இந்தச் சம்பவங்கள் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகார விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.
சிந்தாதிரிப்பேட்டை – போக்குவரத்து வரலாற்றின் மறைக்கப்பட்ட மையம்
இன்றைய சிந்தாதிரிப்பேட்டையைப் பார்த்தால் அதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்ப வரலாற்றை பலரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.
ஆனால், இந்தியாவின் ஆரம்பகால போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளுடன் சிந்தாதிரிப்பேட்டை தொடர்புடையதாக இருந்தது.
முதல் காலகட்ட கார்கள், பேருந்துகள், விமானப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப முயற்சிகளுடன் மெட்ராஸில் இருந்த தொழில்துறை நிறுவனங்கள் தொடர்பு கொண்டிருந்தன.
மாடு இழுக்கும் வண்டிகளுக்கான ரயில் பாதை போன்ற பரிசோதனைகளும் நகரின் தொழில்நுட்ப ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மெட்ராஸில் பறந்த விமானம்!
விமானப் போக்குவரத்தின் ஆரம்ப கால முயற்சிகளிலும் மெட்ராஸ் பங்கு வகிக்கிறது.
அந்தக் காலத்தில் விமானம் பறப்பதைப் பார்க்க மக்கள் கூட்டமாகத் திரண்டனர். விமானம் பறக்குமா அல்லது விபத்துக்குள்ளாகுமா என்ற ஆர்வத்திலேயே மக்கள் சில ரூபாய் செலுத்தி நிகழ்வைக் காணச் சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வைப் பற்றி கவிஞரும் பத்திரிகையாளருமான சுப்பிரமணிய பாரதி எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மெட்ராஸ் என்பது அப்போது இலக்கியம், பத்திரிகை, தொழில்நுட்பம் எனப் பல துறைகளிலும் புதிய முயற்சிகளுக்கு இடமளித்த நகரமாக இருந்தது என்பதற்கும் இது ஒரு உதாரணம்.
























