பார்ட் டைம் வேலை.. குறி வைத்து களமிறங்கும் மோசடி கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!



Chennai oi-Vignesh Selvaraj
Published: Thursday, August 20, 2026, 18:48 [IST]
சென்னை: ஆன்லைனில் தற்போது அதிகரித்து வரும் பார்ட்-டைம் வேலை மோசடிகள் தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையம் இன்றைக்கு அத்தியாவசியமாக மாறியுள்ள சூழலில், இணையத்தை பயன்படுத்துபவர்களை குறி வைத்து ஏராளமான மோசடிகள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் வாயிலாக பணம் சம்பாதிக்கலாம், ஆன்லைனில் பார்ட் – டைம் வேலை பார்த்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை குறிவைத்து பல மோசடிகள் நடக்கின்றன. வீட்டில் இருக்கும் பெண்மணிகள், கூடுதல் வருமானத்துக்காக பார்ட் டைம் வேலை தேடும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து பகுதி நேர வேலை தருவதாகக் கூறி உள்ளே இழுத்து, முதலீடு செய்தால் பல மடங்கு பணம் திரும்பக் கிடைக்கும் என ஆசை காட்டி அவர்களின் பணத்தை அபேஸ் செய்யும் கும்பல்கள் பெருகி உள்ளன. இந்நிலையில், ஆன்லைனில் தற்போது அதிகரித்து வரும் பார்ட்-டைம் வேலை மோசடிகள் தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் ஒரு வார்னிங் வீடியோவை AI உதவியுடன் தயாரித்து வெளியிட்டுள்ளனர். அரசு வேலை தமிழக இளைஞர்களுக்கு இல்லையா? வடமாநில நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுகிறதா? வேல்முருகன் அந்த வீடியோவில், “ஒருவர் டெலிகிராம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, பகுதிநேரப் பணி (Part-time work) மூலமாக கூகுள் மேப்ஸ் ரிவ்யூ கொடுத்தால் வருமானம் ஈட்டலாம் என்று ஒரு விளம்பரம் கண்ணில் படுகிறது. அதை நம்பி அந்த குரூப்பில் இணைகிறார். அதில் இருக்கும் அட்வைசர் மொத்தம் 28 டாஸ்க்குகள் உள்ளன, ஒவ்வொரு மூன்று டாஸ்க்குகளுக்கும் பணம் அனுப்புவோம் என்று கூறுகிறார். மூன்று டாஸ்க் முடிந்ததும், அந்த நபருக்கு உண்மையிலேயே பணம் அனுப்புகிறார்கள். அதைப் பார்த்து நம்பிக்கை வந்ததும், ஆன்லைன் பிட்காயின் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதை நம்பி அந்த நபர் ரூபாய் 50,000 செலுத்துகிறார். ஆனால், முதலீடும் டாஸ்க்குக்கான பணமும் சேர்ந்து வரும் என்று பார்த்தால் எதுவுமே வரவில்லை. பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை.. 2,482 பணியிடங்கள்.. மாதம் ரூ.85,920 சம்பளம்.. டிகிரி தகுதி தான் அந்த நபர் ஆலோசகரிடம் கேட்கிறார்; அதற்கு அவர், “இன்னொரு 50,000 ரூபாய் செலுத்துங்கள். அப்பொழுதுதான் ஏற்கனவே செலுத்திய பணமும் லாபமும் சேர்ந்து கிடைக்கும்” என்று கூறுகிறார். அதை நம்பி அந்த நபர் மறுபடியும் ரூ. 50,000 செலுத்துகிறார். ஆனால், அதற்குப் பிறகு ட்ரேடிங் கணக்கு முடக்கப்படுகிறது. கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்று கேட்டால், “தவறான முறையைப் பயன்படுத்திவிட்டீர்கள்.. மீட்டெடுக்க இன்னும் பணம் செலுத்த வேண்டும்” என்று அட்வைசர் கூறுகிறார். எப்போதுமே தெரியாத டெலிகிராம் அல்லது வாட்ஸ்அப் சேனலில் வரும் பகுதிநேர வேலை வாய்ப்புகளை நம்பி சேர வேண்டாம். அதில் வரும் குழுக்களை நம்பி பணம் செலுத்தாதீர்கள். வேலை தரும் நிறுவனங்களை நேரில் சென்று சரிபாருங்கள். முதலீடு செய்வதற்கு முன்னால் செபி செக்கில் சரிபாருங்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. English summary
Tamil Nadu Cyber ​​Crime Police have issued a warning regarding the rising number of online part-time job scams.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *