போலி சான்றிதழ் சிக்கலில் கும்பமேளா பிரபலம்.. போக்சோ வழக்கில் சிக்கிய கணவர்! - Kumudam

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே, கடந்த ஆண்டு கும்பமேளாவில் வைரலாகித் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். இவர் முகமது ஃபர்மான் என்ற இளைஞரைக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த மார்ச் 11-ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மோனலிசாவுக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவல்துறை அவர்களை ஒன்றாகச் செல்ல அனுமதித்தது.

இந்நிலையில், தேசிய பழங்குடியினர் ஆணையம் நடத்திய அதிரடி விசாரணையில் மோனலிசா 2009-ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது கண்டறியப்பட்டது. திருமணத்தின் போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆகியிருந்ததும், இதற்காகப் போலியான பிறப்புச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது. சட்டப்படி திருமண வயதை எட்டாத ஒரு சிறுமியைத் திருமணம் செய்த குற்றத்திற்காக, மத்தியப் பிரதேச காவல்துறை ஃபர்மான் கான் மீது ஆவண மோசடி மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தத் தவறிய கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலக் காவல்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed