இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க் ஆட்டக்காரர் பதும் நிஷங்கா இரட்டைச் சதம் விளாசி அசத்தியுள்ளார். அவர் வெறும் 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டரி 8 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 210 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 210 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இலங்கை அணியின் ஜெய்சூர்யாவின் சாதனையாக இருந்த 189 ரன்களைக் கடந்துள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் குவித்தது. 
இந்த இரட்டைச் சதம் மூலம் இலங்கை கிரிக்கெட் வீரர்களில் ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார் நிஷன்கா. 

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports