<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா சாம்பிராணி போட நான்ஸி ரூமுக்கு சென்று இன்ஹேலர் பயன்படுத்திய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். </p>
<p>அதாவது நான்ஸி மூச்சுத்திணறலுக்கு மகா பயன்படுத்திய மருந்தை பயன்படுத்துவதை சீதா பார்த்து விட, இது மகா தான் என்ற சந்தேகம் வருகிறது. உடனே கீழே வந்து சத்யன் மற்றும் மீராவிடம் விஷயத்தைச் சொல்ல, இருவரும் நம்ப மறுக்கின்றனர். நான் நிரூபித்துக் காட்டுறேன் என்று சீதா அவர்களை நான்ஸி இல்லாத நேரமாகப் பார்த்து அவளது ரூமுக்கு அழைத்துச் செல்கிறாள். </p>
<p>அந்த ரூமில் மகா பயன்படுத்திய மாத்திரைகள், இன்ஹேலர் ஆகியவை இருக்க, இவர்களுக்கும் இது நான்ஸி இல்லை, மகா தான் என்று சந்தேகம் வருகிறது. இருப்பினும் இதனை மேலும் உறுதி செய்து கொள்ள மகா எப்போதும் டீ தான் குடிப்பார் என்பதால் செல்வியிடம் நான்ஸிக்கு காபி கொடுக்க சொல்கின்றனர். அவரும் காபியைக் கொண்டு போய் கொடுக்க, நான்சி செல்வியைப் பிடித்து திட்டுகிறாள். </p>
<p>இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சீதா தன்னுடைய அம்மாவிடம் நான்ஸியை சம்மந்தி சம்மந்தி என்று அழைக்கச் சொல்ல, உமாவும் அப்படியே செய்வதாக சொல்லி கூப்பிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன வந்திருப்பது மகாவா, நான்ஸியா என்ற உண்மை வெளிவருமா எனும் சஸ்பென்ஸூடன் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















So, It gave me some useful insights. glad I found this honestly.