ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: “என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை”|‘I Have No Hesitation in Taking Back My Words’: A Raja


தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார்.

விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுகவினர் பல்வேறு இடங்களில் நேற்று (செப்டம்பர் 12) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அங்கே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார். ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பின.

ஆ.ராசா பதிவு

ஆ.ராசா பதிவு

இதையடுத்து, ஆ.ராசா தனது பேச்சிற்கு விளக்கம் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ – உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;

என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை.

நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்”.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Нужно иптытание средств измерений? калибровка и утверждение типа средств измерений организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed