மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “பைசன் காளமாடன்’.
தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
‘பைசன் காளமாடன்’ படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு நேற்று (மே.1) வெளியானது. படத்திற்கு ‘மஞ்சணத்தி’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று 83-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளையராஜாவுக்கு மாரிசெல்வராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.






















