Author: Sanjuthra
-

நாற்காலி டூ அதி நவீன குசன் சேர்: தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் திடீர் மாற்றம் – ACTPnews.com
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அவர், தினமும் தலைமைச் செயலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் நேரக் கட்டுப்பாடு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. காலை 9:30 அல்லது 10:00 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார்.அலுவல் பணிகள்: மாலை 4:00 மணி வரை அங்கேயே தங்கி துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொள்கிறார்.மதிய உணவு: மதிய உணவிற்காக…
-

வெனிசுலா அதிபர் அவரது மனைவி நாடு கடத்தல் : அமெரிக்கா செயலுக்கு கியூபா, ஈரான் கண்டனம் – ACTPnews.com
அமெரிக்கா, வெனிசுலா இருநாடுகள் இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்துவரும் சூழலில், அதிகளவில் குற்றவாளிகளையும், போதைப் பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். தவிர, மதுரோவை தானாக முன்வந்து பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ட்ரம்ப்…
-

திருப்பதி கோயிலில் அன்னதானம் கூட தரமாக இல்லை?: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வேதனை – ACTPnews.com
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளை மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. 1985-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், திருமலையில் மாதா புஷ்பாஞ்சலி மண்டபம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் பல இடங்களில் காலை முதல் இரவு வரை தடங்கலின்றி, அன்னதானம் மற்றும் லட்டு பிரசாதத்தை வழங்கி வருகிறது. அன்னபிரசாதத்தில் ரசம், சாம்பார், கூட்டு, தயிர், இனிப்பு வகைகள் மற்றும் மசால் வடை பரிமாறப்படுகிறது.தினமும் சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான…
-

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூலை மாதம் இடைத்தேர்தல் ? – ACTPnews.com
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் தனிபெருபான்மை கிடைக்காத காரணத்தால் காங், விசிக, கம்யூ.., கட்சிகள் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே அதிமுகவில் தவெக ஆதரவு அணி ஒன்று உருவானது. எஸ்.பி.வேலுமணி தலைமையில் உருவான இந்த அணி பின்னர் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டது. இதனால் வேலுமணி அணியில் இருந்த மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல்; பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயகுமார்; தாராபுரத்தில் களமிறங்கிய சத்யபாமா; அம்பாசமுத்திரம் தொகுதியில்…
-

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ACTPnews.com
நேற்றிரவு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் படியாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குலை நடத்திவருக்கிறது. இதையடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி அமலான…
-

செல்ல நாயை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அடிதடி,ரகளை,மண்டை உடைப்பு கலவரமான கல்யாண மண்டபம் – ACTPnews.com
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் காகா கோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த புதன்கிழமை சுமித் கேஷர்வானி என்ற மணமகனுக்கும், அவரது காதலிக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பதேபூருக்கு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வந்திருந்தனர். மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் அந்த இடத்தை அடைந்தனர். மாலை மாற்றுதல் உள்ளிட்ட ஆரம்ப விழாக்கள் அமைதியாக நிறைவடைந்தன. அதிகாலை 4 மணியளவில், திருமண பீடத்தில் நகைகள் வழங்கும் சடங்குகள்…
-

டெல்லியில் அறிவாலயம் தொடங்கிய அட்டாக்: ராகுல் காங்கிரசை விமர்சனம் செய்து திமுக பேனர் – ACTPnews.com
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த பேரவைத் தேர்தல்களில் சில முக்கிய கூட்டணிக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. இந்தச் சரிவுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் மனக்கசப்புகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறியதைக் கடுமையாக விமர்சித்த திமுக, இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. …
-

பில்கேட்ஸ் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த ரூ.71,100 கோடி – ACTPnews.com
உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் இருவரும் பரஸ்பர விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அந்த தம்பதி இணைந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில்கேட்ஸ், மெலிண்டா தம்பதி அந்த பதிவில்…
-

“என்ன கருமம் டா இது” BSNL இயக்குநருக்கு உள்ளாடை, செருப்பு எடுத்து தர 50 அதிகாரிகள் நியமனம் – ACTPnews.com
பொதுதுறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லில் மூத்த இயக்குநராக பணியாற்றுபவர் விவேக் பன்சால். இவர் இன்றும், நாளை என இரு தினங்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அங்கு திரிவேணி சங்கத்தில் புனித நீராடுதல், கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் குடும்பத்துடன் பங்கேற்க இருந்தார். இதற்காக, பன்சாலின் பயண ஏற்பாடுகளை செய்து கவனிக்க 50 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 50 அதிகாரிகளுக்கு தலா 20 விதமான பொறுப்புகள் வழங்கப்பட்டு…
-

திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் இவரா? வெளியான ட்விஸ்ட்! – ACTPnews.com
2026 சட்டமன்றத் தொகுதியில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் நின்ற விஜய், இரண்டு தொகுகளிலும் வெற்றிப் பெற்றதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது. இதனால், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார் விஜய். இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத அவர், தன் மேலாளர் வீட்டு நிகழ்ச்சிக்காக ‘சிங்கப்பெண்’ திட்ட தொடக்க…
-

வாட்ஸ்அப், டெலிகிராம் முடக்கம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யும் அரசு! – ACTPnews.com
உலகப்புகழ் பெற்ற தகவல் தொடர்புச் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது ரஷ்யா. அந்நாட்டின் சட்டங்களுக்குப் புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ‘வீசாட்’ (WeChat) பாணியில், ரஷ்யா ‘மேக்ஸ்’ (MAX) என்ற புதிய சூப்பர் ஆப்-ஐ உருவாக்கியுள்ளது. இதில் வீடியோ கால், ஆடியோ கால் மற்றும் பணப்பரிவர்த்தனை போன்ற வசதிகளுடன் அரசுச் சேவைகளையும் பெற முடியும். இந்தச் செயலியை மக்கள்…
-

“மக்களே உஷாரா இருங்க” 215 மருந்துகளுக்கு தடை?: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வார்னிங் – ACTPnews.com
தரமற்ற மருந்துகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அடிக்கடி மருந்தங்கள், மருந்து உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை மேற்கொள்கின்றன. இந்த சோதனைகளின் போது தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால். அதனை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டுவாரியம் தடை விதித்து வருகிறது. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி,…
-

புதுக்கட்சி தொடங்குவது உறுதி: அடம் பிடிக்கும் அண்ணாமலை, டீல் பேசும் பாஜக – ACTPnews.com
மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு அரசியலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை மெளனம் காத்து வந்தார். பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினரில் இருந்து அண்ணாமலை விலகி, இளைஞர்களை மையப்படுத்திய புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப் போவதாக கூறப்பட்டு வந்தது. இதற்கான அறிவிப்பை ஜூன் 4 தனது பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 2 நாட்கள்…
-

3 நாட்களில், 10 ஆயிரம் ஆணுறைகள் காலி: குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் ஜாலி, கூடுதலாக வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறல் – ACTPnews.com
2026 மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்கில் உலக நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். போட்டி தொடங்கிய முதல் சில நாட்களுக்குள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்து போய்விட்டன. போட்டி ஏற்பாட்டளர்கள் வழங்கிய 10,000 பேக் ஆணுறைகள் விரைவாக தீர்ந்து போனதால், மீண்டும் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். இந்த போட்டிகளின் போது ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் வாரக்கணக்கில் அருகிலேயே வசிக்கின்றனர், எனவே நிச்சயம் அவர்களுக்கு ஆணுறை அதிகளவில் தேவைப்படலாம். 2024 ஆம் ஆண்டு பாரிஸில்…
-

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுதலை: டெல்லி நீதிமன்றம் அதிரடி – ACTPnews.com
டெல்லியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகச் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில்…
-

ராஜ்யசபா எம்பி பதவி எங்களுக்கு வேணும்: தவெகவிடம் காங்கிரசு டிமொண்ட் – ACTPnews.com
அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் தற்போது காலியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி நாடாளுமன்ற அரசியலில் தடம் பதிக்கத் தவெகவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்குத் தகுதியான வேட்பாளரைத் தவெக தலைமை தீவிரமாகத் தேடி வருகிறது. இதற்கிடையே, நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பெயர் தவெக தரப்பில் பலமாகப்…
-

உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம் – ACTPnews.com
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக…
-

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை ? ஜூன் 4-ல் ‘மக்கள் சக்தி இயக்கம்’ கட்சியை அறிவிக்கிறார்! – ACTPnews.com
அதிமுகவுடனான கூட்டணிக்காக அண்ணாமலை தலைவர் பதவியை பாஜக மேலிடம் பறித்தது. அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்குத் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தொகுதி பொறுப்பாளர் பணி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். சட்டமன்ற தேர்தலிலும் அண்ணாமலை போட்டியிட வைக்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த சிங்கநல்லூர் தொகுதியை அதிமுக ஒதுக்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாமல் பிரசாரத்தோடு நிறுத்தி…
-

போலீஸ் ஸ்டேஷனாக மாற போகும் ஹிட்லர் பிறந்த வீடு: மக்கள் அமோக வரவேற்பு – ACTPnews.com
ஜெர்மனி நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள பிரானாவ் அம் இன் (Braunau am Inn) என்ற ஊரில், சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு உள்ளது. நீண்ட நாட்களாகப் பாழடைந்து கிடக்கும் இந்தக் கட்டிடத்தைக் காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடம் நாஜி ஆதரவாளர்கள் மற்றும் தீவிர வலதுசாரி அமைப்பினர் கூடும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கம். 2016-ஆம் ஆண்டில் ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த…
-

ஈரான்-இஸ்ரேல் போர் சென்னை விமான சேவை பாதிப்பு, இன்று 36 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மட்டுமில்லாது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகளை குறி வைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகள் தங்களது வான்வழி மற்றும் விமான நிலையங்களை மூடி உள்ளன. இதன் காரணமாக நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 2-வது நாளான நேற்று சென்னையில் இருந்து…
-

அழிவை நோக்கி திமுக? விஜய் போடும் பலே திட்டம்..! – ACTPnews.com
2026 சட்டமன்றத் தேர்தலின்போது “இங்க ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்னு TVK இன்னொன்னு DMK” என்று ஒவ்வொரு மேடைகளிலும் திமுகவை எதிர்த்தே தன் அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார் விஜய். இதனால் திமுக வெறுப்பு என்பது அதிகரிக்க, தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவுக்கு எதிராக அமைந்தது. பெரும்பான்மையான இடங்களை பிடித்த விஜய், ஆட்சியை அமைக்க டார்கெட் செய்ததும் திமுகவை தான். திமுக கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் இழுத்த தவெக பெரும் ஆதரவோடு…
-

விண்வெளியில் எலான் மஸ்க் உருவாக்கும் பிரம்மாண்ட டேட்டா சென்டர் : சிப்கள் உருகிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை – ACTPnews.com
விண்வெளியில் சுமார் 10 லட்சம் செயற்கை கோள்களை நிலைநிறுத்தி, ஒரு மாபெரும் நெட்வொர்க்கை உருவாக்க எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். பூமியைப்போல இரவு நேரம் அல்லது மேகமூட்டம் போன்ற தடைகள் விண்வெளியில் இல்லை என்பதால், அங்கு 24 மணிநேரமும் தடையற்ற சூரியசக்தியை பெற முடியும். மேலும், பூமியில் சர்வர்களை குளிர்விக்க அதிக நீர் மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், விண்வெளியின் இயற்கையான குளிர்ச்சியான சூழல் இதற்கு உதவும் என மஸ்க் நினைக்கிறார். விண்வெளியில் உள்ள இந்த டேட்டா சென்டர்கள்…
-

அரசு மருத்துவமனை அவலம்: பிணவறையில் வாலிபர் சடலத்தை சாப்பிட்ட நாய், தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம் – ACTPnews.com
தெலுங்கானா மாநிலம், மெகபூபா பாத் மாவட்டம், நாகசாலா பகுதியைச் சேர்ந்த பீமேஸ்வர் (32) என்ற லாரி ஓட்டுநர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். அவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரால் மீட்கப்பட்ட அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக ஜட்சர்லா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பீமேஸ்வரின் உடலை வைப்பதற்கு ஊழியர்கள் முறையான ஸ்ட்ரெச்சர் (Stretcher)…
-

2016 அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – ACTPnews.com
2016 தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பின்படி, இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்பதுரை அந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ சலுகைகள் எதையும் கோர முடியாது…
-

“சோனமுத்தா மொத்தமா போச்சா” இந்தியாவில் இனி X தளத்தில் செக்ஸ் வீடியோக்கள், போட்டோ பார்க்க பதிவிட முடியாது – ACTPnews.com
அதிகளவு ‘எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 105.1 மில்லியன் அமெரிக்க மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.’எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் இந்தியா உள்ளது. சுமார் 23.1 மில்லியன் இந்திய மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரிமியம் மற்றும் பிரிமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு க்ரோக் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதி வழங்கப்படுகிறது. சிலர் எக்ஸ் தளத்தில்…
-

இஸ்ரேல்- ஈரான் போர், மாறி மாறி தாக்குதல் பதற்றம் : வளைகுடா நாடுகள் கடும் பாதிப்பு – ACTPnews.com
யுஏஇ-ல், சுற்றுலா தலங்கள், பங்கு சந்தைகள் மூடல் ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகம்,குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதலில் இறங்கி இருக்கிறது. போர் எதிரொலியாக பிராந்தியம் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இதனால், துபாயில் உள்ள உலகளாவிய…
-

தமிழக பட்ஜெட் ஜூன் 3-வது வாரம் தாக்கல் ?: நாளை அமைச்சரவை கூட்டம் – ACTPnews.com
2026-2027ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு காரணம் ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே திமுக அரசு பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்து இருந்தது. இதனால் புதிய அரசு அமைந்த பிறகு 2026-2027 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து, முதல்வராக விஜய் பொறுப்பேற்று கொண்டார். தவெக ஆட்சி பொறுப்பேற்று 1 மாதங்கள் நெருங்கும்…
-

திருப்பதி கோவிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிக்பாஸ் நடிகைகளால் சர்ச்சை – ACTPnews.com
பிரபல நடிகைகள் தனுஜா, மாதுரி ஆகியோர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள். இந்த இரு நடிகைகளும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானவர்கள். இரு நடிகைகளும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய இவர்கள் தனுஜாவின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேக பரவி பெரும் சர்ச்சையையும்…
-

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் : பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார், ஈரான் அறிவிப்பு? – ACTPnews.com
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், குவைத் உள்பட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலில் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெஞ்சமின் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானில் 555 பேர் பலி கடந்த 28-ந்தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்…
-

மேயர் ப்ரியா VS தவெக பெண் எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்: அரசு விழாவில் பதற்றம் – ACTPnews.com
2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவிக நகர் தொகுதியில் தவெக சார்பில் பல்லவி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் திருவிக நகர் தொகுதிகுட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளிகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக புளியந்தோப்பில் உள்ள உருது பள்ளி புதிய கட்டிடத்தை மேயர் ப்ரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது தவெக பெண் எம்எல்ஏ பல்லவி தனியாக கத்திரிகோல் வைத்து தனியாக ரிப்பன் வெட்டினார். இதை தொடர்ந்து, பள்ளிக்கு…
-

மகளிர் தினத்தில் நள்ளிரவில் மத்திய அரசு கொடுத்த பரிசு: சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு – ACTPnews.com
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி இல்லதரசிக்கு அதிர்ச்சியை…
-

“இது உனக்குத் தேவையா” ஈரான் மீது போர் தொடர்ந்தால் நஷ்டம் அமெரிக்காவுக்கு தான்: ரூ.18.87 லட்சம் கோடி செலவாகும் என கணிப்பு – ACTPnews.com
கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் காமேனி உட்பட 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. போரின் முதல் நாளில் மட்டும் அமெரிக்கா சுமார் 779 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,900 கோடி) செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் போர் நீண்ட…
-

என்னம்மா இப்படி பண்றீங்கம்மா! தொகுதி மாறி நன்றி சொன்ன தவெக அமைச்சர் – ACTPnews.com
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கம்யூ, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் ஆதரவுடன் கூட்டணி அமைச்சரவை தவெக அமைத்துள்ளது. முதலமைச்சர் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், விஜயின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார். அமைச்சர் ஸ்ரீநாத், தொகுதி மாறிச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கலாய்த்து…
-

இந்தியாவில் 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பு – ACTPnews.com
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகள் மற்றும் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த நாடுகள் தங்களது வான்வழியை மூடியுள்ளன. இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை…
-

ராஜினாமா கடிதம் வரவே இல்லை… ட்விஸ்ட் கொடுத்த நயினார்..! – ACTPnews.com
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடியிடன் பேச அண்ணாமலை அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாகவும், அவரை சந்தித்த பிறகு அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுகிறாரா இல்லையா என்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், அண்மையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, ”புதிய கட்சி தொடங்குவது குறித்து…
-

“கிழவியை கூட விட்டு வைக்கலயாடா” 90 வயது மூதாட்டிக்கு நடந்த அவலம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் – ACTPnews.com
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர் மூதாட்டியை கட்டிலுடன் கிணற்றில் வீச முயன்றனர். அப்போது, மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்…
-

“பஞ்சாயத்து ஓவர்” ஹார்மூஸ் நீரிணை வழியில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் அமைச்சர் தகவல் – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் ஹார்மூஸ் நீரிணை பகுதியில்…
-

Hard Disk-கள் திருட்டு, சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி வலியுறுத்தல் – ACTPnews.com
சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு மின்வாரிய தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்த தலைமை அலுவலகத்திலிருந்து டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய ரகசியத் தகவல்கள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் புகாரில் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்ல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மலர்விழி புகார் அளித்துள்ளார். இது குறித்து திருட்டு வழக்குப்…
-

கும்பமேளா புகழ் மோனலிசா முஸ்லிம் இளைஞருடன் திடீர் காதல் திருமணம் – ACTPnews.com
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்றது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற இளம்பெண் மோனலிசா ஒரே நாளில் வைரலானார். அவரது கண்களும், சிரிப்பும், முகத்தோற்றமும் பலரையும் கவர்ந்தது. ஒரு வீடியோவால் நாடுமுழுவதும் கவனிக்கப்பட்டார் மோனலிசா. ஆனால், அதேசமயம் அவரது அழகு ஆபத்தாகவும் மாறியது. பலரும் மோனலிசாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர்.…
-

ஈரான் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு – ACTPnews.com
பிப்ரவரி 28 அன்று போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி உட்பட பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் , “இந்த நபர்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல்வேறு படைப்பிரிவுகளை கட்டளையிட்டு வழிநடத்துகிறார்கள். இது உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிடுகிறது. இவர்களை பற்றிய தகுதியான தகவல்கள் அளித்தால் 10…
-

இந்தியா கூட்டணி “கதம் கதம்” ஜூன் 8-ம் தேதி கூட்டத்தில் பங்கேற்பு இல்லை: திமுக அறிவிப்பு – ACTPnews.com
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்: டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான…
-

உலகநாடுகள் நிம்மதி பெருமூச்சு : ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்களுக்கு மட்டும் தடை – ஈரான் புதிய அறிவிப்பு – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இதன் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது. இந்த வழித்தடத்தில்தான், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்றளவில் நடைபெறுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் அந்நாட்டுக் கப்பல்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை வழியே அனுமதி இல்லை என ஈரான் அறிவித்துள்ளது. மேலும், நீரிணை வழியே…
-

''அப்படி செய்திருந்தால் 'அபூர்வ சகோதரர்கள்' தோல்வி படமாகியிருக்கும்!" – நினைவுகள் பகிரும் கமல்ஹாசன் | actpnews.com
94-வது வயதில் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் ‘சிங் கீதம்’ என்ற தெலுங்குப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஜூன் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கமல்ஹாசன், சிங்கீதம் ஸ்ரீனிவாசாவுடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். கமல், சிங்கீதம் சீனிவாசராவ் இந்த நிகழ்வில் கமல்ஹாசன், “நான் திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். எங்கள் இருவருக்குமான முதல் சந்திப்பு…
-

டெல்லி செங்கோட்டை மியூசியமில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொப்பி திருட்டு – ACTPnews.com
2019-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி ஜெயந்தி அன்று, சந்திரகுமார் போஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் நேதாஜியின் தொப்பி பிரதமர் மோடியிடம் நேரடியாக வழங்கப்பட்டது. பிரதமர் மோடி அந்தத் தொப்பியைப் பெற்றுக்கொண்டு, செங்கோட்டையில் உள்ள நேதாஜி மியூசியத்தின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்தார். சமீபத்தில் Open Platform for Netaji – OPN அமைப்பின் உறுப்பினர் வழக்கறிஞர் நவீன் பாமல் மியூசியத்திற்கு சென்றபோது, அந்தத் தொப்பி அங்கிருந்து காணாமல் போயிருப்பதைக்…
-

சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் சரண்டர்: உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் – ACTPnews.com
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு …
-

98-வது ஆஸ்கார் விருதுகள் கோலாகலம்: அதிக விருதுகளை தட்டி சென்ற அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் – ACTPnews.com
98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, இன்று (மார்ச் 16) அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கியது. இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில்…
-

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?! |Is Raghava Lawrence contesting the Trichy East by-election?! | actpnews.com
அந்தப் பதிவில் அவர், “நான் திருச்சி கிழக்குத் தொகுதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகப் பல்வேறு ஊடகத் தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. என்னுடைய ஊடக நண்பர்கள் பலரும் இது குறித்து விளக்கம் கேட்பதற்காக என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்திக்கக் கோரியும் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்கள். இந்த தகவல்களுக்கு நான் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையை எட்டியுள்ளதால், இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் தற்போது “பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில்…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









Every day is a new beginning