சட்டமன்றம்


மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்று சொல்லித்தான் விவாதத்தைத் தொடங்குகிறார்கள்.

சட்டமன்றம்

அந்த மானியக் கோரிக்கை அநாமத்தாகக் கிடக்கிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் (திமுக – தவெக) 5 வருடங்களுக்கு முன்பு நடந்தது, பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது என்பன பற்றியெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் மானிக்கக் கோரிக்கை தவிர்த்து வேறு எதுவும் பேசுவதில்லை. ஆனால் அவர்களுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு தருவதில்லை. சட்டமன்றத்தில் குழாயடி சண்டை வேண்டாம். நேரலை ஒளிபரப்பு மூலம் எம்எல்ஏக்களின் செயல்பாட்டை தொகுதி மக்கள் பார்க்கின்றனர்.

தங்கள் தொகுதி எம்எல்ஏ பேசுகிறாரா, தூங்குகிறாரா என்பதை மக்கள் அறிய முடிகிறது. நேரலையில் ஒளிபரப்பான பின் நீக்கினாலும், நீக்காவிட்டாலும் ஒன்றுதான். சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட்டு அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

தேவையற்ற பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவைக்கு வெளியே பொதுக்கூட்டங்களில் பேசிக் கொள்ளலாம். சட்டப்பேரவையில் ஒருவரையொருவர் சீண்டுவதன் மூலம் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் திசைதிருப்பக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed