புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ்-16, பாஜக -10, அதிமுக – 2, எல்ஜேகே -2 என தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்டன.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என கூட்டணி அமைத்து நின்றன.
விஜய்யின் தவெக.-28 தொகுதிகளில் தனித்தும், அதன் கூட்டணியாக நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிட்டது.
நாம் தமிழர் கட்சி 28 தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில், 117 சுயேச்சைகள் உள்பட 294 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.
என்.ஆர்.காங்கிரஸ் – 12
திமுக – 5
பாஜக – 4
தவெக – 2
காங்கிரஸ் – 1
அதிமுக – 1
எல்ஜேகே – 1
நேயம் மக்கள் கழகம் – 1
சுயேட்சைகள் – 3
இதில், தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களை விட கூடுதலாக வெற்றி பெற்று, 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் – 12
பாஜக – 4
அதிமுக – 1
எல்ஜேகே – 1
இதே காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
காங்கிரஸ் – 1
திமுக – 5
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்த நேயம் மக்கள் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது.



























