<p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 41 பயனாளிகளுக்கு ரூ.35.05 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.</p>
<p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இன்று (26.01.2024) தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் அவர்களுடன் திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தியதுடன், குடியரசு தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">பின்னர், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.18,89,013/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.78,850/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறை சார்பில், 10 ரூ.38,990/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 03 பயனாளிகளுக்கு ரூ.11,33,900/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.25,000/-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 05 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.13,104/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.26,340/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 41 பயானிகளுக்கு ரூ.35,05,197/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 281 அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், குடியரசு தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, விழுப்புரம் நகரில், குடியரசு தின விழாவினை முன்னிட்டு, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Ваш сайт застрял в песочнице Яндекса и не может пробиться даже на вторую страницу выдачи? Мы знаем, как решить эту…
casas de apuestas espanyol villarreal deportivas comparativa
para hacer Mejores Casas De Apuestas En Chile
Устали сливать бюджет на рекламу которая приносит временный эффект? Инвестируйте в органическую выдачу через улучшение поведенческих факторов. Наш сервис генерирует…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன? | ACTPnews.com
-

‘தவிர்த்துகொள்ள வேண்டும்.!’- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?|Sengottaiyan spoke about MDMK; what was Durai Vaiko’s reaction? | ACTPnews.com
-

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா? | ACTPnews.com
-

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album | ACTPnews.com
-

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை | ACTPnews.com


















apuestas goleadores eurocopa deportivas mejor pagadas