பரந்தூர் விமான நிலையம்: "நிலத்தைத் ஒப்படைப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.!"- பூவுலகின் நண்பர்கள்| Poovulagin Nanbargal regarding the decision Parandur airport project


வெப்பத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கூறிய இடங்களில் நிலப்பயன்பாட்டை மாற்றுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இதுபோன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டித்தான் புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் முடிவை நாங்கள் எதிர்த்தோம். தற்போது விமான நிலையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட்டுள்ளது.

ஆனால், நேற்று இவ்விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பதிலளித்துப் பேசிய தொழிதுறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத் தொழில் திட்டங்கள் மக்களைப் பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி இப்பகுதியில் ஏற்படும் எனக் கூறியுள்ளார்.

இம்முடிவும் சூழல் தாக்கங்களை அதிகரிக்கக் கூடியதே ஆகும். குறிப்பிட்ட திட்ட அமைவிடத்தின் நிலப்பயன்பாட்டை வேறெந்த திட்டங்களுக்காக மாற்றினாலும் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒன்றுதான். ஆகவே, கீழ்காணும் கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கிறோம்.

தமிழ் நாடு அரசின் திட்டக் குழு வெளியிட்ட அறிக்கையைக் கருத்தில் கொண்டு கையகப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலப்பயன்பாட்டை மாற்றாமல் இருப்பதற்கான உரிய வழிகளை ஆராய்ந்து இவ்விவகாரத்தில் தக்க முடிவெடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம்.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பது குறித்து தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம், 1997-ன் பகுதி 2ன் கீழ் பிரிவு 4(1) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“Provided that if before actual possession of such land is taken by, or on behalf of the Government, it appears for the Government, that the land is no more required for the purpose of this Act, the Government, may, by notice published in the Tamil Nadu Government Gazette, withdraw the land from acquisition. On the publica-tion of such notice the land shall revest with retrospective effect in the person from whom it was divested on the issue of order under sub-section (1) of section 3, subject to such encumbrances, if any, as may be subsisting at that time:

Provided further that the owner and other persons interested shall be entitled to payment of an amount as determined in accordance with the provisions of section 7 for the damage, if any, suffered by them in consequence of the acquisition proceedings.”

குறிப்பிட்ட இச்சரத்தைத் தீர ஆராய்ந்து நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பதற்கான வழிகளை அரசு பரிசீலிக்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலையத்திற்காகவே சட்டமன்றத்தில் அவசர அவசரமாக இயற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023ஐ ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. накрутка яндекс услуг пф улучшение поведенческих факторов сервисы

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed