3ஆவது அணியாக சிஎஸ்கே வெளியேறியுள்ளது.

Last Updated:

13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

3ஆவது அணியாக சிஎஸ்கே வெளியேறியுள்ளது.
3ஆவது அணியாக சிஎஸ்கே வெளியேறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று, முதலில் பந்துவீசுவதாகத் தீர்மானித்தார். இதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. குஜராத் அணியின் துவக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகிய இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சைத் தும்சம் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 12.2 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது. அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 37 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

மறுபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன், சிஎஸ்கே பந்துவீச்சை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடித்தார். அவர் 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்து அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவர்களுக்குப் பின் வந்த விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், வெறும் 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 229 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். குஜராத் அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சஞ்சு சாம்சன் முதல் பந்தில் வெளியேறினார். மேத்யூ ஷார்ட் 24 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்களும் எடுத்தனர். கார்த்திக் சர்மா 19 ரன்களும், பிரேவிஸ் 8 ரன்களும், சிவம்துபே 47 ரன்களும் எடுத்தனர்.

13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த  சென்னை அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 12 புள்ளிகளை மட்டுமே பெற்று அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed