புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெற்ற “தேசிய அறிவியல் தினம் 2024” நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
ஹீமோபிலியா ஏ குறைபாடுக்கான மரபணு சிகிச்சையின் முதல் மனித மருத்துவ பரிசோதனையை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில்  இந்தியா நடத்தியுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பெங்களூரின் இன்ஸ்டெம் நிறுவனத்தின் ஒரு பிரிவான தண்டு ஆராய்ச்சி மையத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையால் இந்த திட்டம் ஆதரிக்கப்படுகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமனால் “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்டதை தேசிய அறிவியல் தினம் நினைவுகூருகிறது என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல், அதிக அறிவியல் மற்றும் மேலும் அதிக அறிவியல் ஆராய்ச்சி மூலம் மட்டுமே இந்தியா முன்னேற முடியும் என்ற சி.வி.ராமனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, இந்தியா உண்மையிலேயே “ராமன் விளைவின்” கீழ் உள்ளது, ஏனெனில் பிரதமர் மோடி அறிவியலுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறார் என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மாபெரும் முன்னேற்றங்களை எடுத்துரைத்த மத்திய இணையமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், 2014-ல் 10 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்து 2024-ல் 130 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வின் போது, டாக்டர் ஜிதேந்திர சிங், கோவிட் தொற்றுநோய்களின் போது நிரூபிக்கப்பட்ட வலுவான தடுப்பூசி மேம்பாட்டு திறனில் இந்தியாவின் முன்னேற்றத்தைக் குறிப்பிட்டார். சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா உலக நாடுகளின் தலைமைத்துவமாக பாராட்டப்படுகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed