மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில், ” முதலில் சிவசேனா, அடுத்து தேசியவாத காங்கிரஸ், தற்போது திரிணமுல் காங்கிரஸ். பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன. பின்னர், கட்சியின் சின்னமும் பறிக்கப்படுகிறது.
ஒரு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளையும் திருட முடியும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
வாக்குத் திருட்டு; அரசாங்கத் திருட்டு; தற்போது கட்சியும் திருடப்படுகிறது. இவை நம்முடைய ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளமாக மாறிவிட்டன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியிலான பொறுப்பு, மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதுதான். ஆனால், மக்கள் தீர்ப்பை மதிக்காதோருக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இது மம்தா பானர்ஜியின் போராட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு வாக்காளரின் போராட்டம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
























