×


தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில்  சமூகப் பணிகளை செய்து வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்  வருடந்தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர்மாநில   இளைஞர்   விருது   ஒவ்வொரு ஆணடும்   சுதந்திர   தினத்தன்று 15    வயது     முதல் 35 வயது வரையுள்ள 3   ஆண்கள் மற்றும் 3   பெண்களுக்கு  வழங்கப்பட்டு   வருகிறது.  இந்த விருதோடு ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை வழங்குவார்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்டம்
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர்    மாநில   இளைஞர்   விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  15    வயது     முதல் 35 வயது வரையுள்ள 3   ஆண்கள் மற்றும் 3   பெண்களுக்கு இந்த விருது  வழங்கப்பட்டு   வருகிறது.  இந்த    விருது ரூ.100000/- ரொக்கம், பாராட்டுப்  பத்திரம்    மற்றும்   பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். இதுகுறித்த செய்தியினை செங்கல்பட்டு    மாவட்ட   ஆட்சித்தலைவர்    ச. அருண்ராஜ் ,   தெரிவிக்கையில் 2024  ஆம்   ஆண்டிற்கான   முதலமைச்சர்    மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர  தின விழாவில் வழங்கப்பட உள்ளது.  இவ்விருது  தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் / பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2023 அன்று 15 வயது  நிரம்பியவராகவும்,   மார்ச் 31.03.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024  வரை மேற்கொள்ளப்பட்ட   சேவைகள்  மட்டுமே   கருத்தில்   கொள்ளப்படும்.
விருதிற்கு  விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக   இருத்தல்   வேண்டும். ( அதற்கான  சான்று   இணைக்கப்பட வேண்டும்)
விண்ணப்பதாரர்கள்  சமுதாய   நலனுக்காக   தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறிப்படக்  கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய. மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லுரரிகள் மற்றும்   பள்ளிகளில்    பணியாற்றுபவர்கள்   இவ்விருதிற்கு    விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு  உள்ளூர்  மக்களிடம்   உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
இணையதளம்  மூலம்   விண்ணப்பிக்க கடைசி நாள். 01.05.2024 முதல் கடைசி நாள். 15.05.2024 அன்று  மாலை  4.00   மணி ஆகும்.

எனவே   மேற்கண்ட   நிதியாண்டிற்கு   செங்கல்பட்டு   மாவட்டத்திலுள்ள  தகுதியுள்ள   நபர்கள்  விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் www.sdat.tn.gov.in    விண்ணப்பித்து பயன்பெறுமாறும்.   மேலும்    விவரங்களுக்கு   செங்கல்பட்டு  மாவட்ட விளையாட்டு   மற்றும்   இளைஞர்   நலன்  அலுவலர்   தொலைபேசி  எண். 7401703461 என்ற எண்ணில் தொடர்பு   கொள்ளலாம் என்று  செங்கல்பட்டு   மாவட்ட   ஆட்சித்தலைவர்   ச. அருண்ராஜ்,   தெரிவித்துள்ளார்.
 விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டியது என்ன ?  
விண்ணப்பதாரர்கள் தாங்கள்   சாதனை குறித்த தகவல்களை அரசுக்கு அளிக்க வேண்டும்.  மேலும் விண்ணப்பித்த தங்களின் சாதனைகளைப் பற்றி பத்திரிகை செய்திகள்,  சான்றிதழ்கள்,  அது குறித்த புகைப்படம்  வீடியோ தொகுப்புகள்,  மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து ஆவணங்களையும் மூன்று புத்தகங்களாக தயார் செய்ய வேண்டும்.  இவ்வாறு தயார் செய்யும் புத்தகங்களை  செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு அலுவலரிடம்  குறிப்பிட்ட தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பார்த்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்

மேலும் காண

Source link

Author

anbilchinnathambi@gmail.com

Related Posts