நுகர்வு என்பது கடைக்குச் சென்று மளிகைப் பொருள்களை வாங்குவது… துணிகள் வாங்குவது மட்டுமல்ல. ரியல் எஸ்டேட் வாங்குவது போன்றவையும் ஆகும்.
சின்னச் சின்னப் பொருள்களை விட, ரியல் எஸ்டேட் மாதிரியான பெரிய விஷயங்களுக்குச் செலவு செய்யும்போது, ஜி.எஸ்.டி வசூல் இன்னும் அதிகமாகும். இது தற்போது குறைந்திருக்கலாம்.
மக்களின் நுகர்வு குறைவாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு சான்று, தற்போது இந்தியாவிலேயே அதிக தங்க நகைக்கடன் வாங்கும் டாப் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் போனதால்தான், மக்கள் நகைக்கடன் என்கிற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஜி.எஸ்.டி வசூல் 1 சதவிகிதக் குறைவு என்பது பெரிதாகக் கவலைப்படுவதற்குரியது அல்ல. ஆனால், கவனிக்க வேண்டும்.
காரணம், 1 சதவிகிதம் என்பது மிகவும் குறைந்த எண்ணிக்கையே. இது பெருமளவில் எந்தவொரு பாதிப்பையும் பெரிதாக இப்போதைக்குத் தராது.
ஆனால், இது தொடர்ந்தால், மாநிலத்தில் வருவாய் பெருமளவு அடிப்படும்” என்று விளக்கினார்.
























