கருப்பு திரைப்படம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கருப்பு’.

ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.

ரிலீஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மே 14 ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் மே 15 ஆம் தேதி தான் வெளியானது.

கருப்பு திரைப்படம்

இன்னல்களுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ” கண்ணுகளா… செல்லங்களா.. சாமிகளா, என் சாமிகளா… முதலில் இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

திட்டமிட்டபடி 14ஆம் தேதி படம் வெளியாக முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் இக்கட்டான மனநிலையில் இருந்தோம்.

ஆனால் ரசிகர்கள், அனைத்து திசைகளிலிருந்தும் அனுப்பிய ட்வீட்கள், வாய்ஸ் மெசேஜ்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவை மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்தன.

அன்றைக்கே எல்லாத்தையும் புறட்டுப் போட்டுவிடலாம் என்று தோன்றியது. நீங்கள்தான் எல்லாத்தையும் மாற்றிவிட்டீர்கள். அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி ‘கருப்பு’ திரைப்படம் வெளியான பிறகு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

ரசிகர்கள் அளித்த மரியாதை மற்றும் வரவேற்பு, படக்குழுவிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மேலும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.

எடிட்டர், ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகை த்ரிஷா மற்றும் முழு படக்குழுவினரின் சார்பாகவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தை நம்பிக்கையுடன் தயாரித்து வெளியிட்ட Dream Warrior Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான பிரகாஷ் மற்றும் பிரபுவிற்கும் நன்றி.

இறுதியாக இந்த அன்பு எனக்கு மிகவும் முக்கியமானது. கருப்பு படத்தை இவ்வளவு ஸ்பெஷலாக மாற்றிய அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed