Tag: அயோத்தி

  • One Year Of Ayothi: ”ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று” அயோத்தி படம் வெளியாகி ஓராண்டு நிறைவு

    One Year Of Ayothi: ”ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று” அயோத்தி படம் வெளியாகி ஓராண்டு நிறைவு


    <p>இயக்குநர், நடிகர் சசிகுமார் நடிப்பில், அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி சமீபத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த திரைப்படம் &lsquo;அயோத்தி&rsquo;.</p>
    <p>கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் லைக்ஸ் அள்ளிய அயோத்தி திரைப்படத்தின் மூலம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றார். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகியுள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக, இந்த படம் எனக்கு மிகவும் தேவைப்படும்போது எனக்கு கிடைத்தது. இந்த படம் எப்போதும் என் இதயத்தில் ஒரு வலுவான இடத்தைப் பிடிக்கும். இந்த அழகான பயணத்தில், குழு, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நினைவுகள், படப்பிடிப்பின்போது கற்றுகொண்ட விஷயங்கள், கனவுகள், உணர்ச்சிகள், அற்புதமான ரசிகர்கள் என இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய ஒவ்வொருவருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்றென்றும் நன்றியுள்ள,</p>
    <p>அன்பு,<br />ஷிவானி&rdquo; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>
    <p>மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் படம் எனக் கொண்டாடப்பட்ட &lsquo;அயோத்தி&rsquo; திரைப்படம். நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி சைலண்ட் ஹிட் அடித்து பெரும் பாராட்டுக்களைக் குவித்த திரைப்படம் &nbsp;&lsquo;அயோத்தி&rsquo;. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீடு வழங்கப்பட்டு விமர்சனரீதியாக பாராட்டுகளை அள்ளியது.</p>
    <p>அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, ​​தேசபக்தர் பல்ராம் (யஷ்பால்) ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்து, பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு வழிவகுத்து விடுகிறது. மீதிக் கதையானது, இரண்டு குழந்தைகள் தங்கள் அதீத மதவெறி பிடித்த &nbsp;தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், டிரைவரின் நண்பர்களான &nbsp;இருவர் (சசிகுமார் மற்றும் புகழின் கதாபாத்திரங்கள்) தங்கள் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படம். மதங்களைத் தாண்டிய மனிதநேயம் போற்றும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் குவித்தது.</p>
    <p>மதம், மூடநம்பிக்கைகள், ஆண்மைய மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாக பேசிய அயோத்தி திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் NT ரகுநந்தனின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்தது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் மிக அழகாகப் படம்பிடித்திருந்தது. இந்நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து ஹிட் அடித்த அயோத்தி திரைப்படம்&nbsp; வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இப்படம் தற்போது ஜீ ஓடிடி தளத்தில் உள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Ayodhya Ram temple in receives donations of around rs 25 crore in uttar pradesh

    Ayodhya Ram temple in receives donations of around rs 25 crore in uttar pradesh


    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காணிக்கையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    அயோத்தி ராமர் கோயில்:
    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.
    பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். அதன்பின், 23-ம் தேதி, அனைவரின் பார்வைக்கும் கோவில் திறக்கப்பட்டது. 
    சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
    ஒரு மாதத்தில் ரூ.25 கோடி வருமானம்
    இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால் அயோத்தி திணறி வருகிறது. அதே நேரத்தில், கோடிக்கணக்கில் வருவாயும் குவிந்து வருகிறது.
    இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த வருமான குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர் கூறியதாவது, ” கோயில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 10 கிலோ தங்கம், 25 வெள்ளி நகைகள், காசோலை, கோயில் உண்டியல் கிடைத்த காணிக்கை  என மொத்த ரூ.25 கோடி கிடைத்துள்ளது.  
    ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெள்ளி, தங்க நகைகளை நன்கொடையாக அளிக்கிறார்கள்.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம்  செய்துள்ளனர். ராம் லல்லாவுக்கு நன்கொடையாக பெறப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை பராமரிப்பதற்காக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்” என்றார். 

    மேலும் படிக்க
    PM Modi: ”ஹரே கிருஷ்ணா’ கடலுக்கு அடியில் பூஜை! துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி!
    தலைவலியாக மாறிய மம்தா! மகாராஷ்டிராவில் தொடரும் பஞ்சாயத்து – பிரச்னைக்கு தீர்வு காணுமா INDIA கூட்டணி?

    மேலும் காண

    Source link

  • Actor Prakash Raj controversy speech about ayodhya ram temple | Prakash Raj: ”கோவிலை தோண்டினால் அது தான் இருக்கும்”

    Actor Prakash Raj controversy speech about ayodhya ram temple | Prakash Raj: ”கோவிலை தோண்டினால் அது தான் இருக்கும்”


    Prakash Raj: மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால், கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் தெரியும் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. 
     
    பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து:
     
    தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். வில்லத்தனம், குணச்சித்திர ரோல், அப்பா, நண்பன் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்த பிரகாஷ் ராஜ், நடிப்பில் பாராட்டப்படுபவர். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், அரசியல் கருத்துகளை வெளிப்படையாக கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
     
    மத்திய அரசுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் கூறும் சில கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. அந்த வகையில், ராமர் கோவில் குறித்து பிரகாஷ் ராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேர்க்காணல் ஒன்றில் பேசிய அவர், “ மசூதியை தோண்டினால் கோயில்கள் தெரியும் என்றால், கோயில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தெரியும்” என பேசியுள்ளார். 


    மசூதியை தோண்டினால்கோவில்கள் தெரியும் என்றால்கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தெரியும்பிரகாஷ் ராஜ்.. pic.twitter.com/xNBINEK428
    — RajaTVR (@tvr_raja71815) January 29, 2024

     
    அயோத்தி ராமர் கோயில்:
     
    இதற்கு முன்னதாகவும் ராமர் கோவில் குறித்து பேசிய அவர், “ நீ ராமர் பக்தனாக இரு எனக்கு பிரச்சனை இல்லை. இயேசு பக்தனாக இரு பிரச்சனை இல்லை. அல்லா பக்தனாக இரு. அவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், குருட்டு பக்தனாக இருக்காதே. இவர்களால் தான் ஆபத்து” என பேசியுள்ளார். இதேபோல் கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடியையும், பாஜகவையும் விமர்சித்து வருவதால் பிரகாஷ் ராஜ்க்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராமர் கோவில் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.


    “நீ ராம பக்தானாக இரு, யேசு பக்தானாக இரு, அல்லா பக்தனாக இரு, இவர்களால் பிரச்சனையில்லை. ஆனால் குருட்டு பக்தனாக (அந்தபக்த்) இருக்காதே ! இவர்களால்தான் ஆபத்து.”- @prakashraaj pic.twitter.com/28Kwbm28v6
    — SaveTheNation/தேசம் காப்போம் (@niayayakkural) January 18, 2024

     
    பல ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு 2019ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு அயோத்தியில் ரூ.1800 கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டது. அண்மையில் ராமர் கோவிலின் கட்டிடப்பணிகள் முடிந்த நிலையில், கோயில் திறப்பு விழா நடத்தப்பட்டது. இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டு கட்டப்பட்ட ராமர் கோவில் உலகளவில் பேசப்பட்டது. 20 அடி உயரத்தில் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கொண்டு ராமர் கோயில் அட்டப்பட்டது. 
     
    பிரமாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க உலகில் தலைவர்கள் வருகை தந்தனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் திரைத்துறை பிரலங்களும், நாட்டின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். ராமர் கோவில் கட்டப்பட்ட இடத்தில் இருந்த பாபர் மசூதியை இடித்து கோவில் கட்டப்பட்டதால் அதை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    மேலும் காண

    Source link

  • 6 நாட்களில்  19 லட்சம் பேர் தரிசனம் – பக்தர்கள் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில்

    6 நாட்களில்  19 லட்சம் பேர் தரிசனம் – பக்தர்கள் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில்


    <p>கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் தற்போது இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது என்றால் மிகையில்லை. கடந்த 6 நாட்களில் மட்டும், 19 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>பல நூறு ஆண்டுகளாக, பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் பிறகு, கடைசியாக உச்சநீதிமன்ற ஆணை கிடைத்த பிறகு, அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்பட்டது. கடந்த 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை, பிரதமர் மோடியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று &nbsp;வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.</p>
    <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/fe01cea73c18c8fc34c81cefb9abe36d1706505473594333_original.jpg" width="679" height="509" /></p>
    <p>பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான விவிஜபி-கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். அதன்பின், 23-ம் தேதி, அனைவரின் பார்வைக்கும் கோவில் திறக்கப்பட்டது.</p>
    <p>சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். &nbsp;இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால், அயோத்தி திணறி வருகிறது என்றாால் கூட மிகையில்லை.</p>
    <p>இந்தச்சூழலில், உத்தரப்பிரதேச அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக குறைந்த பட்சம் தினமும் 2 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்வதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதில், கடந்த 23-ம் தேதி, அதாவது பொதுமக்கள் தரிசனத்திற்கு திறந்துவிடப்பட்ட முதல்நாளில் 5 லட்சம் பேரும், 24-ம் தேதி 2.5 லட்சமும், 25-ம் தேதி 2லட்சம் பேரும், குடியரசு தினமான 26-ம் தேதி 3.5 லட்சம் பேரும், 27-ம் தேதி 2.5 லட்சம் பேரும், 28-ம் தேதி 3.5 லட்சம் பேரும் அயோத்தி ராமரை தரிசனம் செய்துள்ளனர் என உத்தரப்பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&nbsp;</p>
    <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/29/c2560e9ced570c0f4fdde8930ba25c471706505522145333_original.jpg" width="801" height="550" /></p>
    <p>பக்தர்களின் வருகையும் தரிசனமும் எந்தவொரு சிக்கலும் இன்றி நடைபெறுவதற்காக, முதலமைச்சர் யோகி ஆதித்யானாத்தின் நேரடி மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிரமம் இன்றி, பக்தி பரவசத்துடன் ராமரை தரிசப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாக உத்தப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <p>அதுமட்டுன்றி, மத்தியில் ஆளும் பாஜக அரசும், அயோத்திக்குச் செல்வதற்காக, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ரயில்கள் வருவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளது. அதேபோல், விமான நிலையமும் தற்போது இயங்கி வருகிறது. அதேபோல், பக்தர்களின் காணிக்கையும் கோடிக்கணக்கில், குழந்தை ராமருக்கு குவிந்து வருகிறது. ஆனால், எவ்வளவு காணிக்கை என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தியாவிலேயே அதிகளவு காணிக்கை குவியும் திருப்பதி கோவிலை மிஞ்சும் அளவில், ரொக்கும் பரிசுப் பொருட்களும் குவிந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>
    <p>முன்பெல்லாம், உத்தரப்பிரதேசம் என்றால் காசிதான், ஆன்மிக ஈடுபாடு கொண்ட அனைவரின் நினைவுக்கும் முதலில் வரும். அயோத்தி குறித்து அறிந்து இருந்தாலும், காசிதான் அனைவரின் முதல் சாய்ஸ்ஸாக இருக்கும். ஆனால், தற்போது அயோத்தியில் ராமர் கோவில் வந்துவிட்டதால், தற்போது சூழல் மாற ஆரம்பித்திருக்கிறது என்பதை, அயோத்தி ராமர் கோவில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை நமக்கு உணர்த்துகிறது. அதுமட்டுமன்றி, அயோத்தியில் எங்கு திரும்பினும் ராம நாமத்தை நம்மால் கேட்க முடிகிறது. அந்த அளவுக்கு பக்தர்கள் திரண்டுள்ளனர்.&nbsp;</p>
    <p>ராமர் கோவில் திறக்கப்பட்ட ஆரம்பக் காலம் என்பதால், இந்த அளவுக்குப் பக்தர்கள் கூட்டம் வருகிறதா அல்லது எப்போதுமே திருப்பதி போல் கூட்டத்தை நிறைந்திருக்குமா &nbsp;என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், ஆன்மிக சுற்றுலாத் தளமாக அயோத்தி ராமர் கோவில் ஜொலிக்கும் என்பது உறுதி.</p>
    <p>அயோத்தி ராமர் கோவில் குறித்து, பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கத்தில் பக்தர்கள் கூட்டமும் அரசியல் ஆதாயமும் பெருகி வருவதாகவும் கட்டுரைகள் பதிவாகின்றன. எது எப்படி இருந்தாலும், ஒன்றை மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அது என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான பிரசித்தப் பெற்ற கோவில்களைக் கொண்ட ஆன்மிக பூமியான இந்தியாவின், புதிய ஆன்மிக தலைநகராக அயோத்தி மாறியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.&nbsp;</p>

    Source link

  • Unforgettable Day Says Actress Revathy Pens A Heartwarming Post On Ram Lalla | Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?’ ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி

    Unforgettable Day Says Actress Revathy Pens A Heartwarming Post On Ram Lalla | Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?’ ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி

    Actress Revathy: மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை  வெளிப்படுத்தக்கூடாது என்கிற நிலை தான் காணப்படுகிறது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில்:
    அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
    மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டுகளித்தனர். கோயில் திறப்பு விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி,  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
    ”ஆன்மிக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடாதா?”
     அயோத்தி ராமர்  கோயில் கட்டியதற்காக ஒரு தரப்பு பாஜக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ரஜினி உள்ளிட்ட சினிமா பிரபலங்களை பலர் விமர்சித்து வருகின்றனர். 
    இந்த நிலையில், நடிகை ரேவதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராமர் கோயில் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளை மறக்க முடியாது. அயோத்தி கோயிலுக்குள் குழந்தை ராமர் வருவதை பார்த்தபோது எனக்குள் எழுந்த உணர்வு அப்படி இருந்தது.
    எனக்குள் உணர்வு ரீதியான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால்,  இந்துக்களாக இருப்பவர்கள் நமது மத நம்பிக்கைகளை நமக்குள் மட்டுமே வைத்திருக்கிறோம். பிற மத உணர்வுகளை காயப்படுத்தக்கூடாது என நினைத்து அப்படி செய்கிறோம்.

    மதசார்பற்ற இந்தியாவில், நமது ஆன்மீக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக்கூடாது என்ற நிலைதான் காணப்படுகிறது. ஸ்ரீராமரின் வருகை, இந்த விஷயத்தை பலரிடம்  மாற்றியுள்ளது.  ராமரின் பக்தர்கள்தான் நாமெல்லாம் என்பதை முதல்முறை நம்பியிருக்கிறோம். ஜெய் ஸ்ரீராம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை ரேவதி குறிப்பிட்டுள்ளார்.   இவரது பதவி இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர். 

    Source link

  • Ayodhya Ram Mandir: அடடே! அயோத்தி ராமருக்கு புது பெயர் – இனி இப்படிதான் கூப்பிடனுமாம்!

    Ayodhya Ram Mandir: அடடே! அயோத்தி ராமருக்கு புது பெயர் – இனி இப்படிதான் கூப்பிடனுமாம்!


    <p>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில், இந்து மத குருமார்களை தவிர்த்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்துக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படாத சூழலில் இன்று முதல் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.</p>
    <h2><strong>அயோத்தி ராமர் சிலைக்கு புது பெயர்:</strong></h2>
    <p>இந்த நிலையில், நேற்று பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு புது பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது சிறுவன் வடிவிலான ராமர் சிலைக்கு பாலக ராமர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>பிராண பிரதிஷ்டை செய்த அர்ச்சகர்களில் ஒருவரான அருண் தீக்சித், இதுகுறித்து கூறுகையில், "நேற்று கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ராமர் சிலைக்கு ‘பாலக ராமர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ராமர் சிலைக்கு ‘பாலக் ராம்’ என்று பெயரிடக் காரணம், அவர் ஐந்து வயது குழந்தையைப் போல இருப்பதே.&nbsp;</p>
    <p>முதன்முதலில் அந்தச் சிலையைப் பார்த்தபோது சிலிர்த்துப் போய் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது நான் அனுபவித்த உணர்வை என்னால் விளக்க முடியாது. இதுவரை நான் செய்த பிரதிஷ்டைகளிலேயே இதுவே எனக்கு அதிக தெய்வீக உணர்வை தந்தது" என்றார். வாரணாசியை சேர்ந்த அருண் தீக்சித், இதுவரை, 50 முதல் 60 கும்பாபிஷேகம் செய்துள்ளார்.</p>
    <h2><strong>ராமருக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆபரணங்கள்:</strong></h2>
    <p>ராமர் சிலையின் தலையில் அணிவிக்கப்பட்டுள்ள தங்க கிரீடம் வட இந்திய பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணிக்கங்கள், மரகதம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு, &nbsp;மையத்தில் சூர்ய நாராயனரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் வலது பக்கத்தில், முத்து இழைகள் நெய்யப்பட்டிருக்கின்றன. இதன் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கௌஸ்துப மணி சிலையின் இதயத்தை அலங்கரிக்கிறது. அறக்கட்டளை வேதங்களின்படி, விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் இந்த ரத்தினத்தை தங்கள் இதயத்தில் அணிந்துள்ளன.</p>
    <p>ராமர் சிலை அணிந்துள்ள மிக நீளமான நெக்லஸின் பெயர் தான் விஜயமாலா. மாணிக்கக் கற்கள் பதித்த இந்த தங்க நெக்லஸ் வெற்றியைக் குறிக்கிறது. இது வைஷ்ணவ பாரம்பரியத்தின் சின்னங்களான சுதர்சன சக்கரம், தாமரை, சங்கு மற்றும் மங்கள கலசம் ஆகிய உருவங்களை கொண்டுள்ளது. சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள மொத்த ஆரங்களின் (நெக்லஸ்) எடை மட்டுமே 3.7 கிலோ எடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "அடிமை மனோபாவத்தை உடைத்து, பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு, பொறுமை, தியாகங்களுக்குப் பின், நம் ராமர் இன்று வந்திருக்கிறார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வசனத்தில் ராமர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நடக்க பல தசாப்தங்கள் ஆனது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டது இன்று நிஜமாகியுள்ளது" என்றார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • ‘இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு’ – ரஜினிகாந்த் | Rajinikanth Clarifies About Ram Mandir Is Religious Thing

    ‘இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு’ – ரஜினிகாந்த் | Rajinikanth Clarifies About Ram Mandir Is Religious Thing

    Entertainment
    23 Jan, 09:08 PM (IST)

    “இது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு” – ரஜினிகாந்த்

    Source link

  • Ram Mandir Inauguration: ஞாயிறில் 90.. நேற்று மட்டும் 100.. அயோத்தி விமான நிலையத்திற்கு படையெடுத்த விமானங்கள்!

    Ram Mandir Inauguration: ஞாயிறில் 90.. நேற்று மட்டும் 100.. அயோத்தி விமான நிலையத்திற்கு படையெடுத்த விமானங்கள்!


    <p>இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தில் சுமார் 100 தனியார் விமானங்கள் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக &nbsp;சுமார் 7,000க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதில், நடிகையும் மதுரா எம்பியுமான ஹேமமாலினி, நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், பாடகர் ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் மதுர் பண்டார்கர், சுபாஷ் காய், சீரஞ்சீவி, ராம்சரண், பிடி உஷா ஆகியோர் பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர்.</p>
    <p>பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோயிலில் 5 வயது குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று ஒருநாளில் மட்டும் அயோத்திக்கு செல்ல சுமார் 100 தனியார் விமானங்கள் வந்திருங்க முன்பதிவு செய்யப்பட்டதாக விமான ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் கேப்டன் ஆர்.கே.பாலி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றில் சுமார் 50 விமானங்கள் பிசினஸ் கிளாஸ் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <h2><strong>&nbsp;50 பிசினஸ் கிளாஸ் விமானங்கள்:</strong></h2>
    <p>இதுகுறித்து ஏர் ஆபரேட்டர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், &ldquo;ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவான நேற்று அயோத்தியில் உள்ள மகரிஷ் வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 100 விமானங்கள் இயக்கப்பட்டன. அதேபோல், ராமர் கோயிலின் விழாவில் கலந்து கொண்டபின் சிறப்பு விருந்தினர்கள் புறப்படுவதற்காக விமானங்களில் எண்ணிக்கை சுமார் 100 ஐ கடந்தது&rdquo; என்று தெரிவித்தார்.&nbsp;</p>
    <p>கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, கார்ப்பரேட் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உட்பட பலர் அயோத்தியை வந்தடைந்தனர். அன்றைய நாளில் மட்டும் சுமார் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில், மோகன் பகவத், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினி காந்த், தனுஷ், அனுபம் கேர், கைலாஷ் கெர், ஜூபின் நௌடியல், பிரசூன் ஜோஷி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை விமானங்களில் வந்திருந்தனர்.</p>
    <p>இவர்களைத் தவிர ஹேமா மாலினி, கங்கனா ரணாவத், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மொராரி பாபு, அனில் கும்பளே, வெங்கடேஷ் பிரசாத், சாய்னா நேவால், பவன் கல்யாண், மதுர் பண்டார்கர், சுபாஷ் காய், ஷெபாலி ஷா மற்றும் சோனு நிகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையே அயோத்தியை அடைந்தனர்.&nbsp;</p>
    <p>மேலும், அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி கலந்து கொண்டனர். இது தவிர, அவரது மகன் ஆகாஷ் தனது மனைவி ஷ்லோகாவுடன், ஆனந்த் தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட், அம்பானியின் மகள் இஷா தனது கணவர் ஆனந்த் பிரமலுடன் அங்கு வந்திருந்தார். இவர்கள் அனைவரும் அவர்களுக்கு சொந்தமான தனி விமானம் மூலம் மும்பையில் இருந்து அயோத்தி விமான நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.&nbsp; அம்பானி குடும்பத்தைத் தவிர, 506 பேரின் பெயர்கள் மாநில விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • PA Ranjith about Ramar temple issue : ''கோவில் கொடியவர்கள் கூடாரமா மாறிடக்கூடாது''

    PA Ranjith about Ramar temple issue : ''கோவில் கொடியவர்கள் கூடாரமா மாறிடக்கூடாது''


    <p>”கோவில் கொடியவர்கள் கூடாரமா மாறிடக்கூடாது”</p>

    Source link

  • Ayodhya Ram Mandir Ms Dhoni Did Not Attend The Opening Ceremony Of Ram Temple Do You Know Why | Ayodhya Ram Mandir: ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்த எம்.எஸ்.தோனி

    Ayodhya Ram Mandir Ms Dhoni Did Not Attend The Opening Ceremony Of Ram Temple Do You Know Why | Ayodhya Ram Mandir: ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்த எம்.எஸ்.தோனி

    ராமர் கோவில் திறப்பு விழா:
    மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 
    இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பதற்காக ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
     
    அதேபோல் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க கிரிக்கெட் ஜாம்பவான்களான கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட முக்கிய விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டனர். 
    மேலும் இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் அழைக்கப்பட்டனர். இதுபோக, இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். சாய்னா நேவால், பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் ப்ல்லேலா கோபிசந்த், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, கால்பந்து வீராங்கனை கல்யாண் சௌபே, தடகள வீராங்கனை கவிதா ரவுத் துங்கர், பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வீராங்கனை தேவேந்திர ஜன்ஜாடியா ஆகியோருக்கும் விழாவுக்கு அழைப்பு வந்துள்ளது. 
    விழாவை புறக்கணித்த எம்.எஸ்.தோனி:
    அந்த வகையில் பல முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலலந்து கொண்டனர். விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அணில் கும்ப்ளே மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளவில்லை.
    இந்நிலையில் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தோனி சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவது இல்லை என்பதால், இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல் சமூக வலைதளங்களிலும் அதிக ஈடுபாடு இல்லாத அவர், பொது இடத்திற்கு வந்து பிரபலம் தேடிக்கொள்ள விரும்பியது கிடையாது. இதுபோன்ற சில காரணங்களினால் தான்  இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
    மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!
    மேலும் படிக்க: Virat Kohli: அச்சச்சோ! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி விலகல் – என்னாச்சு?
     

    Source link

  • Ayodhya To Emerge As India’s Biggest Tourist Hotspot, Attract Over 50 Million Visitors Annually Jefferies

    Ayodhya To Emerge As India’s Biggest Tourist Hotspot, Attract Over 50 Million Visitors Annually Jefferies

    நாடு முழுவதும் பல ஆண்டுகளாக பல எதிர்பார்ப்புகளையும், விவாதங்களையும் ஏற்படுத்திய அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த கோயில் திறப்பு விழாவை வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
    ஆண்டுதோறும் 5 கோடி சுற்றுலா பயணிகள்:
    ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது முதலே ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகரையும் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. இதன்மூலம் அயோத்தியை வளர்ச்சியடைந்த தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    இன்று ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலமாக இனி நாட்டிலே அதிக பக்தர்கள் வரும் மத தலமாக அயோத்தி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகழ்பெற்ற ஜெப்ரீஸ் ப்ரோக்கரேஜ் வெளியிட்ட தரவுகளின்படி அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆண்டுதோறும் 5 கோடி பக்தர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மத சுற்றுலா தளங்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அயோத்தி மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நாட்டின் பெரிய சுற்றுலா புனித தலம்:
    தற்போது, நாட்டிலே அதிக சுற்றுலா பயணிகள் வரும் புனித தலங்களாக பொற்கோவில் மற்றும் திருப்பதி திகழ்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அதை அயோத்தி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் உருவாக்கப்பட உள்ள புதிய விமான நிலையம், தற்போது இயங்கி வரும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் இதை சாத்தியமாக்க உதவும் என்று நம்ப்படுகிறது.
    அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு ஆண்டுதோறும் 3 முதல் 3.5 கோடி சுற்றுலா பயணிகளும், திருப்பதிக்கு 2.5 கோடி முதல் 3 கோடி சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அயோத்தி புதிய விமான நிலையத்தின் முதற்கட்டமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது 10 லட்சம் பயணிகளை கையாள முடியும் அளவிற்கு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையமானது 2025ம் ஆண்டு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பின்னர், இந்த விமான நிலையமானது 6 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
    மேம்படுத்தப்படும் அயோத்தி:
    அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் தற்போது 60 ஆயிரம் பயணிகளை தினமும் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும், 1200 ஏக்கர் பரப்பளவில் பசுமை நகரம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அயோத்தியில் தற்போது 17 ஹோட்டல்கள் 590 அறைகளுடன் இயங்கி வருகிறது. 73 புதிய ஹோட்டல்கள் கட்டப்பட உள்ளது. அதில் 40 தங்கும் விடுதிகள் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ஹோட்டல்களும் அயோத்தியில் விரைவில் தங்களது ஹோட்டல்களை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புத்தாண்டு பிறப்பு முதலே இந்தியாவின் பேசுபொருளாக அயோத்தி ராமர் கோயில் மாறியுள்ளது. தொடர்ந்து அயோத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் தற்போது நிலத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் இனி பக்தர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அயோத்தி நகரின் பொருளாதாரம் பன்மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!
    மேலும் படிக்க: Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!
                                         

    Source link

  • Ram Mandir Inauguration Rama Rajjiyam; There Are No Words To Express Happiness – Governor Tamilisai | Ram Mandir Inauguration: கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம்; மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை

    Ram Mandir Inauguration Rama Rajjiyam; There Are No Words To Express Happiness – Governor Tamilisai | Ram Mandir Inauguration: கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம்; மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை

    கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம் என்றும் இந்த நாளின் மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை எனவும் ஆளுநர் தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
    நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கும் பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 
    இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு தரப்பினர் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 
    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பாக நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை, கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம் என்றும் இந்த நாளின் மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ’’ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வைக் கண்டுகளிக்கிறது. கொண்டாடுகிறது. எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. 
    சிறந்த அரசாங்கம் என்பது ராம ராஜ்ஜியம்தான். தமிழில் கிராம ராஜ்ஜியத்தை சிறந்த ராஜ்ஜியமாகச் சொல்வார்கள். கிராம அளவில், நிர்வாகம் செய்யப்படுவதுதான் கிராம ராஜ்ஜியம். அதுவே ராம ராஜ்ஜியம்.

    #WATCH | Hyderabad: After the conclusion of the Shri Ram Janmabhoomi Pran Pratishtha ceremony in Ayodhya, Telangana Governor Tamilisai Soundararajan says, “The whole world witnessed the ceremony and is celebrating… There are no words to express our happiness. In Tamil also we… pic.twitter.com/AkUkHl3OSh
    — ANI (@ANI) January 22, 2024

    கடவுள் ராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முக்கியமான தருணம். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்களின் மகிழ்வை வெளிப்படுத்த, சொற்களே இல்லை’’ என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    Source link

  • Union Minister Nirmala Sitharaman Has Posted On X Site Condemning The Removal Of LED Screens In Kanchipuram District Ram Mandir Opening Ceremony | Nirmala Sitharaman: ’வயித்திலே அடிக்கும் வேலையை தான் திமுக செய்து வருகிறது’

    Union Minister Nirmala Sitharaman Has Posted On X Site Condemning The Removal Of LED Screens In Kanchipuram District Ram Mandir Opening Ceremony | Nirmala Sitharaman: ’வயித்திலே அடிக்கும் வேலையை தான் திமுக செய்து வருகிறது’

    ராமர் கோயில் திறப்பு விழாவை மக்கள் நேரலையில் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. திரைகள் அகற்றப்பட்டதை எதிர்த்து நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பதிவு செய்துள்ளார். 
    500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. ‘பிரான் பிரதிஷ்டா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த சடங்கில், பிரதமர் மோடி பங்கேற்று குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவி ஆரத்தி வழங்கவுள்ளார். இந்த செயல்முறை பிற்பகல் 12.20-க்கு தொடங்கி  1 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 7,000 க்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை பொதுமக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையொட்டி பல மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ள சூழலில், மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    தொடர்ந்து, நாளை முதல் பொதுமக்கள் கோயிலுக்கு வந்த தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ராமர் கோயில் திறப்பு விழாவை நாட்டில் இருக்கும் மக்கள் காணும் வகையில் பல்வேறு இடங்களில் எல்.ஈ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்பிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் எல்.ஈ.டி திரை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த திரைகள் போலீசார்கள் அகற்றப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ 22 ஜனவரி 24 அன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து அறநிலைத்துறை நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

    Inside the famous Kamakshi Kovil, which is privately held, where bhajans have started from 08:00hrs, LED screens are being removed with plain-clothed policemen.In a temple, privately held, worshippers watching @PMOIndia perform prana prathishta is a serious infringement on our… pic.twitter.com/ykRKhYOgZZ
    — Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024

    மேலும், “ பஜனைகள் ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல், இனிப்புகள் வழங்குவது போன்றவற்றிற்காக மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்வதை நாங்கள் நேரில் காண விரும்புகிறோம். இது திமுகவின் மக்கள் விரோத செயலாகும்” என தெரிவித்துள்ளார். 

    In Kanchipuram district alone, 466 LED screens were arranged for live telecast of @narendramodi in Ayodhya. In more than 400 of those places the police has either confiscated the screens or deployed force to prevent the live telecast. LED suppliers are fleeing with fear. The…
    — Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024

    “ காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 466 எல்.ஈ.டி திரைகள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். அல்லது நேரடி ஒளிபரப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்.ஈ.டி திரை உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை “வயித்திலே அடிப்பது” என்பார்கள்.

    Source link

  • Hanuman Movie Crew Donates 2.6 Crore For The Development Of Ram Mandir

    Hanuman Movie Crew Donates 2.6 Crore For The Development Of Ram Mandir

    ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு.
    ராமர் கோயில் குடமுழுக்கு
    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு நாளை ஜனவரி 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த கோயியில் ஐந்து வயது குழந்தை ராமர் சிலை கடந்த 18-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராஜ் இந்த சிலையை உருவாக்கியுள்ளார். இந்த கோயிலின் உருவாக்கத்திற்காக பல்வேறு பிரபலங்கள் பணமாகவும் பொருளாகவும் நன்கொடைகள் வழங்கியுள்ளார்கள். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தன் சார்பில் 30 கோடிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது அனுமன் படக்குழுவினரும் ராமர் கோயிலின் மேம்பாட்டிற்காக பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.
    அனுமன்
    இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள படம் அனுமன். பிரஷாந்த் வர்மா சினிமேட்டிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி இருக்கும் அனுமன் படம் கடந்த ஜனவர் 12-ஆம் தேதி வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது.  வினய் ராய், அம்ரிதா ஐயர், வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் இசைவெளியீடு ஹைதராபாதில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவி படக்குழு சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    #HANUMAN for SHREE RAM ✨As announced, Team HanuMan is going to donate a grand sum of ₹2,66,41,055 for 53,28,211 tickets sold so far for Ayodhya Ram Mandir 🤩🙏- https://t.co/m5810jtIyUNizam Release by @MythriOfficial ❤️‍🔥A @PrasanthVarma film🌟ing @tejasajja123… pic.twitter.com/uCBnbMRnvt
    — Mythri Movie Makers (@MythriOfficial) January 21, 2024

    . அனுமன் படத்தின் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையில் இருந்தும், 5 ரூபாயை அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அனுமன் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து சொன்ன வார்த்தையை நிறைவேற்றியுள்ளது படக்குழு.
    இதுவரை அனுமன் படத்திற்கு 55, 28,211 டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ளன. ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு. இந்த தகவலை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளது.

    Source link

  • Muslim Woman Walks 1425km From Mumbai To Ayodhya With Her Friends | Ayodhya Ram Mandir: மதங்களை கடந்த பக்தி.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் இஸ்லாமிய பெண்

    Muslim Woman Walks 1425km From Mumbai To Ayodhya With Her Friends | Ayodhya Ram Mandir: மதங்களை கடந்த பக்தி.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் இஸ்லாமிய பெண்

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு இஸ்லாமிய பெண் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதனைப் பற்றி காணலாம். 
    ஒட்டுமொத்த இந்தியாவும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை தான் உற்றுநோக்கியுள்ளது. நாளை குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையம் என பல விஷயங்கள் அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 
    நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் பொது விடுமுறையும், அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஐந்து வயது குழந்தை ராமர் தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.  
    இதனை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். இப்படியான நிலையில் அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இப்படியான நிலையில் அயோத்திக்கு மும்பையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. அங்குள்ள ஷப்னம் என்ற பெண் கடந்த 3 வாரத்துக்கு முன் இந்த நடைபயணத்தை தொடங்கினார். கிட்டதட்ட 1,425 கிலோ மீட்டர் தூரத்தை தனது நண்பர்கள் ராமன்ராஜ் மற்றும் வினீத் பாண்டே உடன் கடந்து வருகிறார். 
    இதனிடையே தன்னுடைய அயோத்தி பயணம் பற்றி ஷப்னம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு ராமர் மீது அசைக்க முடியாக பக்தி உள்ளது. அவரை வணங்க இந்துவாக இருக்க வேண்டியதை விட ஒரு நல்ல மனிதனாக இருப்பது தான் முக்கியம். தினமும் 25 முதல் 30 கிலோ மீட்டர் நடந்து வரும்  ஷப்னம் மும்பை -அயோத்தி இடையிலான தூரத்தை ஒன்றரை மாதத்தில் கடப்பார் என்பதால் பிப்ரவரி முதல் வாரம் அவர் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. அவர் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவதால் தனது பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஷப்னம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: விண்ணில் இருந்து! ரம்மியமாக காட்சி தரும் அயோத்தி ராமர் கோயில் : இஸ்ரோ வெளியிட்ட க்ளிக்!
     

    Source link

  • Actor Arjun Praises Prime Minister Modi For Making Countless Indians Dream True By Building Ram Mandir

    Actor Arjun Praises Prime Minister Modi For Making Countless Indians Dream True By Building Ram Mandir

    ராமர் கோயில் குடமுழுக்கு
    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை,  இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 18ம் தேதி கருங்கல்லில்  செய்யப்பட்ட 51 அங்குல குழந்தை ராமர் சிலை துணியால் மூடப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட சிலையின் கண்கள், குடமுழுக்கிற்கான முகூர்த்த நாளான ஜனவரி 22ம் தேதி மதியம் 12.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது.  முழுவதும் பளிங்கு கற்களால் ஆன தரை, கோயில் தூண்கள் வண்ண வண்ண மலர்களால் இந்த கோயில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. 
    இந்த விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாத நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில்  நடிகர் அர்ஜூன் ராமர் கோயில் குடமுழுக்கு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    மோடிக்கு நன்றி தெரிவித்த அர்ஜூன்

    2024  ஜனவரி 22 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான நாள். பல நூற்றாண்டுகளாக நமது தலைவர் மற்றும் சாமானிய மக்களின் போராட்டின் மகத்துவத்தை இந்த நாளில் நாம் நினைவு கூறுவோம். எந்த விதமான அரசாங்கமும் மீடியாவும் இல்லாதபோது ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது நம் மக்கள் இந்த மகத்தான போராட்டத்தை கைவிட வில்லை. கடந்த 500 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். இவர்களின் நாட்டிற்காக தங்களது உயிரைக் கொடுத்த மக்களின் தியாகம் வீணாகவில்லை. இந்த போராட்டத்தில் பங்கெடுத்த இந்த நாட்டு குடிமக்களுக்கு எந்த வித மத வேறுபாடும் இன்றி நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் . கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நீங்கள் நினைவாக்கி இருக்கிறீகள். ஜெய் ஹிந்த். ‘ என்று அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
    விடாமுயற்சி
    தற்போது நடிகர் அர்ஜூன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக துபாயில் உள்ளார். மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    மேலும் படிக்க : Ayodhya Ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு : உங்கள் வீட்டில் ராமர் பூஜை செய்வது எப்படி?
    Sithara : வடிவேலுவுடன் ஜோடி சேரும் 90’ஸ் ஹீரோயின்… பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி

    Source link

  • Ayodhya Ram Mandir ‘pran-pratishtha’ Ceremony Who Will Skip Consecration? List Of Politicians

    Ayodhya Ram Mandir ‘pran-pratishtha’ Ceremony Who Will Skip Consecration? List Of Politicians

    உத்தரபிரதேசத்தில் நாளை அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்பட இந்த நிகழ்ச்சியில் நாளை இந்தியாவில் உள்ள பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். வி.வி.ஐ.பி., வி.ஐ.பி என பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்களை வகைப்படுத்தி, அவர்கள் அமர்வதற்கான இடங்களும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சித்தலைவர்கள் உள்பட பலரும் நிராகரிக்க உள்ளனர். இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவை எந்தெந்த அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர் என்பதை கீழே காணலாம்.
    காங்கிரஸ்:
    மல்லிகார்ஜூன் கார்கே
    சோனியா காந்தி
    அதிர்ரஞ்சன் சௌத்ரி
    மன்மோகன் சிங்
    திரிணாமுல் காங்கிரஸ்:
    மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதலமைச்சர்)
    ஆம் ஆத்மி கட்சி:
    அர்விந்த் கெஜ்ரிவால்
    சிவசேனா :
    உத்தவ் தாக்கரே
    தேசியவாத காங்கிரஸ்:
    சரத்பவார்
    தேசிய மாநாடு கட்சி:
    ஃபரூக் அப்துல்லா
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
    சீதாராம் யெச்சூரி
    மேலே கூறியவர்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டார்கள்.
    முதலில், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார் என்று கூறினார். பின்னர், ராமர் தன்னை அழைத்ததாக கூறி அவர் விழாவில் பங்கேற்பதாக கூறினார்.
    பார்க்கிங் வசதிகள்:
    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தியில் 51 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 51 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பார்க்கிங் வசதிகள் மூலமாக 22 ஆயிரத்து 825 வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ள காரணத்தாலே எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    மேலும், கோயில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெறாத காரணத்தால் நாட்டின் பல மடங்களின் சங்கராச்சாரியர்கள் இந்த விழாவை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! காத்திருக்கும் பரிசு

    Source link

  • Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம்; நாளை பொதுவிடுமுறை விடுங்க -ஓபிஎஸ்

    Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம்; நாளை பொதுவிடுமுறை விடுங்க -ஓபிஎஸ்


    <p>ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளிக்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p>நாளை நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள புரப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது, &rdquo;நாளை ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படவேண்டும்&rdquo; என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>

    Source link

  • ISRO Captures Stunning Satellite Images Of Ayodhyas Ram Temple Watch Here

    ISRO Captures Stunning Satellite Images Of Ayodhyas Ram Temple Watch Here

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியும் விழாகோலம் பூண்டுள்ளது. ஏற்கனவே ராமர் கோயிலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பக்தர்களை நெகிழ வைத்துள்ளது.
    ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படங்கள்:
    தற்போது, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்ணில் இருந்து ராமர் கோயில் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் தஷ்ரத் மஹால், சராயு நதி ஆகியவை தெரிகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
    ராமர் கோயிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தியாவின் அனைத்து துறைகளின் பிரபலங்களும், பல மாநில முதலமைச்சர்களும், பல மாநில ஆளுநர்களும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    #RamMandir from Space!@isro captures stunning satellite images of Ayodhya’s Ram Temple. The majestic Dashrath Mahal and the tranquil Saryu River take center stage in these snapshots. Notably, the recently revamped Ayodhya railway station stands out prominently in the detailed… pic.twitter.com/4Sn4R3JaZH
    — MyGovIndia (@mygovindia) January 21, 2024

    களைகட்டும் அயோத்தி:
    ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக கடந்த 16ம் தேதியே பூஜைகள் தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பே குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில் அறக்கட்டளை சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் பல இடங்களில் அன்னதானமும், பிரசாதமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    These latest images from Ram Janmabhoomi Temple at #Ayodhya would leave you spellbound.Ram lalla’s eternal abode awaits his arrival eagerly. #JaiShriRam pic.twitter.com/MHKHu9hYEW
    — MyGovIndia (@mygovindia) January 20, 2024

    கோயில் திறப்பு விழாவிற்காக புத்தாண்டு பிறந்தது முதலே அயோத்தி மாநகரம் முழுவதும் ஜொலித்து வருகிறது. வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் ஜொலிக்கும் அயோத்தியின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    மேலும் படிக்க: Watch Video: பென்சில் நுனியில் அயோத்தி ராமர் சிலை! கின்னஸ் சாதனையாளர் அசத்தல்!
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

    Source link

  • Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?


    <p>அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியுமே விழா கோலம் பூண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள், இந்திய திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், துறவிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். &nbsp;</p>
    <h2><strong>கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?</strong></h2>
    <p>அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்? என்ற பட்டியலை கீழே காணலாம்.</p>
    <ul>
    <li>சச்சின் டெண்டுல்கர்</li>
    <li>எம். எஸ்.தோனி</li>
    <li>விராட் கோலி</li>
    <li>கவுதம் கம்பீர்</li>
    <li>மிதாலி ராஜ்</li>
    <li>ரவிச்சந்திரன் அஸ்வின்</li>
    <li>கபில்தேவ்</li>
    <li>ராகுல் டிராவிட்</li>
    <li>ரவீந்திர ஜடேஜா</li>
    <li>ரோகித் சர்மா</li>
    <li>சவ்ரவ் கங்குலி</li>
    <li>சுனில் கவாஸ்கர்</li>
    <li>அனில் கும்ப்ளே</li>
    <li>வீரேந்தர் சேவாக்</li>
    </ul>
    <h2><strong>ராமர்&nbsp; கோயில் திறப்பு விழா:</strong></h2>
    <p>ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக அழைக்கப்பட்ட கிரிக்கெட்டர்களில் மிதாலி ராஜ் மட்டுமே மகளிர் ஆவார். அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் கிரிக்கெட் ஆடி சாதனை புரிந்தவரும் மற்றும் முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய முன்னாள் வீரர்களும், தற்போது ஆடும் வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் கவுதம் கம்பீர் பா.ஜ.க. எம்.பி. ஆவார். ஜடேஜாவின் மனைவி பா.ஜ.க. எம்.பி. ஆவார்.</p>
    <p>கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று தந்தவர்கள். கோலி, ரோகித்சர்மா, ஜடேஜா, அஸ்வின் மட்டுமே தற்போது இந்திய அணிக்காக ஆடுபவர்கள். மற்ற வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்கள் ஆவார்கள்.</p>
    <p>நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p>

    Source link

  • Nagpur Chef Vishnu Manohar Prepare 7000 Kg Ram Halwa For Ram Temple Mandir Consecration Ceremony

    Nagpur Chef Vishnu Manohar Prepare 7000 Kg Ram Halwa For Ram Temple Mandir Consecration Ceremony

    Ram Halwa : அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடக்கிறது. பிரதமர் மோடி நாளை அயோத்தி ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ளார். உத்தரபிரதேசம் முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக களைகட்டியுள்ளது.
    ராம் அல்வா:
    ராமர் கோயில் திறப்பு விழாவை காண நாடு முழுவதும் லட்சக்கணக்கான  மக்கள் அயோத்தி கோயில் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அயோத்தி வரும் பக்தர்களுக்காக பல இந்து அமைப்புகளும், தன்னார்வலர்களும் பிரசாதம் தயார் செய்து வருகின்றனர்.
    அயோத்தி வரும் பக்தர்களுக்காக இந்தியாவின் புகழ்பெற்ற சமையற்கலை நிபுணர் விஷ்ணு மனோகர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக அல்வா தயாரிக்கிறார். இதற்காக அயோத்தியில் அவர் சிறப்பு சமையல் கூடத்தையே ஏற்படுத்தியுள்ளார். இந்த அல்வாவிற்கு ராம் அல்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    7 ஆயிரம் கிலோ அல்வா:
    இதைத் தயாரிப்பதற்காகவே மிகப்பெரிய கடாய் ஒன்று சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடாய் மட்டும் சுமார் 1400 கிலோ கிராம் எடை கொண்டது. இந்த கடாயின் மையப்பகுதி மட்டும் இரும்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. அல்வா நெருப்பில் கருகிவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
    இந்த அல்வா தயாரிப்பதற்காக 900 கிலோ ரவா, 1000 கிலோ கிராம் நெய், 1000 கிலோ கிராம் சுகர், 2 ஆயிரம் லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 300 கிலோ கிராம் உலர் பழங்கள் மற்றும் 75 கிலோ கிராம் ஏலக்காய் தூள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பொருட்களை கொண்டு சமையற்கலை நிபுணர் மனோகர் 7 ஆயிரம் கிலோ அல்வா தயாரிக்கப்பட உள்ளது. இந்த 7 ஆயிரம் கிலோ அல்வா அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த அல்வா முதலில் அயோத்தி ராமருக்கு படைக்கப்பட உள்ளது. அங்கு பூஜைகள் நடைபெற்ற பிறகு, மற்ற பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    கின்னஸ் சாதனையாளர்:
    ராம் அல்வா தயாரிக்கப்பட கடாய் நாக்பூரில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ராம் அல்வாவை தயாரிக்க உள்ள மனோகர் ஏற்கனவே கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர். நாக்பூரில் பிறந்த இவர் ஏற்கனவே 75 வகையான அரிசிகளை கொண்டு 75 வகை உணவுகளை வெறும் 285 நிமிடங்களில் செய்து சாதனை படைத்துள்ளார்.
    மேலும் படிக்க: Watch Video: பென்சில் நுனியில் அயோத்தி ராமர் சிலை! கின்னஸ் சாதனையாளர் அசத்தல்!
    மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

    Source link

  • PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி

    PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி

    PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்துக் கொண்டு, பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்புகிறார்.
    பிரதமர் மோடி தமிழகம் வருகை:
    தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று மாலை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புன்னிய தீர்த்தங்களில் குளித்து அங்குள்ள ரங்கநாத சுவாமி ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார். தொடர்ந்து இன்றும் அவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளார்.
    பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:

    நேற்றைய வழிபாட்டை தொடர்ந்து நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்
    இதையடுத்து இன்று காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார் 
    அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
    இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

    டெல்லி சென்றடையும் பிரதமர் மோடி நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்த கலசங்களை கொண்டு சேர்க்கிறார். தொடர்ந்து, குழந்தை ராமர் சிலையை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்து, ஆரத்தி வழங்க உள்ளார். இதற்காக 11 நாட்களுக்கான சிறப்பு விரதத்தை பிரதமர் மோடி கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது,
    கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
    பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    இன்று நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
    ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
    3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
    ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
    ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Source link

  • Sukanya Music Composes Lyrics And Sings Jai Sri Ram To Celebrate Inaugural Of Ram Mandir Ayodhya

    Sukanya Music Composes Lyrics And Sings Jai Sri Ram To Celebrate Inaugural Of Ram Mandir Ayodhya

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நடிகை சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். 
    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:
    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
    இசையமைத்த நடிகை சுகன்யா:
    இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நடிகை சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. ஆடியோ வடிவில் முதலில் வெளியிடப்பட உள்ள ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடல் விரைவில் வீடியோவாகவும் வெளியாக உள்ளது. 
    பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா திறம்பட செய்துள்ளார். பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
    பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, “500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்,” என்று கூறினார். 
    மேலும் தகவல்களை பகிர்ந்த அவர், “ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலை நாமும் காணும் பாக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது,” என்றார். 
    ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடலுக்கு பங்களித்த இசை வாத்திய கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவதாகாவும் கூறினார்.  

    மேலும் படிக்க
    Ram Mandir : ஊடகங்களே உஷார்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பன்று இதை செய்ய வேண்டாம்.. மத்திய அரசு அதிரடி
    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு – எங்கெல்லாம் விடுமுறை? மாநிலங்கள் லிஸ்ட் இதோ!

    Source link

  • Ram Mandir Donations : பவன் கல்யாண் முதல் அக்‌ஷய் குமார் வரை… ராமர் கோயிலுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடை

    Ram Mandir Donations : பவன் கல்யாண் முதல் அக்‌ஷய் குமார் வரை… ராமர் கோயிலுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடை


    <p>அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கோயில் கட்டப்படுவதற்கு எந்தெந்த நட்சத்திரம் எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.</p>
    <h2><strong>ராமர் கோயில் திறப்பு</strong></h2>
    <p>அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.&nbsp; குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு&nbsp; விடப்பட்டுள்ளன.&nbsp;</p>
    <h2>&nbsp;<strong>நன்கொடை வழங்கிய பிரபலங்கள்</strong></h2>
    <p>அயோத்தி ராமர் கோயில் உருவாவதற்காக பல்வேறு நடிகர்கள் கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள். தற்போது எந்த நடிகர் எவ்வளவு தொகையை அயோத்தி கோயில் கட்டுமானத்திற்கு கொடுத்துள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடிகர்களின் பட்டியலைப் பார்க்கலாம்</p>
    <h2><strong>அக்&zwnj;ஷய் குமார்</strong></h2>
    <p>பாலிவுட் நடிகர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொடர்ச்சியாக தனது ஆதரவைத் தெரிவித்து வரும் நடிகர்களில் ஒருவர். ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை வழங்கியதாக முன்னதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் எவ்வளவு தொகை என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை,</p>
    <h2><strong>பவன் கல்யாண்</strong></h2>
    <p>&nbsp;தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண்&nbsp; சுமார் 30 கோடிகள் வரை அக்&zwnj;ஷய் குமார் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடையாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
    <h2><strong>அனுபம் கெர்</strong></h2>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C2OhQUsioA9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C2OhQUsioA9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Anupam Kher (@anupampkher)</a></p>
    </div>
    </blockquote>
    <p><strong>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </strong></p>
    <p>பாலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவரான அனுபம் கெர் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு தேவையான செங்கல்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.</p>
    <h2><strong>பிரனீதா&nbsp;</strong></h2>
    <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/CxZv2h4S3JM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
    <div style="padding: 16px;">
    <div style="display: flex; flex-direction: row; align-items: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="padding: 19% 0;">&nbsp;</div>
    <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div>
    <div style="padding-top: 8px;">
    <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
    </div>
    <div style="padding: 12.5% 0;">&nbsp;</div>
    <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
    <div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: 8px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div>
    </div>
    <div style="margin-left: auto;">
    <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div>
    <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div>
    </div>
    </div>
    <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div>
    <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div>
    </div>
    <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/CxZv2h4S3JM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Pranita Subhash (@pranitha.insta)</a></p>
    </div>
    </blockquote>
    <p><strong>
    <script src="//www.instagram.com/embed.js" async=""></script>
    </strong></p>
    <p>சகுனி, மாஸ் உள்ளிட்டப் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரனீதா செளதரி ராமர் கோயிலுக்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடையாக வழங்குவதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.</p>
    <p>நடிகை ஹேமா மாலினி, குர்மீத் செளதரி உள்ளிட்டவர்களும் பெரும் தொகைகளை ராமர் கோயிலின் கட்டுமானத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p>

    Source link

  • Ahead Of Ayodhya Ram Mandir Celebration These States Have Declared A Holiday On January 22 Check The List

    Ahead Of Ayodhya Ram Mandir Celebration These States Have Declared A Holiday On January 22 Check The List

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 22ம் தேதி அன்று, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:
    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, குடமுழுக்கு விழா தொடர்பான கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் நோக்கில் பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 22ம் தேதியன்று விடுமுறை அளித்துள்ள மாநிலங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    உத்தரபிரதேசம்:
    ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
    கோவா:
    உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து கோவாவிலும் ராமர் கோயில் குடமுழுக்கினை கொண்டாட,  ஜனவரி 22ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலையை நிறுவுவது என்பது நாடு தழுவிய உற்சாக நிகழ்வு என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அன்றைய நாளை தீபாவளியை போன்று கொண்டாடவும் பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
    மத்திய பிரதேசம்: 
    மத்தியப் பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்து, பண்டிகை அலைகளை ஊக்கப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மோகன் யாதவ். மேலும்,  மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் அன்றைய நாளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சத்தீஸ்கர்:
    ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடும் வகையில், சத்தீஸ்கரிலும்  ஜனவரி 22ம் தேதி அன்று அரசு பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹரியானா:
    நாடு தழுவிய கொண்டாட்ட அலையில் சேரும் நோக்கில், ஹரியானாவிலும் ஜனவரி 22ம் தேதி அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித விழாவையொட்டி அன்றைய நாளில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Source link

  • Special Train: | Special Train:

    Special Train: | Special Train:

    Ayodhya Special Train: தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    அயோத்தி கோயில்:
    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார்.
    இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
    இதனால், அயோத்தி நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று பாதுகாப்பை உறுதிசெய்ய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த உள்ளது.
    200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்:
    முதல் நாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது.  ஜனவரி 23ஆம் தேதி முதல் மக்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். இதனால், பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் அயோத்தி கோயிலுக்கு படையெடுக்க தொடங்குவார்கள்.  
    இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    டெல்லி, மும்பை, நாக்பூர், புனே, வார்தா, கோவா, கோட்டயம், டேராடூன், ஹைதராபாத், செகந்திராபாத், ஜம்மு காஷ்மீர், கத்ரா, உத்னா, இந்தூர், பலன்பூர், சலர்பூர், போபால், ஜபல்பூர், அசாம், குவஹாத்தி, நாசி, ஜால்சனா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  இயக்கப்பட உள்ளது.
    தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  டிக்கெட்டுகளை பொறுத்தவரை அயோத்திக்கு செல்லவும், மீண்டும் சொந்த ஊர் திரும்பவும் சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 22ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க
    Ayodhya Ram Mandir: நாடே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா..! ஜனவரி 22ல் நடக்கப்போவது என்ன?
    Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு; யாருக்கெல்லாம் அழைப்பு? கலைநிகழ்ச்சிகள், நேரலையை எங்கு காணலாம்?

    Source link

  • Up Ayodhya Ram Mandir Complex Will Be Fragrant With 3610 Kg Weight 108 Feet Length 3 Feet Height Incense Stick

    Up Ayodhya Ram Mandir Complex Will Be Fragrant With 3610 Kg Weight 108 Feet Length 3 Feet Height Incense Stick

    Ayodhya Ram Mandir: அயோத்யா ராமர் கோயிலுக்கான 108 அடி உயர தூப குச்சியாது, குஜராத்திலிருந்து சிறப்பு டிரக் மூலம் கொண்டு வரப்பட்டது.
    அயோத்யா ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி ராமரின் சிலை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை  செய்ய உள்ளது. இந்த நிகழ்வு மிக பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு ராம பக்தர்கள் மத்தியில் அபரிமிதமான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. நாட்டின் மூலை முடுக்கிலிருந்து அயோத்திக்கு சிறப்புப் பரிசுகள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு 108 அடி நீள தூபக் குச்சி அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு தூபக் குச்சி திங்களன்று பரத்பூர் வழியாக ஆக்ராவில் உள்ள ஃபதேபூர் சிக்ரி மற்றும் கிராவாலியை வந்தடைந்தன. அதனை வரவேற்க திரளான மக்கள் சாலையின் இருபுறமும் குவிந்து,  ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களை எழுப்பினர். இதனால், தூபக் குச்சியின் பயணமானது ஊர்வலமாக மாறியது.

    Scenes from Udaipur ..Grand welcome for 108 feet incense stick (Aggarbatti) being taken from Vadodara to Ayodhya.#AyodhyaRamMandir 🚩 pic.twitter.com/VYZ2bPfl6l
    — MαverΐcҜ 🇮🇳 (@iMavvy_) January 9, 2024

    108 அடி உயர தூபக் குச்சி:
    3610 கிலோ எடை, 108 அடி நீளமும், சுமார் மூன்றரை அடி அகலமும் கொண்ட தூபக் குச்சி குவிந்த பக்தர்கள் மலர் தூவி அதனை வரவேற்றனர். வதோத்ராவில் தயாரிக்கப்பட்ட இந்த தூபக் குச்சி இறுதி வடிவம் பெற ஆறு மாதங்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பிஹாபர்பாத்தில் சேர்ந்த நபர் இதன ராம்ர் கோயிலுக்கான பிரசாதமாக தயாரித்துள்ளார். தேசி பசுவின் சாணம், தேசி பசு நெய், தூபப் பொருட்கள், பூக்களின் சாறு, ஆயுர்வேதப் பொருட்கள் மற்றும் பல வகையான மூலிகைகளிலிருந்து இந்த தூபக் குச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தூபக் குச்சி சுமார் ஒன்றரை மாதத்திற்கு எரிந்து 50 கிலோமீட்டர் பரப்பளவில் நறுமணத்தைப் பரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    உத்தரபிரதேச அரசு ஏற்பாடுகள்:
    இதனிடையே, ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உத்தரபிரதேச அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்காக கூடார நகரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மூன்று வேளையும் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இதனால், அயோத்யா நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    Source link