<p>சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.</p>
<h2><strong>கேள்வி கேட்கும் மீனா:</strong></h2>
<p>மீனா &rdquo;சொல்லுடா உன்னை யாருடா அடிச்சா?&rdquo; என சத்யாவிடம் கேட்கிறார். பின் மீனா சத்யாவை அடிக்கிறார். வட்டி பணம் வாங்க சென்ற போது முத்து மாமா தன் கையை முறுக்கியதாகக் கூறுகிறார் சத்யா. &rdquo;சத்யா பொய் சொல்லாத&rdquo; என்கிறார் மீனா. &rdquo;எவ்ளோ சொல்லி பார்த்தேன்&rdquo; மாமா கேட்கல என்கிறார் சத்யா. அவரு குடிச்சிருந்தாருனு நினைக்குறேன் ஒரு மாதிரி ஸ்மெல் வேற வந்துச்சி&rdquo; என்கிறார் சத்யா.&nbsp;</p>
<p>மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே என மீனாவின் அம்மா அழுகிறார். மீனா கார் செட்டுக்கு சென்று செல்வத்தை திட்டுகிறார். முத்து எழுந்து வந்து &rdquo;என்னவாம்&rdquo; எனk கேட்கிறார். &rdquo;என் தம்பி கையை உடைக்கும் போது இப்படிதான் குடிச்சி இருந்திங்களா? கொஞ்சம் கூட மனசாட்சியா இல்லையா உங்களுக்கு&rdquo; எனக் கேட்கிறார் மீனா. &rdquo;குடி மட்டும் போதும் உங்களுக்கு அப்படித்தானே&rdquo; எனக் கேட்கிறார் மீனா.&nbsp;</p>
<p><strong>அழும் மீனா:</strong></p>
<p>&rdquo;உங்க புத்தி மாறவே மாறாது&rdquo; என சொல்லிவிட்டு மீனா அங்கிருந்து வீட்டிற்குச் செல்கிறார். மீனா வீட்டிற்கு சென்று அழுது கொண்டிருக்கிறார். ஸ்ருதி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். &rdquo;ஆனா இவ சொல்ற காரணம் தான் நம்ப முடியல வட்டி சிட்டினு ஏதேதோ காரணம் சொல்லிக்கிட்டு இருக்கா&rdquo; என்கிறார் விஜயா. உடனே ரோகினி அதிர்ச்சி அடைகிறார். &rdquo;நம்ப வேற சிட்டிக்கிட்ட கடன் வாங்கி இருக்கோம், அவனை வேற இந்த மீனா அவங்க தம்பிக்கு தெரிஞ்சி இருக்கு&rdquo; என மனதிற்குள் நினைக்கின்றார்.&nbsp;</p>
<p>முத்து வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை, ரவி ஆகியோர் சத்யாவை அடித்தது குறித்து கேட்கின்றனர். ஆனாலும் முத்து உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். &ldquo;கண்டவன் கூட சேர்ந்து சுத்திக்கிட்டு திரிஞ்சா இப்டிதான் ஆகும்&rdquo; என்கிறார் முத்து. &rdquo;நான் என்ன கேட்குறேன் நீ என்ன பதில் சொல்ற? அவன் கைய ஏன் உடச்ச&rdquo; எனக் கேட்கிறார் அண்ணாமலை. &rdquo;வேண்டாம் மாமா அவரு கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். நாங்க ஏழைங்க தானே, எங்கள எல்லாம் அடிச்சா என்ன கேட்க நாதியா இருக்கு&rdquo;என மீனா அழுகிறார்.&nbsp;</p>
<p>&rdquo;எனக்கு என்னமோ இவன் அவனுக்கு காசு கொடுத்து இருப்பான், அதை திருப்பி கேட்க போய் தான் பிரச்சனை ஆகி இருக்கும்னு நினைக்கின்றேன்&rdquo; என்கிறார் விஜயா. &rdquo;அவன் ஏற்கெனவே ஒருமுறை நம்ம வீட்ல பைக்க திருடுனவன் தானே இப்போ என்ன பண்ணி வச்சானோ&rdquo; என்கிறார் மனோஜ். &rdquo;அவன் இப்போ ஒழுங்கா படிக்குறான். பார்க்ல போய் உட்கார்ந்து தூங்கல&rdquo; என்கிறார் மீனா. அண்ணாமலை சத்யாவிடம் முத்துவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். &rdquo;முடியாதுப்பா&rdquo; எனச் சொல்லுகிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.&nbsp;</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed