Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?


<p>பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகும் கூல் சுரேஷ் திருந்தவே இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
<p>பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். டிக்கிலோனா படத்துக்குப் பின் அவருடன் நடிகர் சந்தானம் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மேகா ஆகாஷ் &nbsp;ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்இயக்குநர் தமிழ், ஜான் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என பலரும் நடித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.</p>
<p>இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியிட்டு விழா&nbsp; இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.&nbsp;</p>
<h2><strong>கூல் சுரேஷ் பேச்சு&nbsp;</strong></h2>
<p>நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, &ldquo;உங்களுக்கு தான் சந்தானம் &lsquo;வடக்குப்பட்டி ராமசாமி&rsquo;. ஆனால் எனக்கு அவர் குலதெய்வம் சாமி. இந்த படம் நடிக்கிறது முன்னாடி நானும் சந்தானமும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவரிடம் அடுத்தப்படம் பற்றி கேட்டேன். உடனே சந்தானம் இயக்குநர் கார்த்திக் யோகியிடம் போன் பண்ணி கொடுத்து பேச சொன்னார். மறுநாள் போனதும் படத்தில் நடிக்கிறது தொடர்பாக சொன்னார். ஒருவாரத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டேன்.&nbsp;</p>
<p>அப்போது கார்த்திக் யோகி என்னிடம், &lsquo;கூல் அண்ணா நீங்க இந்த படத்துக்கு அப்புறம் தியேட்டர் வாசலில் இருந்து கத்த வேண்டாம். உங்களை பார்த்து தியேட்டர் உள்ளே கத்துவார்கள். ரசிகர்களை உங்களை வரவேற்கும் அளவுக்கும் இந்த கேரக்டர் இருக்கும்&rsquo; என சொன்னார். அதனால் இயக்குநருக்கும், சந்தானத்துக்கும் என் நன்றிகள் (தரையில் விழுந்து கூல் சுரேஷ் கும்பிட்டார்)</p>
<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது என்னை அறியாமல் குடும்பத்தை நினைத்து அழுதேன். வெளியே நிறைய பேரு என்னை அழாதீர்கள் என சொன்னார்கள். பிக்பாஸூக்கு அப்புறம் கூல் சுரேஷ் வேற மாதிரி மாறிட்டேன். இப்ப என்னை அறியாமலேயே ரசிகர்களை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். இருந்தாலும் என் நண்பனுக்காக &ldquo;வெந்து தணிந்தது காடு.. வடக்குப்பட்டி ராமசாமிக்கு வணக்கத்தைப் போடு&rdquo; என சொல்லிக் கொள்கிறேன்.&nbsp;</p>
<h2><strong>திருந்தவே இல்லை – சந்தானம் கலகல பேச்சு&nbsp;</strong></h2>
<p>இதனைக் குறிப்பிட்டு பேசிய சந்தானம், &lsquo;பிக்பாஸ் நிகழ்ச்சி போய்ட்டு வந்த அப்புறம் திருந்திட்டன்னு சொன்னீயே?. இல்ல கூல் சுரேஷ் நடவடிக்கையை வெளியே விட்டு பார்த்தா தான் தெரியும். நேற்று கூட டப்பிங் பணி நடக்கும்போது, &lsquo;இல்ல சந்தானம் பிக்பாஸ் நிகழ்ச்சி போய்ட்டு வந்த அப்புறம் நான் திருந்திட்டேன். கத்துறது இல்ல&rsquo;ன்னு சொன்னான்.&nbsp;</p>
<p>பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் எனக்கு போன் பண்ணான். இந்த மாதிரி சால்வை, மாலை போடணும் என சொன்னான். சரி வான்னு நானும் சொல்லிட்டேன். அங்க வந்த என் கையில் இரண்டையும் கொடுத்து அவனுக்கு போட சொல்லி போட்டோ எடுத்துட்டு கூல் சுரேஷ் போய்ட்டான். அங்கிருந்து டி.ஆர்.ராஜேந்தர் வீட்டுக்கு போய் பார்த்து அவரையும் ஏமாற்றிட்டான். வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்குப் பின் கூல் சுரேஷின் பெயர் மாறும்&rdquo; என தெரிவித்தார்.&nbsp;</p>

Source link