<p>நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போல், இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.</p>
<h2><strong>எதிர்பார்ப்பை கிளப்பும் நாடாளுமன்ற தேர்தல்:</strong></h2>
<p>வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது.</p>
<p>அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்ற பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஆனால், கடந்த முறை போன்று, இந்த முறையும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் திமுக தலைமையிலான கூட்டணி அதிரடியில் இறங்கியுள்ளது.</p>
<p>குறிப்பாக, தங்களின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பாஜக குறிவைத்து வேலை பார்க்கும் தென்சென்னையில் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<h2><strong>காலை உடைத்து கொண்ட தமிழச்சி தங்கப்பாண்டியன்:</strong></h2>
<p>ஏன் என்றால், திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளும் இந்த தொகுதியில் பலமான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.</p>
<p>பாஜகவை பொறுத்தவரையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன், தென்சென்னையில் போட்டியிடுகிறார். தெலங்கானா ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p>
<p>திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் இறங்கியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p>
<h2><strong>மருத்துவர்களின் ஆலோசனையை மீறி பரப்புரை:</strong></h2>
<p>கடந்தாண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளான தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. எனவே, பல சவால்களுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஈடுபட்டு வருகிறார்.</p>
<p>இந்த நிலையில், சைதாப்பேட்டையில் தேர்தல் அலுவலகத்தை திறக்கும்போது தமிழச்சி தங்கப்பாண்டியன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.</p>
<p>பிசியோதெரபி செய்யவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும், 15 நாள்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.</p>
<p>ஊன்றுகோலின் உதவியோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு தேவையான ஏற்பாடுகளையும் திமுகவினர் செய்து கொடுத்துள்ளனர்.</p>
<p> </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
nexus link wethenorth market link
leuke casino Also visit my site – beste Poker nederland (https://barriosenaccion.com.ar)
dark market list nexus dark web
Для выбора надежного партнера рекомендуем ознакомиться с [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг мультимедийных интеграторов[/url], который поможет найти лучших специалистов в Москве. На первых позициях…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை – சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி | ACTPnews.com
-

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?’ விஜய் – மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார் | Kazhugar updates on PTR and TVK, BJP politics | ACTPnews.com
-

“தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?” – கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ் | TN Minister Vignesh Questions: “Why Can’t Tamil Nadu Produce a Prime Minister? | ACTPnews.com
-

“கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது என்பது வழக்கம்”- கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்! | minister Viswanathan explain about k.n nehru statement | ACTPnews.com
-

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன? | ACTPnews.com


















Если вам требуется качественный [url=https://remont-dvig124.ru]Ремонт двигателей[/url], обращайтесь к профессионалам. Так обеспечивается длительная и стабильная эксплуатация транспортного средства.