Rcb

ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையே சேரும்.

தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பைகளை வென்று, ஆர்சிபி அணியை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆண்டி பிளவர் 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.

Rcb

அவர் உள்ளே வந்த உடனே, ஆர்சிபி-யின் பழைய சிந்தனை முறையை முழுமையாக மாற்றியமைத்தார். அதன் முதல் சாட்சி மெகா ஏலத்தில் அவர் காட்டிய விஸ்வரூபம் தான். அதுவரை ஆர்சிபி என்றாலே பெரிய ஸ்டார் வீரர்களை கோடிக்கணக்கில் கொட்டி வாங்கும் அணி என்ற பிம்பம் இருந்தது. ஆனால் ஆண்டி பிளவர் மற்றும் மோ போபட் கூட்டணி, அந்த பிம்பத்தை உடைத்து முற்றிலும் டேட்டா மற்றும் வீரர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஏலத்தை அணுகியது.

ஆண்டி பிளவர் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, ஆர்சிபி அணி தனிநபர்களின் அதிரடி ஆட்டத்தையே அதிகம் நம்பியிருந்தது. ஆனால், ஆண்டி பிளவர் வந்த பிறகு அந்த நிலை முற்றிலும் மாறியது. எந்த ஒரு வீரரும் தனியாக அழுத்தத்தை எதிர்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பொறுப்புகளை முன்கூட்டியே வழங்கிவிட்டார்.

டாப் ஆர்டர் சொதப்பினால் மிடில் ஆர்டர் எப்படிச் சமாளிக்க வேண்டும், பவர்பிளேயில் ரன்களை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் போன்ற விஷயங்களில் வீரர்களுக்கு அசைக்க முடியாத தெளிவைக் கொடுத்தார். இதுவே ஆர்சிபி அணியை ஒரு சாம்பியன் அணியாக மாற்றிய முதல் படியாகும்.

Rcb
Rcb

ஆண்டி பிளவர் அணியில் உள்ள சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அனுபவத்தையும்  , இளம் கேப்டன் ரஜத் படிதாரின் நிதானத்தையும் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதே நேரத்தில், இளம் வீரர்களுக்குக் கொடுத்த அதீத ஆதரவும், அவர்கள் மீது வைத்த நம்பிக்கையும்தான் இறுதிப்போட்டி வரை அணியை கம்பீரமாக வழிநடத்த உதவியது. இக்கட்டான சூழ்நிலைகளிலும் அணிக்குள் ஒரு அமைதியான சூழலை அவர் உருவாக்கியது, வீரர்களை எவ்வித பயமும் இன்றி விளையாட வைத்தது.

கோப்பைகளை வென்றதைத் தாண்டி, ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையே ஆண்டி பிளவர் மாற்றியமைத்துள்ளார். குறிப்பாக, பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம் மற்றும் உள்நாட்டு இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் போதிய வாய்ப்புகளை வழங்கியது ஆர்சிபி-யின் பலவீனத்தை அதன் பலமாக மாற்றியது.

ஆர்சிபி என்றால் வெறும் பேட்டிங் அணி மட்டுமே என்ற பிம்பத்தை உடைத்து, பந்துவீச்சிலும் மிரட்டக்கூடிய ஒரு முழுமையான சாம்பியன் அணியாக மாற்றிய பெருமை இவரையே சேரும். ரசிகர்களின் நீண்ட காலக் கனவை நனவாக்கி, ஆர்சிபி அணியின் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை ஆண்டி பிளவர் உருவாக்கியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

யார் இந்த ஆண்டி பிளவர்?

ஆண்டி பிளவரை பொறுத்தவரை ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன் மற்றும் உலகப் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆவார். ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் இவர், ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஜிம்பாப்வே வீரர் ஆவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 11,500-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ள இவர், 2001-ல் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார். டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் (232) எடுத்த உலக சாதனை இன்றும் இவர் வசமே உள்ளது. ஓய்வுக்குப் பின் புகழ்பெற்ற பயிற்சியாளராக மாறிய இவர், இங்கிலாந்து அணியை உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாற்றியதோடு, டி20 உலகக் கோப்பையையும் வென்று தந்து உலகளவில் சாதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed