இந்தியப் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திப்பது இல்லை. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ இதற்கு நேர் எதிர்.
தினமும் அவர் எப்படியாவது செய்தியாளர்களைச் சந்தித்துவிடுவார்.
கடந்த ஜூன் மாதம் பிரான்சில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது. அதில் மோடியும் ட்ரம்ப்பும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் நீண்ட நேரம் உரையாடினர்.
அந்த உச்சிமாநாட்டில் நடந்த நிகழ்வு ஒன்றைத் தற்போது பகிர்ந்துள்ளார் செர்ஜியோ கோர்…
செர்ஜியோ கோர் (Sergio Gor) தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த இவர், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்தும் முக்கியப் பணியோடு புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“உண்மையைச் சொல்லப்போனால், எங்கள் அதிபருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள ஆழமான, தனிப்பட்ட நட்பு எனது பணியை மிகவும் எளிதாக்கியுள்ளது.
நீங்கள் ஊடகங்களில் பார்த்தது போலவே, அது மிகவும் இயல்பான ஒரு பிணைப்பு.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜி7 உச்சிமாநாட்டிற்கு அதிபர் ட்ரம்புடன் நான் சென்றிருந்தபோது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.
நாங்கள் மேடைக்குப் பின்னால் இருந்தபோது, ஒரு கட்டத்தில் அதிபரும் நானும் மட்டுமே தனியாக இருந்தோம்.
அப்போது அவர் என்னிடம், ‘இந்தியத் தரப்பில் என்னென்ன விஷயங்களைப் பேசப்போகிறார்கள்?’ என்று கேட்டார். நாங்கள் சில தலைப்புகளைப் பற்றி விவாதித்தோம்.
























