
    <p style="text-align: justify;">சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் இவ்வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய இயலாது இவ்வழக்கினை விழுப்புரம் நீதமன்றம் ஜனவரி 24 &nbsp;ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிமென செயன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது வரும் 29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவு.</p>
    </div>

    Source link

  • கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..

    கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..


    <p style="text-align: justify;"><strong>கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">தென் மாவட்ட பயணிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் &nbsp;பயன்பாட்டிற்கு வந்தது. இருந்தும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்பொழுது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எழுந்த வண்ணம் உள்ளன . இந்த நிலையில் தமிழ்நாடு அரசு &nbsp;ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், &nbsp;ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/03/bdf59206397b6b50632c8860ad2eb9071704247702595113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>&nbsp;1600 பேருந்துகள் இயக்கப்படுகிறது</strong></p>
    <p style="text-align: justify;">இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் &nbsp;சார்பில், அதன் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தென் தமிழகம் செல்லும் அனைத்தும் ஆம்னி பேருந்துகள் &nbsp;பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.</p>
    <p style="text-align: justify;">கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் &nbsp;27 டிராவல்ஸ் அலுவலகங்களும், 77 பயணிகளை ஏற்றும் இடமும்,&nbsp; 67 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கும் ஆக மொத்தம் 144 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடங்களே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளன. தினசரி சாதாரண நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1600 வரை ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;"><strong>44 ஆம்னி பேருந்துகள் மட்டுமே</strong></p>
    <p style="text-align: justify;">கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் (தினசரி சுமாராக ஆயிரம் பேருந்துகள்) கிளாம்பாக்கத்தில் நிறுத்தி இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் &nbsp;5 ஏக்கர் பரப்பளவில் அரசால் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக பஸ் நிறுத்தும் இடம் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த இடம் வேலை முடிவதற்கும் சுமாராக ஆறு மாதம் காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;"><strong>90 நாட்களுக்கு &nbsp; முன்னே முன்பதிவு</strong></p>
    <p style="text-align: justify;">அந்த இடம் தயாராகும் வரை &nbsp;பேருந்துகளை &nbsp;கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல பலமுறை கோரிக்கை வைத்தும் CMDA நிர்வாகம் 1000 ஆம்னி பேருந்துகள் KCBTயில் பகலில் நிறுத்தி வைத்து பராமரித்து இரவில் இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி நாங்கள் பலமுறை கேள்விகளை எழுப்பியும் பதில் ஏதும் அளிக்காமல் போக்குவரத்து துறை சார்பாக சாத்தியம் இல்லாமல் 2002இல் உயர் நீதிமன்றம் விதித்த ஆணையை அவமதித்து 22.01.2024 அன்று ஆம்னி பேருந்துகள் 24.01.2024 முதல் சென்னை நகரத்திற்குள் வர அனுமதி இல்லை இரண்டு நாட்கள் மட்டும் கால வாசம் கொடுத்து சுற்றறிக்கை திடீரென அனுப்பப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு &nbsp; முன்னே முன்பதிவு செய்துள்ள ஆம்னி பேருந்து பயணிகளின் பயணங்கள் கேள்விக்குறியாகி பயணிகள் பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/2f6c1d47ee877bbc8c9f095d4aa284181703989674312113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை</strong></p>
    <p style="text-align: justify;">இந்நிலையில் உயர் நீதிமன்ற ஆணையை மீறி சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து துறைக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. KCBTயில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக அரசு சார்பாக எங்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 ட்ராவல்ஸ் அலுவலகங்களும், 80 &nbsp;பயணிகளை ஏற்றும் இடமும், &nbsp;320 பஸ் நிறுத்தி வைக்கும் இடம் &nbsp;ஆக மொத்தம் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலே உள்ளது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/c510c4bff152098f0b336fc3b94f09281695871708730113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">ஆகையால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பயணங்கள் &nbsp;தடைப்படாமல் இருக்க போக்குவரத்து துறை மற்றும் CMDA &nbsp;உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் &nbsp;என தெரிவித்துள்ளார். &nbsp;இன்று முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டுமென &nbsp;அரசு சார்பில் அறிவித்துள்ள நிலையில், &nbsp;ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்</p>

    Source link

  • Pakistan Cricket: வாரியத்துடன் மீண்டும் புகைச்சல்.. சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்..!

    Pakistan Cricket: வாரியத்துடன் மீண்டும் புகைச்சல்.. சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்..!


    <p>2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. அதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், அணிக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.&nbsp;</p>
    <p>உலகமே உற்றுபார்க்கும் உலகக் கோப்பை போட்டியில் லீக் போட்டிகளுடன் பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதால், பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அப்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் இயக்குனர்களும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தநிலையில், தற்போது மற்றொரு விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பூதாகரமாக வெடித்துள்ளது.&nbsp;</p>
    <p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து பல அனுபவமிக்க வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடனான மத்திய ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட வீரர்களுக்கு என்.ஓ.சி ( நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்) வழங்க வாரியம் மறுத்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில், சில வீரர்கள் தேசிய அணியில் விளையாடாத நிலையிலும், வெளிநாட்டு டி20 லீக்களில் விளையாட அனுமதிக்கப்படாததால், வாரியத்தின் மீது கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>யார் அந்த வீரர்கள்..?</strong></h2>
    <p>வங்கதேச பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு ஜமான் கான், ஃபகார் ஜமான் மற்றும் முகமது ஹரி உள்ளிட்ட சில வீரர்களுக்கு NOC வழங்க வாரியம் மறுத்துள்ளது. தற்போதைய பிசிபி தலைவரான ஜகா அஷ்ரஃப் காலத்தில் முடிவு செய்யப்பட்ட தற்போதைய கொள்கையின்படி, மத்திய ஒப்பந்த வீரர்கள் பிஎஸ்எல் தவிர இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி,பாகிஸ்தான் தேசிய அணியில் விளையாடாத வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்களில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கபடாதது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது.&nbsp;</p>
    <h2><strong>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தொடரும் மாற்றங்கள்:&nbsp;</strong></h2>
    <p>2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அணியின் மோசமான செயல்பாடுகள் காரணமாக பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் அணி இயக்குனர் பதவிகளும் மாற்றப்பட்டது. இதன்பின், சமீபத்தில் ஓய்வுபெற்ற முகமது ஹபீஸ் இயக்குனர் மற்றும் பயிற்சியாளராகவும், வஹாப் ரியாஸ் தலைமை தேர்வாளராகவும் நியமிக்கப்பட்டனர்.&nbsp;</p>
    <h2><strong>பாகிஸ்தானின் டெஸ்ட் மற்றும் டி20 அணிக்கு தனித்தனி கேப்டன்கள்:&nbsp;</strong></h2>
    <p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, இரண்டு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாகவும், ஷஹீன் ஷா அப்ரிடி டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஷான் மசூத் தனது தலைமையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அதேபோல், டி20 கேப்டனாக ஷஹீன் ஷா அப்ரிடி நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து நான்கு டி20 போட்டிகளில் தோல்வியடைந்து, அதன்பின் ஒரு வெற்றியை பாகிஸ்தான் அணிக்காக பெற்று தந்தார். இப்படியான சூழ்நிலையில், தலா ஒருமுறை ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.&nbsp;</p>

    Source link

  • Weaver Who Made A 24 Feet Handloom Silk Saree In Kanchipuram Believes He Can Make A Saree In One Day

    Weaver Who Made A 24 Feet Handloom Silk Saree In Kanchipuram Believes He Can Make A Saree In One Day

    காஞ்சிபுரம் பட்டு சேலை ( kanchipuram silk sarees )
    காஞ்சிபுரம் என்பது கோவில் நகரமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு என தனி அடையாளத்தை உருவாக்கி தந்தது காஞ்சிபுரம் பட்டு. கைத்தடியில் உருவாகும் காஞ்சிபுரம் பட்டு இருக்கு உலக அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது, நெசவாளர்கள் வேலை இழந்து வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பல இன்னல்களுக்கு மத்தியில் இன்னும் சிலர் தங்கள் தொழிலை விடாமல் தொடர்ந்து நெசவு செய்து வருகின்றனர்.
     
    அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் பட்டுப்புடவைகள் தயாரிப்பது மட்டுமில்லாமல் பட்டுப் புடவைகளில் , விரும்பும் உருவங்களை வடிவமைத்து தந்து வருகிறார். தொடர்ந்து தனது நெசவுத் தொழிலில் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை உருவாக்கியும் வருகிறார் அவர். அந்த வகையில் தற்பொழுது ஒரு புடவையை ஒரே நாளில், உருவாக்கும் தறியை அமைத்து சாதித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா பட்டு பூங்கா ( Arignar Anna Memorial Park – Kanchipuram )
    காஞ்சிபுரம் அடுத்துள்ள கீழ்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் நெசவாளர்களுக்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டுப்பூங்காவில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் குமரவேல் என்கின்ற பட்டு நெசவு வடிவமைப்பாளர் மூலம், பிரம்மாண்ட கைத்தறியை அமைத்து அவற்றில் 24 அடி அகலம் கொண்ட வாலாங்கி சேலையை வடிவமைத்துள்ளார். பெரிய வணிக தலங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் மிகப் பெரிய வடிவமைப்பிளான கைத்தறி சேலையாகும்.

    வடிவமைக்க 5 நெசவாளர்கள்
    இதுபோன்ற வாலாங்கி சேலை 24 அடி அகலமும் வடிவமைப்புக்கு ஏற்ற மாதிரி அதிகப்படியான நீளமும் கொண்டு தயாரிக்கலாம் என்றும், இவற்றை வடிவமைக்க 5 நெசவாளர்கள் உடன் பணியாளர்கள் 4 பேர் மற்றும் மின்சார வடிவமைப்பு பொறியாளர்கள் என குழுக்களாக செயல்பட்டால் மட்டுமே, இது போன்ற வாலாங்கி சேலைகளை வடிவமைக்கலாம் எனக் கூறுகிறார் குமரவேல். மேலும் பயனாளிகள் கேட்கும் வடிவத்தில் வாலாங்கி சேலை காஞ்சிபுரம் பட்டு பூங்காவில் தயார் செய்து தரலாம் என்றும் வடிவமைப்பாளர் குமரவேல் தெரிவித்தார்.

    ஒரே நாளில் சேலை
    சராசரியாக கைத்தறி நெசவு செய்து பெண்கள் அணியும் பட்டு 6 கொண்டதாகவும் சேலைகள் 50 இன்ச் அகலமும் 240 இன்ச் நீளமும் கொண்டிருக்கும், இவை குறைந்தது  வடிவமைப்பதற்கும் சேலை உற்பத்தி செய்யவும் 10 முதல் 15 நாட்களாவது ஆகும். 
    தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள பட்டு தறியில், அகலமும் வடிவத்திற்கு ஏற்றார்ப்போல் அதிகப்படியான நீளம் உருவாக்கப்பட்டுள்ளதால், 5  நெசவாளர்கள் கொண்டு காலையில் 6:00 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்குள் ஒரே நாளில் அனைத்து ரக பட்டுப் புடவைகளையும், செய்து முடிக்க முடியும்.

     
    இந்த பிரமாண்ட கைத்தறியை வடிவமைக்க மூன்று மாதம் ஆனதாகவும் , இது கைத்தறி நெசவு தொழில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வரவும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் குமரவேல். தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள தறியின் மூலம் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல்வேறு கோவில் கோபுரங்களை முழுமையாக பட்டுப் புடவைகளை கொண்டுவர முடியும் பல்வேறு நடிகர்கள் புகைப்படம் உட்பட அனைத்து விதமான புகைப்படங்களையும் பட்டு சேலையில் கொண்டுவர முடியும் என தெரிவிக்கிறார். பாரம்பரியம் மாறாமல் கைத்தறியில் புடவையை உருவாக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கும், இந்த நெசவாளர்களை நாம் பாராட்டலாமே

    Source link

  • Devotees Offer Prayers At Ram Temple On Day It’s Thrown Open To Public

    Devotees Offer Prayers At Ram Temple On Day It’s Thrown Open To Public

    அயோத்தியில் ராமர் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் எத்தனை லட்சம் பேர் தரிசனம் மேற்கொண்டார்கள் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 
    அயோத்தி ராமர் கோயில் 
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாகரா பாணி கட்டிடக்கலையை மையப்பட்டுத்தி கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோயிலில் கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 
    நவீன இரும்பு, எஃகு அல்லது சிமென்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அயோத்தி ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் கருவறையில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலைக்கும் அவர் பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்ச்சியில் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். 
    பொதுமக்கள் வழிபாடு 
    இதனிடையே நேற்றைய தினம் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் அயோத்தி ராமர் கோயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு உடைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்ய சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இதில் சில பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. திரும்பும் திசையெங்கும் மக்கள் தலைகளாக காணப்படுவதால் அயோத்தி ராமர் கோயில் வளாகம் களைக்கட்டியுள்ளது. மேலும் பல மொழி பேசும், பல்வேறு மாநில மக்களும் வருகை தருவார்கள் என்பதால் அதற்கேற்றவாறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

    #WATCH | Ayodhya, Uttar Pradesh: Visuals of first evening aarti performed after Ram Temple Pran Pratistha Ceremony. (22.01)(Source: Associate Priest, Ram Mandir) pic.twitter.com/2KdXUcHWoz
    — ANI (@ANI) January 23, 2024

    முதல் நாளில் எத்தனை பேர் தரிசனம்? 
    இதற்கிடையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தினமும் இரண்டு நேர இடைவெளியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதாவது காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, பின்னர் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் காலை 7 மணி தரிசனத்துக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3.30 மணி முதல் சாமி தரிசனத்துக்காக குவிந்து வருகிறார்கள். 
    இந்நிலையில் நேற்று முதல் நாளில் மட்டும் ஐந்து லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
     

    Source link

  • Madurai Jallikattu Ground: தமிழர் பண்பாட்டை அந்த கால ஆளுநர்கள் நன்கு அறிந்திருந்தனர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

    Madurai Jallikattu Ground: தமிழர் பண்பாட்டை அந்த கால ஆளுநர்கள் நன்கு அறிந்திருந்தனர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி


    <p>தமிழர் என்ற அடையாளத்தோடு ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையோடு நடத்துவோம் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.62.78 கோடி செலவில் &nbsp;கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலரும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.&nbsp;</p>
    <p>விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், &ldquo;வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில் ஏறு தழுவுதல் விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் ஏறு தழுவுதல் மைதானம் திமுக அரசால் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைந்திருக்கும் இந்த பண்பாட்டு சின்னம் தமிழகத்தின் மரபின் தொடர்ச்சி. சிந்து சமவெளி நாகரிகத்தில் திமில் கொண்ட காளைகளின் முத்திரை இருக்கிறது.&nbsp;</p>
    <p>திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 3 முக்கிய கம்பீர சின்னங்களை ஏற்படுத்தியுள்ளோம். மதுரைக்கு அருகில் கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூலகம் ஆகியவை தொடர்ந்து கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதம் தொடங்கி பொங்கலுக்கான முதல் 3 நாட்கள் அரசு கருவூலம் தொடங்கி மற்ற அனைத்து அலுவலகத்தையும் மூட வேண்டுமென ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் ஆளுநர்கள் அறிவித்தனர். தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவராக அந்த காலத்து &nbsp;ஆளுநர்கள் இருந்தனர். இந்த பண்பாட்டு திருவிழா உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும் என்றே இந்த அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.&nbsp;</p>
    <p>கலைஞர் கருணாநிதிக்கு ஏறு தழுவுதல் மீது தனிப்பிரியம் உண்டு. அதனால் தான் தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமா ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார். 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டியை நடத்தியவர் கலைஞர். 2006 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போட்டிகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்த போது பாதுகாப்பாக போட்டியை நடத்துவோம் என உறுதியளித்து அனுமதி பெற்றார். 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தபோது தடையை நீக்க வலுவான வாதங்கள் வைத்து அனுமதி பெற்றது திமுக அரசு காலத்தில் தான்.&nbsp;</p>
    <p>சாதி பிளவுகளும், மத வேறுபாடுகளும் தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையோடு நடத்துவோம் என இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்&rdquo; என தெரிவித்தார்.&nbsp;</p>

    Source link

  • India-set ‘To Kill A Tiger’ Nominated For Best Documentary Feature On Oscars 2024

    India-set ‘To Kill A Tiger’ Nominated For Best Documentary Feature On Oscars 2024

    ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியான நிலையில் இதில் இந்தியாவின் டூ கில் ய டைகர் (To Kill a Tiger) என்ற ஆவணப்படம் இடம் பெற்றுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    96வது ஆஸ்கர் விருது விழா
    திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது (Oscar Awards 2024) வரும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து 591 படங்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஓபன்ஹைமர், பார்பி உள்ளிட்ட படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் இந்த ஆஸ்கர் விருதானது வழங்கப்படும். 
    டூ கில் ய டைகர் (To Kill a Tiger)
    இந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சிறந்த ஆவணப்பட பிரிவில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட டூ கில் ய டைகர் (To Kill a Tiger)  என்ற படம் இடம் பெற்றுள்ளது. கடந்தாண்டு ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் மற்றும் ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பெரர்ஸ் ஆகிய 2 படங்களும் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்தது. இந்நிலையில் டூ கில் ய டைகர் (To Kill a Tiger)  படமும் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

    இந்த படத்தை டெல்லியைச் சேர்ந்த நிஷா பஹுஜா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் தனது 13 வயது மகள் 3 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை எதிர்த்து ரஞ்சித் என்ற தந்தை நடத்தும் சட்ட போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தை கார்னிலியா பிரின்சிப் மற்றும் டேவிட் ஓபன்ஹெய்ம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
    இதுவரை வென்ற விருதுகள் எத்தனை? 
    டூ கில் ய டைகர் படம் சேலம் திரைப்பட விழா, Siff திரைப்பட விழா, நியூயார்க் இந்தியன் திரைப்பட விழா, Stuttgart இந்திய திரைப்பட விழா, மம்மூத் திரைப்பட விழா, Docaviv விழா, டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட 16 திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது. இதன் ட்ரெய்லரை பார்க்கும்போதே மனதை பதைபதைக்க செய்யும் ஒரு கதை என்பது நமக்கு விளங்குகிறது. 

    மேலும் படிக்க: Oscar 2024 nominations: ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் – பார்பி, ஓபன்ஹைமர் லிஸ்டில் இருக்கு…முழு விவரம்!

    Source link

  • Sasikala Shifted Her Residence To Poes Garden Opposite To Former Cm Jayalalitha House House Warming

    Sasikala Shifted Her Residence To Poes Garden Opposite To Former Cm Jayalalitha House House Warming

    Sasikala in poes Garden : ஜெயலலிதா மறைவுக்கு பின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். அதன் பின் சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தியாகராய நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.
    இந்த நிலையில் போயஸ் கார்டன் வேதா இல்லம்., அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டின் எதிரே  மூன்று தளம் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை கட்டி முடித்துள்ளார் சசிகலா. இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்ட பங்களாவின் புதுமனை புகுவிழா நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர். போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில்  30 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி நிழல் அரசாங்கமாகவே செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது வேதா இல்லம் ரத்த சொந்தமான தீபா, மாதவனுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி கைமாறியது குறிப்பிடத்தக்கது. மேலும், போயஸ் கார்டன் தனக்கு ராசியான இடம் என சசிகலா கருதுவதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியேறியுள்ளார். இந்த சூழலில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், தீவிரமாக இறங்குவார் என  ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Source link

  • Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில்: 7000 கிலோ ஹல்வா, 400 கிலோ பூட்டு.. விதவிதமான பரிசுகளின் பட்டியல் இதோ..

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில்: 7000 கிலோ ஹல்வா, 400 கிலோ பூட்டு.. விதவிதமான பரிசுகளின் பட்டியல் இதோ..


    <p>உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.</p>
    <p>நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான வித்தியாசமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் இதோ..&nbsp;</p>
    <h2>108 அடி நீள ஊதுபத்தி:&nbsp;</h2>
    <p>3,610 கிலோ எடையும் 3.5 அடி அகலமும் கொண்ட 108 அடி நீள ஊதுபத்தி, குஜராத்தின் வதோதராவில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதனை தயார் செய்ய சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் ஆனது என்றும் &nbsp;5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒன்றரை மாதம் வரை நீடிக்கும் என்றும் இதன் மணம் பல கிலோமீட்டர் வரை வீசும் என்றும் ஊதுபத்தி தயார் செய்தவர் தெரிவித்துள்ளார். 376 கிலோ குக்குல் (கம் பிசின்), 376 கிலோ தேங்காய் மட்டைகள், 190 கிலோ நெய், 1,470 கிலோ பசுவின் சாணம், 420 கிலோ மூலிகைகள் ஆகியவை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2>ராமர் கோயில் வடிவிலான நெக்லஸ்:&nbsp;</h2>
    <p>சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், ராமர் கோவிலின் கருப்பொருளில் 5,000 அமெரிக்க வைரங்களைக் கொண்டு, இரண்டு கிலோ வெள்ளியில் பயன்படுத்தி நெக்லஸை உருவாக்கியுள்ளார். 35 நாட்களில் 40 கைவினை கலைஞர்களால் இந்த டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லஸை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2>1,265 கிலோ எடைகொண்ட லட்டு:&nbsp;</h2>
    <p>ஹைதரபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் 1,265 கிலோ எடையில் லட்டு தயார் செய்து, அதனை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.&nbsp;</p>
    <h2>ஸ்ரீ ராமர் கோயிலை சித்தரிக்கும் பட்டு பெட்ஷீட்:&nbsp;</h2>
    <p>தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டு உற்பத்தியாளரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராமர் கோயிலை சித்தரிக்கப்பட்டு படுக்கை விரிப்பை(bedsheet), ஸ்ரீராமர் கோயிலின் ‘யஜ்மன்’ அனில் மிஸ்ராவிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் வழங்கினார்.&nbsp;</p>
    <h2>44 அடி நீளமுள்ள பித்தளை கொடி கம்பம்:&nbsp;</h2>
    <p>குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், 5,500 கிலோ எடையுள்ள 44 அடி நீள பித்தளைக் கொடி கம்பம் மற்றும் 6 சிறிய கம்பங்களை அகமதாபாத்தில் ‘பிரான் பிரதிஷ்டா’ விழாவுக்காக வழங்கினார்.&nbsp;</p>
    <h2>குஜராத்தைச் சேர்ந்த 56 அங்குல ‘நகரு’ (drums):</h2>
    <p>தரியாபூரில் உள்ள அகில இந்திய டப்கர் சமாஜால் தங்கப் படலத்தால் செய்யப்பட்ட 56 அங்குல ‘நகரு’ (கோயில் டிரம்) கோயிலின் முற்றத்தில் நிறுவப்பட வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2>400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி</h2>
    <p>உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்த பூட்டு தொழிலாளி சத்ய பிரகாஷ் ஷர்மா 10 அடி உயரம், 4.6 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்ட 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவியை வடிவமைத்துள்ளார். இதனை அவர் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.&nbsp;</p>
    <h2>2100 கிலோ எடைகொண்ட மணி:&nbsp;</h2>
    <p>உத்தரபிரதேச மாநிலம் எட்டாவில் உள்ள ஜலேசரில் இருந்து 2100 கிலோ எடையுள்ள அஷ்டதாது மணி (8 உலோகங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட மணி), கோயில் வளாகத்தில் மிகப்பெரிய மணியாக நிறுவப்பட்டுள்ளது. இந்த கம்பீரமான மணி, ரூ. 25 லட்சம் கட்டுமான செலவில், ஆறு அடி உயரம் மற்றும் ஐந்து அடி அகலத்தில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட, மணியின் அதிர்வு வெகு தொலைவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
    <h2>7000 கிலோ எடைகொண்ட ராம் ஹல்வா:&nbsp;</h2>
    <p>நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 7,000 கிலோ ‘ராம் அல்வா’ வழங்குவதாக அறிவித்து அதனை தயார் செய்து பிரான் பிரதிஷ்டையன்று பக்தர்களுக்கு வழங்கினார்.&nbsp;</p>
    <h2>திருப்பதி தேவஸ்தானம் மூலம் 1 லட்சம் லட்டுகள்:&nbsp;</h2>
    <p>திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஜனவரி 22 ஆம் தேதி பக்தர்களுக்கு விநியோகிக்க ஒரு லட்சம் லட்டு அனுப்பப்படும் என்று அறிவித்தது. அதன்படி ஒரு லட்சம் லட்டு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.&nbsp;</p>
    <h2>தங்க முலாம் பூசப்பட்ட பாத அணிகள்:</h2>
    <p>&nbsp;கரசேவகரின் மகன் ஹைதராபாத்தில் இருந்து அயோத்திக்கு நடந்து சென்று, ராமருக்கு தங்க முலாம் பூசப்பட்ட பாத அணிகளை காணிக்கையாக அளித்தார். ஏறக்குறைய 8,000 கி.மீ. தூரம் நடந்து சென்று இந்த பாத அணிகளை வழங்கினார்.&nbsp;</p>
    <h2>1,100 கிலோ எடை கொண்ட விளக்கு:&nbsp;</h2>
    <p>வதோதராவைச் சேர்ந்த விவசாயி அரவிந்த்பாய் மங்கல்பாய் பட்டேல், 1,100 கிலோ எடையுள்ள, பஞ்சலோக (தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு) விளக்கை பரிசாக அளித்துள்ளார். சுமார் 851 கிலோ நெய்யின் கொள்ளளவு கொண்ட விளக்கை வடிவமைத்து வழங்கியுள்ளார்.&nbsp;</p>

    Source link

  • Chennai High Court Judge Anand Venkatesh Said I Don’t Know Hindi | Judge Anand Venkatesh: ”எனக்கு இந்தி தெரியாது”

    Chennai High Court Judge Anand Venkatesh Said I Don’t Know Hindi | Judge Anand Venkatesh: ”எனக்கு இந்தி தெரியாது”

    Judge Anand Venkatesh: இந்திய தண்டனை சட்டங்களின் பெயரை மாற்றினாலும், அவற்றை இந்தியிலேயே குறிப்பிடுவேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து:
    இந்திய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் தண்டனை சட்டங்களின் பெயர் மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, “ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ  ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஐபிசி என்று தான் குறிப்பிடுவேன். ஏனென்றால் எனக்கு இந்தி தெரியாது. எனவே இந்தியில் உள்ள புதிய பெயர்களை சரியாக உச்சரிப்பது எனக்கு கடினமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் வழக்குகளில், பல்வேறு அதிரடியான தீர்ப்புகளை வழங்கி ஆனந்த் வெங்கடேஷ் கவனம் ஈர்த்து வருகிறார். இந்த நிலையில், குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவது குறித்து ஆனந்த் வெங்கடேஷ் பேசி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
     

    Source link

  • This Week Movie Releases: களைகட்டும் தைப்பூசம் மற்றும் குடியரசு தினம்.. மொத்தம் 9 படங்கள் ரிலீஸ்..!

    This Week Movie Releases: களைகட்டும் தைப்பூசம் மற்றும் குடியரசு தினம்.. மொத்தம் 9 படங்கள் ரிலீஸ்..!


    <p>தமிழ் சினிமாவில் ஜனவரி மாதத்தில் அதிகப்பட்சமாக வரும் வாரம் 7 படங்கள் ரிலீசாகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.&nbsp;</p>
    <h2><strong>ஆரம்பமே அமோகம்</strong></h2>
    <p>2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது. ரூ.300 கோடி, ரூ.400 கோடி என வசூல் வரை மட்டுமே சென்று கொண்டிருந்த திரையுலகில் பாலிவுட்டுக்கு இணையாக ரூ.600 கோடி வசூல் செய்து தமிழ்ப்படங்கள் சாதனைப் படைத்தது. இதனை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் 2024 ஆம் ஆண்டு தொடங்கி விட்டது. ஜனவரி மாதம் முடியவுள்ள நிலையில் முதல் வாரம் 4 படங்களும், 2வது வாரமான பொங்கலுக்கு 4 படங்களும் வெளியாகின.&nbsp;</p>
    <p>கடந்த வாரம் எந்த படமும் ரிலீசாகாத நிலையில் ஜனவரி மாதத்தின் கடைசி வாரமான நாளை 4 படங்களும் மற்றும் நாளை மறுநாள் 3 படங்களும் ஆகிய இரு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 7 படங்கள் திரைக்கு வருகிறது.&nbsp;</p>
    <h2><strong>ஜனவரி 25 ஆம் தேதி ரிலீசாகும் படங்கள்&nbsp;</strong></h2>
    <ul>
    <li><strong>சிங்கப்பூர் சலூன்</strong></li>
    </ul>
    <p>வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக &nbsp;டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் &lsquo;சிங்கப்பூர் சலூன்&rsquo;. முடி திருத்தும் தொழிலாளியாக இதில் நடிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் தான் சிங்கப்பூர் சலூன் படத்தை எடுத்துள்ளார். இதில் மீனாட்சி சௌத்ரி,கிஷன் தாஸ், சின்னி ஜெயந்த், &nbsp;சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா ஆகியோர் கௌரவ தோற்றத்திலும் வருகின்றனர்.&nbsp;</p>
    <ul>
    <li><strong>ப்ளூ ஸ்டார்&nbsp;</strong></li>
    </ul>
    <p>இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன்,சாந்தனு, ப்ரித்வி, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் &ldquo;ப்ளூ ஸ்டார்&rdquo;. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் விளையாட்டில் உள்ள அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <ul>
    <li><strong>தூக்குத்துரை&nbsp;</strong></li>
    </ul>
    <p>ட்ரிப் படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு, இனியா, மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் &lsquo;தூக்குதுரை&rsquo;. மனோஜ் இசையமைத்துள்ள இப்படம் பேய் படம் என்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <ul>
    <li><strong>முடக்கறுத்தான்&nbsp;</strong></li>
    </ul>
    <p>பிரபல சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் &ldquo;முடக்கறுத்தான்&rdquo;. இந்த படத்தில் கே.ஆர்.விஜயா, அறிமுக நடிகையாக ரேவதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிற்பி இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் இந்த படம் குழந்தை கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>குடியரசு தின படங்கள்&nbsp;</strong></h2>
    <ul>
    <li><strong>லோக்கல் சரக்கு&nbsp;</strong></li>
    </ul>
    <p>கே.வினோத்குமார் தயாரிப்பில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் – யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் &ldquo;லோக்கல் சரக்கு&rdquo;. இப்படத்தில் உபாசனா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, வையாபுரி என பலரும் நடித்துள்ளனர்.&nbsp; இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.&nbsp;</p>
    <ul>
    <li><strong>நியதி&nbsp;</strong></li>
    </ul>
    <p>நவீன்குமார் சந்திரன் இயக்கி நடித்துள்ள படம் &lsquo;நியதி&rsquo;. இந்த படத்தில் அஞ்சனா பாபு, தேனி முருகன், கோவிந்த் மூர்த்தி, <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ரணதீரன் &nbsp;உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜேக் வாரியர் இசையும், பிரபு கண்ணன் ஒளிப்பதிவாளர் பணியும் மேற்கொள்ள இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீசாகிறது.&nbsp;</p>
    <ul>
    <li>இதுதவிர த.நா., என்ற தமிழ் படமும், மலையாளத்தில் மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன், இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள ஃபைட்டர் படமும் இந்த வார வெளியீடாக திரைக்கு வர உள்ளது.&nbsp;</li>
    </ul>
    <p>&nbsp;</p>

    Source link

  • Latest Gold Silver Rate Today 24 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    Latest Gold Silver Rate Today 24 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து  ரூ.46,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,835  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,440 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,305 ஆகவும் விற்பனையாகிறது. 
    வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.76.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.76,800 க்கு விற்பனையாகிறது.
    கோயம்புத்தூர்
    “தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,835  ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,305 ஆகவும் விற்பனையாகிறது. 
    மதுரை 
    மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,835  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,305 ஆகவும் விற்பனையாகிறது. 
    திருச்சி
    திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,835  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,305 ஆகவும் விற்பனையாகிறது. 
    வேலூர் 
    வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,835  ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,305 ஆகவும் விற்பனையாகிறது. 
    நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
    மும்பை
    மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
    புது டெல்லி
    புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,320 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,795 ஆகவும் விற்பனையாகிறது.
    கொல்கத்தா
    கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
    ஐதராபாத் 
    ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
    அகமதாபாத்
    அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
    திருவனந்தபுரம்
    திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
    பெங்களூரு
    பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
    ஜெய்ப்பூர்
    ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,320 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,795 ஆகவும் விற்பனையாகிறது.
    புனே
    புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.

    Source link

  • Top News India Today Abp Nadu Morning Top India News January 24 2024 Know Full Details

    Top News India Today Abp Nadu Morning Top India News January 24 2024 Know Full Details


    ”ராமர் அலை” என எதுவும் இல்லை.. அது அரசியல் நிகழ்வு.. ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கண்டனம்

    இந்தியாவில் ”ராமர் அலை” என எதுவும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையாகியுள்ளது. ராகுல் காந்தியின் நியாய யாத்திரை அசாமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவால் ஏற்பட்டுள்ள அலையை எப்படி எதிர்கொள்வது என திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது, ”இங்கு அலை இருக்கிறது என்பது போன்று எதுவுமில்லை.  பாஜகவின் அரசியல் திட்டமும், நரேந்திர மோடியின் நிகழ்ச்சியும் அங்கு அரங்கேறியுள்ளது. மேலும் படிக்க.,

    அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. முதல் நாளில் இத்தனை லட்சம் பேர் தரிசனமா?

    அயோத்தியில் ராமர் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் எத்தனை லட்சம் பேர் தரிசனம் மேற்கொண்டார்கள் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாகரா பாணி கட்டிடக்கலையை மையப்பட்டுத்தி கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோயிலில் கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,

    2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. இடிக்கப்படும் இரண்டு முக்கிய மேம்பாலங்கள்..

    மெட்ரோ பணிக்காக சென்னையில் 2 முக்கிய மேம்பாலங்களான அடையாறு, அஜந்தா பாலங்கள் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ராயப்பேட்டை அஜந்தா பாலத்தை இடிக்கக் கூடிய பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் இடிப்பு பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முதல் ராயப்பேட்டையை இணைக்க கூடிய அஜந்தா மேம்பாலம் இடிக்கப்படுவதால் அவ்வை சண்முகம் சாலை வழியாக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன. மேலும் படிக்க.,

     பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி – விடுதி உணவுக்கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

    அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளில் உணவுக் கட்டணத்தை, 400 ரூபாய் வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிற்படுத்தப் பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர். சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினருக்கான விடுதிகள் செயல்படுகின்றன. அங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான மாத கட்டணத்தை உயர்த்துவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் இதுவரை வசூலித்து வந்த தொகையிலிருந்து 400 ரூபாய் கூடுதலாக இனி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,

    மதுரையில் இன்று திறக்கப்படுகிறது உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம் – உள்ளே இருக்கும் வசதிகள் என்ன?

    மதுரை கீழக்கரையில் அமைந்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கில், வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்கிறார். இதையொட்டி, அரங்கில் உள்ள வசதிகள் தொடர்பாக  தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,

    Source link

  • DMK – Congress Alliance: திமுக

    DMK – Congress Alliance: திமுக

    வரும் 28 ஆம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வரும் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.ஆர் பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக குழுவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். 

    Source link

  • RJ Balaji: தப்பித்தவறி கூட அப்படி படம் எடுக்கக்கூடாது.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த ஆர்.ஜே.பாலாஜி

    RJ Balaji: தப்பித்தவறி கூட அப்படி படம் எடுக்கக்கூடாது.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த ஆர்.ஜே.பாலாஜி


    <p>ரொம்ப வருடமாக பெண் சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். இதனால் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் என்னை திட்டுகிறார்கள் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி காமெடி நடிகர், கிரிக்கெட் வர்ணனையாளர், இயக்குநர், ஹீரோ என தனது திறமையால் அடுத்தடுத்த படிநிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டு வெளியான ரன் பேபி ரன் படத்துக்குப் பின் அவர் நடித்துள்ள &ldquo;சிங்கப்பூர் சலூன்&rdquo; படம் நாளை தியேட்டரில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ப்ரோமோஷன் பணிகளில் ஆர்.ஜே.பாலாஜி ஈடுபட்டு வருகிறார்.இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நடிகர் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.&nbsp;</p>
    <p>அந்த நேர்காணலில் ஆர்.ஜே.பாலாஜியிடம் பெண் சுதந்திரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், &ldquo;நான் பெண்ணியம் பற்றி பேசினாலே ஆண்கள் மட்டுமல்லாது பெண்களே என்னை திட்டுகிறார்கள். நான் ரொம்ப வருடமாக பெண் சுதந்திரம் பற்றி பேசியுள்ளேன். என்னை அம்மா, பாட்டி வளர்த்தார்கள். கூட பிறந்தவர்கள் 3 தங்கச்சிகள். என் வீட்டில் வீட்டை பெருக்குவது, பாத்திரம் கழுவுவது, சமையல் என பெண்கள் செய்வது என குறிப்பிட்டப்பட்ட விஷயங்களை என் தாத்தா செய்வார். அதன்பிறகு என்னை செய்ய வைத்தார்கள். அதனால் சின்ன வயதில் இதெல்லாம் &nbsp;ஆண்கள்,பெண்கள் செய்ய வேண்டிய வேலை என பிரித்து பார்த்ததில்லை.</p>
    <p>இவ்வளவு ஏன்&nbsp; நான் அனிமல் படத்தை தியேட்டரில் பார்க்கவே இல்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள், அது ஒரு கலை என சொல்றாங்க. என்னை பொறுத்தவரை ஒரு மூடிய திரையரங்கினுள் கூடியிருக்கும் ஆயிரம் பேர், &lsquo;ஒரு பொண்ணை ஒரு பையன் எட்டி உதைப்பதையும், அசிங்கமாக திட்டுவதையும் இல்லையென்றால் வன்கொடுமை செய்வதையோ கைதட்டி பார்க்கிறார்கள்&rsquo; என்பதை காண்பதே தவறாக தோன்றியதால் நான் அப்படத்தை பார்க்கவே இல்லை.</p>
    <p>மேலும் நானும் படம் எடுக்கிறேன் என்கிறபோது இதுக்கெல்லாம் கைதட்டுகிறார்களா என நினைத்து தப்பித்தவறி கூட இப்படி ஒரு சீன் வைக்கலாம் என யோசித்து விடக்கூடாது. எட்டி உதைப்பது, கால் ஷூவை நாவால் துடைக்க சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றதாக சொன்னார்கள். எனக்கு என்ன வருத்தம் என்றால், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான விஷயங்களை பற்றி பெற்றோர்களிடம் பேச சரியான மீடியம் இல்லை&rdquo; என தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>
    <h2><strong>அனிமல் படம்&nbsp;</strong></h2>
    <p>சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் அனிமல். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், த்ரிப்தி டிம்ரி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் அனிமல் படம் இடம் பிடித்துள்ளது. ஆனால் இப்படம் ஆணாதிக்கம் மற்றும் பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் கதையை கொண்டிருந்ததாக பிரபலங்கள் பலரும் சாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க: <a title="Actress Sukanya: விரைவில் அரசியலில் களமிறங்குகிறாரா நடிகை சுகன்யா? – அவரே சொன்ன பதில்!" href="https://tamil.abplive.com/entertainment/actress-sukanya-shared-her-thoughts-about-political-entry-163494#" target="_blank" rel="dofollow noopener">Actress Sukanya: விரைவில் அரசியலில் களமிறங்குகிறாரா நடிகை சுகன்யா? – அவரே சொன்ன பதில்!</a></strong></p>

    Source link

  • IND Vs ENG Indian Cricket Team Won 75 Percent Of Home Test In Last 10 Years Most By Any Team Latest Tamil News

    IND Vs ENG Indian Cricket Team Won 75 Percent Of Home Test In Last 10 Years Most By Any Team Latest Tamil News

    ஜனவரி 25 (நாளை) முதல் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியை டெஸ்டில் தோற்கடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. கடந்த பத்து ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 14 டெஸ்ட் தொடர்களில் விளையாடி அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வென்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை இந்திய அணி பெற்றுள்ளது. 
    ஆனால், யாரும் எதிர்பார்க்காத வேளையில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவை இங்கிலாந்து அணி தோற்கடித்த இக்கட்டான நிலையும் உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவை இங்கிலாந்து தோற்கடித்து தொடரை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் எந்த அணியும் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. தொடர்ந்து சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 
    இந்திய அணி ஆதிக்கம்:
    கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 75 சதவீத வெற்றியை பெற்று இந்திய அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், சொந்த மண்ணில் விளையாடி 70 சதவீத டெஸ்டில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து 69.23 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 64.44 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 56.06 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை 50 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும், வங்கதேசம் 35 சதவீதத்துடன் ஏழாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 35 சதவீதத்துடன் எட்டாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 30.77 சதவீதத்துடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி:
    கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா அணி கடைசி டெஸ்ட் தொடரை வென்றது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் தோற்கடித்தது. இப்போது சொந்த மண்ணில் இந்திய அணியின் அடுத்த பணி இங்கிலாந்து அணியை சந்தித்து வெற்றிபெற துடிக்கும். 
    இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2024: முழு அட்டவணை:

    இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட்: வியாழன், 25 ஜனவரி 2024, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம் (காலை 9:30 IST).
    இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட்: வெள்ளிக்கிழமை, 02 பிப்ரவரி 2024, டாக்டர் YS ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம் (காலை 9:30 IST).
    இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: வியாழன், 15 பிப்ரவரி 2024, சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், ராஜ்கோட் (காலை 9:30 IST).
    இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: வெள்ளிக்கிழமை, 23 பிப்ரவரி 2024, JSCA இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ், ராஞ்சி (காலை 9:30 IST).
    இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட்: வியாழன், 7 மார்ச் 2024 இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், தர்மசாலா (காலை 9:30 IST).

    Source link

  • BJP Slams Congress Over Rahul Gandhi Remarks On Ram Lehar Ayodhya Ram Mandir

    BJP Slams Congress Over Rahul Gandhi Remarks On Ram Lehar Ayodhya Ram Mandir

    Rahul Gandhi: இந்தியாவில் ”ராமர் அலை” என எதுவும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
    ”ராமர் அலை இல்லை”
    ராகுல் காந்தியின் நியாய யாத்திரை அசாமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவால் ஏற்பட்டுள்ள அலையை எப்படி எதிர்கொள்வது என திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது, ”இங்கு அலை இருக்கிறது என்பது போன்று எதுவுமில்லை.  பாஜகவின் அரசியல் திட்டமும், நரேந்திர மோடியின் நிகழ்ச்சியும் அங்கு அரங்கேறியுள்ளது. அது நன்றாக இருக்கிறது. ஆனால் நான் ஏற்கனவே சொன்னதை போன்று,  நாட்டைப் பலப்படுத்துவது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நீதி வழங்குதல், அனைவருக்குமான வாய்ப்பு, பெண்களுக்கான நீதி, விவசாயிகளுக்கு நீதி, மற்றும் தொழிலாளர்களுக்கு நீதி மட்டுமே என்பதில் எங்களுக்கு ஒரு தெளிவு உள்ளது. பாத யாத்திரையின் போது திட்டமிடப்பட்டு இருந்த பல நிகழ்ச்சிகளுக்கு தட விதிப்பதன் மூலம் அசாம் முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மறைமுகமாக எங்களுக்கு உதவுகிறார்கள். அவர்கள் என்ன தடைகளை உருவாக்கினாலும், எங்களது பயணம் மக்களைச் சென்றடைகிறது” என ராகுல் காந்தி தெரிவித்தார்.
    பாஜக கண்டனம்: 
    அயோத்தி கோயில் குடமுழுக்கு கோலாகலமாக கொண்டாடபட்ட நிலையில், ராமர் அலை என எதுவும் இல்லை என்ற தொனியிலான பேச்சை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, ​​“ஸ்ரீராமர் இல்லை என்று மறுத்து வரும் அரசியல் கட்சி, தற்போது ஸ்ரீராமர் அலை இல்லை, கற்பனை என்று கூறியதில் ஆச்சரியமில்லை.  ராமர் கோயில் குடமுழுக்கு விழா மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் இந்தியர்களின் உணர்வுகளையும் மடைமாற்ற முயற்சிக்கின்றனர். ராமர் அலை இல்லை, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்ட சூழல் இல்லை, ராம பக்தர்களின் உணர்வுகள் இல்லை என்று பேசுகின்றனர். ராமர் கோவில் வழக்கை பல ஆண்டுகளாக நடத்தி, அலைந்து திரிந்து பல ஆண்டுகளாக கூடாரத்தில் வைக்கப்பட்டு இருந்த குழந்தை ராமர் தற்போது, பிரமாண்டமாக கோயிலுக்குள் நிறுவப்பட்டுள்ளார். அதேநேரத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்களுடன் கூட்டணியை வைத்திருக்கும், கட்சியின் தலைவர் இன்று தெருக்களில் பயணம் திரிந்து வருகிறார்” என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதனிடையே, நேற்றைய நடைபயணத்தின் போது தனியார் கல்லூரியில் திட்டமிடப்பட்டு இருந்த, உரை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்தது. இதனால், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை குறிப்பிட்டு, மக்களை போராட தூண்டியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது, அசாம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
     
      
     
     
     
     

    Source link

  • Actress Sukanya Shared Her Thoughts About Political Entry | Actress Sukanya: விரைவில் அரசியலில் களமிறங்குகிறாரா நடிகை சுகன்யா?

    Actress Sukanya Shared Her Thoughts About Political Entry | Actress Sukanya: விரைவில் அரசியலில் களமிறங்குகிறாரா நடிகை சுகன்யா?

    எனக்கு கலை மீது தான் முழு ஈடுபாடு உள்ளது என்று நடிகை சுகன்யா நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார். 
    1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகையாக அறிமுகமானவர் சுகன்யா. இவர் அன்றைய காலக்கட்டத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்தார். சின்னத்திரைக்குள் நுழைந்த சுகன்யா ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளதோடு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளார். 
    இதனிடையே ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் திறக்கப்பட்டது.  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த விழாவை முன்னிட்டு இந்தியா  முழுவதும் சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதில் தனது பங்களிப்பை அளிக்கும் பொருட்டு நடிகை சுகன்யா, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருந்தார். ஆடியோ வடிவில் முதலில் வெளியான இப்பாடல் விரைவில் வீடியோ வடிவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் வரிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  எளிதில் புரியும் வகையில் ஸ்ரீராமர் மகிமை, ராமாயண சுருக்கம், அயோத்தி கோயிலின் அம்சம் ஆகியவற்றை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. 

    கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றதைப் போல இந்த பாடலும் வரவேற்பை பெறும் என சுகன்யா நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனிடையே சுகன்யாவின் இந்த பாடலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், அவர் அரசியலுக்கு வரவுள்ளதாக பலரும் கணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள சுகன்யா, தனது அரசியல் எண்ணம் பற்றி பேசியுள்ளார். 
    அதன்படி, “அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் இதுவரை இருந்தது இல்லை. இனிமேலும் இருக்குமா என தெரியவில்லை. எனக்கு கலை மீது தான் முழு ஈடுபாடு உள்ளது. இதை கற்றுக் கொள்ளவே இந்த ஒரு ஆயுள் போதாது என நினைக்கிறேன். வாழ்க்கையே ஒரு பாடம் என்பதை போல நிறைய விஷயம் இருக்கிறது. எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை” என தெரிவித்துள்ளார். 

    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு! இசையமைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்த நடிகை சுகன்யா..!

    Source link

  • Demolition Of Ajanta Flyover In Chennai For Phase 2 Metro Rail Project Has Started Chennai Metro Rail

    Demolition Of Ajanta Flyover In Chennai For Phase 2 Metro Rail Project Has Started Chennai Metro Rail

    Metro Train : மெட்ரோ பணிக்காக சென்னையில் 2 முக்கிய மேம்பாலங்களான அடையாறு, அஜந்தா பாலங்கள் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ராயப்பேட்டை அஜந்தா பாலத்தை இடிக்கக் கூடிய பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் இடிப்பு பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முதல் ராயப்பேட்டையை இணைக்க கூடிய அஜந்தா மேம்பாலம் இடிக்கப்படுவதால் அவ்வை சண்முகம் சாலை வழியாக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன.
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
    இதில், ஊதா வழித்தடமான மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கி.மீ. வழித்தடத்தில் 19 உயர்நிலை பாதையும் 28 சுரங்கப் பாதையும் அமைய உள்ளது. அதன்படி  மாதவரம் பால் பண்ணையில் இருந்து  தரமணி  வரை சுரங்கப்பாதையாகவும் நேரு நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து  சிறுசேரி சிப்காட் ரயில் நிலையம் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது. 
    இந்த வழித்தடத்தில் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் மற்றும் அடையாறு திரு.வி.க பாலத்தை அடுத்து அடையாறு மேம்பாலம் அமைந்துள்ள இடத்திலே  மெட்ரோ ரயில் நிலையங்கள் வருவதால் இந்த இரண்டு பாலங்களும் மெட்ரோ  பணிகளுக்காக இடிக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
    முதற்கட்டமாக ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் இடிப்பதற்கான வேலை ஞாயிற்றுக்கிழமை பூஜையுடன் தொடங்கியது. இன்று முதற்கட்ட பணியாக மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியதால் அப்பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அஜந்தா மேம்பால இடிப்ப  பணிகள் நிறைவு பெற ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் யாரும் உள்ளே வராத வகையில் பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
    மயிலாப்பூர் மற்றும் ராயப்பேட்டையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அஜந்தா பாலம் இடிக்கப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்துகள் அவ்வை சண்முகம் சாலை வழியாகவும் வாகனங்கள் சுற்றுவட்டார சாலைகள் வழியாக செல்ல காவல்துறையினரால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    Source link

  • 7 AM Headlines: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் இன்று திறப்பு.. போட்டியில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்.. இன்னும் பல!

    7 AM Headlines: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் இன்று திறப்பு.. போட்டியில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்.. இன்னும் பல!


    <h2>தமிழ்நாடு:</h2>
    <ul>
    <li>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடந்தது; புதிய தொழில் முதலீடு குறித்து முக்கிய முடிவு</li>
    <li>நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் முக்கிய காரணம்; இந்திய சுதந்திரத்திற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு</li>
    <li>ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு</li>
    <li>மதுரை: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</li>
    <li>வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டி.என்.ஏ ஒத்துப்போகவில்லை – சிபிசிஐடி தகவல்</li>
    <li>அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் பேச்சுகளும் வருவதால்தான் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப முடியாது – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்</li>
    <li>மக்களவை உறுப்பினரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய &rsquo;பாதை மாறா பயணம்&rsquo; புத்தக வெளியீட்டு விழா நேற்று அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது.</li>
    <li>நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும் என்று <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.</li>
    <li>குடியரசு தினம், தைப்பூசம் என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.</li>
    <li>சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.17.75 கோடியில் ஏசி ஓய்வு அறை: தெற்கு ரயில்வே அறிமுகம்&nbsp;</li>
    <li>மெரினா கலங்கரை விளக்கம் அருகே இந்தியாவில் முதன்முறையாக கடற்கரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையம்</li>
    </ul>
    <h2><strong>இந்தியா:&nbsp;</strong></h2>
    <ul>
    <li>மறைந்த பிகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</li>
    <li>மக்களவை தேர்தலுக்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.</li>
    <li>நேற்று முன்தினம் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுவன் வடிவிலான ராமர் சிலைக்கு பாலக ராமர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.&nbsp;</li>
    <li>நேற்று முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அயோத்தி ராமர் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.</li>
    <li>சீன ஆய்வு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளதாகவும், அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</li>
    <li>இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</li>
    <li>சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் வழங்க வேண்டும்: கர்நாடகா அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு</li>
    </ul>
    <h2><strong>உலகம்:</strong></h2>
    <ul>
    <li>சீன நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 31 பேர் மீட்பு</li>
    <li>பிரேசில்: கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.</li>
    <li>மின்சாரம் துண்டிப்பு: ஜப்பானில் புல்லட் ரயில் சேவைகள் திடீர் ரத்து.</li>
    <li>பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்: பாதுகாப்புக்காக ராணுவத்தை நிறுத்தும் பாகிஸ்தான்.</li>
    <li>அரசியலில் இருந்து விலகினார் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன்.</li>
    <li>அமெரிக்காவில் சட்டவிரோதமான நாட்டிற்குள் நுழையும் மில்லியன் கணக்கானோர் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு</li>
    </ul>
    <h2><strong>விளையாட்டு:</strong></h2>
    <ul>
    <li>ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது பிசிசிஐ.</li>
    <li>ப்ரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்.</li>
    <li>ஆசிய கோப்பை கால்பந்து: கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்த இந்தியா.</li>
    <li>இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் – ராகுல் டிராவிட்</li>
    </ul>

    Source link

  • Suspension Of ASP Balveer Singh Revoked – What’s Going On With The Prisoner’s Tooth Extraction Case? | Balveersingh: ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து

    Suspension Of ASP Balveer Singh Revoked – What’s Going On With The Prisoner’s Tooth Extraction Case? | Balveersingh: ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து

    Balveersingh: விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங்கின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
    பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து:
    அம்பாசமுத்திரத்தில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்விர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அதோடு, வழக்கு விசாரணையின் முடிவில் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கமளித்துள்ளது. வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது, அவருக்கு எதிராக புகாரளித்த மற்றும் சாட்சியம் அளித்த நபர்களும் அச்சத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
    பணியிடை நீக்கம் ரத்து ஏன்?
    பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, “பல்வீர் சிங் தன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். இதனிடயே, அவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  2020-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான பல்வீர் சிங் உள்பட 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தமிழகத்தில் ஏ.டி.எஸ்பி-க்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு விரைவில் எஸ்.பி பதவி உயர்வு அளிக்கப்படவுள்ளது. ஆனால் அந்தப் பதவி உயர்வு பட்டியலில் பல்வீர்சிங் உள்பட சிலரின் பெயர்கள் இடம்பெறவில்லை. பணியிடை நீக்கம் உத்தரவு மட்டுமே ரத்து செய்யப்பட்டிருப்பதால், பல்வீர்சிங்குக்கு காவல்துறையில் பணி ஒதுக்கீடு வழங்கப்படலாம்” என காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்:
    ஏஎஸ்பி பல்வீர்சிங் விசாரணைக்காக வந்தவர்களை கடுமையாக தாக்கியதோடு, பற்களைப் பிடுங்கியதாகவும்  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து 17 வயது சிறுவனின் பற்கள் பிடுங்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் சிலர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்டதாக தொடரபட்ட வழக்கில், கிரைம் பிரான்ச் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  இதனிடையே,  தமிழக அரசால் அமைக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ் தலைமையிலான உயர்மட்ட விசாரணை குழு கடந்த மாதம் விசாரணை மேற்கொண்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தான் பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
     

    Source link

  • Karthigai Deepam: கார்த்திக் வீசிய வலையில் சிக்கப்போகும் தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

    Karthigai Deepam: கார்த்திக் வீசிய வலையில் சிக்கப்போகும் தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்


    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.</p>
    <p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இளையராஜா கோகிலாவை பணத்தாசை காண்பித்து தூக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.</p>
    <p>அதாவது பல்லவி வந்து பாடியே ஆகணும் இல்லனா கோகிலா விடமாட்டோம் என்று சொல்லி மிரட்ட ரூபஸ்ரீ அதிர்ச்சி அடைகிறாள். உடனே தீபாவுக்கு போன் போட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் பாடி கொடு என்று கெஞ்ச தீபா இனிமே அவர ஏமாத்திட்டு வந்து நான் பாட மாட்டேன் என மறுத்து விடுகிறாள். இது கார்த்திக்கு செய்ற பிராயசித்தமா இருக்கட்டும் இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடு என ரூபஸ்ரீ கெஞ்சி கூத்தாட தீபா பாடுவதற்கு ஒப்புக்கொள்கிறார்.</p>
    <p>மேலும் பாட்டு பாடுவதற்காக கண் பார்வை அற்ற குழந்தைகளின் ஆசிரமத்திற்கு வர சொல்ல தீபாவும் அங்கு செல்ல ரூபஸ்ரீ பல்லவியாக அறிமுகம் செய்து வைக்கிறாள். குழந்தைகள் எல்லோரும் தீபாவின் கையைப் பிடித்து உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு உங்க பாட்டு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என பேசுகின்றனர். வீட்டுக்கு வரும் தீபா மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாட போகும் விஷயத்தை சொல்ல மீனாட்சி வேண்டாம் நீ போகாத என்று சொல்ல தீபா இந்த ஒரு முறை பாடி கொடுக்கிறேன் என சொல்கிறாள்.</p>
    <p>அடுத்ததாக வீட்டுக்கு கெஸ்ட் வர அபிராமி அவர்களை அழைத்து உட்கார வைத்து உபசரிக்கிறார். கல்யாணத்துக்காக பத்திரிக்கை வைக்க வந்திருந்த அவர்களிடம் உங்க பொண்ணோட கல்யாண புடவையை நான் தான் எடுத்து கொடுப்பேன் என சொல்கிறார். அதன் பிறகு தன்னுடைய மருமகள்கள் என ஐஸ்வர்யா மற்றும் மீனாட்சி அறிமுகம் செய்யும் அபிராமி தீபாவை அறிமுகம் செய்யும்போது கார்த்தியோட பொண்டாட்டி என சொல்கிறாள்.</p>
    <p>இதனால் தீபா வருத்தப்பட்டு நிற்க கார்த்திக் அம்மா சொன்னது நெனச்சு கவலைப்படுறீங்களா என்று ஆறுதல் கூறுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது? குறித்து அறிய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.&nbsp;</p>

    Source link

  • School And College Students Shocked – Tamil Nadu Government Orders To Increase Hostel Food Charges | Govt Hostel Fees: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி

    School And College Students Shocked – Tamil Nadu Government Orders To Increase Hostel Food Charges | Govt Hostel Fees: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி

    Govt Hostel Fees: அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளில் உணவுக் கட்டணத்தை, 400 ரூபாய் வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
    விடுதிகளில் உணவுக் கட்டணம் அதிகரிப்பு:
    தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிற்படுத்தப் பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர். சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினருக்கான விடுதிகள் செயல்படுகின்றன. அங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான மாத கட்டணத்தை உயர்த்துவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் இதுவரை வசூலித்து வந்த தொகையிலிருந்து 400 ரூபாய் கூடுதலாக இனி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ்நாடு அரசு உத்தரவு:
    விடுதிக்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப்பட்டோர்,  மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ, மாணவியர்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
    மேலும் உயர்த்தப்பட்டு உள்ள விடுதி உணவுக்கட்டணம் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. விடுதி உணவுக்கட்டணம் உயர்த்தி வழங்குவதால் கடந்த ஆண்டு அக். முதல் இந்தாண்டு மார்ச் வரையில் ஏற்படும் கூடுதல் தொகையான ரூ.9 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 200 ஐ வழங்கவும் அரசு ஆணையிட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உணவுக் கட்டண உயர்வு நடவடிக்கை குறிப்பிட்ட விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது ஒரு கூடுதல் சுமையாகவும் மாறியுள்ளது.

    Source link

  • Opening Ceremony Of The World’s First Giant Jallikattu Ground In Madurai Keezhakarai Check Facilities | Madurai Jallikattu Ground: மதுரையில் இன்று திறக்கப்படுகிறது உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம்

    Opening Ceremony Of The World’s First Giant Jallikattu Ground In Madurai Keezhakarai Check Facilities | Madurai Jallikattu Ground: மதுரையில் இன்று திறக்கப்படுகிறது உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம்

    Madurai Jallikattu Ground: மதுரை கீழக்கரையில் அமைந்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கில், வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    மதுரை ஜல்லிக்கட்டு அரங்கு:
    ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்கிறார். இதையொட்டி, அரங்கில் உள்ள வசதிகள் தொடர்பாக  தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  தமிழ்ச்சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஏறுதழுவுதல் விழா நடைபெறும்.
    ஜல்லிக்கட்டு வரலாறு:
    தமிழர்களின் பெருமைக்குரிய தொழிலாக பழங்காலத்திலிருந்து திகழ்ந்து வருவது உழவுத் தொழில். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றார் வள்ளுவர். அத்தகைய உழவுத் தொழிலுக்கு முதன்முதலில் தேவைப்பட்டது “காளை”. அந்நாளில் காடுகளில் திரிந்த காளைகளைப் பிடித்து அடக்கிப் பழக்கி உழவுத் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர் தமிழ் மக்கள். அதன் தொடர்ச்சியாகத்தான். மாடு பிடிக்கும் விழா,”ஏறு தழுவுதல்”,”எருது விடுதல்” “மஞ்சு விரட்டு”, ஜல்லிக்கட்டு” எனப் பல பெயர்களில் தமிழ்ச் சமுதாயத்தில் வழிவழியாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
    திமுக கொடுத்த வாக்குறுதி:
    இந்த மாடுபிடி விழாவை. ஒன்றிய அரசு விலங்குகள் வதைச் சட்டத்தின் துணைகொண்டு தடைவிதிக்க முனைந்தபோது, தமிழனின் பண்பாட்டு உரிமை எனத் தன்னெழுச்சியாகச் சீறி எழுந்த தமிழ்நாட்டு இளைஞர்களால், இந்திய உச்சநீதிமன்றமே தடையை விலக்கி அனுமதி வழங்கிய வரவாறு இந்த விழாவின் வெற்றி முத்திரையாகப் புகழ் படைத்தது.
    இன்று எட்டுத்திக்கும் போற்றும் இன்பத் தமிழ்த் திருநாட்டின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்று எதிர்க் கட்சியாக இருந்தபோதே மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்த இந்த ஏறுதழுவுதல் விழாவை முன்னின்று நடத்தித் தந்தார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கு அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அந்த அறிவிப்பைச் செயற்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
    அரங்கில் உள்ள வசதிகள் என்ன?
    அதனைத்தொடர்ந்து ரூ.62 கோடியே 77 இலட்சந்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 18.3.2023 அன்று கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 6,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம்,  ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம். ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களை புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருத்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி – தைத் திங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திவரும் விவசாயிகளுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. தமிழர் நலம் காப்பதைத் தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள முதலமைச்சரே,  தமிழர்தம் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தினை 24-1-2024 அன்று புதன் கிழமை காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு வருகைதந்து திறந்து வைக்கிறார்கள்.
    விளையாட்டு களஞ்சியம்:
    இதுவரை மதுரையின் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் குறுகலான நெரிசல் மிகுந்த தெருக்களில் ஏறுதழுவுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அது குறித்த மதுரை மாவட்ட மக்களின் இதயங்களில் இருந்துவந்த கவலைகளை அகற்றும் வகையில் எழுந்துள்ளது இந்த அரங்கம்.
    இந்தப் புதிய ஏறுதழுவுதல் அரங்கம் தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டுத் துறையின் வழக்கமான போட்டிகளை நடத்துவதற்கும் பயன்படும்: இந்த மிகப்பெரிய அரங்கம் ஜல்லிக்கட்டு வீரர்களையும் பார்வையாளர்களையும் மிகவும் ஈர்க்கும் வகையில் அலங்காநல்லூர் அருகில் உள்ள மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. புல்வெளிகளும் தோட்டங்களும் கொண்டுள்ள இந்த அரங்கம் ஆண்டுமுழுவதும் சுற்றுலாவிற்குப் பயன்படுவதுடன், ஜல்லிகட்டு நடைபெறாத காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவதற்கும் உதவும். தமிழ்ச் சமுதாயத்தின் பழைமையான பண்பாட்டு உரிமையை மீட்டுத் தந்துள்ள, வரவாற்று நிகழ்வை உலகத்திற்கு உரைத்திடும் அடையாளச் சின்னமாகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறக்கப்படுகிறது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Source link

  • Suhasini Manirathnam : என் மகன் மற்ற குழந்தைகளைப்போல் இல்லை.. மனம் திறந்த சுஹாசினி! 

    Suhasini Manirathnam : என் மகன் மற்ற குழந்தைகளைப்போல் இல்லை.. மனம் திறந்த சுஹாசினி! 


    <p>தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற மாநில திரைப்பட அகாடமி ஏற்பாடு செய்த சர்வதேச திரைப்பட விழாவை துவங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய சுஹாசினி தனது மகன் நந்தன் குறித்தும் அவரின் அரசியல் ஈடுபாடு குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/d2a4f177ba22eb78b70dd890649eced61706020185695224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>&nbsp;<br />ஹேப்பினஸ் பிலிம் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்ட சுஹாசினி தன்னுடைய மகன் எப்படி சி.பி.எம் கட்சியின் உறுப்பினராக மாறினார் என்பது பற்றி பேசி இருந்தார். "நந்தன் மற்ற குழந்தைகளைப்போல இல்லை. பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும், இந்திய நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதை பார்ப்பான். நான் எப்படிப்பட்ட ஒரு குழந்தையை பெற்று எடுத்து இருக்கிறேன் என ஆச்சரியத்துடன் பார்ப்பேன்.&nbsp;</p>
    <p>தன்னுடைய 12-வது வயதிலேயே ‘தாஸ் கேப்பிடல்’ புத்தகத்தை வாசிக்க துவங்கிவிட்டான். ஒரு நாள் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு நேராக சி.பி.எம் அலுவலகத்திற்குச் அவனாகவே சென்றுவிட்டான். தன்னிடம் கார் இருப்பது கட்சிக்காரர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக காரை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றுள்ளான்.&nbsp;</p>
    <p>முதலில் கட்சிக்காரர்கள் அவனிடம் நீ சாப்பிட்டியா என்று தான் கேட்டுள்ளனர். அதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் தனிச்சிறப்பு. நீ யார் எங்கிருந்து வருகிறாய் என்று கூட கேட்கவில்லை. சாப்பிட்ட பிறகு கட்சியின் செயலாளரை சந்தித்து பேசியுள்ளான். தந்தையை பற்றி விசாரிக்கையில் மணிரத்தனத்தின் இயற்பெயரான கோபால ரத்னம் சுப்ரமணியன் என்று கூறியுள்ளான். என் பெயரை கூறிய பிறகு, மணிரத்னம் – சுஹாசினியின் மகன் என்பதை அடையாளம் கண்டுகொண்டு பின்னர் சி.பி.எம் கட்சியின் உறுப்பினரானான் என சுஹாசினி தனது நெகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/a5edc374be79c241e2715865e26ee0081706020170725224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>சினிமா குறித்து சுஹாசினி பேசுகையில் "படம் எடுப்பது எளிதானது. ஆனால் அதை ஒரு நல்ல படமாக எடுப்பது என்பது சவாலானது. சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக சினிமா செயல்படுகிறது. இதுபோன்ற திரைப்பட விழாக்கள் மூலம் கலைஞர்கள், விமர்சகர்களை கொண்டாடும் ஒரு தளமாக விளங்குகின்றன.&nbsp;</p>
    <p>கடைசியாக தெலுங்கில் வெளியான ‘மிஸ்டர் ப்ரெக்னென்ட்’ படத்தில் சுஹாசினி நடித்திருந்தார். மேலும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘புத்தம் புது காலை’ படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் மலையாளத்தில் ‘பூக்காலம்’ படத்திலும் தோன்றி இந்திருந்தார்.&nbsp;</p>
    <p>சுஹாசினி – மணிரத்னம் இருவரும் திரைத்துறையில் மிகப்பெரிய படைப்பாளிகளாக இருந்தாலும் அவர்களின் வாரிசு அரசியலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பது குறித்து ரசிகர்கள் பேசிவருகின்றனர்</p>

    Source link

  • Petrol And Diesel Price Chennai On January 24th 2024 Know Full Details

    Petrol And Diesel Price Chennai On January 24th 2024 Know Full Details

    Petrol Diesel Price Today, January 24: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 24ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 613வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

    Source link

  • ICC Test Team Of The Year: No Place For Rohit Sharma, Virat Kohli; Only 2 Indians Feature Australia-dominated

    ICC Test Team Of The Year: No Place For Rohit Sharma, Virat Kohli; Only 2 Indians Feature Australia-dominated

    ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட் அணி:
    ஐ.சி.சி. வெளியிட்டுள்ள கனவு டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தொடக்க வீரராகவும், இலங்கை அணியைச் சேர்ந்த திமுத் கருணரத்னே இரண்டாவது வீரராகவும் இடம் பிடித்துள்ளனர்.  அதேபோல், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன், நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் மற்றும் ஐந்தாவது இடத்தில் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
    இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆறாவது இடத்திலும், விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி ஆகியோரும் எட்டாவது இடத்தில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை டெஸ்ட் அணியின் கேப்டனாக ஐசிசி தேர்வு செய்திருக்கிறது. அதேபோல், இந்த அணியில் அஸ்வின், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
    ஆனால், இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 55.70 சராசரியில் 557 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதேநேரம்,  முதல் இடத்தில் இருக்கும் உஸ்மான் கவாஜா 1201 ரன்கள் குவித்திருக்கிறார். 
    விராட் கோலிக்கு இடம் இல்லை:
    அதேபோல், திமுத் கருணரத்னேவும் கடந்த 2023 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர், 607 ரன்கள் எடுத்தன் மூலம் தான் இந்த பட்டியலில் இரண்டாவது வீரராக இடம் பிடித்துள்ளார். அதேபோல், அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் கேன் வில்லியம்சன் ஜோ ரூட் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோருடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த சராசரியில் குறைவான ரன்களே விராட் கோலி எடுத்திருப்பதால் தான் ஐசிசியின் இந்த கனவு டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
    ஆனால், ஐசிசி வெளியிட்டிருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கான கனவு அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைத்திருக்கிறது. அதன்படி,  2023 ஆம் ஆண்டில் 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 72.47 என்ற சராசரியுடன்  99.13 ஸ்ட்ரைக் ரேட் எடுத்து ஆறு சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்கள் என மொத்தம் 1,377 விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: ICC ODI Team Of The Year: “ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லிடா” ஐசிசியின் கனவு அணியின் கேப்டன் யார் தெரியுமா?
    மேலும் படிக்க: ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிரான கோலி இல்லாத இந்திய அணி.. மாற்று வீரராக புஜாரா, ரஹானே திரும்புவது கடினம்!
     

    Source link

  • Rohit Good Against Short Ball But That Doesn’t Mean I Won’t Bowl A Bouncer: Mark Wood Before IND Vs ENG Tests

    Rohit Good Against Short Ball But That Doesn’t Mean I Won’t Bowl A Bouncer: Mark Wood Before IND Vs ENG Tests

    இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
    இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    துல்லியமாக அதை செய்வேன்:
    அந்தவகையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சை அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  முன்னதாக ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை அசால்டாக ஃபுல் ஷாட் சிக்ஸராக்குவது ரோகித் சர்மாவின் பலன். கடந்த 2023 உலகக் கோப்பை போட்டி, சென்னை மற்றும் நாக்பூரில் விளையாடிய போட்டிகளில் இதுபோன்ற உத்திகளை பயன்படுத்தி இருந்தார் ரோகித் சர்மா.
    இந்நிலையில் தான், ஷார்ட் பிட்ச் பந்துகளை துல்லியமாக ரோகித் சர்மாவை நோக்கி வீசுவேன் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மைதானத்திற்கு சென்றதும் அங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பதை நான் பார்ப்பேன். பவுன்சர் பந்துகள் அரிதாக வீசப்படும் இந்தியாவில் அதை வீசுவதற்காக நான் இங்கே இருக்கிறேன். குறிப்பாக ரோகித் சர்மா ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் தரமானவர் என்பதை நான் அறிவேன். அதற்காக அவருக்கு எதிராக நான் பவுன்சர் பந்துகளை வீசக்கூடாது என்று அர்த்தமல்ல. எனவே சரியான நேரத்தில் துல்லியமாக அதை நான் வீசுவேன்” என்று கூறியுள்ளார். இச்சூழலில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் நீங்கள் எப்படி பந்து வீசினாலும் அதை ரோகித் சர்மா லாவகமாக சிக்ஸருக்கு பறக்க விடுவார் என்று கூறிவருகின்றனர்.
    மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிராக விக்கெட் கீப்பர் யார்? மனம் திறந்த ராகுல் டிராவிட்
    மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் படைக்க இருக்கும் சாதனை! விவரம் உள்ளே!
     

    Source link

  • Actor Ram Charan Dhanush Chiranjeevi Visited Ram Temple Photos Videos Goes Viral

    Actor Ram Charan Dhanush Chiranjeevi Visited Ram Temple Photos Videos Goes Viral

    உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், இன்று முதல் பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    அயோத்தியில் கோலிவுட் பிரபலங்கள்:
    அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோவிலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் என சுமார் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பல திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நடிகர்களில் நாசர், தனுஷ், எஸ்.வி. சேகர், லாரன்ஸ், நமீதா, சதீஷ், பிரசன்னா, தாமு, ஸ்ரீமன், ஸ்நேகா, பிரபு உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 
    ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் பிரபலங்களான இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர்கள் பாக்கியராஜ், கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ஆர்.கே. செல்வமணி, பி. வாசு ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 
    ராமர் கோயிலுக்குச் சென்ற தனுஷ்:
    அதேபோல் இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா, தேனிசைத் தென்றல் தேவா, ஸ்ரீகாந்த் தேவா , டிரம்ஸ் சிவமணி பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

    RamCharan , Dhanush & Boss 😍#RamCharan #Dhanush pic.twitter.com/NYUIqT48cE
    — …. (@ItzRCCult) January 23, 2024

    இதில் பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று ராமர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் நடிகர் தனுஷ், தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் அவரது தந்தை சிரஞ்சீவி ஆகியோர் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

    Man .. Myth .. Legend #Dhanush pic.twitter.com/mgqsvvSrmY
    — PrabhuG (@prabhuGuruDFan) January 22, 2024

    அதேபோல் நடிகர் தனுஷ் கோவிலுக்குச் செல்லும்போது பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு அதிகமாக இருந்ததால் அவர் கோவிலுக்குச் சென்று திரும்பும்வரை காவலர்கள் பாதுகாப்பிற்கு உடன் இருந்தனர். 
     
     

    Source link

  • The Reunion Of Actor Vishnu Vishal And Director Chella Ayyavu Next Movie Vishnu Vishal Studioz Production

    The Reunion Of Actor Vishnu Vishal And Director Chella Ayyavu Next Movie Vishnu Vishal Studioz Production

    Vishnu Vishal: நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    வெண்ணிலா கபடி குழு, குள்ள நடி கூட்டம் , நீர்ப்பறவை, ஜீவா, மாவீரன் கிட்டு , முண்டாசுபட்டி , ராட்சசன் உள்ளிட்ட  வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால் . 2022 ஆம் ஆண்டு  இவர் நடித்த ’கட்டா குஸ்தி’ படம்  பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது . இந்தப் படத்தை விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. 
    மீண்டும் இணையும் கட்டா குஸ்தி கூட்டணி
    2022ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப் படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், இந்த புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11வது தயாரிப்பாக (VVS11) உருவாகிறது. 
    ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர்  என மாறுபட்ட களங்களில், தரமான வெற்றிப்படங்களைத் தந்து வரும், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11வது படைப்பாக, இப்படம் உருவாகிறது. 
    விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    குடும்ப பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “கட்டா குஸ்தி” திரைப்படம், 2022 ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தின் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது.
    மேலும் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இந்தியாவில் கடந்த ஆண்டில் அதிகம்  பார்க்கப்பட்ட மூன்றாவது படமாகவும், தமிழ் மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய வெற்றியைத் தந்த, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும்.  இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி பரபரப்பாக  நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    மேலும் படிக்க
    Rajinikanth: அனைவரது பார்வையும் ஒரேமாதிரி இருக்கவேண்டிய அவசியம் இல்லை – அயோத்தி சென்று திரும்பிய சூப்பர் ஸ்டார் பேட்டி
    Ram Temple: ராமருக்கு மட்டும் கோவில் கட்டினால் போதுமா? பாபருக்கு மசூதி எங்கே? நாஞ்சில் விஜயன் வேதனை
     

    Source link

  • India Vs England Test Rohit Sharma Will Break Ganguly’s Record Of 156 More Runs In International Cricket

    India Vs England Test Rohit Sharma Will Break Ganguly’s Record Of 156 More Runs In International Cricket

    இந்தியா – இங்கிலாந்து:
    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
    இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியில் தற்போது இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா?
    இச்சூழலில், கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததில்லை என்ற சாதனையுடன் இருக்கிறது. ஆனால், இந்த முறை எப்படியும் இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணியினர் களம் காண உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து அணி அண்மையில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுவருவதால் இந்த முறை இந்தியாவை வீழ்த்திவிடாலம் என்று நினைக்கிறது.
    இதனிடையே, இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா இன்னும் 156 ரன்கள் எடுத்தால்  சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இருக்கும் கங்குலியின் சாதனையை முறியடித்து விடுவார். கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் 18, 575 ரன்கள் எடுத்துள்ள வேளையில், தற்போது ரோகித் சர்மா 18,420 ரன்களில் இருக்கிறார்.
    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா 156 ரன்கள் எடுத்துவிட்டால் கங்குலியை பின்னுக்கு தள்ளிவிடுவார். இந்த பட்டியலில் 34,357 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 26,733 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
     
    மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்திடம் பாஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட் பால் இருக்கு…! சுனில் கவாஸ்கர்!
     
    மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 3 சிக்ஸர்கள்.. ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?
     
     

    Source link

  • A Person Died Of Heart Attack Whil Performing Role Of Hanuman During Ramleela

    A Person Died Of Heart Attack Whil Performing Role Of Hanuman During Ramleela

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த கோயிலில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை திறந்து வைத்தார். 
    அயோத்தி ராமர் கோயில்:
    இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இன்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. 
    இதனிடையே அயோத்தி மட்டுமல்லாது நாடு முழுவதும் ராமர் கோயில்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், பஜனைகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது. மேலும் கோயில்களில் ராமர் கோயில் விழா நேரலையும் செய்யப்பட்டது. இப்படி மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராமாயணம் நடிக்கும்போது மாரடைப்பு:
    அங்குள்ள பிவானி நகரில் ஜவஹர் சௌக் பகுதியில் நேற்று முன்தினம் கம்ப ராமாயணம் நாடகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். அப்போது ராமருக்கு முடிசூட்டும் நிகழ்ச்சி காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நாடகத்தில் அனுமன் கேரக்டரில் ஹரிஷ் என்பவர் நடித்தார். 

    In Bhiwani District Of Haryana A Person Died Of Heart Attack Whil Performing Role Of Hanuman During Ramleela May Her Soul Rest In Peace pic.twitter.com/18KXcb5UVh
    — South African Lawyer (@CriminalJurist) January 22, 2024

    மாரடைப்பால் மரணம்:
    அப்போது ராமர் முடி சூட்டு விழா பாடல் ஒன்று ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலின் முடிவில் அனுமனாக நடித்த ஹரிஷ் ராமரின் பாதத்தில் அமர வேண்டும். அதன்படி வந்து அமர்ந்த அவர் திடீரென சரிந்து ராமராக நடித்தவரின் பாதத்தில் விழுந்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அனுமன் வேடத்தில் ராமரிடம் ஹரீஷ் ஆசீர்வாதம் வாங்குகிறார். இது நாடகத்தின் ஒரு பகுதி என நம்பி ஆர்வமுடன் கண்டு களித்தனர். சில நொடிகளுக்குப் பின் அந்த நாடக்குழுவில் உள்ள நபர் ஹரீஷை எழுப்ப முயன்றபோது அவர் அசையாமல் கிடந்துள்ளார். 
    உடனடியாக அங்கிருந்தவர்கள் ஹரீஷை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராம பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஹரீஷ், கடந்த 25 ஆண்டுகளாக அனுமன் வேடத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
     

    Source link

  • OTT Release : ஃபைட் கிளப் முதல் அனிமல் வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! இதோ லிஸ்ட்

    OTT Release : ஃபைட் கிளப் முதல் அனிமல் வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! இதோ லிஸ்ட்


    <p>விஜயகுமார் நடித்த ஃபைட் கிளப் முதல் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படம் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.</p>
    <h2><strong>ஃபைட் கிளப்</strong></h2>
    <p><strong><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/oQVhwMYRgFY?si=6QtnixNH9NeSw2Ks" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></strong></p>
    <p>உறியடி விஜயகுமார் நடித்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஃபைட் கிளப். அபாஸ்.ஏ.ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சங்கர் தாஸ், கார்த்திகேயன் சந்தானம், சரவண வேல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம்&nbsp; வரும் ஜனவரி 27 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது</p>
    <h2><strong>அனிமல்</strong></h2>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C0Rm8MHsfaq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C0Rm8MHsfaq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Animal The Film (@animalthefilm)</a></p>
    </div>
    </blockquote>
    <p><strong>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </strong></p>
    <p>ரன்பீர் கபூர் நடித்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானப் படம் அனிமல். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், த்ரிப்தி டிம்ரி உள்ளிட்ட்வர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். வரும் ஜனவரி 26 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இப்படம் வெளியாகிறது.</p>
    <h2><strong>ஏஜண்ட்</strong></h2>
    <p><strong><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/DsdT3D_zKF0?si=Uxvw9UrYzsFpyaH4" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></strong></p>
    <p>அகில் அக்கினேனி, மம்மூட்டி, தினோ மெளர்யா, சாக்&zwnj;ஷி வைத்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ஏஜண்ட். ஸ்பை த்ரில்லர் படமாக உருகாகியுள்ள இந்தப் படம்&nbsp; சோனி லைவ் தளத்தில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.</p>
    <h2>&nbsp;<strong>நேரு</strong></h2>
    <p><strong><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/abuLOH7xs8I?si=k2Lv4j0M_A6IHKK0" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></strong></p>
    <p>மோகன்லால் , பிரியாமணி நடித்து கடந்த ஆண்டு வெளியானப் படம் நேரு, திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்ற நேரு படம் வரும்&nbsp; இன்று ஹாட்ஸ்டாரில் வெளியானது.</p>
    <h2><strong>அக்வாமேன் – தி லாஸ்ட் கிங்டம் ( Aquaman – The lost Kingdom)</strong></h2>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/CxLZKz_LTXV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/CxLZKz_LTXV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aquaman Movie (@aquamanmovie)</a></p>
    </div>
    </blockquote>
    <p><strong>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </strong></p>
    <p>அக்வாமேன் படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம். ஜேசன் மமொவா, ஆம்பர் ஹர்ட் , பாட்ரிக் வில்சன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தி நடித்துள்ளார்கள். பல்வேறு போராட்டஙகளுக்கு இடையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வரும் இன்று புக் மை ஷோ ஸ்ட்ரீம் தளத்தில் வெளியாகிறது.</p>
    <h2><strong>பேட்லேண்ட் ஹண்டர்ஸ் (Badland Hunters )</strong></h2>
    <p><strong><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/hKbo-ZKdSqw?si=cdQt654jdC6iF5nJ" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></strong></p>
    <p>எதிர்காலத் தென்கொரியாவை மையமாவ வைத்து உருவாக்கப் பட்டிருக்கும் ஃபேண்டஸி படம் பேட்லேண்ட் ஹண்டர்ஸ் . வரும் ஜனவரி 26 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.</p>
    <h2><strong>சாம் பகாதூர்</strong></h2>
    <p>சாம் பகாதூரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ள படம் சாம் பகாதூர். விக்கி கெளஷல் இப்படத்தில் முக்கிய் கதாபாத்திரத்தில்&nbsp; நடித்துள்ளார். வரும் ஜனவரி 26 ஆம் தேதி ஜீ ஃபைவில் வெளியாகிறது.</p>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C03tRbKoBO_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C03tRbKoBO_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vicky Kaushal (@vickykaushal09)</a></p>
    </div>
    </blockquote>
    <p>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    &nbsp;</p>

    Source link

  • Elonmusk Says Elon Musk Calls For UNSC Changes India Not Having Permanent Seat Absurd

    Elonmusk Says Elon Musk Calls For UNSC Changes India Not Having Permanent Seat Absurd

    193 உறுப்பு நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஆறு உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. 
    ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்:
    சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளை மேம்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
    அல்பேனியா, பிரேசில், காபோன், கானா, இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதில், நிரந்தர பிரதிநிதியாக ஆக இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
    எலான் மஸ்க் கேள்வி?
    இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில்  இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,  அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், ””ஒரு கட்டத்தில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மறுசீராய்வு செய்யப்படும் தேவைகள் இருக்கும். பிரச்சனை என்னவென்றால், கூடுதல் அதிகாரம் பெற்றுள்ள நாடுகள் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.  

    At some point, there needs to be a revision of the UN bodies. Problem is that those with excess power don’t want to give it up. India not having a permanent seat on the Security Council, despite being the most populous country on Earth, is absurd.Africa collectively should…
    — Elon Musk (@elonmusk) January 21, 2024

    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்கப்படவில்லை.  இது மிகவும் ஆபத்தமானது. ஆப்பிரிக்காவுக்கும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
    முன்னதாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின்  பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும்  தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் குழுவில் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டிற்கும் இடம் இல்லாதததை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?  ஐ.நா.சபை இன்றைய சூழ்நிலையை பிரதிபலிக்க வேண்டுமே தவிற, 80 ஆண்டுகள் முன்பான சூழ்நிலையை இல்லை” என்றார்.   
    ஏன் இந்தியா நிரந்தர உறுப்பினராக முடியவில்லை?
    எந்தவொரு நாடும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக விரும்பினால், ஐந்து நாடுகளும் சேர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம். ஐந்தில் நான்கு நாடுகள் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதற்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதை சீனா விரும்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 8 முறை தேர்வு செய்யப்பட்டு 16 ஆண்டுகள் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
     

    Source link

  • Malaikottai Vaaliban: "அத்தனை பேர் இருந்தும் தனிமையாக உணர்ந்தேன்" மோகன்லால் பட நடிகர் உருக்கம்

    Malaikottai Vaaliban: "அத்தனை பேர் இருந்தும் தனிமையாக உணர்ந்தேன்" மோகன்லால் பட நடிகர் உருக்கம்


    <p>படப்பிடிப்பின் போது தான் மிகவும் தனிமையாக உணர்ந்ததாகவும், தன்னுடைய படக்குழு தன்னை அதில் இருந்து மீட்டதாகவும் நடிகர் தானிஷ் சைத் கூறியுள்ளார்.</p>
    <h2><strong>மலைகோட்டை வாலிபன்</strong></h2>
    <p>மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் மலைக்கோட்டை வாலிபன். ஈ.மா.யு, ஜல்லிகட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம்&nbsp; வரும்&nbsp; ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மது நீலகண்டன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பரேடி, சஞ்சனா சந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். &nbsp;சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்ளிடம் வரவேற்பைப் பெற்றது.</p>
    <h2><strong>தனது அனுபவத்தைப் பகிர்ந்த தானிஷ் சைத்</strong></h2>
    <p>இப்படத்தில் பிரபல ஆர்.ஜே , காமெடியன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரான தானிஷ் சைத் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டார். அதில் படப்பிடிப்பின் போது என்னை சுற்றி நிறைய நபர்கள் இருந்தபோதும்&nbsp; நான் மிக தனிமையாக உணர்ந்தேன். எனது வீடு மற்றும் குடும்பத்தினரை அடிக்கடி நினைவுகூர்ந்தேன். எனக்கு இப்படி இருப்பது குறித்து இயக்குநரிடம் தெரிவித்தேன். அன்று ஷூட் முடிந்ததும் தன்னை வந்து பார்க்கும் படி அவர் சொன்னார்.</p>
    <p>அவர் அறைக்கு சென்றபோது படத்தின் முதல் பத்து நிமிடங்களை போட்டு காட்டினார். எனது தனிமை எல்லாம் அந்த இடத்தில் மறைந்து நான் மகிழ்ச்சியாக மாறினேன். எனது மனைவிக்கு ஃபோன் செய்து இதைப்பற்றி பேசினேன். இந்தப் படத்திற்காக எத்தனையோ மனிதர்கள் ஒன்று சேர்ந்து தங்களது உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். என்னைப் போல் எத்தனையோ நபர்கள் தங்களது குடும்பங்களை பிரிந்து வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.&rdquo; என்று அவர் கூறியுள்ளார்.</p>
    <h2>&nbsp;<strong>வெல்கம் டூ த ஃபேமிலி</strong></h2>
    <p>முதல் முறையாக நடிகர் மோகன்லாலை சந்தித்த தருணம் குறித்து பேசிய தானிஷ் &rdquo; ஜெய்சால்மாரில் படப்பிடிப்பு நடைபெற்ற&nbsp; போது நான் முதல் முறையாக நடிகர் மோகன்லாலை சந்தித்தேன். ஒரு ஷாட் முடிந்ததும் அவர் என்னை கடந்து&nbsp; நடந்து சென்றார். நான் அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். மோகன்லால் என்னிடம் &lsquo;வெல்கம் டூ த ஃபேமிலி&rsquo; என்று சொன்னது மனதிற்கு இதமாக இருந்தது. அதற்கு பிறகு நான் நடித்த ஒரு சில காட்சிகளை பார்த்து மோகன்லால் என்னைப் பாராட்டினார். நான் விராட் கோலி, ஏ.பி டிவில்லியர்ஸ் இன்னும் நிறை பிரபலங்களை சந்தித்திருக்கிறேன். ஒரு பெரிய மனிதரை சந்திக்கும் போது அந்த இடம் நமக்கு செளகரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் அது தானாக அமைவது இல்லை. அப்படியான பெரிய மனிதர்களின் நடத்தைகள்&nbsp; நம்மை அப்படி உணர்வைக்கின்றன. மோகன்லாலுடன் எனக்கு அப்படியான ஒரு அனுபவமே ஏற்பட்டது&rdquo;&nbsp; என்று தானிஷ் சைத் கூறியுள்ளார்</p>

    Source link

  • கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல் – என்ன பிரச்சினை?

    கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல் – என்ன பிரச்சினை?


    <p>வேலைவாய்ப்புக்காகவும், கல்வி கற்கவும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா செல்வது வழக்கம். இதனால், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை சம்பவம் இந்திய – கனடா உறவில் பெரும் பிரச்னையை கிளப்பியது.</p>
    <h2><strong>இந்திய – கனட உறவில் விரிசல்:</strong></h2>
    <p>ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இதன் காரணமாக, கனடா நாட்டை சேர்ந்த 41 தூதரக அதிகாரிகளை அவர்களின் நாட்டுக்கே இந்தியா திருப்பி அனுப்பியது.</p>
    <p>இதனால், கனடாவுக்கு படிக்க செல்வதற்காக இந்திய மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டு குறைந்ததாக கனடாவின் உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். கனடா நாட்டுடன் பிரச்னை நிலவி வருவதால் விசாவுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே இந்திய மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.</p>
    <p>இந்த நிலையில், கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை அடுத்த 2 ஆண்டுகளுக்கு குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வீட்டு வசதியில் ஏற்பட்டு வரும் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலும் குற்றம் செய்யும் நபர்களுக்கு விசா வழங்கப்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கனடா விளக்கம் அளித்துள்ளது.</p>
    <h2><strong>இந்திய மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா:</strong></h2>
    <p>இதுகுறித்து கனடா குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டின் விளைவாக 2024இல் படிப்பதற்காக தரப்படும் மாணவர்களின் விசாக்கள் 35 சதவீதம் குறைக்கப்படும். 2024 ஆம் ஆண்டு, 3 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கல்வி கற்க விசாக்கள் வழங்கப்பட்டன.</p>
    <p>இந்த கட்டுப்பாடுகள், அடுத்த 2 ஆண்டுகளுக்கு விதிக்கப்படும். 2025 இல் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதியில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும். கனடாவில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையை பராமரிக்கவும் 2024 இல் கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் மேலும் வளர்ச்சி இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.</p>
    <p>கனடாவில் நிரந்தர குடியிரிமை பெறாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாகாண அரசுகள் கொடுத்த அழுத்தத்தின் பேரில், அந்நாட்டு மத்திய அரசு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
    <p>இதன் காரணமாக, கனடாவுக்கு பதிலாக வேறு நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டை ஒப்பிடுகையில் நான்காவது காலாண்டில் இந்திய மாணவர்களுக்கு கனடா விசா அளிப்பது 86 சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 1,08,940 பேருக்கு படிப்பதற்கான விசா அளிக்கப்பட்ட நிலையில், நான்காவது காலாண்டில் 14,910 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது.</p>

    Source link

  • CM Stalin: "பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்” தேர்தலுக்கு அச்சாரம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

    CM Stalin: "பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்” தேர்தலுக்கு அச்சாரம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!


    <p><strong>CM Stalin:</strong> நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p>
    <h2>"பொய்களைத்<strong> திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்&rdquo;</strong></h2>
    <p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். &nbsp;அதில், டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். உரிமைக்குரல், பாதை மாறா பயணம் உள்ளிட்ட 4 நூல்களை வெளியிட்டார். இந்ந நிலையில், நூல் வெளியீட்டு விழா குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.</p>
    <p>&nbsp;அதன்படி, &rdquo;நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும். தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்" என்று <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
    <h2>"ராமர் கோயிலை கட்டி திசை திருப்ப பாஜக முயற்சி&rdquo;&nbsp;</h2>
    <p>முன்னதாக மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், &rdquo;தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல் இறுதியில் கோயில் கட்டி மக்களை திசை திருப்ப பார்க்கிறது பாஜக. மக்களை திசை திருப்புவதற்காகவே கட்டி முடிக்கப்படாத கோயிலை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.</p>
    <p>முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோயிலை அவசர அவசரமாக திறந்து எதையோ சாதித்ததுபோல் காட்டிக்கு கொள்கிறார்கள். &nbsp;இதுபோன்ற திசை திருப்பம் தந்திரத்திற்கு மக்கள் சரியான பாடங்களை கொடுப்பார்கள் இது &nbsp;உறுதி. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. யார் &nbsp;ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெற உள்ள தேர்தல் இது.</p>
    <h2>"இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை&rdquo;</h2>
    <p>சென்னை, தென்மாவட்டங்களில் பேரிடர் பாதிப்புக்குக் கூட &nbsp;இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பாஜகவினால் சொல்லக்கூடிய அளவுக்கு சாதனை எதுவுமில்லை" என்றார்.&nbsp; மேலும், "இந்தியாவின் எதிர்காலத்தை எல்லோரும் மனதில் வைத்து கடமையாற்ற வேண்டும் தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணி அமைத்திருக்கிற மாதிரி இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும்.</p>
    <p>இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களை காப்பாற்ற தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு மத்திய அரசை உருவாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழைகிறோம். அதற்கு டி.ஆர் பாலு அவர்கள் தயாராக வேண்டும்&rdquo; என்றார் முதல்வர் ஸ்டாலின்.</p>
    <hr />
    <p>மேலும் படிக்க</p>
    <p class="article-title "><a title="பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!" href="https://tamil.abplive.com/news/india/karpoori-thakur-awarded-the-bharat-ratna-posthumously-former-bihar-chief-minister-163438" target="_self">பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!</a></p>

    Source link

  • Ayodhya Ram Mandir: அடடே! அயோத்தி ராமருக்கு புது பெயர் – இனி இப்படிதான் கூப்பிடனுமாம்!

    Ayodhya Ram Mandir: அடடே! அயோத்தி ராமருக்கு புது பெயர் – இனி இப்படிதான் கூப்பிடனுமாம்!


    <p>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில், இந்து மத குருமார்களை தவிர்த்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்துக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படாத சூழலில் இன்று முதல் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.</p>
    <h2><strong>அயோத்தி ராமர் சிலைக்கு புது பெயர்:</strong></h2>
    <p>இந்த நிலையில், நேற்று பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு புது பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது சிறுவன் வடிவிலான ராமர் சிலைக்கு பாலக ராமர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>பிராண பிரதிஷ்டை செய்த அர்ச்சகர்களில் ஒருவரான அருண் தீக்சித், இதுகுறித்து கூறுகையில், "நேற்று கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ராமர் சிலைக்கு ‘பாலக ராமர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ராமர் சிலைக்கு ‘பாலக் ராம்’ என்று பெயரிடக் காரணம், அவர் ஐந்து வயது குழந்தையைப் போல இருப்பதே.&nbsp;</p>
    <p>முதன்முதலில் அந்தச் சிலையைப் பார்த்தபோது சிலிர்த்துப் போய் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது நான் அனுபவித்த உணர்வை என்னால் விளக்க முடியாது. இதுவரை நான் செய்த பிரதிஷ்டைகளிலேயே இதுவே எனக்கு அதிக தெய்வீக உணர்வை தந்தது" என்றார். வாரணாசியை சேர்ந்த அருண் தீக்சித், இதுவரை, 50 முதல் 60 கும்பாபிஷேகம் செய்துள்ளார்.</p>
    <h2><strong>ராமருக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆபரணங்கள்:</strong></h2>
    <p>ராமர் சிலையின் தலையில் அணிவிக்கப்பட்டுள்ள தங்க கிரீடம் வட இந்திய பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணிக்கங்கள், மரகதம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு, &nbsp;மையத்தில் சூர்ய நாராயனரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் வலது பக்கத்தில், முத்து இழைகள் நெய்யப்பட்டிருக்கின்றன. இதன் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கௌஸ்துப மணி சிலையின் இதயத்தை அலங்கரிக்கிறது. அறக்கட்டளை வேதங்களின்படி, விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் இந்த ரத்தினத்தை தங்கள் இதயத்தில் அணிந்துள்ளன.</p>
    <p>ராமர் சிலை அணிந்துள்ள மிக நீளமான நெக்லஸின் பெயர் தான் விஜயமாலா. மாணிக்கக் கற்கள் பதித்த இந்த தங்க நெக்லஸ் வெற்றியைக் குறிக்கிறது. இது வைஷ்ணவ பாரம்பரியத்தின் சின்னங்களான சுதர்சன சக்கரம், தாமரை, சங்கு மற்றும் மங்கள கலசம் ஆகிய உருவங்களை கொண்டுள்ளது. சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள மொத்த ஆரங்களின் (நெக்லஸ்) எடை மட்டுமே 3.7 கிலோ எடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "அடிமை மனோபாவத்தை உடைத்து, பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு, பொறுமை, தியாகங்களுக்குப் பின், நம் ராமர் இன்று வந்திருக்கிறார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வசனத்தில் ராமர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நடக்க பல தசாப்தங்கள் ஆனது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டது இன்று நிஜமாகியுள்ளது" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • ‘இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு’ – ரஜினிகாந்த் | Rajinikanth Clarifies About Ram Mandir Is Religious Thing

    ‘இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு’ – ரஜினிகாந்த் | Rajinikanth Clarifies About Ram Mandir Is Religious Thing

    Entertainment
    23 Jan, 09:08 PM (IST)

    “இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு” – ரஜினிகாந்த்

    Source link

  • BCCI Awards: அஸ்வினுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது – பி.சி.சி.ஐ. கௌரவப்படுத்திய வீரர்கள் யார்? யார்?

    BCCI Awards: அஸ்வினுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது – பி.சி.சி.ஐ. கௌரவப்படுத்திய வீரர்கள் யார்? யார்?


    <p>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை போட்டிகளுக்குத் தயார் செய்வது மட்டும் இல்லாமல் வீரர்களை ஊக்குவிக்கும் செயல்களிலும் ஈடுப்பட்டு வருகின்றது. இதில் ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படாமல் வீரர்கள் உலகக் கோப்பை, ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வந்ததாலும் வீரர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி வழங்கப்பட்டது.&nbsp;</p>
    <h2><strong>பி.சி.சி.ஐ. விருதுகள்:</strong></h2>
    <p>இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 2019 – 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் விருது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது. 2020 – 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p>
    <p>2021 – 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் விருது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022- 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது இளம் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!

    பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!

    இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. 

    அந்த வகையில், மறைந்த பிகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1924ஆம் ஆண்டு, ஜனவரி 24ஆம் தேதி, பிகார் மாநிலத்தில் பிறந்தவர் கர்பூரி தாக்கூர். இவர், மக்களுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக மக்கள் தலைவர் என அன்போடு அழைக்கப்படுகிறார்.
    பிகார் மாநில முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். கடந்த 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1971 ஆண்டு ஜூன் மாதம் வரை, சோசலிஸ்ட்/பாரதிய கிராந்தி தளம் ஆட்சியில் முதல்முறை முதலமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1979 ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஜனதா ஆட்சியின் கீழ் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்தார்.
    பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பிடவுஞ்சியா (இப்போது கர்பூரி கிராம்) கிராமத்தில் நை சமூகத்தில் பிறந்த கர்பூரி தாகூர், தனது மாணவப் பருவத்தில் சுதந்திர போராட்ட உணர்வினால் ஈர்க்கப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 26 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
    சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆசிரியராகப் பணியாற்றினார்.

    Source link

  • Oscar 2024 Nomination The Killer Of The Flower Moon Oppenheimer Check Full List

    Oscar 2024 Nomination The Killer Of The Flower Moon Oppenheimer Check Full List

    Oppenheimer,the killer of the flower moon, பார்பி உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் (The 96th Academy Awards) விருதிற்கு பரிந்துறைக்கபட்டுள்ளது. 
    வரும் மார்ச் மாதம் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற உள்ள நிலையில், ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆஸ்கர் விருது விழா- 2024
    96-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10-ம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற உள்ளது. இதற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஓபன்ஹைமர், பார்பி உள்ளிட்ட படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
    ஓபன்ஹைமர் (oppenheimer)
    கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) இயக்கி, கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பியூ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். லுட்விக் கோரான்ஸன் இசையமைத்திருந்தார். புலிட்சர் விருது பெற்ற ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ எனும் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தின் அரசியலை பேசும் படமாக அமைந்திருக்கிறது. பெரும் வரவேற்பை பெற்றது.
    ஓபன்ஹைமர் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

     

    Source link

  • கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு தங்கம்.. தடை தாண்டும் ஓட்டத்தில் இளைஞர் சாதனை..!

    கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு தங்கம்.. தடை தாண்டும் ஓட்டத்தில் இளைஞர் சாதனை..!


    <p>ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.&nbsp;</p>
    <p>அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தங்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்னு 13.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கேரளா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • இறந்தவரின் உடலை விட்டுப் பிரியாமல் சுற்றி வந்த வளர்ப்பு நாய்

    இறந்தவரின் உடலை விட்டுப் பிரியாமல் சுற்றி வந்த வளர்ப்பு நாய்

    திருவண்ணாமலை அடுத்த சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வருபவர் தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தேசப்பிரிவினையின் போது இவர் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து வந்து அங்கு வசித்து வந்தார். குறிப்பாக இவர் காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்திய போது அந்தப் போராட்டத்தில் இவர் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சுதந்திர போராட்ட தியாகி:
    பின்னர் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில்  ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்  திருமணம் செய்யாமல் சேவை பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.  தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா சிறிது காலம் முன்பாக திருவண்ணாமலை பகுதியில் வசித்து வந்த  தனது அண்ணன் மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில்,  தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா உடல் நலக்குறைவால் இருந்துள்ளார். தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலாவை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
     

     
    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா  உயிரிழந்தார். இதனை அடுத்து மறைந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா உடலை நல்லடக்கம் செய்ய பணம் இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர். ஆதரவற்ற நிலையில் மரணம் அடைந்த 2275 உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு, நடிகர் ரஜினிகாந்த் மூலம் சடலங்களை எடுத்துச் செல்ல வாகனத்தைப் பெற்ற சமூக சேவகர் மணிமாறன் இன்று இறந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் உடலை அடக்கம் செய்யமுடியாமல் தவிப்பதை அறிந்த  சமூக சேவகர் மணிமாறன் அவர்களிடம் தொடர்புகொண்டு நான் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் உடலை அடக்கம் செய்கிறேன். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் என கூறி  உடனடியாக அங்கு சென்றுள்ளார்.

     
    இறந்தவரின் முறைப்படி நல்லடக்கம் செய்தார். இந்த நிகழ்வின்போது, மறைந்த சுதந்திர போராட்ட வீராங்கனை தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா தான் பல மாதங்களாக வளர்த்த வளர்ப்பு நாய் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் இறந்த வீட்டில் அவரது உடலை சுற்றி சுற்றி வந்ததும், அவரது உடலை நல்லடக்கம் செய்ய வாகனத்தில் ஏற்றும் போது வளர்ப்பு நாய் வாகனத்தில் ஏறியது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களிடையே மிகப் பெரும் சோகத்தையும் பார்ப்போர்களின் கண்களில் கண்ணீரை வரவைத்துள்ளது. 
    மேலும் படிக்க ;Cinema Headlines:பிரம்மாண்டமாக உருவாகும் அயலான்2! விளையாட்டில் அசத்திய நிவேதா பெத்துராஜ் – இன்றைய சினிமா ரவுண்டப்

    Source link

  • மக்களவை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

    மக்களவை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?


    <p>நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்ற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.</p>
    <p>கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் கடந்தாண்டு நிறைவேற்றியது. மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.</p>
    <h2><strong>மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது அமல்படுத்தப்படும்?</strong></h2>
    <p>மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தாண்டு மக்களவை தேர்தலிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.&nbsp;</p>
    <p>106ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இந்த மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசியலைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p>
    <p>ஜெயா தாக்கூர் என்பவர் தொடர்ந்த மனுவில், "குறிப்பிட்ட அந்த வாசகத்தை மட்டும் செல்லாது என அறிவிக்க வேண்டும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை காலவரை இன்றி தள்ளி வைக்கக்கூடாது" என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ். வி. என். பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.</p>
    <h2><strong>உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?</strong></h2>
    <p>நேற்று நடைபெற்ற விசாரணையில், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. மனுதாரர் ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார்.</p>
    <p>இரு தரப்பு வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், "இந்த கட்டத்தில் நீதிமன்றம், உத்தரவு பிறப்பிக்க முடியாது. மத்திய அரசின் பதிலுக்காக காத்திருங்கள்" என தெரிவித்தது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்ய விரும்புவதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறினார்.</p>
    <p>இதற்கு பதில் அளித்த நீதிமன்றம், "இது, புதிய மனுவாக இருப்பதால், தலைமை நீதிபதி சந்திரசூட் அமைக்கும் அமர்வின் முன்புதான் வழக்கு பட்டியலிடப்படும்" என தெரிவித்தது. இறுதியாக, இந்த வழக்கின் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • CM MK Stalin Speech About MP T.R.Balu MP Election 2024 T.R.Balu Book Release | CM MK Stalin: வாடா பாலு போடா பாலு-னுதான் சொல்லுவேன்

    CM MK Stalin Speech About MP T.R.Balu MP Election 2024 T.R.Balu Book Release | CM MK Stalin: வாடா பாலு போடா பாலு-னுதான் சொல்லுவேன்

    திமுகவின் முதல்நிலைத் தலைவர்களில் ஒருவரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தனது அரசியல் பயணம் குறித்து பாதை மாறாப் பயணம் என்ற தலைப்பில் புத்தகம்  எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா புத்தக வெளியீட்டு விழா அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது.
    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நெருக்கடி காலத்தில் இளைஞர் தி.மு.க.வை கோபாலபுரத்தில் நான் தொடங்கிய காலத்தில் இருந்து பாலுவை எனக்குத் தெரியும். தொடக்க காலத்தில் நானும் அவரும் வாங்க போங்க என்றும், சார் என்றும் அழைத்துக் கொள்வோம். அதன் பின்னர் வாப்பா போப்பா என அழைத்துக் கொண்டோம். அதன் பின்னர் வாடா பாலு, போடா பாலு என அழைப்பேன். அவரும் என்னை அப்படித்தான் அழைப்பார்.
    ஆனால் இப்போது அப்படிக் கூற முடியுமா? நான் கட்சியின் தலைவர், அவர் நாடாளுமன்ற குழுத் தலைவர். ஆனால் இப்போது அவர் என்னை அப்படி கூப்பிட முடியுமா ? கூப்பிட்டால் நீங்கள் விட்டு விடுவீர்களா? இதை ஏன் சொல்கின்றேன் என்றால் என்னையும், பாலுவையும் இயக்கத்தையும் பிரித்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது. நாங்கள் இருவரும் இரண்டறக் கலந்தவர்கள். இந்த வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் வழித்தடத்தை மாற்றத்தான் இந்த பாதை மாறா பயணம்” என பேசினார். 

    Source link

  • Idhayam Serial: ஆதியை வைத்து பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் – நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்

    Idhayam Serial: ஆதியை வைத்து பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் – நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்


    <p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியல் இன் நேற்றைய எபிசோடில் ஆதி பாரதிக்கு முன்பாக ஸ்கூலுக்கு வந்திருந்த நிலையில் தமிழ் டிராயிங் வரைந்து அதை அதிக இடம் காட்ட ஆதி சூப்பர் என பாராட்டி போட்டோ எடுத்துக் கொள்கிறான்.</p>
    <h2><strong>ஆதியை பார்த்து ஷாக்காகும் பாரதி:</strong></h2>
    <p>ஆபீஸில் ஆதிக்காக காத்திருக்கும் பாரதி ஒரு கட்டத்தில் ஸ்கூலுக்கு நேரமாகிறது என்று கேட்கும் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். இங்கே ஸ்கூலில் ஏற்கனவே ஆதி வந்து உட்கார்ந்து இருக்க அதை பார்த்த பாரதி ஷாக் ஆகிறாள்.</p>
    <p>அதையும் பாரதியை பார்த்து ஷாக்காகி வாங்க பாரதி உக்காருங்க என்று காட்ட சொல்ல பாரதி நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க நான் ஒரு வேலை விஷயமாக வெளியே வந்திருந்தேன் அது சீக்கிரம் முடிஞ்சுடுச்சு தமிழ் சொன்னது ஞாபகம் வந்தது அதனால அப்படியே காரை யூ ட்ரன் போட்டு இங்க வந்துட்டேன் என பாரதி முறைக்க ஆதி நம்பல போலயே என்று நினைக்கிறான்.</p>
    <h2><strong>கடவுள் பெயர் சொல்லும் ஆதி:</strong></h2>
    <p>பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு கிப்ட் கொடுக்கும் நிகழ்வு தொடங்க தமிழரசிக்கு சிறப்பு பரிசு கிடைக்கிறது. பிறகு மேடையில் தமிழ் தனக்கு உதவியது ஆதி தான் என்று சொல்லி மேடைக்கு வாங்க ஃபிரண்ட் என்று கூப்பிட பாரதி அதிர்ச்சி&zwnj; அடைய ஆதி சமாளித்து மேடைக்கு வருகிறான்.</p>
    <p>பிறகு நான் தமிழுக்கு வெறும் சப்போட்டா தான் இருந்தேன் இதுக்கெல்லாம் முக்கிய காரணம் இன்னொருத்தர் இருக்காங்க என்று சொல்ல பாரதி தன்னுடைய பெயரை சொல்லுவான் என ஆவலோடு எதிர்பார்க்க ஆதி கடவுளின் பெயரை சொல்லி பாரதியை வெறுப்பேற்றுகிறான்.</p>
    <p>இதனால் பாரதி கோபப்பட்டு வெளியே வர ஆதியும், தமிழும் பின்னாடியே ஓடி வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். தமிழ் நான் இந்த காம்பெடிஷன்ல கலந்துக்கலன்னு தான் சொன்னேன். ஆனா பிரண்டு தான் எனக்கு ப்ராக்டிஸ் கொடுத்து கலந்துக்க வச்சாரு என்று பிளாஸ்கட்டை ஓபன் செய்ய பாரதிக்கு உண்மை தெரிய வருகிறது.</p>
    <p>அதன் பிறகு பாரதி ஆதி மற்றும் தமிழிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஆதி உங்களுக்காக ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன். கார்ல இருக்கு இப்ப எடுத்துட்டு வாங்க என்று தமிழை அனுப்பி வைத்துவிட்டு பாரதியிடம் நீங்க கோபப்பட்டா, அவ்வளவு அழகா இருக்கீங்க. அதை ரசிப்பதற்காகத்தான் நான் உங்களை அடிக்கடி கோபப்பட வைக்கிறேன் என்று சொல்ல பாரதி வெட்கப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Ayodhya Ram Mandir Is It Enough To Build A Temple Only For Ram Vijay TV Nanjil Vijayan

    Ayodhya Ram Mandir Is It Enough To Build A Temple Only For Ram Vijay TV Nanjil Vijayan

    நாடு முழுவதும் நேற்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்துதான். இதில் நாட்டின் பிரதமர்  நரேந்திரமோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 
    ராமர் கோயில் திறப்பு விழா:
    இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 
    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி, வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல தொலைகாட்சியான விஜய் டிவியில் மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ இந்தியா முழுவதும் தற்போது ஓங்கி ஒலிக்கும் கோஷம் என்றால் அது ஜெய் ஸ்ரீராம். ஒருபக்கம் ராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்டிய சந்தோஷம். அதேநேரத்தில், என்ன இருந்தாலும் பாபர் மசூதியை இடித்துத்தானே இந்த கோவிலை கட்டியுள்ளீர்கள் என்ற வருத்தம் ஒருபக்கம். நாம் ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.
    இந்தியாவை ஆண்ட மன்னர்கள் தொடங்கி ஆட்சியாளர்கள் வரை அனைவரும் தான் சார்ந்த தான் விரும்பும் மதத்திற்கு கோவில் கட்டுவது வழக்கம். இது ராஜராஜன் காலத்தில் இருந்து இப்போதுவரை உள்ளது. அப்படித்தான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலைக் கட்டியுள்ளார். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தனக்கும் ஸ்ரீ ராமருக்கும் பெருமை சேர்க்கும் அளவில் பிரமாண்டமான கோவிலைக் கட்டியுள்ளார். 

    மசூதி கட்டுவதற்கும் இடம்:
    ஆனால் நமது இந்தியா மதம் சார்ந்த நாடு கிடையாது. வேற்றுமையில் ஒற்றுமை எம்மதமும் சம்மதம் எனக்கூறித்தான் நாம் நமது குழந்தைகளை வளர்க்கின்றோம். நாமும் வளர்ந்து வந்துள்ளோம். இப்போ பாய் வீட்டில் ரம்ஜான் என்றால் இந்து வீட்டிற்கு பிரியாணி வரும். இந்து வீட்டில் விஷேசம் என்றால் பாய் வீட்டிற்கு பலகாரம் போகும். இப்படித்தான் வாழ்ந்துகொண்டு உள்ளோம். இன்றைக்கு அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலைக் கட்டிவிட்டோம்.
    ஆனால் நீதிமன்றத் தீர்ப்புப்படி மசூதி கட்டுவதற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள். இன்றுவரை அந்த மசூதி எழுப்பப்படவில்லை. அந்த இடத்திலும் மிகவும் பிரமாண்டமான மசூதி கட்டப்பட்டு ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்துக்களும் இணைந்து ஜெய் ஸ்ரீராம் என சத்தமாக முழக்கமிடுவோம்” என பேசியுள்ளார். 

    Source link

  • Rajinikanth:அனைவரது பார்வையும் ஒரேமாதிரி இருக்கவேண்டிய அவசியம் இல்லை

    Rajinikanth:அனைவரது பார்வையும் ஒரேமாதிரி இருக்கவேண்டிய அவசியம் இல்லை

    நாடு முழுவதும் நேற்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்துதான். இதில் நாட்டின் பிரதமர்  நரேந்திரமோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 
    ராமர் கோயில் திறப்பு விழா:
    இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.  
    இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ”அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவினை நான் ஆன்மீகமாகத்தான் பார்க்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அனைவரது பார்வையும் ஒரேமாதிரி இருக்கவேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார். 
     

    Source link

  • கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு 7வது தங்கம்; ஸ்குவாஷ் வீராங்கனை பூஜா ஆர்த்தி அசத்தல்

    கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு 7வது தங்கம்; ஸ்குவாஷ் வீராங்கனை பூஜா ஆர்த்தி அசத்தல்

    தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் இருந்தே கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டி சென்னை, கோவை மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றுவருகின்றது.  இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியில் தமிழ்நாடு வீராங்கானை பூஜா ஆர்த்தி மகாராஸ்ட்ரா வீராங்கனையை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு தனது 7வது தங்கத்தினை வென்றுள்ளது. 
    கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
    ஏற்கனவே பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு தற்போது தனது கணக்கில் மேலும் ஒரு தங்கத்தினை வென்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கின்றது.  தற்போது தமிழ்நாடு அணி 7 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவது இடத்தில் மகாராஸ்ட்ரா அணி உள்ளது. மாகாராஸ்ட்ரா மாநிலம் 4 தங்கம் , 6 சில்வர் மற்றும் 11 வெண்கலம் வென்றுள்ளது. 

    Source link

  • TN Special Buses: குடியரசு தினம், தைப்பூசம் லீவு! சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? இத்தனை சிறப்பு பேருந்துகளா?

    TN Special Buses: குடியரசு தினம், தைப்பூசம் லீவு! சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? இத்தனை சிறப்பு பேருந்துகளா?


    <h2><strong>சிறப்பு பேருந்துகள்:</strong></h2>
    <p>தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு &nbsp;கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில் &nbsp;வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.</p>
    <p>அதன்படி தற்போது, ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26ல் குடியரசு தினம், ஜனவரி 27 சனிக்கிழமை, ஜனவரி 28 ஞாயிற்று கிழமை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.</p>
    <h2><strong>580 சிறப்பு பேருந்துகள்:</strong></h2>
    <p>இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "26/01/2024 குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 25/01/2024 வியாழக்கிழமை முதல் 28/01/2024 ஞாயிறு வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், 24/01/2024 மற்றும் 25/01/2024 அன்று சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடு தலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p>இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை &nbsp;இயக்கிட &nbsp;திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24.01.2024 மற்றும் 25.01.2024 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
    <p>மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 24.01.2024 அன்று 5,722 பயணிகளும் மற்றும் 25.01.2024 அன்று 7,222 பயணிகளும் சென்னையிலிருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.</p>
    <h2><strong>திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்:</strong></h2>
    <p>ஞாயிறு அன்று 15,669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம் மேலும், 25.01.2024 பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து 10 குளிர்சாதன பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக காலை 10.00 மணி முதல் இயக்கப்பட உள்ளது.</p>
    <p>இப்பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்தின் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும்&nbsp; போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது&rdquo; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>

    Source link

  • China Vessel In Indian Ocean Region Heading To Maldives Will It Be A Security Threat | வேலையை காட்டும் சீனா! பரபரப்பை கிளப்பும் ஆய்வு கப்பல்

    China Vessel In Indian Ocean Region Heading To Maldives Will It Be A Security Threat | வேலையை காட்டும் சீனா! பரபரப்பை கிளப்பும் ஆய்வு கப்பல்

    இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரும் சவாலாக மாறி வரும் சீனா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
    இந்தியாவுக்கு தலைவலியை தரும் சீனா:
    பாகிஸ்தான், இலங்கை வரிசையில் மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை சீனா பேணி வருகிறது. இது, இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், புதிய மாலத்தீவு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு புதிய சிக்கலை உண்டாக்கியது. 
    மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்ததில் இருந்து இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது வரை தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. போதாத குறைக்கு, மாலத்தீவு, சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தாகின.
    இந்த நிலையில், சீன ஆய்வு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளதாகவும் அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களை அரசு தரப்பு உறுதி செய்திருந்தாலும் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவு தலைநகர் மாலேவை நோக்கி செல்லும் சீன கப்பலின் பெயர் சியாங் யாங் ஹாங் 03.
    இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் மர்ம கப்பல்:
    தங்கள் நாட்டிற்குள் நுழைய வெளிநாட்டு கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்திருக்கும் சூழலில், மாலத்தீவை நோக்கி சீன ஆய்வு கப்பல் செல்வது முக்கிய புவிசார் அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.  
    இதுகுறித்து osint எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது பின்வருமாறு: சியாங் யாங் ஹாங் 03 என்ற சீனப் ஆய்வுக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைகிறது. மாலே நோக்கி சென்று கொண்டிருப்பதாக கப்பலில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்தியாவுக்கு பிரச்னையாக எழுந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    XIANG YANG HONG 03 a Chinese ocean research vessel is entering the Indian Ocean Region, displaying its destination as Male, the vessel is expected to run an ocean survey operation in the Indian Ocean Region raising concern in #India pic.twitter.com/y8v1r3ONZe
    — Damien Symon (@detresfa_) January 22, 2024

    ஆனால், இது வழக்கமான ஒன்றுதான் என இந்திய அரசு தரப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே, இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வு கப்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. உளவு பார்க்கும் வகையில் இந்த ஆய்வு கப்பல்களில் அதிசக்தி வாய்ந்த கருவிகள் இருப்பதாகவும் அது பல்வேறு விதமாக தகவல்களை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
    இந்தியாவின் தொடர் அழுத்தம் காரணமாகவே தங்கள் கடற்கரையில் நுழைய வெளிநாட்டு கப்பல்களுக்கு இலங்கை கடந்தாண்டு டிசம்பர் மாதம் தடை விதித்தது. ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், இலங்கைக்கு செல்லவிருந்த சீன ஆய்வு கப்பல், மாலத்தீவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.
     

    Source link

  • Today Cinema Headlines Ayalan 2 Is Going To Be Huge Nivetha Pethuraj Who Is Amazing In Sports Too | Cinema Headlines:பிரம்மாண்டமாக உருவாகும் அயலான்2! விளையாட்டில் அசத்திய நிவேதா பெத்துராஜ்

    Today Cinema Headlines Ayalan 2 Is Going To Be Huge Nivetha Pethuraj Who Is Amazing In Sports Too | Cinema Headlines:பிரம்மாண்டமாக உருவாகும் அயலான்2! விளையாட்டில் அசத்திய நிவேதா பெத்துராஜ்

    Fighter: முதல் நாளில் மட்டும் 90 ஆயிரம் டிக்கெட்கள் காலி.. மாஸ் காட்டும் ஃபைட்டர் திரைப்படம்!
    ஃபைட்டர் படம் முதல் நாளில் மட்டும் முன்பதிவில்  90 ஆயிரம்  டிக்கெட்களை விற்பனையாகியுள்ளது. இதில் 36,454 டிக்கெட்கள் 2D , 50,770 டிக்கெட்கள் 3D மற்றும் 6 ஆயிரம் டிக்கெட்கள் ஐமேக்ஸ் காட்சிகளுக்கு முன்பதிவாகியுள்ளன. மொத்தம் 3 கோடி ரூபாய் இதுவரை முன்பதிவில் வசூல் செய்யப் பட்டுள்ளதாக  கூறப்ட்டுள்ளது. ஃபைட்டர் படம் வெளியாக இன்னும் இரண்டு  நாட்கள் இருக்கும் நிலையில் ஒரு லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு ஆகும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் படிக்க
    Ayalaan 2: வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி…பிரமாண்டமாக உருவாகும் “அயலான் 2”
    அயலான் படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவுடன் போட்டுள்ள ஒப்பந்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அயலான் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு தங்களது நிறுவனம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளது.
    மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மட்டுமே முதற்கட்டமாக ரூ.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  படத்தின் தரத்தை மேம்படுத்த இந்த செலவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி நிலவும் பட்சத்தில் அது மேற்கொண்டு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் ஃபாண்டம் நிறுவனத்தின் உரிமையாளர் பிஜாய் அற்புதராஜின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
    Nivetha Pethuraj: நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் நான் கில்லி.. அசத்திய நிவேதா பெத்துராஜ்!
    பேட்மிண்டன் போட்டியிலும் நிவேதா பெத்துராஜ் அசத்தியுள்ளார்.  மேலும் நடிப்பு, பிற தொழில்களில் திரைப் பிரபலங்கள் கவனம் செலுத்தி வரும் சிலர் மட்டுமே விளையாட்டில் கவனம் செலுத்தி வருவதோடு அசத்தியும் வருகின்றனர். அந்த வகையில் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக கலந்து கொண்ட நிவேதா வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மேலும் படிக்க
    Lal Salaam Audio Launch: கொண்டாட தயாராகுங்க.. ரஜினியின் லால் சலாம் இசை வெளியீடு பற்றி வெளியான அறிவிப்பு!
    லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக வரும் ஜனவரி 26 ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இசைப்புயல் ரஹ்மானின் கிளாசிக் பாடல்கள் மற்றும் தலைவரின் குட்டிக்கதை கேட்க தயாராகுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
    Ashok Selvan: ”மனைவி மட்டுமல்ல, எல்லாமே கொடுத்தது ப்ளு ஸ்டார் படம் தான்” – அசோக் செல்வன்!
    ‘ப்ளூ ஸ்டார்’ இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தனர்.  அப்போது மேடையில் பேசிய அசோக் செல்வன்,  “ப்ளு ஸ்டார் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆனது.  
    வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டார்களா? என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கி கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும், ப்ளு ஸ்டார் படம், ஒரு ஆறுதல், நம்பிக்கையை கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்கள் எனது குடும்பத்தில் ஒருவராக இணைந்துவிட்டனர். ஏற்கனவே, இந்த படம் எனக்கு மனைவி, சகோதரர் என அனைத்து உறவையும் கொடுத்திருக்கிறது என அவர் தெரிவித்தார் .மேலும் படிக்க

    Source link

  • Bigg Boss Vishnu: "பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது திட்டமிட்ட சதி" – பிக்பாஸ் விஷ்ணு பரபரப்பு பேட்டி

    Bigg Boss Vishnu: "பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது திட்டமிட்ட சதி" – பிக்பாஸ் விஷ்ணு பரபரப்பு பேட்டி


    <p>அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவதற்காக ப்ரோமோஷன் மூலமாக ஒருவரை கெட்டவனாக காட்டும் செயல் தேவையற்றது என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்</p>
    <h2><strong>பிக்பாஸ் எப்படியான ஒரு அனுபவம்</strong></h2>
    <p>&rdquo;வாழ்க்கையில் நாம் கற்பனை செய்ய முடியாது சூழ்நிலைகள் இந்த ஷோவில்&nbsp; நமக்கு கொடுக்கப்படும் அந்த சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் விதம் நமக்குள் இருக்கும் ஒரு ஆற்றலை வெளிகொண்டு வரும் . பொதுவாக நான் அழமாட்டேன். ஆனால் மிக இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்தபோது அதுவும் நடந்திருக்கிறது. வெளியே வந்த பிறகு தான் நான் பிக்பாஸ் விட்டில் சும்மா இல்லை, நானும் சில விஷயங்களை மாற்றியிருக்கிறேன் என்று புரிந்தது.&rdquo;</p>
    <h2><strong>ஒருவரை கெட்டவனாக காட்டுவது ப்ரோமோஷன் கிடையாது</strong></h2>
    <p>&nbsp;பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா ப்ரோமோஷன்களால் வெற்றிபெற்றார் என்கிற குற்றச்சாட்டு குறித்து அவர் பேசினார் &rdquo;பிக்பாஸில் ப்ரோமோஷன் வேலைகளை ஓரளவிற்கு எல்லாம் செய்தோம். நான் என்னுடைய நண்பர்களிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். வாக்குகளைப் பெறுவதற்காக ப்ரோமோட் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரே வீட்டிற்குள் நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். அதே வீட்டில் இருக்கும் நான் ஏதாவது சின்னதாக தவறு செய்துவிட்டால் ஒரு நபரை நல்லவராக காட்ட என்னை கொஞ்சம் கெட்டவனாக காட்ட வேண்டிய தேவை ஏற்படுகிறது.</p>
    <p>எல்லாரும் மீடியாவை ஒரு ஊடகமாக பயன்படுத்தி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது ஒருவரை கெட்டவனாக காட்டிதான் அதை செய்ய வேண்டியது அவசியம் இல்லை.&nbsp; &nbsp;நான் பார்த்த இன்னொரு விஷயம் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நான் எலிமினேட் ஆகிவிட்டேன் என்று நிறைய தவறான செய்திகள் பரவின. இதனால் என்னுடைய வாக்குகள் பாதிக்கப்படுகின்றன. அடுத்த முறை உங்களுக்கான பி.ஆர். டீம் உடன் உள்ளே போய்விடுங்கள் என்று பிக்பாஸ் வீட்டிற்குள் புது போட்டியாளர்களிடம் நான் இப்போதே அட்வைஸ் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நான் தான் எதுவும் தெரியாமல் இருந்துவிட்டேன்.&rdquo;</p>
    <h2><strong>பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு</strong></h2>
    <p>&rdquo; நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. அங்கு ஏகப்பட்ட கேமராக்கள் இருந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கதவு இருக்கும் . அங்கு இருந்த போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாது. ஒருவர் ஏதாவது தவறாக செய்யப் போகிறார் என்று தெரிந்தால் உடனே ஆட்கள் வந்துவிடுவார்கள். பிரதீப் விஷயத்தைப் பொறுத்தவை ஒருவரை வெளியே அனுப்புவதற்காக எல்லாம் சேர்ந்து போட்ட திட்டமாக தான் நான் பார்க்கிறேன். கூல் சுரேஷுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை ஆனது.</p>
    <h2><strong>திட்டமிட்ட சதி:</strong></h2>
    <p>அதை பேசத்தான் நான் கமல்ஹாசனிடம் உரிமைகளை பேச வேண்டும் என்று பேச்செடுத்தேன். ஆனால் அந்த பிரச்சனை கூல் சுரேஷை விட்டு பிரதீப் நோக்கி சென்றது.&nbsp; அவ்வளவு பேர் பார்க்கக் கூடிய நேரத்தில் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> முன் அப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது, நான் கூட எனக்கு தெரியாமல் வேறு ஏதாவது தப்பாக நடந்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் நானும் ரெட் கார்ட் கொடுத்தேன். இதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தான் நான் நினைத்தேன்.</p>
    <p>ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிந்தபோது தான் நான் வருத்தப்பட்டேன். பிரதீப் தனது மனதில் எதுவும் வைத்துக் கொள்ளமாட்டார், அவருக்கு ஒரு நல்ல மனசு இருக்கிறது. தன மனதில் அவர் எதையும் வெளியே வைத்துக் கொள்ள மாட்டார். அது தான் ஏதோ ஒரு இடத்தில் அவருக்கு எதிராக திரும்பிவிட்டது என்று நினைக்கிறேன் &ldquo; என்று விஷ்ணு கூறினார்.</p>

    Source link

  • Cyber Crime: ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம்; ரூ.1 கோடியே 26 லட்சத்தை இழந்த நபர்

    Cyber Crime: ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம்; ரூ.1 கோடியே 26 லட்சத்தை இழந்த நபர்


    <p style="text-align: justify;"><strong>புதுச்சேரி:</strong> காரைக்காலைச் சேர்ந்த சோழன் (65) என்பவர் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற இணைய வழி மோசடிக்காரர்களின் ஆசை வார்த்தையை நம்பி ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தார்.</p>
    <p style="text-align: justify;">புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்த சோழன் வயது 65 என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட இணை மோசடிக்காரர்கள் உங்களுக்கு ஆன்லைன் மூலமாக நாங்கள் டிரேடிங் எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுக்கிறோம் என்று கூறி இணைய வழியில் தொடர்பு கொண்ட நபர்கள்&nbsp; அவருக்கு டிரேடிங் எப்படி செய்வது என்பது பற்றி கடந்த வருடம் பத்தாவது மாதம் சொல்லிக் கொடுத்தனர். மேலும் அவர்கள் யூடியூப் youtube பல்வேறு லிங்குகளை அனுப்பி பல வீடியோக்களை பார்க்க சொல்லி இருக்கின்றனர். அந்த வீடியோவில் பணம் முதலீடு செய்கின்ற நபர்களுக்கு 15 நாட்களிலேயே அவர்கள் போடுகின்ற பணம் இரட்டிப்பாக வந்தது போல் அனைத்து வீடியோக்களும் இருந்ததாக கூறினார். மேலும் டிரேடிங் செய்வது சம்பந்தமாக சில நபர்கள் அவருக்கு ஆன்லைன் மூலமாக சொல்லிக் கொடுக்கும் பொழுது அவருக்கு நிறைய லாபம் வருவது போல் காட்டி இருக்கின்றனர்.</p>
    <p style="text-align: justify;">அதை நம்பியவர் அவர்கள் போலியாக உருவாக்கி அனுப்பிய டிரேடிங் வெப்சைட்டில் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகு கடந்த இரண்டு மாதங்களாக எந்த லாபமும் அவருக்கு வரவில்லை. அதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நேற்று புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது சம்பந்தமாக ஆய்வாளர் கீர்த்தி மற்றும் தலைமை காவலர் இருசவேல் ஆகியோர் விசாரணை செய்து அவர் பணம் செலுத்திய 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்கை முடக்கி உள்ளனர்.</p>
    <p style="text-align: justify;">இது சம்பந்தமாக இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் பொதுமக்களுக்கு கூறியதாவது: இணைய வழியில் வருகின்ற&nbsp; முதலீடு, வேலைவாய்ப்பு, வரன் தேடுதல், ஒரே நாளில் 10% வருமானம், குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, பழைய பொருட்களை குறைந்த விலைக்கு தருகிறோம், உங்களுடைய கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை அதிகரிக்கிறோம், செல்போன் டவர் அமைக்க இடம் வேண்டும், இலவசமாக ஆன்லைனில் டிரேடிங் செய்ய சொல்லிக் கொடுக்கிறோம் போன்ற இணைய வழியில் வருகின்ற எதையுமே நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p>

    Source link

  • CM Stalin: தொடரும் முதலீடுகள்! தமிழ்நாட்டு வரும் அமெரிக்க நிறுவனம்

    CM Stalin: தொடரும் முதலீடுகள்! தமிழ்நாட்டு வரும் அமெரிக்க நிறுவனம்

    முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் தொடர்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் Gorilla Glass-களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த Corning International Corporation மற்றும் இந்தியாவைச் சேர்ந்த Optiemus Infracom Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH மற்றும்  @Guidance_TN இடையே காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இலக்கை நோக்கி விரைவோம்! இளைஞர்கள் துணையோடு உயர்வோம்”என்று பதிவிட்டுள்ளார்.

    Source link

  • அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. அல்லோலப்படும் அயோத்தி ராமர் கோயில்..!

    அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. அல்லோலப்படும் அயோத்தி ராமர் கோயில்..!

    உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், இன்று முதல் பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    இந்த நிலையில், முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், பலருக்கு காயம் ஏற்பட்டு கோயிலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    Source link

  • Sun Tv Ethirneechal Serial Today Episode January 23 Promo | Ethirneechal: தர்ஷினிக்கு என்ன ஆச்சு? ஈஸ்வரிக்கு வந்த வீடிேயா

    Sun Tv Ethirneechal Serial Today Episode January 23 Promo | Ethirneechal: தர்ஷினிக்கு என்ன ஆச்சு? ஈஸ்வரிக்கு வந்த வீடிேயா

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினியை காணவில்லை என ஈஸ்வரி, நந்தினி, சக்தி மற்றும் ஜனனி ஒரு பக்கம் அங்கும் இங்கும் பதட்டத்துடன் தேடுகிறார்கள். மறுபக்கம் சந்தேகத்தின் பேரில் கரிகாலனையும் ஜானகியையும் கைது செய்து அடித்து விசாரித்த போலீசிடம் இருந்து, அவர்கள் இருவரையும் வெளியில் எடுக்கிறார் குணசேகரன்.
    கரிகாலன் தர்ஷினியை பற்றி தப்பாக பேசியதால் அவனை கதிர் ஓங்கி அறைய என்னுடைய கருத்தும் அது தான் அப்போ என்னையும் அறைவியா என கோபத்தில் குணசேகரன் கேட்க, அவரை எதிர்த்து கதிர் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன்.
    தர்ஷினியை தேடுவதற்கு ஜீவானந்தத்தின் உதவியை தேடி அவரின் வீட்டுக்கு செல்கிறார்கள் ஈஸ்வரியும் மற்றவர்களும். ஆனால் ஜீவானந்தம் ஊரில் இல்லை என்ற தகவலை ஃபர்ஹானா மூலம் கேட்டு அறிகிறார்கள். வீட்டில் விசாலாட்சி அம்மவோ மருமகள்களை தவறாக புரிந்து கொண்டு அவர்களை இனி இந்த வீட்டில் சேர்க்க மாட்டேன் என சொல்லி அரிவாளை எடுத்து ஆவேசமாக பேசுகிறார். அந்த வகையில் இன்றைய (ஜனவரி 23) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
     
    தர்ஷினி கடத்தப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என பார்க்கலாம் என ஈஸ்வரியும் மற்றவர்களும் செல்கிறார்கள். பதட்டத்தில் அவர்கள் அனைவரும் தேட ஜனனி ஒரு வீடியோவை கொண்டு வந்து அவர்களிடம் காட்ட அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதில் தர்ஷினி கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளது. அதை பார்த்த சக்தி “ஜனனி இந்த வீடியோவ யார் குடுத்தது?” எனக்கேட்க “அந்த வீட்ல இருக்கவங்க அன்னிக்கு மேல இருந்து  இந்த வீடியோவ எடுத்து இருக்காங்க” என சொல்கிறாள் ஜனனி. அதை பார்த்ததும் ஈஸ்வரி கதறி கதறி அழுகிறாள்.
    கதிரை திட்டும் நந்தினி:குணசேகரன் வீடு வாசலிலேயே கோபத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். கதிர் நந்தினிக்கு போன் செய்து “உங்களுக்கு என்னத்த தெரியும்? மரியாதையா எல்லாரும் வீடு வந்து சேருங்க. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம்” என சொல்ல “பாத்து கிழிச்சீங்க” என சொல்லி திட்டி விட்டு போனை வைத்து விடுகிறாள் நந்தினி.
     
    குணசேகரனை பார்க்க ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வருகிறார்கள். அவர்களிடம் நடந்ததை சொல்லி “என்னோட பொண்ணு யார் வீட்ல இருக்கான்னு எனக்கு தெரியும். அவளை அனுப்பி விட்டது என்னோட பொண்டாட்டி” என சொல்கிறார் குணசேகரன். அவர்களுக்கு குணசேகரனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
     

    தர்ஷினியை கடத்தியது யாராக இருக்கும். இதற்கு பின்னால் இருப்பது ஜான்சி ராணியா அல்லது குணசேகரனா? இல்லை வேறு யாராவது இப்படி செய்து இருப்பார்களா? ஒரே சஸ்பென்ஸுடன் நகர்ந்து வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர். 

    Source link

  • Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நாளை படத்திறப்பு நினைவேந்தல்

    Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நாளை படத்திறப்பு நினைவேந்தல்

    நடிகர் சங்க முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மரணம் திரைத்துறை, அரசியல் தளம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.  மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக தரப்பில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 24ஆம் தேதி அதாவது நாளை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள்,உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    Source link

  • கரூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

    கரூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு


    <p style="text-align: justify;"><strong>குளித்தலை அருகில் கணக்கப்பிள்ளையூரில் &nbsp;ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.</strong></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/48c407d5c9266cbb2c0565b0c79dd6c81705987074303113_original.jpeg" /></strong></p>
    <p style="text-align: justify;">கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்வது என்று பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு &nbsp;பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா&nbsp; வெகு விமரிசையாக நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/7a7d0e516dddb7cc04276fd4f9b922da1705987122829113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">முன்னதாக கடந்த ஜனவரி 18 ஆம் தேதி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேண்டி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ரக்க்ஷா பந்தனம், திரவ்யாஹூதி பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். 4-ம் கால யாக வேள்வி பூஜை &nbsp;நிறை வடைந்ததும் &nbsp; சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தினை &nbsp;மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/52ce42812f5e41d220c84953d837dd761705987156822113_original.jpeg" /></p>
    <p style="text-align: justify;">வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை கலசத்திற்கு ஊற்றினர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மகா மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பண்ணசுவாமி &nbsp;மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் கணக்கப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Lok Sabha Election 2024 Likely To Held April 16th In Tamil Nadu Election Commission Update

    Lok Sabha Election 2024 Likely To Held April 16th In Tamil Nadu Election Commission Update

    நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 16ல் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாடாளுமன்றம்

    பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியா
    நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறதா அல்லது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கப்போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
    இந்தியா முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளும் தேர்தல் அறிவிக்கும் முன்னரே தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். மாநாடுகள், கூட்டங்கள், யாத்திரைகள் என நாடாளுமன்ற தேர்தல் களம், தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
    அதுவும், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டி அதற்கு பிரம்மாண்ட திறப்பு விழாவை நடத்தி முடித்திருப்பதால் இந்தியா முழுவதும் இந்துக்களின் வாக்கு சிந்தாமல் சிதறமால் தங்களுக்கு வந்து விழும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஆனால், தென் மாநிலங்கள் எப்போதும் பாஜகவிற்கு எட்டா கனியாகவே இருந்து வரும் நிலையில், இந்த முறை தென் மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க பல்வேறு யுத்திகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு அடிக்கடி வருவது, திட்டங்களை தொடங்கி வைப்பது போன்ற நடவடிக்கைகளால் தென் மாநில மக்களின் வாக்குகளை பெற நினைக்கிறார். வட மாநிலங்களை விட தென் மாநிலங்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து பாஜக மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும் அவர் தொடர்ந்து முயற்சி வருகிறார்.
    ’நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தி எதிரொலிக்கும்’
    அதே நேரத்தில், இண்டியா கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்து, அரசியல் நோக்கத்தில் பாஜக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் தன்னுடைய பாத யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார். திமுக தன் பங்கிற்கு இளைஞரணி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி அதில் பாஜகவை ஆட்சியை விட்டு அகற்றுவோம் என்று முழங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் நேற்று தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாஹூ வெளியிட்டார்.
    இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதியில் நடத்த உத்தேசமாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மார்ச் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிவிடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    ஏழு கட்டங்களாக தேர்தல் ?
    கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக, அதாவது ஏப்ரல் 11ல் தொடங்கி மே 19 வரை நடத்தப்பட்டது. அதே முறையில் 2024ஆம் ஆண்டு தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக மாநில தேர்தல் அதிகாரிகள் விரைவாக இறுதி வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை பேசுவதற்கும் நாடாளுமன்ற பணிகளை மேற்கொள்ளுவதற்கும் குழுக்களை நியமித்து தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. விரைவில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளை ஈடுபட முடிவு செய்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதி ஏப்ரல் 16 என்ற தகவல் வெளியான நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

    Source link

  • Central Government Likely To Carry Out 23 Km Sea Bridge Between India, SriLanka | இந்தியா

    Central Government Likely To Carry Out 23 Km Sea Bridge Between India, SriLanka | இந்தியா

    மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட அடல் சேது பாலம் திறக்கப்பட்டது. ரூ.17, 840 கோடி செலவில் 21.8 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் இந்தியாவின் நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமைகளைப் பெற்றுள்ளது. 
    இந்தியா – இலங்கை இடையே பாலம்:
    இதனைத் தொடர்ந்து சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    இந்த திட்டமானது இந்தியாவின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து, மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ராமர் சேது பாலம், போக்குவரத்து செலவை 50 % குறைத்து இலங்கை தீவை இணைக்க உதவும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஆய்வுகள் விரைவில் தொடங்கப்படுகிறது.

    Government of India is likely to conduct a Feasibility study for a 23KM sea bridge linking #Dhanushkodi in India, and #Srilanka, across the Bay of Bengal.The project, if materialises, will be a big boost for bilateral trade between the two countries, especially for Tamil Nadu…
    — Tamil Nadu Infra (@TamilNaduInfra) January 22, 2024

    கடந்தாண்டு ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்தபோது பாலம் அமைக்க ஒப்புதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்ற அமைச்சகங்கள், அரசு நிறுவனங்களுடன் ஒரு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. 
    அயோத்தி கோயில் விழாவிற்கு முன்னதாக பிரதமர் மோடி தனது ஆன்மீக பயணத்தை அரிச்சல்முனை பகுதியில் முடித்தார். இதனைத் தொடர்ந்து இந்த கடல் பாலம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும் படிக்க: TN Fishermen: மீண்டும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

    Source link

  • Tamil Nadu Latest Headlines News 23rd January 2024 Flash News Details Here

    Tamil Nadu Latest Headlines News 23rd January 2024 Flash News Details Here


    Lok Sabha Election 2024 : ‘ஏப்ரல் 16-ல் நாடாளுமன்ற தேர்தல்?’ தலைமை தேர்தல் ஆணைய கடிதத்தால் தமிழ்நாட்டில் பரபரப்பு..!

    நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 16ல் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறதா? அல்லது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கப்போகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

    State Women Policy: மகளிருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ஒப்புதல் அளித்த தமிழக அமைச்சரவை – லிஸ்ட்டை பாருங்க!

    தற்காப்புக் கலை பயிற்சி, கூடுதலாக 50 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய மாநில மகளிர் கொள்கைக்கு, தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2001ஆம் ஆண்டு, மகளிர் கொள்கையைக் கொண்டு வந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு மாநில மகளிர் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் படிக்க

    TN Govt: தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – முதலமைச்சர் தலைமையில் சீல் செய்யப்பட்ட டீல்..

    சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் படிக்க

    India Stock Market: உலகின் 4வது மிகப்பெரிய பங்குச் சந்தையான இந்தியா! – மொத்த மதிப்பு எத்தனை லட்சம் கோடிகள் தெரியுமா?

    ப்ளூம்பெர்க்ஸ் அறிக்கையின்படி, ஜனவரி 22ம் தேதியன்று அன்று சந்தை மூலதனத்தின் மூலம் இந்தியா ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது. செவ்வாயன்று இந்தியாவின் சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதேநேரம்,  ஹாங்காங்கின் பங்குச் சந்தை மதிப்பு 4.29 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக பின்தங்கியுள்ளது. மேலும் படிக்க

    Minister Udhayanidhi Stalin: முயல் – ஆமை கதையாகிவிடும்; இதை மட்டும் செய்யாதீங்க! நம் இலக்கு இதுதான்! – திமுகவினருக்கு உதயநிதி வைத்த கோரிக்கை..

    சேலத்தில் நடைப்பெற்ற மாநாடு திமுகவுக்கான மாநாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கான மாநாடு என இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்காக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்தும் இடத்திற்கும் பயணித்தோம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தள பதிவில், “ சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். மேலும் படிக்க

    Source link

  • Zee Tamil Sandhya Ragam Serial January 23rd Episode Update | Sandhya Ragam :சீனுவுக்கு மாயா மீது வந்த காதல்.. ஜானகிக்கு காத்திருந்த அதிர்ச்சி

    Zee Tamil Sandhya Ragam Serial January 23rd Episode Update | Sandhya Ragam :சீனுவுக்கு மாயா மீது வந்த காதல்.. ஜானகிக்கு காத்திருந்த அதிர்ச்சி

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். நேற்றைய எபிசோட் முடிவில் ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி ரகுராம் செய்தது தவறு அவருக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என அவரை உட்கார வைத்து மொட்டை அடிப்பது போல் கனவு கண்டு ஜானகி அதிர்ச்சி அடைந்து எழுகிறாள்.
    சந்தியா ராகம்:
    சந்தியா ராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜானகி ஊர் மக்கள் சேர்ந்து ரகுராமுக்கு தண்டனை கொடுப்பது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
    அதாவது ஜானகி ரகுராம் எழுந்ததும் அவரிடம் கெட்ட கனவு கண்டதாகவும் கோவிலுக்கு போயிட்டு வரலாம் எனவும் சொல்ல, ரகுராமும் சம்மதம் தெரிவிக்கிறார். அதன் பிறகு இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்ல ரமணி திடீர்னு என்னப்பா கோவிலுக்கு என்று கேள்வி எழுப்ப ஜானகி உண்மையை சொல்ல வர ரகுராம் கண்ணை காட்டியதும் அமைதியாகி விடுகிறாள். 
    அடுத்து நடக்கப்போவது என்ன?
    அதன் பிறகு எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி வர இங்கே கோவிலில் மாயா பரதநாட்டியம் ஆட அதை பார்த்த சீனுவிற்கு அவள் மேல் காதல் ஏற்படுகிறது. பிறகு சாமியார் ஒருவர் பல வருஷங்களுக்கு முன்னாடி உங்க வீட்ல ஒரு பொண்ணால ( சந்தியா ) நடந்த பிரச்சனை இப்போ உங்க வீட்டு பொண்ணால திரும்பவும் நடக்க போகுது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். மாயாவால் தான் பிரச்சனை என கணக்கு போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    மேலும் படிக்க 
    Siragadikka Aasai: சிக்கிய ரோகிணியின் ரீல் மாமா.. சந்தேகத்தில் முத்து குடும்பம் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!
    Nivetha Pethuraj: நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் நான் கில்லி.. அசத்திய நிவேதா பெத்துராஜ்!
     

    Source link

  • ஏர் இந்தியாவின் அதிநவீன ஏர் பஸ் சொகுசு விமானம்..! முதல் முறையாக சென்னை வந்தது..!

    ஏர் இந்தியாவின் அதிநவீன ஏர் பஸ் சொகுசு விமானம்..! முதல் முறையாக சென்னை வந்தது..!


    <h2 dir="auto" style="text-align: justify;"><strong>அதிநவீன ஏர் இந்தியா விமானம்</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">மும்பையில் இருந்து ஏர் இந்தியாவின்,&nbsp; அதிநவீன ஏர் பஸ் A 350 ரக சொகுசு விமானம், முதல் முறையாக சென்னை வந்துவிட்டு, பெங்களூர் புறப்பட்டு சென்றது. இந்த அதிநவீன சொகுசு விமானம், எரிபொருளை சேமிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், அதிர்வுகள் இல்லாமல், காற்றில் மிகுந்த படி அதிவேகமாக செல்லும்.&nbsp; மும்பையில் இருந்து நேற்று காலை 11.25 மணிக்கு, ஏர் பஸ் A 350 என்ற மிகப்பெரிய அதிநவீன ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு, பகல் 12.48 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது.</div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><strong>ஏர் இந்தியா நிறுவனம்</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">அதன்பின்பு அந்த அதிநவீன மிகப் பெரிய ஏர் இந்தியா விமானம், பிற்பகல் 2.17 மணிக்கு, சென்னையில் இருந்து, புறப்பட்டு, பிற்பகல் 2.54 மணிக்கு, பெங்களூர் சென்றடைந்தது. இந்த ஏர் பஸ் A 350 ரக விமானத்தை, ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ளது. இந்த விமானம் 350 பயணிகளில் இருந்து 400 பயணிகள் வரை பயணம் செய்ய வசதி உடையது. மேலும் இந்த விமானம், எரிபொருளை, மிகுந்த சிக்கனமாக கையாளும் தன்மையுடையது. இதனால் இந்த விமானம் 25% எரிபொருளை சேமிக்கும் திறனுடையது. இந்த விமானம் பறக்கும் போது மிகக் குறைந்த அளவே, கார்பன் டை ஆக்சைடு என்ற கழிவுகளை வெளியேற்றும்.</div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><strong>விமான பயண நேரம்</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">இதனால் காற்று மாசுபடாததோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதோடு இந்த விமானம் வானில் பறக்கும் போதும், புறப்படும் போதும், தரையிறங்கும் போதும், அதிக அதிர்வுகளை ஏற்படுத்தாமல், காற்றில் மிதந்தபடி பறந்து செல்லும். மேலும் இந்த விமானம் அதிவேகமாக செல்லக்கூடியது. மும்பை- சென்னை இடையே, வழக்கமாக விமான பயண நேரம் 120 நிமிடங்கள். ( 2 மணி நேரம்). ஆனால் இந்த விமானம் நேற்று, 83 நிமிடங்களில் (1 மணி 23 நிமிடங்கள்) மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளது. அதைப்போல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு வழக்கமான பயண நேரம் 70 நிமிடங்கள். ஆனால் இந்த விமானம் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு, 37 நிமிடங்களில், சென்றடைந்தது.</div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><strong>ஏர் இந்தியா நிறுவனம்</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ள இந்த அதிநவீன சொகுசு விமானத்தை, சோதனை அடிப்படையில், மும்பையில் இருந்து சென்னைக்கும் அதன் பின்பு, பெங்களூருக்கும் இயக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதைப்போன்ற பெரிய ரக, அதிநவீன விமானம், சென்னை விமான நிலையத்தில், நேற்று முதல் முறையாக வந்து தரை இறங்கி, புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், அதோடு இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில், முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம், இந்த விமானத்தை இந்தியாவிற்குள், இயக்கத் தொடங்கியுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.</div>

    Source link

  • ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிரான கோலி இல்லாத இந்திய அணி.. மாற்று வீரராக புஜாரா, ரஹானே திரும்புவது கடினம்!

    ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிரான கோலி இல்லாத இந்திய அணி.. மாற்று வீரராக புஜாரா, ரஹானே திரும்புவது கடினம்!


    <p>இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஜனவரி 25 முதல் தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளுக்கான தனது பெயரை வாபஸ் பெற்றார். இப்போது விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரரை பிசிசிஐ தேர்வுக்குழு சேர்க்க விரும்புகிறது என்பதுதான் கேள்வி. இத்தகைய சூழ்நிலையில், அனுபவ வீரர் சேதேஷ்வர் புஜாரா அல்லது அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்கு திரும்புவார்களா என்ற கேள்விக்கு பதில் ‘இல்லை’ என்பதுதான்.&nbsp;</p>
    <p>கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியை இந்திய அணி அறிவித்தது. விராட் கோலி தற்போது விலகியதற்கு பிறகு, இன்னும் 15 வீரர்கள் அணியில் உள்ளனர். விராட்டின் மாற்று வீரர் இங்கு அறிவிக்கப்பட்டாலும், தற்போதுள்ள 15 பேர் கொண்ட அணியில் இருந்து மட்டுமே விளையாடும் 11-ஐ தேர்வு செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டே பிசிசிஐ, விராட் கோலிக்கு பதிலாக மாற்று வீரரை அறிவிக்கும். விராட் இல்லாத பட்சத்தில் சுப்மன் கில் நம்பர் 3 விளையாடினால், 4வது இடமான மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது உறுதி.&nbsp;</p>
    <p>விராட் கோலிக்கு பதிலாக ரஹானே அல்லது புஜாரா மாற்று வீரராக அறிவிக்கப்படுவது கடினமே. இவர்கள் இருவருக்குப் பதிலாக தற்போது இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கவே பிசிசிஐ விரும்புகிறது. இதையடுத்து, கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் பெயரே அதிகளவில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.&nbsp;</p>
    <h2><strong>ரஹானே திரும்புவது ஏன் கடினம்?</strong></h2>
    <p>ரஞ்சி கோப்பையின் இந்த சீசனில் அஜிங்க்யா ரஹானே சொதப்பி வருகிறார். கடந்த இரண்டு ரஞ்சி போட்டிகளில் விளையாடி மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும், இரண்டு முறை அவர் டக் அவுட் ஆகியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், ரஹானே இந்திய அணிக்கு திரும்புவது தற்போதைக்கு சாத்தியமற்றது. ரஹானே கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார்.&nbsp;</p>
    <h2><strong>புஜாரா நல்ல ஃபார்மில் இருக்கிறார் ஆனால்…</strong></h2>
    <p>கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சேதேஷ்வர் புஜாரா கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். இதன் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்தும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், ரஞ்சி கோப்பையில் புஜாரா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மூன்று ரஞ்சி போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 444 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு இரட்டை சதமும் அடங்கும்.&nbsp;&nbsp;</p>
    <p>புஜாரா தற்போது ரஞ்சி கோப்பையில் நல்ல பார்மில் இருப்பதாகத் தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்த காலகட்டத்தில் புஜாரா இன்னும் சில நல்ல இன்னிங்ஸ்களை ரஞ்சியில் விளையாடினால், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் இடம் கிடைக்கலாம். இருப்பினும், இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இந்திய இளம் வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இப்படியான சூழ்நிலையில், புஜாராவுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது அரிதே.&nbsp;</p>

    Source link

  • Tamil Nadu Is Likely To Experience Mist Fog In The Early Hours, According To The Meteorological Department. | TN Weather Update: அதிகாலையில் கொட்டப்போகும் பனி

    Tamil Nadu Is Likely To Experience Mist Fog In The Early Hours, According To The Meteorological Department. | TN Weather Update: அதிகாலையில் கொட்டப்போகும் பனி

    தென்னிந்திய  பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
    பனிமூட்டத்திற்கு வாய்ப்பு:
    அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:
    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம் வானிலை மையம் தெரிவித்த நிலையில் இன்று உறைப்பனிக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
    நீலகிரியில் கடும் குளிர்:
    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிர்காலமாகும். இந்த மூன்று மாதங்களும் பகல் நேரங்களில் அதிக வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்துள்ள நீர் துளிகள் பனித்துகள்களாக படிந்து உறைப்பனியாக காட்சியளிப்பது வழக்கம். இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம்,  காந்தள்,  தலைக்குந்தா , அவலாஞ்சி,  அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள  புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. குறிப்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது.  
    கடந்த வாரம் உறை பனி பொழிவு காரணமாக உதகை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியஸும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. இந்நிலையில் இன்றும் உறைப்பனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    Source link

  • Name Of Tamil Nadu Law Minister Omitted In Kallakurichi Court Opening Ceremony Invitation – TNN

    Name Of Tamil Nadu Law Minister Omitted In Kallakurichi Court Opening Ceremony Invitation – TNN

    விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் புதிய நீதிமன்ற திறப்பு விழா அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சரின் பெயர் இடம்பெறாததை கண்டித்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்து நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவினை புறக்கணிக்க போவதாக எச்சரித்துள்ளனர். 
    கள்ளக்குறிச்சி மாவட்டம் மதூர் பகுதியில் புதியதாக நீதிமன்ற கட்டப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் வருகின்ற 25 ஆம் தேதி புதிய நீதிமன்றம் திறக்கப்படவுள்ளதி. புதிய நீதிமன்ற  நிலையில் திறப்பு விழாவிற்கு அச்சிடப்பட்ட  அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெயர் இடம்பெறாமல் அச்சிடப்பட்டிருக்கிறது.

    கள்ளக்குறிச்சி நீதிமன்ற திறப்பு விழா அழைப்பிதழில் தமிழக சட்டத்துறை அமைச்சர் பெயர் இடம் பெறவில்லை https://t.co/wupaoCz9iu | #Kallakurichi #MinisterRagupathy #Ragupathy #DMK #TNGovt pic.twitter.com/BthUJYJlCC
    — ABP Nadu (@abpnadu) January 23, 2024

    அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சரின் பெயர் அச்சிடப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர்கள் அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சரின் பெயர் இடம்பெற வேண்டும் என்றும் திறப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்க நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர்.  மேலும் நீதமன்ற வளாக கட்டிட திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சரின் பெயர் இடம்பெறவில்லை என்றால் நீதிமன்ற திறப்பு விழாவினை வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.

    Source link

  • Budget, Budget 2024 Expectations, Income Tax, Tax Slabs, Nirmala Sitharaman | Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024

    Budget, Budget 2024 Expectations, Income Tax, Tax Slabs, Nirmala Sitharaman | Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024

    Budget 2024 Income Tax Expectations: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள,  பட்ஜெட்டில் வரி செலுத்துவருக்கான சலுகைகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    மத்திய அரசின் பட்ஜெட் 2024:
    வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் 2024 பல்வேறு சாத்தியமான சீர்திருத்தங்கள், குறிப்பாக வருமான வரித்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடாந்திர பட்ஜெட்டானது அரசாங்கத்தின் எதிர்வரும் நிதியாண்டிற்கான நிதித் திட்டங்களைக் வெளிக்காட்டும் ஒரு முக்கியமான கொள்கை ஆவணமாகும். வரி செலுத்துவோர் மற்றும் வணிகர்களுக்கு, வருமான வரி விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது மிக முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் 2024ம் ஆண்டு பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும்  சீர்திருத்தங்களை இங்கு அறியலாம்.
    இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்.
    வரி விதிப்பு முறையில் மாற்றம் வருமா?
    வரி விதிப்பு முறையில் மொத்தம் ஏழு அடுக்குகள் (Slabs) உள்ளன. அவற்றை ஒரு சாமானியர் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. எனவே,  எந்தவொரு பட்ஜெட்டிலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் ஒன்று வருமான வரி அடுக்குகளில் திருத்தம். சமீபத்திய ஆண்டுகளில் வரி செலுத்துவோர் தற்போதுள்ள அடுக்குகள், பணவீக்கம் மற்றும் உயரும் வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கிடுவதற்கான திருத்தம் தேவை என கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கான நிவாரணமாக வரி அடுக்குகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி,  அடிப்படை வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம். மேலும் முற்போக்கான வரிக் கட்டமைப்பை உறுதி செய்வதற்காக புதிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலிக்கக் கூடும்.
    டிஜிட்டல் மாற்றம் மற்றும் வரி இணக்கம்:
    நிதி அமைப்புகளின் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு தொடர்ச்சியான கருப்பொருளாக இருந்து வருகிறது.  அதன் நீட்சியாக 2024 பட்ஜெட் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி கண்ணோட்டத்தில், இது வரி இணக்கம் மற்றும் நிர்வாகத்திற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. வரி மதிப்பீட்டு செயல்முறையை சீரமைக்க மேம்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு டூல்ஸ்களின் அறிமுகம் ஆகியவை எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களில் அடங்கும். இது செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கும், நியாயமான மற்றும் வெளிப்படையான வரி முறையை உறுதி செய்வதற்கும் பங்களிக்கும்.
    நிலையான விவகாரங்களுக்கான ஊக்கத்தொகை:
    காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பற்றிய உலகளாவிய கவலைகள் அதிகரித்து வருவதால், தனிநபர்கள் மற்றும் வணிகர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ஊக்குவிப்புகள் அறிமுகப்படுத்தலாம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல்-திறனுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான வணிக நடைமுறைகளில் முதலீடுகளுக்கான வரிச் சலுகைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், நடப்பாண்டில் பசுமை எரிசக்தி துறையை மேம்படுத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு புதிய வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது.
    ஸ்டார்ட்-அப் மற்றும் புதுமை திட்டங்கள்:
    வரவிருக்கும் பட்ஜெட்டில், ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இருக்கலாம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான வரிச் சலுகைகள், வரிக் கடன்கள் மூலம் மூலதனத்தை எளிதாக அணுகுதல் மற்றும் ஆரம்ப கட்ட தொடக்கங்களுக்கான நட்பு வரிச்சூழல் ஆகியவை எதிர்பார்க்கப்படும் சலுகைகளில் அடங்கும். இந்த மாற்றங்கள் புதுமைகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்
    வரிசுமையை எளிதாக்குதல்:
    வணிகர்களுக்கும், தனிநபர்களுக்கும் வரி செலுத்தும் முறை என்பது பெரும்பாலும் ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்கலாம். 2024 வரவு செலவுத் திட்டம் வரி தாக்கல் செயல்முறையை எளிதாக்குவதற்கும், வரிச்சுமை கவலையை குறைப்பதற்குமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம். இது பயனர்கள் மிகவும் எளிதில் அணுகும் போர்டல், தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் வரிச் சட்டங்களின் சிக்கலான அமைப்பில் வரி செலுத்துவோருக்கு அதிகரித்த ஆதரவை செயல்படுத்துவதை உள்ளடக்கி இருக்கும். 
    சொத்து வரி பரிசீலனைகள்:
    உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள சொத்து சமத்துவமின்மை பிரச்சினையை,  இந்தியா சொத்து வரி களத்தில் சாத்தியமான சீர்திருத்தங்கள் மூலம் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த இடைக்கால பட்ஜெட்டில் சொத்து வரி விகிதங்களைத் திருத்துதல், வரி விதிக்கக்கூடிய சொத்துக்களின் நோக்கத்தை விரிவுபடுத்துதல் அல்லது முற்போக்கான செல்வ வரிக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் இருக்கலாம். இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாயை ஈட்டுவது மட்டுமின்றி, சொத்து சமத்துவமினை பிரச்னைக்கும் தீர்வாக அமையும்.

    Source link

  • Ayalaan: வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி…பிரமாண்டமாக உருவாகும் “அயலான் 2”

    Ayalaan: வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி…பிரமாண்டமாக உருவாகும் “அயலான் 2”


    <p>அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
    <h2><strong>அயலான்</strong></h2>
    <p>இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிகுமார் 7 வருட இடைவெளிக்குப் பின் அயலான் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் ரகுல் ப்ரீத் , கருணாகரன் , யோகிபாபு உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அயலான் படம் திரையரங்கில் வெளியானது .&nbsp;</p>
    <p>தமிழில் முதல் முதலாக ஏலியன் ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கும் அயலான் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தின் வி.எஃப் எக்ஸ் காட்சிகள் உலக தரத்தில் அமைந்துள்ளது என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது. குறைவான பொருட்செலவில் இவ்வளவு தரமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை உருவாக்கிய படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.</p>
    <h2><strong>அயலான் 2</strong></h2>
    <p>அயலான் படம் நல்ல வெற்றிபெறும் பட்சத்தில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிருப்பதாக படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தார்கள். தற்போது உலகளவில் 50 கோடிக்கும் மேலாக படம் வசூல் செய்துள்ள நிலையில் இரண்டாம் பாகத்திற்காக பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன.</p>
    <blockquote class="twitter-tweet">
    <p dir="ltr" lang="en">SK&rsquo;s First Sequel <a href="https://twitter.com/hashtag/Ayalaan2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Ayalaan2</a> ✌️ <a href="https://t.co/y5sKUkAPKj">pic.twitter.com/y5sKUkAPKj</a></p>
    &mdash; Christopher Kanagaraj (@Chrissuccess) <a href="https://twitter.com/Chrissuccess/status/1749662377857974363?ref_src=twsrc%5Etfw">January 23, 2024</a></blockquote>
    <p>
    <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
    </p>
    <p>அயலான் படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவுடன் போட்டுள்ள ஒப்பந்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அயலான் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு தங்களது நிறுவனம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளது. மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மட்டுமே முதற்கட்டமாக ரூ.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.&nbsp; படத்தின் தரத்தை மேம்படுத்த இந்த செலவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி நிலவும் பட்சத்தில் அது மேற்கொண்டு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் ஃபாண்டம் நிறுவனத்தின் உரிமையாளர் பிஜாய் அற்புதராஜின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.</p>
    <h2><strong>எஸ்.கே 21</strong></h2>
    <p>தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p>

    Source link

  • Tamilnadu State New Policy For Women Got Approval In Tamil Nadu Cabinet Why State Women Policy Necessary | State Women Policy: மகளிருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ஒப்புதல் அளித்த தமிழக அமைச்சரவை

    Tamilnadu State New Policy For Women Got Approval In Tamil Nadu Cabinet Why State Women Policy Necessary | State Women Policy: மகளிருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ஒப்புதல் அளித்த தமிழக அமைச்சரவை

    தற்காப்புக் கலை பயிற்சி, கூடுதலாக 50 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய மாநில மகளிர் கொள்கைக்கு, தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசு 2001ஆம் ஆண்டு, மகளிர் கொள்கையைக் கொண்டு வந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு மாநில மகளிர் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
    மாநில மகளிர் கொள்கைக்கான வரைவுக் கொள்கை கடந்த 2021-ம்ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, கருத்துகள் கோரப்பட்டன. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தற்போது முழுமையான கொள்கை வெளியிடப்பட உள்ளது. 
    எதற்காக மகளிர் கொள்கை?
    பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்தல், அவர்களுக்கான தற்காப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்றவை பெண்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய, திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
    பெண்களுக்காக 24 மணி நேர உதவி எண்களைச் செயல்படுத்துவது, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றுடன் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான வளர்ச்சி என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளன.
     
    அதேபோல பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்க மாநில மகளிர் கொள்கை வழிவகை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
    19 வயது வரையிலான இளம் பெண்களுக்கு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலா திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
     
    விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார்
    இதனை விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார் என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த கொள்கை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

    Source link

  • Karur Woman Suicide Because Unable To Bear The Cruelty Of Usury – TNN | வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

    Karur Woman Suicide Because Unable To Bear The Cruelty Of Usury – TNN | வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

    கரூரில் வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்த பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர் பேசிய வீடியோ மற்றும் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
     
     

     
    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்து தெருவை சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவரது கணவர் ஜெய்லானி. கணவரின் நண்பர் அமீது என்பவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக எல்.இ.டி டிவி வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்துள்ளார். அமீது கடன் வாங்கிய ஒரு சில மாதத்தில் ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பாத்திமா பீவி வாங்கி கொடுத்த கடனுக்காக, மூன்று மாதங்கள் வட்டி கட்டி உள்ளார். அதற்கு மேல் வட்டி கட்ட முடியாத நிலையில், மகா பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் அவரை வட்டி கட்ட சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
     
     

     
    இதனால் பாத்திமா பீவி தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். வேறொரு பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வாங்கி தருவதாக நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அதே பைனான்ஸ் என்பது தெரியாமல் பாத்திமா பீவி அங்கு சென்ற நிலையில், அந்த பைனான்ஸ் ஊழியர்கள் அவரை தரக்குறைவாக தகாத வார்த்தைகளில் பேசியும், அவரிடம் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டிலிருந்த டிவியை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் பாத்திமா பீவியை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு விட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடையில் கொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. 
     
     

     
    இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பாத்திமா பீவி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் பைனான்ஸ் ஊழியர்கள் தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து இறப்பதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ மற்றும் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     
     

    Source link

  • Chennai Airport: ஓடுபாதையில் திடீரென பறந்து வந்த ராட்சத பலூன்…சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

    Chennai Airport: ஓடுபாதையில் திடீரென பறந்து வந்த ராட்சத பலூன்…சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!


    <div id=":m7" class="ii gt">
    <div id=":m6" class="a3s aiL ">
    <div dir="auto">
    <div dir="auto"><strong>விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பலூனை கைப்பற்றி,&nbsp; பலூனை பறக்க விட்டிருந்த, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி குழுவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை.&nbsp; இதனால் விமான சேவைகள் பாதிப்பு ஏற்படவில்லை.</strong></div>
    <div dir="auto">&nbsp;</div>
    <h2 dir="auto"><strong> காற்றில் பறந்து வந்த மிகப்பெரிய மஞ்சள் நிற பலூன்</strong></h2>
    <div dir="auto">சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிக்குள் நேற்று மாலை 4.20 மணி அளவில், காற்றில் பறந்து வந்த மிகப்பெரிய மஞ்சள் நிற பலூன் ஒன்று, விமான நிலைய இரண்டாவது ஓடு பாதையில் வந்து விழுந்தது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்களில் இந்த காட்சியை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமான நிலையய பாதுகாப்பு அதிகாரிகள், விமான பாதுகாப்பு பிரிவான பி சி ஏ எஸ் அதிகாரிகளுக்கு அவசரத் தகவல் கொடுத்தனர்.</div>
    <h2 dir="auto"><strong>நைலான் கயிறு&nbsp;</strong></h2>
    <div dir="auto">இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டாவது ஓடு பாதைக்கு விரைந்து சென்றனர். ஓடுபாதையில் கிடந்த சுமார் ஐந்து அடி விட்டமுடைய ராட்ஷச பலூனை ஓடுபாதையில் இருந்து அகற்றினர். அந்த மஞ்சள் நிற, பெரிய பலூன், நீளமான நைலான் கயிறுடன் வந்து விழுந்து கிடந்தது. அந்த பெரிய பலூன், நைலான் கயிறு ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.</div>
    <h2 dir="auto"><strong>வானில் பறக்க விடப்பட்ட பலூன்</strong></h2>
    <div dir="auto">அதன் பின்பு&nbsp; பலூனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விளம்பரத்துக்காக, வானில் பறக்க விடப்பட்ட பலூன் என்று தெரியவந்தது. அந்த பலூனின் நைலான் கயிறு அறுந்து, காற்றில் பறந்து வந்த பலூன், சென்னை விமான நிலைய ஓடுபாதைக்குள்&nbsp; வந்து விழுந்து உள்ளது என்று தெரிய வந்தது.</div>
    <h2 dir="auto"><strong>இரண்டாவது ஓடு பாதை</strong></h2>
    <div dir="auto">ஆனால் அந்த நேரத்தில் விமான நிலைய இரண்டாவது ஓடு பாதையில், விமானங்கள் எதுவும் இல்லை. பொதுவாக பகல் 2.30&nbsp; மணியிலிருந்து நான்கு முப்பது மாலை 4.30 மணி வரையில், இரண்டாவது ஓடு பாதையில், அதிகமாக விமானங்கள் இயக்கப்படுவது கிடையாது. அந்த நேரத்தில் கோவை, கொச்சி, டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த 4 விமானங்கள்,&nbsp; முதல் ஓடு பாதையில் வந்து, தரை இறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும், முதல்&nbsp; ஓடுபாதையை பயன்படுத்தியதால், இரண்டாவது ஒரு பாதை காலியாக இருந்தது.</div>
    <h2 dir="auto"><strong>கேலோ இந்தியா விளையாட்டு</strong></h2>
    <div dir="auto">இதனால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அதைப்போல் விமான சேவைகளுக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், கேலோ இந்தியா விளையாட்டு நிர்வாகக் குழுவினருக்கு, தகவல் கொடுத்து, அவர்களிடம் பலூனை ஒப்படைத்தனர்.ஆனாலும் இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</div>
    </div>
    </div>
    </div>

    Source link

  • India Becomes 4th Largest Stock Market In World By Market Capitalisation Overtakes Hong Kong | India Stock Market: உலகின் 4வது மிகப்பெரிய பங்குச் சந்தையான இந்தியா!

    India Becomes 4th Largest Stock Market In World By Market Capitalisation Overtakes Hong Kong | India Stock Market: உலகின் 4வது மிகப்பெரிய பங்குச் சந்தையான இந்தியா!

    India Stock Market: ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச் சந்தை என்ற இடத்தை இந்தியா எட்டியுள்ளது.
    உலகின் 4வது மிகப்பெரிய பங்குச் சந்தை:
    ப்ளூம்பெர்க்ஸ் அறிக்கையின்படி, ஜனவரி 22ம் தேதியன்று அன்று சந்தை மூலதனத்தின் மூலம் இந்தியா ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது. செவ்வாயன்று இந்தியாவின் சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதேநேரம்,  ஹாங்காங்கின் பங்குச் சந்தை மதிப்பு 4.29 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ​​அமெரிக்கா 50.86 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தையாக உள்ளது. அதைதொடர்ந்து, சீனா 8.44 டிரில்லியன் மற்றும் ஜப்பான் 6.36 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை பங்குச் சந்தை மதிப்பாக கொண்டுள்ளது. இதில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு சுமார் 359 லட்சம் கோடியாக உள்ளது. 
    எதிர்பார்ப்பை தரும் இடைக்கால பட்ஜெட்: 
    2023 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களின் ஏற்றம் மற்றும் அதிகரித்த உள்நாட்டு பங்கேற்பு காரணமாக, இந்திய பங்குகள் புதிய உச்சத்தை எட்டியது. இதனால், இந்திய பங்குச் சந்தையின் மூலதனம் மதிப்பு டிசம்பர் 5 அன்று முதல் முறையாக 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், HDFC வங்கியில் நடப்பாண்டில் எதிர்பார்த்ததை விட குறைவான வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய மத்திய வங்கிகளால் எதிர்பார்க்கப்படும் வட்டி விகிதக் குறைப்புக்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதோடு, பிப்ரவரி 1-ம் தேதி வெளியாக இருக்கும் பட்ஜெட் அறிவிப்பு இந்திய சந்தையின் எழுச்சியை மேலும் தூண்டும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    2023ம் ஆண்டில் வளர்ச்சி:
    2023 ஆம் ஆண்டில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே முறையே 18.8 சதவிகிதம் மற்றும் 20 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளன. அதே நேரத்தில் மும்பை பங்குச்சந்தையில்  மிதமான சந்தை மூலதனம் மற்றும் சிறிய மூலதனப்பிரிவு முறையே 45.5 சதவிகிதம் மற்றும் 47.5 சதவிகிதம் ஏற்றம் பெற்றுள்ளன. டாடா மோட்டார்ஸ் 101 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 88 சதவீதமும், என்டிபிசி 87 சதவீதமும், எல்&டி 69 சதவீதமும், கோல் இந்தியா 67 சதவீதமும் உயர்வை சந்தித்துள்ளது.
    தொடர் ஏற்றத்தில் இந்தியா:
    ஹாங்காங்கின் ஹெங் செங் பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதோடு,  ஷாங்காய் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நஷ்டத்தைக் கண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஏற்றம் கண்டு வருவதோடு,  தொடர் வளர்ச்சிக்கும் தயாராக உள்ளன. தேர்தலுக்கு முந்தைய வலுவான நம்பிக்கைகள், மேக்ரோ பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் வட்டி விகிதக் குறைப்புகள் நாட்டின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்பப்படுகிறது. 

    Source link

  • Rathnam : முடிவடைந்தது 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    Rathnam : முடிவடைந்தது 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!


    Rathnam : முடிவடைந்தது ‘ரத்னம்’ படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    Source link