தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாகி சாதனை  - Kumudam

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திறனாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்பட்டுள்​ளன.

காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவானது. மதியம் 1 நிலவரப்படி 56.81 சதவிகிதம் வாக்கு பதிவானது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவிகித வாக்குகள் பதிவானது. 

மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்த வாக்காளர்கள் டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த முறை கூடுதல் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளது அரசியல் கட்சிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. 

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed