<p>இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக திகழ்வது ரயில்வே போக்குவரத்து ஆகும். தொலைதூர மற்றும் குறுகிய அளவு என பல்வேறு விதமாக ரயில்வே சேவை வழங்கப்பட்டு வருகிறது. பீகாரில் உள்ள பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ வரை எக்ஸ்ப்ரஸ் ரயில் ஒன்று பயணிகள் சேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருவது வழக்கம்.</p>
<h2><strong>பயணியை தாக்கிய டிடிஆர்:</strong></h2>
<p>இந்த நிலையில், இன்று வழக்கம்போல இந்த ரயில் பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயில் சரியாக உத்தரபிரதேசத்தில் உள்ள கோந்தாவில் இருந்து பாரபங்கி இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வந்துள்ளார்.</p>
<p>அப்போது, அவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் அந்த பயணியை பளார் என்று அறைந்தார். மேலும், அந்த பயணியின் துண்டை இழுத்து அவரை துன்புறுத்தினார். அந்த பயணியை அவர் தொடர்ந்து அறைந்ததை அங்கே இருந்த மற்றொரு பயணி வீடியோவாக எடுத்தார்.</p>
<p>அந்த டிக்கெட் பரிசோதகர் அவர்கள் வீடியோ எடுப்பதை தடுத்ததுடன், வீடியோ எடுத்தவரின் செல்போனை பறிக்க முயற்சித்தார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="hi">ये कौन TT है जो बरौनी-लखनऊ एक्सप्रेस में गरीब निर्दोष यात्रियों को पीट रहा है?<br /><br />ये सरेआम गुंडागर्दी है।<a href="https://twitter.com/AshwiniVaishnaw?ref_src=twsrc%5Etfw">@AshwiniVaishnaw</a> क्या इसके विरुद्ध कड़ी कार्यवाही करेंगे? <a href="https://t.co/Xt4xZul6YX">pic.twitter.com/Xt4xZul6YX</a></p>
— Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) <a href="https://twitter.com/suryapsingh_IAS/status/1747928814259458081?ref_src=twsrc%5Etfw">January 18, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong>பணியிடை நீக்கம்:</strong></h2>
<p>இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, தற்போது அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இதையடுத்து, ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில் அந்த டிக்கெட் பரிசோதகர் பெயர் பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது. அந்த வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சாதாரண வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் அவர் வைத்திருந்ததால் டிக்கெட் பரிசோதகர் அவரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியது. அவர் மீது ரயில்வே துறை சார்பில் கடுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும் படிக்க: <a title="PM Modi Visit Schedule: ஒரே நாளில் 3 மாநிலங்களுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மொத்த ப்ளான் இதுதான்!" href="https://tamil.abplive.com/news/india/prime-minister-narendra-modi-will-fly-to-3-states-in-one-day-tamilnadu-maharastra-karnataka-162454" target="_blank" rel="dofollow noopener">PM Modi Visit Schedule: ஒரே நாளில் 3 மாநிலங்களுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மொத்த ப்ளான் இதுதான்!</a></p>
<p>மேலும் படிக்க: <a title="Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!" href="https://tamil.abplive.com/news/india/ayodhya-ram-mandir-how-science-gonna-ensure-the-temple-stands-for-1-000-years-know-here-162416" target="_blank" rel="dofollow noopener">Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!</a></p>
<p> </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
3д сетка производство забор 3д от производителя
ограждения 3д от производителя купить забор 3д от производителя
забор 3д от производителя 3d забор от производителя
Каталог нейросетей AI-Panda https://ai-panda.ru это более 1000 AI-инструментов в одном месте. Найди идеальную нейросеть для своих задач: генерация изображений, работа…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் – காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க? | ACTPnews.com
-

பரந்தூர்: “தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக…" – முதல்வர் விஜய்யைச் சாடும் நயினார் நாகேந்திரன்! | ACTPnews.com
-

“பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்”- ஸ்டாலின்| dmk leader stalin about parandur airport | ACTPnews.com
-

“நான் லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி” – மரிய வில்சன் பேச்சுக்கு அன்பில் மகேஷ் ரியாக்ஷன் என்ன? | Anbil Mahesh has voiced criticisms regarding Maria Wilson’s speech in the Legislative Assembly. | ACTPnews.com
-

“பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!”- உதயநிதி கண்டனம் | ACTPnews.com


















gioco della roulette Check out my page :: Giocare In Linea E Vincere Soldi