தவெக தலைவர் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிலும், இந்தியாவை கடந்து இலங்கையில் நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் அர்ச்சுனா, விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதோடு மட்டுமல்லாமல், விஜய்யிடம் கச்சத்தீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
🔴🔴🔴 pic.twitter.com/HxHUTLQiN4
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 5, 2026
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல் எழுந்து வரும் நிலையில், இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய யாழ்ப்பாணத்தை, தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தே குரல் எழுந்துள்ளது, விஜய்க்கு கிடைத்த பெருமை என்று கூறப்படுகிறது.



























