ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை.
அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஈரானின் செய்தி நிறுவனமான Fars தெரிவித்துள்ள தகவல்…
“சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவிற்கு அருகே பல வெடிச் சத்தங்கள் கேட்டன.

கார்க் தீவில் உள்ள ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் கூறுகையில், அந்த வெடிச் சத்தம் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்தே எழுந்ததாகத் தோன்றினாலும், அப்பகுதியில் புகையோ அல்லது தீயோ எழுந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்று கூறியுள்ளார்.
இதுவரை, அந்த வெடிப்புகளுக்கான காரணம் அல்லது அவை எங்கிருந்து எழுந்தன என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.”
இதுவரை அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது. இது அமெரிக்காவின் தாக்குதல்தான் என்று உறுதியானால், ஈரான் என்ன பதிலடி கொடுக்குமோ?
























