தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டு மக்களின் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், பொதுமக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைத்து கழகத் தோழர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் தொடர்பாக சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் பகுதிகளில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது எனத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சிரமம் தரும் வகையிலான கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதாக தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports