Author: Sanjuthra
-

top news India today abp nadu morning top India news February 9th 2024 know full details | Morning Headlines: வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்; பினராயி விஜயன் தலைமையில் போராட்டம்
வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.! மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. மேலும் படிக்க UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட்…
-

Lal Salaam: அதிர்ச்சி.. லீக்கான லால் சலாம் படம்.. சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு
<p>நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதன் காட்சிகளை வெளியிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. </p> <p>முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “லால் சலாம்”. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் இன்று (பிப்ரவரி 9)…
-

Pakistan Election Results 2024 Imran Khan party backed independent candidates leads Nawaz sharif faces tough contest
Pakistan Election: பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பொதுத் தேர்தம் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்களும் சிறுபான்மை சமூகத்திற்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலில்…
-

on facebook live Shiv Sena UBT leader Abhishek Ghosalkar shot dead in mumbai | Mumbai Gun Shot: ஃபேஸ்புக் நேரலையில் கொடூரம்
Mumbai Facebook Gun Shot: மும்பையில் ஃபேஸ்புக் நேரலையின் போது அரசியல் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஃபேஸ்புக் நேரலையில் கொலை: உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர், ஃபேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்த போது ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதோடு, தாக்குதல் நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் ஃபேஸ்புக் நேரலையில் பதிவாகியுள்ளது. தஹிசார் பகுதியில் உள்ள MHB காலனி…
-

Lal salaam telugu version saikumar dubbed super star rajinikanth voice | Lal Salaam Rajini: லால் சலாம் படத்திற்கு டப்பிங் பேசிய பிரபலம்
Lal Salaam Rajini: லால் சலாம் படத்தில் ரஜினிக்கு டப்பிங் பேசிய பிரபலம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் இன்று திரைக்கு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால்…
-

7 am headlines today 2024 9th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் பிரதமர் மோடி விரும்பவில்லை – டெல்லியில் நடைபெற்ற கேரள அரசின் போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் – இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துகணிப்பில் தகவல் திமுக அரசு 30 மாதங்களில் 8.65 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது – எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கை கோரிக்கைக்கு பதிலடி ஆட்சியின் கடைசிக் காலத்திலாவது நிதிப்பகிர்வை தந்திடுங்கள் – பாஜக அரசுக்கு…
-

list of Singer Anuradha Sriram was singing songs with kollywood top heroes
1995 ஆம் ஆண்டு பம்பாய் படத்தில் இடம்பெற்ற மலரோடு மலர் இங்கு என்ற பாடல் மூலம் திரைத்துறையில் அனுராதா ஸ்ரீராம் அறிமுகமானார். தொடர்ந்து இந்திரா படத்தில் இடம்பெற்ற அச்சம் அச்சம் இல்லை பாடலும், மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே பாடலும் அவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அனுராதா ஸ்ரீராம், தனது 6வது வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார்.குழந்தை…
-

PM Modi does not like Chief Minister post Stalin spoke in Delhi in support of Kerala govt protest | Stalin Slams BJP: மாநமுதலமைச்சர்களை விரும்பாத பிரதமர் மோடி
CM Stalin Slams BJP: இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருந்து பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். கேரள முதலமைச்சர் போராட்டம்: டெல்லி ஐந்தர்மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டியும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி…
-

petrol and diesel price chennai on February 7th 2024 know full details
Petrol Diesel Price Today, February 9: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…
-

Lal Saalam Audio Launch Superstar Rajinikanth speech about sanatana dharma
Rajinikanth: லால் சலாம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, தனது அப்பாவை சங்கி என விமர்சிப்பது வருத்தம் அளிப்பதாக கூறிய அதே மேடையில் இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படம் நாளை ரிலீசாக உள்ளது. படத்தில் மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட்…
-

karthigai deepam zee tamil serial today 8th february episode update | Karthigai Deepam Feb 08:: ஐஸ்வர்யாவிடம் கார்த்திக் கேட்ட கேள்வி, வீட்டில் வெடித்த பிரச்சனை
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்று துணிக்கடையில் ஆனந்த் பெண்ணுடன் வந்திருக்க கார்த்திக், மீனாட்சி அதே கடைக்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ஆனந்த் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள, கார்த்திக் மீனாட்சியை பார்க்க மீனாட்சி துணி எடுக்க வந்ததாக சொல்ல, அவன் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆனந்தை தேடி மேலே செல்ல, ஆனந்த்…
-

sandhya raagam serial zee tamil episode today february 8th written episode
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாருவை ரகுராம் வீட்டில் தங்க வைக்க பார்வதி பிளான் போட்டு சம்மதம் வாங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, மாயா டைரியை கொண்டு வந்து ரகுராம் முன்பாக வைத்திருக்க, அவரும் அதை எடுக்க போன சமயத்தில் போட்டோ கீழே விழ, மாயா எடுக்கப் போகிறாள்.…
-

Hemant Soren: ஜார்க்கண்டில் திருப்பம்! ஹேமந்த் சோரனுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்கும் இடையே தொடர்பா? அதிர்ச்சி தகவல்
<p>ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும், கடந்தாண்டு வருமான வரித்துறை சோதனையில் ரூ.351 கோடியுடன் சிக்கிய காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாஹூவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. </p> <h2><strong>ஹேமந்த் சோரன் கைது:</strong></h2> <p>ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி, காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், சட்டவிரோதமாக சுரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து அதன்மூலம் பண பலன்கள் அடைந்ததாக 2022 ஆம்…
-

Santhosh Narayana Neeye Oli Music Concert Press Meet and shared breakup with arivu | Neeye Oli Concert: தெருக்குரல் அறிவு என் நம்பரை பிளாக் செய்துள்ளார்
Neeye Oli Concert: பாடகர் அறிவு என் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தலைமையில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி 6 மணி நேரம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனையாகும் நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
-

வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.!
<p>மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. </p> <h2><strong>வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்?</strong></h2> <p>இப்படிப்பட்ட சூழலில், வரி பகிர்வு விவகாரம், பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. மாநிலங்கள் தரும் வரியிலிருந்து நிதியை பெற்றுக் கொண்டு, திருப்பி தர வேண்டிய நிதியை…
-

Rajinikanth throwback video goes viral on grounds lal salaam release
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அன்று முதல் இன்று வரை அதே சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 9ம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதுவே போதும்: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் த்ரோ பேக்…
-

Uttarakhand Curfew Imposed Shoot On Sight Order Issued After Violence Erupts In Haldwani
உத்தரகாண்ட் மாநிலம் பன்புல்புராவில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், நைனிடால் மாவட்டம் ஹல்த்வானி நகரில் மதக்கலவரம் வெடித்துள்ளது. அரசு நிலத்தில் மதரஸாவை சட்டவிரோதமாக கட்டியதாகக் கூறி மாவட்டம் நிர்வாகம் இடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதரஸா இடிக்கப்பட்டதால் வெடித்த கலவரம்: அதுமட்டும் இன்றி, தரைதளத்தில் இருந்த மசூதி போன்ற கட்டுமானமும் இடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக பன்புல்புரா பகுதியில் நைனிடால் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) ஊரடங்கு…
-

Vijay fame minsara kanna film heroine Monica Castelino picture goes on viral
Vijay Heroine: விஜய் நடித்த மின்சார கண்ணா பட்டத்தில் நடித்த மோனிகாவுன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதால் அவரா இவர் என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர். மின்சார கண்ணா ஹீரோயின்: 1999ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மின்சார கண்ணா. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து குஷ்பு, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், அனுமோகன், சுந்தரராஜன், கோவை சரளா என பலர் நடித்திருப்பார்கள். காமெடி, பாடல்,…
-

India Myanmar relationship witness crack suspends Free Movement Regime
இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக இருப்பது மியான்மர். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதி 1,500 கி.மீட்டருக்கு மேல் நீள்கிறது. வரலாற்று ரீதியாகவும், இன ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக உறவை பேணி வருகிறது. மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மக்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்: இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேணி வருவதால், இந்திய – மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் இந்தியர்கள், மியான்மர் எல்லைக்குள் விசா இன்றி 16 கிமீ வரை செல்ல…
-

actor bose venkat criticizes actor vijay political entry
எந்த விதமான பொதுப்பணியிலும் அனுபவம் இல்லாமல் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட் தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று…
-

Right to Disconnect: ஆபீஸ் முடிந்த பிறகும் வேலை அழைப்பு வருகிறதா? தடுப்பதற்கு வருகிறது புது சட்டம்!
<p>ஒரு நாளில் பணி நேரம் முடிந்தபிறகு அலுவல் தொடர்பான ஃபோன் அழைப்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை வழங்கும் முறையில் ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது. </p> <h2><strong>பணி நேரம் கடந்தும் வேலை:</strong></h2> <p>அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேலை செய்து பொருளீட்டுவது என்பது காலப்போக்கில் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளது. வேலை, குடும்பம், உறவுகள், வாழ்க்கை என எல்லாவற்றையும் சமநிலையோடு அணுகுவதில் ஆண், பெண் என இருவருமே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால்…
-

Anand Mahindra Meets Couple That Inspired 12th Fail Takes Autograph
12th Fail: ஐ.பி.எஸ். மனோஜ்குமார் ஷர்மா, அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ். இருவரும் தான் உண்மையான ஹீரோக்கள் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். 12த் ஃபெயில் படம்: இந்தியில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு தியேட்டரில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வெளியான படம் ‘12த் ஃபெயில் (12th Fail)’. சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா…
-

இடிக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் ; வணிக வளாகமாக மாறும் டிலைட் தியேட்டர்!
<p style="text-align: justify;">தென் இந்தியாவின் முதல் சலனப்படக் காட்சியாளர் என்ற பெருமைக்குரியவர் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார். ஒரு பிரெஞ்சுக்காரரிடம் இருந்து பெற்ற தன் நவீன படக்காட்சி கருவியுடனும், துண்டு படச் சுருள்களுடனும், இந்தியா முழுக்கப் பயணம் செய்து, ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தனது சலனப்படங்களை காட்டி வந்தார். பிறகு, கோவையில் ஒரு நிரந்தர கொட்டகை ஒன்றை கட்டினார். அது தற்போது வெரைட்டிஹால் சாலையில் அமைந்துள்ள டிலைட் தியேட்டர் ஆகும். அதன் பழைய பெயர் தான் வெரைட்டி ஹால்…
-

Krishnagiri: ஓசூர் அருகே நில அதிர்வு! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள் – மாவட்ட ஆட்சியர் பரபரப்பு விளக்கம்
<p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. </p> <p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்த அஞ்செட்டி பகுதியில் இன்று இலேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல் அம்மாவட்டத்தில் உள்ள மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியிலும் நண்பகல் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் சம்பங்கி மார்தொட்டி முனியப்பன் கோயில் உள்ளது. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் சற்று பீதியடைந்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. </p>…
-

CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – மிரட்டும் தமிழ்நாடு அரசு
<p>திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 2021இல் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளைப் புதிது புதிதாக அமைத்துத் தமிழ்நாட்டை ஒரு தொழில் கோட்டமாக உருவாக்கிடும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள்.</p> <h2><strong>33 மாத ஆட்சிக் காலத்தில் எவ்வளவு முதலீடு?</strong></h2> <p>2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க…
-

BJP White Paper Report Indian Economy PM Modi Govt India Economic Misery Negative Impacts Economy
காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். பாஜக வெள்ளை அறிக்கை: அதில் தெரிவித்துள்ளதாவது, 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றபோது நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. பணவீக்கம் அதிகமாக இருந்தது. முதலீடுகள் குறைவாக இருந்தது. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் குறைந்த அளவில்தான் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது. மேலும் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் காமன்வெல்த் ஊழல் இருந்தன எனவும்…
-

Womens Job Fair Tomorrow is the last day to register for a camp to find qualified women entrepreneurs to provide high-quality professional services in Tiruvannamalai – TNN | Womens Job Fair: மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்
உயர்தர தொழில் சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ரூஙரழவ் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது ரூஙரழவ் ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும் நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டமானது 6 வட்டாரங்களில் 308 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…
-

Trichy news Olympic Academy in Trichy official announcement is to be made in the state budget – TNN | திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி
திருச்சி மாவட்டத்தை சென்னைக்கு நிகராக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ஆசிய அளவில் பல்வேறு வசதிகளுடன் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும் அதே பகுதியில் லாரிகள் முனையம், காய்கறிகள் சந்தை, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பேருந்து முனையம் 80 சதவீத பணிகள் முடிக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.…
-

Salem district collector provided loan assistance to 18,216 women self-help group members – TNN
ஈரோட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி…
-

New Movie Release list on lal salaam lover email premalu eagle
New Movie Release: நாளை ரஜினி நடித்த லால் சலாம், மணிகண்டன் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ்வர் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகின்றன. லால் சலாம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அடுத்ததாக உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்து விக்ராந்த் மற்றும்…
-

Wildlife Photography: "அழகாக உறங்கும் துருவக் கரடி" சிறந்த வன உயிரின புகைப்பட கலைஞர் விருதை வென்றது!
<p>சிறைய பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் பிரிட்டன் தேசிய வராலாற்று அருங்காட்சியகத்தின் சார்பில் வழங்கப்படும் ஆண்டின் ‘சிறந்த வனவிலங்கு புகைப்படம்’ (மக்கள் தேர்வு) விருதைப் பெற்றுள்ளது.</p> <h2><strong>தூங்கும் துருவக்கரடி:</strong></h2> <p>துருவக் கரடி அழகாக உறங்கிய படத்தை எடுத்த பிரிட்டனைச் சேர்ந்த நிமா சரிஹானி (Nima Sarikhani) ‘ இந்தாண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்’ விருதை வென்றுள்ளார். ’Natural History Museum’ நடத்திய புகைப்படப் போட்டியில் நார்வே தீவுகளில் உள்ள துருவக் கரடியை படமெடுத்த…
-

கரூர் அருகே பஞ்சாயத்து சிறப்பு கிராம சபைக்கூட்டத்திலேயே பஞ்சாயத்து ?
<p style="text-align: justify;">கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடாந்தூர் கிராமத்தில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற கிராம சபைக்கூட்டம் மக்கள் வராமல் முடிக்கவைக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்த பின்னர், மீண்டும், சிறப்பு கிராம சபைக்கூட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் துணைத்தலைவர் செல்வராஜ் முன்னிலையில், கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கோடாந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே நடைபெற்ற இந்த…
-

UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!
<p>விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.</p> <h2><strong>பொது சிவில் சட்ட மசோதா:</strong></h2> <p>இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வரும் நிலையில்,…
-

actress yami gautam reveals about her pregnancy at article 370 trailer launch event
தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகை யாமி கெளதம் (Yami Gautam) தனது படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். யாமி கெளதம் பஞ்சாப் இயக்குநர் முகேஷ் கெளதமின் மகள் யாமி கெளதம், தொடக்க காலத்தில் சோப் மற்றும் ஃபேர் & லவ்லி விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த விக்கி டோனர் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தமிழில் கடந்த 2016 ஆம்…
-

Congress leader Rahul Gandhi says PM Modi Not Born In OBC Family Misleading People
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்டை தொடர்ந்து ஒடிசா சென்றடைந்துள்ளது. பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு: ஒடிசா மாநிலத்தில் யாத்திரையின்போது பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தவர் அல்ல, பொதுப்பிரிவை சேர்ந்த அவர் தன்னை ஓபிசி என சொல்லி…
-

STR 48 Director Desingh periyasamy appreciates manikandan starrer lover movie
லவ்வர் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ட்வீட் வெளியிட்டுள்ளார். லவ்வர் குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப்…
-

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்திற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி சங்கர் லால் குமாவத் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐஏஎஸ் அதிகாரியான அரவிந்தன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பானையை இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் ராகுல் சர்மா, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை…
-

In Ayodhya we are ready to provide KFC a space if only veg foods allowed Govt official | KFC in Ayodhya: அயோத்தியில் கே.எஃப்.சி. கடை! இது லிஸ்ட்லயே இல்லையே
அயோத்தி ராமர் கோயில்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள்…
-

Chennai Bomb Threat News Schools Bomb Scare Hoax Chennai Additional Commissioner of Police Prem Anand Sinha | Chennai Bomb Threat: சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே; குற்றவாளியைப் பிடிக்க சைபர் படை
Chennai Bomb Threat Latest News: சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேபோல இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் இன்று (பிப்.7) வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால்,…
-

Indian Cricketer Virat Kohli Unlikely To Play In 3rd And 4th Test Against England Latest Tamil Sports News
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளிலும் விராட் கோலி விளையாடுவது சந்தேகம்தான். அதன்படி, ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடக்கும் போட்டிகளில் விராட் கோலி களமிறங்கமாட்டார் என தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அணி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். இந்தநிலையில், அவரது மனைவி அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக…
-

மயிலம் அருகே மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் செயல்படும் கல்குவாரியில் வெடி வைப்பதற்காக பள்ளம் தோன்டிய போது மண் சரிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p> <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தில் இரண்டு வருடங்களாக டிபிஎல் என்ற நிறுவனத்தின் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரை சார்ந்த அய்யனார் சேலத்தை ராஜேந்திரன் ஆகிய இருவரும் வழக்கம் போல் இன்று பணிக்கு…
-

Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! Source link
-

புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை – புதுச்சேரியில் பெற்றோர்கள் அச்சம்
<p style="text-align: justify;">புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.</p> <p style="text-align: justify;">புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் கேன்சரை உருவாக்க கூடிய விஷ தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு …
-

Tamil Nadu latest headlines news till afteroon 8th february2024 flash news details here | TN Headlines: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
Chennai Bomb Threat: பரபரப்பு… சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை…
-

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி சங்கர் லால் குமாவத் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமினம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளான அரவிந்த், ஸ்ரீகாந்த், ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து 2 நாட்கள் தமிழக தலைமை தேர்தல்…
-

Additional Chief Secretary Panindra Reddy has ordered the formation of a 14-member committee for the negotiation of the 15th Wage Agreement | Transport Commision: 15 வது ஊதிய ஒப்பந்தம்! 14 பேர் கொண்ட குழு அமைப்பு
15 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்துக் கொள்வதற்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 14வது ஊதிய ஒப்பந்தம்: இது தொடர்பான அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், “தொழிலாளர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்தமானது 31.08.2023 அன்றுடன் முடிவடைந்த நிலையில், போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான தங்களது…
-

TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..
<p>தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p> <p>அதன்படி இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. </p> <p>நாளை கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p> <p>வரும்…
-

pm modi lauds former pm manmohan singh in rajya sabha as he retires | PM Modi Lauds Manmohan Singh: ’ மன்மோகன் சிங்கின் பங்கு மகத்தானது’
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டதொடர் வரும் 10 ஆம் முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வுப்பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…
-

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10ம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென்…








suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz