ஆ.ராசா பேச்சால் சர்ச்சை: வன்னி அரசு, பெ.சண்முகம் கடும் கண்டனம்|A Raja’s Remarks Trigger Backlash From VCK, CPM Leaders


முதல்வரை ஓடுகாலி எனத் திரு.சேகர்பாபு அவர்கள் உளறியதை ‘பீப்’ போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மதிப்புமிகு கவிஞர் கனிமொழி அவர்கள் குறித்து பாஜகவைச் சார்ந்த திரு.எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரு.சீமான் அவர்களும் மிக இழிவாகப் பேசியபோது, கண்டித்த விடுதலைச் சிறுத்தைகள் இப்போது, திமுகப் பேச்சாளர்களின் இந்த இழிவான உரையைக் கண்டிக்கிறது.

பாஜக எச்.ராஜா, திமுக ஆ.ராசா என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று வன்னி அரசின் அறிக்கை கூறுகிறது.

பெ.சண்முகம்

பெ.சண்முகம்
X

ஆ.ராசாவின் பேச்சிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், “திமுகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.

திமுகத் தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதும் அதைக் கேட்டுத் தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை.

அமைச்சர் நிர்மல் குமார் பேசியதைக் கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவுபடுத்துவதை எப்படித் திமுகத் தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்திப் பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்தக் கட்சித் தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.

சில திமுகவினர் ‘கண்ணியம்’ தவறுவது தொடர்கிறது. ‘கட்டுப்பாடு’ நிலைநிறுத்தும் ‘கடமை’யைத் திமுகத் தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Нужно иптытание средств измерений? калибровка и утверждение типа средств измерений организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed