HBD Gautham Menon: மாஸ்..கிளாஸ்..ரொமான்ஸ் – கௌதம் மேனன் பிறந்தநாள் இன்று!
மின்னலே படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் வாசுதேவ் மேனன், தொடர்ந்து  காக்க காக்க, பச்சைக் கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்டப் படங்களின் வழியாக தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கினார். இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கெளதம் மேனன்.மேலும் படிக்க
Chaya Sarathkumar: ஒரு நாள் கூத்து கிடையாது! திருமணம்னா என்னனு தெரியுமா? மனம் திறந்த சரத்குமார் முன்னாள் மனைவி
சரத்குமார் முன்னாள் மனைவி சாயா சரத்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் “திருமணம் செய்வதற்கு இது தான் சரியான வயது என குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் செய்து கொள்ள உடல் அளவிலும், மனதளவிலும், எமோஷனலாகவும் தயாராக இருக்க வேண்டும். பலரும் தப்பான ஒரு காரணத்திற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் எதற்காக நடக்கிறது என்பதே இங்கு பலருக்கும் தெரிவதில்லை. திருமணம் செய்து கொள்ள சரியான காரணம் ஒன்று இருக்க வேண்டும். அது ஒரு நாள் கூத்து அல்ல. திருமணம் என்பது ஒரு பயணம். அதில் சரியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் படிக்க
Actor Nani: நானிக்கு வயசாயிடுச்சி.. கிண்டலாக போஸ்ட் போட்ட நடிகை நஸ்ரியா!
நானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை நஸ்ரியா அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா நானி நடித்த ‘அண்டே சுந்தரனிகி’ படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார்  நஸ்ரியா, நானி  மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு  நானிக்கு 40 வயது ஆகிவிட்டதை வைத்து அவரை கிண்டலித்து நஸ்ரியா இந்த பதிவை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப் பட்டு வருகிறது.மேலும் படிக்க
Brindha Sivakumar: கார்த்தி அண்ணா தான் ரொம்ப எமோஷனல்! திருமணம் குறித்து பிருந்தா சிவகுமார் பகிர்ந்த சுவாரஸ்யம்
சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட பிருந்தா தன்னுடைய திருமணம் பற்றி  ஸ்வாரஸ்யமாக பேசி இருந்தார். கல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்டுக்கு போகும் போது கார்த்தி அண்ணா தான் ரொம்ப பீல் பண்ணி அழுதாரு. பெரிய அண்ணா வந்து கொஞ்சம் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாண வேலையில் எல்லாம் பிஸியா இருந்தாரு. அதனால் என்னை வழி அனுப்பும் போது கார்த்தி அண்ணா தான் என் கூட இருந்தாங்க. அதனால் அவங்க தான் ரொம்ப எமோஷனல் ஆனாங்க” என அந்த நேர்காணலில் நடிகர் கார்த்தி, தங்கையின் திருமணத்திற்கு பிறகு அதிகமாக எமோஷனலானது பற்றி பகிர்ந்து இருந்தார் பிருந்தா சிவகுமார். மேலும் படிக்க
Soori: வேறு குரல் வேண்டும்.. டாக்டரிடம் சென்ற சூரி – மருத்துவர் சொன்ன அறிவுரை
கொட்டுக்காளி படத்தில்  தனது குரலை வேண்டுமென்றே சேதப்படுத்திக் கொண்டதாக நடிகர் சூரி கூறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் “ கொட்டுக்காளி படத்தில் ஒரு காட்சியில் என் குரல் கட்டியதைப் போல் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டார். அது ஒரு பெரிய டேக் என்பதால் ரீடேக் போவது கஷ்டம். இதனால் நானே ஒரு ஐடியா பன்னினேன். டாக்டரிடம் சென்று என்னுடைய குரலை கொஞ்சமாக கட்டியதுபோல் சேதப்படுத்த ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என்று நான் கேட்டேன். இதை கேட்ட மருத்துவர் சிரித்துவிட்டார்.மேலும் படிக்க

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Закажите [url=https://karkasnye-doma-spb11.ru]строительство каркасных домов в спб[/url] и получите надежное и современное жилье под ключ. Эта технология помогает заметно уменьшить сроки…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed